Skip to Content

01.எங்கள் குடும்பம்

எங்கள் குடும்பம்

                                                                      (சென்ற இதழின் தொடர்ச்சி....)

கணவர் : வாக்குரிமை வந்தால், ஜனாதிபதி ஆகலாம் எனப் பொருள் எனப் படித்தேன். இரண்டிற்கும் உள்ள தூரம், வந்த வாய்ப்புக்கும் பலனுக்கும் உள்ளது எனப் புரிந்தது.

மனைவி : எதுவும் முடியும். முயலவேண்டும் என்ற சொல் காதில் விழுந்தது.

கணவர் : "தாழ்த்தப்பட்டவர்க்கு வந்த வாய்ப்பு' என்ற கட்டுரையை ஒருவர் கொடுத்தார். நான் அதைப் படிக்கவேயில்லை. நமக்குச் சொல்லும் செய்தியையே நினைத்தேன். வராண்டாவில் நடந்துகொண்டு இருந்தபொழுது ஒரு வாயிற்படியில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார், தெரிந்தவர். இதுவரை பேசியதில்லை. "நீங்கள் எது செய்தாலும் ஜெயிக்கும்'' என்றார். இதுபோல் கண்ணில் படுவனவெல்லாம் நம்மை நமக்குணர்த்தும் சொற்களாகவே அமைகின்றன.

மனைவி : "முடியும், ஏன் கவலைப்படுகிறாய்' என்று மனம் தேடுகிறது.

கணவர் : அப்படித்தான் நான் நினைத்தேன். "நீ எதிர்பார்ப்பது வீண்'' என்றது.

மனைவி : நான் நினைத்த அதே சொல்லை நாத்தனார் வந்து சொல்லிவிட்டுப் போனார். நாமே நினைத்து, சொல் எழுந்தால் என்ன பயன். தானேயன்றோ வரவேண்டும்?

கணவர் : உனக்கு அதாவது கிடைத்ததே, எனக்கு நேர்மாறாகக் கேட்கிறது. இதைப் பூர்த்தி செய்தால் வாழ்க்கைக்குப் போதும்.

மனைவி : அது உண்மை. இதுதானே ஆரம்பம். ஆரம்பத்திலேயே முடிப்பது சரியா?

கணவர் : உள்ளே போக முடியவில்லை. அதுதானே முக்கியம். அது முடியவேயில்லை.

மனைவி : நாமே வலிய உதவி செய்யப்போனால் இதுவரை எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கென்ன பொருள்?

கணவர் : அது சரியில்லை.

மனைவி : என்ன செய்யவேண்டும்?

கணவர் : தெரியவில்லையே?

மனைவி : நாம் செய்வது அதிகப்பிரசங்கித்தனம்.

கணவர் : சரி, என்ன செய்வது?

மனைவி : எதுவும் நாமே நினைத்து செய்யக் கூடாது எனப் புரிந்துகொள்ள வேண்டும்.

கணவர் : உள்ளிருந்து அது வருகிறது.

மனைவி : அதை முதலில் தடை செய்யவேண்டும்.

கணவர் : அது பெரிய discipலிne.

மனைவி : புரிந்தால் கஷ்டமாக இருக்காது.

கணவர் : என்ன புரியவேண்டும்?

மனைவி : உதவி பிறர்த்தியாருக்குத் தேவையில்லை, புத்திமதி நமக்குத் தேவை என்று புரியவேண்டும்.

கணவர் : நீ சொல்வதைக் கேட்டுக்கொள்கிறேன். மனதில் படவில்லை.

மனைவி : மனத்தில்பட்டு, உணர்வு ஏற்று, செயலில் அமுல்படுத்திய பின்னும் அது உள்ளிருந்து எழும்.

கணவர் : ஆமாம். நான் பார்க்கிறேனே.

கணவர் எந்த முடிவுக்கு வந்தாலும், தாம் ஆதாயத்தைக் கைவிட்டு அன்னையை மட்டும் ஏற்று, கணவர், பார்ட்னர், குழந்தைகட்குள்ள குணங்களுக்குப் பிரதிபலிப்பாகத் தம்முள் உள்ளதைக் கவனிக்கத் தாயார் முடிவு செய்தார். முடிவு செய்தபின் மனம் கட்டை போலிருக்கிறது. வழி அடைபடாவிட்டால், வழி திறந்து சுலபமாக இல்லை. இதுவும் அடுத்த நிலையில் unconscious, இப்பொழுது அழைப்பு பயன்படும் எனத் தாயார் அறிவார். அழைப்புக்கு மனதில் ஆர்வமில்லை. ஆர்வமே அடிப்படை. அது இல்லாவிட்டால் வேலை இல்லை. ஆர்வம் எழ The Life Divine அதிகமாகப் புரியவேண்டும். எனவே அதைப் படிக்க முடிவு செய்தார். படிப்பது சுலபமாக இல்லை. கல்லில் நார் உறிப்பதாக அமைகிறது. விடாமுயற்சியுடன் படிக்கிறார்.

சிறியவன் : அம்மா, பெரியவன் பழையபடி கேலிசெய்கிறான்.

பெரியவன் : நான் ஒன்றும் சொல்லவில்லை, அம்மா.

தாயார் : இது நாள்வரை நாம் இப்படிப் பேசியது தவறு. இனி குற்றம், ஆபத்து.

பெரியவன் : என்ன சொல்லிவிட்டேன். நீங்கள் ஆபத்து, குற்றம் என்றெல்லாம் பேசுகிறீர்களே.

பார்ட்னரும், கணவரும் பீதியடைந்த முகத்துடன் வந்தனர். ஆனால் அவர்கள் வருகை வயிற்றைக் கலக்கவில்லை.

கணவர் : ஏண்டா, நீ இப்படியெல்லாம் பேசுகிறாய்.

பெரியவன் : அப்பாகிட்டேயும் கம்ப்ளெயிண்ட் போயிட்டுதா?

சிறியவன் : நான் அப்பாவை பார்க்கவேயில்லையே.

பார்ட்னர் : தம்பி, இனி நீ பெரிய வேலைக்கு வந்துவிட்டாய், ஜாக்கிரதையாகப் பேசவேண்டும்.

பெரியவன் : நான் எதுவுமே, யாரிடமும் பேசலீங்களே.

கணவர் : எவ்வளவு பெரிய ஆபத்து. அன்னையில்லையென்றால் இந்த நேரம் நாம் உயிரோடு இருக்க முடியாது.

பெரியவன் : எனக்கு எதுவும் புரியவில்லை.

பார்ட்னர் : உன் டாக்டர் நண்பனுடன் போன வாரம் டென்னீஸ் கோர்ட்டில் வம்பு பேசியது தலைக்கு ஆபத்தாய்விட்டது.

தாயார் : என்னடா நீ அப்படிப் பேசினாய், யாரைப் பற்றி?

பெரியவன் : எனக்குப் புரிகிறது. பேசியது உண்மை. நான் பேசவில்லை. அந்த வக்கீல் அங்கிருப்பதால் யாரும் மனம் விட்டுப் பேசவில்லை.

பார்ட்னர் : அந்த வக்கீல் யார் தெரியுமா?

கணவர் : மில் முதலாளி அடியாள் தலைவருடைய மைத்துனன்.

பெரியவன் : நான் நடந்ததைச் சொல்கிறேன். அப்புறம் பேசுங்கோ. அந்த டாக்டர் ஒவ்வொரு ஜாதியா விமர்சனம் செய்தார். அவருக்கு வக்கீல் ஜாதி தெரியாது. வக்கீல் கண் சிவந்துவிட்டது. எழுந்து போய்விட்டார்.

பார்ட்னர் : அந்த வக்கீல் அவர் மைத்துனனிடம் போய் நீ தான் அவர்களைக் குறைவாகப் பேசியதாகக் கூறிவிட்டார்.

தாயார் : அது ஆபத்தாயிற்றே.

பார்ட்னர் : பெரிய ஆபத்து வந்து விலகியது. Mother's Grace. அந்த ஆட்கள் பெரியவனை 4 நாட்களாகத் தேடுகிறார்கள். அவர்களில் ஒருவன் என்னுடன் பெரியவனைப் பார்த்ததால் 4 பேராக நம் வீட்டெதிரில் காத்து இருக்கிறார்கள்.

தாயார் : எனக்கு மயக்கமாக இருக்கிறது.

பெரியவன் : அவன் கொலை செய்பவனாயிற்றே.

பார்ட்னர் : ஆபத்து விலகிவிட்டது. நானும், மில் முதலாளியும் உள்ளிருந்து வருவதை அந்த ஆட்கள் பார்த்தனர்.என்னிடம் பெரியவனைப் பற்றிக் கேட்டனர். முதலாளி "பெரியவன் நம்ம பையன்'' என்றார். அவர்கள் சிரித்துக் கொண்டு போய்விட்டனர். நான் முதலாளியை அனுப்பாமல் விசாரிக்கச் சொன்னேன். அவர் வக்கீல் மைத்துனரைப் போனில் விசாரித்தார். "அது நம்ம பையன் என்று தெரியாதுங்க'' என்று மைத்துனர் பேசினார்.

தாயார் : என்னடா நடந்தது?

பெரியவன் : பேசியவன் நானில்லை. வக்கீல் எனக்கு எதிரி என்பதால் டாக்டர் பேசியதை என் பேரில் சொல்லிவிட்டான்.

தாயார் : பொய்யாகக் குற்றம் வந்தாலும் குற்றம் மனதில் இருக்கிறது எனப் பொருள். உனக்கு அந்தக் குணம் உண்டு.

பெரியவன் : குணம் உண்டு, நான் பேசவில்லையே.

தாயார் : ஆபத்து வந்துவிட்டதே.

பெரியவன் : அக்குணத்தை அடியோடு விலக்க முடிவு செய்கிறேன்.

காலிங்பெல் அடித்தது. போய்ப் பார்த்தால் அந்த வக்கீல் பெரியவனைத் தேடி வந்திருக்கிறார். விஷயம் தெரிந்தவுடன் வக்கீல் பெரியவனிடம் மன்னிப்புக் கேட்க வந்ததாகச் சொன்னார்.

தாயார் : இந்தக் குணம் எல்லாம் மற்றவர்க்குச் சரி. நமக்கு இனி சரி வாராது. இவையெல்லாம் போனால்தான் வந்தது பலிக்கும்.

பார்ட்னர் : அன்னை நம் குணத்திற்குத்தானே power plant கொடுத்திருக்கிறார். இனி குணம் அது போலிருக்க வேண்டாமா?

கணவர் : பெரியவன் மட்டுமல்லன், நாமனைவரும் இனி பழைய குணங்களை அடியோடு விட முடிவு செய்து ஜெயிப்பது அவசியம். அதற்கு விலக்கில்லை. இதுபோன்ற ஆபத்துகளிலிருந்தெல்லாம் மனிதன் எப்படித் தப்பிப்பது?

தாயார் : குணம் சுத்தமானால் தப்பிக்கலாம். வீண் பேச்சு பேசுவதைவிட்டு வேலையில் ஈடுபட்டால் இது வாராது.

கணவர் : குணமிருந்தால் அது என்றும் வெளிவரும். குணத்தை மாற்றவேண்டும்.

சுத்தத்திலிருந்து மனமாற்றம்வரை பிள்ளைகள், கணவர் முழு முயற்சி செய்தனர். ஓராண்டிற்குப்பின் எதற்கு, என்ன பலன் வந்ததோ, இல்லையோ, எல்லோரும் மனத்தளவில் ஓர் அளவுக்குப் பக்குவப்பட்டுவிட்டனர். அது மயிரிழையாக இருந்தாலும் அவர்களைப் பொருத்து மலை போன்ற மாற்றம். பாக்டரி, பவர் பிளாண்ட், புதியதாக வரும் சந்தர்ப்பங்கள் அங்குலம், அங்குலமாக ஏறுவதும், சரிவதும், சரிவதைச் சரிகட்டுவதுமாக நகர்கின்றன. இந்தக் காலத்தில் நடந்த அமர்க்களங்கள் - சிறியன, பெரியன - ஏராளம், வந்த புதிய வாய்ப்புகள் ஏராளம். ஒரு நல்லது நடந்தால் பல தவறுகள் நடப்பதும், தவற்றை அனைவரும் முனைந்து சமாளிப்பதும், சமாளித்தபின் நல்லவை நடப்பதுமாக ஓர் ஆண்டு ஓடிற்று. நல்லதும், கெட்டதுமாக சுமார் 50 நிகழ்ச்சிகள் நடந்தன. வாய்ப்பு பலித்தவை பல, தவறு சரி செய்யப்பட்டவை பல. அதற்கும் மேலாக இந்த ஓராண்டில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என அனுபவவாயிலாக அனைவரும் அறிந்தது அதிகம். இந்த விஷயத்தை வெளிப்படையாக எவரும் பேசுவதில்லை. வீடு மாறிவிட்டது என்பது தெரிகிறது. எந்த அளவுக்கு மாறவேண்டுமோ அதில் 1/100 பாகம்கூட இல்லை எனவும் தெரிகிறது. இருந்தாலும் மாற்றம் மனத்திருப்தி தருகிறது.இவையெல்லாம் நடந்தபொழுது பொறுமை சோதிக்கப்பட்டது பெரியது.பொறுக்க முடியாது என்ற நேரங்கள் அதிகம். தவறு நடக்கும்பொழுது மயிரிழையில் தப்பிப்பதைக் காண்கின்றனர். அதனால் தவற்றைக் கைவிடுவதில்லை. சமர்ப்பணம் பெரும்பலன் தருவது தெரிகிறது.அதனால் சமர்ப்பணத்தை அதிகமாக ஏற்க எவரும் விரும்பவில்லை.பார்வைக்குப் பெரிய disciplineஆன குடும்பமாகவும், 3, 4ஆம் நிலையிலிருந்து 70, 80ஆம் நிலைகளுக்கு வந்த குடும்பமாகவும் தெரிந்தாலும், எந்த முன்னேற்றமும் மனித முயற்சியால் வருவதில்லை.வரும் சிரமங்களைச் சமாளிப்பதால் நல்லது நடப்பதே வழக்கம். 70அல்லது 80ஆம் நிலைக்கு குடும்பம் வந்துவிட்டாலும், அங்கேயே நிரந்தரமாக இருக்க ஏராளமாகத் தேவைப்படுகிறது. அவையெல்லாம் செய்ய எவரும் தயாராக இல்லை. அப்படியொரு குறையிருப்பதாகவும் தெரியவில்லை. எல்லா அன்பர்கட்கும் இதே அனுபவம் அவரவர் மனத்தளவில் நடக்கின்றது என்பது எவரும் அறியாத விஷயம்.80ஆம் நிலைக்கு வந்ததால், இதைப் பூர்த்தி செய்யவேண்டிய முயற்சியை உடல் உழைப்பாலும், குணநலனாலும், அறிவின் தீட்சண்யத்தாலும், ஆன்ம விழிப்பாலும், பிரம்ம ஜனனத்தாலும் செய்யக்கூடியவை ஏராளம். அவற்றை எல்லாம் செய்தால், மேலும் தொடர்ந்தால் குடும்பம் நாட்டிலும், உலகிலும் முதன்மையாகும் என்பதை அன்பர்கள் அறியாததுபோல் இக்குடும்பமும் அறியவில்லை.தாயாருக்கு மட்டும் ஓரளவு தெரியும். ஆனால் மனத்தால் அவரும் மற்றவரைப் போலிருக்கிறாரே தவிர, செயலால் அன்னைக்குரியவராக வேண்டும் என்ற எண்ணமும் எழவில்லை. அந்த எண்ணம் இக்குடும்பத்தாருக்கு எழுவது அருள், செயல்படுத்துவது பேரருள்.அன்னையிடம் வந்தபின் இக்குடும்பத்தாருக்கு நடந்தது என்ன?அன்று குடும்ப வருமானம் இருந்ததைப்போல் பல மடங்குகள் செலவு செய்ய விரும்பியவருக்கு அது பூர்த்தியாயிற்று. ஆயுள் வருமானம் அன்று குடும்பத்திற்கு அமைந்ததைத் தம் சொந்தச் சேமிப்பாகப் பெற விரும்பியவருக்கு அதுபோல் பல மடங்குகள் சேமிப்பு வந்தது.பிரபலம் நாடியவர்க்குப் பிரபலம் வந்தது, தேடி வந்தது. வாழ்க்கையை அனுபவிக்க விரும்பியவர்க்குப் பத்து வகைகளில் அனுபவித்தாயிற்று.எது, எது குடும்பத்திற்குக் கிடைத்தால் போதும் என்று கனவு கண்டார்களோ, அவையெல்லாம் தமக்கே சொந்தமாக, அதிகமாகப் பூர்த்தியாயிற்று. அதாவது,

