Skip to Content

04.லைப் டிவைன்

"ஸ்ரீ அரவிந்தம்''

லைப் டிவைன்

கர்மயோகி


 

15. உயர்ந்த சத்தியஜீவியம்

     சச்சிதானந்தத்தை 4 அத்தியாயங்களில் எழுதிய பகவான் அடுத்த அத்தியாயமாக தெய்வீக மாயையை எழுதினார்மாயை பிரம்மத்தின் ஜீவியம்என்பது பகவான் விளக்கம்மாயை உலகை சிருஷ்டித்தது என்கிறார். பிரம்மத்தில் எல்லாம் எல்லாவற்றிலும் உள்ளது (all is in all).  இது அசைவற்ற சாரமான சத்தியம்இதை மாற்றுவது சிருஷ்டிஎல்லாம் ஒன்றினுள்ளும், ஒன்று எல்லாவற்றிலுமிருப்பது (all is in each, each is in all) சிருஷ்டிஇப்படி மாற்றியது மாயை. அடுத்த அத்தியாயம் சத்திய ஜீவியம் - சிருஷ்டிக்கர்த்தாசத்தியஜீவியம் சச்சிதானந்தத்திற்கும், உலகுக்கும் இடைப்பட்டது. அது சிருஷ்டிக்கப் பயன்படுத்தும் கருவி - முழு எண்ணம் (Real-Idea). அது சிருஷ்டிக்கும் லோகம் சத்தியஜீவியம். முழு எண்ணத்தில் அறிவும், உறுதியும் (knowledge and will) இணைந்து இருப்பதால் சிருஷ்டி ஏற்படுகிறது. அதற்கடுத்த அத்தியாயம் இதுஇந்த அத்தியாயத்தின் முக்கியக் கருத்துகள்:

1. சத்தியஜீவியம் பிரம்மத்தின் அகண்ட வெளிப்பாடு.

2. இது சத்என்பதை சத், சித், ஆனந்தம்எனப் பிரித்தது.

3. சத்தியஜீவியம் சச்சிதானந்தத்தின் சுபாவம்.

4. சத்தியஜீவியமே பிரபஞ்சமாயிற்று.

5. சத்தியஜீவியம் முழுமையுடையது.

6. சத்தியஜீவியம் உலகை சிருஷ்டித்து, தன் இச்சைப்படி அதை நடத்த, தானே தன்னுள் உலகை வைத்துக்கொண்டு, அதன் சக்தியால், அதன் இச்சைப்படி, அதனுள் உலகைச் செயல்படுத்துகிறது.

7. இது மனத்திலிருந்து மாறுபட்டது.

8. இது காலத்தைக் கடந்தது.

9. பிரம்மம் அனைத்துள்ளும் இருக்கிறது; அனைத்தும் பிரம்மத்துள் இருக்கின்றன; அனைத்தும் பிரம்மம்என்பது சத்தியஜீவியச் சூத்திரம்.

10. சத்தியஜீவியத்தை இரண்டாகப் பிரித்து - காலத்தைக் கடந்தது, காலத்துள் உள்ளதுஎன இரண்டாகப் பிரித்து - இது மனத்தை அவற்றிடையே உற்பத்தி செய்தது.

11. அப்படி உற்பத்தியான மனம், உயிர், உடல் ஆகியவற்றை அறிவது சத்திய ஜீவியத்தை அறிவதைவிட எளிது.

12. உலகம்என்ற முழு ஒருமையினின்று மனம் மனிதனைப் பிரித்து விடுவதால் மனிதன் சிறியது (finite) என்ற கண்டமாகிறான். சத்திய ஜீவியம் அப்படிப் பிரிந்த மனிதனை உலகத்துடனும், பிரம்மத்துடனும் இணைக்கிறது.

     இந்த அத்தியாயக் கருத்துகளை எடுக்கும்முன் சத்தியஜீவியம் சச்சிதானந்தத்தின் சுபாவம்என்ற கருத்தையும், ஒன்று பலவாகி உலகம் ஏற்பட்ட இரகஸ்யத்தையும், சத்தியஜீவியம் பெற்ற வரலாற்றையும், காலமும் இடமும் அவசியம்என்பதையும் கருதுவோம்.

1. சுபாவம்நமது சுபாவம் வேகம் என்றால் நாம் செய்யும் காரியங்களிலும் வேகம் வெளிப்படும். வெளிப்படுவது சுபாவம். அதையே பகவான் சக்தி power என்கிறார். சில உதாரணங்கள்:

.எலக்ட்ரிசிட்டியின் சுபாவம் ஷாக் அடிக்கும், எலக்ட்ரிசிட்டியின் சக்தி ஷாக் அடிக்கும்என நாம் அறியலாம். என்றாலும் power,nature என்பவை சற்று வேறுபட்டவைபெண்ணின் சுபாவம் மென்மை. பெண்ணின் சக்தி பிள்ளையை சிருஷ்டிப்பதுசத்தியஜீவியத்தை பகவான் சச்சிதானந்தத்தின் சுபாவம் என்கிறார். அறிவின் சுபாவம் ஆராய்வது, புரிந்துகொள்வது, அறிவின் சக்தி (power) ஒழுங்கை ஏற்படுத்துவது (organising). படிப்பின் சுபாவம் தெளிவு தருவதுபடிப்பினுடைய சக்தி (power) வேலை பெற்றுத் தருவதுமனம் பிரிக்கும்பொழுது பொருள்களைத் தனித்தனியாக்கிவிடும்; ஒரு கட்டையைத் துண்டாடுவதுபோல். சத்தியஜீவியம் (differentiates without dividing) பொருள்களின் அம்சத்தைப் பிரிக்கின்றதுபொருள்களைப் பிரிப்பதில்லைமனம் பிரிப்பது சொத்து பாகப்பிரிவினை செய்வதுபோல். சத்தியஜீவியம் பிரிப்பது குடும்பம் பிரிவதுபோன்றது.

Page 132/Para 1:

     சத்தியஜீவியம் அனைத்தையும் தன்னுட் கொண்டதுஅனைத்தையும் தன்னில் உற்பத்தி செய்கிறதுஅனைத்தையும் தன்னுள் பூர்த்தி செய்கிறதுநாம் சத்தியஜீவியத்தை தெய்வீகப் புருஷனின் சுபாவமாகக் (nature of Sachchidananda) கருதவேண்டும். சச்சிதானந்தத்திற்கு இரு அம்சம் உண்டு. 1) பிரம்மமாக பிரபஞ்ச வாழ்வு, 2) ஈஸ்வரனாக உலகை சிருஷ்டிக்கும் அம்சம்நாம் இரண்டாம் அம்சத்தின் சுபாவமாக சத்திய ஜீவியத்தைக் கருதவேண்டும்நாம் கடவுள் எனக் கூறுவது இதையேயாகும்இது சிறிய, இஷ்டதேவதையில்லை. மேல்நாட்டார் கடவுளை பலம் வாய்ந்த மனிதனாகக் கருதுகிறார்கள். இஷ்டதேவதையென நாம் சத்திய ஜீவியத்தைக் கருதினால் மேல்நாட்டார் செய்யும் தவறு எழும்அது மனித மனத்திற்குரியதுஅகந்தைக்கும் சத்தியஜீவியத்திற்கும் உள்ள உறவாக முடியும். தெய்வம் இஷ்டதெய்வமாக இருப்பதை நாம் மறுக்க முடியாதுபொதுவான அம்சம் பிரபஞ்ச வாழ்வின் ஓர் அம்சம்தான்தெய்வம் வாழ்வின் எல்லா அம்சங்களையும் கொண்டதுஆனால் தெய்வம் ஒரு புருஷன்தெய்வம் தன்னையறிந்த புருஷன்அது புருஷன்என்பதை மறுக்க முடியாது. இங்கு நாம் அந்த அம்சத்தைக் கருதவில்லை. தெய்வீக ஜீவியத்திற்குப் பொதுவாக மனமான சத்தியம் உண்டு. அதையே நாம் இங்குக் கருதுகிறோம். இந்த அம்சத்தை விரிவாகக் கருதி தெளிவாக வரையறுப்பது நம் நோக்கம்.

     சமூகம், சர்க்கார் என்பவற்றைக் கருதினால் ஓரளவு சச்சிதானந்தம், சத்தியஜீவியம் புரியும். சர்க்கார் சமூகத்தின் சுபாவம் எனக் கொள்ளலாம்சர்க்காருக்கு அரசியல், நிர்வாகம் என இரு அம்சங்கள் உள்ளனநிர்வாகம் சக்தி வாய்ந்தது. ஆனால் நாம் கருதுவது சர்க்காரின் அரசியல் அம்சம்.  அரசியல்என்பது கட்சிகளிடையே குறிப்பாகிறதுகட்சிகளைக் கடந்து சர்க்காரின் அரசியல் அதிகாரத்தை நாம் பிரித்துக் காணலாம்அதையே இங்கு நாம் செய்கிறோம்.

சமூகம் - சச்சிதானந்தம்.

