Skip to Content

02.எங்கள் குடும்பம்

எங்கள் குடும்பம்

                      (சென்ற இதழின் தொடர்ச்சி....)

கணவர் : எனக்கு எல்லாம் பலிக்கும் அன்னை வேண்டும்.

தாயார் : உள்ளேயுள்ள அன்னைக்கு எல்லாம் பலிக்கும்.

கணவர் : அன்னைக்கு லிமிட் உண்டு என்று சொன்னாயே.

தாயார் : நாம் அன்னையை அழைக்கும்பொழுது நமக்குள்ள லிமிட் அன்னைக்குரிய லிமிட்டாகத் தெரிகிறது.

கணவர் : இந்த அன்னைக்கு லிமிட் இல்லையா?

தாயார் : நாமிருந்த இடத்தில் அன்னை வருவதால் லிமிட் இல்லை.

கணவர் : நான் உள்ளே அன்னையை நாடுகிறேன்.

தாயார் : உள்ளே நாடினாலும், வெளியே நாடினாலும், "நாம்' நாடும்வரை லிமிட் உண்டு.

கணவர் : எப்படியும் வழி விடமாட்டேன் என்கிறாய்.

தாயார் : வழி விடுவது "நாம்'.

கணவர் : நினைத்தனவெல்லாம் நடக்காதா?

தாயார் : அன்னை நினைத்தனவெல்லாம் நடக்கும்.

கணவர் : நம்முள் உள்ள அன்னை நினைத்தனவெல்லாம் நடக்குமா?

தாயார் : அன்னை கொடுப்பது அருள். ஒரு பெரிய ஸ்தாபனத்தில் இருந்தால் நமக்குரிய வருமானம் போக நாம் தேடாமல் வரும் வசதிகள் ஏராளம். நியாயமான முறையில் நமக்கு அப்படி வருவது நம் வருமானத்திற்குச் சமமாகும். அன்னை மாபெரும் ஸ்தாபனம். நாம் எந்த அளவுக்கு உழைத்துச் சாதிக்கிறோமோ அந்த அளவுக்கு அன்னை நல்ல முறையில் உபரி வருமானம் தருவார்கள்.

கணவர் : இதுவரை இப்படி நீ பேசியதில்லையே.

தாயார் : நடப்பவற்றைக் காணும்பொழுது அப்படிப் புரிகிறது. உங்களுக்குத் தெரிந்தவரை எடுத்துப் பாருங்கள். இதுவரை அவருக்கு 25 இலட்சம் என ஓர் ஆர்டர் வரும். இம்முறை அவருக்கு 50 இலட்ச ஆர்டர் வந்துள்ளது.

கணவர் : ஆமாம்.

தாயார் : அத்துடன் என்ன வந்தது?

கணவர் : 50 இலட்சம் இனாம் வந்திருக்கிறது.

தாயார் : இரண்டும் சமம்.

கணவர் : நாம் வேலை செய்தால் பணம் வரும் என்பது சரியாக இருக்கிறது. தொகை சமமாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

தாயார் : ஒருவருக்குச் சமமாக உபரி வருகிறது. அடுத்தவர்க்கு அது 2, 5, 10 மடங்கு வரும்.

கணவர் : விஷயம் மனத்தைப் பொருத்ததா?

தாயார் : மனத்தின் பக்குவத்தைப் பொருத்தது.

கணவர் : பக்குவத்திற்கு அளவில்லை.

தாயார் : பணத்திற்கும் அளவில்லை.

கணவர் : கண்ணால் பார்த்தபிறகும் நம்பமுடியவில்லையே.

தாயார் : நம்பமுடியாதவை நடப்பது நல்லெண்ணத்தால்.

கணவர் : நான் சமர்ப்பணத்தை மேற்கொள்கிறேன்.

தாயார் : சமர்ப்பணத்தை ஆரம்பிப்பது பெரிய விஷயம். சமர்ப்பணம் நம்மைத் தேடி வருவது நம் சமர்ப்பணத்தின் நல்ல அறிகுறி.

கணவர் : அப்படியென்றால்.....

தாயார் : நாம் மறந்த நேரம் சமர்ப்பணம் நம்மை நினைவுபடுத்தும்.

கணவர் : அது ரொம்ப பெரிய விஷயமாயிற்றே.

தாயார் : அவ்வளவு பெரிய விஷயம் ஒரு சின்ன விஷயத்தைப் பொருத்தது.

கணவர் : எந்தச் சின்ன விஷயம்?

தாயார் : ஒருவரிடம் போனில் பேச முடிவு செய்கிறோம். உடனே சமர்ப்பணம் நினைவு வருகிறது. சமர்ப்பணம் செய்தபின் பேச முடிவு செய்தால், அது சமர்ப்பணமாகவில்லை. எவ்வளவு முயன்றாலும் சமர்ப்பணம் பலிக்கவில்லை. சரி, சமர்ப்பணம் வாராது, பேசுவோம் எனப் பேசுகிறோம். பேசவேண்டும் என்ற ஆசையும், சமர்ப்பணமும் போட்டி போடுகின்றன. ஆசை ஜெயிக்கிறது. சமர்ப்பணம் தோற்கிறது. ஆசையை விட்டால் சமர்ப்பணம் ஜெயிக்கும். சமர்ப்பணம் ஜெயித்தால் தொடர்ந்து சமர்ப்பணம் நம்மை நினைவுபடுத்தும்வரை செல்லலாம்.

கணவர் : பேசும் ஆசை சமர்ப்பணத்தைத் தோற்கடிக்கிறது.

தாயார் : விஷயம் - பேசுவது - சிறியதாக இருக்கலாம். சமர்ப்பணம் பெரியதாக இருக்கலாம். நாம் தேர்ந்தெடுப்பதைப் பொருத்தது. ஒருவருக்கு வேலைக்காரியிடம் சண்டை போடுவது, அடுத்தவர்க்குக் குறுக்கே பேசுவது, பொய் சொல்வது, 7 தோசை சாப்பிட்டபின் 8ஆம் தோசை சாப்பிடுவது, பேரம் பேசுவது போன்ற சிறு விஷயங்களில் தங்களைக் கட்டுப்படுத்த முடியாதவர் சமர்ப்பணத்தை இழக்கிறார். கட்டுப்பாடு சிறியதானாலும் கடைசியில் பார்க்கும்பொழுது கடவுளுக்குச் சமமாகும்.

கணவர் : நம்பிக்கை எழ நமக்கு உதாரணங்கள் குறைவில்லை.அத்தனையும் பார்த்தபின் நம்பிக்கை வரமாட்டேன் என்கிறது.

தாயார் : இதுவரை உலகம் வழிபாட்டை மேற்கொண்டது. ஒருவருடைய நம்பிக்கையை அனைவரும் ஏற்பது அது. அன்னை அவரவர்கட்கே நம்பிக்கை ஏற்படவேண்டும் என்கிறார். நாம் அதைச் சென்ற ஆண்டு கரண்ட் விஷயத்தில் செய்தோம்.

கணவர் : நினைவிருக்கிறது. மாலை 3 மணிக்குக் காற்றடித்து கரண்ட் போனபின் கரண்டைக் கூப்பிட்டோம் வரவில்லை. EBயில் ஒரு tower விழுந்துவிட்டதால் 3 நாட்களாகும் கட்ட, அதன்பிறகு கரண்ட் வரும் என்றார்கள்.

தாயார் : ஒருவர் நமக்கு அந்தச் சட்டமில்லை. அழைத்தால் கரண்ட் வரவேண்டும் என்றபொழுது, அனைவரும் அவர் அழைப்பார், கரண்ட் வரும் என எடுத்துக் கொண்டார்கள். அவரவரும் அழைக்கும் பொறுப்பைஏற்பது அன்னைச் சட்டம் என்று அவர் கூறியதை அனைவரும் ஏற்றுக்கொண்டு வீட்டிற்குப்போய் அழைத்தனர். 6 மணிக்குக் கரண்ட் வந்தது.

கணவர் : எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதைவிட நம்பிக்கை ஏற்படுத்த எதுவும் தேவையில்லை. இதன்மூலம் நான் மாற முனைகிறேன். கண் பார்வைபட்டால் பொருள்கள் நொறுங்குமே, அவர் என்ன ஆனார்?

தாயார் : அவர் பெயரைக் கேட்டாலேயே எனக்குப் பயம். அவருக்கு நம்மீது பிரியம். அவர் எந்த வகையில் சம்பந்தப்பட்டாலும் விபத்து, ஆபத்து, நஷ்டம் ஏற்பட்டபடி இருக்கும், நினைவிருக்கிறதா? அவர் பிறந்த நாளன்று நம் கார் சர்வீஸுக்குப் போயிற்று. காரை மேலே தூக்கினார்கள். 4 சக்கரங்களும் தரையிலும், கார் மேலுமிருந்தது. 1 நிமிஷத்திற்குமுன் அது நடந்திருந்தால் என்ன ஆயிருக்கும்?

கணவர் : இப்பொழுது எங்கிருக்கிறார்?

தாயார் : பெரிய சம்பளத்தில் பெரிய வேலையிலிருக்கிறார். யோகம் செய்வதாகச் சொல்கிறார். பெருந் தொகையைத் தாமே முன்வந்து அளித்துள்ளார். அவர் தகப்பனார் இவரைக் கொடுமைப்படுத்தியதால் தாம் இப்படி மாறிவிட்டதாகக் கருதுகிறார். தகப்பனார் தற்சமயம் காலமாய்விட்டார். மனம் தங்கமாக இருக்கிறது. இந்த இராசிக்கும், இந்த மனத்திற்கும் தொடர்பு தெரியவில்லை.

கணவர் : நாமும் அதுபோல் மாறினால் நல்லது.