மனத்தின் ஆழ்ந்த ஆசைகளெல்லாம் அதிகமாகப் பூர்த்தியாயின.

இவ்வளவு நாள் அன்னை நாம் மறந்த ஆசைகள், நாமறியாத ஆசைகளைப் பூர்த்தி செய்ததால், இனி நாம் ஆசைகளைவிட்டு கடமைகளை ஏற்கவேண்டும். மனம் மேலும் அதே ஆசைகளை நாடக்கூடாது. ஆனால், மனம் அவற்றையே நாடுகிறது. தாயாருக்கு மட்டும் தத்துவம் தெரியும், ஆனால் பிடிக்காது. இந்தக் காலத்தில் அவர்கள் கண்ணில்பட்ட பிற அன்பர்கள் அனுபவம் ஏராளம்.

அவற்றுள் சில:

1) ஜடப்பிரம்மம்

ஜடமும் பிரம்மம் என்ற ஞானம் அன்னைச் சூழலால் அன்பருக்கு லேசாக உண்டு. ஜடப்பொருள் பிரார்த்தனையைக் கேட்டு பதில் சொல்லும் என்பது தத்துவம். அதுபோன்று கடிகாரத்தில் ஓர் அன்பர் செய்ததை நான் பல முறை குறிப்பிட்டுள்ளேன். மீண்டும் அது விஷயமாக நடந்ததை ஆரம்பத்திலிருந்து விவரமாகக் கூறுகிறேன்.

1972இல் வாங்கிய சாவி கொடுக்கும் கடிகாரம். அன்று ரூ.100/- விலை. 20 ஆண்டுகள் நன்றாக ஓடியது. பிறகு சாவி கொடுத்தால் 1 மணி ஓடி நின்றுவிடுகிறது. இது கடிகாரம் பழைய கடிகாரம் என்பதுடன் சாவி கொடுப்பவருக்கு அந்த வேலை - அது ஒன்று மட்டுமே அவர் செய்வது - எரிச்சல் தருவது. அதனால் நின்றுவிடுகிறது எனப் புரிந்துகொள்ளலாம். அவ்வேலையை மற்றொருவர் எடுத்துக்கொண்டபிறகு ஓராண்டு கடிகாரம் நிற்காமல் ஓடியது. பிறகு நிற்க ஆரம்பித்தது. ரிப்பேருக்கு அனுப்பினால் மெயின் ஸ்பிரிங் மாற்றவேண்டும், விலை 400 ரூபாய் ஆகும். அதுவும்

இப்பொழுது உற்பத்தியிலில்லை. பழைய கடிகாரத்திலிருந்து தேடிப்பிடிக்க வேண்டும் என்றார். அதற்காக கடிகாரம் ரிப்பேர் கடையிலிருந்தபொழுது நன்றாக ஓடியது. துடைத்து எண்ணெய் போட்டு கடைக்காரர் கொடுத்துவிட்டார். இப்பொழுது சாவி கொடுப்பவருக்கு எரிச்சல் வர ஆரம்பித்தது. கடிகாரம் பழையபடி நிற்க ஆரம்பித்தது.

இந்தச் சமயம் 10 நாட்கள் அழைப்பில் உட்கார்ந்த அன்பர் ஒருவர் கடிகாரத்தை தம் பிரச்சினையின் பிரதிபப்பாக எடுத்துக்கொண்டார். அதே அறையில் அவர் உட்காருவதால் அவரே நிற்கும்பொழுது எல்லாம் சாவி கொடுத்தார். கடிகாரம் 3 நாட்கள் ஒரு முறையும் நிற்காமல் ஓடியது. அவர் எடுத்துக்கொண்ட பிரம்மாண்டமான பிரச்சினை கரைந்தது. இதுவரை நான் முன்பே எழுதியுள்ளேன்.

அடுத்த 2 ஆண்டுகள் கடிகாரம் ஓடுவதாகவும், நிற்பதாகவும் இருந்தது. வேறொருவர் தம் பிரச்சினையின் பிரதிபப்பாக கடிகாரத்தைக் கருதி தாமே சாவி கொடுக்க முன்வந்தார். அவருக்குப் பல பிரச்சினைகள் தீருகின்றன. ஒரு சமயம் எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்தன. ஆனால் கடிகாரம் ஓட மறுத்தது. கடிகாரம் ஓட வேண்டும் என்ற பிரார்த்தனையை மாற்றிக் கடிகாரமே அன்னை என அதை வணங்க ஆரம்பித்தார். 4 மாதம் நிற்காமல் ஓடிற்று. ஜடமான கடிகாரத்தின் பிரம்மம் நம் மாறிய மனநிலையை ஏற்றுப் பிரதிபலிக்கிறது.

2. ஓழுகும் பைப்பு:

ஒழுகும் பைப்பை இறுக மூடினால் ஒழுகுவதில்லை. அடிக்கடி கை தவறும். பைப்பு ஒழுகும். 7 முறைகள் இந்தத் தவறு வந்தபின் ஒரு பேப்பரில் பைப்பை இறுக மூடவேண்டும் என எழுதி ஞாபகத்திற்காக அதனருகில் ஒட்டியவர், பைப்பே அன்னை என வணங்கினார். 3 மாதம் பைப் ஒழுகவில்லை.

3. கார்

மொபெட் ஓட்டிக்கொண்டிருந்தவர்க்குத் தகப்பனார் கார் வாங்கிக் கொடுத்தார். அவர் காரை எவருக்கும் இரவல் தரமாட்டார். யாரையும் காரில் ஏற்றமாட்டார். ஓரிரு ஆண்டுகட்குப்பின் நிலைமை மாறியதால் தம் காரை நிரந்தரமாக வேறொருவர் உபயோகத்திற்காக 2½ ஆண்டுகள் தந்தார். இவர் எவருக்கும், எதையும் தாராதவர். எவராலும் நம்பமுடியாதபடி மனம் மாறாமல் செயல் மாறியது. இவருடையபொறுப்பில் வேறொரு கார் வந்தது. இவர் ஸ்தாபனம் ஒரு கார் வாங்கியது. அது இவருடைய முழு உபயோகத்திற்கு வந்தது.

ஸ்தாபனம் ஒரு வேனை நிரந்தரமாக வாடகைக்கு எடுத்தது. வேறு சந்தர்ப்பத்தில் ஒரு கார் வந்தது. எந்த நேரமும் இவர் உபயோகப்படுத்தலாம் என வந்துள்ளது.

1. மனம் மாறாமல் செயல் மாறியபொழுது ஒரு காரும் இல்லாத

இடத்தில் 5 கார்கள் எந்த நேரமும் பயன்பட வந்துள்ளன.

2. மனம் விரும்பி மாறினால் என்ன நடக்கும்?

3. பிறருக்குப் பயன்படுவதே self-giving கொள்கை. எத்தனை பெரியது?

4. பிறரில் உள்ள அன்னைக்குச் செய்யும் சேவை பலன் தரும்.

அது பெரும்பலன்.

5. அப்பலனையும் கருதாதது அன்னை பக்தி, அன்னைக்குச் செய்யும் சேவை. சமர்ப்பணம்:

மனம் அன்னை விஷயத்தில் கனிந்து, நெகிழ்ந்து, தானே அன்னை நினைவு வந்தபடியிருப்பவர்கட்குச் சமர்ப்பணம் உண்டு. அது இல்லாமல் நாமே முனைந்து செய்யும் சமர்ப்பணம் நடுவில் அறுந்து போகும். ஏராளமாகப் படித்தவர் எது பேசினாலும் அறிவோடிருக்கும். 4 நாட்கள் கழித்து உங்களூருக்கு வருகிறேன் என நாலு வரி ஒரு கார்டில் எழுதினாலும் அதில் நயமிருக்கும், அழகிருக்கும், ஆர்வமான ஆதரவு, அரவணைப்பு இருக்கும். எழுதுபவருடைய பிரியம் வெளிப்படும், சொல் நயமும், பொருள் நயமும் செறிந்திருக்கும். அக்கடிதத்தை விவரித்து ஒரு சொற்பொழிவு ஆற்றலாம். அது படிப்பு, பாண்டித்தியம். நாம் எழுதுவதில் விஷயம் மட்டும் மொட்டையாக இருக்கும். பகவான் எந்த விஷயத்தைப்பற்றி எழுதினாலும் - நாட்டுக்கொடி - அதில் அவருடைய சூழல் கனத்திருக்கும். செயல் எளியதாக இருந்தாலும், செய்பவர் பெரியவரானால், செயல் நேர்த்தியாக, ஆராதனையாக அமைவதை நாம் காண்கிறோம்.

ஜீவனும், ஜீவனுக்குரிய ஆத்மாவும் வாழ்விலும், மனத்திலும் ஈடுபட்டு, இரண்டறக் கலந்து இசைவாக எழுதுபவர் சமர்ப்பணத்தை மேற்கொள்ளலாம். அவருடைய சமர்ப்பணம் அதற்குரிய உயர்வுடன் இருக்கும். மற்றவர்க்குச் சமர்ப்பணம் தூரம். வந்து செய்தால் சமர்ப்பணம் பலிக்கும்பொழுது நம் ஆசையே பூர்த்தியாகும். அதாவது நாம் அன்னைக்குச் சமர்ப்பணம் எனக் கூறி நம் ஆசைக்குச் சமர்ப்பணம் செய்கிறோம். இதிலுள்ள கூறுகள்,

1. மனம் உண்மையாக இருக்காது. மனம் தெளிவாக அன்னை வேண்டாம், என் ஆசைகள் அப்படியே பூர்த்தியாக வேண்டும் எனக் கேட்கும்.

2. பிரார்த்தனையை வாய் எதிராகவும் மாற்றிப் பிரார்த்திக்கும்.

3. 2, 3 வினாடிகளில் சமர்ப்பணம் முடிந்துவிடும்.

4. வேலை நினைவு வந்தால் சமர்ப்பணம் மறந்துவிடும்.

5. சமர்ப்பணம் நினைவு வந்தால், வேலை சமர்ப்பணத்தை ஒதுக்கிவிட்டுத் தன்னைப் பூர்த்தி செய்துகொள்ளும்.

6. தீர்க்கமாகச் சமர்ப்பணத்தை மனம் நாடினால், "இந்த ஒருமுறை

சமர்ப்பணமில்லாமல் அப்படியே தள்ளிப் போகும். அது வருஷக் கணக்காக நடக்கும்".

7. மனம் கட்டை போட்டதுபோல் எதிர்க்கும்.

8. வற்புறுத்தினால் மீண்டும் மறந்துபோகும்.

9. நினைவுபடுத்தினால் எரிச்சல் வரும்.

10. எரிச்சல் வந்தாலும் தொடர்புண்டு எனப் பொருள், மறந்துபோனால்

தொடர்பே போய்விட்டது எனப் பொருள்.

11. இத்தனைத் தாண்டி வந்தால் இதே கட்டங்கள் அடுத்த 3

நிலைகளிலும் எழும்.

இவற்றிற்குக் காரணம் மனம் உண்மையாக இல்லாதது. நாம் உண்மையாக இருந்தாலும் நம் மனம் உண்மையாக இல்லாவிட்டால்,சமர்ப்பணம் எடுபடாது, கூடிவாராது. மனம் அடங்கி, உடல் வணங்குவது சமர்ப்பணம் பலிக்கும் அறிகுறி. Let thy will be done, Not my will, "அன்னையின் திருவுள்ளம், என் அபிப்பிராயமில்லை"என்ற சொல் அகந்தையை அழிக்கும். அச்சொல்லை மனம் உதறித் தள்ளிவிடும். உதறாமல் அச்சொல் உள்ளே போனால், உலகம் நம்முள் விரிவதைக் காணலாம். அது விழிப்பு opening, உண்மை sincerity, ஏற்புத்திறன் receptivity, ஆர்வம், aspiration சமர்ப்பணம் பலன் தர அந்த அளவு ஜீவன் வழிவிடவேண்டும்.

