Skip to Content

03.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

வணக்கம்!

அன்னையின் மகிமையை என் விஷயத்தில் அருளியதை என்னவென்று சொல்வது! உண்மையில் அளப்பற்கரியாதது!

நான் இரண்டு மாதங்களுக்குமுன்பு (11.10.04) எந்தவிதமான சாட்சியங்களோ, ஆவணங்களோ (i.e.. பிராமிசரி நோட்டு, என்னிடமிருந்து ரூபாய் 1¼ லக்ஷம் கொடுக்கப்பட்டவரிடமிருந்து ரசீது போன்றவைகள்)எதுவுமே இல்லாமல் வெறும் வாய்வார்த்தையை நம்பி ஒருவருக்கு என் பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக அளித்த வாய்மொழி வாக்குறுதியை நம்பி, பணம் கொடுத்து, பிறகு ரூ.40,000.00ஐத் திருப்பித் தர அவர் காலதாமதம் செய்துவந்த விவரத்தை கடிதம் மூலம் தெரிவித்து அன்னையிடம் பிரார்த்திக்கும்படிக் கேட்டுக்கொண்டது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இன்று அன்னையின் மகத்தான அருளால் எனக்கு ரூபாய் 40,000.00கிடைத்துவிட்டது. யானை வாயில் போன கரும்பும், பூனை வாயில் போன எலியும் முழுவதும் இயற்கைக்கு மாறாக வெளிவந்த சம்பவமே நிகழ்ந்ததில்லை. அன்னையின் அருள் அதையும்கூட செய்யும் என்று இன்றுதான் எனக்குப் புரிகிறது.முற்றிலும் நம்பிக்கையை இழந்த எனக்குப் பணம் வாங்கிய நபருக்கு திருப்பித் தரச்சொல்லிஉத்வேகம் கொடுத்தது எந்த மாபெருஞ்சக்தியாக இருக்க முடியும்?

அன்னைக்கு என் பணிவான மனதார நன்றியுடன் கலந்த பிரார்த்தனைக் கடன்களைச் செலுத்துகிறேன்.

 

*******


 

 


 


 


 


 



book | by Dr. Radut