கிராமத்திலிருந்து கணவருடைய வயதான பெரியம்மாவுக்கு முடியவில்லை, படுக்கையாகிவிட்டார் என்று செய்தி வந்து அனைவரும் புறப்பட்டு போய் அவர் இறுதிக் காலம்வரை உடனிருந்து திரும்பி வந்துவிட்டனர். இறுதிச் சடங்குகளில் இக்குடும்பம் பங்கு கொள்ளவில்லை. அது வீட்டில் - குடும்பத்தில் - பெரிய பிரச்சினையானாலும் கணவரும், மனைவியும் இவ்விஷயங்களில் தெளிவு உடையவர் என்பதால் இவர்கட்கு அது பிரச்சினையாயில்லை.பெரியவன் எலக்ட்டிரிகல் இன்ஜினீயர். அனுபவம் அதிகமில்லை என்றாலும் அபாரக் கெட்டிக்காரன். பார்ட்னர் டெல்லி போனபொழுது தற்செயலாய் ஒருவரைச் சந்தித்துப் பேசியபொழுது, power plantமின்சாரத் திட்டத்தைப் பற்றிப் பேசியதாகவும், பார்ட்னர் பெரியவனுக்கு அது நல்ல சந்தர்ப்பம் என நினைத்ததாகவும் கூறினார். பேசியவர் பார்ட்னரை மிகவும் பாராட்டி, விரும்பியதால், கம்பெனி, அவருடைய தொடர்புகளைப் பற்றி அறிந்து தம்மிடத்திற்கு அழைத்துப்போய் தம் மனத்தைத் திறந்து பேசினாராம். "எனக்கு ஏராளமான தொடர்புகளுண்டு, திறமையுண்டு. ஆனால் எதுவும் கூடிவருவதில்லை.நீங்களும், நானும் கூடி வேலை செய்தால், கூடிவரும் என நினைக்கிறேன். எனக்கு வேண்டிய பிரெஞ்சுக்காரரிடம் நான் உங்களை அழைத்துப்போக விரும்புகிறேன்'' என்றாராம்.பிரெஞ்சுக்காரரை பார்ட்னர் சந்தித்தார். அவர் இந்தியாவில் power plant போட பார்ட்னர் தேடுகிறார். நாணயமான பெரிய பார்ட்னர்,300 கோடி முதல் போடுபவர் தேவை. அந்தத் தொகை போடும் கம்பெனிகள் இந்தியாவில் சொற்பம். நாணயமானவர்கள் சொற்பம்.பிரெஞ்சுக்காரருக்கு ஒரு நாணயமான பார்ட்னரை அறிமுகப்படுத்தி projectஐ எழுதி கான்ட்ராக்ட் கையெழுத்திடும்வரை பார்ட்னரை இவ்விரு பொறுப்புகளையும் ஏற்கமுடியுமா எனக் கேட்டார்.பார்ட்னரைப் பார்த்தவுடன் பிரெஞ்சுக்காரர் நம்பிவிட்டார். நம் தொடர்புகள் - பாங்க் சேர்மன் - பிரெஞ்சுக்காரரைக் கவர்ந்தன.இரண்டையும் பார்ட்னர் ஏற்று வந்திருக்கிறார். சேர்மன்மூலம் 800கோடி கம்பெனி முதலாளியை ஏற்கனவே பார்ட்னர் அறிவார்.பெரியவன் திட்டத்தை எழுதுவான். பார்ட்னர் திட்டத்தை கான்ட்ராக்ட் முடியும்வரை நிறைவேற்றுவார் என்பது அவர் மனதில் உள்ளது.இதைச் செய்ய பார்ட்னருக்கு - கம்பெனிக்கு - 3% கமிஷன். திட்டம் $ 1 பில்லியன். சுமார் 6 மாதம் முதல் 12 மாதம் வரை இந்திய பார்ட்னர், பிரெஞ்சுக்காரர் இவர்களிடையே பார்ட்னருக்கும்,பெரியவனுக்கும் வேலை. அவன் எழுதும் திட்டம் இருதரத்தாருக்கும்,சர்க்காருக்கும் சம்மதமாக இருக்கவேண்டும். வெளிநாட்டு, உள்நாட்டு பார்ட்னர்கள் இலாபப் பங்கு வீதம், வேலையில் பொறுப்பு, 30ஆண்டுகட்குரிய நிபந்தனைகள் எழுதப்பட்டு பார்ட்னர்களால் விவாதிக்கப்பட்டு இருதரத்தாரும் சேர்ந்து, பேசி, சம்மதப்பட்டு கையெழுத்தாகவேண்டும். நிபந்தனைகள் ஏராளம். 30 ஆண்டுகள் அறிவுக்கோ, கற்பனைக்கோ எட்டாத காலம். எப்படி எதை நிர்ணயம் செய்து கையெழுத்திடுவது? நாணயம், நம்பிக்கைக்கும் அளவுண்டல்லவா? அத்தனையும் சேர்மனும், பிரெஞ்சுக்காரரும் பார்ட்னரை நம்புவதால். விஷயம் ஒரு ஆண்டில் முடிந்தால் கமிஷன் 150 கோடி ரூபாயாகும். தொகை கற்பனைக்கே எட்டாதது.பார்ட்னருக்கு போகுமிடங்களிலெல்லாம் ராஜோபசாரம். நாணயம் பேசுகிறது. சம்பந்தப்பட்ட இருவரும் - பிரெஞ்சுக்காரரும், டெல்லி பார்ட்னரும் - நாணயத்திற்குப் பேர் போனவர்கள் என்பதால் வேலை என்பது உடலுழைப்பே. என்னவாகும் என்ற பயமில்லை. வீடு அடியோடு மாறிவிட்டது. அவரவரும் தம், தம் பங்கிற்கு உரியதைச் செய்ய ஆவலாக முன்வருகிறார்கள். அடிப்படை இல்லை, ஆனால் ஆர்வமிருக்கிறது. கறுப்பு நாய் வெள்ளை நாயாக மாறுவதுபோன்ற கட்டத்தில் வீடுள்ளது. குடும்பத்தில் பெரிய தலைகள் பழைய ஜீவியத்திற்குரியவை. கணவரின் பெரியம்மா காலமானது அந்த ஜீவியத்தின் அதிகாரம் நீங்கியது. அதற்கும் power plantக்கும் உள்ள தொடர்பைத் தாயார் மட்டும் கவனித்தார். குடும்பம் - கம்பெனி -தமிழ்நாட்டில் முதல் வரிசையிலிருந்து இந்தியாவின் முதல் வரிசைக்கு வரும் நேரம் வந்துவிட்டது. கணவரைப் பார்ட்னர் முழுவதும் நம்புகிறார். ஆனால் கணவர் முக்கியமான சமயத்தில் அசம்பாவிதமாகப் பேசிவிடுகிறார். அது அசம்பாவிதம் எனவும் அறியார். அதை மாற்றமுடியாது. மனைவி கணவனிடம் சொல்லக் கூடியதில்லை. சமர்ப்பணம்தான் செய்யலாம் என்று நினைத்தபொழுது கணவரே அந்தப் பிரச்சினையை எழுப்பினார்.

கணவர் : நான் பார்ட்னருடன் பேங்க் சேர்மனைப் பார்க்கப் போயிருந்தேன். என்னை சேர்மனுக்கு அறிமுகப் படுத்தினார் பார்ட்னர். சேர்மன் என் படிப்பு, அனுபவம் பற்றிக் கேட்டார். Gold medalist என்று நான் கூறியதை சேர்மன் நம்பவில்லை போலும். நான் மெடலைக் கொண்டுவந்து காண்பிக்கிறேன் என்றேன்.

இச்சொல் மனைவியின் முகத்தைக் கறுப்பாக்கியதைக் கண்ட கணவர் "ஏன்? அது தவறா'' எனக் கேட்டார். கோல்ட் மெடல் எப்படிப் பேச்சிற்கு வந்தது என்றார் மனைவி.

கணவர் : நானே சொன்னேன். நானே சொல்லாவிட்டால் சேர்மனுக்கு எப்படித் தெரியும். அது தவறா? நான் எப்படிப் பேசவேண்டும் எனச் சொல், அதன்படி பேசுகிறேன்.

மனைவி : நாம் பேசவேண்டாம். சமர்ப்பணம் செய்தால் போதும்.

கணவர் : சமர்ப்பணம் செய்தால், கோல்ட் மெடல் வாங்கியது எப்படித் தெரியும்?

மனைவி : நமக்கு கோல்ட் மெடலால் சேர்மன் அறிமுகம் ஆகவில்லையே.

கணவர் : அன்னையாலா?

மனைவி : பார்ட்னர்மூலம். அவரிடமிருந்து பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்.

கணவர் : நான் உன்னிடமிருந்து கற்கிறேன்.

மனைவி : இது பெரிய விஷயம். மனைவி கணவனுக்குக் கற்பிப்பது இல்லை.

கணவர் : பார்ட்னர்தான் என்னை அழைத்துப் போனார். இப்பொழுது என்ன செய்ய?

மனைவி : சமர்ப்பணம்.

கணவன் : சரி, செய்கிறேன். அதற்கு முன் பார்ட்னருடன் பேசுகிறேன்.போனில் பார்ட்னருடன் பேசிவிட்டுத் திரும்பிய கணவர் முகம் மலர்ந்திருந்தது. ஏன் எனத் தெரியவில்லை.

மனைவி : என்ன விஷயம்?

கணவர் : நான் இனியும் சமர்ப்பணம் செய்ய வேண்டுமா?

மனைவி : என்ன நடந்தது?

கணவர் : நாங்கள் - பார்ட்னரும், நானும் - சேர்மனிடமிருந்து வந்தபின் பார்ட்னர் சேர்மனுடன் பேசியிருக்கிறார். பெரியவனைப் பார்ட்னர் மகன் என நினைத்தாராம். என் மகன் என பார்ட்னர் கூறியபொழுது, "அனுபவம் போதாது. அப்படிப்பட்டவர் நேர்மையாக இருப்பார்கள்'' என்று சேர்மன் என்னைப் பற்றிச் சொன்னாராம்.

மனைவி : சமர்ப்பணத்தை முழுவதும் செய்யவேண்டும்.

அன்னையின் அருள் செயல்பட ஆரம்பிக்கும்பொழுதே power plant வருகிறது எனில் மனதாலும், செயலாலும், உணர்வாலும், அனைத்துக் கரணங்களாலும் நாம் அருளின் செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதைக் குடும்பத்தினர் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் கலந்து பேசுவதில்லை.

கணவர் : சமர்ப்பணம் பலிக்கமாட்டேன் என்கிறது, எப்படி முழுவதும் செய்வது?

மனைவி : Serious vs silly ;Truth vs falsehood; Selfless vs selfishஎன்பன நாம் அறிந்தவை. Seriousஎன்பதை நிதானம், பக்குவம் எனலாம், silly என்றால் சில்லரை, சபலம் ஆகும். உண்மையும், பரநலமும் தெரிந்தவை.இம்மூன்றையும் முழுமையாகப் பின்பற்றினால் போதும்.

கணவர் : எப்படிப் பொய் சொல்லாமலிருப்பது?

மனைவி : எல்லாரும் பொய் சொல்கிறார்கள். மட்டமானவர் சொல்லும் பொய்யை நாம் சொல்வதில்லை.

கணவர் : ஆம்.

மனைவி : நமது சமூகத்தில் அறிவில்லாதவரிடம் சொல்லும் பொய்யை விவரம் தெரிந்தவரிடம் சொல்ல முடியாது.

கணவர் : ஆமாம், அது சரி.

மனைவி : பொய் சொல்பவனும், பொய் சொல்பவனை நம்பமாட்டான், பொய் சொல்லாதவனை நம்புவான். பொய் சொல்பவனும் நெருங்கியவரிடம் பொய் சொல்ல மாட்டான். அனைவரும் நம்பவேண்டுமானால் எந்தப் பொய்யும் சொல்லக்கூடாதன்றோ?

கணவர் : பொய் சொல்லத் திறமை வேண்டும். அதை மெய் சொல்லப் பயன்படுத்தலாம்.

மனைவி : பொய் நஷ்டம், மெய் ஆதாயம் என்பதைவிட மெய் நல்லது என்று சொன்னால் உயர்ந்தது. பொய் சொன்னால் தன்னம்பிக்கை போய்விடும்.

கணவன் : தன்னம்பிக்கை போனால் எல்லாம் போய்விடும்.

மனைவி : சில்லரையை யாரும் விரும்பமாட்டார்கள்.

கணவன் : அவனே பிரியப்படமாட்டான்.

மனைவி : சுயநலமியே சுயநலத்தைப் பாராட்டமாட்டான்.

கணவன் : வாழ்வில் இம்மூன்றும் அருளுக்குரியவை.

மனைவி : ஆழ்ந்து உடலில் ஊறிய பொய் மெய்யாகத் தெரியும். பெரிய இடத்தில் பழகும்பொழுதுதான் அது பொய், மட்டம் எனப் புரியும்.

கணவர் :விரயத்தைப் பெருமையாக நினைப்பவர் பெரிய இடத்தில் பழகினால் விரயம் தவறு என உணர்வார். நாம் தண்ணீரை விரயம் செய்கிறோம். நமது ஊரில் நீர்ப் பஞ்சமில்லை. ஆனால் தண்ணீர்ப் பஞ்சம் எங்கும் இருக்கிறது. அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால் தண்ணீர்ப் பஞ்சம் போகுமா?

மனைவி : நமக்குள்ள நம்பிக்கையைச் சோதனை செய்ய இது நல்ல சந்தர்ப்பம்.

கணவர் : நாட்டில் நீர்ப் பஞ்சம் போகவேண்டும் என்று பிரார்த்தனை செய்யலாம்.

மனைவி : இரண்டிற்கும் பலன் ஒன்றே, நோக்கம் வேறாக இருக்க முடியும்.

கணவர் : எப்படி?

மனைவி : பலனே மாறுபடும்.

கணவர் : ஏன்?

மனைவி : நமக்கு நம்பிக்கை வேண்டும், உள்ள நம்பிக்கை வளரவேண்டும் என்பது நல்ல பிரார்த்தனை.

கணவர் : நாட்டில் மழை பெய்ய வேண்டும் என்பது நல்ல பிரார்த்தனையில்லையா?

மனைவி : நமக்குப் பரநலம் கொஞ்சம், சுயநலம் அதிகம். பரநலம் உள்ள அளவுக்குப் பலிக்கும்.

கணவர் : அவ்வளவு சுயநலமிகளா நாம்.