சர்க்கார் - சத்தியஜீவியம்

1) அரசியல், 2) நிர்வாகம்

     அரசியலிலும் பொதுவானது, குறிப்பானது என்பவையுண்டுநாம் பொதுவான அம்சத்தைக் கருதுகிறோம்.

Page 132 / Para 2:

      சத்தியஜீவியம் பிரபஞ்சம் முழுவதும் பரவியுள்ளதுஅது ஞானம்; சுயமாகப் பெற்ற ஞானம்அந்த ஞானத்திற்குச் சக்தியுண்டுபிரபஞ்சத்தை அது ஓர் ஒழுங்குக்குள் கொண்டு வரும் திறமை படைத்ததுஏகன் (One) என்ற புருஷன் அநேகன் (the Many) என்ற வாய்ப்பைத் தன்னுள் அனந்தமான வித்தாகப் பெற்றுள்ளதுஒன்று பலவாகும்பொழுது அவற்றிடையே சுமுகமான உறவை - ஒழுங்கை - ஏற்படுத்தும் திறன் சத்தியஜீவியத்துடையதுஇந்த ஒழுங்கை நிலைநாட்டும் சக்தி இல்லாவிட்டால், அதுவும் சுயமான ஞானமாக இல்லாவிட்டால் பிரபஞ்சம் குழப்பம் நிறைந்த அலைகள் புரளுமிடமாகும்அதன் வித்தான சக்தி அனந்தம். அதனுடைய லீலை கட்டுக்கடங்காத, கட்டுப்படுத்த முடியாத (chance) சந்தர்ப்பம் இக்குழப்பத்தை விளைவிக்கும்புதைந்துள்ள சக்தி அனந்தமானால், வழிநடத்தும் சட்டமில்லையெனில், அத்தகைய சத்தியம் இல்லையெனில் குழப்பம் விளையும்நிலையற்ற நிலை, குழப்பத்திற்கு வித்து. உருவம் பெறாத பொங்கிவரும் சக்தி குழப்பத்தில் முடியும். சத்திய ஜீவியத்திற்கு சுயதிருஷ்டியுண்டு; சுமுகம் உண்டு; முன்கூட்டி முடிவு பெறும் எண்ணம் உண்டு. அவை பரிணாமத்திற்குரிய வித்தாக உள்ளே புதைந்து இருப்பதால், குழப்பம் தவிர்க்கப்பட்டு, சுமுகம் எழுகிறதுசிருஷ்டிக்கும் ஞானம் ரூபங்களையும் சக்திகளையும் கட்டவிழ்க்கிறதுஅந்த ரூபங்கள் சத்தியஜீவியத்துடையவை. அந்த சக்திகள் சத்தியஜீவியத்துடையவைஅதைத் தவிர வேறில்லைஅவ்விடத்தை ஆட்சி செய்யும் சட்டமும், சத்தியமும் தன் ஜீவனின் திருஷ்டிஅதனுடன் பிறந்தவை பல உண்டுமற்ற வித்தான சக்திகளைத் தொடர்பு கொள்ளும் பொழுது சுமுகத்தை நிலைநாட்டும் திறன் அதற்குண்டுதன் சுயகருத்தில் சத்தியஜீவியம் மற்றவற்றுடன் தொடர்புகொள்ளும்பொழுது அங்கு ஒரு சுமுகமாக அசைவு வேண்டும் என்பதையறியும்அச்சுமுகத்தை நிலைநிறுத்த தேவைப்பட்ட சத்தியம் ஏற்கனவே அதனுள் உள்ளது. உலகின் சட்டம் எழ, அதை நடைமுறையில் நிலைநிறுத்த சத்தியஜீவியம் உற்பத்தி ஸ்தானம்அது கண்மூடித்தனமான சட்டமன்றுஅது சுயசுபாவத்தை வெளிப்படுத்துவது. முழு எண்ணத்தால் அது கட்டாயப்படுத்தப்படுகிறதுபிறப்பில் அவை அமைந்த விதம் முக்கியம்என்பது கொள்கைஎனவே ஆரம்பத்திலிருந்து இவ்முழுவெளிப்பாடும் நிர்ணயிக்கப்பட்டதுஅதுவே அதன் சுயஞானம். ஒவ்வொரு நிமிஷமும் அதுவே அது செயல்படும் வகை. அதன் பிறப்பிலுள்ள சத்தியப்படி, ஆதியில் எழுந்த அமைப்பின்படி சத்தியஜீவியம் அப்படி அமைக்கப்பட்டுள்ளதுஅடுத்தது என்ன என்பதை நிர்ணயிக்கும்படி அது நகருகிறதுஅதுவும் பிறப்பில் அமைந்ததே. முடிவாக அது ஆரம்பத்தில் விதையில் உள்ளபடி மலரும்; வெளிப்படும்.

     நாடகத்தில் நடிகன் நடிப்பது, பேசுவது, அவன் போட்டுள்ள உடை,அவனது உணர்ச்சிகள் ஆரம்பத்திலேயே - கதையில் - எப்படியிருக்க வேண்டும்என கதை நிர்ணயித்துள்ளதுஅதுபோல் சத்தியஜீவியம் பிரபஞ்ச சிருஷ்டியை நிர்ணயித்துள்ளது.

Page133 / Para 3:

     உலகம், பிரபஞ்சம் என்பவை ஆதியான பிரம்ம சத்திய வெளிப்பாடானவைஎனில், அவை வெளிப்பட காலமும், இடமும் அவசியம். காலமின்றி சலனமில்லைகாலம் இல்லாவிட்டால், சலனமற்ற சுமுகம் நிலவும். காலத்தின் நிகழ்ச்சிகளைத் தாங்க இடம் தேவைஎனவே காலத்தால் நடப்பவை இடத்தால் தாங்கப்படும்பொழுது, காலமும் இடமும் தொடர்புகொள்கின்றன. இத்தொடர்பை (Causality) காரணத்தால் ஏற்பட்ட காரியம் என்கிறோம்.சுருக்கமாக காரண காரியமெனலாம். தத்துவம் பேசுபவர்க்கு காலமும், இடமும் வாதத்திற்குரிய கருத்துகள். உண்மையில் காலம், இடம்என்பவை இல்லைஎன்பது அவர் கொள்கைநம் கொள்கைப்படி பரம்பொருள் (Conscious Being) உலகமாயிற்று. ரூபம் பரம்பொருள், சக்தியும் பரம்பொருள்எனவே நமக்கு காலமும், இடமும் பரம்பொருளின் திருவுருவம்தத்துவம் நமக்குப் பயனற்றதுபரம்பொருள் தன் அசைவுகளைக் காணுதல் காலம்அவற்றைப் புறத்தில் தாங்கிப் பிடிப்பது இடம்என்பது பகவான் ஸ்ரீ அரவிந்தர் விளக்கம்காலம் பரம்பொருளின் அகநிகழ்ச்சிஇடம் பரம்பொருளின் புறநீட்சிமனம் காலத்தையும், இடத்தையும் தன் பாகுபடுத்தும் சுபாவப்படி காண்கிறது.

. பரம்பொருளான ஆத்மாவின் அகமும், புறமும் பரம்பொருளே.

. அகநிகழ்ச்சி காலம்; புறநீட்சி இடம் எனில், இவையிரண்டும் ஆத்மாவின்

- பரம்பொருளின் - அசைவுகள். மனம் காலத்தை இடத்தினின்று பிரித்து வெவ்வேறாகக் காண்கிறது.

      வீட்டில் வருமானம் செலவாகிறதுஉள்ளே வருவது வெளியே போகிறது.  உள்ளே வருவதும், வெளியே போவதும் ஒன்றேகணவனுக்கு, தான் சம்பாதிப்பது தெரியும்மனைவிக்கு, தான் செலவு செய்வது தெரியும்.  பிணக்கு இதனால் ஏற்படுகிறது; பிரித்துப் பார்த்தால் பிணக்கெழும்; சேர்த்துப் பார்த்தால் பிரச்சினை தீரும்.

      கடந்தது, நிகழ்வது, வருவதுஎன்ற பிரிவுகளுள்ள அசைவின் தொடர்பு காலம்மனம் குறிப்பிட்ட இடத்தினின்று முன்னும், பின்னும் காலத்தைக் கண்டு அறியும்இடம்என்பது நிலையான வீட்சி. பொருளைப் பிரிப்பதால் ஏற்படுவது இடம்பிரிந்து நிற்கும் பொருளின் பரப்பில் மனம் தன்னை ஓரிடத்தில் நிறுத்தி முன்னும், பின்னும், சுற்றியும் கண்டு இடத்தை அறிகிறது.