எங்கள் வீட்டில் தாயார் ஒருவரே பக்தர். அவருக்கு சமர்ப்பணமும், யோகமும் முக்கியமல்ல, அதிர்ஷ்டம் முக்கியம். அனைவருக்கும் அதிர்ஷ்டம் முக்கியமானால் அது வரும். கணவர் மனைவிக்காக அன்னையை ஏற்றவர். பிள்ளைகள் விளையாட்டுத் தனமாக வாழ்க்கையிலேயே பற்றில்லாத வெறும் ஜென்மங்கள். அப்படிப்பட்டவருக்குத் தாயாரால் நல்லது நடக்கவேண்டும் என்றால் அது நம் நிலையிலிருந்து 10ஆம் நிலைக்கு வந்தபொழுதே நடந்துவிட்டது. அதற்குமேல் 80ஆம் நிலைக்கு குடும்பம் வந்துவிட்டது.இந்த நிலையில் தாயாரின் ஆதாய மனப்பான்மை பலன் தாராது.ஒருபடி உயர்ந்திருக்கவேண்டும். அது பல வகைகளானவை.

1) ஆதாயம் போய் மனம் அருளை நாடவேண்டும்.

2) பிள்ளைகளுடைய குறையைத் தாயார் தம் குறையாகக் கருதி கணவருடைய குறையையும் சேர்த்துத் தம்மில் திருவுருமாற்ற வேண்டும். விலக்கினால் போதாது.

3) கணவரும், பிள்ளைகளும் கைகட்டி, வாய் பொத்தி, தாயாருக்குத்

தாமாக அடங்க வேண்டும். தாயார் பேச்சுக்கு மறு பேச்சில்லாமல் அவர்கள் நடக்க வேண்டும்.

4) இதுவரை வந்த ல்ழ்ர்த்ங்ஸ்ரீற்ஐ மானேஜ்மெண்ட் முறைகளால்

முழுவதும் நிறைவேற்றவேண்டும்.

5) அனைவருக்கும் நல்லெண்ணம் அபரிமிதமாகப் பொங்கி எழ

வேண்டும்.

இதுபோன்ற ஒன்றில்லாமல் வந்ததைக் காப்பது கடினம். இந்த நிலையில்,

1) ஒரு சிறு நல்ல செயலுக்குப் பெரிய அதிர்ஷ்டம் வரும்.

2) ஒரு சிறு தவற்றுக்கு அத்தனையும் போய்விடும்.இப்படியிருப்பதால் எதையும் காப்பாற்றுவது கடினம். காப்பாற்ற உயிர் போய் உயிர் வரும். தினசரி ஆபீஸ் போய் வரும்பொழுது எவரும் கல்லால் அடிக்கலாம், மோட்டாரை மேலே வந்து வேண்டுமென மோதலாம், சுடலாம், என்றால் எப்படிச் சமாளிக்க முடியும்? அதே சமயம் கலெக்டரிலிருந்து கவர்னர்வரை ஊரில் உள்ள பெரியவர்கள் அனைவரும் ஏதாவது உதவி செய்யக் காத்திருப்பதையும் காணலாம்.இது ஒரு இக்கட்டான நிலை. குடும்பம் அந்நிலைக்கு வந்துவிட்டது.அதைக் குடும்பம் அறியாது.

இதற்கு தத்துவரீதியான விளக்கமுண்டு. நடைமுறையில் அத்தத்துவம் வெளிப்படும் (strategies) வழிகள் உள்ளன. தாயாருக்கு இரண்டும் தெரியும். கொஞ்சம் அனுபவமும் உண்டு. அன்பர் உயர்ந்தவரானால் (higher consciousness) அறிவுக்கு விளக்கம் இருக்கும். இம்மாதிரிக் கட்டங்களில் அன்பர் தம் உயர்ந்த நிலையை விரும்பமாட்டார். தம் அல்ப ஆசைகளில் முழு ஆர்வம் காட்டுவார். தமக்கு அறிவின் தீட்சண்யம் (mental clarity) இருப்பதால், அதைப் பயன்படுத்தி தாழ்ந்த - அல்ப - நடைமுறையை உயர்ந்த வாழ்வாக மாற்றலாம். இத்திறன் உள்ளவர் அரியர். இதுவரை அனுபவம் அவர்கள் தங்கள் உயர்ந்த திறனைத் தாழ்ந்த ஆசைக்குத் தீவிரமாகப் பயன்படுத்துவதேயாகும்.

தமக்குள்ள உயர்ந்த திறனை தாம் உயரப் பயன்படுத்துவது அதிர்ஷ்டம். அதை அன்னைக்காகச் செய்வது அருள். It is left to their choice. எவ்வழி போகலாம் என்பதற்கு மனிதனுக்குச் சுதந்திரம் உண்டு.

அன்பர் தாழ்ந்தவரானால் (lower consciousness) அவருக்குத் தாம் பெறும் பலன் மட்டுமே தெரியும். அவர் நல்லவரானால் அப்பலன் பக்தி தரும். அவர் சூட்சுமமானால் அது நம்பிக்கையும் தரும். ஆத்ம விழிப்புள்ளவரானால் நன்றியறிதல் தரும். அதுவும் உயர்ந்ததாகவோ, தாழ்ந்ததாகவோ இருக்கும்.
 

. உயர்ந்ததால் தன் ஜீவியத்தை உயர்த்த முடியும். அது சிரமம்.

. தாழ்ந்தது தன் ஆட்சிக்குள் அனைவரையும் கொண்டு வரமுடியும்.

தம் நன்றியறிதல்மூலம் தம் ஜீவியத்தை உயர்த்த முடியும் என்றாலும் இதுவரை எவரும் செய்ததில்லை. தாழ்ந்தது அன்னை சட்டங்களைத் தன் சட்டமாக்கி, தனக்கு ராஜ்ஜியம் ஏற்படுத்தும். அதற்குமேல் புரியாது. புரிந்தால் அழுகை வரும். அழுகை வருகிறது என்றால் உயர, மாற அபிப்பிராயமில்லை எனப் பொருள். தாயார் படித்தவர். அன்னை எழுதியவற்றை உணர்ந்து அறிந்தவர். தம் நிலையறிந்தவர். பகவான் ஸ்ரீ அரவிந்தர் இந்தியாவுக்குச் சுதந்திரம் பெற்றபின் - 1910இல் - இந்தியச் சுதந்திர இயக்கம் தடம் மாறிப் போவதைத் தடுக்க முடியவில்லை என்பதை அறிந்தவர். தாம் பிறந்த வங்காளத்தில் 1943இல் பஞ்சம் வந்தபொழுது வங்காளமோ, அங்கு பிறந்த சாதகர்களோ நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்யாததால் தாம் பஞ்சத்தைத் தடுக்க முடியவில்லை என்று பகவான் அறிவார். அதேபோல் உலகப் போரைத் தடுக்க முடியவில்லை. மூன்றாம் போரைத் தடுக்க முடிந்தது. அன்னையின் முன் பிறவிகள், பகவானின் முன் பிறவிகள், இப்பிறவியில் வந்த வகைகளையும் தாயார் ஓரளவு அறிவார். பகவானும், அன்னையும் 1872இல், 1878இல் பிறந்ததிலிருந்து 1950இல் பகவான் சமாதியடையும்வரை, 1959இல் அன்னை சூட்சும உலகில் பகவானைச் சந்தித்தது, 1956இல் சத்தியஜீவியம் பூமிக்கு வந்தது, 1967இல் உலக அரசுகள் சத்திய ஜீவியத்தின் ஆட்சிக்குள் வந்ததும், 1872 - 2002 ஆகிய 130ஆண்டுகளில் உலகம் பெற்ற பேற்றில் பகவானுடைய பங்கையும் தாயார் தம் அறிவுக்கெட்டிய அளவு அறிவார். அவர் முன்னுள்ள பிரச்சினைகள்,

. தமக்கும் குடும்பத்திற்கும் உள்ள தொடர்பு யோகத் தொடர்பாக இருக்கவேண்டுமா, குடும்பத் தொடர்பாக இருக்கலாமா? எது அளவு,லிமிட்?

. பிறர் விருப்பத்தை மீறி அவர்கட்கு நல்லது செய்தால் ஆபத்து வாராமலிருக்கும் அளவு லிமிட் எது?

. தாம் எந்த அளவுக்கு மனைவி, தாயார், என்ற நிலைகளினின்று சாதகராக மாறவேண்டும்?

. இன்று அன்னை நேரடியாகத் தமக்கு அறிவுரை கூறினால் என்ன சொல்வார்?

இவற்றைச் சிந்திப்பதற்குப் பதிலாகச் சமர்ப்பணம் செய்வது மேல் என அறிவார். அவை சமர்ப்பணமாகவில்லை. முயன்று முடியவில்லை என்பதால் நடக்கும் நல்லனவே இப்பொழுது நடக்கின்றவை.

நடந்தவரை நடக்கட்டும்:

என்பதை அறிவில்லாமல் செய்தால் குறைந்தபட்சம் நடக்கும். குழந்தை தானே கற்றவரை கற்கட்டும் என்றால் குறைந்தபட்சம் நன்றாக வளர்வான், பேசுவான், சாப்பிடுவான், பள்ளிக்கூடம் போகமாட்டான். 20ஆம் வயதில் கூலிவேலைக்கே அவன் பயன்படுவான்.அதையே அறிவோடு செய்தால் பையன் படித்து பட்டம் பெற்று வேலைக்குப் போவான். அதில் B.A.. முதல் டாக்டர், Ph.Dவரை பல கட்டங்களுள்ளன.அறிவையும் நம்பாமல் ஆன்மாவை நம்பி பள்ளிக்கு அனுப்பாவிட்டால் சீனுவாச ராமானுஜராக வருவான்.நடைமுறையில் சீனுவாச ராமானுஜத்தை உற்பத்தி செய்யப்போய் பையனை உதவாக்கரை கூலியாக மாற்றுவோம். இதுவே யதார்த்தம்.அது வாழ்வுக்குரியது. அன்னை வாழ்வில் அந்தத் தோல்வியும் பையன் பட்டம் பெற்று வாழ்வதைவிட ஏதாவது ஓர் அம்சத்தில் - பிரபலம்,பணம் - சற்று அதிகமாக இருக்கும். இரட்டிப்பாக அமையும். அறிவில்லாமல் நடப்பது, அறிவோடு செயல்படுவது, ஆன்மாவை நம்பிச் செயல்படுவது ஆகியவற்றுள்,

. பல கட்டங்கள் உண்டு.

. நல்ல முறையிலும் செய்யலாம், சமூகத்திற்கு எதிராகவும் (positive, negative) செய்யலாம்.

சமர்ப்பணம் பலித்தால் நம் வாழ்வில் அன்னை பூர்த்தியாவார். அதற்கு நாம்,

. நம்மை உணர்ந்து,

. நம் குறைகளை, குற்றங்களை, தாழ்ந்த ஜீவியத்தை, இருளை உணர்ந்து,

. அவற்றைச் சரணம் செய்து திருவுருமாற்ற மனம் தயாராகி,

. அதன்பின் சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

சமர்ப்பணம் பலிக்காவிட்டால், சமர்ப்பணம் செய்ய முயன்ற அளவுக்குப் பலன் உண்டு. அது,

. நமது இலட்சியம் பூர்த்தியாவதாகும் அல்லது

. நம் நல்ல ஆசைகள் பூர்த்தியாகும்.

. நம் தேவைகள் பூர்த்தியாகும்.

. நம் மட்டமான ஆசைகள் பூர்த்தியாகும்.

எந்தக் கட்டத்திலும் மனிதன் ஆசையை விட்டுச் சமர்ப்பணத்தை நாட முடியும். அதேபோல் எந்த நேரத்திலும் சமர்ப்பணத்தைக் கைவிட்டு, ஆசையை வலியுறுத்தலாம்.

. சமர்ப்பணம் அதன் சட்டப்படி தன்னைப் பூர்த்தி செய்துகொள்ளும்.

. ஆசைக்குரிய வழி, ஆர்ப்பாட்டம், ஆபத்து, அகங்காரம், கொக்கரிப்பு, வெற்றி, தோல்வி நாம் அறிந்தது. அதனிஷ்டப்படி நடக்கும்.

. எது நடந்தாலும் அதற்கில்லாத தீவிரத்துடன் நடக்கும்.

. வெற்றியானால் அபரிமிதமாகும்.

. தோல்வியானால் அடியோடு அழியும்.

குடும்பம் உள்ளபடி மனம் மாறி தாயாருடன் ஒத்துழைத்தால் நடப்பவை சிரமத்தை மீறிப் பிரயத்தனப்பட்டு, நல்லதாகவே மட்டும் இருக்கும்.

Aim At Perfection

நடந்தவரை நடக்கட்டும் என்பதற்கு நேர் எதிரானது perfect perfection.. பூரணம் பூரணம் பெறுவது, சிறப்பின் உயர்வு என்பது. அதுவே பூரண யோகத்தின் இலட்சியம்.

. பூரண யோகம் யோகங்களில் சிறந்து, உயர்ந்த முழுமையுள்ளது.

. யோகம் அதிகபட்சமானால், வாழ்வு குறைந்தபட்சம். நடந்தவரை நடக்கட்டும் என்பது அன்னையை ஏற்ற அன்பர்கள் அன்னை வாழ்வில் குறைந்தபட்சத்தை இலட்சியமாகக் கொள்வது. பூரணமான பூரணம் அதே வாழ்வில் - யோகத்திலன்று

- அதிகபட்சத்தை இலட்சியமாகக் கொள்வது. அதன் அம்சங்கள், செயல்முறை,

தீராத பிரச்சினை தீர...... என்ற கட்டுரையில் பிரச்சினை நினைவு வருந்தோறும் அதை அன்னையிடம் சமர்ப்பித்தால், சமர்ப்பணம் பூரணமாகும்பொழுது பிரச்சினை தீரும் என்று கூறியுள்ளது.

சமர்ப்பணம் கடினமானாலும், ஒரு விஷயத்தை மட்டும் சமர்ப்பணம் செய்யும்பொழுது அது கூடிவரும். அதுபோல் நாம் பூரணத்தை எட்ட சமர்ப்பணம் செய்யக் கூடியவை பல. அவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாய் சமர்ப்பணம் செய்வது பூரணம் பெற உதவும். அவை,

. பிரச்சினைகள்

. வாய்ப்புகள்

. கடந்த காலக் கவலைகள்

. எரிச்சல்

. உறுத்தல்

. எதிர்காலப் பொறுப்புகள்

. மனம் நம்பும் எண்ணங்கள்

. Opinions அபிப்பிராயங்கள்

. குணக் குறைகள்

. சுபாவத்தின் கெட்ட அம்சங்கள்

. Our beliefs நாம் முடியாது என நம்புபவை.