மனைவி : பிரார்த்தனை பலிப்பதில் தெரியும்.

கணவர் : சரி, என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம்?

மனைவி : செய்வது யாருக்கும் தெரியக் கூடாது.

கணவர் : ஏன்?

மனைவி : சுயநலம் வளர வழியில்லை.

கணவர் : சரி.

மனைவி : பிரார்த்தனையைவிடத் தண்ணீருக்குக் கவனம் செலுத்த வேண்டும்.

கணவர் : எப்படி?

மனைவி : சிக்கனமாகச் செலவு செய்யவேண்டும்.

கணவர் : சிக்கனம் கவனமாகுமா?

மனைவி : நீரைப் போற்றுவது போலாகும்.

கணவர் : மனதால் போற்றினால் போதாதா?

மனைவி : செயலுக்கு எண்ணத்தைவிட சக்தியுண்டு.

கணவர் : பிரார்த்தனை, சிக்கனம், சமர்ப்பணம், மூன்றும் நல்லது.

மனைவி : சிக்கனமாகச் செலவு செய்வதை மனத்தால் போற்றினால் அதிகப் பலனுண்டு.

கணவர் : சிக்கனமாகச் செலவு செய்தால் பிறருக்குத் தெரியுமே.

மனைவி : தெரியக் கூடாது என்பதில்லை, நம் வீட்டில் அனைவரும் செய்வார்களா?

கணவர் : பிள்ளைகளைச் செய்யச் சொல்வோம்.

மனைவி : அது தவறில்லை, நாம் செய்வது தெரிந்து அவர்களே பின்பற்றினால் நல்லது. எப்படிச் செய்தாலும் மழை பெய்யும். நாமிருவரும் எவரிடமும் சொல்லாமல் மனதாலும், செயலாலும், சமர்ப்பணத்தாலும் செய்ய ஆரம்பிப்போம்.

கணவர் எத்தனைத் தடவைகள் சொன்னாலும் சமர்ப்பணத்திற்கும், பிரார்த்தனைக்கும் வித்தியாசம் நடைமுறையில் தெரியவில்லை.

மனைவி : சமர்ப்பணமும் பல அளவுகளிலிருக்கிறது.

கணவர் : எது சமர்ப்பணம்?

மனைவி : நினைவு வந்தவுடன் நாம் அச்செயலுக்குப் பொறுப்பேற்காமல் அன்னையைப் பொறுப்பேற்கச் சொல்வது சமர்ப்பணம்.

கணவர் : சரி, அதைச் செய்வோம்.

மனைவி : அது எளிதன்று.

கணவர் : ஏன்?

மனைவி : எண்ணம் நம்முடையதன்று.

கணவர் : புதிதாக இருக்கிறதே.

மனைவி : நம் எண்ணங்கள் என நாமறிவன பலரும் நினைப்பன.

கணவர் : அப்படி ஸ்ரீ அரவிந்தர் சொல்கிறாரா?

மனைவி : ஆம்.

கணவர் : அதற்கு என்ன செய்வது?

மனைவி : நம்மை எண்ணங்களிலிருந்து பிரிப்பது கஷ்டம்.

கணவர் : சட்டம் என்ன?

மனைவி : எண்ணத்தின் பின்னால் உணர்வும், செயலும் உள்ளன.

கணவர் : அவற்றை எப்படிப் பிரிப்பது?

மனைவி : அப்படிப் பிரித்து எண்ணம் மனதில் தோன்றியவுடன் சமர்ப்பணம் செய்தால் அடுத்த நிமிஷம் மழை பெய்யும்.

சுமார் 3, 4 நாட்கள் கணவரும், மனைவியும் மழையை சமர்ப்பணம், பிரார்த்தனை, கவனத்தால் நினைத்தவுடன் பிள்ளைகள் அதையே தாமாக எழுப்பி பின்பற்றவேண்டும் எனப் பேசினர். பெருமழை தொடர்ந்து பெய்தது. அந்த ஆண்டு குறை நிறைவாயிற்று.

கணவர் : நம் பிரார்த்தனை பலித்தது.

மனைவி : பிரார்த்தனை பலித்ததும் நம் அகந்தைக்கு வலிமையூட்டும்.

கணவர் : சந்தோஷப்படக் கூடாதா?

மனைவி : சந்தோஷப்படுவதிலும் உள்ள விஷயம் அகந்தை வளர்வது.

கணவர் : என்ன செய்யவேண்டும்?

மனைவி : நன்றி கூறவேண்டும்.

கணவர் : இப்போ சொல்லலாமா? எனக்கு மழை பெய்யும்பொழுது தோன்றவில்லையே.

மனைவி : தோன்றுவதுடன் உடல் புல்லரிக்கவேண்டும்.

கணவர் : எனக்கில்லை.

மனைவி : Power plantக்கும், மழைக்கும் சட்டம் ஒன்றுதான்.

கணவர் : அது பெரியதாயிற்றே.

மனைவி : நமக்குப் பெரியது, அன்னைக்கன்று.

கணவர் : அதற்கு நாளாகும், மழை உடனே பெய்யும்.

மனைவி : சமர்ப்பணம் பூரணமானால் நேரம் தேவையில்லை.

கணவர் : Projectக்கு 1 வருஷமாகுமே.

மனைவி : அது நமக்கு.

கணவர் : புரியவில்லை.

மனைவி : அனுபவத்தில் புரியும். சமர்ப்பணத்தைக் கவனித்தால்,சமர்ப்பணத்திற்கும், நடக்கும் வேகத்திற்கும் உள்ள தொடர்பு தெரியும்.

கணவர் : கவனித்தால் மனதில் சமர்ப்பணம் வரவில்லை. கமிஷன் வருகிறது.

மனைவி : கமிஷனோ, projectஓ மனதில் வாராமல் சமர்ப்பணம் வரவேண்டும்.

பார்ட்னர் வந்தார். பிரெஞ்சுக்காரருடன் பேசியதைக் கூறினார்.

பிரெஞ்சுக்காரர் நம் பூர்வோத்திரத்தை விசாரித்தார். பேச்சு அன்னைக்கும் வந்தது.நானாகப் பேசப் பிரியப்படவில்லை.அவரே தமக்கும் அன்னை தெரியும் என்றார். "எங்களூர்க்காரராயிற்றே'' என்றார்.,  .  அன்னை அவருக்குத் தெரியும் என்றவுடன் பார்ட்னருக்குஉள்ளே "ஜில்' என்றதாம் கணவர் தமக்கு அப்படியில்லை என்றார். மனைவிக்கும் அப்படியில்லை. "கமிஷன் கைக்கு வர 1 வருஷமாகும். அதுவரை கொஞ்சம் கமிஷனை பாங்க்மூலம் முன்பணமாகத் தரலாமா?'' என்றார். கணவர் அதிர்ந்துபோனார். மனைவிக்கு அன்னை நினைவு கண்களை நிரப்பியது. மறுப்பது சரியில்லை.ஏற்பதை நன்றியுடன் ஏற்க மனப்பக்குவமில்லை. எண்ணம் ஓடுவதைத் தடை செய்ய முடியவில்லை. பேச்சு மாறியது. ஆனால் எல்லோர் மனமும் நிறைந்தது. "எலிசபெத் பெம்பர்லியைக் கண்டு பிரமித்தது போன்ற உணர்வு இது'' என மனைவி நினைத்ததை பார்ட்னர் கூறினார். ஏதாவது ஒரு எண்ணத்தையாவது முறையாகப் பூரணமாகச் சமர்ப்பணம் செய்யவேண்டும் என்று மனைவி நினைத்தார். அது முகத்தில் ஒரு பொறியாக, பொன்னொளியாகத் தோன்றியது. எவரும் கவனிக்கவில்லை. அது பார்ட்னர் புருவத்தில் தெரிந்ததை மனைவி கவனித்தார். நெஞ்சு நிறைவதுபோல் சூழல் பெருநிறைவு பெற்றது. சற்று நேரம் கழித்து சூழல் மாறி அனைவரும் பேச ஆரம்பித்தனர். கலகலப்பாக இருந்தனர். மனைவி மட்டும் இந்த நேரம் நடந்ததைக் கவனித்தார். பார்ட்னர் அதைக் கவனிக்கவில்லை என்றாலும் அந்த அனுபவம் அவரைத் தொட்டதை மனைவி கண்டார்.

பார்ட்னர் : The Life Divine படித்தேன். "நாம் எண்ணத்தை எனத் தோன்றுகிறது. அப்படிப் பிரித்துப் விஷயத்திலிருந்து பிரித்துவிடுகிறோம். அதுவே நாம் பார்த்தால்தான் நம்மால் செயல்பட முடிகிறது. முதலில் செய்வது'' என்று வந்தது. எழுந்துபோய் அவனைப் பிடித்து அழைத்து வருகிறோம்

மனைவி : "அவனே ஆட்டம், அவனே ஆட்டக்காரன், அவனே அரங்கம்" என்று ஓர் இடத்தில் வருகிறது. Himself the Play, Himself the Player, Himself the Playground. இவை மாயா, பிரகிருதி, லீலை ஆகியவற்றைக் குறிக்கின்றன. மரபு இவற்றை வெவ்வேறாகக் . காண்கிறது. ஒன்றாகக் காண்பது பூரணயோகம், ஸ்ரீ அரவிந்தம்.

மனைவி : எண்ணம், செயல், ஆனந்தம், மூன்றும் சேர்ந்தது வாழ்வின் முழுமை. மூன்றும் ஒரே சமயத்தில் நிகழ்கின்றன. எண்ணமே செயல், செயலே ஆனந்தம், ஆனந்தமே எண்ணம். நாம் மனத்தால் செயல்படுவதால் இவற்றைப் பிரித்துவிடுகிறோம். பிரிக்காவிட்டால் மனம் செயல்பட முடியாது.

பார்ட்னர் : உதாரணம்

மனைவி : வெளிநாட்டிலிருந்து மகன் திரும்பவந்தால், சொல்லாமல் வந்தால், பார்த்ததும் ஆச்சரியம் நம்மை மலர வைக்கிறது. எண்ணம் தோன்றுவதில்லை, என்ன செய்கிறோம் என நினைப்பதில்லை, தெரிவதில்லை. "எனக்கு ஒரே சந்தோஷம், ஒன்றுமே தோன்றவில்லை'' என்பது எண்ணம், செயல், ஆனந்தம், மூன்றும் ஒன்றாவது.

பார்ட்னர் : புரிகிறது.

மனைவி :பொதுவாக அப்படியிருப்பதில்லை. எப்படி வந்தான் எனதெரிவது செயல் தெரிவதாகும்.

பார்ட்னர் :மூன்றும் ஒன்றாக இருப்பது சைத்தியப்புருஷன், ஸ்ரீ அரவிந்தம். மனைவி : அது முழுமை. ஒரு தரமாவது அனுபவிக்கவேண்டும்.

கணவர் : எல்லாச் செயல்களும் அப்படியிருப்பது யோகம்.

மனைவி : மனம் மேலேயிருந்தால் பிரிந்து செயல்படும்.

பார்ட்னர் : சைத்தியப்புருஷன் மேலேயிருந்தால் ஆனந்தம் செயலாக, எண்ணமாக, அவற்றுள் கலந்துவிடும். அது தெய்வீக உணர்வு.

மனைவி : சமர்ப்பணம் முழுமையாகும் பொழுதுள்ள உணர்வு அது.

கணவர் : அப்படியென்றால் சமர்ப்பணத்திற்கும் எனக்கும் காத தூரம்.

மனைவி : பக்தி, நம்பிக்கையிருந்தால் ஒரு செயலில் காணலாம்.அதைக் காணும் நேரம் நமக்கு இறைவன் வரும் தருணம். அது இறைவன் வரும் தருணமன்று, நம் வாழ்வின் எல்லைக்குட்பட்ட தருணம்.

கணவர் : அது வந்தபின், அது power plantஇல் வரவேண்டும்.

பார்ட்னர் : Power plant வந்ததால்தான் நமக்கு பக்தி ஏற்பட்டுள்ளது. நமக்கு ஆதாய மனப்பான்மை.

