12.தர்மபுரி
தர்மபுரி
தர்மபுரியிலிருந்து ஓர் அன்பர் எளியநடையில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தின் சில கருத்துகள்:
- அவர் அன்னையைப் பற்றிய தமிழ் நூல் ஒன்றைப் படித்தபொழுது ஆர்வம் மேட்டு அந்நூலைப் பிரதி எடுக்க முயன்றார்.
- பிரதியை எழுதும்பொழுது மனம் அமைதி அடைந்தது.
- மனத்துள் "சோ"என மழை பெய்வதைப்போன்ற உணர்வு ஏற்பட்டது.*
- "மழை" நின்றபின் அமைதி ஆழத்துள் போய் மறைந்து பேரமைதியாயிற்று.
- அதன்பின் எவரைக் கண்டாலும் அன்னையின் திருவடிகள் அவர் மார்பில் தென்பட்டன.
- பொதுவான சந்தோஷம் உள்ளிருந்து அதிகமாக எழுந்தது.
- எவரைக் கண்டால் எரிச்சல் வருமோ, அவரை இப்பொழுது பார்த்தால் உள்ளம் பூரித்தது.
* ஆத்மாவுக்கு அருள் மழை பெய்தால் இவ்வுணர்வு ஏற்படும்.
*******
- Login to post comments