. Impulses, உந்துதல்கள்

. Urges, வேகங்கள்

. Attitudes, நோக்கங்கள்

. Motives, ஆழ்ந்த ஜீவனுடைய நோக்கங்கள் நினைவு

. உணர்வு

. உறுத்தல்

இவைபோன்று நம்முள் உள்ள அனைத்தும் நேரம் எழுந்தபொழுது மேலே வரும். மேலே வரும்பொழுது நாம் அதனுடன் கலந்து நம்மை இழந்துவிடுவோம். அப்படி நம்மை இழக்காமல் விலகி நின்று சமர்ப்பணம் செய்யவேண்டும். எது மேலே வந்தாலும், தவறாமல் சமர்ப்பணம் செய்ய முயன்று முயற்சியை முடித்துவிட்டால், நாளடைவில் அது சிறிது சிறிதாக இடம் கொடுக்கும். ஒரு நாள் சமர்ப்பணமாகும். அது நம் personalityக்குத் தக்கவாறு பூர்த்தியாவது வாழ்வு. உலகளவில் பூர்த்தியாவது யோகம். சமர்ப்பணம் செய்வதெனில் நம் ஆட்சிக்குட்பட்டதை அன்னையின் ஆட்சிக்குட்படுத்துதல் எனப் பொருள். நம் கட்டுப்பாட்டில்லாததை நாம் சமர்ப்பணம் செய்ய முடியாது. மனத்தில் எண்ணம் ஓடுகின்றது எனில் சிந்தனை செய்ய முடியாதவருக்கு எண்ணம் அவர் கட்டுப்பாட்டிலிருக்காது.

சிந்திப்பவன் எண்ணத்தைச் சமர்ப்பணம் செய்ய முடியும்.

உணர்பவனால் சிந்திக்க முடியாது. சிந்திப்பவனால் உணர்ச்சியைச் சமர்ப்பணம் செய்ய முடியும். சிந்திக்க முடியாதவனால் எண்ணத்தையோ, உணர்ச்சியையோ சமர்ப்பணம் செய்ய முடியாது. பணம் முக்கியம் என நினைப்பவனுக்கு money value உண்டு. அவனால் பணத்தைச் சமர்ப்பணம் செய்ய முடியாது. பணம் முக்கியமில்லை என்பவன் மனத்தில் பணம் ஒட்டிக்கொண்டிருக்கும். அதுவே சமர்ப்பணத்திற்குத் தடை. முக்கியம் என நினைத்தபிறகு சமர்ப்பணத்திற்கு வழியில்லை. சமர்ப்பணம் செய்ய நாம் அந்த விஷயத்திலிருந்து விலகவேண்டும். விலகாவிட்டால் நாம் அதைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருப்பதாக அர்த்தம். நாம் unconsciousஆக இருக்கும்பொழுது சமர்ப்பணம் செய்யமுடியாது. Consecration is a conscious process. சமர்ப்பணம் விழிப்பிற்குரியது. நாம் நம் ஜாதியை உயர்வாக நினைக்கும்பொழுது ஜாதியைச் சமர்ப்பணம் செய்ய முடியாது. ஜாதி முக்கியமில்லை, நம் ஜாதி உயர்ந்தது என நாம் நினைப்பது தவறு என மனம் அறிந்தபின் மனம் ஜாதியைச் சமர்ப்பணம் செய்யும். அதேபோல் உணர்வும், உடலுணர்வும், ஜாதியிலிருந்து விலகியபின் அவை சமர்ப்பணம் செய்ய முடியும். பூரணச் சமர்ப்பணத்திற்கு ஜீவனே அவ்வெண்ணத்தைவிட்டு விலகவேண்டும். விலகிய பின்னரே சமர்ப்பணம் செய்ய முடியும். அதுவும் சுலபமன்று.

Let Thy will be done; Not my will என்பதில் முதற்பாகம் அன்னையை அழைப்பது. அடுத்தது நாம் விலக முடியாததால், அன்னையை நம்மை விலக்கும்படிக் கேட்பது. அதனால் இரண்டாம் பாகம் முக்கியம். இதைச்சொல்லும்பொழுது சொல் மனதில் பதிந்து தியானம் கனப்பது தெரியும். அப்படியில்லையெனில் சொல் தானாக நின்றுவிடும், தெரியாது. தியானம் மனத்தில் கனப்பதுடன் கீழிறங்கி நெஞ்சுக்குப் பின்னால் வரும். அப்படி நகர்ந்தால் சமர்ப்பணம் பலிப்பதாக அர்த்தம். இதைச் சிந்தனையாலோ, concentration, நிஷ்டையாலோ செய்ய முடியாது. நாம் நம்மிலிருந்து விலகவேண்டும் என்ற உண்மையால் மட்டும் செய்ய முடியும். அதை அன்னை sincerity என்கிறார். நமக்கு நாம் வேண்டாம், அன்னை வேண்டும் என்பதே அது. நாம் தவறு, மட்டம் எனப் புரிந்தால், வேண்டாம் என்பது பலிக்கும். நாம் சரி, உயர்வு என்றால் வேண்டாம் என்பது வெறுஞ் சொல்லாகும்.

. சமர்ப்பணத்தை ஏற்க விரும்புபவன் தன் மனத்தையும், நம்பிக்கைகளையும், values, பண்புகளையும், sensitivitiesசொரணைகளையும் ஆராய்ந்து, அவற்றை அன்னை நம்பிக்கை, பண்பு, சொரணைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, நம்முடையது வேண்டாம் என முடிவு செய்தால், முடிவு உண்மையானால், சமர்ப்பணம் பலிக்க வாய்ப்புண்டு.

. நம்மைவிட அன்னை நடைமுறையில் உயர்வு என்பதை நாம் ஏற்கவேண்டும்.

. நம்மைவிட்டு, சமூகத்தைக் கடந்து, உலகத்தைத் துறந்து நாம் அன்னையை நாடினால் சமர்ப்பணம் வாழ்வில் இடம் பெறும்.

. பொய் சொல்லாமல் வாழ முடியாது. பொய் சொன்னால் ஜெயிக்கும், தப்பிக்கலாம், பொய் சாமர்த்தியமாகச் சொன்னால் வலுவானது பலிக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. அவர்கள் மெய்யை நாட பொய்யைக் கைவிடவேண்டும். சமர்ப்பணம் பொய்யைக் கைவிட்டபின் எழும். பொய்யை நம்புபவரால் பொய்யைச் சமர்ப்பணம் செய்ய முடியாது.

. எந்தக் கட்டத்தில் சமர்ப்பணம் பலிக்கவில்லையோ அந்தக் கட்டத்தில் பொய்யிருக்கும்.

. இவற்றையெல்லாம் அறிவு விளங்கிக்கொண்டால், நம்பாவிட்டாலும், Let Thy will be done, Not my willஜீவன் பெறும். தொடர்ந்து சொன்னால், உள்ளிருந்து எழுந்தால் முழுப் பலனில்லாவிட்டாலும், பொய்யிலிருந்து விடுபடும் திறன் வரும்.

. தனக்கு வேண்டாம் என்பது பலன் தரவில்லை என்பது மனிதன். பணம் கொடுத்து மருந்து வாங்குகிறான். மருந்து சாப்பிடப் பிரியமில்லை. கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு மறந்துவிடுகிறான். மருந்து பலிக்கவில்லை என்றால், அவன் சாப்பிடாத மருந்து அவனுக்குப் பலிக்கவில்லை. சமர்ப்பணம் செய்ய வேண்டும் என அறிவு கூறுகிறது. செய்ய உணர்வுக்குப் பிடிக்கவில்லை. சமர்ப்பணம் பலிக்கவில்லை, செய்ய முடியவில்லை என்கிறான். வேண்டாதது பலன் தாராது. நிச்சயமாகத் தாராது. பலன் வேண்டுமானால், வேண்டாதது வேண்டியதாக வேண்டும்.

தாயார் முன்னுள்ள கேள்விகள் இரண்டு,

1) தனக்குள்ள அளவு - limit - எது?

2) Limit தெரிந்தால் அதுவரை தம்மால் செல்ல முடியுமா?

யோகத்தைப் பொருத்தவரை மனிதனுக்குத் தனக்குள்ள பரிணாம வாய்ப்பு இன்று தெரியவில்லை. தெரிந்தால் அந்த எல்லைவரை சென்று வாய்ப்பால் பலனடைய மனிதன் அபிப்பிராயப்படவில்லை. அதே நிலை தமக்கு வாழ்வில் அமைந்துள்ளதைத் தாயார் கண்டார். தம்முடைய லிமிட் தெரிந்துகொள்வது சிரமம் என்றாலும், முடியும். தாம் செய்யும் வேலைகளில் எந்த அளவு வழிவிடுகிறது, எதற்காக வழி விடுகிறது,அது நிரந்தரமான பாதையா என்பதைக் கண்டு நிர்ணயிக்க முடியும்.கடையில் புதியதாக வந்த சோப்பை ஒருவர் வாங்கியபின் அவர்மூலம் இருவர் வாங்கினால், அவர்கள்மூலம் பலர் வாங்கினால் இந்த சோப்புக்கு மார்க்கட் இருக்கிறது என்பதை வியாபாரி தெரிந்துகொள்கிறான். வியாபாரத்திற்கும், யோகத்திற்கும் சட்டம் ஒன்றே, வெளிப்பாடு வேறு. இலஞ்சம் நிலவும் காலேஜில் நம் பையனின் விண்ணப்பம் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாம் நேர்மையாக செய்யும் எந்தக் காரியமும் நேர்மையுள்ளவரை கூடிவரும் என்று தெரிகிறது. இதைப்போல் நமது எல்லையை நிர்ணயிக்க ஆராய்ச்சி,ஆலோசனை தேவை.

நமக்கு லிமிட் வைத்துக்கொள்வது யோகத்திற்கோ, யோக வாழ்க்கைக்கோ சரியில்லை. லிமிட் ஏற்படுத்தும் எண்ணம் அன்னை சம்பந்தப்பட்ட எந்தத் துறைக்கும் ஒத்து வாராது. தனக்குள்ள லிமிட் தெரிந்தபின் அதை முழுவதும் அனுபவிக்கும் மனநிலையைத் தாயார் ஏற்கவேண்டும், இல்லையெனில் தாயார் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.அதை எப்படி ஏற்படுத்துவது என்ற கேள்வியை எழுப்பாமல் அம்முயற்சியைக் கைவிட்டுச் சமர்ப்பணத்தை அதற்காக ஏற்பது அவசியம், முறை.கையில் ரூ.100 இல்லாதவர், காலேஜ் பீஸ் கட்ட முடியாதவர்,கடன்காரன் தொந்தரவு சிம்மசொப்பனமான நிலையில் அன்னையை அழைத்தபொழுது நிதானம் வந்தது. ஒரு வாரம் கழித்து ஒரு பாங்க் ஏஜெண்ட் 3 இலட்ச ரூபாய் சாங்ஷன் செய்கிறார். தொந்தரவு வளர்கிறது. பொறுமை உடன் வளர்ந்தாலும், பொறுக்க முடியாத நிலையும் வருகிறது. கையில் பணமில்லை. ஆர்டர் வந்தபடி இருக்கிறது.இந்த நிலையில் பழைய நண்பர் தம் பெரிய கம்பெனிக்கு 5 கோடிக்கு power plantக்கு quotation கேட்கிறார். அன்னை இதுபோல் மட்டுமே கொடுக்கிறார் என அறிவோம். இவருக்கு quotation தயார் செய்யவும் பணமிருக்காது. பல்லைக் கடித்துக்கொண்டு, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வேலை செய்வதற்குப் பதிலாக பாரத்தை அன்னைமீது போட்டு நாம் செய்ய வேண்டியவற்றை திறமையாகக் குறைவறச் செய்தால், அந்த tender வந்து இலாபம் கிடைக்கும். அன்பருக்கு அப்பொறுமையிருக்குமா?

வருவது போகாது,

போனால் நமக்கு நம்பிக்கைக் குறைவாலேயே போகும்.


 

முன்னேற்றம்:

அற்புதம் நமக்காகக் காத்திருக்கிறது. நாம் தயாராக வேண்டிய அவசியமில்லை. ஏற்றுக்கொண்டால் போதும் என அன்னை அஜெண்டாவில் கூறுகிறார்கள். அது உண்மையானால் ஏன் நாம் தொடர்ந்த முன்னேற்றத்தைக் காண்பதில்லை?

முதல் வாய்ப்பு வந்தவுடன் அது அடுத்த வாய்ப்புக்கு அஸ்திவாரமாக நாம் செயல்பட்டால் முன்னேற்றம் தொடர்ந்திருக்கும். உடனே அனுபவிக்க வேண்டும், ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்றாலும், தொடர்ந்த முன்னேற்றத்தைவிடச் சிறு ஆசைகளைப் பூர்த்தி செய்ய முயன்றாலும் முன்னேற்றம் தடைப்படும். இதற்கு நமது அனுபவத்தில் பார்த்தவை ஏராளம். இது அடிப்படையான discipline. அக்கட்டுப்பாடு இல்லாதவர்க்கு எதுவுமில்லை.

. ஒரு புது வசதி வந்தால் எந்த அளவுக்கு நாம் அதை இப்பொழுது அனுபவிக்கலாம், எந்த அளவுக்கு அடுத்த முன்னேற்றத்திற்கு அது பயன்படவேண்டும் என்பது பரம்பரை ஞானம்.

. பரம்பரையாக உள்ள ஞானமே ஒருவர் பெறவில்லை எனில்

அவர் இனி அதைத்தான் பெற முடியும். அவருக்குத் தொடர்ந்த முன்னேற்றமில்லை.

. நாம் செய்யும் வேலையில் வேலைக்குரிய கட்டுப்பாடுண்டு. அது இல்லாதவர் முன்னேற்றத்தைப் பற்றி நினைக்க முடியாது.இந்தக் குடும்பத்திற்கு வந்தது ஏராளம். எல்லாம் தாயார் கையிலிருக்கிறது என்பது சரி. ஆனால் அதுவே முடிவன்று. தாயாருக்குள்ள நிலைகள் பல.

