Skip to Content

10.லைப் டிவைன் -கருத்து

லைப் டிவைன் - கருத்து

The consciousness-Force that creates the world does not reveal itself to us.

உலகை சிருஷ்டித்த சக்தியை நாம் காண்பதில்லை.

. குழந்தை பால் சாப்பிடுகிறது, விளையாடுகிறது, தூங்குகிறது. எப்படி பால் வந்தது, தாயார் தன்னைத் தூங்கவைத்தாள், படுக்கவைத்தாள் எனக் குழந்தை அறியாது.

. நாம் வேலைக்குப் போகிறோம், வண்டி ஓட்டுகிறோம், குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறோம். இதுபோல் ஏராளமான காரியங்களைச் செய்கிறோம். வேலை எப்படி வந்தது, வண்டியை யார் செய்தது, ரோடு யார் போட்டது, பள்ளியை நடத்துவது யார்என நாம் ஓரளவு அறிவோம். ஆனால் அவற்றை நாம் கருதுவதில்லை.

. மூச்சு விடுகிறோம், காற்றேது? நெஞ்சு துடிக்கிறது, தெம்பு எப்படி வந்தது? நிலத்தில் கத்தரிக்காய் எப்படிக் காய்த்தது, சூரியன் ஏன் உதயமானான்என நினைக்க நமக்குத் தோன்றுவதில்லை. உலகை நடத்தும் சக்தி இவற்றின் பின்னாலுள்ளது. தன்னை வெளிப் படுத்துவதில்லை.

. முக்கியமானவர் வெளியில் நடமாடுவதில்லை. மூலவர் நகருவதில்லை. உற்சவர் வீதிவலம் வருவார். மூலவரே முடிவன்று. மூலம் அதற்குப் பின்னுள்ளது.

. நமக்கு நினைவு, அறிவுண்டு. அறிவு பின்னணியிலும், நினைவு முன்னேயும் நிற்கும். நாம் அறிவை மறந்து நினைவையே அறிவெனக் கொள்கிறோம்.

. இரண்டாம் தலைமுறை, மூன்றாம் தலைமுறை செல்வம் முன் தலைமுறைகளைக் கருதாது. கொஞ்ச நாளானால் தெரியாது.

. செடிக்கு நாம் தண்ணீர் விடுகிறோம், பச்சென இருக்கிறது. வறண்ட காலத்தில் செடிக்கு எவ்வளவு நீர் விட்டாலும் பச்சென இருப்பதில்லை. பூமிக்கடியில் ஈரமிருப்பதால் மேலே பாய்ச்சும் நீர் செடியை வளமாக்கும். நாம் அடிநீரை அறிவதில்லை.

. உற்சவர் பின் மூலவர், அதன்பின் மூலமான சிவம், சிவபெருமான் overmental god தெய்வலோகத்திற்குரியவர்.

. சத்தியஜீவியம் அதைக் கடந்தது.

. ஜீவியம் அதையும் கடந்தது.

. ஜீவியத்தில், சித்-சக்தி உற்பத்தியாகிறது. அது தன்னை வெளிப்படுத்துவதில்லை.

. ஜீவியமும் முடிவன்று, ஜீவன் (சத்) அதற்கப்புறமுள்ளது.

. சத் என்பதும் பகுதி. அசத் மறுபகுதி.

. இரண்டும் சேர்ந்தது முழுமை.

. முழுமையைக் கடந்தது மூலம் - அது பிரம்மம்.

. நாம் ஜடத்தை ஜடப்பிரம்மம் எனவும், ஆனந்தத்தை ஆனந்த பிரம்மம் எனவும் கூறுகிறோம். பிரம்மம் கடந்தது. அதை எவரும் நினைப்பதில்லை. அதுவும் தன்னை வெளிப்படுத்துவதில்லை.

*******


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஜகத்குருவான அன்னை மனித உருவில் நம்மைச் சூழ்ந்துள்ளார். நம்மால் அவருக்குச் சேவை செய்ய முடியும்.நம் உள்ளத்தைத் தொடுபவர் அவர்.

சூழ்ந்துள்ள மனிதகுலம் ஜகத்குருவான அன்னை.


 


 



book | by Dr. Radut