Skip to Content

05.அஜெண்டா

"Agenda"

It cannot be Supremental power where cure is shortlived.

குணமானது நீடிக்கவில்லையெனில் அது சத்தியஜீவிய சக்தியில்லை.

. வியாதி குணமாவது பெரியது. தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ குணமாகும்.

. வியாதியின் வேரை அறுத்தால் நிரந்தரக் குணம் உண்டு.

. வேர் நம் குணத்திலிருக்கும். அதன் அடையாளங்கள் உடலில் தெரியும். தோலில் கொப்புளம் வந்தால், வேர் இரத்தத்திலிருக்கும். மேலே ஒரு ointment களிம்பு தடவினால் கொப்புளம் அடங்கும். ஆனால் மீண்டும் வரும். இரத்தசுத்திக்காக மருந்து சாப்பிட்டால், பிறகு வாராது. வியாதி இரத்தத்தைக்கடந்து மனத்தில் குணமாக இருந்தால், இரத்தம் சுத்தமானபின், மீண்டும் அசுத்தமாகி கொப்புளம் வரும். குணம் மாறினால், இரத்தம் மீண்டும் அசுத்தமாகாது, கொப்புளம் வாராது.

. களிம்பு (ointment) கொப்புளத்தை ஆற்றும்.

. இரத்தசுத்திக்கு டானிக் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும்.

. ஆயுர்வேத மருந்துகளை 1 மண்டலம் சாப்பிட்டால், அது மனத்தையும் மாற்றும். ஆயுளுக்கும் வியாதி வாராது.

. சத்தியஜீவிய சக்தி நம் மனத்தையும், ஜீவியத்தையும் மாற்றுவதால்,அது மீண்டும் வாராது.

. அன்னைசக்தி, சத்தியஜீவிய சக்தி.

. பள்ளியில் 10 வகுப்பு இருந்தாலும், 5ஆம் வகுப்புடன் பையன் நின்றுவிடுவதைப் பள்ளிக்கூடம் தடுக்கமுடியாது.

. சத்தியஜீவிய சக்தியால் T.B. குணமானால், அது ஜீவியத்தையே மாற்றிவிடும். மீண்டும் வாராது. இருமல் நின்றவுடன் அன்னையை விட்டு அகன்றால், அல்லது நாம் அன்னையை ஜாகத்தின்மூலம் பெற்றால், ஓரளவு குணமாகும். பிறகு வரும். ஜாதகம் பார்த்து, அது குணமாகும் என்று சொன்னபின், அன்னையை அறிந்து, குணமானால் அது ஜாதகத்தில் உள்ள நம்பிக்கைமூலம் பலிப்பதால், அன்னைசக்தி முழுவதுமாக இருக்காது.

. நமக்குப் போன வியாதி திரும்ப வந்தாலும், போன பிரச்சினை மீண்டும் வந்தாலும், நாம் அன்னையை நேரடியாகப் பெறவில்லை. ஜாதகத்தின் மீதுள்ள நம்பிக்கை மூலம் பெறுவதுபோல், நமது முருகர் பக்தி மாறி அன்னை பக்தியானால், நாம் அன்னையை முருகர் மூலம் பெறுகிறோம் எனப் பொருள்.

. நமக்கே அன்னை மீது பக்தி ஏற்படாமல், பலரும் அன்னையைக் கும்பிடுவதால் நாமும் வணங்கினால், நம்மை அன்னைசக்தி மற்றவர் நம்பிக்கைமூலம் வந்தடையும். அதாவது அவர்கட்குள்ள பக்தி அளவே வரும். அவை அளவுக்குட்பட்டதாக (லிமிட்) இருக்கும்.

. சத்தியஜீவிய சக்தியால் போன பிரச்சினை மீண்டும் வாராது.

. இதைச் சரிவர நம் ஆழத்தில் பெற்றால் பிரச்சினை வாய்ப்பாக மாறும்.

. அக்கண்ணோட்டத்தில் கணவனும், மனைவியும் ஒருவருக்கு மற்றொருவர் ஏற்பட்ட உயர்ந்த வாய்ப்பு.

*******
 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

அடக்கம் பலஹீனமன்று. உத்தமனுடைய வலிமை அடக்கம்.

பரம்பொருளின் முன், தான் சூன்யம்என்ற ஞானம் அடக்கம்.


 


 



book | by Dr. Radut