. தாமே எல்லாப் பொறுப்புகளையும் எடுத்துக்கொண்டு, தம்மாலியன்றதைச் செய்வது அதிகபட்சம் என்பது சரி. அப்படிச் செய்தால் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வந்ததைப் பெரும்பாடுபட்டுக் காப்பாற்றலாம், அல்லது தவறலாம்.

. தம்மாலியன்ற அளவு வேலையின் பொறுப்பை ஏற்பதைவிட வீட்டார் மனநிலைக்குரிய பொறுப்பை ஏற்றால், மற்றவர்கள் கட்டுத்தறியிலிருந்து விடுபட்ட ஆடு, மாடுபோல் நடப்பார்கள். அது வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம். பெற்றால் பலன் அதிகமாக இருக்கும்.

. மற்றவர் தம் பிரதிபலிப்பு என்பதை ஏற்று, வேலையையும், மனிதர்களையும் தாயார் பொறுப்பேற்றால் அனைவரும் தாயார் போலாகிவிடுவார்கள். தொடர்ந்த அபரிமிதமான முன்னேற்றம் இருக்கும். அதுவே தாயார் செய்யக்கூடிய அதிகபட்சமாகும். அதைத் தாயார் செய்யவேண்டுமானால், குடும்பத்திற்காக, அன்னையை ஏற்பதற்குப்பதிலாக, அன்னைக்காக குடும்பத்தை ஏற்க வேண்டும். இதற்குரிய பக்குவம் அதிகம். இந்த நேரம் சிறியவன் தாயாரிடம் வந்து பேசுகிறான்.

சிறியவன் : அம்மா, என் பிறந்த நாளன்று பரீட்சை வருகிறது. எனக்குப் படிக்க முடியாது. பிறந்த நாள் கெட்டுப் போகும். நான் பரீட்சைக்குப் போகாமலிருக்கலாமா? இது அரைப் பரீட்சைதானே?

தாயார் : பரீட்சை முக்கியமா? பிறந்த நாள் முக்கியமா என்று நாம் முடிவு செய்ய முடியாது. நம் முடிவு இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும். இரண்டுக்கும் முக்கியத்துவம் உண்டு.

சிறியவன் : நான் என்ன செய்ய? நீங்கள் என்னைச் சமர்ப்பணம் செய்யச் சொல்லாதீர்கள்.

தாயார் : "எனக்கு இரண்டும் முக்கியம். என்ன செய்வது என எனக்குத் தெரியாது'' என்று அன்னையிடம் சொல்லிவிடு.

சிறியவன் : எனக்குப் பரீட்சை முக்கியமில்லை. பிறந்த நாள் முக்கியம்.

தாயார் : அது சரியா?

சிறியவன் : சரியா, தப்பா என்றெல்லாம் பேசாதீங்கோ, பரீட்சைக்கு போக வேண்டாம் என்று சொல்லுங்க.

தாயார் : சரி, சாயந்திரம் சொல்கிறேன்.

பையன் சமர்ப்பணம் செய்யவில்லை எனில் தாம் சமர்ப்பணத்தை நம்பாமல் பையனைப் புரிந்துகொள்ளும்படிக் கேட்பது சரியில்லை எனத் தாயார், தம் மனப்போக்கைச் சமர்ப்பணம் செய்ய முனைந்தால் அது இடம் தரவில்லை. "இந்த அளவுகூடப் புரியாத பையன்' என்று மனம் கூறியதைத் தனக்குப் பொருத்திப் பார்த்தார். ஓரளவு மனம் அடங்கியது. மாலை பையன் வந்தான்.

சிறியவன் : சரி, அம்மா. எப்படிச் சமர்ப்பணம் செய்யவேண்டும் என விவரமாகச் சொல்லுங்கள். நான் செய்து பார்க்கிறேன்.

தாயார் : உனக்கு அன்னைமீது நம்பிக்கை இருக்கிறதா?

சிறியவனின் நண்பன் ஒருவன் அவனைத் தேடி வந்தான். அவன் வெளியே போய் நண்பனைச் சந்தித்துவிட்டு வந்தான்.

சிறியவன் : அம்மா, எனக்குச் சமர்ப்பணம் வேண்டாம், பரீட்சை தேதி மாறிவிட்டது என்று நண்பன் கூறுகிறான். நான் போறேன்மா.

தாயாருக்குத் தம் நிலையும், மகனுடைய நிலையும், குடும்பத்து நிலையும் புரிய ஆரம்பித்தது. தமக்குச் சமர்ப்பணம் கட்டுப்பட்ட பொழுது, பையன் சம்மதப்பட்டான், வேலை முடிந்துவிட்டது. இனி தாம் செய்வதன்மூலம் அடுத்த முறை பையனே சமர்ப்பணத்தை ஏற்க முன்வரவேண்டும். அதற்குரியதைத்தான் தம் மனத்தில் செய்ய வேண்டும் என்று புரிந்தது. அந்த வாரம் வந்த வாய்ப்புகள் ஏராளம்.

1) வடஇந்தியாவில் செய்ததுபோல் தென் இந்தியாவிலும் ஒரு power plant போடலாமா என பிரெஞ்சுக்காரர் கேட்டார்.

2) பம்பாய் கம்பெனிக்காரன் பார்ட்னர், நம் கம்பெனி நிர்வாகம் விஷயமாக அளவுகடந்து திருப்தி அடைந்ததால், அவனாக வேறொரு plantஐ நாம் உற்பத்தி செய்வதானால் அவனே முழு உற்பத்தியையும் வாங்கிக் கொள்வதாகவும், மூலதனம் தருவதாகவும் கூறினான்.

3) பார்ட்னரை Chennai Chamber of Commerce தலைவர் பதவிக்குப் போட்டியிட அழைத்துள்ளனர்.

4) பெரியவனை power plantபற்றி T.V.இல் பேட்டி காண அழைத்தனர்.

5) சிறியவனுக்கு state teamஇல் இடம் கிடைத்துள்ளது.

தாயார் இத்தனையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதைவிட முக்கியம் ஏற்றுக்கொள்ளும்முன் தாமும், குடும்பமும், பார்ட்னரும் மனத்தைத் தயார் செய்துகொள்ள வேண்டும் எனப் புரிந்தது.வந்த எந்த வாய்ப்பையும் விடக்கூடாது. தகுதி பெறாமல் ஏற்கக் கூடாது எனத் தீர்மானமாக அவர் உணர்ந்தார். அன்னை அகந்தையை அழிக்க 3 சூத்திரங்களை எழுதியுள்ளார். அவற்றைச் சில ஆண்டுகட்குமுன் சொல்ல ஆரம்பித்து சரி வாராமல் விட்டுவிட்டார்.

Let Thy will be done, not my will என்பது முதல் சூத்திரம். இதைச் சரியாகச் சொன்னால் அகந்தை கரையும் என்கிறார். இது பலிக்க துணை செய்யும் கற்பனை சாஷ்ட்டாங்கமாக அன்னை முன் நமஸ்காரம் செய்வது என்கிறார். நாம் நம் ஜீவியத்தில் ஊறிப் போயிருப்பதால் Let thy will be done என்பது போதாது. அதற்குக் குறுக்கே நிற்கும் நம் எண்ணம் கூடாது எனக் கூற Not my willஎனக் கூற வேண்டும் எனவும் கூறுகிறார். மனம் அகந்தையிலிருந்து விடுபட இது உதவும். பல ஆண்டுகட்குமுன் இதைச் சொல்லிப் பார்த்தபொழுது தொடர்ந்து சொல்ல முடியவில்லை, ஜீவனோடு சொல்ல முடியவில்லை, மனக் கதவு அடைபட்டது போலிருந்தது நினைவுக்கு வந்தது. மீண்டும் தற்சமயம் ஆரம்பித்தபொழுது முன்போலவே இருந்தாலும், தடையின் தீவிரம் குறைந்தது. அதனால் தீவிரமாகச் சொல்லும்பொழுது சொல் மனத்தைவிட்டுச் சில சமயங்களில் நகர்ந்து நெஞ்சுக்குப் பின் லேசாக வருவது தெரிகிறது.

இத்தடைகட்குக் காரணம் நம் மனத்திலுள்ள அசுரன் என்பது நினைவு வந்து, I surrender my hostility என் அசுர குணத்தைச் சரணம் செய்கிறேன் என்று கூறினார். பல ஆண்டுகட்கு முன் பகவான் ஸ்ரீ அரவிந்தர் அறையில் தியானம் செய்தபொழுது நெஞ்சில் ஒரு பச்சைக் கையும் அதன்மீது ஒரு கறுப்புக் கையும் தெரிந்தன. இப்பொழுது அந்தக் கறுப்புக் கையில்லை. சைத்தியப்புருஷனுக்குரிய நிறத்தில் லேசான ஒளி பொருந்திய கை மிக அழகாக நெஞ்சில் தெரிந்தது.

இதே சமயம் பெரியவன் அவன் நண்பனிடம் கொடுத்த மோட்டார் பைக் 1½ வருஷமாகத் திரும்பி வரவில்லை. கேட்கக் கூச்சமாக இருந்தாலும், கேட்டால் சாக்கு, பதிலாக வருகிறது. தாயார் அவனை correspondence பார்க்கச் சொன்னார். வேண்டுமென்றே ஒரு காமிராவைத் தான் அப்படி வைத்திருப்பது நினைவுக்கு வந்து அந்தக் காமிராவைத் திருப்பிக் கொடுத்தான். பைக் உடனே வந்தது ஒரு வகையில் சிறு விஷயமென்றாலும், இந்த நேரம் அது பெரிய காரியத்தைக் குறிப்பதை அறிந்தார்.

2) Thy will, Thy will என்பது அடுத்தது. இது உணர்வுக்குரியது. உடல் இரண்டாகப் பிளந்து ஒளியை ஏற்பது உடலின் வரும் கற்பனை. My will தடை போனபின் இது பயன்படும். உடல் ஒளியை ஏற்க நாம் அதை இரு கூறாகப் பிளக்க வேண்டும்.

3) I am eternally yours என்பது உடலுக்குரியது. இறைவனின் இரு கைகளுக்குள் தன்னைக் குழந்தையாக உருவகப்படுத்துவது கற்பனை. இவை தமக்குதவும் என தாயார் நினைத்தது சற்று பலிப்பது போலிருப்பதால்

தாயார் இவற்றை மேற்கொண்டு புற நிகழ்ச்சிகளையும், அகவுணர்வுகளையும் கவனிக்கலானார். நல்லதைச் செய்தாலும் "நான்" வந்துவிடுகிறது. சும்மாயிருந்தால் வேலை கெட்டுப் போகிறது. நாம் மாறினால் குடும்பம் மாறுகிறது.

அனைத்தையும் கவனிப்பதுடன் அரை நிமிஷம் விடாமல் எதையாவது அன்னையை நெருங்க செய்தபடியிருப்பதும், அதை அதிகபட்சத் தீவிரமாகச் செய்வதும் சரி எனப்பட்டு தாயார் அவற்றை மேற்கொண்டார். மேலும் ஒரு விஷயம். அநேகக் குடும்பங்கள் வேகமாக முன்னேறும்பொழுது பல குடும்பங்கள் ஓரடியும் எடுத்து வைக்க முடியாதபடியிருக்கும். அதற்குக் காரணம் இப்பொழுது அவர்கள் உள்ள நிலைமைக்குச் சரியான அஸ்திவாரமிருக்காது.அங்கு ஒரு பலமான சிக்கலிருக்கும். அந்தச் சிக்கல் பொதுவாகக் குடும்ப இரகஸ்யமாக இருக்கும். அல்லது வீட்டில் யாரும் அதைப் பேசாமலிருக்கும் நிலையிருக்கும். நாளாவட்டத்தில் பிரச்சினை அது என்பது மறந்துபோய் மற்றவர்கள்போல முன்னுக்கு வர முயன்றால் இடம் கொடுக்காது. தீவிர முயற்சி செய்தால் ஏதாவது பெரிய விஷயம் சரியும். அதற்குண்டான காரணத்தை இன்று சரி செய்தால் மேலே போகலாம். அது மனத்தைப் பற்றியதானால் மனத்தால் அதைச் சரி செய்ய வேண்டும். அதுபோன்ற சில உதாரணங்கள்.

1) 15 தொழில்கள் ஆரம்பித்து நஷ்டமானவர் மார்க்கட் நிலவரம் மாறியதால் சிரமமில்லாமல் வாழ்ந்தால், அவருடைய தோல்விகளின் குறை மார்க்கட்டில் ஆயிரம் வகையினவாக இருக்கும். அவர் மனத்தில் தோல்வி கொலுவீற்றிருக்கும்.

2) நம்பியவரைத் துரோகம் செய்து விழுந்து எழுந்தவர்கள் செயலிலும், நினைவிலும் துரோகமிருக்கும், துரோகம் முன்னேறவிடாது.

3) 4, 5 பேர்கள் சம்பாதிக்கும் குடும்பத்தில் ஒருவர் மட்டும் திறமைசாலி, மற்றவர்கள் நஷ்டம் விளைவிப்பவரெனில், அவர் மீது புதிய, பெரிய கட்டடம் கட்ட நிலைமை இடம் தாராது. ஒருவர் பொக்கையாக இருந்தால் முன்னேற அனுமதிக்காது.

4) தகப்பனார், மகனுக்குள் பிளவு ஏற்பட்டு மீண்டும் கூடி வாழும்பொழுது புது மார்க்கட் நிலவரம் சாதகமாக இருந்தால் மற்றவரைப்போல இவர்கள் அவ்வாய்ப்பைப் பயன்படுத்த முடியாது.

5) இன்ஜினீயரிங் காலேஜில், வீட்டார் எதிர்ப்பை மீறிச் சேர்ந்து வேறு உதவியால் படிப்பு முடிந்து முன்னுக்கு வருபவன் குடும்பத்திற்குப் பலன் வேண்டும் என்று முயன்றால் ஒவ்வொரு முயற்சியும் வெட்டிக்கொண்டு போகும். அன்று எதிர்த்த மனப்பான்மை இன்று ஆதாயத்திற்காக இல்லாமல், அன்பிற்காக மாறினால் வாழ்வு வழிவிடும்.

