Skip to Content

08.தலைமை

தலைமை

கர்மயோகி

தலைமை வலிமைக்குரியது.

உடலுக்குரியது வலிமை.

மனத்திற்குரிய வலிமை திண்மையெனப்படும்.

செயலுக்குரிய வலிமை திறமையாகும்.

உணர்வுக்குரிய வலிமை பண்பு.

ஆத்மாவின் வலிமை பவித்திரம்.

பண்பு பொறுமையால் முழுமை பெறும்.

. தலைமை என்றால் அனைவரையும் ஒரு நேரம் கடந்து செல்வதாகும். தலைமைக்குரிய தகுதியான வலிமையின்று அப்பதவியை 1/2 மணி நேரமும் அடைய முடியாது.

. அதையடையும் வழிகள் அநேகம்.

பெற்றதைக் காப்பாற்றும் திறமை பெறும் திறமையினின்று வேறுபட்டது.

.ஒவ்வொரு குணமும் ஒன்றைச் சாதிக்கும்.

விரயத்தைத் தவிர்த்தால் காரியம் கூடிவரும்.

தாமதத்தைத் தவிர்ப்பது காலத்திற்குச் செலுத்தும் கவனம்.

காலம் பணம்.

அவரிடம் பணம் ஏராளமாகக் குவியும்.

Attention is an asset in work.

கவனம் காரியத்தைச் சாதிக்கும்.

கவனத்தால் நாம் கவனிக்கப்படுகிறோம்.

நம் கவனத்தைப் பெற்றவர் நம்மை மறக்கமாட்டார்கள்.

நம் கவனத்தைப் பெற்ற பொருள்களால் நமக்குத் தீங்கு வாராது.

எந்தப் பொருளால் பலன் வேண்டுமானாலும், அதை அதிகமாகக் கவனிக்க வேண்டும்.

எதுவும் தவறலாம், கவனம் தவறாது.

பிறரைக் கவனிப்பவரை உலகம் கவனமாகக் கருதும்.

பிறர் குறையைக் கவனித்தால் கெட்ட பெயர் வரும்.

பிறர் நிறைவைக் கவனித்தால் நல்ல பெயர் வரும்.

நிறையைப் பாராட்டினால், பாராட்டு நிறையும்.

மனிதர்களைக் கவனிப்பதுபோல் பொருள்களையும், விஷயங்களையும் கவனிக்கலாம்.

கவனம் காலத்திற்கும் பலன் தரும், பலன் தந்தபடியிருக்கும்.

. இனிமையாக உணர்வது இயல்பன்று.

இனிமையாகப் பேசுவதும் எளிதன்று.

இனிமையாக பேசுபவர் வாழ்வு இனிக்கும்.

இனிமையாக உணர்பவர்க்கு உள்ளும் புறமும் இனிக்கும்.

இனிமையாகப் பேசுபவர்க்குக் கெட்ட பெயர் வந்தது என்ற சரித்திரம் இல்லை.

. ஞாபகம் பெரிய சொத்து.

பெயர், நம்பர், தேதி, ஊர், உறவு, செய்தி, நிகழ்ச்சி போன்றவை ஞாபக சக்தியுள்ளவர்க்குத் தவறாமல் நினைவில் எழும்.

ஞாபகம் தலைமையைக் கொடுக்கும் திறனுள்ளது.

தாழ்ந்தவர்க்கு உயர்ந்தவர் மறக்காது. அதுவும் ஞாபக சக்தியாகும்.

சிறிய மனிதனுக்குப் பெரிய நிகழ்ச்சிகள் மறக்காது.

அறிவுடையவருக்குத் தெளிவால் ஞாபகம் வரும்.

ஞாபகம் வருவது வேறு, அதைப் பயன்படுத்துவது வேறு.

பெரிய உள்ளத்திற்குப் பிறர் நல்ல பண்புகள் நினைவு வரும்.

அல்பம் பிறர் குறையை மறக்காது.

ஞாபக சக்தியைக் கண்டால் எதிரி அஞ்சுவான், பயப்படுவான்,

அடங்குவான், பொய் சொல்லத் தயங்குவான்.

அதனால் ஞாபகம் நமக்கில்லாத வலிமையைத் தரும்.