     கட்டடம் கட்டுகிறோம். கட்டடம் ஆதி, முதல், முழுமையான செயல்.  இதன் அம்சங்கள் பலஅவற்றுள் பணம் ஒன்றுசெங்கல், சிமெண்ட் போன்றவை அடுத்தவைபணம் அகம்; கல், சிமெண்ட் புறம். எவ்வளவு பணம் செலவாகியுள்ளது, எதற்குச் செலவாகியுள்ளதுஎனக் கணக்குப் பார்த்து எவ்வளவு கட்டடம் முடிந்துள்ளதுஎன அறியலாம்எவ்வளவு கல், சிமெண்ட் செலவாகியுள்ளதுஎன்பதும் அதைக் காட்டும். வாழ்வெனும் கட்டடத்தை காலம்இடத்தால் மனம் அறியும்.   இடம் இல்லாவிட்டால் கட்டடமில்லைமனம் திட்டமிடாவிட்டால், காலத்தால் நினைவைச் செப்பனிட்டு திட்டமிடாவிட்டால், கட்டடம் எழுந்திருக்கப்போவதில்லை.

Page 133 / Pare 4:

     நல்லது, கெட்டதைக் கடந்து முழு நல்லதுண்டுஒளி, இருளைக் கடந்து இருளற்ற ஒளியுண்டுஇதை Self-existent good சுயமான நல்லது என்கிறோம்பிரம்மம்என்பது ஆதி. ஆனாலும் நாம் ஆனந்த பிரம்மம், ஜடப் பிரம்மம்என எல்லா நிலைக்கும் பிரம்மம்என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்அதேபோல் அனந்தம்என்பது அந்தம் (முடிவு)என்பதற்கு எதிரானது. பிரம்மம் அனந்தமானது. உலகம் அந்தமானது.என்றாலும் உலகத்திற்கும் அனந்தம் உண்டுஎன்பது ஸ்ரீ அரவிந்தம்காலத்தைக் கடந்தது அனந்தமெனில், காலம் முடிவில்லாமல் தொடர்ந்து வருவதால் அதற்கும் அனந்தமுண்டு. எல்லா நிலைகளுக்கும் பிரம்மம் உண்டு என்பதைப்போல், எல்லா நிலைகளுக்கும் அனந்தமுண்டுஇவை ஸ்ரீ அரவிந்தத்திற்கேயுரிய அடிப்படைக் கருத்துகள்பிரம்மமே உலகம் ஆனதால் எல்லா நிலைகளிலும் பிரம்மம் உண்டு. பிரம்மம் அனந்தம் ஆனதால், எல்லா நிலைகட்கும் அனந்தம் உண்டு.

. பெரியது, சிறியதனுள் வந்தால் பெரிய அம்சம் தவறாது தன்னைவெளிப்படுத்தும்.

. அழியாத ஆத்மா அழியும் உடலில் ஜனித்தால், அழியும் உடல் அனந்தமாகத் தொடர்ந்து அழியாத அம்சத்தை நிலைநிறுத்துகிறது.

     நடைமுறையில் மனம் காலத்தை நிகழ்ச்சியால் அளக்கிறது. பட்டம் பெற 5 ஆண்டு ஆனால் காலத்தை நாம் பட்டத்தால் அளக்கிறோம்.  இடத்தைப் பொருளால் அளக்கிறோம். காலம் கண்ணுக்குத் தெரியாது; பட்டம் தெரியும்இடம் கண்ணுக்குத் தெரியாது; நிலம், மனை கண்ணுக்குத் தெரியும்நிலத்தால் இடத்தை மனம் அளக்கிறதுசித்-சக்திஎன்பது காலமும், இடமுமாகும்அது தூய மனப்பான்மை; அறியாமை கலப்பற்றதுஅறியாமை கலந்த மனம் காலத்தை நிகழ்ச்சியாலும், இடத்தைப் பொருளாலும் அளக்கிறதுதூயமனத்திற்கு அந்த நிர்ப்பந்தமில்லைதூயமனம் நிகழ்ச்சிகளையும் பொருளையும் புறக்கணித்து காலத்தையும் இடத்தையும் அறியவல்லதுதுணியில் குறுக்கிழை, நெடுக்கிழை உள்ளதுபோல் காலமும், இடமும் பிரபஞ்ச சக்தியின் ஜீவியத்தில் இரு அம்சங்கள்.   தூயமனம் மனத்தைவிட உயர்ந்ததுஅது முக்காலத்தை ஏற்க வேண்டிய அவசியமில்லை. மனம் காலத்திற்குட்பட்டது. காலம் தூய மனத்திற்குட்பட்டது. அகண்ட, முடிவற்ற, அனந்தமான முக்காலம் தூய மனத்தின் பார்வையில் அடங்கும் ஒரு புள்ளிஅதே மனம் இடத்தையும் அதேபோல் உட்கொண்டது. மனித மனம் இடத்திற்குட்பட்டதுமனித மனத்திற்கு இடம் பரந்து, விரிந்த, அகண்டமான அனந்தம்; தூயமனத்திற்கு இடமும் ஓர் புள்ளி. காலம் தூயமனத்தின் அகம்என்பதுபோல் இடமும் அதற்கு அகமே. எதுவும் தூயமனத்திற்குப் புறமில்லை. 50 கோடி கம்பனி 1000 ஏக்கரில் அகண்டு, கட்டடமாக விரிந்து, நாடு முழுவதும் மார்க்கட்டாகப் பரவியிருந்தாலும் பணம்என்ற நோக்கில் ஒரு செக்கில் 50 கோடி ரூபாய் அடங்கும். பணம் பெரியது; கம்பனி சிறியது. பிரபஞ்சம் தன்னையறியும் ஐக்கியமுடையது. அது அழிவற்றது. ஏதோ ஒரு சமயம் நாம் அதை உணருகிறோம். அந்த நோக்கில் காலமும், இடமும் எப்படித் தெரியும்என இப்பொழுது கேட்க முடியாது. ஏனெனில் நமக்குத் தெரியாததை இல்லையெனக் கூறும்அறிவு நமக்குண்டு.

Page 134/ Para 5

     சத்தியஜீவியம் அனைத்தையும் தழுவுவதுஅது முக்காலத்தையும் ஒரே பார்வையில் காணவல்லதுஎன நாம் அறிவது இங்கு அவசியம்எழுதும்பொழுதும், டைப் அடிக்கும்பொழுதும் ஓர் எழுத்தாகத்தான் அடிக்க வேண்டும்வேகம் அதிகமானாலும் பல எழுத்துகளை ஒரே சமயத்தில் எழுத முடியாது; அடிக்க முடியாது. மனம் காலத்தில் நிகழ்ச்சிகளை அப்படிக் காண்கிறது. அச்சடிக்கும்பொழுது ஒரு பக்கம் முழுவதும் ஒரே சமயத்தில் அடிக்க முடியும். ஜெராக்ஸ் செய்வதும் அப்படியேசத்தியஜீவியம் ஜெராக்ஸ் போலவும், அச்சடிப்பது போலவும் செயல்படுகிறதுகாலம்என்பது இல்லை எனில் அசைவு இல்லைஅசைவில்லாவிட்டால் முன்னேற்றம், அபிவிருத்தி இல்லை. சிலைபோல, சித்திரம்போல நிரந்தர அழகிருக்கும். காலம் வீடியோ போல் தொடர் நிகழ்ச்சியாகும்உலகில் நிகழ்ச்சிகள் தொடர்கின்றன. ஒரு நிகழ்ச்சியினின்று அடுத்த நிகழ்ச்சி சுமுகமாக எழுவதைக் காண்கிறோம்தனக்குமுன் போனநிகழ்ச்சி இந்நிகழ்ச்சியுள் மறைந்து உள்ளதையும் காண்கிறோம். காலத்தின் அசைவே இதற்குக் காரணம். சென்றதைத் தன்னுள் மறைத்து, வருவதைத் தன்னுள் புதைத்துஇரண்டையும் சுமுகமாகத் தாங்குவது காலம்பகுக்கப்பட்ட இடமில்லாவிட்டால் என்ன ஆகும்? நிகழ்ச்சிகட்குள் தொடர்பிருக்காது; மோதல் இருக்காது - அனைத்துமிருக்கும்; அசைவிருக்காது; அசைவால் ஏற்படும் அபிவிருத்தி இருக்காதுகவியின் மனத்துள் காவியம் புதைந்துள்ளதைப் போல் இடமற்ற சுயஜீவியம் முழுமையாக அகத்திற்குரியதுகனவுலகமாக மனத்துள் மறைந்திருக்கும். கவியோ, காவியமோ வெளிப்படாதுவெளிப்பட்டு அனைவரும் காண முடியாதுகாலம் மட்டுமே உண்மையானால், சங்கீதம் போல் ஒரு ஸ்வரத்தைத் தொடர்ந்து அடுத்தது வருவதுபோல் அகத்துள் இயல்பாகக் கவியின் மனம் திரைபோல் காட்சிகள் உள்ளேயெழும். ஆனால்  நாம் காண்பது ரூபமும் சக்தியும் இணைந்த ஒன்று. தொடர்ந்து சக்தி ரூபமாக, நிகழ்ச்சியாக எழுகின்றது. இடமின்றி இது நிகழாது.

