Skip to Content

பகுதி 3

கருணையாலும், பாசத்தாலும், அன்பாலும், தேவையாலும் செய்யும் பிரார்த்தனைகள் பலிக்கும். அதுவும் பிறர் சுபாவத்தின் முரண்படாத அளவில் பலிக்கும். அகந்தையாலும், அறியாமையாலும், நிபந்தனை விதிக்கும் மனப்பான்மையாலும் செய்யும் பிரார்த்தனைகள் மாற்றத்தைத் தேடுபவர்கட்குப் பலிக்கா.

பொறுப்பற்ற, சுயநலமான கணவரைப் பெற்ற ஊதாரித்தனமான பெண்ணுக்கு, கணவர் நடத்தை மானம் போகும் நிலைக்குக் கொண்டு வந்துவிட்டது. கணவருக்கு வேலையில்லை. வேலையிருந்தால் 6 மாதம் நீடிக்காது. என்ன வேலை என்று மனைவிக்குத் தெரியாது. சாதுரியமாகப் பேசி, கடன் வாங்கி, குடும்பம் நடத்துபவர் கணவர். மனைவி தற்கொலைக்குத் தயாரான நேரம் கணவர் அன்னையிடம் வந்தார். வேலை நிரந்தரமாயிற்று. சம்பளம் 3 மடங்காகி, மேலும் உயர்ந்தபடியிருந்தது. மனைவிக்கு லேசாக நம்பிக்கை வந்தது. கணவரிடம் தேவைகளைக் கேட்பதற்குப் பதிலாக அன்னையைக் கேட்டார். கேட்டனவெல்லாம் கிடைத்தன. கணவர் வேலையை மீண்டும் விட ஆரம்பித்தார். ஏற்கனவே ரூ.100, 200 கடன் வாங்கியவர் மாறிய நிலையில் ரூ. 10,000, 30,000 வாங்கினார். வாழ்நாளில் கடனைக் கொடுத்ததில்லை. அன்னையைக் கேட்டால் கொடுக்கிறார்கள். என் கணவர் பொறுப்பாக இருக்க வேண்டாமா, அது நடக்க வேண்டும் என்ற எண்ணம் மனைவிக்கு எழுந்தது.

மனைவியின் நம்பிக்கை தேவைகளை அபரிமிதமாகப் பூர்த்தி செய்தது. அது அருள். நினைத்தனவெல்லாம் நடக்கவே மனைவி கணவர் மாற வேண்டும் என ஆசைப்பட்டாள். மனம் அன்னையைக் கேட்பதிலிருந்து மாறி கணவரைக் கேட்க ஆரம்பித்தது. நடந்த நல்லனவெல்லாம் நின்றுவிட்டன. சமாதிக்கு வருவதை இருவரும் நிறுத்திவிட்டனர். வேறு சாமி

கும்பிடப் போவதாகப் பேசினர். அதன்பின் என்ன நடந்தது என எனக்குத் தெரியாது.

நம்பிக்கையுடன் தேவைகளை அன்னையிடம் கேட்ட மனைவி அபரிமிதமாகப் பெற்றவுடன், நான் சராசரி மனுஷியில்லை, உயர்ந்தவள் என்று பேச ஆரம்பித்து விட்டாள். நான் வந்தவுடன் அன்னை விலகி விட்டார். கணவர் ஊதாரி, சுயநலமி, பொறுப்பற்றவர், அளவு கடந்து பொய் சொல்பவர், கண்டவரிடமெல்லாம் காலத்திற்கும் கடன் வாங்கிக் குடும்பம் நடத்தியவர் என்பவற்றையெல்லாம் தாண்டி அன்னை உன் வாழ்வில் பலித்தார். அவர் மாற வேண்டும் எனில், அவரே மாற வேண்டும். அன்னையிடம் வந்தபின் தம் தான்தோன்றித்தனத்தை வளர்க்கும் மனப்பான்மை அவருக்கு. காரியம் நடக்கிறது, வருமானம் 10 மடங்காயிற்று என்ற உடன் மனைவிக்குக் கர்வம் எழுந்தது. கர்வம் எழுந்தால் கப்பல் கவிழ்ந்து விடும். நான் பக்தியால் அன்னையிடம் வரவில்லை. ஆதாயத்திற்காக வந்தேன் என்ற மனப்பான்மை உடைய கணவர் எந்தக் கடவுளையும் வழிபடும் மனநிலையில்லாதவர். இவர்கள் சமூகத்தில் உருப்படாத மனிதர்கள். உறவினர்களும், நண்பர்களும் ஒதுக்கியவர்கள். இவர்களும் உயரும் வழியை அன்னை காண்பித்தார். பழைய புத்தியை வலுப்படுத்தியதால் அன்னையைவிட்டே போய்விட்டனர். முதல்நிலை பக்தராக இருக்கவும் தகுதியற்றவர். சமூகத்தில் நாணயமாக வாழ இயலாதவர்.

கணவன் மனம் மாற வேண்டும் எனில், மனைவி தன் ஊதாரித்தனத்தையும், அப்பட்டமான சுயநலத்தையும் விட்டு விட்டு, அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால், கணவரும் மாறுவார். தன் ஊதாரித்தனமும், சுயநலமும் பெருமையுற வேண்டும் என்பது மனைவியின் மனநிலை. அம்மனநிலை இருப்பதையும் அழிக்கும்.

ஒருவருடைய நம்பிக்கையால் அடுத்தவருக்குப் பலிக்கக் கூடாதா என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது.

  • மனைவிக்கு அடங்கிய கணவன் (hen pecked husband) உயரவேண்டும்.
  • திறமையற்ற கணவனுடைய வருமானம் 10 மடங்கு உயர வேண்டும்.
  • சுயநலமான அண்ணன் பிரபலமாக வேண்டும்.
  • அடங்காப்பிடாரியான மனைவியை அனைவரும் மதிக்க வேண்டும்.
  • அளவு கடந்து இலஞ்சம் வாங்குபவர் பெருமையுடன் வாழ வேண்டும்.
  • பாஸ் செய்ய முடியாத பையனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் வேண்டும்.

இவை போன்று ஆயிரம் வேண்டுகோள்கள் அன்னையிடம் வரும். இவர்கள் அர்த்தமற்றவர்கள், வெட்கம் கெட்டவர்கள் என்று அன்னை சொல்வார். தவறான மனிதர்கள் வாழ்வில் திருந்துவதில்லை. அன்னையிடம் வந்த பின் இவர்கள் திருந்த வாய்ப்பு உண்டு. திருந்த முயன்றால் அன்னை அதைப் பூர்த்தி செய்வார். மனைவிக்கு அடங்கிய கணவனுக்குச் சுயமரியாதை வேண்டும். மனைவி, தான் மாறி கணவனுக்கு அடங்க முன் வரவேண்டும். திறமையற்ற கணவனுக்கு 10 மடங்கு வருமானம் உயர மனைவிக்குக் கணவன் திறமையற்றவன் ஆனாலும் அவன் மீது மரியாதை 10 மடங்கு உயர வேண்டும். சுயநலமான அண்ணன் பிரபலமாக வேண்டியதில்லை. அதுவும் நடக்க வேண்டுமானால் அவனுக்கும் சேர்த்து தங்கை தன் சுயநலத்தை அழித்துக்கொள்ள வேண்டும். அடங்காப்பிடாரியை அனைவரும் அவமதிக்க வேண்டும். அவள் மாறி மரியாதை

