09.சாவித்ரி
"சாவித்ரி"
P.89 Then glad of a glory of multitudinous mind.
பலதரப்பட்ட மனத்தின் மகிமையில் மனம் மகிழ்ந்தது.
. வாழ்வின் ஆனந்தம் தைரிய வீச்சால் மலர்ந்தது.
. ஜடத்தின் ரூபவண்ணம் செறிந்து அழகாயிற்று.
. காலத்தின் கதியினின்று அழியாத பிரம்மத்துள் நுழைந்தது.
. பொன்னான ஏணியால் ஆத்மாவை ஏந்திச் சென்றது.
. ஆத்மாவின் தூரத்து முனைகளை வைர இழையால் இணைத்து,
. இது ஜீவியம் ஜீவியமாக மாறுவது.
. சூட்சும ஜட இருளின் சக்தியின் துணை பெற்ற செயல்.
. அவசியமான அஞ்ஞானத்தின் அனந்தமான ஊற்று.
. உயிரளிக்கும் எல்லைக்குரிய கட்டிட மேஸ்த்திரி.
. ஜீவியம் எழுந்து ஜீவியத்தை நோக்கிச் செல்லும்.
. மூலத்தை நோக்கி முயன்றெழுந்து,
. அது மூலம், உள்ளதனைத்தின் மூலம் அது.
. மூலமே முடிவாகும், பூலோகமே சொர்க்கமாகும்.
. பெரியதடங்கி சிறியதாகச் செயல்படும் பிரம்மம்.
. அமைதியிலடங்கி, ஒடுங்கி, எழுந்துயர்ந்த உச்சியெனும் சிகரம்.
. அற்புதம் ஆச்சரியமாக விரியும் அதிசயம் போடும் நடை.
. விதிக்கப்பட்ட அரங்கம் விதிமதியாகும் பாதை.
. மலரும் ஆத்மாவின் வளரும் பாங்கு வகுக்கும் கட்டம்.
. சத்திற்கு அதன் வித்தை விளக்கும் வினோதம்.
. உச்சியையும் உளவறியும் ஆழத்தையும் ஒன்று சேர்க்கும் அசைவு.
. திரையிட்ட எதிரானதை ஏற்க வைக்கும் ஏற்றம்.
. சொல்லழிந்த அமைதியுடன் சிருஷ்டி இணையும் நேரம்.
. லோகங்கள் சேர்ந்த பெருலோகம்.
. இரவு இல்லை, தூக்கம் துறவறம் பூண்டது என்ற மலையின் மகுடம்.
. உயர்ந்த திரிமூர்த்திகளின் ஒன்று சேரும் ஒளி.
. இங்கு தேடுவதை அங்கு கண்ட திறன்.
. கடுகை அவிழ்த்துக் கடலெனப் பெருக்கி,
. சொந்த பிரம்மத்தின் சொர்க்க வாயிலைக் கடந்து,
. இருண்ட ஜடம் இறைவனின் இதயத்தைத் தன்னுள் கண்டு,
. மடமையில் மகிழும் எண்ணமும், எழுச்சியும்,
. சத்தியம் பெற்ற உடலை சத்தென சிக்கெனப் பிடித்து,
. ஜடத்தின் மௌனம் ஜனித்த சங்கீதம்.
. அனைத்துமழிந்த ஆழத்தில் பறித்த புது வண்ணம்.
. பெற்றதைப் போற்றி, பேச வாயெழாமல்,
. சுவர்க்கத்தின் ஸ்ருதி கனவென எழுந்து, கலைந்து,
***
ஸ்ரீ அரவிந்த சுடர் சாக்ரடீஸும், நியூட்டனும் ஆழத்தைச் சேர்ந்தவர்கள். இன்றும் அவர்கள் சொல்லியதை உலகம், முழுவதும் அறியப் பாடுபடுகிறது. ஆழத்தில் பிறந்த அறிஞர்கள். |
- Login to post comments