Page 135 /Para 6:

     காலம் மாறும்பொழுது கொடுமையழிகிறது, வசதி வருகிறது, பணம் பெருகுகிறது, அடிமைத்தனம் அழிந்து சுதந்திரம் வருகிறது, இருள் நீங்கி ஒளி பெருகுகிறது, பிணக்கொழிந்து சுமுகம் மலர்கிறதுகடந்த ஆயிரமாயிரம் ஆண்டுகளில் வந்த மாற்றங்கள் காலம் இடத்தில் உண்டு பண்ணிய மாற்றங்களாகும்மனம் அவற்றை மோதல்களாக அறியும்.  இயல்பான சுமுகமாக அறியாதுஉண்மையில் அகத்துள் இயல்பான சுமுகம் இடைவிடாது எழுந்து கனிகிறதுபுறத்தோற்றமான காலத்தின் பார்வைக்கு சுமுகம் பிணக்காகத் தோன்றுகிறதுஅகத்தின் சட்டம் முழுமைக்குரிய சுமுகம். புறத்தின் போக்கு பகுதிகளின் தொடர் நிகழ்ச்சிஅகநிகழ்ச்சியின் சுமுகம் புறப்பார்வையின் தோற்றத்திற்குப் பிணக்குசத்தியஜீவியப் பார்வை அகத்திற்குரியதுபுறத்தையும் தன்னுட் கொண்ட அகத்திற்குரியதுபுறத்தில் மனம் பகுதிகளின் அசைவைப் பகுதிகளின் நோக்கில் பிணக்காகக் காண்கிறதுஅகம் சத்தியஜீவியம். அது முக்காலத்தையும் தன்னுட் கொண்ட வளரும் சுமுக இயல்பு. அது பல கோணங்களில் பகுதிகள் முழுமையை நாடுவதைக் காண்பதால் அதன் சுமுகம் இயல்பானது; பிறப்பில் உள்ளதுமேலும் மனம் பகுதியைப் பார்ப்பதால் பல வகையாக மோதல் எழுவது மனத்திற்கு இயற்கையாகத் தோன்றுகிறதுஅது குழப்பத்தைக் காண்கிறதுசத்தியஜீவியம் தெய்வீகமானதுகாலத்தையும், இடத்தையும், மனத்திற்குத் தோன்றும் எல்லா வாய்ப்புகளையும், மனம் அறியமுடியாத மற்ற நிலைகளையும் சத்தியஜீவியம் குழப்பமின்றி, தவறின்றி, தடுமாற்றம் இன்றி காணமுடியும்ஏனெனில் சத்தியஜீவியத்திற்கு அடிப்படையான சரியான தொடர்பு தெரியும்; முறையான சக்தி தெரியும்; அடிப்படை அவசியம் தெரியும்; படிப்படியாக எழும் நிலைகளும், முடிவான கட்டமும் தெரியுமாதலால் அதன் பார்வை சுமுகமானது. முழுமையாகப் பார்க்கவோநிதானமாகப் பார்க்கவோ மனத்தால் முடியாதுஆனால் பிரபஞ்சத்தைக் கடந்த சத்தியஜீவியத்தின் இயல்பே அது.

Page 135 / Para 7:

     சத்தியஜீவியத்திற்கு திருஷ்டியுண்டுமனம்போலன்றி அது தன்னை அறியவல்லது. அதனுடைய சக்தியும் அதையறியும்நாம் நமக்குத் தெரிந்த கதையைச் சொல்லும்பொழுது ஒவ்வொரு கட்டத்தையும் நாம் முன்பே அறிவோம்ஆனால் கதையை 50 முறை சொன்னால் ஒவ்வொரு முறையும் சொல்லும் பாணி சற்று மாறும்அது நம்மையறியாமல், நம்மை மீறி எழுவது. அது தன்னையறியாத நிலை. கதை தன்னையறிந்த நிலை. மனம் ஒரு வீடு கட்டப் போனால் வீட்டின் திட்டம் பல முறை மாறும்ஏனெனில் மனம் தன்னையறியாது. சத்தியஜீவியம் வீடு கட்டப் போனால், என்ன இனி வரப்போகிறதுஎன்பதை விவரமாக முன்கூட்டியறியும்முன்கூட்டியறிவது, தன்னையறிவது. தன்னையறிவது ஒளியாக உள்ளே உறைகிறதுஅதன் சக்தி சிருஷ்டிக்கிறது. சக்தி சிருஷ்டிப்பது ரூபம்ரூபத்துள் ஒளி வதிகிறதுஅது சுயம்பிரகாசமுள்ளது. பிரபஞ்சத்திலுள்ள எல்லா சக்திகளிலும், ரூபங்களிலும் இவ்வொளி புதைந்துள்ளதுநம் கண்ணுக்குத் தெரிவதில்லைநம் செல்லில் குரோமஸோம் உள்ளன; ஜீன்கள் இருக்கின்றன. முடியின் நிறம், நீளம், பல்லமைப்பு, குரல், இருதயத்தின் பரிமாணம், நகத்தின் தடிப்புஎன உடல் ஆயிரம் பகுதிகட்கு ஆயிரமாயிரம் குணங்கள் உள.  இவை ஒவ்வொன்றும் ஒரு குரோமஸோமால் நிர்ணயிக்கப்படுகிறது. அதன் பின் உள்ளது இந்த சத்தியஜீவியப் பிரகாசம்ரூபம், சக்தி, செயல் ஆகியவை இவற்றால் சுதந்திரமாக, முடிவாக நிர்ணயிக்கப்படுகின்றன.  ரூபம் மாறவேண்டும்என இது வற்புறுத்தும்மாறும் ரூபத்தின் அளவை அது நிர்ணயிக்கும்தன் செயலுக்கு வேண்டிய சக்தியை இது சேர்க்கிறது, விநியோகம் செய்கிறது, அடிக்கடி மாற்றியமைக்கிறதுஇத்தனையும் அதன் முதற் சட்டப்படி நடக்கின்றனஇந்த சக்தி எழும்பொழுதே, இந்த ரூபம் பிறக்கும்பொழுதே இதன் சுயஞானம் அவற்றை முடிவுசெய்துவிடுகிறது. ஈஸ்வரனாக பிரபஞ்ச வாழ்வில் அனைத்தின் இதயத்துள் இது வீற்றிருக்கிறதுஓர் இயந்திரத்தை இயக்குவதுபோல் மாயை இவற்றைச் செலுத்துகிறதுதெய்வ திருஷ்டியாக உள்ளிருந்து அவற்றைத் தழுவுகிறதுதம் பொருள்களை பல்வகையாக அமைத்து, ஒவ்வொன்றும் தானெப்படிச் சரியாக அமையவேண்டுமோ அப்படி யுகாந்த காலமாக அமைக்கிறது**.

----------------------------------------------------------------------------------------------

** கோர்ட்டுக்குப் போனால் அங்கு நடப்பவை அனைத்தும் சட்டப்படி நடக்கும். என்று கேஸ் எடுப்பது என்பது நம் இஷ்டப்படி முடியாதுகோர்ட் சட்டப்படி வாய்தா போடுவார்கள்யார் பேசுவது என்பதை கோர்ட் தீர்மானிக்கும்எந்த வக்கீல் எது சொன்னாலும், அதெல்லாம் செல்லாதுஜட்ஜ் சொல்வதே சட்டம். ஜட்ஜ் பேசுவதும் சட்டத்திற்குட்பட்டதுஅவரிஷ்டப்படி பேசமுடியாதுகேஸ் எடுப்பது, விசாரணை செய்வது, வாதம் செய்வது, தீர்ப்பு சொல்வது, டிக்ரி செய்வது, ஜப்தி செய்வது, அப்பீல் செய்வது, தஸ்தாவேஜூ தருவது, எடுப்பது அனைத்தும் சட்டப்படியே நடக்கும்செயலுக்குள் ஏற்கனவே உட்கார்ந்துள்ள சட்டம், அதன் பார்வைப்படி அனைத்தையும் நடத்திச் செல்லும்.

Page 136/ Para 8

       உலகில் உயிருள்ள ஜீவராசிகளுண்டு, உயிரற்றவையுண்டுமனம் தெளிவானவருண்டு, மனத்தில் தெளிவற்றவருண்டு. அவர்களுடைய ஜீவன் அவற்றுள் உள்ள ஜோதியால் ஆளப்படும். அவற்றின் செயல்களும் அப்படியே. நமக்கு அவை தெரிவதில்லைஎனினும் அவை பிரபஞ்சத்தையறியும். அவை ஜடமல்ல; அவை தம்மை அதிகமாக ஆழ்ந்தறியும். அறிவற்ற பலவும் அறிவால் செயல்படுவது தெரியும். தாவரம் ஆழ்மனத்தாலும், விலங்கும் மனிதனும் அரைகுறை மனத்தாலும் செயல்படுகின்றார்கள். அது முழுஎண்ணத்தால் நடக்கிறது. பொருள்களையும், ஜீவன்களையும் நடத்துவது மனத்தின் அறிவன்று; தன்னையறியும் ஜீவனின் சத்தியம் அப்படிச் செயல்படுகிறது. சுயஞானம் சுயவாழ்விலிருந்து பிரியாத இடத்தில் அப்படிச் செயல்படுகிறது. என்ன செய்வதுஎன நினைத்து திட்டமிட்டு சத்தியஜீவியம் செயல்பட வேண்டாம். தன் மாசுபடாத சுயதிருஷ்டியால் செயல்படும். தன்னைப் பூர்த்தி செய்துகொள்ளும் பிரபஞ்ச வாழ்வு தவிர்க்கமுடியாத ஒரே சக்தி. அதனால் அது அப்படிச் செயல்படும். மனத்தின் அறிவு ஜீவியத்தின் பிரதிலிபப்பு. அது அறியாது; அறிய முனைகிறது. அதனால் அது நினைத்து, அறிந்து, செயல்படவேண்டும். காலத்துள் அது படிப்படியாக உயர்ந்த ஞானத்தைப் பின்பற்றுகிறதுஅந்த ஞானம் என்றும் உண்டு. அது முழுமையான ஞானம்அது காலத்தைத் தன் பிடியில் வைத்துள்ளது. முக்காலத்தை ஒரே பார்வையில் காணவல்லது.