பெற, தன்னிடம் உள்ள எந்தக் குணம் அவளை மனைவியாகப் பெற்றதோ அதை மாற்ற கணவர் முன்வர வேண்டும். அளவு கடந்து இலஞ்சம் வாங்குபவர், போலீஸ் ஸ்டேஷனுக்குத் தம் மீது பிராது கொடுத்து சரணாகதியடைய வேண்டும். அவர் மாற வேண்டுமானால், அந்த இலஞ்சப் பணத்தில் வாங்கிய எந்தப் பொருளையும், மனைவி மக்கள் தொடக்கூடாது. அது நஞ்சு என்று உணர்ந்து நடந்தால், அவர் மாறுவார். அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும், அவரைக் கைது செய்ய வேண்டும் என வீட்டில் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும். அது மனிதர்களால் முடியாது. அவர் கைது செய்யப்பட்டால் ஏற்படும் அவமானத்தை அவர்கள் அப்பணத்தைப் பார்க்கும்தோறும் உணர வேண்டும். மனத்தில் உண்மையிருந்தால், கணவர் மாறுவார், அவருக்குப் பெருமை வாராது, நல்ல புத்தி வரும். அவருக்கும் பெருமை வேண்டுமானால், வாங்கிய பணத்தை எல்லாம் அவர் திருப்பித் தரவேண்டும் என வீட்டு மனிதர்கள் பிரார்த்திக்க வேண்டும்.

  • சுயநலமான பெற்றோர் திறமையற்ற மகன் அளவு கடந்து சம்பாதிக்க வேண்டும் என விரும்பினால்,
  • தங்கள் வாழ்வில் மறைந்திருந்த திறமையில்லாத குணம் அவன் வாழ்வில் வெளிப்படுகிறது என்றும்,
  • அளவுகடந்த சுயநலமான தங்கள் வாழ்வு, அளவு கடந்த திறமையற்றதாக மகன் வாழ்வில் வெளிப்படுவதாகவும் அறிந்து, தங்கள் திறமையற்ற குணத்தையும், சுயநலத்தையும் இன்று சோதித்து மாற்ற முன்வர வேண்டும். அதைச் செய்யாமல், அன்னைக்குச் செய்யும் பிரார்த்தனை அர்த்தமற்றதாகும்.

மனைவிக்கு ஆபத்து, உயிருக்கு ஆபத்து என்று கண்ட கணவன் ஓடிப் போய் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டால், அவளுக்கு உதவும் எண்ணம் எழாவிட்டால்,

தான் சுயநலமி என அறிய அதிக நேரமாகாது. தான் அதுபோல் நடந்ததை மறந்தது மேலும் சுயநலம். அதை நினைவுபடுத்தித் தன் சுயநலத்தை அறிந்து அதே சுயநலம் இன்று வெளிப்படும் இடங்களையெல்லாம் கண்டு மாற முன் வந்தால், அன்னை அந்த மாற்றத்தைப் பூர்த்தி செய்வார். அதைச் செய்தால், அவருடைய பிரார்த்தனையால் துப்பு கெட்ட பையனும் வெற்றி பெறுவான்.

  • பிரார்த்தனை அவரவர்களுக்குப் பலிக்கும்.
  • அடுத்தவருக்குக் காரியம் நடக்க வேண்டுமானால் அடுத்தவரே பிரார்த்திக்க வேண்டும்.
  • பிறருக்காகப் பிரார்த்தனை செய்யும் உரிமை நமக்கில்லை, விதிவிலக்கான இடம் உண்டு.
  • அங்கு நம் பிரார்த்தனை அடுத்தவருக்குப் பலிக்க, அவருடைய குறைகள் நம்மிடமும் இருப்பதை அறிந்து, அவற்றை விலக்கிய பின், பிரார்த்தனை செய்தால் பலிக்கும் என்பது சட்டம்.

திருவுருமாற்றம்:

திருவுருமாற்றம் யோகத்திற்குரியது. யோக வாழ்வுக்கு அத்தியாவசியமானதன்று. ஓரளவு யோக வாழ்விலும், திருவுருமாற்றம் வருவதுண்டு. யோகத்தின் முடிவான கட்டம் இது. பக்குவமான சாதகருக்கே இது உரியது. அனைவரும் முயலலாம். முறை கடுமையானது. பலன் மிகச் சிறியதாகவே இருக்கும். மனத்தின் உண்மை பூரணமாக இருக்க வேண்டும்.

கெட்டவன் நல்லவனாக மாறுதல், பயந்தாங்கொள்ளி தைரியவானாவது, சுயநலமி பரநலம் பாராட்டுவது, கர்வமானவன் அடக்கமுடையவனாவது, பொறாமை பிடித்தவன் உதவி மனப்பான்மை பெறுவது போன்றவை

திருவுருமாற்றமாகும். ஒரு கோடியிலிருந்து அடுத்த கோடிக்கு மனிதன் மாற வேண்டும்.

இப்பாதை

குழப்பம்

வெறுப்பு

அசிங்கம்

தவறு

ஆகிய கட்டங்கள் மூலம் நம்மை அழைத்துச் செல்லும். கெட்டவன் நல்லவனாகத் திருந்த முடிவு செய்தால் முதல் அவனுக்குக் குழப்பம் எழும். குழப்பத்தை மீறி முயற்சியைத் தொடர்ந்தால் வெறுப்பு வரும். மேலும் அதே பாதையில் சென்றால் வெட்கப்படக்கூடிய காரியங்களைச் செய்ய வேண்டும். தவறு செய்து அடுத்த கட்டத்தை அடைய வேண்டும். இவற்றிற்கெல்லாம் மனிதனுக்குப் பொறுமையிருக்காது.

அரசன் பிச்சைக்காரி மீது ஆசைப்பட்டு அவளை இராணியாக்கினான். அவள் குதிரைக்காரனுடன் வாழ்ந்தாள். அதைக் கண்ணால் பார்த்த அரசன் அவளைக் கல்லால் அடித்துக் கொலை செய்யச் சொன்னான். துரோகம் செய்தவளுக்கு விஸ்வாசம் எழுந்து, நாயாகப் பிறந்து அவனைத் தொடர்ந்தாள். அந்த நாயை அவன் அடித்துக் கொன்றான். இராஜகுமாரியாகப் பிறந்து அவனை நாடினாள். அவன் அவளுக்கு மோட்சம் கொடுத்தான் என்பது பட்டினத்தாரின் சிஷ்யன் பத்ரகிரியின் கதை. விஸ்வாசம்

பிறக்க அது துரோகமாக ஆரம்பிக்கிறது. துரோகம் கற்பாக மாற அது சோரம் போகிறது. அது கணவன் கண்ணில் படுகிறது. அவன் கொலை செய்கிறான். விஸ்வாசம் அதற்கேயுரிய நாய் ஜன்மம் எடுத்து அவனைத் தொடர்கிறது. அவன் வெறுப்பு அழியவில்லை. மீண்டும் நாயை, சாக அடிக்கிறான். அவள் கற்பு முதிர்ந்து இராஜகுமாரியாகிறாள். பிச்சைக்காரி, நாயாகி, ராணியாகிறாள். அவளுக்கு பத்ரகிரி மோட்சம் அளிக்கிறார். திருவுருமாற்றத்தின் பாதையிது. நாமே இப்பாதையை நாடினால் திருவுரு மாறலாம்.