. பிறரைக் கவனிப்பதில் பெரியவரைக் கவனிப்பதும், சிறியவரைக் கவனிப்பதும் வேறு.

பெரியவரைக் கவனித்தால் காரியம் எளிதில் கூடிவரும்.

சிறியவரைக் கவனித்தால், வந்தது நீடிக்கும்.

பிறரைக் கவனிப்பதில் பல அம்சங்களுண்டு.

அவர் தேவையைக் கவனிப்பது, அவர் சுபாவத்தைக் கவனிப்பது, அவர் சந்தோஷத்தைக் கவனிப்பது, அவர் முகம் சுளிப்பதைக் கவனிப்பது எனப் பல்வேறு கவனங்கள் உண்டு.

தேவையைக் கவனித்தால் பலன் பொருளாக வரும்.

சுபாவத்தைக் கவனித்தால் மனிதன் கட்டுப்படுவான்.

சந்தோஷத்தைக் கவனித்தால் அவர் நம்மை நாடுவார்.

முகம் சுளிப்பதைக் கவனித்து விலக்கினால், அவர் எப்பொழுதும் நமக்குக் கட்டுப்படுவார்.

நாம் சரியாக இல்லாத நேரத்திலும் நம்மை ஏற்பார்.

. எந்தப் பொருளைக் கவனிக்கிறோமோ, அப்பொருளில் தட்டுப்பாடு வாராது.

எந்த மனிதரைக் கவனிக்கிறோமோ, அவரால் நமக்குக் கெடுதல் வாராது.

. திறமைகளைச் சேர்த்தால் சேர்ப்பதற்குரிய பலன் வரும்.

எல்லாத் திறமைகளையும் பெற்றால், பலன் அடுத்த கட்டத்தில் வரும்.

. ஒரு சட்டத்தை 99% பின்பற்றினால் பின்பற்றிய அளவுக்கு, பின்பற்றும் இடங்களில் பலன் வரும்.

100% பின்பற்றினால் பலன் அடுத்த உயர்ந்த கட்டத்திலிருந்து வரும்.


. அன்னையை 99% பின்பற்றினால் வாழ்க்கை வளம் பெறும்.

Results will be proportionate.

100% பின்பற்றினால் யோகம் சித்திக்கும்.

தலைமையைப் பெறுவது எங்ஙனம்?

. நம்மிடம் உள்ள நல்ல குணங்களில் நம் சுபாவத்திற்குப் பொருத்தமான ஒன்றை, தற்சமயம் நாம் முக்கால் பாகம் பின்பற்றுவோம். அதை முழுமையாக (99% அல்ல 100%) பின்பற்றினால் தலைமைக்குரிய தகுதி கிடைக்கும்.

குணங்கள் இரு வகைப்படும்.

அவை சிறியவை, பெரியவை எனப் பிரியும்.

சிறியவை செயலில் திறமையாகும் Skill.

பெரியவை பர்சனாலிட்டியின் திறமையாகும் Capacity.

ஞாபகம், குறித்த நேரத்தில் செயல்படுவது, ஒழுங்கு, சிக்கனம், முறை போன்றவைகளை Skill செயல் திறமை எனப்படும்.

அறிவு, சொல்லைக் காப்பாற்றுவது, முறை தவறாதது, தாராளம், பண்பு,ஆகியவை மேற்சொன்னவற்றிற்குப் பெரியவை Capacity எனலாம்.

100% ஒன்றைப் பின்பற்றினால் பலன் இரண்டிற்கும் உண்டு.

சிறியதற்குரிய பலன் நாம் தேடிப் போவதாக அமையும், நிலையற்றதாக இருக்கும், நீடிப்பதானால் தவறான முறையால் நீடிப்பதாகும், சிறிய இடத்தில் பெரும்பலனாகும்.

பெரியதற்குரிய பலன் நம்மைத் தேடிவரும். வருவது நாமே விலகாமல் விலகாது, ஆயுள்வரை நீடிக்கும், பெரிய இடத்தில் பெறுவதாகும்.

அதிகாரம் பலன் பெறுவது போல் அடக்கமும் பெறும்.

நல்லதற்குரிய பலன் கெட்ட திறமைக்கும் உண்டு.