Page 136 / Para 9:

     தெய்வீக சத்தியஜீவியத்தின் முதற் சட்டம் இதுவே: அனைத்தையும் தழுவும், அனைத்தையும் ஊடுருவும், அனைத்துள்ளும் உறையும், பிரபஞ்ச திருஷ்டி அது. அசையாத சுயஉணர்வில் ஜீவன் அகத்துள் காலத்தையும், இடத்தையும் கடந்து அனைத்தையும் தழுவுகிறதுஎனவே புறத்துள் செயல் திறனில், சுயஉடலில்  காலத்திலும் இடத்திலும் சத்தியஜீவியம் அனைத்தையும் அறியும்.

Page 137 / Para10:

     இந்த ஜீவியத்தில் அறிபவன், அறிவு, அறியப்படுபவன் ஆகிய மூன்றும் தனித்தனியில்லை; அடிப்படையில் ஒன்றே. நம் மனப்போக்கு இம்மூன்றையும் பிரித்தறியும்பிரிக்காவிட்டால் மனம் அறிய முடியாதுபிரிவினை அதற்குரிய முறை; அடிப்படையான சட்டம். அவையின்றி மனம் செயலற்றுப்போகும், அசைவற்று நிற்கும்நான் என்னையறியவேண்டுமானாலும் இதுபோல் நான் என்னை மூன்றாகப் பிரித்துப்பார்க்கவேண்டும்நானிருக்கிறேன், நான் அறிபவன், நான் என்னில் எதைக் காண்கிறேனோ அதை நான் என அறிகிறேன். இது நான்; இருப்பினும் இது நானில்லைஎன்னையும் நான் அறிவதையும் இணைப்பது அறிவுஇது செயற்கையான செயல்நடைமுறையில் பயன் தரும் சுபாவமுள்ள செயல்என்பது தெளிவுஅடிப்படையான உண்மையை இது பிரதிபலிக்கவில்லை என்பது தெளிவு.உண்மையில் அறியும் நான் அறியும் ஜீவியமாகும்; அறிவு அந்த ஜீவியம்; அது நான்; நான் செயல்படுகிறேன்; அறியப்படுவதும் நானே; அதே ஜீவியத்தின் ஒரு ரூபம் அல்லது சலனம்இம்மூன்றும் ஒரே வாழ்வு என்பது தெளிவு; ஒரே சலனமும்கூடபகுக்கப்பட்டுத் தெரிந்தாலும் பகுக்கப்படாத ஒன்றே. அதனுடைய ரூபங்களால் பிரிக்கப்பட்டு விநியோகிக்கப்படாதது. அதனுடைய ரூபங்களுக்கு அது விநியோகிக்கப்பட்டதாகத் தோன்றினாலும், அப்படி உண்மையில் விநியோகிக்கப்படாததுபகுக்கப்படுவதால், ஒவ்வொன்றும் தனித்து நின்று செயல்படுகிறது. இது மனம்பெறும் அறிவுஇதைப் பகுத்தறிவால் அறியலாம், உணரலாம், ஆனால் பலன் தரும் செயலுக்கு நடைமுறை அடிப்படையாகக் கொள்ள முடியாது. இதுவரை அகத்திலுள்ளவற்றைப் பேசினோம்; புறத்திலுள்ளவை உண்டுஅவற்றைப்பொருத்தவரை இந்தச் சிரமம் தாண்டிவர முடியாதது ஆகிறது. புறப்பொருளோடு ஐக்கியத்தை உணருவது முடியாத காரியம்நம் எதிரில் உள்ள சுவரைப் பார்த்து, "இந்தச் சுவரும் நானும் ஒன்று' என்று எப்படிக் கருத முடியும்? அதனடிப்படையில் நடப்பது மனம் அறியாத செயல்சூரியனை உலகம் சுற்றிவருகிறதுஎன்பதை நம் மனம் ஏற்றுக் கொண்டாலும், அதை உணர்வு ஏற்பதில்லைஅதுபோல் புறத்திலுள்ள மரம், மனிதன், கட்டிடம், மாடு நம்முள் உள்ளவை என ஏற்கலாம்; உணருவது சிரமம்.

Page 137 / Para 11:

     இது ஐக்கியத்தின் சத்தியம். சத்தியஜீவியம் எப்பொழுதும் அடிப்படையாக இந்த சத்தியப்படி நடக்கிறது. மனத்திற்கு இந்த சத்தியம் இரண்டாம்பட்சம்அல்லது தான் முயன்றுபெற்ற திறன், பிறப்பில் ஏற்பட்டது இல்லை. மனத்திற்கு இச்சத்தியம் சொந்த திருஷ்டியில்லைசத்தியஜீவியம் உலகையும், அதிலுள்ளவற்றையும் ஒரு பகுக்கமுடியாத ஞானத்தின் செயலாகக் காண்கிறது. அப்பார்வையில் வாழ்வு பிரபஞ்ச சுயவாழ்வின் பிறவி அம்சமாக இருக்கும். அமெரிக்காவைப் பற்றி ஏராளமாகப் படித்தவரும், எதுவும் படிக்காதவரும் அங்குப் போனால், மனம் அமெரிக்காவைப் படிக்காதவர்போல் பார்க்கும். படித்தவர்க்கு அங்குக் காணும் ஒவ்வோர் அம்சமும் தான் படித்ததை நினைவுகூர்ந்து அறிவை அனுபவமாக்கி ஆனந்தத்தை எழுப்பும்இது சத்தியஜீவிய திருஷ்டிஇது பூரணமான தெய்வீக ஜீவியம். இதற்கு உறுதி (Will) உண்டுஇது பிரபஞ்ச வாழ்வை வழிநடத்துகிறது; ஆள்கிறது. மேலும் தன் சக்திவாய்ந்த செயலால் பூர்த்திசெய்து பூரணம்பெறச் செய்கிறதுஅப்படி பூரணம் செய்யும் பொழுது அதன் ஜோதியின்படி செய்கிறதுஇவ்வுறுதி அதன் ஞானத்திருந்து வேறுபட்டதில்லை. அத்துடன் ஒன்றியது. அதன் சுயவாழ்வினின்றும் வேறுபட்டதில்லைஞானமும், உறுதியும், சுயவாழ்வும் ஒன்றேபிரபஞ்ச சக்தியும், பிரபஞ்ச ஜீவியமும் ஒன்றேஎனக் கண்டோம். பிரபஞ்ச சக்திஎன்பது பிரபஞ்ச ஜீவியத்தின் செயலாகும்அதேபோல் தெய்வீக ஞானமும், தெய்வீக உறுதியும் ஒன்றே. இரண்டும் ஒரே அளவு; இரண்டும் ஒரே செயல் - வாழ்வின் செயல்.