மனைவி : அது பிரிந்தால், அதைக் கடந்து சமர்ப்பணம் பலிக்கும்.

கணவர் : மனம் ஆதாயத்தைத் தாண்டிப் போக மறுக்கிறது.

மனைவி : ஆதாயம் என்பது சரி. ஜடம் என்று பார்த்தால் தத்துவம் புரியும்.

கணவர் : எது ஜடம்?

மனைவி : விஷயம் என்று வந்ததும் மனம் விஷயத்திலிருந்து எண்ணத்தைப் பிரிக்கிறது என்கிறோம். மனம் ஜடமானால், மனம் விஷயத்திலிருந்து ஜடத்தைப் பிரிக்கிறது. ஜடத்தை ஆதாயம் என நினைக்கிறோம்.

பார்ட்னர் :நாம் ஜடமாக இருப்பதால் ஜடம் புரிகிறது. மனமாகவும் ஆகவில்லை.

மனைவி : சரி

பார்ட்னர் : எண்ணமற்ற செயல் சிறந்தது. ஆனந்தமே எண்ணமாகவும், செயலாகவும் முழுமை பெறுகிறது.

மனைவி : விஷயம் என்பது ஆனந்தம், ஆச்சரியம். செயலும், எண்ணமும் அதனுள் உள்ளது

பார்ட்னர் : எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என்பது அதுதானா?

மனைவி : எண்ணம் எழாமல், செயல் தெரியாமல் எழும் ஆனந்தம் முழுமை.

பார்ட்னர் : தன்னை மறந்த பரவசம்.

மனைவி : தன்னை மறந்த பரவசம் சரி. தானறிந்த பரவசம் முழுமை. தன்னை மறந்தது unconscious ஆகக் கூடாது.

பார்ட்னர் : Conscious Ananda is complete act. அன்னை நினைவு ஆனந்தமானால் அதனுள் நம் ஆனந்தமும், செயலும், எண்ணமும் அடக்கம். அழியாத நினைவு தவறாத சமர்ப்பணம். நினைத்துச் செய்வது பகுதி. தோன்றும்முன் செய்வது முழுமை. நினைவு மையம் மனத்திலிருந்து நெஞ்சுக்குப் பின்னால்போய் நிலைக்கவேண்டும்.

மனைவி : செயல் வாழ்வு, நினைவு யோகம்.

பார்ட்னர் : நாம் வாழ்ந்தாலும், யோகம் செய்தாலும் இருக்க வேண்டிய நிலை அதுவே.

மனைவி : தீயசக்தி மாறி பக்தி பெறுவது, வாழ்வில் விலக வேண்டியது விலகுவதாகும். நடைமுறையில் பெரிய தலைகள் உருளும்.

கணவர் : அது மரணமில்லையா?

மனைவி : நமக்கு மரணம், வாழ்வில் உயர்ந்த ஜீவியம் உதயமாவதாகும்.

கணவர் : பயமாக இருக்கிறது.

பார்ட்னர் : பயம் சரியில்லை.

மனைவி : பயம் சிறியது, ஆனந்தம் பெரியது. எண்ணத்தைக் கடந்து செல்வது முழுமையானால் மனத்தைக் கடப்பதாகும்.

பார்ட்னர் : மனத்தைக் கடந்தால் சத்தியஜீவியமாயிற்றே.

மனைவி : ஆமாம்.

பார்ட்னர் : நமக்கு முழுமையில்லை, முழுமை தெரியாது. எண்ணம் மனம், முழுமை சத்தியஜீவியம்.

கணவர் : சுலபமாகத் தோன்றுகிறதே.

மனைவி : செய்வதற்கு அவ்வளவு சுலபமன்று. சுலபமாகச் செய்தால் சித்தி. அதைவிட அருள் சித்தித்தது என எடுத்துக் கொள்ளலாம்.

பார்ட்னர் : சித்தி நம் முயற்சி, அருள் ஆண்டவன் தருவது.

மனைவி : ஆமாம். அருள் பெறுவது சித்தி. சித்தி பெறுவது அருளால்.

கணவர் : கேட்க நன்றாக இருக்கிறது.

மனைவி : அதுவே மனிதனுக்குப் பெரிய விஷயம்.

பார்ட்னர் : புரிவது, கேட்பது, கேட்க ஆசைப்படுவது, ஆகியவை நமக்கு முடிவான கட்டங்கள். நடப்பது அன்னையால் மட்டும் நடக்கிறது. Power plant அரை நிமிஷம்கூட மனத்தைவிட்டு அகலாதது கொஞ்ச நாழியாக மனத்தில் வரவில்லை.

மனைவி : மனத்தில் வரவில்லை எனில் அன்னை எடுத்துக் கொண்டார்.

கணவர் : நம்மையே அன்னை எடுத்துக்கொண்டால் நல்லது.

மனைவி : கொடுத்தால் அன்னை எடுத்துக்கொள்வார்.

பார்ட்னர் : புரிவதற்கும், செய்வதற்கும் ஏகப்பட்ட தூரம்.

மனைவி : வாழ்வுக்கும், அன்னைக்கும் உள்ள தூரம்.

பார்ட்னர் ஒரு பார்ட்டிக்குப் போயிருக்கிறார். அங்கு வந்த பெரிய மனிதர்களில் 10,000 பேர்கள் வேலை செய்யும் கம்பெனி முதலாளி ஒருவர். அது நெடுநாளைய கம்பெனி. இப்பொழுது தொழிலாளிகள், சர்க்கார் ஆதரவோடு அராஜகம் செய்கிறார்கள். இதுவரை முதலாளிகள் போலீஸ், சர்க்கார் பணத்தாலும், தொழிலாளிகளை மடக்கினர். இனி அதற்கு வழியில்லை. அன்று முதலாளி செய்ததை இன்று தொழிலாளிகள் செய்கிறார்கள். முதலாளி கதிகலங்கி இருக்கிறார். பாங்க் சேர்மன் மற்றும் சில நண்பர்கள் பார்ட்னரை அறிவார்கள். பொதுவாகப் பார்ட்னர் பேசியதிலிருந்து அவர்கள் சில விஷயங்களைப் பின்பற்றிப் பலன் பெற்றிருக்கின்றனர். அப்படி 2, 3 பேர்கள் பார்ட்னரைச் சூழ்ந்துகொண்டு இந்த முதலாளிக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா எனக் கேட்டனர்.ஏற்கனவே சில கட்டங்களில் பார்ட்னர் சொற்கள் இவர்கள்மூலம் அவருக்கு எட்டி நிலைமை சீர்திருந்தியதை அவர்கள் பார்ட்னரிடம் கூறவில்லை. பார்ட்னருக்குப் பதில் தெரியும். விபரம் தெரியாமல் தத்துவம் பேசும் விஷயமில்லை இது. தொழிலாளிகள் தேதி குறித்துவிட்டனர். அதற்கு இன்னும் 7 நாட்களிருக்கின்றன. இந்த நேரம் இப்பெரு முதலாளி பார்ட்டிக்கு வந்திருப்பது ஆச்சரியம். இதுபோன்ற இடங்களில் அவருக்கு மறைமுகமாக advice விஷயம் கிடைப்பதுண்டு. அதனால் வந்திருக்கிறார். பார்ட்னர், "நிச்சயமாக சத்தியம் ஜெயிக்கும். அதில் சந்தேகமில்லை'' என்று தம் நண்பர்களிடம் கூறியுள்ளார். அந்த முதலாளிக்கு இந்தச் செய்தி போயிருக்கிறது.அவர் அதை ஏற்றுக்கொண்டார். தொழிலாளிகள் குறித்த தேதியை வரையறையின்றி ஒத்திப் போட்டுவிட்டனர். அதனால் பார்ட்னர்மூலம் தகராற்றைத் தீர்க்கலாம் என்ற நம்பிக்கை முதலாளிக்கு வந்துவிட்டது.பார்ட்னரைப் பார்க்க விரும்பினார். பார்ட்னர் போகவில்லை.முதலாளியே பார்ட்னரை வீட்டில் வந்து சந்திப்பதாகக் கூறியபொழுது பார்ட்னர் 3 மணி அவகாசம் கேட்டு எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்.இத்தனையும் கூறியபின் என்ன செய்யலாம் எனப் பார்ட்னர் கேட்டார்.

தாயார் : தகராற்றைத் தீர்க்கலாம். ஆனால் நாம் அங்கு நேரடியான தொடர்புகொள்ளக் கூடாது. தகராறு தீர்ந்தால் நம்மை அடியோடு மறந்துவிடுவார்கள். நமக்குக் கஷ்டம் வரும்.

பார்ட்னர் : என்ன சொல்லலாம்?

தாயார் : வழி சொல்லலாம். அத்துடன் விலகிக்கொள்ள வேண்டும்.

இப்படி இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, முதலாளி பார்ட்னரைத் தேடிக்கொண்டு வந்துவிட்டார். பார்ட்னர், கணவர், மனைவியை அறிமுகப்படுத்தினார். இவர்கள் மூலமாகவே தான் அன்னையை அறிந்தேன் என்றவுடன் முதலாளி கணவர் பக்கம் திரும்பிவிட்டார். கணவர் மனைவியைக் காண்பித்தார்.

முதலாளி : இத்தகராறு தீருமா?

தாயார் : அன்னையை நம்பினால் தீரும். நம் பக்கம் நியாயம் இருந்தால் தீரும்.

முதலாளி : என்ன செய்ய?

தாயார் : நியாயத்திற்குப் புறம்பான வழியை விலக்கி பிரார்த்தனை செய்தால் பலிக்கும்.

முதலாளி : தேதி ஒத்திப்போட்டவுடன் எனக்கு நம்பிக்கை வந்தது.

(பார்ட்னரை நோக்கி) என்னுடன் கம்பெனிக்கு வருகிறீர்களா?

பார்ட்னர் : எனக்கு உங்கள் விபரம் தெரியாது. நான் வந்து என்ன செய்வேன்?

முதலாளி : அம்மா வருவார்களா?

தாயார் : யாரும் வேண்டாம். விஷயம் கூடிவரும்.

கொஞ்ச நாழிகை பேசிக்கொண்டிருந்துவிட்டு முதலாளி போய்விட்டார். மறுநாள் பேப்பரில், "தொழிலாளிகள் இரு கட்சியாகப் பிரிந்து ஒரு கட்சியை சர்க்கார் ஆதரிப்பதாகவும், அதனால் ஸ்டிரைக் வாபஸ் ஆகிவிட்டதாகக்' கூறியது. பொதுவாகக் காரியம் முடிந்துவிட்டால், "முடிந்தது என' பலன் பெற்றவர் சொல்வது வழக்கம் இல்லை. இந்த முதலாளியும் சொல்லவில்லை. ஆனால் 1 வாரம் கழித்து பார்ட்னருடன் தொடர்புகொண்டு மேலும் அன்னையைப் பற்றி அறிய விரும்பினார். தாயார், "பார்ட்னர் முதலாளியைப் போய்ப் பார்க்கக் கூடாது. அவர்தான் இவரை வந்து பார்க்கவேண்டும்' என்று முடிவாகக் கூறியதால் பார்ட்னர் போகவில்லை. அதன்பிறகு முதலாளி பல முறை போனில் பேச முயன்றபொழுது பார்ட்னர் வீட்டிலில்லை. அது விஷயமாக மூவரும் கலந்து ஆலோசித்தனர்.

கணவர் : முதலாளி நாட்டிலேயே பெரியவராயிற்றே, நாம் எப்படிப் போகாமலிருக்க முடியும்?

தாயார் : நம்மை நாம் என நினைத்தால் முதலாளியைப் போய்ப் பார்ப்பது சரி. முதலாளி அன்னையைப் பார்க்க வேண்டுமானால், அன்னை போகக் கூடாது.

பார்ட்னர் : நமக்கு கர்வம் வரும் இடமாயிற்றே.

தாயார் : கர்வமில்லாமல் அடக்கமாக இருப்பது நம் பங்கு.

கணவர் : ரொம்பக் கடினம்.