பலன் இரண்டுக்கும் உண்டு.

நமக்கு வேண்டியது நல்லது.

அன்னைக்குரியது அதிகபட்சம் நல்லது.

அதிகாரம் தேடிப் போவது, அடக்கத்தை நாடி வரும்.

பெரிய இடத்துப் பிரச்சினைகள் சிறிய இடத்திலும் உண்டு.

எல்லாப் பிரச்சினைகளையும் சிறிய இடத்தில் தீர்ப்பவனுக்குப் பெரிய இடத்துத் தலைமையுண்டு.


 

பிரச்சினையைத் தீர்ப்பவன் தலைமையை நாடினால் கிடைக்கும்.

வாய்ப்பை ஒன்று தவறாது பெற்று அனுபவிப்பவனுக்குத் தலைமை எளியதாகக் கிடைக்கும்.

பிறருக்கு வாய்ப்பை உற்பத்தி செய்தால் வாழ்க்கை அவருக்கு வாய்ப்பை உற்பத்தி செய்யும்.

இல்லாத வாய்ப்பைப் பிறருக்கு உற்பத்தி செய்தால், இதுவரையில்லாத வாய்ப்பு நமக்கு உற்பத்தியாகும்.

எவரும் தீர்க்கக்கூடிய பிரச்சினையைப் பிறருக்குத் தீர்க்கலாம்.

எவருக்கும் உள்ள வாய்ப்பு நமக்கு வரும்.

எவரும் தீர்க்க முடியாத பிரச்சினையை ஒருவருக்குத் தீர்த்தால்

எவருக்கும் இல்லாத வாய்ப்பு தீர்த்தவருக்கு எழும்.

உலகில் தீர்வில்லாத பிரச்சினையை ஒருவருக்குத் தீர்ப்பவர்க்கு உலக அரங்கில் பதவி வரும்.

பிறர் அல்ப ஆசைகளைப் பூர்த்தி செய்தால், செய்தவருக்குப் பெரிய ஆசைகள் பூர்த்தியாகும்.

இவை பரநலமான சுபாவம் உடையவர் செய்யக்கூடியன.

தலைமையை நாடுபவர் திறமையைப் பெற்றால் தகுதி எழும்.

தகுதி பெற்றால் வாய்ப்பு எழும்.

தகுதி எழுமுன் வரும் வாய்ப்பை ஏற்றால் நீடிக்காது.

வாய்ப்பு தகுதியைவிட எளிமையாகப் பெறக்கூடியது.

எதுவும் அன்னையிடம் ஒருபடி அதிகமாக, சீக்கிரம் பலிக்கும்.

பலிக்கும் என எதிர்பார்த்தால் தள்ளிப் போகும்.

அனைவரும் பெறலாம், சிலருக்கே நீடிக்கும்.

பெற்றது நீடிக்க என்ன செய்ய வேண்டும்?


 

. முறையாகப் பெற்றது முயற்சியின்றி நீடிக்கும்.

தவறாகப் பெற்றது திறமையால் வந்தது, தகுதியாலில்லை. அதனால் நீடிக்காது.

இயல்பான திறமையால் பெற்றது நம்மை விட்டு அகலாது.(Complex) தாழ்வு மனப்பான்மைக்குரிய திறமை பெற்றது நீடிக்காது. ஒரு பெரிய திறமையால் பெற்றால், அதற்கெதிரான குறை தீவிரமாக இருக்கும்.

திறமை பெற்றுத் தரும். குறை பெற்றதை விலக்கும்.

குறையை நிறைவாக்குவது திருவுருமாற்றம்.

எதிரான குறை விலகினால் வந்த செல்வமோ, பதவியோ விலகாது.

காலத்திற்குரியது கிடைத்தால், காலம் மாறும்பொழுது அதுவும் மாறும்.

குணத்தின் பக்குவத்திற்கு வந்தது நாமே விலகும்வரை அழியாது.

பெற்றது நீடிக்குமாறு செய்ய, வருவதை ஏற்க, தகுதி வரும்வரைக் காத்திருக்க வேண்டும்.

கெட்டதை விலக்கி, நல்லதை நாட வேண்டும்.