 

Page 138 / Para 12:

     நாம் பிரபஞ்சத்தில் வாழ்கிறோம்பிரபஞ்சத்தை மனத்தால் காண்கிறோம்இது பச்சைக்கண்ணாடியால் உலகைக் காண்பதுபோலாகும்.உண்மை தெரிய அக்கண்ணாடியைக் களையவேண்டும்மனம் ஆராயும்.பொருள்களைப் பகுதியாய்க் காணும்பகுதியை முழுமையாகக் கொள்ளும்இது நம் வாழ்வில் அடிப்படைத் தவறுஇத்தவறு விலக்கப்பட வேண்டுமானால் நாம் சத்தியஜீவியம் முழுமையானது, பகுக்கமுடியாதது, அனைத்தையும் தழுவக்கூடியது என்பதை வயுறுத்தவேண்டும்இம்முழுமைக்கு எந்த குந்தகமும் விளைவிக்காமல் அனைத்தையும் தன்னுட்கொள்ளும் என்பது சத்தியம் என்பதை ஏற்கவேண்டும். சர்க்கார் ஊழியர் மக்களுக்கு ஊழியர்மக்கள் அதிகாரி, ஆபீசர் ஊழியர்ஆபீசர்கள் பொதுமக்களை விரட்டுகின்றனர்மக்கள் ஆபீசரைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர்தங்களுக்கு வேண்டியதைக் கெஞ்சிக் கேட்கின்றனர். மக்கள் தங்கள் உரிமையைப் பெறவேண்டுமானால் அஞ்சி நடுங்குவதை நிறுத்தவேண்டும்மக்கள் அதிகாரி, ஆபீசர் ஊழியர் என்ற கருத்தை ஏற்கவேண்டும். அதுபோல் பிரபஞ்சம் நமக்கு அதன் உண்மையை வெளியிடவேண்டுமானால், நாம் சத்தியஜீவியத்தின் முழுமையை அறியவேண்டும். மரத்தினின்று விதை எழுகிறது. மரம் விதையிலிருந்து முளைக்கிறதுஏற்கனவே மரம் விதையுள் உள்ளது. இது ஒரு தவிர்க்கமுடியாத சட்டம். மரம் என்ற ரூபத்தில் இத்தவிர்க்கமுடியாத சட்டம் நிரந்தரமாக வெளிப்படுவதை நாம் ஏற்கிறோம்.   இந்நிகழ்ச்சியை மனம் நிலையாக ஏற்கிறது. மரம் பிறக்கிறதுவாழ்வு அதன் வழி மலர்கிறது. மரம் மீண்டும் உற்பத்தியாகிறது. இவ்வடிப்படையில் மனம் பகுத்து, தொகுத்து, ஆராய்ந்து விளங்கிக்கொள்கிறது. மரத்தின் மூலம் விதையையும், விதையின் மூலம் மரத்தையும் இயற்கை சட்டமாக நாம் ஏற்கிறோம். இதனால் நாம் எந்த விளக்கமும் பெறவில்லை.

     கல்லூரியில் பட்டம் தருகிறார்கள்பட்டம் வேலை பெற்றுத் தரும்இதை நாம் அறிவோம்இதன் பயனை அனைவரும் அடைகிறோம். ஆனால் அடிப்படையில் நாம் முக்கிய விஷயத்தை விட்டுவிட்டோம்தாகூர் பள்ளியிலிருக்கும்பொழுது ஏன் நான் இங்கிருக்கிறேன் என்று தன்னைக் கேட்டார்அறிவு பெற என்று அவர் பெற்ற பதில் அவருக்குச் சரியாகத் தோன்றவில்லை. ஏனெனில் அவர் அங்கு பாடம் படித்தார்; அறிவு பெறவில்லைஅதே கேள்வியை பெர்னார்ட் ஷாவும் கேட்டார். அவர் போன்ற மேதைகள் பட்டத்தை நாடவில்லை; அறிவை நாடினர். பள்ளியை விட்டு விலகினர். அறிவு பெற்று மேதையாயினர். உலகம் பெரியது. சமூகம் அதன் பகுதி. கல்வியை சமூகம் நமக்களிக்கிறதுஅதற்குக் கல்லூரியும், பட்டமும் கருவிகள். பட்டம் அறிவில்லை. நாம் பட்டத்தை உலகினின்று பிரித்து வேலை செய்கிறோம். சமூகம் என்ற முழுமையினின்று நாம் நம்மைப் பிரித்து விலக்கி ஒரு சிறு பயனையடைகிறோம்அப்படிப் பிரிக்காவிட்டால் நாம் உலகம் என்ற முழுமையை அடைவோம். ஷாவைப்போல், தாகூர்போல் நாமும் மேதைகளாவோம். எப்படி காலேஜில் சேருவது, பட்டம் பெறுவது, வேலை பெறுவது என்பவை எவ்வளவு உபயோகக்கரமானதானாலும், அவை வாழ்க்கையை விளக்கப் பயன்படாதுமரமும், விதையும் பிரபஞ்சத்தையும், கடவுளையும் அறியப் பயன்படா.

     இரகஸ்யமான, தன்னையறியும் சக்தியை ஆத்மா எனக் கண்டு கொண்டால், அதுவே இந்த ரூபத்தில் உண்மை என்று நினைத்தால், மற்றவை வழக்கமான செயல்களாகத் தெரியும்அப்பொழுது இந்த ரூபத்தை - மரம், விதை - பிரபஞ்சத்திலிருந்து பிரித்துவிடுகிறோம்விலங்கு தன்னை அறியாதுமனிதன் தன்னை அரைகுறையாக அறிவான். விலங்கு தன்னை தனித்த ஜீவனாக நினைக்கிறதுமனிதனும் அப்படியே நினைக்கிறான். இது ஒரு சௌகரியமான ஏற்பாடுமனம் இதையே முடிவாகக் கொள்கிறது. அதனின்று எல்லா தவறுகளும் எழுகின்றனவீட்டில் யாரும் இல்லாத நாளில் ஹோட்டல் சாப்பிடுகிறோம்ஒரு முறை அப்படி சாப்பிட்டபின் அதுவே முறை, சௌகரியம் என தினமும் ஹோட்டல் சாப்பிட்டால் சரி வருமா? வீட்டில் அனைவரும் அப்படிச் செய்தால் என்ன ஆகும்? ஒரு அவசியத்திற்கு செய்ததை முறையாக ஏற்பது வாழ்வை தடம்புரளச் செய்யும். பிரித்துப் பார்த்தால்தான் மனம் புரிந்துகொள்ளும் என பல சமயங்களில் பிரித்துப் பார்த்தால், அதையே வாழ்வின் முறையாகக் கொண்டால், நாம் உண்மையிலிருந்து விலகுவோம்.

Page 138 / Para 13:

     சத்தியஜீவியம் வேலை செய்வது வேறு மாதிரி. மரம் உலகினின்று பிரிந்து தனித்திருந்தால், அதுவே உண்மையானால், மரம் எழுந்திருந்திருக்காதுநாம் பட்டத்தை முக்கியமாகக் கருதிப் பெறுகிறோம்பட்டம் தனித்த உண்மையானால், நாம் பட்டம் பெற கல்லூரி ஏற்பட்டிருக்காதுநாட்டில் ஞானம் வளர ஏற்பட்டது கல்லூரிஇன்று (training) பயிற்சி அளிக்கப்-பட்டால் இலட்சக்கணக்கானவர்க்கு வேலை கிடைக்கும்அதை 1947முதல் 1967 வரை எவரும் செய்யவில்லை; செய்ய நினைக்கவில்லை. ஒருவருக்கு வேலை பெற பயிற்சி தேவையானால் அவர் அத்தொழிலை நாடி, பஸ் டிரைவர் கிளீனராக ஆரம்பிப்பதுபோல், பயிற்சி பெறவேண்டும்நாடு, மக்கள் ஞானம் பெற ஏற்படுத்திய கல்லூரியை நாம், பட்டம் பெறப் பயன்படுத்துவது நம் வாழ்வை நாமே சுருக்கிக்கொள்வதாகும்ரூபம் என்பது பிரபஞ்ச வாழ்வின் சக்தியைப் பொருத்தது. ரூபம் என்பது பிரபஞ்ச வாழ்வின் சக்தியைப் பொருத்து, மற்ற பொருட்களுடன் உள்ள தொடர்பால் நிர்ணயிக்கப்படுகின்றன. ஒரு கல்லூரியின் தரம் அது உள்ள ஊரால் நிர்ணயிக்கப்படுகிறதுரூபத்திற்கு தனிச்சட்டம் உண்டு எனில், அது பொதுச்சட்டத்தால் நிர்ணயிக்கப்படுகிறதுஏனெனில் குறிப்பிட்ட சட்டம், பொதுச்சட்டத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு கல்லூரியின் தரம் அது எந்த பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தது என்பதால் நிர்ணயிக்கப்படுகிறதுமரம் விதையை விளக்கவில்லைவிதை மரத்தை விளக்காதுபிரபஞ்சம் இரண்டையும் விளக்கும்கடவுள் பிரபஞ்சத்தை விளக்குவார்சத்தியஜீவியம் மரத்தையும், விதையையும் ஊடுருவி பிரபஞ்சத்தின் முழுஞானத்தில் வாழ்கிறது. அதன் ஐக்கியம் முழுமையானது; பகுக்கமுடியாதது; ஆனால் சந்தர்ப்பத்திற்கேற்ப மாறக்கூடியது. இந்த பூரண ஞானத்தில் தனி மையமில்லை, தனி அகந்தையில்லைநாம் இன்று அகந்தையெனும் தனித்த மையத்தில் வாழ்கிறோம்அதன் முழுமை அதன் சுயஞானத்திற்கு சமமான வீட்சி. முழுமையில் ஒருமை; பலவாகப் பிரிந்ததிலும் ஒருமையுண்டுஎல்லா இடங்களிலும், எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒருமை நிலைக்கும். இதில் எல்லாம் என்பதும், ஒன்று என்பதும் ஒன்றேதனிமனிதன் தான் அனைத்துடனும் இணைந்தவன், சத்புருஷனுடன் இணைந்தவன் என்பதை இழப்பதில்லை. ஏனெனில் சத்தியஜீவிய அறிவில் இந்த இரண்டறக் கலக்கும் உணர்வு பிறப்பில் ஏற்பட்டதுசத்தியஜீவிய சுய நிரூபணத்தின் பகுதியது.