இது ஆன்மாவின் பாதை. நண்பனுக்குத் துரோகம் செய்தவர்கள், குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன், ஜாதித்திமிர் பிடித்தவர்கள், படிப்பால் கர்வமடைந்தவர்கள், பணத்தால் நிலையிழந்தவர்கள் தங்களை இது போன்ற பாதையில் தாமே செலுத்த முன் வந்தால் திருவுருமாற்றமடையலாம். வெறுப்புக்கே உரிய மனிதனை விரும்பிப் பணியும் பாங்கு திருவுருமாற்றம். திருடனுக்கு உதவ ஆசைப்பட்டால், அவனிடமிருந்து 'காணிக்கை'யைத் திருடி அதன் மூலம் அவனுக்கு அருள் புரிவது இறைவன் வழி. திருவுருமாற்றத்தை மனிதன் விரும்பி நாடுவதில்லை. அருள் ஒருவர் வாழ்வில் செயல்பட ஆரம்பித்தால், அவர் வாழ்வில் இவை போன்ற நிகழ்ச்சிகளை அருள் ஏற்படுத்தி, அவரைத் திருவுருமாறச் செய்யும்.

திருவுருமாற்றத்தைத் தானே விரும்பி நாடுவது பூரண யோகத்திற்குரிய ராஜபாட்டை.

இக்கட்டுரை யோகவாழ்வைப் பற்றியதாதால் அக்கருத்தை இங்கு நான் விளக்க முற்படவில்லை. அதைக் குறிப்பிட்டுவிட்டு மேலே போக விரும்புகிறேன்.

கிருஹப்பிரவேசம் செய்து முதல் ஒருவரைக் குடி வைத்தார்கள். குடி வந்தவர் மாடியில் பால்கனிக்கு வெகு அருகில் எலக்ட்ரிக் கம்பி போவது ஆபத்து என்று

வீட்டுக்காரரிடம் சொன்னார். டிபார்ட்மெண்ட்க்கு அதற்குரிய செலவைக் கட்டினால் கம்பியை நகர்த்தி விடுவார்கள். செலவை, குடியிருப்பவர் தரவேண்டுமென்றார் வீட்டுக்காரர். இது என்ன நியாயம்? என்று அவர் கேட்டதற்கு, அவர் தாராளமாகச் செலவு செய்வதாகக் கேள்வி. இதையும் அவர் கொடுக்கட்டுமே என்றார் வீட்டுக்காரர். குடியிருந்தவர் ரூ. 100 கொடுத்து கம்பியை அகற்றினார். 10 ஆண்டுகட்குப் பின் வீட்டுக்காரர் மகனை இன்ஜினீயரிங் கல்லூரியில் சேர்க்க விரும்பினார். பையன் கணக்குப் படிக்கவில்லை. கணக்குப் படித்ததாகப் பணம் கொடுத்து பொய் சர்ட்டிபிகேட் வாங்கினார். வெளி மாநிலத்தில் பணம் கொடுத்து பொய் சர்ட்டிபிகேட் வாங்கினார். வெளி மாநிலத்தில் பணம் கொடுத்து பையனைச் சேர்த்தார். அவர் வீடு திரும்பிய பொழுது அவருக்கு முன் பையன் அங்கு வந்திருந்தான். படிக்க மறுத்தான். அவனுக்குப் பயித்தியம் பிடித்தது. வீட்டுக்காரருக்கு, தான் ரூ.100 அடாவடியாக பக்தரைக் கேட்டது, அது போன்ற சில்லரைப் பழக்கங்கள், இது போன்ற நிலையை ஏற்படுத்தியது என்று தெரியுமா? ஏண்டா இப்படிச் செய்தாய்? என்று பையனைக் கேட்டால், அப்பாவிடம் ஏராளமாகப் பணமிருக்கிறதே, கொடுக்கட்டுமே என்று பையன் சொன்ன சொல் அவருடைய சொல்லின் எதிரொலி அல்லவா?

நமக்கு வழிபாடு, சுவாமி கும்பிடுதல் என்றால் விரதம், கோயில் சுற்றுவது, ஸ்தலங்களுக்கு நடந்து போவது, கண் விழிப்பது, பட்டினி இருப்பது ஆகும். மனிதன் ஆரம்ப நிலையில் சத்தத்தை விரும்புவான். ஆரம்ப நாகரீகமுள்ளவர் விழாக்களில் சப்தம் அதிகமாகக் கேட்கும். அரசியல் இயக்கங்கள் கோஷத்துடன் ஆரம்பிக்கின்றன. நாகரீகம் வளர்ந்த நிலையில் சப்தம் சங்கீதமாக மாறுகிறது. கோஷங்களுடன் ஆரம்பித்த இயக்கம் ஆட்சிக்கு வந்தால்

விசேஷங்களில் கோஷம் போய் கரகோஷம் வருகிறது. உடலை வருத்தி இறைவனை வழிபடுதல் நாகரீகத்தின் ஆரம்ப நிலை. அதை அன்னை immature வளர்ச்சி குன்றிய ஆன்மா என்கிறார். முதிர்ந்த ஆன்மாவுக்கு உடலை வருத்தத் தேவையில்லை, விரதம் அவசியம் இல்லை. முதிர்ந்த ஆன்மாவின் விரதம் ஆன்மாவைப் புண்படுத்தும். சித்தி பெறும் நிலையில் ஆனந்தம் அடைவது பெரிய ஆன்மா. அன்னையை ஏற்றுக் கொண்ட பின் ஆன்மீக வழிபாடு ஆனந்தமயமானது. வருத்துவது என்பதற்கு வேலையில்லை. அன்றாட வாழ்விலும் சாதனை accomplishment என்பது உடலை வருத்திப் பெறுவதன்று. உடலை வாழ்த்திப் பெறுவதாகும். Enjoyment is accomplishment. ஆனந்த அனுபவம் சாதனையாகும். சாதனை என்றால் ஆனந்தத்தை அனுபவிப்பதாகும் என்பது அன்னையின் கோட்பாடுகளில் ஒன்றாகும். இந்தியப் பரம்பரையில், குறிப்பாக, சைவப் பரம்பரையில், தெய்வம் என்றால் கடுமை, பக்தி எனில் விரதம், உழவாரப்படையின் பணி, எளிமை என்பதை வெறுமை என்று அறிந்துள்ளோம். அன்னையின் அடிப்படை அன்பு, பொங்கிவரும் ஆனந்தம், வழிபாடு எனில் தான் மலர்ந்து தன்னை அன்பால் அர்ப்பணிப்பது (self giving), மலர்ச்சி, வளர்ச்சி, பூரிப்பு, இனிய உணர்வு, மலர்ந்த முகம் ஆகியவை. கடுமை, வறுமை, வெறுமை, சிறுமை, தண்டனை, பயம் ஆகியவற்றிற்கு அன்னையிடம் வேலையில்லை. இவற்றைச் சொல்வதில் ஒரு சிரமம் உண்டு. எந்தப் பெரிய இலட்சியத்தையும் மனிதன் தலைகீழாகப் புரிந்துகொள்ளும் நிலை இருப்பதால் மகான்கள் தங்கள் அறிவுரைகளை வெகு பக்குவமாகச் சொல்வதுண்டு.