தாயார் : அடக்கம் உண்மையானால் கடினமாக இருக்காது. முதலாளி நம்மைத் தேடி வரவேண்டும் என்ற எண்ணம் எதிர்பார்ப்பாகும். அது வந்தால் போய்ப் பார்ப்பதே மேல். நமக்குள்ள பலம் ஒன்றுதான். உலகம் அர்த்தமில்லாமல் பெரியது என நினைப்பதை நமது அன்னை ஞானம் பெரியதன்று என அறிகிறது.

பார்ட்னர் : இந்தத் தத்துவம் நான் படித்திருக்கிறேன். சரியாகப் புரியவில்லை. சூரிய மண்டலமும், எறும்புப் புற்றும் ஒன்று என்பது எப்படி?

தாயார் : நமது முகம் வளைந்த கண்ணாடியில் பெரியதாக வளைந்து தெரிந்தால், இது தோற்றம், உண்மையன்று எனத் தெரிவது எளிது.

கணவர் : முகம் மாறாமலிருப்பது தெரிகிறது. சூரிய மண்டலம் பெரியதாயிற்றே.

தாயார் : பிரம்மத்தின் பார்வைக்கு, சூரிய மண்டலம் பெரிதன்று. இது வாதம். வாதம் புரியும், அனுபவம் வேறு. வாதத்தை மனம் ஏற்றால் அதே அனுபவம் எங்குக் கிடைத்தாலும் பலன் தரும்.

பார்ட்னர் : வேறு உதாரணம்.

தாயார் : தேர்தலில் ஜனாதிபதிக்கு ஓர் ஓட்டுதான். தேர்தலில் அவர் சாதாரண குடிமகனே. வாதம் மனத்தெளிவு தரும். டாக்டருக்குப் பெரியவர், சிறியவர் இருவரும் நோயாளிகளே.

பார்ட்னர் : அது திருப்தியாக இருக்கிறது. அதை ஏற்கலாம். அதனால் பெருமைப்படாலிருப்பது கடினம்.

தாயார் : புரிவது அறிவு, அடங்குவது தெளிவு, புரிவதைக் கொண்டு மனம் தெளிவை நாடினால் அடக்கம் வரும். இந்த ஸ்டிரைக் நின்றதும், காணாமல் போன ரூ.100/- கிடைப்பதும் ஒன்றே. ஸ்டிரைக் முதலாளிக்குப் பெரியது, நமக்குப் பெரியது, அருளுக்கு அன்று.

கணவர் : அப்படியானால் power plantநாம் பெறும் கமிஷன் பெரிதன்று.

தாயார் : பெரிதன்று என அறிந்தால் அது வரும். பெரிது என நினைத்தால் தூரப் போகும்.

பார்ட்னர் : பணம், பதவி பெரிதென நினைப்பவர் சிறிய மனிதர் என்றால் அவர்களிடம்தான் அவை ஏராளமாகச் சேருகிறது.

தாயார் : அது போற்றுவதால் வரும் வெற்றி. அப்படி வரும் பணமும், பதவியும், அவர்கள் மனம் போலவேயிருக்கும். நாம் சொல்வது ஞானத்தால் வருவது. நேருவுக்குப் பதவி வந்ததுபோன்றது.

கணவர் : துரைசாமி அய்யர் 1920 வாக்கில் ஸ்ரீ அரவிந்தருக்கு இலட்ச ரூபாய் கொடுக்க முன்வந்ததுபோன்றது.

பார்ட்னர் : நாம் தேடாதது, நமக்குப் பெரிய விஷயம் வரவில்லையா?

கணவர் : பெரியது பெரியதுதான், சிறியது சிறியதுதான். நீ சொல்வது சிறியது பெரியதாவது.

பார்ட்னர் : எந்த நிலைப் பிள்ளைகள் எந்த உத்தியோகத்திற்கு வருகிறார்கள் என நாம் பார்க்கிறோம்.

கணவர் : ஆமாம், அவை உலகில் நடக்கின்றன.

தாயார் : உலகம் மாறியபின் மனிதன் மாறுவது அது. நாம் சொல்வது மனிதன் மாறுவதால் உலகம் மாறுவது.

கணவர் : சரி, சரி.

பார்ட்னர் : இந்த முதலாளிக்கு என்ன சொல்வது?

தாயார் : மற்றவர்க்குச் சொல்வதே அவருக்கும் சொல்ல வேண்டும்.

கணவர் : நான் யோகம் செய்யத் தயாரில்லை.

பார்ட்னர் : யோகத்திற்கும், யோக வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசத்தைப் பலமுறை படித்திருக்கிறேன்.

கணவர் : எத்தனை முறை படித்தாலும் பயமாக இருக்கிறது.

தாயார் : சத்தியம், நிதானம், பரநலம் தவறாகுமா? பொய், அவசரம், சுயநலம் சரியாகுமா?

கணவர் : நீ சொல்வது யோகி செய்வதில்லை, யோகமில்லை எனக் கூறுவாயா?

பார்ட்னர் : வாழ்வனைத்தும் யோகம் என்றபின், எப்படி யோகமில்லை என்பது?

தாயார் : வாழ்வா, யோகமா என்பதைவிட, சரியா, தப்பா எனப் பேசலாம்.

கணவர் : அன்னையை வாழ்விற்காக ஏற்கலாம், யோகத்திற்காக ஏற்க முடியாது.

பார்ட்னர் : கல்லூரி மாணவனுடன் சிறு வயதில் படித்த கடைப் பையனை கவனித்தால் இன்று இருவரும் ஒத்துப்போக முடியாது. ஒத்துப்போக உயர்ந்த பண்பு தேவை. பெரிய இடத்திற்குப் போன சிறிய மனிதர்களில் நல்லவர்களை எடுத்து யாருடனாவது அவர்கள் சிறு வயது நண்பர், உறவினர் இருக்கிறார்களா, எத்தனை பேர் தேறுவார்கள் எனப் பார்த்தால் புரியும். நான் அன்னையை அறிந்த ஆரம்பத்தில் செய்த ஆராய்ச்சியிது.

கணவர் : என்ன சொல்கிறீர்கள்?

பார்ட்னர் : சிறியதும், பெரியதும் ஒத்து வாரா. ஒன்று பெரியது சிறியதைக் கைவிடவேண்டும் அல்லது சிறியது பெரியதாக வேண்டும். வேறு வழியில்லை.

தாயார் : சர்க்கார் உத்தியோகம், கம்பெனி வேலையிலிருந்து மாறுபட்டது.ஆபீஸ் வேலை, கூலிவேலையுடன் சேர்ந்து வாரா. ஆசாரமான வாழ்வும், அனாசாரமும் சேரா. படிப்பும், அறியாமையும் ஒத்துப் போகாபணமும், ஏழ்மையும் இணையா. உயர்ந்ததும், தாழ்ந்ததும் பிரிந்து நிற்கும். வாழ்வில் உயர்ந்தால் யோக வாழ்வு, அன்னை வாழ்வு.

உயரவேண்டும் என்பவர், தாழ்ந்ததைக் கைவிட முன்வர வேண்டும்.

அன்னை வாழ்வு, சத்தியமான, உயர்ந்த, தூய்மையான, ஒளிமயமானது.

அதனுடன் பொய், அவசரம், பொறாமை, எளிமை, கறுப்புக்கு இடமில்லை.

யோகம் செய்ய இவையெல்லாம் போதா.

வாழ்வை நல்லது, கெட்டது எனப் பிரித்தால் நல்லதின் அடி மட்டத்தில் அன்னை வாழ்வுள்ளது, உச்சியில் யோகமுள்ளது.

யோகம் நமக்குரியதன்று. சமர்ப்பணமில்லாமல் யோகமில்லை. நமக்குச் சமர்ப்பணம் வாராது. உள் மனம் போகாமல் யோகமில்லை. மௌனமில்லாமல் யோகமில்லை. யோகத்திற்கும் நமக்கும் தூரம். யோகம் எங்கே வந்தது?

நல்ல வாழ்வை அன்னை வாழ்வென்கிறோம். தவறு, மட்டம் கூடாது என்பது யோக வாழ்வு. உயர்ந்தது உச்சக்கட்டத்திருக்க வேண்டும் என்பது யோகம்.

தப்பு ருசிப்பது மனித வாழ்வு.

தப்பு ருசிக்கக் கூடாது என்பது நாம் கேட்பது.

இது யோகமில்லை.

தப்பு ருசிக்காவிட்டால் யோகம் ஆரம்பிக்கவும் முடியாது.

அதிர்ஷ்டம் வேண்டுமெனில் அசிங்கம் கூடாது.

அசிங்கம் ருசித்தால் அதிர்ஷ்டமில்லை.

குறையிருப்பது வேறு, குறையை வலியுறுத்துவது வேறு.


 

பார்ட்னர் : கோபம் வேறு, கோபம் சரி எனப் பேசுவது வேறு. அது தவறு. அவசரம் நல்லது எனப் பேசுபவருண்டு. அது ஏற்றுக்கொள்ள முடியாது. கடுமை உயர்ந்தது என நினைப்பவர் தவறு என்பது மட்டுமன்று,தீமையுமாகும்

தாயார் : குறை எல்லோர்க்கும் உண்டு. குறை உயர்ந்தது எனப் பேசுபவர் குறைவு, அவர் தவறு செய்பவர் ஆவர். இலஞ்சம் வாங்குவது சரி, அவசியம் எனப் பேசுவது போலிருக்கிறது.

பார்ட்னர் : அவர்கட்கெல்லாம் ஏதோ ஒருவகையில் ஏழ்மையிருக்கும்.

குறை, பற்றாக்குறையைத் தரும். பற்றாக்குறை, குணக்குறை

விலக்கில்லாத விதியிது.

கணவர் : யோசனை செய்தால் வறுமை என்பது குணக்குறையாக இருக்கிறது. சரி, ஆயிரம் குறைகளுள்ளவனுக்குப் பணம் பெருகுகிறதே.

பார்ட்னர் : அவனுக்குச் சம்பாதிக்கும் திறமையிருக்கிறது.

தாயார் : திறமையுமில்லாதவனுக்குக் குறையிருந்தால் வறுமை உண்டு. அன்னை திறமையுமில்லாதவனுக்குக் குறை இல்லாவிட்டால் வசதி தருகிறார்.

பார்ட்னர் : வாழ்வில் குறையில்லாதவனுக்குத் திறமை இல்லாவிட்டாலும் வறுமையுண்டு. வாழ்வில்லாததை அன்னை அன்பர்க்குத் தருகிறார்.

கணவர் : ஆசாரமானவர் அனைவரும் சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுகிறார்கள்.

தாயார் : அவர்கள் எந்தத் திறமையுமில்லாதவர்கள்; எல்லாக் குறைகளும் உடையவர்கள். அவர்களுடன் இருந்தவர் பலர் திறமையால் சம்பாதிக்க ஆரம்பித்தவுடன், ஆசாரத்தைக் கைவிட்டனர். விடவில்லை எனப் பேசுவர். நடைமுறை வேறு.

பார்ட்னர் : ஏற்கனவே வியாதி வந்தாலும், நஷ்டம் வந்தாலும், கஷ்டம் வந்தாலும், எது வந்தாலும் கர்மம் என்கிறோம். இனி அதற்குப் பதிலாக குணக்குறை எனக் கூற வேண்டும்.

தாயார் : அதைவிடக் குணக்குறையை வலியுறுத்துவது எனக் கூறலாம். மதர் வேண்டுமா, யோகம் வேண்டுமா, அருள் வேண்டுமா என நான் கேட்கவில்லை. அதிர்ஷ்டம் வேண்டுமா, குணம் வேண்டுமா, நல்லது வேண்டுமா எனக் கேட்கிறேன்.

கணவர் : இப்படிச் சொல்வது வேறு.

பார்ட்னர் : சில்லரையாக இருப்பதை நம்மால் விடமுடியவில்லை.

தாயார் : அன்னையை ஏற்றால் சில்லரையாக இருக்க முடியாது,

திருட்டுத்தனம் செய்ய முடியாது, பொய் சொல்லாமல் இருக்க முடியாது, கொடுமை செய்யாமலிருக்க முடியாது என விழித்துக்கொண்டு கேட்கும்

கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டாம். விஷயம் எளியது,

. தவறு, மட்டம், குறைவுக்கு இங்கு இடமில்லை.