நல்லவற்றுள் உயர்ந்ததைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நம்மால் தொடர்ந்து காப்பாற்ற முடியாதவற்றைத் தவிர்க்க வேண்டும்.

அவசரம் விலகி, நிதானம் பெற வேண்டும்.

பிரார்த்தனை பலிக்கும்.

பதவிக்காக, தலைமைக்காகப் பிரார்த்திக்காமலிருப்பது நல்லது.

தேடினால் கிடைக்கும்.

தேடாமலிருப்பது உயர்ந்தது.

மனம் நாடினால் நிச்சயமாகக் கிடைக்கும்.

மனம் தலைமையை நாடாமலிருப்பது நல்லது.

அன்னையைக் கேட்டால் கிடைக்கும்.

அன்னையிடம் இதையும் கேட்காமலிருப்பது நல்லது.

அதிகாரமும், அதிர்ஷ்டமும் சாதிக்காததை அடக்கம் சாதிக்கும்.

தலைமை என்பது தகுதி.

தகுதி பிறப்பிலும் வரும், முயன்றும் பெறலாம்.

தலைமையைப் பெறும் முறை எதையும் பெறும் முறையே தவிர புதியதன்று.

புறத்தில் பெற உழைப்பும் முயற்சியும் வேண்டும்.

அகத்தில் பெற அமைதியும், அடக்கமும் தேவை.

தலைமை எங்கும் உண்டு - வீடு, ஆபீஸ், ஊர், நாடு, உலகம்.

வீட்டில் தலைமையுள்ளவனுக்கு வெளியிலும் கிடைக்கும் வாய்ப்புண்டு.

வீட்டில் அன்பால் பெற்ற தலைமை வெளியிலிருந்து தேடி வரும்.

சுதந்திரமான சூழல் பெருந்தலைமைக்கு அடிப்படை.

சுதந்திரம் அமைதிக்கு அதிகாரம் தரும்.

அமைதி பெறும் அதிகாரம் அனந்தம்.

பண்பு தரும் தலைமை பவித்திரமானது.

திறமை தரும் தலைமை காரியத்தை முடிக்கும்.

பண்பு தரும் தலைமை பதவியை நீடிக்கும்.

பண்பு, அமைதி, அன்பு, திறமை ஆகிய அனைத்தும் சத்தியத்தின் பகுதிகள்.

சத்திய சீலனை உலகம் ஒதுக்கும், தலைமை தாராது.

சத்தியத்திற்கும் பதவிக்கும் பகை.

சத்தியம் தலைமை பெறுமானால், உலகம் உள்ளடங்கி ஏற்கும்.

பொய்யான உலகம் சத்தியத்தை வெறுப்பது உண்மை.

ஆனால் அது சத்தியத்தை ஏற்றால், போற்றிப் பாராட்டும்.

அன்னை சத்தியத்தைக் கடந்தவர்.

அன்னை சத்தியம் ஆண்டவன் சத்தியம்.

தலைமையும், பதவியும் அதைத் தேடி வரும்.

வருவது பெரிதன்று, ஏற்பது பெரியது.

ஏற்பதைவிட நீடிப்பது பெரியது. அது அடக்கத்திற்குரியது.

தலைமையின் அவசியம்

உடலுக்கு உணவு அவசியம் என்பதைப் போல் உழைப்பும் அவசியம்.

உழைப்பு உடலை ஆனந்தப்படுத்துகிறது.

மனம் கலையை நாடுகிறது.

இசையை அனுபவிக்காதவரில்லை.

விலங்கும், விஷ ஜந்தும் இசைக்குரிய இனிமையையறியும்.

அதுபோல மனிதனுக்குப் பணிய அவா.

அதிகாரம் செய்யும் ஆசை பணியும் ஆசையின் மறுபுறம்.

மனிதன் தலைவனைத் தேடுகிறான்.

அவன் தேடுவது இறைவனை.

இறைவனை உலகில் தலைவனாக மனிதன் காண்கிறான்.

மனித ஆத்மா பணிவதில் நிறைவடைகிறது.

இது உலகஇயற்கையில் ஆன்மீகவெளிப்பாடு.

பெண் ஆணுக்கு அடங்குவதில் பெருநிறைவு பெறுகிறாள்.

இது மனிதசுபாவம்.