  • பகவத்கீதை கர்மத்தைப் பலன் கருதாமல் செய்ய வேண்டும் என்றதைப் பிற்காலத்தில் ஞானி கர்மத்தைச் செய்யக்கூடாது. கர்மம் பக்குவம் இல்லாத ஆத்மாவுக்குரியது, ஞானிக்கில்லை என்று நம்பப்பட்டது. கீதை இதற்கு எதிராகப் பேசுவதை மறந்துவிடுவார்கள்.

  • பொய் சொல்லக்கூடாது என்றால், நம் வீட்டு விஷயங்களை மற்றவர்களிடம் அனாவசியமாகச் சொல்ல வேண்டும் என்று குழந்தைகள் புரிந்து கொள்ளும்.
  • வாழ்க்கையை ஆனந்தமாக அனுபவிக்க வேண்டும் என்றால், ஆர்ப்பாட்டமாக அனுபவித்துத் தம்மை அழித்துக் கொள்ளவேண்டும் என்று தவறாகப் புரிந்து கொள்வார்கள்.

எந்தச் செயலுக்கும் இரு பகுதிகள் உண்டு. உயர்ந்த முறை, தாழ்ந்த முறை என்பதுண்டு. குழந்தைகளைப் பிரியமாக வளர்க்க வேண்டும் எனில், அதிகச் செல்லம் கொடுத்து உதவாக்கரைப் பிள்ளைகளாக்கி விடுவார்கள். பணத்தைச் சிக்கனமாக, முறையாகச் செலவு செய்வதை, கருமியாக இருக்க வேண்டும் எனப் புரிந்து கொள்வதுண்டு. தாராளமாகச் செலவு செய்வது என்பதை ஆடம்பரமாகச் செலவு செய்வது என்று எடுத்துக் கொள்வார்கள். அதிகமாக overdoing ஒன்றைப் பாராட்டுவது எப்பொழுதும் தவறாகும். சட்டம் ஒன்றே, சரியாகச் செய்தால் உயர்ந்த பலன் வரும்; தவறாகப் புரிந்து கொண்டால் தவறான பலன் வரும். மனிதர்களை, சராசரிக்கு மேல் உள்ளவர், கீழுள்ளவர் எனப் பிரிக்கலாம். எந்தச் சட்டமும் சராசரிக்கு மேல் உள்ளவர்க்கு நல்ல பலனைத் தரும், கீழுள்ளவர்க்கு கெட்ட பலனைத் தரும். முதலாளி தொழிலாளியிடம் அன்பாக இருத்தல் நன்று என்றால் சராசரிக்கு மேலுள்ளவர்க்கு அது புகழைத் தேடிக் கொடுக்கும். கீழேயுள்ளவர்க்கு இருக்கும் கண்ட்ரோலும் போய்க் கம்பெனியை மூட வேண்டி வரும்.

நாம் சராசரிக்கு மேல் இருந்தால் சாதனை என்பது அனுபவம், ஆனந்தமாகும். ஆனந்தமாக அனுபவித்தால் சாதிக்கலாம். சாதித்தால் ஆனந்தமாக அனுபவிக்கலாம் என்ற சட்டம் அன்னை சட்டம். இது அன்னைக்கு முக்கியமான சட்டம், அடிப்படையான நோக்கம். இதன் உட்கரு வேதாந்தக் கருத்து. துன்பம், வேதனை, வலி ஆகியவை அகந்தையுள்ள இடத்தில் மட்டுமேயுள்ளது. அகந்தை அகற்றப்பட்டால், துன்பம் இன்பமாகும், வேதனையும் வலியும் ஆனந்தமாகும். இறைவனின் லீலைக்கு அடிப்படை ஆனந்தம். இதுவரை இறைவன் அனுபவித்தறியாத ஆனந்தத்தைத் தேடி இறைவன் சிருஷ்டியை மேற்கொண்டான். அதையே converse மாற்றிச் சொன்னால், நாம் செய்யும் காரியங்களில் இதுவரை அனுபவித்தறியாத ஆனந்தத்தை நாடினால் இறைவன் சிருஷ்டியில் பெறும் ஆனந்தம் நமக்குக் கிடைக்கும். அது மனிதன் இறைவனாகும் பாதை. இதனால் விரதம், உடலை வருத்தும் வழிபாட்டு முறைகள், கண்விழித்தல், பட்டினியிருத்தல் அன்னை முறைகளுக்குப் புறம்பானவை.

  • நாம் செய்யும் அன்றாடக் காரியங்களில் அளவு கடந்த ஆனந்தத்தை நாடுவது அன்னை வழிபாட்டில் சிறந்ததாகும்.
  • பெரிய சாதனையை நாடுபவர்கள் பெரிய ஆனந்தத்தை நாடினால் போதும்.
  • வாழ்வு என்பது இன்ப ஊற்று.
  • சாதனை என்பது ஆனந்தத்தின் சிகரம்.
  • சாதனையை நாட ஆனந்தத்தைத் தேடு.
  • சாதனையே ஆனந்தம்.
  • ஆனந்த அனுபவமே சாதனை.

இவை உலகுக்குப் புதிய கருத்துகள்; குறிப்பாக ஆன்மிக வாழ்வுக்கு, புரட்சிகரமான புதிய எண்ணங்கள். ஆனால் பூரணயோகத்திற்கு அடிப்படையான முறைகள் இவை. இவற்றின் எல்லா அம்சங்களையும் திரட்டி விளக்கினால்,

யோக வாழ்வை மேற்கொண்ட சராசரிக்கு மேற்பட்ட பக்தன் தன் அன்றாட வாழ்வையும், அதன் முக்கியக் காரியங்களையும், ஆழ்ந்து அனுபவித்து ஆனந்தம் பெறும் வகையில் செய்தால், அவன் வாழ்வு தோல்வியற்ற சாதனை நிறைந்த பொக்கிஷமாக மாறும்.

உயர்ந்த இன்பம் சிறந்த சாதனை.

பெரிய சாதனை அளவிறந்த ஆனந்த ஊற்று.