6) சிக்கல்

குடும்பம் என்றால் சிக்கல். அறிவில்லாமல் ஏற்பட்ட சிக்கல், ஆத்திரப்பட்டு எழுந்த சிக்கல், பொறாமையால் உள்ள சிக்கல் என தாமே ஏற்பட்டவை, நாமே ஏற்படுத்தியவை என சிக்கலில்லாத குடும்பம் குறைவு. அவை முன்னேறும். மனம் உண்மையை ஏற்றுச் சிக்கலை அவிழ்த்தால் முன்னுக்கு வரலாம். சிக்கலேயில்லாவிட்டாலும் (lower consciousness) தாழ்ந்த ஜீவியமுடையவர் முன்னேற முயன்றால் சிக்கல் உடனே எழும்.அவை ஜீவியம் உயராமல் உடையாது.

இந்தக் குடும்பம் தாழ்ந்த ஜீவியமுடையது. தான் அப்படி இருப்பதாக அறியாதது. குடும்பம் வெளிப்படையாக "நாம் மட்டமானவர்'' எனப் புரிந்து மாறினால் பலன் உண்டு. அதைத் தாயார் ஓரளவுதான் சரிக்கட்டலாம். முழுவதும் ஈடு செய்ய முடியாது. அதை ஏற்பது உண்மை. தம் சமர்ப்பணத்தால் குடும்பத்தினர் தாழ்ந்த பழக்கங்கள், நோக்கங்கள், தாழ்ந்த இலட்சியங்கள் - ஆக தாழ்ந்த ஜீவியத்தை - ஆகியவற்றை முழுவதும் ஈடு செய்வது முடியாது, செய்யக் கூடாது.சிக்கலை அவிழ்ப்பது கீழிருந்து மேலே வருவது. அது பிரச்சினையைத் தீர்ப்பதுபோல். Positiveஆக நினைத்தால் வாய்ப்பை ஏற்று அனுபவிப்பதாகும். அதைக் கருதுவது சிறந்தது. பாஸிட்டிவ், நெகட்டிவ் இரண்டுக்கும் மேலானது அன்னை வாழ்வு. அது சுயமான நல்லது, self-existent good. அதற்குரிய உணர்வு,

பொருள்கட்கும் விஷயத்திற்கும் உள்ள "ரஸா".

அன்னையை மனிதன் நெருங்குவதும், அதை அன்னை ஏற்கும் வகையும்,

. அன்னையை அறிந்து அவர் சூழல் நம்மைத் தொட்டவுடன் மனக்கவலை, கிலேசம் பறந்து போகும். பிரச்சினைகள் அப்படியே இருக்கும்.

. பிரார்த்தனை செய்தாலும், செய்யாவிட்டாலும் உடல் உபாதை, குடும்பக் கஷ்டம், கடன் பளு, சில்லரைப் பிரச்சினைகள் ஒவ்வொன்றாய் விலகும்.

. பெரிய தீராத பிரச்சினைகட்கு வழி பிறக்கும்.

. அவை எதிர்பாராமல் தீரும்.

. நமது சில்லரை ஆசைகள், தேவைகள் பூர்த்தியாகும்.

. மறந்துபோன ஆசைகள் பூர்த்தியாகும்.

. நாமேயறியாமல் நம் மனதிலிருந்த ஆசைகள் அபரிமிதமாக நம்

முயற்சியின்றி பூர்த்தியாகும்.

. நம் உலகில்லாத வாய்ப்புகள் உற்பத்தியாகும்.

. உலகில்லாதது நமக்கு வரும்.

. வருவது போகாது, பெறுவது நம்மைப் பொருத்தது.

. நம் அகந்தையை வற்புறுத்தினால் முதலில் வாய்ப்பு போகும். பிறகு போன பிரச்சினைகள் வரும்.

. முடிவில் அனைத்தும் போகும்.

. அகந்தையை விலக்கினால், விலக்கும் அளவுக்குச் சமர்ப்பணம் பலிக்கும்.

. சமர்ப்பணம், சரணாகதியாகும்.

. சரணாகதி பூர்த்தியாகும் நேரம், "ரஸா" எழும்.

. ஆரம்பத்தில் அகந்தை அகன்று சமர்ப்பணம் செயல்பட்டால்

இத்தனையும் முதல் நாளே ஒரு விஷயத்தில் நடைபெறும். அவை தொடர்வது அரிது, தொடரக்கூடாது என்ற சட்டமில்லை.

தாயார் இத்தனையையும் பல அளவுகளில் பார்த்தவர். படிப்பால் அறிந்தவர். தாம் பெண்ணானதால் இந்தச் சமூகத்தில் தம் power, authority அதிகாரத்தைச் செலுத்தமுடியாது. ஆணாக இருந்தாலும் அதைப் பயன்படுத்தக் கூடாது. அவர் யோகத்தை மேற்கொண்டவர் இல்லை. என்றாலும், யோகம் அவரை அழைக்கிறது. தாயாருக்குக் குடும்பம் முக்கியம். யோகத்தில் குடும்பம் யோகத்தின் பகுதி, அதற்குட்பட்டது. புறத்தில் குடும்பப் பாசத்தால், அகத்தில் பாசத்தாலும் பாதிக்கப்பட்டவர் தாயார். அவர் நிலை,

. தெரிந்ததைப் பின்பற்றும் சூழல்லை.

. தெரிந்ததைப் பின்பற்ற சூழல் அனுமதித்தாலும் மனம் இடம் தரவில்லை.

. மனத்தைக் கடக்கும் பாங்கை அன்னை அளித்தபின் மனத்தை விடமுடியாத மனநிலை.

. சமர்ப்பணமே முழுவதும் பலிக்கவில்லை.

. சரணாகதிக்கு ஆத்ம பக்குவம் இருந்தாலும் மனம் வாழ்வை நாடுகிறது.

. "ரஸா' கதவைத் தட்டினாலும் ருசி பின்னிழுக்கிறது.

. மனம் பலனைக் கருதுகிறது, ரஸாவை நாடவில்லை.

. அன்னையைவிட மனிதர்கள் முக்கியமாக இருக்கிறது. அகந்தையைவிட்டு நகர முடியவில்லை.

. அதிர்ஷ்டம் புரிகிறது, அருள் புரியவில்லை. அருள் உள்ளே வாராமல் அதிர்ஷ்டம் பலிக்காது என்று தெரியவில்லை. பேரருள் காத்திருந்தாலும் மனம் அருளை நாடாமல் அதிர்ஷ்டத்தைக் கருதுகிறது.புற நிகழ்ச்சிகள் மனத்தைப் படம்பிடித்துக் காட்டுவதுபோல் நடக்கின்றன. ஒவ்வொரு முறையும் விஷயம் அன்னையா, வாழ்வா என்ற நிலைக்கு வந்தால், மனம் வாழ்வை (அகந்தை) நாடுவது தெளிவாகத் தெரிகிறது.

நாம் அருளை ஏற்கத் தயார் செய்யவும் தேவையில்லை, ஏற்றால் போதும் என்ற நிலையில் தாயார் தம் மனம் குடும்பத்தை நாடுவதைக் கண்டார்.

குடும்பத்தை நாடினால் அது இறங்கு முகம், உள்ளது போகும், வந்தது பலிக்காது, இல்லாத பிரச்சினைகள் எழும், அவை வளரும். அன்னையை நாடுவது ஏறு முகம், இல்லாதது வந்தபடியிருக்கும், வந்தது பலிக்கும்,பிரச்சினைகள் எழா, வாய்ப்பு வளரும் என்று தெரிந்தாலும், தாயார் மனம் மனித மனமாக இருக்கிறது.

அன்னையையறியாத திறமைசாலிகட்கு வாழ்வில் இவை இதே வரிசையில் நடக்கின்றன. அவர் அன்னையை ஏற்றால் அளவு பெருகும். வாழ்வில் பெருகும் செல்வம், நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கும். பெரும்பாலும் கெட்டது அதிகமாக இருக்கும். கெட்டது குறைவாக இருந்தாலும், நாளடைவில் வாழ்வில் நல்லது கெட்டதாக மாறும். மாறியது அப்படியே நிலைக்கும்.

சிருஷ்டி என்பது நல்லதைக் கெட்டதாக மாற்றிய அமைப்பு. கெட்டது மீண்டும் நல்லதாவது பரிணாமம். கெட்டது மீண்டும் சீரழிந்து தீமையாகிறது. இது Life Divine தத்துவம். பிரம்மம் தன்னுள் மறைவது ஒளி, இருளாவது. அதுவே நல்லது, கெட்டதாவது.இது சிருஷ்டிக்கு அவசியம். கெட்டது தீமையாவது அவசியமில்லை என்றாலும், நாளடைவில் தீமையாவது இயல்பு.

. நாம் நல்லவராக இருக்கிறோமா, கெட்டவராக இருக்கிறோமா என்பது கேள்வியில்லை.

. நாம் மாறப் பிரியப்படுகிறோமா, இல்லையா என்பதே கேள்வி.

. மாறுவது என்பது அஞ்ஞானத்தினின்று ஞானமாக எழுவது.

. நாம் பிரியப்பட்டால் அதே நேரம் அது பூர்த்தியாகும்.

. மாற மனம் தயங்குவது அஞ்ஞானம் ருசிப்பதாகும்.

. குடும்பம், பாசம், கடமை என்பவற்றின் பெயரால் நாம் அஞ்ஞானத்தை ரசிக்கிறோம்.

. அஞ்ஞானத்தை ரசிப்பவன் ஞானத்தை ரசிக்க விரும்புவது மாற்றம்,

திருவுருமாற்றம், ரஸாவை அறிவது.

. இதில் புரியக் கூடியது ஒன்றுமில்லை, செய்யக்கூடியதே அனைத்தும்.

. ஞானம் வேண்டுமா, வேண்டாமா என்பதே கேள்வி.

. அதிர்ஷ்டம் வேண்டுமா, தரித்திரம் ருசியாக இருக்கிறதா என்பதே அது.

. அதிர்ஷ்டம் வேண்டுமானால், அருள் வரும்.

. அருளை வரவேற்றால் அது பேரருளாகும்.

. அதிர்ஷ்டமிருக்கிறது பேரருள் பெற, ஆசையிருக்கிறது தரித்திரமாக வாழ என நம் நாட்டுப் பழமொழியை மாற்றி எழுதலாம்.

சமர்ப்பணம் பலிக்கவில்லை, நகரவில்லை என நாம் பார்க்கிறோம். சமர்ப்பணம் செய்யவேண்டும் என நினைத்தால், சமர்ப்பணமாகவில்லை எனக் கூறுவது சரியா? குழந்தை பள்ளிக்குப் போகவில்லை என நாம் கூறினால், என்ன அர்த்தம்? தானே குழந்தை பள்ளிக்குப் போகிறேன் என்று சொல்லுமா? சொல்லாது. குழந்தை போகக் கூடாது என்றிருப்பதை மாற்றி நாம் வற்புறுத்தி பள்ளிக்கு அனுப்பாவிட்டால் போகாது. குழந்தை பள்ளிக்குப் போகக் கூடாது என நம்மைப் பற்றியிருப்பதைப்போல் நாம் சமர்ப்பணம் வேண்டாம் என வாழ்வைப் பற்றியுள்ளோம். நாம் என்பது நம் மனம். மனத்தில் ஞானம், உறுதி (knowledge, will) என்று இரு பகுதிகளுண்டு. உறுதி வாழ்வைப் பற்றியுள்ளது. அதன் பிடியைத் தளர்த்தி விடுவிக்க வேண்டும். ஞானம், வாழ்வு சரி என்று நினைப்பதையும் மாற்றி சமர்ப்பணம் வேண்டும் எனக் கூறவேண்டும்.

. நாம் வாழ்வை விடுவதும், வாழ்வை விடவேண்டும் என அறிவதும் முதலில் செய்ய வேண்டியது.

. வாழ்வை விட்டகன்ற மனம் சமர்ப்பணத்தை நாடுவது அடுத்தது.

முதலில் செய்யவேண்டியதைச் செய்யாமல் இரண்டாவதைச் செய்வது பலன் தாராது. தாயாருக்கு தம் கணவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பது முக்கியம். "நான் மனைவி, மனைவிக்குரிய இலட்சணம் அது'' என நினைக்கிறார். அதுவரை கணவர் நினைப்பதே நடக்கும். தாயார் நினைப்பது நடக்காது.

. எவரிடம் அதிகாரம் இருக்கிறதோ அவரிஷ்டம் பூர்த்தியாகும்.

. அப்படியானால் இந்த அதிர்ஷ்டம் வர இந்த வீட்டில் மனைவி கணவனை அதிகாரம் செய்யவேண்டும் என்று புரிந்து கொள்ளலாமா?

அது சரியில்லை. மனைவிக்கு அதிர்ஷ்டம் புரிகிறது. கணவர் அதிர்ஷ்டத்தைப் புரிந்து ஏற்றால் மனைவிக்குப் பணிவதாக அர்த்தமில்லை. அறிவை ஏற்பதாக அர்த்தம். கணவரும்,குழந்தைகளும் குடும்பத்திற்கு வந்துள்ள வாய்ப்பை அறியவேண்டும்,ஏற்கவேண்டும். விஷயம் தடம் மாறிப்போனால் project இதே இடத்தில் நின்றுவிடும். இதற்குத் தாயார் என்ன செய்ய முடியும்?

"அதிர்ஷ்டத்தைக் கணவர் ஏற்றால், என் சொற்படி நடக்கவேண்டும்'என மனைவி நினைத்தால் அது தடையாகும், அகங்காரமாகும்.தாயாருக்கு ego இல்லை என்றால், அதிர்ஷ்டம் அகந்தையைவிட முக்கியமானால் கணவரும், குடும்பமும் அதிர்ஷ்டத்தை ஏற்கும்.இங்கும் இரண்டு நிலைகள் உள்ளன.

. அனைவரும் சேர்ந்து விபரமாகப் பேசி விஷயத்தை அறிந்து ஏற்றுக்கொண்டால் விஷயம் நகரும்.

. எவரும் எதையும் கருதாமலிருந்தால், மனைவியே தன் முயற்சியால் குடும்பம் நகர முயல்வது சிரமம். குடும்பத்திற்கு இல்லாத ஆர்வத்தை தாயாரே கொடுப்பதாகப் பொருள்.

. அப்படிச் செய்வது குடும்ப பாரத்தை தாயார் ஏற்பதாகும், இது சிரமம்.

. குடும்பம் அதிர்ஷ்டத்தையும், தாயாரையும் ஏற்பது சுலபம்.

. தாயாரே குடும்பத்தை ஏற்க அவர் அன்னையை நாடி அன்னைமூலம் குடும்பத்தை ஏற்பது ஏற்கனவே சொன்னது போல், தகப்பனாரே பையன் பரீட்சைக்குப் படிப்பதாக முடியும்.அது தலைகீழாக நடப்பதாகும்.