இதைக் கடக்காமல் பெண் யோகம் செய்ய முடியாது என்று அன்னை கூறுகிறார்.

ஆண் அடிமையை விழைகிறான்.

பெண்ணுக்கு மனதால் அடிமைப்பட ஆண்மை ஏங்குகிறது.

அதுவே காதல் இரகஸ்யம்.

இது ஆன்மீகம் ஆண்மையில் பூரணம் பெறுமிடம்.

மனிதவாழ்வு தலைவனுக்குத் தலை வணங்குவதில் பூர்த்தியாகிறது.

இதுவே தலைமையின் தத்துவம்.

பெரியதை, சிறியது நாடுவது பெருமை.

இது இயற்கையின் இயல்பு.

தலைமை தாங்குவதும், விழைந்து பணிவதும் உறவின் இரு முகங்கள்.

பணிவதின் இனிமையை அறிந்தவன் பணிவைப் பெறுவான்.

அது இயல்பான தலைமை.

பணிவு பூர்த்தியானால் தலைமை மலரும்.

புறத்தில் பணிவது செயலுக்குரியது.

அகத்தில் பணிவது ஆன்மாவுக்குரியது.

அகப் பணிவு, புறத் தலைமையின் பூரணம்.

பெண்மைக்கு அன்பால் அடிமையாவது ஆண்மைக்குப் புறத்தில் உலகின்

அன்பை அமைதியாகப் பெற்றுத் தரும்.

ஆண்மை தலைமையில் பூர்த்தியாகும்.

ஆண்மை ஆன்மீகத்தில் பூர்த்தியாவது அக வாழ்வில்.

சிறியதற்குப் பணிவது பெரியதின் பெருமை.

அகத்தில் பூர்த்தியான ஆண்மைக்கு அகிலம் உரியது.

இது வேதம் கண்ட உண்மை.

வாக்காளரைப் பெருமக்களாக்கியது மக்களாட்சி.

மனதால் மனிதனைப் பணிபவன் மன்னனாகிறான்.

மக்கள் நலம் மக்களாட்சியின் இரகஸ்யம்.

மனநலம் மக்கள் நலம்.

மக்கள் மன மகிழ்வது மக்களாட்சி மலர்வது.

மனம் மக்களை நாடினால், உலகம் அவன் தலைமையை நாடும்.

இருப்பதை அனுபவிப்பது வாழ்வு.

இல்லாததை உற்பத்தி செய்து அனுபவிப்பது அன்னை வாழ்வு.

அன்னை அனைவர் மனத்திலும் மகிழ்ச்சியாக உறைகிறார்.

ஆண்மையின் தலைமை ஆன்மீகப் பெண்மையை - அன்னையை -மக்கள் மனத்தில் நாடுவதாகும்.

*****
 

ஸ்ரீ அரவிந்த சுடர்


 

இறைவனைப் பெண்ணாகவும், தானே பெண்ணாக மாறி இறைவனைக் காந்தனாகவும் வரிப்பதே ஆன்மீக அனுபவத்தின் உச்சகட்டம் என்கிறார்.

ஆத்மா இறைவனையடைவது மோட்சம், விடுதலை, அனுபவம் இல்லை. சக்திக்குச் சரணடையும் மனிதன் தன்னுள் புதைந்துள்ள ஆன்மீகபலத்தைக் கண்டு, ஆன்மீக அனுபவத்தைப் பெறுகிறான். முடிவில் உலகத்தை அற்புதக் காட்சியாகக் காண்கிறான்.

மனிதன் தன்னைப் பெண்ணாகக் காண்பது, பிரகிருதியின் சரணாகதி, அதுவே பூரணயோக முடிவு. அது அனுபவத்தின் தீவிரத்தை அதிகப்படுத்துகிறது. அத்துடன் evolution.பரிணாமத்தைப் பூர்த்தி செய்கிறது.


 

. பெண்மையின் இன்பமே உயர்ந்த ஆன்மீகஇன்பம்.

. சக்திக்கு சரணடைந்தால் உலகம் அற்புதமாகும்.

. இறைவனுக்கு, தான் பெண்ணாகும் மனிதன் பூரண யோகத்தைப் பூரணமாக்குகிறான்.


 


 



book | by Dr. Radut