அன்றாடச் செயல்களில் எப்படி ஆனந்தத்தை நாடுவது? உடலும் உயிரும், மனமும், ஆன்மாவும் தனித்தனியே ஆனந்தத்தைத் தேடும் திறனுள்ளவை. அவை அனைத்தும் சேர்ந்த ஜீவன் தேடும் ஆனந்தம் பூரண ஆனந்தமாகும். உடலுக்குத் (skill) திறமையுண்டு. செய்யும் காரியங்களைத் திறமையாகச் செய்தால் சந்தோஷமாக இருக்கும். உயிருக்குத் தெம்புண்டு (energy). தெம்பு பொங்கி வழிந்தால், காரியம் செய்து கொண்டேயிருக்கத் தோன்றும், சலிக்காது. மனத்திற்கு அறிவுண்டு. எந்தக் காரியத்தையும் ஒரு புது வகையில் அறிவால் செய்தால், இரவு மணி 11 ஆனாலும் அதை வைத்துவிட்டுப் படுக்கத் தோன்றாது. Skill திறமை உயர்ந்து பொதுத் திறமை capacity ஆகிறது. அது ஜீவனுக்குரியது. பொதுத் திறமையுள்ளவர் ஏதாவது செய்தபடியிருப்பார். அவரால் சும்மாயிருக்க முடியாது.

பொங்கி வரும் சக்தி (energy) புது முறையில் திறமையை வெளிப்படுத்தினால் செய்யும் காரியங்களில் ஜீவன் மூழ்கி

உலகை மறந்து விடுவோம். மேடைப் பேச்சாளர் சலிக்காமல் பேசுவார். பேச ஆசைப்படுவார். தொடர்ந்து வெற்றி பெறும் கிரிக்கெட் ஆடும் பையனுக்கு வெய்யில் தெரியாது. விளையாட்டு ஆனந்தமாக இருக்கும். முதலாளி 15 நாள் பேரம் பேசி 9 1/2 இலட்சத்திற்கு முடித்த சொத்தை மானேஜர் தம் சாமர்த்தியத்தால் 1 இலட்சம் குறைத்து முடித்தால் நேரம் போவதே தெரியாது. வந்த விருந்தினர்கள் நம் சமையலைப் பாராட்டினால், நாம் இந்த உலகத்திலிருக்க மாட்டோம். நண்பன் நம் மீதுள்ள பிரியத்தை வேறொருவரிடம் சொல்லியது நம் காதுக்கு வந்தால் பூலோகம் அந்நேரம் சுவர்க்கமாகும்.

உடலுக்குரிய திறமையும், உயிரின் தெம்பும், அறிவின் ஆற்றலும், ஆன்மாவின் நிதானமும் ஜீவன் வழியாக, பெருந்தன்மையாகவும், கருணை நிரம்பும் பொறுமையாகவும் வெளிப்பட்டால், எந்தக் காரியமும் ஆனந்தத்தின் அற்புதமாகும். சாதனையை நாடுபவர் (accomplishment) இது போன்ற ஆனந்தத்தை நாடினால் சாதனை ஆனந்தமாகும், ஆனந்தம் சாதனையாகும். திருமணவாழ்வு ஒரு தம்பதியர்க்கு இதுபோல் அமைந்துவிட்டால், மனிதவாழ்வின் சிகரம் அது என்பதை உலக இலக்கியங்கள் கூறுகின்றன.

உடலும், உயிரும், அறிவும் ஆன்மாவும் பொருந்திய ஜீவன் இரண்டு ஆவியில் கலந்தால் அதுவே ஆன்மிகச் சாதனை. அறிவிலும், உயிரிலும் அடுத்த உயர்ந்த கட்டங்களில் கலக்க முடியும் என்பது தத்துவம். நடைமுறையில் அது நடந்தால் மனமும், உணர்வும் மகிழ்ந்து மலரும் நேரம் அது. ஆன்ம ஒருமை எல்லாக் கட்டங்களிலும் பொருந்தி அதன் அடையாளமாக இரு உள்ளங்களின் உடல்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்வதை அன்னை"அதுவே வாழ்க்கையில் உள்ள ஒரே ஆனந்தம் என்கிறார். இது மனிதவாழ்வுக்கு உயர்ந்த இன்பம். யோகத்தை மேற்கொண்டவனுக்கு இதையே அன்னை மரணத்தை நோக்கி ஓர் அடி எடுத்து வைப்பது

என்கிறார். யோகவாழ்க்கையில் தாம்பத்யம் விலக்கன்று. அதற்குரிய இலட்சணத்துடன் அமைந்து அளவோடு வெளிப்படுதல் யோகவாழ்க்கைக்குரிய சட்டம்.

  • மனிதவாழ்வின் உயர்ந்த கட்டம் யோகத்திற்கு எதிரி, விலக்கு.
  • இடைப்பட்ட யோகவாழ்வு மனித வாழ்வின் அம்சங்களை உயர்த்தி, முறையோடு அனுபவிப்பதே ஆனந்தமாகும்.

திருமணம் : இறைவனுக்கும், இயற்கைக்கும் அவசியமில்லாத சமூக அமைப்பு திருமணம். மனிதவாழ்வின் மணம் வீசுவது இந்த வாழ்வின் எல்லைக்குள் திருமணத்தால் மட்டுமே முடியும் என்று சொன்னால், உணர்வால் உயிர் பெற்று, உத்தம வாழ்வை மட்டும் நாடியவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள்.

இயற்கையின் (biological) அமைப்பிற்குத் திருமணம் தேவையில்லை, தாய்மை சேயின் நலனைப் பாதுகாத்தவுடன், கடமை முடிந்து விடுவதால் குடும்பம் இயற்கையில் தேவை இல்லை. தேவகன்னிகளுக்குக் கற்பில்லை, திருமணமில்லை. அவர்கள் கன்னித்தன்மையை இழப்பதும் இல்லை.

சமூகம் நாகரீகம் பெற்றபொழுது உடலின் தேவைகளை, உணர்வின் சிறப்பால் உயர்த்தியது. அறிவு செயல்பட்டதால், இன்று ஆயிரம் ஆயிரம் வசதிகள் உள்ளன. நாகரீகம் தாய்மைக்குச் சிறப்பளிக்க வேண்டி, திருமணம் என்பதை ஏற்படுத்தி, குழந்தைகளுக்கு இனி பெற்றோர் தேவையில்லை என்ற பிறகும், கடமையும், அன்பையும் விளைவித்து, குடும்பம், கூட்டுக்குடும்பம், ஜாதி, ஊர் போன்ற அமைப்புகளால் மனித உறவைச் சிறப்பித்தது. இறைவனுக்கும், இயற்கைக்கும் தேவையில்லாத ஒன்றானாலும், இருக்கும் நிலையில் சிறப்பின் பூரணத்தை எட்ட உதவும் வாய்ப்பு திருமணம். திருமணம்

பூரணயோகத்திற்கு, மற்ற யோகங்களைப் போலவே, விலக்கு. அன்னை திருமணம், சொத்துரிமை, வாரிசு அழிய வேண்டும் என்கிறார். வாழ்வை ஆன்மீக வாழ்வு, அன்றாட வாழ்வு எனப் பிரித்தல் அறிவுடைமையில்லை என்கிறார் அன்னை. விளக்கம் கருதி நான் அதை மனிதவாழ்வு, யோகவாழ்வு, யோகம் என்ற மூன்று நிலைகளை சுட்டிக்காட்டினேன். பகவான் யோகத்தை, தெய்வீக வாழ்வென்றார். மனிதனுக்கு 4 கரணங்களுண்டு. ஆன்மாவை விலக்கினால் மனம், உணர்வு, உடல் என மூன்றாகும். மனத்திற்கும் உணர்வும், உடலுக்குரிய பகுதியுமாக (மூளை) மூன்று உட்பிரிவுகளுண்டு. உணர்வுக்கு சிந்தனை, உணர்வு, உடல் (நரம்பு) என 3 உட்பிரிவுகள் உண்டு உடலும் 3 பாகங்களாகப் பிரிகிறது. இந்த 9 பகுதிகளில் உச்சகட்டம் சிந்தனைக்குரிய மனம். முதற்கட்டம் ஜடமான உடல். நம் வாழ்வு உடலாலானது என்கிறார் பகவான். இதைக் கீழ்க்கண்டவாறு குறிக்கலாம்.

