Skip to Content

09.மனை சாஸ்திரம்

 மனை சாஸ்திரம்

அன்னையை அறிந்த அன்பர்கள் நேரம் வரும்பொழுது அன்னையை மறப்பதும், அன்னை அவர்களை பின்தொடர்வதும், அப்படி அன்னை தரும் பாதுகாப்பிலிருந்து முயன்று மனிதன் விலகுவதும், அவனை மீறி - தன்னை அழித்துக்கொள்ள மனிதன் முயல்வதினின்று அவனைக் காப்பாற்ற - அன்னை அவனைக் காப்பாற்ற முயல்வதும் அன்பர்கள் வாழ்வில் கண்ணில் படாத வரலாறு.

ஒரு பெரிய சொத்து. பெரியது என்றால் மிகப் பெரியது. சொத்துக்குப் பல நிலைகள் உண்டு. சொத்து பெரியதானால், சுமை பெரியதாக வாய்ப்புண்டு. பெறுவது வசதியா, சுமையா என நிர்ணயிப்பது உடையவரின் மனம். இந்தப் பெரிய சொத்துக்குப் பெரிய சுமை வந்துவிட்டது. உடமையாளர் உலகத்தைப் புரட்டி, நிலையைச் சமாளித்தபின், பாரம் தாங்காமல் விட்டால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டார். அவருடைய பிரம்மப்பிரயத்தனம் பலன் தர மேலும் 2 ஆண்டுகளாகும். பொறுமையில்லை. 40 ஆண்டுகட்குமுன் அந்தச் சொத்து 9 இலட்சம் பெறும். ஆனால் இரண்டாண்டிற்குப்பின் அவ்விலை கிடைக்கும். தற்சமயம் 5 அல்லது 6 இலட்சத்திற்குமேல் கிடைக்காது. பாரம் தாங்காமல்

சென்னையில் வாங்குபவரைச் சந்தித்து 4¼இலட்சத்திற்கு முடித்து வெற்றி கண்டதாக நினைத்தார் சொத்துக்குரியவர். சொத்து சென்னையிலில்லை. வெகுதூரத்திலிருக்கிறது. "கிரய பத்திரம் எழுத நாம் சொத்துள்ள இடத்திற்குப் போவது சரி'' என்றார் வாங்குபவர். பத்திரம் எழுதுமுன் சொத்தைச் சுற்றிவரலாம் என அனைவரும் சென்றபொழுது, "இது அதிக விலை பெறும். 4¼க்கு விற்கிறார்கள் எனில் அவர்கள் நொடித்துப்போனவர்கள்'' என வாங்குபவர் அறிந்தார். 3¼க்குமேல் சம்மதமில்லை என்றார்! 3¾க்கு முடிந்தது. வாங்கியவர் பணம் தாராமல் வாங்கிக் கொண்டார். பிராமிசரி நோட்டும் தரவில்லை. அவரது இதரத் தொழில்கள் நசிந்து மஞ்சள் கடுதாசு கொடுக்க வக்கீலிடம் போய் திரும்பினார். 3 முறையும் போய் திரும்பிவந்தார். இதற்கிடையில் அவரது ஒரு சொத்து நல்ல விலைக்குப் போய் 3¾இலட்சம் திருப்பித் தரப்பட்டது. விற்றவர் அன்பர். அன்பருக்கு அன்னை அருள்பாலித்ததை விட்டு அவர் விலகியது ஏராளம். இரண்டாண்டு பொறுமையில்லாமல், அருளை மறுத்தார். விற்றபின் பணம் பெறவில்லை. ரசீதும் பெறவில்லை. அன்பர் இத்தனைக் கோளாறும் செய்பவன், எப்படியும் அவன் பணம் வரவேண்டும் என அன்னை, அவன் நம்பும் மனை சாஸ்திரத்தின்மூலம் பணத்தைத் திருப்பிப்பெற முன்கூட்டி வழி செய்தார்.

அன்பர் உழைப்பு பெரியது.

உழைப்பு அதற்குரிய இடத்தில் பலன் தரும்.

வாங்குபவர் சொத்தில் உட்கார்ந்து பத்திரம் எழுதியதால்

முதலாளியின் அறியாமையை மீறி, சொத்து தன் விலையைத் தானே பெறக்கூடியது.



book | by Dr. Radut