எண்ணமாக நாம் அறிவது உடலில் urge வேகமாக எழுகிறது. இதற்கு சூட்சுமப் பகுதியுண்டு. Subtle physical urge, வேகம் உணர்வில் வெளிப்படுவது ள்ங்ய்ள்ஹற்ண்ர்ய். இதற்கும் சூட்சுமப் பகுதியுண்டு. அது subtle vital sensation அதுவே நெஞ்சில் வெளிப்படும். அது emotion.. அதன் சூட்சுமப் பகுதி. subtle emotional impulse முடிவாக எண்ணமாகவும், சூட்சுமமான எண்ணமாகவும் மனத்தில் தெரியும். நாம் நினைப்பது gross thought ஜடமான எண்ணம். சாப்பிடவேண்டும் என்பது ஜடமான எண்ணம். அது எழுமுன் மனத்தில் impulseஆகவும் subtle impulseஆகவும் தோன்றும். சமர்ப்பணம் அங்கு ஆரம்பித்து உடலில் சூட்சும வேகத்தில் முடிவது பூர்த்தியாகும்.
 


 

Mind

Vital

Body

gross thought

gross sensation

gross urge

ஜடமான எண்ணம்

ஜடமான உணர்வு

ஜட வேகம்

Subtle thought

சூட்சுமமான எண்ணம்

Subtle sensation சூட்சுமமான உணர்வு

Subtle urge

சூட்சுமமான வேகம்

Subtle impulse of thought

சூட்சுமமான உந்தலின் எண்ணம்

Subtle impulse of sensation

சூட்சுமமான உணர்வின் உந்தல்

Subtle impulse of urge

சூட்சுமமான வேகத்தின் உந்தல்


 

சாப்பிடப் போகவேண்டும் என்ற எண்ணம் 9 கட்டங்களுக்கு முன் எழுகிறது. சமர்ப்பணத்தை மேற்கொண்டு அதை ஒவ்வொரு கட்டமாக உயர்த்திப்போய் கடைசி கட்டத்தை அடையலாம். சமர்ப்பணம் எந்தக் கட்டத்தில் பலித்தாலும் அதற்குரிய பலன் உண்டு. கடைசி கட்டத்தில் பலித்தால் முழுப் பலனுண்டு. சமர்ப்பணம் பழக்கமானால் நாம் எந்தக் கட்டத்திலிருக்கிறோம் என அறியலாம். உஷாராக இருந்தால் எண்ணம் உணர்வாகும்முன் வேகமாகும் நிலையிலேயே,அதற்குமுன் சூட்சும உந்துதலாகும் நிலையிலேயே அதைப் பிரித்துச் சமர்ப்பணம் செய்யலாம்.

. எண்ணத்தைச் சமர்ப்பணம் செய்யச் சொல்லும்,

. உணர்ச்சியைச் சமர்ப்பணம் செய்ய, சொல்லற்ற உணர்வும்,

. வேகத்தைச் சமர்ப்பணம் செய்ய சொல்லற்ற உணர்வற்ற வேகமும்,

. அவற்றை சூட்சுமத்தில் சமர்ப்பணம் செய்ய அந்த அந்த நிலைக்கேற்ற சூட்சுமமும் தேவை.

. ஆர்வம் (பக்தி) உள்ளவர் ஆர்வத்தை இதே நிலைகளில் சமர்ப்பணம் செய்வது எண்ணத்தைச் சமர்ப்பணம் செய்வதைவிடச் சிறப்பு.

. நோக்கத்தைச் சமர்ப்பணம் செய்வது அதனினும் உயர்வு.

. ஜீவனின் நோக்கத்தைச் (motive) சமர்ப்பணம் செய்வது முடிவானது.

. அங்கும் ஜடம், சூட்சுமம், உந்துதல் (impulse) என்ற பிரிவுகள் உள.

. ஆதி, அந்த உந்துதல். அது எழும்பொழுது செய்யும் சமர்ப்பணம்,

சரணாகதிக்கு முன்கட்டம். அவருக்குச் சரணாகதி முடியும்.

தாயாருக்கு இவையெல்லாம் படிப்பால் தெரியும். முடியாது. குடும்பம் என்றவுடன் பாசமும், கணவருக்குப் பணியவேண்டும் என்பதும் எழுவதால் இந்த நிலைகளை அவரால் செயல்படுத்த முடியாது. இவையெல்லாம் முடியவேண்டும். இந்த 9 கட்டங்களில் முதற்கட்டம் அனைவருக்கும் பலித்தால் குடும்பத்திற்கு வந்த அத்தனை வாய்ப்புகளும் பூர்த்தியாகும். தாயாரே செய்வதானால் 9ஆம் கட்டத்தில் செய்யவேண்டும். அது மிகக் கடினம். அப்படி ஒருவரே செய்தால்,

அனைவரும் எதிராக நடந்து தாயார் செய்வதை அழிக்க முயல்வர்.

100க்கு மேலான கடன்காரர் நெருக்குபவருக்கு 100க்கு மேலான

உறவினர்களும், நண்பர்களும் தொடர்ந்து உதவி மேல் உதவி செய்கிறார்கள். இந்த நெருக்கடியான நிலையில் அவருக்குப் பெருந் தொகை சாங்ஷனாகி பாங்கில் அவர் vaultஇல் உள்ளது. சாவி அவர் கையில். சர்க்காருக்கு அது சம்பந்தமாகக் கட்டவேண்டிய தொகையுண்டு. சர்க்கார் அத்தொகையைக் கட்டிவிட்டு பாங்கிலிருந்து பணத்தை எடுத்துக்கொள் என்கிறது. பாங்க் பணத்தை எடுத்து அதிலிருந்து கட்ட அனுமதியில்லை. பாங்க்கே அப்பணத்தை சர்க்காருக்குக் கட்டிவிட்டு மீதியை இவருக்குத் தரலாம்.

. உள்ளது பெரிய நெடுநாள் சிக்கல்.

. திடீரென வந்தது மிகப் பெரிய உதவி.

. தடை அர்த்தமற்றது.

இந்த நேரம் தடையை விலக்க அன்னை வழி செய்வார்களா?

இரு வகைகளில் வழி செய்வார். நமக்கு என்ன தடை இன்று இருக்கிறதோ, இதே தடையை இன்று நாம் மற்றொருவர் விஷயத்தில் செய்வோம். அல்லது ஏற்கனவே செய்திருப்போம். அது இல்லாமல் இது வாராது. அது போனால் இத்தடை விலகும். சர்க்காரில் இதுபோன்ற சட்டங்களுண்டு. சர்க்கார் உத்தியோகஸ்தர் எலக்ஷனில் நிற்க வேலையை ராஜினாமா செய்யவேண்டும். எலக்ஷனில் ஜெயித்தபின் பதவியை ஏற்க ராஜினாமா செய்யவேண்டும் என்று சட்டமில்லை. வீடு மாற்றும்பொழுது அட்வான்ஸ் தர இதுபோன்ற சிரமம் வரும். இருக்கும் வீட்டு அட்வான்ஸ் திரும்பி வர ஒரு மாதம் ஆகும் என்றால் புது வீட்டுக்காரர் சிலர் பொறுத்திருப்பார்கள், சிலர் இருக்கமாட்டார்கள். ஓர் இக்கட்டான நிலையிது. பாங்கில் பணமுள்ளவர் தம் வாழ்வில் அதுபோன்று நடந்திருந்தால் அதை இன்று மனதால் மாற்றினால், சர்க்கார் தடை விலகி பாங்க் பணம் கைக்கு வரும்.

. நமக்கு அர்த்தமற்றதாகத் தோன்றும் தடை வாழ்வுக்கு அர்த்தமுள்ளது.

. அந்த அர்த்தம் புரிபவன் சாதிப்பான். அது அர்த்தபுஷ்டியுள்ள அர்த்தம்.

. Correspondence தொடர்பின் முக்கியத்தை ஏற்பவர் தொடர்ந்து சாதிப்பார்.வாழ்வில் சாதிக்கத் தேவையானவை ஏராளம். அவற்றுள் முக்கியமானவை நம்பிக்கை, கவனம் observation, தொடர்பு correspondence ஆகும். correspondenceஆக உள்ளது எது எனத் தெரியாத நேரம் உண்டு. தெரியாவிட்டாலும் அப்படி ஒரு தொடர்பு இருப்பதாக ஏற்றுக்கொண்டு அது போகவேண்டும் எனப் பிரார்த்தனை செய்தால் தடை விலகும். ஆழ்ந்த பிரார்த்தனை நம்மை அறியாமல் தடையை விலக்கிப் பிரச்சினையைத் தீர்க்கும்.

Self-awareness என்பதே யோகம். இங்கு நம் குறைகள் நமக்குத் தெரிவது self-awareness அதை ஏற்பது சாதனைக்கு வழி செய்யும். உள்ளதில் பெரிய தைரியம் தம் குறையை ஏற்பது. அதனால் தைரியம் இங்கு சாதிக்கும். தைரியலக்ஷ்மியை மற்ற 7 இலட்சுமிகளும் தேடி வருகிறார்கள் என்பது புராணம். புராணம் புராதனமானது. புராதனம் விவேகம் நிறைந்தது.

சாவித்திரிக்கு அவளுள் உள்ள மனம், Man of sorrows, சோக தேவதை, Mother of Might, பலத்தின் தெய்வம் எனப் பலர் உள்ளிருந்து எழுந்து வந்து, "நானே உன் ஆத்மா'' என்றபொழுது அவை தன் ஆத்மாயில்லை, ஆத்மாவின் பகுதி என்ற தெளிவு இருந்ததால், அவற்றையெல்லாம் கடந்து அவளால் எமனைத் தொடர முடிந்தது. எமன் கூறும் வாதங்கள் நம் மனம் கூறும் வாதங்கள். அவற்றை சாவித்திரியால் கடக்க முடிந்ததால் எமனை வெல்ல முடிந்தது. எமனிடமிருந்து சத்தியவானை மீட்டபின் இறைவன் சாவித்திரிக்கு மோட்சம், சொர்க்கம் தர விரும்புகிறார். இறைவனே தருவது அருள். அதை எப்படி மறுப்பது? இறைவன் நமக்குள்ள ஆசையைப் பூர்த்தி செய்ய விரும்புவதால்,

சாவித்திரி அதையும் மறுக்கிறாள்.

சாவித்திரி அவதாரம் பலிக்கிறது. நாம் அன்னையைக் கண்டபின் நிமிஷத்திற்கொருதரம் எழுவது என்ன?

அன்னையைவிட்டு அகலும் வாழ்க்கை சந்தர்ப்பம்.

அதை ஏற்காதவரில்லை. ஏற்பவருக்கு அருள் அத்துடன் முடிகிறது. கடைசிவரை ஏற்க மறுப்பவருக்கு அருள் காத்திருக்கிறது. Ascent of Truth என அன்னை எழுதிய கதையும் அதையே கூறுகிறது. முடிவு என்பதை 10 பேரில் இருவர் கண்டபின், மலை உச்சிக்கு வருகின்றனர். அதுவரை பெரும்பாடு. அது முடிவன்று. அங்கிருந்து பள்ளத்தில் குதிக்கவேண்டும். அதை ஏற்பவருக்கு அன்னையுண்டு.

பம்பாயில் ஒரு வழக்குண்டு. எந்த நாட்டில் உள்ள பொருள் வேண்டுமானாலும், கறந்த பால் பகல், இரவில் எப்பொழுது வேண்டுமானாலும், எந்த ஊர் வடாம் வேண்டுமானாலும் பம்பாயில் கிடைக்கும். விலை என்ன எனக் கேட்காமல் கொடுப்பவருக்குக் கிடைக்கும். பிரபஞ்சத்தில் ஒரு காரியம் உண்டு எனில் அதைப் புரிந்துகொள்ளும் அறிவு நம் மனத்திற்குண்டு என்கிறார் ஸ்ரீ அரவிந்தர். நாம் - அன்னையிடம் வந்தவர் - அதைக் கீழ்க்கண்டவாறு அறியவேண்டும்.

உலகில் ஒரு பொருள் உண்டு எனில் அது அன்பர்க்குக் கிடைக்கும். செல்வம், பதவி, திறமை, செல்வாக்கு, பணம், அந்தஸ்து, எதுவானாலும் அது அன்பர்க்குண்டு. நமது முயற்சியை முழுவதும் தீர்ப்பவருக்கு அது நிச்சயம் உண்டு.

மக்களை எத்தனை வகைகளாகவும் பிரிக்கலாம். இது நாமறிந்ததே. மீண்டும் கூறினால் மிகையாகாது.

1. தூய்மையான நல்லெண்ணமுள்ள பரந்த மனம்.

2. அறிவுள்ள உயர்ந்த உள்ளம்.

3. அற்புதமான திறமை நிறைந்த நல்ல மனிதர்.

4. பிறருக்குச் செய்யும் உதவியை இறைவனின் சேவையாக ஏற்ற

அகந்தையற்ற உயர்ந்த ஆத்மா.

5. பரநலமில்லாவிட்டாலும், சுயநலமற்றவர்.

6. சொந்தமாக உழைப்பவர். உற்றார், நண்பருக்குகந்தவர்.

7. தவறற்ற சுயநலம்.

8. வெறும் திறமையுள்ள சுயநலம்.

9. பிறரை நஷ்டப்படுத்திப் பெறும் சுயநலம்.

10 பிறரை நஷ்டப்படுத்தி இன்பம் பெறுபவர்.

11. யாருக்காவது தொந்தரவு கொடுப்பது இன்பம் என நினைப்பவர்.

12. ஏதாவது வேலை கெட்டுப்போனால் சந்தோஷப்படுபவர்.

13. புதுப் புதுப் பொய் சொல்வதில் சந்தோஷப்படுபவர்.

14. யாராவது வசமாக மாட்டிக்கொண்டால் ஏமாற்றக் காத்து இருப்பவர்.

15. அப்படிக் கொள்ளையடித்தபின் தம்மால் அடுத்தவருக்கு -

நஷ்டப்பட்டவருக்கு - நல்லது, இலாபம் எனப் பேசக் கற்றுக் கொண்டவர்.

16. தெண்டச் சோறு.

17. தெண்டச் சோறு என்பதை இலட்சியமாகக்கொண்டு கனவு காண்பவர்.

18. எதைத் தொட்டாலும் கரியாக்குபவர்.