 

 

1

2

3

மனம்

--> 

அறிவு

Thinking mind

உணர்வு

உடல் மூளை

Physical mind

 

 

4

5

6

உணர்வு

--> 

அறிவு

Vital mind

உணர்வு

உடல்

Nerves

 

 

7

8

9

உடல்

--> 

அறிவு

Physical mind

உணர்வு

உடல்

Material physical

1 & 9 are exclusive

2உம் 4உம் தொடர்புடையன

3உம் 7உம் தொடர்புடையன

6உம் 8உம் தொடர்புடையன

1-> Pure mind

5-> Pure vital

9-> Pure body

முதல் நிலைக்குரியவன் சிந்தனையாளன், அறிவாளி, மேதை.

  • ஒன்பதாம் நிலை ஜடத்தாலான ஜடம், மண்ணாங்கட்டி என நாம் கூறுவது.
  • பெரும்பாலான மனித சமுதாயத்தின் உயர்ந்த பகுதி மூன்றாம் நிலைக்கும், தாழ்ந்த பகுதி 7 ஆம் பகுதிக்கும் உரியது.
  • அறிவிற் சிறந்த எழுத்தாளர், கலைஞர்கன் உயர்ந்த நிலை 2ஆம் பகுதி, தாழ்ந்த பகுதி 5ஆம் நிலை.
  • சொரணை எனப்படுவதின் முடிவான உறைவிடம் 8 ஆம் நிலை, 5க்கும் அது உண்டு.
  • உணர்ச்சி வசப்பட்டவன் 4ம் ஆம் நிலைக்கு உரியவன்.
  • பொதுவாக நம்முள் பல நிலைகள் கலந்து ஒன்றிரண்டுமுனைப்பாக நிற்பது வழக்கம்.
  • 5ஆம் பகுதியில் சிறந்தவன் வீரன், அவன் 8ஆம் பகுதியில் தலைவனாவான்.
  • காதலின் வேகம் 5ஆம் பகுதிக்கும், இலட்சியக்காதல் 2ஆம் பகுதிக்கும் உரியன.

திருமணம் உயர்ந்த நிலையில் 5 ஆம் நிலைக்கும், ஆரம்ப நிலையில் 8, 9 ஆம் பகுதிகட்கும் உரியது. பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்தவர் 8, 9 பகுதிகட்குரியவர். திருமணத்தின் அடிப்படை உடல், அதன் பண்பின் பகுதி உணர்வு. மனம் திருமணத்தில் செயல்படுவதில்லை. இலட்சியமான நிலையில் ஆன்மாவுக்கும் திருமணம் உயர்வதுண்டு. முதல் நிலையைக் கடந்தது ஆன்மா. இந்த 9 நிலைகளுக்கும் அடிப்படையாக அமைவது ஆன்மா. முதல் நிலையைக் கடந்து உயர்ந்தவர் பண்பின் சிறப்பால் மேலும் உயரும்பொழுது 1 முதல் 9 வரை உள்ள நிலைகளின் அடிப்படையான ஆன்மாவை விளக்கம் செய்யலாம். vபூரணயோகம் உலகத்திற்கு வந்து, பூலோகத்தை சுவர்க்கமாக்கும் கடமையை இறைவன் (சத்தியஜீவன்) பெற்ற பின்னரே ஏற்படக்கூடிய உயர்ந்த நிலைகள் இவை. 9ஆம் நிலையில் ஆன்மா வெளிப்பட்டால் சத்திய ஜீவியம் பிறக்கும். அது சத்தியஜீவனாக 9ஆம் நிலையின் ஆழ்ந்த அஸ்திவாரமும் திருவுருமாற்றம் அடையவேண்டும். இவையெல்லாம் தத்துவத்தின் உயர்ந்த நிலைகள். நான் இங்கு திருமணத்தைப் பற்றி எழுத ஆரம்பித்தேன். அதன் ஆரம்ப நிலை 9ஆம் கட்டம். உச்சகட்டம் முதல் நிலையை அடைந்து உடலில் பூர்த்தியாவது. முதல் நிலை எனவும் ஆரம்பம் எனவும் சொல்வது ஆதிமனிதன். 9 ஆம் நிலை ஈஸ்வரி - சக்தி.

ஆதர்சத் தம்பதிகள் என்பவர் உணர்வால் உடலின் அடிப்படையில் ஒன்றியவர்கள் (5, 6 பகுதிகள்) உயிருக்கு உயிரான இலட்சியக் காதல் என்பது இரண்டும் ஐந்தும் இணைந்த நிலை.

மனிதவாழ்வில் திருமணம் எல்லா நிலைகளிலும் கலந்து அதற்குரிய சிறப்போ, சிறுமையோ பெற்றிருக்கும். தெய்வீக வாழ்வில் திருமணம் இல்லை. யோக வாழ்வின் உச்சகட்டத்தில் உடலை விட்டு நீங்கி உணர்வு அறிவால் சிறந்த 2ஆம்

நிலையில் ஒன்றிய தம்பதிகளைக் காணலாம். அதன் தாழ்ந்த கட்டத்தில் 4,5 ஆம் கட்டங்களுக்குரியவர்களிருப்பார்கள்.

மனத்தையும், உணர்வையும் பிரித்துப் பார்ப்பதே அரிது என்ற நிலையில் அவற்றை ஒன்பது கட்டங்களாகப் பிரித்துப் புரிந்துகொள்ளுதல் குழப்பம் விளைவிக்கும். எனினும் யோக நிலைகளை விவரமாக அறிய இப்பாகுபாடு மிகவும் உதவும் என்பதால் வாழ்வில் நாமறிந்த பல நிலைகளை இப்பாகுபாடுகன் மூலம் சொல்ல முயல்கிறேன். இந்த ஒன்பது நிலைகளும் அவற்றிற்குரிய உயர்வு சிறப்பு தாழ்வுகளில் அமையும். முதல்நிலை அறிவாளிக்குரியது என்றால் அறிவாளிகளில் மேதையிலிருந்து உள்ளூர் அறிவாளிவரை 10 நிலைகளாகப் பிரிக்கலாம். 5 ஆம் நிலை வீரனுக்குரியது. ரோட்டில் நம்மை மிரட்டும் ரௌடியை எதிர்க்கும் தைரியத்திலிருந்து நாட்டை எதிரியிடமிருந்து காக்கும் சேனைத் தலைவன்வரை வீரம் பல்வேறு நிலைகளில் அமையும்.