. நல்லது அவசியம். Human goodnessமனிதனுக்கு நல்லது அவசியம்.

. Pure goodness தூய நல்லது யோகத்திற்கு அவசியம். அதை மனிதனிடம் கேட்கவில்லை.

இதுவரை நடந்தவை பிரம்மாண்டமானவை.

நமக்குமுன் உள்ளவை இரண்டு,

1) பெரும்பாடுபட்டு வந்ததை நிறைவேற்றுவது.

2) முழுப்பாடுபட்டு இதை நிறைவேற்றித் தொடர்வது.

கணவர் : இரண்டாவதைச் செய்வோம்.

பார்ட்னர் : மூன்றாவதாக ஒன்றைச் சொல்லலாமா? இரண்டாவது நிறைவேறும்படி முதல் கட்டத்தை நிறைவேற்ற வேண்டும்

தாயார் : கேட்க நன்றாக இருக்கிறது. ஒவ்வொன்றிற்கும் உள்ள நிபந்தனை தெரிவது நல்லது.

பார்ட்னர் : அதைச் சொல்லுங்கள்.

தாயார் : இதுவரை எவரும் முதற்கட்டத்தையே செய்யவில்லை. எவரும் செய்யாததை நாம் செய்யவேண்டும்.

கணவர் : மேலும் நிபந்தனைகள் என்ன?

தாயார் : 1) எது நடந்தாலும் நாம் பொறுப்பு ஏற்கவேண்டும்.

2) மனம் distort ஆகக் கூடாது.

3) கஷ்டங்களை வாய்ப்பாக அறியவேண்டும்.

கணவர் : இவையெல்லாம் தெரியும்.

தாயார் : செய்வதற்கா? நாம் அடிப்படையில் மாறவேண்டும்.

கணவர் : நான் மாற விரும்புகிறேன்.

தாயார் : இந்தக் கண்ணோட்டத்தில் கடந்த சில மாதங்களாக நடந்தவற்றைக் கருத முடியுமா? அதைச் செய்தபின் மற்றவற்றைக் கண்போம். நம்மிடம் சமீபத்தில் ஒருவன் பணம் கேட்டான். நமக்குப் பணம் வாங்க அபிப்பிராயம் என அதை எடுத்துக்கொள்ள முடியுமா?

பார்ட்னர் : அது சரி, அப்படியில்லை. எனக்குப் பிறர் பணம் வாங்குவது தவறாகத் தெரியவில்லை. அதற்கு ஒருவன் நம்மிடம் பணம் கேட்பானா?

கணவர் : அதையும் ஏற்று மனத்தைச் சோதனை செய்துவிட்டுப் பேசுகிறேன்.

தாயார் : இது நல்ல சகுனம்.

பார்ட்னர் : மேலும் முக்கிய விஷயமிருப்பதாகத் தோன்றுகிறது.

தாயார் : ஆமாம்.

பார்ட்னர் : சொல்லக் கூடியதா?

தாயார் : சொல்லாமல் தெரியவேண்டியது.

கணவர் : அதையும் வரும் நாட்களில் தெரிந்துகொள்ள முயல்கிறேன்.

கணவரும், பார்ட்னரும் போய்விடுகிறார்கள். தாயார் தம்மைப் பற்றி யோசனை செய்கிறார். வந்துள்ள வாய்ப்புகட்குப் போதுமானதைத் தாம் செய்தோமா எனச் சிந்திக்கும்பொழுது தம் மனம் பணத்தை ஆதாயமாக நினைக்கிறது, அன்னையை நம்பினால் நிறைவேறும் என்பது தம் நிலை. இது ஆதாய மனப்பான்மை, கூடாது, என்று புரிகிறது. அன்னையை அன்னைக்காகத் தாம் வேண்டி நாடாதபொழுது அடுத்தவர்களைக் கேட்க நமக்கென்ன உரிமை உண்டு என நினைக்கிறார். அதே சமயம் ஏதாவது முடிந்தால் போதும் என மனம் கூறுகிறது. தாம் உள்ளே வேலை செய்யவேண்டிய இடம் அதுவே என பளிச்செனத் தோன்றுகிறது. கணவர் அண்ணார் மகளுக்கு வரன் தேடுகிறார்கள். ஓர் ஆபீசரைப் பார்க்கும் வசதியில்லை. கிளார்க்தான் தேடுகிறார்கள். அது பாங்கில் இருந்தால் தேவலை. இதுவரை அமையவில்லை. திடீரென ஒரு மாப்பிள்ளை வந்தது. அவனுக்குத் தற்சமயம் வேலையில்லை. I.A.S. பரீட்சை பாஸ் செய்துவிட்டான். நேர்முகத் தேர்வுக்குப் போயிருக்கிறான். தெரிந்த இடம்தான். பையன் கெட்டிக்காரன். செலக்ஷன் ஆகலாம். நம் வீட்டில் பெண் பார்க்கமாட்டார்கள். எப்படி வந்தார்கள் எனத் தெரியவில்லை. பிடித்தமாகப் பேசினார்கள். முடிந்தால் நமக்கு power plantக்குச் சமம்.

கணவர் : நான் பையன் I.A.Sபாஸ் செய்துவிட்டதாகக் கேள்விப் பட்டேன். ரிஸல்ட் வந்துவிட்டது எனக் கூறுகிறார்கள். பெண் பார்க்க வருமுன் பாஸ் செய்ததாகத் தெரிகிறது. அப்படியானால் ஏன் பாஸ் செய்தியைச் சொல்லவில்லை?

தாயார் : அது உண்மையானால் ரொம்ப பக்குவமான குடும்பமாகத் தெரிகிறது.

கணவர் : முடிவு குடும்பத்தில் பெரியவருடையது. அதற்காகக் காத்திருக்கிறார்களாம்? இவர்கட்குப் பிடிக்கிறதாம். இதற்கு என்ன அர்த்தம்?

தாயார் : அவர்கட்கு வரன் முடிந்தால் நமக்கு வந்தது, பலன் கைக்குக் கிட்டும்.

கணவர் : நான் அப்படிப் பிரார்த்திக்கட்டுமா? நமக்கு வருவது அவர்கட்குப் போய்விடுமா?

தாயார் : அதுவும் உண்மை.

கணவர் : பயமாயிருக்கு. விளக்கமாகச் சொல்.

தாயார் : நமக்குப் பலம் குறைவாயிருந்து வரன் பார்க்கப் பிரார்த்தனை செய்தால் அவர்கட்குப் பலிக்கும். நமக்குத் தவறும்.

கணவர் : அது வேண்டாம்.

தாயார் : அவர்கட்கு நம்மீதும், நமக்கு அவர்கள் மீதும் நல்ல எண்ணமிருந்தால் இரண்டு பேருக்கும் கூடிவரும்.

கணவர் : என்ன செய்யலாம்?

தாயார் : நல்லெண்ணம், சூழலின் கனம், இவற்றைப் பொருத்தது.

கணவர் : நல்லெண்ணமில்லை; சூழல் நீதான் சொல்ல வேண்டும்.

தாயார் : நமக்கும், அவர்கட்கும் நடப்பது தொடர்புண்டு.

கணவர் : பேசாமல் கவனிப்போமா?

தாயார் : என்ன செய்தால் இரண்டும் கூடிவரும்?

கணவர் : நமக்குக் கூடிவந்தால் போதும்.

தாயார் : அது சுயநலம். அப்படி நினைத்தால் நமக்கு வாராது.

கணவர் : அவர்கட்கு மட்டும் வருமா? என்ன சட்டம் இது? எரிச்சல் வருகிறது.

தாயார் : வரக் கூடாது.

கணவர் : வருகிறதே.

தாயார் : நம் எண்ணம், அவர்கள் அதிர்ஷ்டம், இரண்டையும் விலக்கிச் சமர்ப்பணம் செய்யலாம்.

கணவர் : அதுதான் முடியவில்லையே, அடுத்தாற்போல்.

தாயார் : பேசாமல் எரிச்சல்படாமலிருக்கலாம்.

கணவர் : நீ பேசுவது எரிச்சல் வருகிறது.

தாயார் : நான் பேசவில்லை.

கணவர் : நீ பேசவேண்டும்.

தாயார் : .................................

கணவர் போனபின் மனைவி சிந்தித்தார். சிந்தனை சமர்ப்பணத்திற்குத் தடை என்பதால் அதுவும் சரியில்லை. கணவர் ஆபீசில் ஒரு கிளார்க் வீட்டிலிருந்து வந்த செய்தி மனத்தை உறுத்தியது. அவனுக்கு உடம்பு முடியாது, வயிற்று வலி. கணவர் 5 மணிக்கு வந்து டிபன் சாப்பிட்டுவிட்டு ஆபீசுக்குத் திரும்பப் போய் 8 மணி, 9 மணிவரை வேலை செய்வார். சமயத்தில் 10 மணிவரை அரட்டை அடிப்பார். அவனுக்கு வீடு தூரம். சாப்பிடாவிட்டால் வலிஅதிகமாகும். ஹோட்டலில் சாப்பிட முடியாது, வசதியில்லை. இவராக அவனை அனுப்பியபின் அவன் வீட்டிற்குப் போய்ச் சேர நேரமாகும், வதைவான். அவன் படும் வேதனை இவருக்குத் தெரியாது. கிளார்க்கு தேவையில்லை, மரியாதைக்காக அவனை வைத்திருப்பார். அவன் பல வருஷமாக வதைகிறான். செய்தி மனைவிக்கு வந்தபின் கணவரைக் கலந்தாள். அப்படியொன்றுமில்லை என்கிறார். அவன் படும் வேதனை இவர் மனத்தில் படவில்லை. படவில்லையா, படட்டும் என வேடிக்கை பார்க்கிறாரா என மனைவிக்குத் தெரியவில்லை. மனைவியின் பிரார்த்தனையால் கிளார்க் மாற்றலாகிவிட்டான். நமக்கு இவ்வளவு பெரிய காரியம் நடக்கவேண்டுமானால், மனம் கடுமையாக இருந்தால் எப்படி நடக்கும் என்று அவருக்குக் கவலை. அவர் செய்யக் கூடியது எதுவுமில்லை. கணவருக்கு அப்படி ஒரு பிரச்சினையிருப்பதாகத் தெரியவில்லை. It is unconscious cruelty கண்மூடித்தனமான கொடூரம். அதைக் கணவரிடம் கேட்க முடியாது. தெருவில் பிள்ளைகள் நாய் வாலில் பட்டாசு கட்டிக் கொளுத்தி வேடிக்கை பார்ப்பதும் கணவர் மனமும் ஒன்றாகத் தெரிகிறது. கணவர் மீதுள்ள பாசத்தை எடுத்துவிட்டால், நாய் படும்பாடு இவர் படுவார்.