19. கரியானபிறகு பிறரை அதற்குக் காரணம் காட்டுபவர்.

20 மண்ணாங்கட்டி - சொரணையற்ற மண்ணாங்கட்டி.

இந்த 20 நிலைகளும் மனிதனை முழுமையாக விவரிக்காது. சுமார் 20 தலைப்புகளில் - திறமை, அன்பு, கருணை, தூய்மை, ஞானம், ...... - ஒவ்வொரு தலைப்பின்கீழ் 20 நிலைகளாக மனிதனை 400, 500 வகைகளாகப் பிரிக்கலாம்.

. நமக்கு மனிதனோ, உலகமோ முக்கியமில்லை.

. நமக்கு நாம் முக்கியம், நம் நிலை முக்கியம்.

. எந்த நிலையிலிருக்கிறோம் என்பது பொருட்டன்று.

. அதை ஏற்க மனம் சம்மதிக்குமா?

. அதை உண்மையாக மனம் கணிக்குமா?

. அதிலிருந்து ஒரு நிலை உயர மனம் விழையுமா? என்பதே கேள்வி. அதைச் செய்ய முயல்பவர்க்கு முன்னேற்றம் முடிவற்றது. அதை மிகச் சுருக்கமாகச் செய்யும் வழி மிகக் கடினமானது. நாம் எந்த நிலையிருந்தாலும் அதற்குரிய எண்ணங்கள் ஆயிரமாயிரமாக மனத்தில் எழும், எழுந்தபடியிருக்கும். நாம் அவ்வெண்ணங்களைச் சிந்திக்கும்வரை அதே நிலையில் இருப்போம். அவற்றை ஏற்க மறுத்தால், அதைவிட்டு உயருவோம். அவை 407ஆம் பக்கத்தில் கூறிய 9 நிலைகளில் எழும். எந்த

நிலையை மறுத்தாலும் அடுத்த நிலையில் எண்ணம் எழும். கடைசி

கட்டமானது, subtle physcial உடலின் சூட்சும வேகமாக எழும்.

அந்த நிலையில் எண்ணத்தை மறுத்தால் சமர்ப்பணம் செய்யலாம்.

சமர்ப்பணம் அடுத்த கட்டத்திற்கு நம்மை உயர்த்தும். அப்படி

உயருவதற்கு முடிவில்லை. நாம் ஏற்படுத்துவதே முடிவு. தாயார் The Life Divineஅதன் முக்கியத்துவத்தை அறிவர். அவர் கூறியவை,
 

. அன்பர்கள் அன்னை, பகவானை ஏற்கும் அளவுக்கு அவர்கள் காரியம் பலிக்கும்.

. ஏற்பது என்பது அவர்கள் முறைகளைக் கடைப்பிடிப்பது.

. அது பெரிய விஷயம் என்றாலும், அதற்குரிய மனமாற்றம் அதை நிறைவு செய்யும்.

. மனம் ஏற்று மாறுவதற்கு அடுத்த கட்டம் மனம் புரிந்து மாறுவது.

. புரிவது எனில் 1) பலனுண்டு எனப் புரிவது, 2) நல்லது எனப் புரிவது,

3) எதனால் அந்த நல்லது வருகிறது என்ற விளக்கத்தின் அடிப்படைத் தத்துவம் புரிய படிக்க வேண்டும். உணர்வு, உடல் புரிவது மேற்கொண்ட நிலைகள்.இதுபோல் தாயார் அடிக்கடி பேசுவதாலும், நேரம் வரும்பொழுது

The Life Divine விளக்கங்களைக் கூறுவதும் கணவர், பிள்ளைகள்

மனத்திலுள்ளதால் அனைவரும் அதைப் படிக்க விரும்பினர். முரண்பாடு, உடன்பாடு என்பதை ஏற்க, சிரமப்பட்ட விஷயத்தில், அதை அப்படி ஏற்கவேண்டும் என்பதைவிட அது எப்படி உடன்பாடாக இருக்கிறது என்ற விளக்கம் அனைவருக்கும் மன நிறைவும், ஆச்சரியமும் கொடுத்தது. கசப்பான விஷயத்தை இனிப்பான அவசியமாக The Life Divineவிளக்குவது அந்த நேரம் கண்ட அனுபவம். அதிலிருந்து The Life Divineனினுடைய முக்கியத்துவம் தெரிய ஆரம்பித்தது. நூலின் முக்கிய 70 கருத்துகளை விளக்கும் உரையாடல், அதுபோன்ற மற்ற சிறு நூல்களைப் படித்துவிட்டு மூலத்தைப் படிக்க விரும்பினர். உயர்ந்த தத்துவங்களைப் படிப்பதும்,அவை வாழ்வில் எப்படி நடைமுறையில் காணப்படுகிறது என்று கண்டபின்,

. சமர்ப்பணம் வேண்டாம்.

. நாங்களெல்லாம் நன்றாகத்தானேயிருக்கிறோம்.

. எங்களைப் பொய்யர் என நினைத்துவிட்டீர்களா?

. நடப்பதைப் பேசுவோம்.

போன்ற பாஷை இதன்பிறகு கேட்கவில்லை. ஏதோ அறிவில்லாமல்

நாங்கள் அப்படிப் பேசினோம் என இப்பொழுதெல்லாம் நினைக்கிறார்கள், சொல்கிறார்கள். The Life Divine எந்த அளவு புரிகிறது என்பதைவிட ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இது நல்லது என்றாலும், காரியம் முடிய இவையெல்லாம் போதாது என்பதே விஷயம். ஒருமுறை அதுபோல் நடந்த உரையாடல்,

கணவர் : The Life Divine படித்தால் அது நம்மை அடியோடு மாற்றிவிடும்.

பெரியவன் : உயர்த்திவிடும் அப்பா.

பெண் : எப்படி?

சிறியவன் : சொல்லத் தெரியாது. அண்ணன் இப்பொழுதெல்லாம் என்னை tease பண்ணுவதில்லை

கணவர் : படித்தால் நிதானம் வருகிறது.

பெரியவன் : பகவான் நம்மை மாற்றவில்லை. நம் வாழ்க்கைக்குப் புதிய அடிப்படையிருக்கிறது எனக் கூறுவதால் நம் மனம் அறிவோடு மாறுகிறது.

கணவர் : எதைச் சொல்கிறாய்?

பெரியவன் : சுத்தம் முக்கியம் என்று செய்கிறோம். சத்திய ஜீவிய சக்தி சுத்தமான இடத்தில் வரும் என்று கூறுவதால் ஏன் முக்கியம் எனப் புரிகிறது.

பெண் : ஏன் அப்படி என்று விளக்கம் வருகிறதா?

தாயார் : அழுக்கு என்பது unorganised consciousness.சுத்தம் என்பது organised consciousness.

கணவர் : இப்படிப் பார்த்தால் நாம் அறிந்துகொள்ள வேண்டியது ஏராளமாக இருக்கும் போலிருக்கிறதே.

கணவர் : நாணயம் நல்லது என ஏற்கிறோம். ஏன் நல்லது என நமக்குத் தெரியும். தத்துவம் என்ன சொல்கிறது?

தாயார் : நாணயம் என்பது value பண்பு. Value என்பது spiritual skill. ஆன்மாவின் திறமை. சத்தியஜீவியம் அதன்மூலம் அதிகமாகச் செயல்படும்.

பெரியவன் : இவையெல்லாம் புத்தகத்தில்லை. அவர் சொல்வதிலிருந்து நாமே யோசனை செய்து கண்டுகொள்ளவேண்டும்.

சிறியவன் : இதுபோல் புரிந்தால் இடக்குக்கு வேலையில்லை.

பெண் : அன்னை பக்தர்கள் அதிகமாகச் சம்பாதிக்கலாம் என்பதற்கு என்ன தத்துவம்?

தாயார் : பெரியவன் நேற்று அழகாகச் சொன்னான்.

கணவர் : நான் சொல்கிறேன். The more subtle the more powerful என்று நூலில் வருகிறது. மற்றவர்கள் vitalஆல் வேலை செய்தால் நாம் psychicஆல் வேலை செய்கிறோம். அது சூட்சுமமானது, அதிகப் பலன் தருகிறது.

பெண் : இருங்கப்பா, நான் எழுதிக்கொள்கிறேன்.

கணவர் : ஏன் சூட்சுமத்திற்கு அதிக சக்தி என்றும் கூறலாம்.

பெரியவன் : சொல்லுங்க.

கணவர் : காரணம், சூட்சுமம், ஸ்தூலம் என்பது படிப்படியாக வருகிறது. ஸ்தூலம் மெதுவாக நகரும். சூட்சுமம் வேகமாக நகரும். வேகமாக நகர்ந்தால், அதிக சக்தியுண்டு. அதனால் பலன் அதிகம்.

வெளியான நூல்களை எல்லாம் படித்து இதுபோல் கம்பெனி, பாக்டரி, வீட்டு விஷயங்களில் பேசியதால் வீட்டின் நிலை மாறுகிறது. இந்த மாற்றம் பாக்டரியில் அப்படியே தெரிவதால் அனாவசியமான பேச்சிற்கே இடமில்லை என்ற நிலை ஏற்பட்டு வருகிறது. கம்பெனி வேலைகள் மும்முரமாக நடைபெறுகின்றன. எதுவானாலும் பார்ட்னர் ஒரு மணி நேரம் வீட்டிற்கு வந்து போவது ஊரிருந்தால் தவறாது. திறமையாகக் காரியங்கள் நடைபெறுவது கம்பெனியில் பெரிய திருப்தி, ஆச்சரியம். அடுத்த 6 மாதத்தில் 40 கோடிக்கு கட்டிடங்கள்,மெஷின்கள் வரும், வேலை நடக்கும். அமைந்த கான்ட்ராக்டர்கள் நாணயஸ்தர்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. வீடு லேசாக மாறி வருகிறது. இந்த மாற்றத்தின் பலனைக் கம்பெனியில் தாயார் காண்கிறார். 3 நாட்கள் வீடு மௌனத்தால் கனத்தது. பெரியவன் internetஇல் கம்பெனி சம்பந்தமான டெக்னாலஜி எக்ஸ்பர்ட் இந்தியா வந்திருப்பதை அறிந்து அவருடன் பேசினான். அவருக்கு internetமூலம் நம் கம்பெனி தெரியும். அவர் 6 மாதத்திற்குப் பதிலாக புதிய தம்முடைய முறையால் 3 மாதத்தில் 25 கோடியில் இரு மடங்கு உற்பத்தி செய்து தருகிறேன் என்றார். கம்பெனியில் வேலையை நிறுத்திவிட்டு எக்ஸ்பர்ட்டை அமர்த்தி வேலையை அவர் சொல்படி முடித்தனர். வீடு குதூகலமாகிவிட்டது. பாக்டரியில் ஒரே கொண்டாட்டம். பார்ட்னருக்கும், தாயாருக்கும் தவிர இம்மாற்றம் பட்ங் கண்ச்ங் உண்ஸ்ண்ய்ங் படிப்பதால் ஏற்பட்டது எனத் தெரியவில்லை. இருவரும் அதைச் சொல்லவில்லை. The Life Divine படிக்க ஆரம்பித்தபின், Synthesis of Yoga, Savitri, Mother's 18 vols, 13 volumes of Agenda வீட்டுக்கு வந்துவிட்டன. படிப்பது என்றால் இவற்றைப் படிப்பது என்றாகிவிட்டது.

ஒரு நாள்,

பெரியவன் : அம்மா, எமன் ஏம்மா ஒளிமயமான பின்னும் குதர்க்கமாகப் பேசுகிறான்?

பெண் : சாவித்திரியின் ஆன்மாக்கள் என எழும் 7, 8 தெய்வங்கள் அவளைத் தன் இலட்சியத்திலிருந்து மாற்ற முயலவில்லையா?

கணவர் : இறைவனே சாவித்திரிக்கு, சொர்க்கத்தை அளிக்கிறாரே.

சிறியவன் : அப்போ, நாமெல்லாம் தப்பில்லை.

தாயார் : சமர்ப்பணம் பலிக்க பல ஜென்மங்களாகும். சாவித்திரி உடலை விட்டு எமனைத் தொடர்வதுபோல அது. பலித்த பின், பலிக்க ஆரம்பித்தபின், இத்தனை temptationsவரும். அத்தனையும் நம் பழைய ஆசைகள், ஆழ்ந்த ஆசைகள், மனிதனாக நாமிருப்பதால் உள்ள தேவைகள் ஆகியவற்றைப் பூர்த்தி செய்ய முனையும். இவற்றில் எதை ஏற்றுக்கொண்டாலும் சமர்ப்பணம் பூரணமாகப் பலிக்காது.சரணாகதி இதையும் கடந்தது. அப்படிப்பட்ட நிலையை நம்அனைவருக்கும் அன்னை தாமே அளிப்பதைப் பெற நம் பங்கு சரணாகதி. இதை பேசும்பொழுது கரண்ட் நின்றுவிட்டது. சரணாகதி எவ்வளவு பெரியது என்பதை கரண்ட் நிற்பது காட்டுகிறது.

சிறியவன் : புரியலைம்மா.

தாயார் : அவ்வளவு பெரிய முறைக்குரிய பலன் உலகத்தைவிடப் பெரியது. அப்பலனை அன்னை நமக்களிக்க முன்வருகிறார். அதற்குச் சமமான அகத்திண்மை சமர்ப்பணம், சரணாகதி.

கணவர் : நமக்குப் பொருத்திப் பேசு.

தாயார் : நாம் இப்பொழுது பாக்டரி, அந்தஸ்து ஆகியவைப் பற்றி நினைக்கிறோம். நம்மைப் போன்றவர்க்கு, இதுபோன்ற நிலையில்லை. எட்டாததை நமக்கு அளிக்கும்பொழுது நாம் செய்யவேண்டியது என்ன?

பெரியவன் : நன்றியுடன் பெற்று நல்லபடி அனுபவிக்கலாம்.

தாயார் : நடைமுறையில் அது பலனைமட்டும் பெறுவதாகும்.

கணவர் : அப்புறம்?

தொடரும்....


 

 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

சுமுகத்தால் ஏற்பட்ட அமைதி இறைவனுடன் கலக்கும் நிலையை அளித்தால் செயல் இனிமையும், உதார குணமும்

வெளிப்படும்.

சுமுகத்திற்கு இறைவன் இனிமையைப் பரிசாக அளிக்கிறான்.


 


 


 



book | by Dr. Radut