விலங்கின் இனப்பெருக்கம் 9 ஆம் நிலைக்கும், உயிரோடு உயிர் ஒன்றிய காதல் 5 ஆம் நிலைக்கும் என்று சொன்னேன். அவற்றிலும் பல நிலைகளைப் பிரிக்கலாம்.

கணவன் திறமையும், பொறுப்பும் உள்ளவனவாகவும், மனவி திட்பமும், மனக்கட்டுப்பாடும் செறிந்த தாய்மை நிறைந்தவளாகவும் அமைந்தால் அவர்கள் பொதுவாகப் பண்பான குடும்பங்களில் பிறந்தவர்களானால் அவர்கள் வாழ்வு நல்ல முறையில் அமையும். அதற்குரிய சிறப்பு அம்சங்கள் சில,

  • ஒருவர் மனதில் எழும் உணர்ச்சியை அடுத்தவர் இயல்பாக அறிவர்.

  • எளிமையான செய்தியையும் எடுத்துரைப்பது நெகிழ்ந்த நேரமாகும்.
  • அடுத்தவர் உணர்வின் சுவையை அதிகப்படுத்துவது உறவாகும்.
  • சுயக்கட்டுப்பாட்டை உயர்த்துவதற்கு மட்டும் கடுமையைமனம் 'நாடும்.
  • கட்டுப்படுத்தாமல் குழந்தைகள் நல்ல முறைகளை விரும்பி ஏற்கும்.
  • அடுத்தவர் மனத்தின் போக்கை அறியும் திறனை நம் மனம் நாடும்.
  • உடனிருப்பது உணர்வுக்கு உறுதியாகும்.
  • பிரிந்த நிலை மனத்தை நெகிழ்த்தி நெருக்கமாக்கும்.
  • பேச்சு அறிவால் நெருக்கத்தை அளிக்கும். மௌனம் உணர்வால் நெருக்கத்தை ஏற்படுத்தும்.
  • வேலை சேவையாகி அன்பின் சிறப்பாகும். (இவை 2,4,5,8 ஆம் நிலைகளுக்குரிய உறவுகள்)

சக்தி (energy):

தெம்பில்லாதவன் சோர்ந்து உட்கார்ந்திருப்பான். அவனால் எதையும் சாதிக்க முடியாது. எதையும் அனுபவிக்க முடியாது. அவனை ' சத்' இல்லாதவன், 'சொத்தை' என கொச்சையாகப் பேசுவார்கள். வாழ்க்கையை அனுபவிக்கச் சக்தி வேண்டும். வாழ உடல் தெம்பு வேண்டும். சாதிக்க அதிக சக்தி வேண்டும். பெரிய சொத்து சேர்த்தவர்கள், பெரிய பதவியை அடைந்தவர்கள், பெரியதைச் சாதித்தவர்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். அதிகாலையில் எழுந்திருப்பார்கள். எதையும் உடனே செய்வார்கள். தாமதம் அவர்கள் அறியாதது. செய்வதை அழகாக விரைவாகச் செய்வார்கள். இரவு

எந்நேரமானாலும் சளைக்காது வேலையை முடித்த பின்னரே தூங்குவார்கள். அன்னை 80 வயதுவரை தூங்கியதேயில்லை. அவர்கள் அறையில் படுக்கையேயில்லை. இந்த அளவு கடந்த சக்தியால் நான் நிரம்பி வழிவதற்காகவாவது என்னை ஓர் அவதாரம் என்று சொல்ல வேண்டும் என்று அன்னை கேலியாகப் பேசும்பொழுது சொன்னார்.

சக்தி என்றால் என்ன? எப்படி எழுகிறது? சத் என்று சச்சிதானந்தத்தின் சத்தியத்தைச் சொல்கிறோம். சத், சித் ஆகி, சித்திலிருந்து சக்தி (energy) எழுகிறது என்பது தத்துவம். உயிருள்ள மனிதன், விலங்கு, தாவரம் ஆகியவை வளர்ந்தபடியிருக்கின்றன. வளர்வதற்குச் சக்தி தேவை. இந்தச் சக்தி உள்ளிலிருந்து தானே எழுகிறது. எழும் சக்தி இளமையில் வேகமாக, வீறு கொண்டு எழும். நாள் செல்லச் செல்ல வீரியம் குறையும். அதுவே மரணத்தின் பாதை. குழந்தை ஆரவாரமாக விளையாட எழும் சக்தி physical energy  உடலில் எழும் சக்தி. சக்திகளில் தாழ்ந்தது இதுவே. முதல் நிலை சக்தி எனலாம். அதனால் அதற்குச் சாதிக்கும் திறன் குறைவு. திறமை குறைவானாலும் வீரியம் அதிகம். வேகம் (intensity) அதிகம். உடற்சக்தியை விட உணர்வின் சக்திக்கு உணர்வு அதிகம், ஆனால் வீரியம் குறைவு. மனோசக்திக்கு வீச்சும், உயர்வும் அதிகம்; சூட்சுமமும் அதிகம் ஆனால் வீரியம் (effective power) மேலும் குறைவு. ஆன்மிகச் சக்தி சூட்சுமமானது, உலகெங்கும் எட்டக்கூடியது எனினும் தீவிரத்தில் உடற்சக்தியே முதல் நிலையிலுள்ளது. உடலின் சக்தி உணவாலும், பயிற்சியாலும், இளமையாலும் அதிகப்படும். vital energy உணர்வின் சக்தி உற்சாகத்தால் அதிகப்படும். மனோசக்தி அறிவாலும், தீட்சண்யத்தாலும் உயரும். ஆன்மிகச் சக்தி பொறுமை, நிதானத்தால் செயல்படும், வளரும்.

இயல்பாக மனிதனுக்குள்ள சக்தி அதிகம். நாகரீகம் வளரும்பொழுது மனிதன் தன்னை கட்டுப்படுத்திக் கொள்கிறான். தனக்குள்ள சக்திகளை விலங்கு வெளிப்படுத்துவதுபோல் மனிதன் வெளிப்படுத்துவதில்லை. பண்பு ஏற்பட்டால் மனிதன் பண்புக்காக, தன்னை மேலும் கட்டுப்படுத்திக் கொள்கிறான். இதனால் மனிதன் பலஹீனமாகக் காணப்படுகிறான். உண்மையில் அப்படியில்லை. தன் வலிமையைத் தானே கட்டுப்படுத்துவதை நாகரீகம் என்கிறோம். பிறருக்கு இல்லாத வலிமையை, தன்மையை இருப்பதாக ஏற்பது பண்பு. "இன்று போய் நாளை வா'என்று வெளிப்படுவது பலஹீனமன்று, பண்பின் உயர்ந்த வலிமை.