அவர் குணத்திற்கு அவர் படவேண்டியது சரி என்பதா? தான் அச்சுமையை ஏற்பதா? ஏற்றால் தனக்குப் பிரியமான பலன் கெட்டுவிடும். அடுத்தாற்போல் என்ன செய்வது? சமர்ப்பணம் இக்கட்டத்தில் நகரவில்லை. எப்படிச் சமர்ப்பணம் செய்யலாம் என்பது சிந்தனை. அதுவே சமர்ப்பணத்தைத் தடுக்கும். விஷயம் மனத்தைத் தொட்டவுடன் ஓர் எண்ணம் எழுமுன் சமர்ப்பணம் செய்யாவிட்டால், சமர்ப்பணமாகாது. ஓர் எண்ணமில்லை, ஒன்பது வருகிறது. யாரிடமும் சொல்லும் நிலையில்லை. அன்னை விட்டவழி என்றால், மனம் அலை பாய்கிறது. ஆழ்ந்து உள்ளே போகலாம் எனில் உள்ளே போக முடியவில்லை. T.V. பார்க்கத் தோன்றுகிறது. அப்படியே தியானம் வந்தது. தியானமா, தூக்கமா எனத் தெரியாமல் அயர்ந்துவிட்டார். எழுந்தால் கணவரும், அந்த கிளார்க்கும் நிற்கிறார்கள். அந்தக் கிளார்க்கிற்கு இப்பொழுது வீட்டிற்குப் பக்கத்தில் ஆபீஸ். வயிற்றுவலி சற்றுக் குறைந்துள்ளது. அவருக்குக் கணவர்மீது கோபமிருப்பதாகத் தெரியவில்லை. அது நம் பிரச்சினை தீரப் போதாதே. அந்தக் கிளார்க் படவேண்டியது அவர் பங்கு. அதற்கு நாம் என்ன செய்யலாம் என்று நினைக்கலாம் என்றாலும், கணவர் மாறாமல் நம் விஷயம் முடியாது. நமக்கு விஷயம் குறைவில்லை. ஆனால் ஏராளமாக நடக்க வேண்டியவை உள்ளன. எப்படிப் போவது? தியானத்தின்பின் மனம் அடங்கியது. ஆனால் பிரச்சினை என்ன ஆயிற்று எனத் தெரியவில்லை. இவையெல்லாம் எவருடனும் பேசும் விஷயங்களில்லை. தம் மனத்துடனும் வாதாடுவது தவறு என்று தோன்றியது. ஆனால் வாதம் மெல்லிய குரலில் மனத்தில் தூரத்தில் கேட்கிறது. அது அடியோடு நிற்கவேண்டும். அதற்குள் மனம் சில்லரையாக எதையாவது சொல்கிறது. எப்படியானாலும் நாளாக, நாளாக பதட்டம் மனத்தில் குறைகிறது. இப்படியேயிருந்தால் இன்னும் எத்தனை வருஷங்ளாகுமோ தெரியவில்லை. நாளாகும் என நினைப்பது அவசரம், அதுவும் கூடாது. அப்புறம் என்ன செய்ய எனக் கேட்கமுடியுமா? ஒரு பத்து நாளானவுடன் கணவர் அண்ணார் வீட்டிலிருந்து வரன் I.A.S மாப்பிள்ளை முடிந்துவிட்டது என்று செய்தி வந்தது.

கணவர் : நீ ஏதாவது செய்தாயா?

மனைவி : நீங்கள் என்ன செய்தீர்கள்?

கணவர் : எனக்கு பயமாயிருந்தது. நான் ஒன்றும் செய்யவில்லை.

மனைவி : சமர்ப்பணம் செய்ய முடியவில்லை என்று நான் சும்மா இருந்துவிட்டேன்.

கணவர் : சும்மாயிருந்தபொழுது வரன் கூடி வந்துவிட்டதே

மனைவி : சும்மாயிருந்தால், அருளுக்குத் தடையாக இல்லை எனப் பொருள்.

கணவர் : தடையாக இல்லாவிட்டால், இவ்வளவு பெரிய காரியம் நடந்துள்ளது. நாமே அருளைப் பெற்றால்....

மனைவி : அது பெரிய விஷயம்.

கணவர் : ஏன் நாம் அதை செய்யக்கூடாது?

மனைவி : ஏராளமாகச் செய்யலாம். சுத்தத்திலிருந்து ஆரம்பித்தால்,ஜடத்திலிருந்து ஆரம்பிப்பதாகப் பொருள், நல்லெண்ணம்வரை (நல்லெண்ணம் ஆத்மாவுக்குரியது) செய்யக் கூடியவை ஏராளம். எதைச் செய்தாலும் நல்லது. மனம் அடங்குவது மனம் நெகிழ்வதில் தெரியும். மனம் நெகிழ்ந்தால் மற்றவர் மலர்வார்கள். Life Response நடந்தபடியிருக்கும். பிறரை - குழந்தைகள் உட்பட - செய்யச் சொல்லக்கூடாது என்பதே சட்டம். எது செய்வதானாலும், நாமே செய்யவேண்டும், உள்ளே செய்யவேண்டும், நடப்பது நாம் எந்த அளவில் உண்மை எனக் காட்டும்.

கணவர் : எனக்குச் சமர்ப்பணம் செய்யத் தோன்றுகிறது.

மனைவி : அது சிறப்பு, முடிந்தால் நல்லது, என்னால் முடியவில்லை. சமர்ப்பணம் செய்ய முனைந்து முயன்று முடியவில்லை என்றாலும் காரியம் பெரிய அளவில் நடக்கின்றது. முழு அளவில் நடப்பதில்லை.சமர்ப்பணமாகாவிட்டால் செய்வதில்லை எனத் தீர்மானமாக இருந்தால், முயற்சி அடங்கி ஜீவனற்று "சப்' என்றாகிவிடுகிறது. அப்பொழுதும் காரியம் நடக்கிறது. இதுவரை நடந்தனவெல்லாம் சமர்ப்பணம் முடியவில்லை என நடந்தவையே. முடியவில்லை என்றபொழுது முடிந்ததைச் செய்வோம் என்றால் எதிராகப் போவதாகத் தெரியும். அந்தத் தோல்விக்கும் ஜீவனுண்டு. வெற்றிக்குரிய ஜீவன் முழுமையுடைய பெரியது, அது கிடைக்கவில்லை.

கணவர் : நாம் முழுமையான சமர்ப்பணத்தைச் செய்வது அவசியம்.

இச்சொல்லை அவர் முடிப்பதற்கும் பரணையில் சிறியவன் பெட்டிகளை  அடுக்கிக் கொண்டதிலிருந்து    ஒரு பெரிய கனமான அட்டைப் பெட்டி விழுவதற்கும் சரியாக இருந்தது. கணவர் தோளில் சற்று பட்டதே தவிர அடி முழுவதும் அவர்மீது விழவில்லை. நம்முடைய சக்திக்கு மீறிச் செயல்பட விரும்பினால் சகலமும் ஆட்டம் கொடுக்கும். கணவர் சட்டென விலகிவிட்டார். பதட்டம் அடங்க நாழியாயிற்று.அடங்கியபின் கேட்ட முதற்கேள்வி, "ஏன் இப்படி நடக்கிறது?''

மனைவி : தகுதியை மீறிச் செயல்பட முடியாது.

கணவர் : சமர்ப்பணம் நம்மை மீறியதா?

மனைவி : ஆம்.

கணவர் : சரி, சமர்ப்பணம் செய்ய எது தகுதி?

மனைவி : மனம் பதப்பட்டு, பக்குவப்பட்டு, பவித்திரமாகி, அடங்கி, அமைதியாக, அழகுறவேண்டும்.

கணவர் : துறவிக்கே இருக்காது போலிருக்கிறதே.

மனைவி : துறவி இல்லறம் நடத்துவது போன்றது. சமர்ப்பணம் செய்யும்பொழுது, மனத்தின் எண்ணம் இடம் கொடுக்காது. அது இடங்கொடுக்கும்பொழுதும் மனம் கூடவே தனக்கு வேண்டியதைக் கேட்டபடியிருக்கும். அது தடை. அதுவும் அடங்கியபின்னும் அதன்பின் உள்ள (physical vital urge) வேகம் மௌனமாக சமர்ப்பணத்தை மறுக்கும். அந்த வேகமே சமர்ப்பணத்தை விரும்புவது, சந்தோஷப்படுவது, சமர்ப்பணமாவதாகும்.

கணவர் : இத்துடன் முடிகிறதா?

மனைவி : இல்லை. இவ்வளவும் ஜீவியத்திற்குரியவை. இதைக் கடந்தது substance பொருள். அது மிகக் கடினம்.தொடவே விடாது.

கணவர் : நாமெல்லாம் எப்படித்தான் இதை மேற்கொள்வது?

மனைவி : "நாம்' என்று ஒன்று எல்லாக் கட்டங்களுக்கும் உண்டு. அது சமர்ப்பணத்தை உளமாரப் பிரியப்படுவது sincerity உண்மை. அந்த உண்மை எங்கிருந்தாலும் அதே நேரம் Force அங்குச் செயல்படும். அப்படி அருள் நம் வாழ்வில் செயல்படுவதால் நடப்பதே நாம் அறிவது. நாமாக முனைந்து செய்தால் பொதுவாக எதிரான பலன் வரும்.

கணவர் : நாமாக முனைந்து எல்லா நிலைகளிலும் Forceஐ வரவழைக்கும்படி நடக்கக்கூடாதா?

மனைவி : அதற்கு எல்லா நிலைகளிலும், sincerityஎல்லா நேரங்களிலும், எல்லா அளவுகளிலும் இருக்க வேண்டும். அவர்கட்கு பிரார்த்தனை தேவையில்லை, சமர்ப்பணமும் தேவையில்லை. அன்னை அழைக்காமல் வரும் நிலைகள் அவை.

கணவர் : நாமெல்லாம் உயர்ந்த மக்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, மட்டம், கழிசடை, புறம்போக்கு, உதவாக்கரை என உணர்ந்து, வெட்கப்பட்டு, மனம் மாறுதல் அவசியம் என்று தோன்றுகிறது.

மனைவி : அப்படி அன்னை சொல்வதில்லை. அதுதான் அவசியம். அப்படி உணரும்பொழுது நெஞ்சு நிறைவதைக் கண்டிருக்கிறேன்.

கணவர் : நாமுள்ள நிலையைப் பொருட்படுத்தாது அருள் ஓரிழையாகச் செயல்படுவதே நாம் இப்பொழுது பெறுவது.

மனைவி : ஆமாம்.

கணவர் : இப்படிச் செய்யலாமா? நமக்கே நாம் ரொம்ப மட்டமாக நடந்த நிகழ்ச்சி ஒன்றை எடுத்து இப்படி மாறிப் பார்க்கலாமா?

மனைவி : அது பெரும்பலன் தரும்.

கணவர் : அது ஆழ்ந்த தியானத்தில் கரைந்துவிடும் என்றாயே.

மனைவி : தியானமே நமக்கு வருவதில்லை, தூக்கம் வரும். தூக்கத்தைக் கடந்து மனம் உள்ளே விழிப்படைவது தியானத்தின் முதல் நிலை. அந்நிலையில் புலன் உதவியின்றி பார்க்க, கேட்க, நுகர, தொட, ருசிக்க முடியும்.

கணவர் : அந்நிலையில் அடுத்த அறையில் உள்ளவர் தெரியுமா?

மனைவி : தியானத்தின் நான்கு நிலைகளில் இது முதல் நிலை.நமக்கு எப்பொழுதாவது இதுபோல் தியானம் பலித்துள்ளதா? தியானம் என உட்கார்ந்தால் தூக்கம் வரும். அதைக் கடந்து எவரும் செல்வதில்லை.

அதனால் அன்னை தியானம் வேண்டாம் என்கிறார்கள். சமர்ப்பணம் செய் என்று கூறுகிறார்கள்.

கணவர் : தியானம், சமர்ப்பணம் எதுவுமே நம் போன்றவர்க்கு இல்லையா?

மனைவி : சமர்ப்பணம் மிகவும் கடினம் என்பது உண்மை. இன்று ஆதரவற்றவரை நினைத்துப் பார்த்தால், அவர்கள் பிரச்சினை நமக்கு அர்த்தமற்றிருக்கும். நம்மை அவர்களிடத்தில் வைத்துப் பார்த்தால் வாழ்வு பயங்கரமாக, கொடுமையாகத் தெரியும். அத்தனை பேரும் அக்கொடுமைக்குப் பலியாகி அழிந்து போகின்றனர். அதாவது சீரழிந்து போகின்றனர். அவர்களில் ஒரு சிலர் நிலைமையைச் சமாளித்து எழுந்து வந்து வெற்றி பெறுகின்றனர். அது சமர்ப்பணத்திற்குச் சமம். அவர்கட்குச் சமர்ப்பணம் பலிக்கும்.

கணவன் : மீண்டும் ஒரு முறை சமர்ப்பணத்தைச் சொல்லேன்.

மனைவி : நமக்கு வேண்டியதைக் கேட்பது பிரார்த்தனை. அன்னை கொடுப்பதை ஏற்பது சமர்ப்பணம்.

கணவர் : சரி, மேலும்....

மனைவி : அன்னை கொடுப்பது நல்லதாக இருக்கும் என நினைப்பது அன்னைமீது நம்பிக்கை.