     50 பேருள்ள கூட்டுக்குடும்பத்தில் பிறந்தவன் தனிமனிதன் எனத் தன்னை அறிவான். என்றாலும் குடும்பத்துடன் அவன் இரண்டறக் கலந்தவன்ஊர் விஷயங்களில் ஊருடன் அப்படிக் கலந்தவன். இருப்பினும் தான் ஓர் மனிதன் என்ற உணர்வை இழக்காதவன்அங்கு ஒருமை எப்பொழுதும் அழிவதில்லை. ஏனெனில் அவ்வொருமை அவன் ஊருடன் இரண்டறக்கலந்ததில் பிறந்ததுஇன்று தனிக்குடித்தனம் சென்றவர் ஊருக்குத் திரும்புவதில்லை; உற்றார், உறவினரை அறியார்; அவர்கள் அக்குடும்பம் ஒன்றிருந்தது என்பதை மறந்துவிட்டனர்எனவே அவர்கள் வாழ்க்கை சுருங்கிவிட்டது. ஊரின் ஆதரவு அவர்கட்கில்லை.

Page 139 / Para 14:

     தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரியில் பாயிட் என்ற பிரின்ஸ்பால் ஓய்வு பெறும்பொழுது அவருடைய பழைய மாணவர்கள் ஹைதராபாத், டெல்லி,பம்பாய், இலண்டனிலிருந்து வந்து விழா கொண்டாடினர்அனைவரும் அகில இந்திய உத்தியோகம் வகிப்பவர். எவ்வளவு நாளானாலும்,எங்கிருந்தாலும் பழைய பேராசிரியர், பழைய கல்லூரி அவர்கள் மனத்தில் உள்ளதுஅவர்கள் அந்த ஒற்றுமையை, ஒருமையை இழக்கவில்லைஅவர்கள் அனைவரும் பெரிய அந்தஸ்திருப்பதற்கு அவ்வொற்றுமை காரணம்அதில்லாத கல்லூரி மாணவர்கள் அப்படி வாழ்வில் உயர்வது இல்லை; அதுபோன்ற விழா கொண்டாடுவதில்லைஅது வெறும் ஒற்றுமை இல்லை; ஒருமையின் அடிப்படையில் ஏற்பட்ட ஒற்றுமைஇந்த ஒருமை காலத்திற்கும், இடத்திற்கும் உரியது. ஜீவன் இவற்றை ஊடுருவுவது, உள்ளுறைவது என்பது அடிப்படையான பூரண ஐக்கியத்தைப் பற்றியது. ஏனெனில் அதிலிருந்துதான் இது வருகிறது. அங்கு மையமோ, எல்லையான பரிதியோ இல்லை. காலத்தையும், இடத்தையும் கடந்த ஒன்று மட்டுமே உள்ளதுதமிழர்கள் டெல்லியிலிருந்தால், அங்கு ஒருவர் வீட்டு விசேஷத்தில் அவர்கள் குழுமியுள்ளபொழுது ஜாதி, மதம், ஊர், ஜில்லா, தொழில் பேதம் இல்லாமல் தமிழர் என்ற அடிப்படை ஒற்றுமை முழுவதும் நிலவியிருப்பதைக் காணலாம்அது தீவிரமாக, ஆழமாக, அர்த்தபுஷ்டியுள்ளதாக, அமிர்த சுவையுடன் அமையும்சத்தியஜீவிய ஒருமையும், ஒற்றுமையும் அத்தகையது.ஹிந்து, முஸ்லீம் வேற்றுமையோ, தீண்டாதவன் என்ற வேற்றுமையோ, பியூன், ஆபீஸர் என்ற வேற்றுமையோ அக்கூட்டத்தில் இருக்காது. சிருஷ்டிக்கு முன் உள்ள பிரம்மம் கனத்ததுகனம் ஒருமையைக் காட்டும். சிருஷ்டியில் அது பல பொருள்களை ஊடுருவும் கனத்த சூழலாக, சமமான சூழலாகத் தெரியும். பகுக்கப்படாத ஞானம், பிரபஞ்சத்தில் வெளிப்படாத பிறப்பிலுள்ள ஞானமாக மாறும்எந்த லீலையும், எந்த பாகுபாடும் இந்த அடிப்படை ஒருமையை, ஒருமையின் அடிப்படையில் ஏற்பட்ட ஒற்றுமையைக் குறைக்கவோ, குலைக்கவோ முடியாது. நம் நாட்டில் ஜாதிக்குள்ள உயர்வு, இங்கிலாந்தில் (aristocracy) உயர்தர மக்களுக்குண்டு. சொத்து அழிந்தாலும், 100 தலைமுறையானாலும், தன் பூர்வீக பெருமையை ஆங்கிலேயன் மறக்கமாட்டான். பேங்க்கை கொள்ளையடிக்க சுரங்கம் வழியாக வரும் திருடனை போலீஸ் பிடித்துவிட்டது. திருடன் ஆக்ஸ்போர்ட் பட்டதாரி; பெரிய குடும்பத்துப் பையன். போலீஸ்காரன் அவன் கையைப் பற்றியபொழுது, "என்னை உன் அழுக்கான கைகளால் தொடாதேஎன் உடல் ராஜவம்ச இரத்தம் ஓடுகிறதுஎன்னை Sir எனக் கூப்பிடு; please என்று பேச ஆரம்பி'' எனத் திருடன் போலீஸ்காரனிடம் கூறினான். கடுகு சிறுத்தாலும் காரம் போகாதுஸ்ரீ அரவிந்த சூத்திரம் "எல்லாம் பிரம்மத்துள்ளிருக்கிறது. பிரம்மம் எல்லாவற்றிலுமிருக்கிறது. எல்லாம் பிரம்மம்'' என்பது. சுயசிருஷ்டியின் ஒரு சத்தியம், பிரிக்கமுடியாதபடி சேர்த்துப் பிடித்துவைத்துள்ளதுஇந்த சுய-நோக்கம் அடிப்படை ஞானம். இதிலிருந்தே பிரபஞ்ச லீலை வெளிப்படுகிறது.

Page 139 / Para 15:

     மனம், உயிர், ஜடம் ஆன உலகு எப்படி ஏற்பட்டது? இது தாழ்ந்த ஜீவியம், மனித மனப்போக்குபிரபஞ்சத்தைப் பற்றிய நம் கொள்கைப்படி இதை எப்படிக் கூறுவது? உலகில் உள்ளவையெல்லாம் பூரணத் திறமை வாய்ந்த சத்தியஜீவியத்தினின்று வருவது சரியானால், எது இவற்றை உற்பத்தி செய்தது? சத், சித்-சக்தி, ஆனந்தம் என்பவை செயல்படுவதில் சத்தியஜீவியம் ஆரம்பிக்கிறது. இந்தத் திறமை சச்சிதானந்தத்தின் மூன்று அம்சங்களை அதன் தாழ்ந்த பிரதிநிதிகளான மனம், உயிர், உடலாக மாற்றுகிறது. சிருஷ்டி ஞானத்தின் இரண்டாம்பட்சத் திறமையிது. அது தன்னை முன்வைத்து, முகமாக்கி, புரிந்துகொள்ளும் ஜீவியம். அதில் ஞானம் மையமாகி பின்னோக்கிச் சென்று தன் செயலை கவனிக்கிறது.  மையம் என நாம் கூறும்பொழுது சமமான செயல்திறன் சமமில்லாத மூன்று அம்சங்களாகப் பிரிவதை நாம் குறிக்கிறோம்சமமில்லாத திறனெழும் பொழுது தன்னை பிரிப்பது எழுகிறது; அல்லது நிகழ்ச்சி தோற்றமாகிறது.

Page 140 / Para 16:

     முதலில் அறிபவன் தன்னை அறிவில் சேகரம் செய்து அகமாகிறான்.  தன் ஜீவிய சக்தியை தன்னிடமிருந்து வெளிப்பட்டு தன் ரூபமாகப் போவதாகக் கொள்கிறான்தொடர்ந்து அப்படிச் செயல்படுகிறான்.  தொடர்ந்து தன்னுள் பின்வாங்கி மறைகிறான். தொடர்ந்து மீண்டும் வெளிப்படுகிறான்.   இது தன்னைத் தானே சுயமாக மாற்றிக்கொள்வதாகும்இந்த ஒரு மாற்றத்திலிருந்து பிரபஞ்ச நோக்கங்கள், பிரபஞ்ச செயல்கள், அவற்றிற்குள்ள நடைமுறை வேறுபாடுகளனைத்தும் எழுகின்றன. அறிபவன், அறிவு, அறியப்படுவது என்பவற்றிடையே ஒரு யதார்த்த வேறுபாடு எழுந்தது. ஈஸ்வரன், அவன் சக்தி, அவனது சிருஷ்டி என்பதும் அதுவே. அனுபவிப்பவன், அனுபவம், அனுபவிக்கப்படுவது; பிரம்மம், மாயை, மாயையின் சிருஷ்டி என்பவையும் அவையே.

