10. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
46. அறிவுடையாரை அரசனும் விரும்பும்.
- அன்பருக்கு அரசவையிலும் அமோக வரவேற்புண்டு.
47. அசை போட்டுத் தின்பது மாடு.
- அசையாமல் விழுங்குவது வீடு.
- உயிரைவிட்டுத் தீர்க்கும் பிரச்சினையை சமர்ப்பணம் உயிர் இனிக்கத் தீர்க்கும்.
48. அச்சாணி போன்றதோர் சொல்.
- அன்னை வாழ்வின் அச்சாணி.
49. அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் அமிர்தமுமா?
- அடி நாக்கு நஞ்சும், நுனி நாக்கு விஷமும் அன்பருக்கு அமிர்தம் தரும் பலனைத் தரும்.
50. அடி நொச்சி, நுனி ஆமணக்கா?
அடி எதுவானாலும் நுனி அருளாவது அன்னை பயிர்.
தொடரும்....
***
ஸ்ரீ அரவிந்த சுடர் வெட்கமின்றிக் கேட்பது உணர்வின் கர்வமாகும். அதை ஏற்பது கண்மூடித்தனமான பாசமாகும். பாசம் வெட்கமில்லாத உணர்வை விரும்பி ஏற்கும். |
- Login to post comments