கணவன் : அதோடு முடிகிறதா?

மனைவி : நமக்கு நல்லது வேண்டும். நாம் அதை அன்னையிடம் கேட்பதைவிட அன்னை எது கொடுத்தாலும் நல்லதாகவே இருக்கும் என நம்புவது அதிக நம்பிக்கை. அடுத்தாற்போல் எனக்கு நல்லது வேண்டும் என நினைத்து அதை அன்னை தருவார் என நினைப்பதைவிட அன்னை எது கொடுக்கிறாரோ, அதுவே எனக்கு நல்லது எனக் கருதுவது சமர்ப்பணம்.

கணவன் : எந்த ரூபத்திலும் "நாம்' இருக்கக் கூடாது என்று கூறுகிறாய்.

மனைவி : பகவான் வலி, ஆனந்தத்தைப் பற்றிக் கூறுவதை இங்குக் கருதலாம்.

. வலியும், சந்தோஷமும், உதாசீனமும் மேல் மனத்திற்குரியவை.

. மேல் மனம் நாமில்லை.

. நிலையான ஆனந்தம் அடி மனத்தில் உள்ளது.

. பழக்கத்தால் நாம் வலியை அனுபவிக்கிறோம், இது அவசியமில்லை.

. அடிபட்டால் வலிப்பது பழக்கம். அது மேல் மனத்தின் பழக்கம்.

. அடிபட்டால் ஆனந்தம் வெளிப்படும்படி நாம் மேல் மனத்தைப் பழலிக்கலாம்.

. வலியிலிருந்து விலகி நின்றால் வலிதெரியாது.

. விலகி நிற்கும் தபஸ்வியைவிட வலிக்குப் பதிலாக ஆனந்தம் அனுபவிப்பது பெரிய ஆனந்தம்.

சமர்ப்பணத்திற்கும் இது பொருந்தும். அன்னை கொடுப்பது நல்லதாக இருக்கும் என்பதைவிட அன்னை எது கொடுத்தாலும் அதை நான் நல்லதாகக் கருதுவேன் என்பது பெரியது.

கணவன் : எனக்குப் பிறர்மேல் நினைவு. அவர்கட்கு உதவி செய்ய ஆசை. அதுவும் தவறா?

மனைவி : நம் கடமையைச் செய்யாமலிருக்க நாம் நமக்கே சொல்லிக்கொள்ளும் சாக்கு அது.

கணவன் : இதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்?

மனைவி : கம்பெனி மனையில் 4 குடிசைகளைப் போட்டுக் கொண்டு கிளம்ப மறுத்தார்கள், பணம் கேட்டார்கள் என ஒருவர் கூறியது நினைவிருக்கிறதா?

கணவன் : அவர் என்னுடன் படித்தவராயிற்றே, நல்லாத் தெரியும்.

மனைவி : அவர் அப்படிப் பேசியபொழுது நான் அவரைக் கவனித்தேன்.

கணவன் : என்ன கண்டுபிடித்தாய்?

மனைவி : எனக்கு நிச்சயமாகத் தெரியாது. யூகமாகச் சொன்னேன்.

கணவன் : நீ அவரிடம் குடிசைகளைப் பற்றிப் பேசியது நினைவு இருக்கிறது. என்ன பேசினாய் என நினைவில்லை. அந்தக் குடிசைகள் போய்விட்டன.

மனைவி : என்னால் நிச்சயமாகக் கூறமுடியாது. நான் நினைத்தது சரியாகிவிட்டது.

கணவன் : சொல்லு, கேட்போம்.

மனைவி : அகம், புறம் என்ற கோணத்தில் அவர் பிரச்சினையைக் கவனித்தேன். இவர் மற்றவர்கட்கெல்லாம் உதவி செய்ய வேண்டும் எனப் பேசுவார்.

கணவர் : அவர் அதை மட்டும்தானே செய்துகொண்டிருக்கிறார். பிறர் வேலை என்றால் உடனே செய்வார்.

மனைவி : தன் கடமையைச் செய்யாதவரே பிறருக்கு உதவ முனைவார் என்பது சட்டம்.

கணவன் : அடப்பாவமே, அவர் நல்ல மனுஷன். ஏன் அப்படிச் சொல்கிறாய்?

மனைவி : நானாக அவையிரண்டிற்கும் தொடர்பு கொண்டேன்.

கணவன் : அவரிடம் சொன்னாயா?

மனைவி : எப்படிச் சொல்வது? அவர் அன்பரில்லையே.

கணவன் : நீ ஏதாவது செய்தாயா? குடிசைகள் கிளம்பி விட்டனவே.

மனைவி : இந்தத் தொடர்பு சரி என வைத்துக்கொண்டு பேசினேன். அவர் கேட்டுக்கொண்டார். என்ன செய்தார் எனத் தெரியாது. அவருக்கு நினைவு இருக்குமா எனவும் தெரியாது.

கணவர் : விவரமாகச் சொல்.

மனைவி : இறைவனை அணுகும் திறமையுள்ளவர்கள் தம் கடமையைச் செய்ய சோம்பேறித்தனத்திற்காகப் பிறருக்கு ஒத்தாசை செய்வார்கள்.

கணவர் : எது சோம்பேறித்தனம்?

மனைவி : இறைவனை நினைக்க இதைப்போல் ஏராளமான சக்தி தேவை.

கணவன் : புரியலை. ஆனால் குடிசைகள் கிளம்பியது ஆச்சரியமாக இருக்கிறது.

மனைவி : பிறருக்கு உதவி செய்யவேண்டும் என்பது (altruism) மனத்திற்கு இதமாக இருக்கிறது. அன்னையை நினைக்க, சமர்ப்பணம் செய்ய ஏராளமாகத் தியானம் செய்ய வேண்டும். அதற்குச் சோம்பேறித்தனம்.

கணவர் : சம்பந்தமில்லாமலிருக்கிறது.

மனைவி : பிறருக்குச் செய்வது எளிது, சொல்வது அதைவிட எளிது. கஷ்டம். நாம் அன்னையை நினைப்பது கஷ்டம். பிறருக்குச் சொல்லாமல் - என்ன அவர்கள் செய்யவேண்டும் என்று சொல்லாமல் - நாம் அதை எதற்குப் பதிலாகச் செய்கிறோம் என அறிந்து அதைச் செய்வது கடினம்.

கணவன் : இதை என் நண்பரிடம் கூறினாயா?

மனைவி : நான் சொன்னேன். அன்றைக்கும் நீங்கள் இதையே கேட்டீர்கள்.

கணவர் : எனக்கு நினைவில்லை.

மனைவி : அவருக்குச் சொன்னதை நானே என் வாழ்வில் நினைத்துப் பார்த்தேன். செய்தேன்.

கணவர் : எப்பொழுது குடிசை போயிற்று?

மனைவி : தெரியாது. அடுத்த முறை அவர் வந்தபொழுது கேட்டேன். குடிசைகளில்லை என்றார்.

கணவர் : அவர் என்ன செய்தார்?

மனைவி : அவர் சொல்லவில்லை, நான் கேட்கவில்லை.

கணவர் : உன் அபிப்பிராயம் என்ன?

மனைவி : இந்தத் தொடர்பு - பிறருக்குப் புத்திமதி சொல்வது, அவர் விஷயத்தில் குறுக்கிடுவது, குடிசை நம் மனையில் குறுக்கிடுவது - புரிந்தவுடன் குடிசையில்லை.

கணவர் : இது எப்படிப் புரியும்?

மனைவி : மாறுவது சிரமமில்லை. எங்கே மாறவேண்டும் எனத் தெரிவது கஷ்டம், நாளாகும் என அன்னை கூறுகிறார்.

கணவர் : இந்தச் சொல்லைக்கொண்டு அந்தத் தொடர்பை எப்படிக் காண்பது?

மனைவி : காண்பது sincerity உண்மை என்கிறார் அன்னை.

கணவர் : அது புத்திசாலித்தனமாயிற்றே.

மனைவி : ஜீவனின் புத்திசாலித்தனத்திற்கு sincerity உண்மை என அன்னை பெயரிட்டுள்ளார்.

கணவர் : இதுபோல் நம் மனத்தைச் சோதனை செய்யவேண்டும்.

மனைவி : நமக்குள்ள பிரச்சினைகள், வாய்ப்புகட்கு உள்ளே என்ன காரணம் எனத் தெரிய முயன்றால் கிடைக்கும்.

கணவர் : அப்படிப் புரியாது. யாராவது சொன்னால் புரியும்.

மனைவி : யார் சொன்னாலும் கேட்டுக்கொள்ளமாட்டோம். சொந்தமாகப் புரியவேண்டும். அது unconsciousness.

கணவர் : பிறருக்குப் புத்திமதி சொல்பவர், உதவி செய்பவருக்கு அன்னை அம்சம் உண்டு. அது வீணாகிறது என்று பொருளா?

மனைவி : ஆமாம்.

கணவர் : இந்தச் சட்டத்தை வேறிடங்களில் சோதனை செய்தாயா?

மனைவி : சட்டம் அன்னை எழுதியது. நமக்கு எது, எதைக் குறிக்கிறது என்று தெரியவேண்டும்.

கணவர் : சம்பந்தா, சம்பந்தமில்லாமலிருக்கிறதே.

மனைவி : ஒரு பிரச்சினையிருந்தால் சம்பந்தம் தெரியும்.

கணவர் : நம்ம விஷயத்தில் சொல்லேன்.

மனைவி : இரண்டு வருஷத்திற்கு முன் ஒரு பெரிய சந்தர்ப்பம் வந்ததே நினைவிருக்கிறதா?

கணவர் : இல்லை, சொல்லேன்.

மனைவி : நினைவே வாராததைச் சொன்னால் புரியாது. நினைவு வருவது அதிர்ஷ்டம்.

இரண்டு ஆண்டுகட்குமுன் கணவரை MLC யாக நிற்கச் சொன்னார்கள். இவருக்கு உத்தியோகத்தை ராஜிநாமா செய்ய அபிப்பிராயமில்லை. இவருடனிருந்தவருக்கு அந்த வாய்ப்பு பலித்து அவர் சிக்கிம் கவர்னராகிவிட்டார். அதைக் கணவர் இப்பொழுது கூறினாலும் நம்பமாட்டார்.

கணவர் : ஏன் சொல்லக்கூடாது?

மனைவி : நினைவு எப்பொழுதாவது வந்தால், அப்பொழுது சொன்னால் பலிக்கும். இப்பொழுது சொன்னால் நம்பிக்கை ஏற்படாது. நினைவு வரும் சந்தர்ப்பமும் போய்விடும்.

கணவர் : அப்படி ஒரு சட்டமிருக்கிறதா?

மனைவி : அவற்றை எல்லாம் அன்னை எழுதி வைத்து இருக்கிறார்கள். நான் அதை எல்லோரிடமும் சொல்வேன். எவரும் கேட்டுக்கொள்ள மாட்டார்கள், நிறுத்திவிட்டேன்.

கணவர் : நாம் சொன்னால் நமக்குப் பலிக்காதா?

மனைவி : பலிக்காது. அதைவிட நமக்குப் பலிப்பதைத் தடுக்க நாம் பிறருக்குச் சொல்கிறோம்.

கணவர் : இது பெரிய சட்டம்.

மனைவி : இந்தச் சட்டம் சக்தி வாய்ந்தது.

கணவர் : அவர் குடிசைகள் கிளப்பிவிட்டன....

மனைவி : அதை நான் புரிந்துகொண்டேன்.

கணவர் : எனக்குப் புரியவேண்டும்.

மனைவி : புரிவது அதிர்ஷ்டம், செய்வது அருள். வாழ்க்கையை நமக்கு வந்ததின் கண்ணோட்டத்தில் கவனித்தால்......

கணவர் : எல்லா நிகழ்ச்சிகளும் ஆளுக்கு ஒரு கதை சொல்கின்றன.

மனைவி : அது என்ன?

கணவர் : வந்தது பெரியது, காப்பாற்றுவது அவ்வளவு சுலபமன்று.

மனைவி : சொல்லுங்க.

தொடரும்....


 


 



book | by Dr. Radut