Page 140 / Para 17:

     சத்புருஷன் ஞானத்தில் தன்னை நிறுத்தியுள்ளான்இது புருஷன் சக்தியை கவனிப்பதாகும்; ஆள்வதாகும்இந்த சக்தி புருஷனிலிருந்து வெளிப்பட்டது. புருஷன் தன் சக்தியை - ஜீவிய சக்தியை - தொடர்கிறான்அது வேலை செய்யுமிடத்தையடைகிறான்அங்கு பகுக்கும் செயலை மீண்டும் செய்கிறான். பிரக்ஞா பிறந்தது அந்த பிரிவினையில். இப்புருஷன் ஒவ்வொரு ரூபத்திலுமிருக்கிறான்தன்னை மற்ற ரூபங்களில் காண்கிறான். நடைமுறை, செயற்கை மையத்தினின்று அவன் சக்தியால் காண்கிறான்எங்கும் அது ஒரே புருஷனே; ஒரே தெய்வீக ஜீவனே. பல மையங்கள், லீலை ஏற்பட ஏற்படுத்தப்பட்ட வித்தியாசம். அடிப்படையான ஐக்கியத்தின் பேரில் பரஸ்பர ஞானம், பரஸ்பரம், பரஸ்பர மோதல், பரஸ்பர அனுபவம் ஆகியவை ஏற்பட்டன.

Page141 / Para 18:

    எல்லாவற்றையும் ஊடுருவும் சத்தியஜீவியம் புது நிலையை ஏற்றது.  இது ஐக்கியத்தினின்று மேலும் விலகிய நிலையாகும்பிரபஞ்சம் நிலைபெற அவசியமான பகுக்கமுடியாத ஜீவியம், விலக்கமுடியாத ஒற்றுமை ஆகியவற்றிலிருந்து இப்படி விலகிற்றுசற்று மேலும் இதைத் தொடர்ந்தால், இது அவித்தையாகும்அடிப்படை சத்தியம் ஆயிரம் பாகங்களானபொழுது இப்பெரிய அஞ்ஞானம் உற்பத்தியாயிற்றுமீண்டும் அவ்வைக்கியத்தை அடைய பொய்யான ஐக்கியமான அகந்தையில் ஆரம்பிக்கவேண்டும்தனி மனித மையத்தை நாம் ஏற்றவுடன், மனஉணர்ச்சி, மனஅறிவு, மனச்செயல், அவற்றைத் தொடர்வன அத்தனையும் அவசியமாக எழும். சத்தியஜீவியத்தில் ஆத்மா செயல்படும்வரை அஞ்ஞானமில்லை. செயலுக்கும், அறிவுக்கும் உள்ள அரங்கம் சத்தியஜீவியம், அடிப்படை ஒற்றுமை.

Page 141 / Para 19:

     பிரம்மம் தன்னை அனைவரிலும் உள்ள புருஷனாகக் கருதுகிறது.அனைத்தும் தன் சிருஷ்டி, அனைத்தும் தானே என அறிகிறது. ஈஸ்வரன் செயலில் உள்ள சக்தி தான் என அறிவார்ஒவ்வொரு ஜீவனும், ஆத்மாவில் தான் என்றும் அறிவார்; ரூபத்திலும் தானே. ஆயிரம் ஜீவன்களிலும் அனுபவிப்பவன் அனுபவிப்பது தன்னையே எனவும் அறிவார். ஒரு மாற்றம்; பல மையங்கள் ஏற்பட்டுள்ளன. சக்தியை ஆயிரமிடத்தில் விநியோகித்துவிட்டோம்நடைமுறையில் ஜீவியம் மாறும். அடிப்படையான சாரத்தில் பிரிவினை இல்லை; மாற்றமில்லை. நம் மனப்போக்கைத் தயார் செய்ய சத்தியஜீவியம் வருகிறதுஇன்னும் தயார் செய்யவில்லை. மனத்தை அதன் ஆதியில் அறிய இவ்விஷயத்தை - சத்தியஜீவியம் நம்மைத் தயார் செய்வதை - ஆராய வேண்டும். அகன்று, பரந்த சத்தியஜீவியம் பிரிவினையான அஞ்ஞானத்துள் வழுக்கிவிழுந்த இடத்தை நாம் காணவேண்டும். இந்த பிரக்ஞா நம்மருகிலிருப்பதால், நமக்கு சத்தியஜீவியத்தைவிட எளிதில் புரியும்இதுவரை சத்தியஜீவியத்தைப் பற்றி பிடிபடாதவற்றைப் பேசினோம். மனத்தின் செயல்பாடுகள் எளிமையானவை. அறிவால் செயல்பட்டால் சத்தியஜீவியம் சிரமமாக இருக்கும். நாம் கடக்கவேண்டிய எல்லையான தடை அவ்வளவு சிரமமானதல்ல.


 

THE SUPREME TRUTH CONSCIOUSNESS

உயர்ந்த சத்தியஜீவியம்


 

ஒவ்வொரு பாராவில் உள்ள கருத்தின் சுருக்கம்:

132/1:

சத்தியஜீவியம் சச்சிதானந்தத்தின் சுபாவம். சத்தியஜீவியத்தின் பொதுவான மனோதத்துவ சத்தியம் இங்கு கருதப்படுகிறது.

132/2:

சத்தியஜீவியம் பிரபஞ்சத்தில் லீலையில் ஒழுங்கை நிலைநாட்டும் சக்தி. இது சுமுகத்தாலும், முழு எண்ணத்தாலும் இதைச் சாதிக்கிறது.

133/3:

இதற்கு காலமும், இடமும் தேவை. காலமும், இடமும் தொடர்பு கொள்வது (causality) காரணகாரியம்.

134/4:

காலம், இடத்தை கணிப்பது மனம். மனத்தைவிட உயர்ந்த ஜீவியத்திற்கு காலமும், இடமும் ஒரு புள்ளி.

134/5:

காலமில்லாவிட்டால் முன்னேற்றமிருக்காது; சலனமற்ற சுமுகம் இருக்கும்.

135/6:

அகத்தில் காலத்தில் உருவாகும் நிகழ்ச்சிகள் புறத்தில் இடத்தில் பரிணமிப்பது மனத்திற்குப் பிணக்காகவும், சிக்கலாகவும் தோன்றுகிறது. சத்தியஜீவியப் பார்வைக்கு அவை இயல்பான பிரம்ம சுமுகம்.

135/7:

இச்சுமுகம் பிறப்பில், அடிப்படையில், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், உள்ளிருந்து அவற்றை இயக்குகிறது.

136/8:

சத்தியஜீவியம் முக்காலத்தையும் தன் முழுப்பார்வையில் கொண்டு வரும்.

136/9:

சத்தியஜீவியத்தின் முதற்சட்டம் பிரபஞ்ச சிருஷ்டி.

137/10:

நாம் நம்மையறிதல், நான், அறிவு, அறிவால் அறியப்படும் நான் எனப் பிரியவேண்டியிருக்கிறது. மனத்திற்குத் தேவையான இந்த தற்காலிக ஏற்பாட்டை மனம் முடிவாகக் கொள்ளுதல் தவறு

137/11:

சத்தியஜீவியத்திற்கு மனத்திற்குள்ள இக்குறையில்லை.

138/12:

மரம் விதையிலிருந்து வருவதை ஆராய்வது பயன் தராது. மனிதன் மனத்தால் உலகிலிருந்து பிரிந்து சுருங்குகிறான்.

138/13: மரத்தையும், விதையையும் பிரபஞ்சம் விளக்கும். பிரபஞ்சத்தை கடவுள் விளக்குவார்.

139/14: "பிரம்மத்தில் அனைத்தும் உள்ளன. பிரம்மம் அனைத்திலும் உள்ளது. அனைத்தும் பிரம்மம்''.

139/15: (Apprehending Supermind) பிரக்ஞா மனம், உயிர், உடல் என்ற முதல் பிரிவினையை ஏற்படுத்துகிறது.

140/16: அறிபவன், அறிவு, அறியப்படுபவன் என்ற பிரிவினை ஏற்படுகிறது.

140/17: புருஷன் பிரகிருதியுள் சென்று பிரிவினையுள் ஒற்றுமையாகிறான்.

141/18: ஆத்மா சத்தியஜீவியத்திலிருக்கும் வரை அஞ்ஞானம் ஏற்படுவது இல்லை.

141/19: புருஷன் சிருஷ்டியில் பிரிந்த ஆயிரம் பொருள்களில் தன்னை வெளிப்படுத்துவதில் தன் ஒருமையையோ, ஒற்றுமையையோ இழப்பதில்லை. அடுத்துவரும் - பிரக்ஞா - அத்தியாயங்கள் எளிதானவை.

****
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனிதனுடைய அன்புக்கு அன்னை தம்மை முழுவதும்

கட்டுப்படுத்திக்கொள்கிறார்.

மனிதனுக்கு அடிமையான தெய்வம்.


 


 


 


 


 

 



book | by Dr. Radut