நாகரீகமும், பண்பும் வளர்ந்ததின் அடிப்படை உடல் வலிமையைப் பாராட்டக்கூடாது என்பதே. இன்று உடல் வலிமையை, பொது இடத்தில் காட்டுபவனை நாகரீகமற்றவன் - தடி எடுத்தவன் தண்டல்காரன் - ரௌடி என உலகம் அறியும். உடல் வலிமையைப் புறக்கணித்து, அறிவின் சிறப்பைப் போற்றுவது பண்பு. நம் உடல் தன் பலத்தைக் கருதாது, நம் அறிவுக்குப் பணிவதால், உலகம் நாகரீகம் பெற்றுள்ளது. நெடுநாளாக உடல் மனத்திற்குப் பணிந்து அடிமையாகி விட்டது. அதனால் தனக்கு வலிமையுண்டு என்பதையே மறந்துவிட்டது. என்றாலும், ஆபத்து என்று வந்த காலத்தில் தன்னை - உடலை - அறிவால் காப்பாற்ற முடியாது என்று தெரிந்த பொழுது, ஓர் ஆவேசம் உடலினுள்ளிலிருந்து எழுந்து உடலைக் காப்பாற்றுவதை - தீ விபத்து, காட்டுமிருகம், நீரில் மூழ்குவது - நாம் அறிவோம்.

வயதால் பெரியவர்கள் சில சமயங்களில் மட்டமாகப் பேசினாலும், குத்தலாகப் பேசினாலும், வயதுக்கு மரியாதை கொடுத்து நம் எரிச்சலை அடக்குகிறோம். உணர்வு அறிவுக்குக் கட்டுப்படும் நேரம் அது. 4 பேர் உள்ள இடத்தில் நாம்

பிறந்த ஊர், நம் குடும்பம், ஜாதியை, பெரியவர்கள், தலைவர்கள், முதலாளி இழித்துப் பேசும் நேரம் உண்டு. அளவு கடந்த எரிச்சலை, அளவு கடந்த பொறுமையோடு அடக்குவோம். சில சமயங்களில் நிலைமை நம்மை மீறுவதும் உண்டு. எனக்குத் தாங்கவில்லை, முதலாளி,M.P எல்லாம் அப்புறம். நான் எழுந்து சத்தம் போட்டு விட்டேன். எப்படிப் பேசினேன் என்று தெரியாது. எல்லோரும் அடங்கிவிட்டனர் என்று நாம் பிறகு சொல்வதுண்டு. இயல்பான கோபம் - உணர்வின் திறன் - வெளிப்பட்டுச் சூழலை அடக்குகிறது. உடலுக்கும், உணர்வுக்கும், அறிவுக்கும், ஜீவனுக்கும் இயல்பாக உள்ள பெருந்திறனைச் சமூகத்திற்கும், மரியாதைக்கும், பண்புக்கும், மனச்சாட்சிக்கும் மனிதன் உட்படுத்தி நாகரீக வாழ்வை மனிதன் வாழ்கிறான். அவற்றை மீறி அச்சக்திகள் வெளிப்படும் நேரம் உண்டு. இவை இயற்கையான (biological) சக்திகளாகும்.

உடலுடைய சக்தி திறமையாலும், உணர்வின் சக்தி ஆசையாலும், அறிவின் சக்தி புத்தியாலும் வெளிப்படுவதை முன்பக்கத்தில் எழுதினேன். அப்படியானால் அன்னை சக்தி (Mother's Energy) என்பது என்ன? அது எப்பொழுது வெளிப்படும்? வாழத் தேவையான சக்தி (energy for survival) நம்முடைய சக்தி. சமூகத்தில் நம் நிலை தொடர்ந்து உயரத் தேவையான சக்தி (social energy) சமூகத்தின் சக்தி. பொய்யான வாழ்வில் அடிப்படையை நம்பாமல், மெய்யான அன்னை வாழ்வின் அடிப்படையை மட்டும் நம்பி வாழ்ந்து, வளர உதவும் சக்தி அன்னை சக்தி. இதை பரிணாம சக்தி (evolutionary energy) எனவும், சத்திய ஜீவிய சக்தி எனவும், ஆன்மிகச் சக்தி எனவும் கூறினால் ஓரளவு பொருந்தும். பயத்தை, தைரியமாக மாற்றும் சக்தி உலகில் உண்டு என்றால் அது 1956க்குப் பின் பூமியின் சூழலில் வந்துள்ள அன்னை சக்தியேயாகும். மரணத்தை அமரவாழ்வாக மாற்றுவதும் வலியை ஆனந்தமாக மாற்றுவதும், சோர்வைத் தெம்பாக மாற்றுவதும், சந்தேகத்தை நம்பிக்கையாகவும், வேதனையை இன்பமாகவும், இருளை ஒளியாகவும், அறியாமையை அறிவாகவும் அன்னை சக்தி மாற்றவல்லது. நான் சொல்லும் (shift) மாற்றத்தை ஏற்படுத்தவல்லது இது. இந்தச் சக்தியை எப்படி உள்ளே எழுப்புவது? அதனால் இம்மாற்றத்தை எப்படிப் பெற்று நிரந்தரமாக்குவது? அன்னையை அழைத்தால் அன்னை சக்தி நம்முள் எழும். அன்னையை நினைத்தாலும் இச்சக்தி நம் உள்ளேயிருந்து புறப்படும் என்பது உண்மை. நாம் எப்பொழுதோ ஒரு முறை அன்னையை நினைக்கிறோம். பிரச்சினை வந்தால், அன்னையை அழைக்கிறோம். பிரச்சினை தீருகிறது. அவை ஓரிழை இம்மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை. மாற்றம் நிரந்தரமாக எப்படி ஏற்படும்?

நினைவையும், அழைப்பையும் நிரந்தரமாக்கினால் மாற்றம் நிரந்தரமாக ஏற்படும்.

நினைவையும், அழைப்பையும் நிரந்தரமாக்குவது முழு யோகம். அது அனைவர்க்கும் உரியதன்று. அதற்கடுத்த எளிய முறைகள் உண்டா? யோகத்தின் முதற்படி சமர்ப்பணம். அதை மேற்கொண்டால், இம்மாற்றம் ஏற்பட்டு நிலைக்கும். அதுவும் எதன்று; அதை விட அடுத்த முறைகள் உண்டா? உண்டு.

பரீட்சை எழுதி பெயிலானபின், மார்க்கை மீண்டும் பரிசோதித்த பின், பெயில் உறுதியான பின், அதை ஏற்பது இயற்கை. அதை ஏற்காமல், அன்னையை நம்ப, நம்பிக்கை அதிகம் வேண்டும். அந்த நம்பிக்கையை மேற்கொண்டவர் ஆயிரம் பேர். அதன் பின் நிலைமை மாறுகிறது. பெயில் பாஸாகிறது. இது விரும்பத்தக்க பலன். இப்பலனை ஏற்றால், பலனை மட்டும் ஏற்றால், நல்லது நடந்ததாகும். பலன்

வந்தவுடன், இது எப்படி நிகழ்ந்தது என யோசனை செய்தால், உலகத்துச் சட்டங்கள் நம்மைப் பொருத்தவரை முடிவானதன்று, நம்மைப் பொருத்தவரை அன்னை சட்டமே முடிவு என்று புரிகிறது. இத்தெளிவு ஜீவனுக்குப் புதிய தெம்பை அளிக்கிறது. அப்புதிய தெம்பிலிருந்து சக்தி பிறக்கிறது. அது உடலின் சக்தியோ, உணர்வின் தெம்போ, அறிவின் சக்தியோ ஜீவனின் சக்தியோவன்று. அது அன்னை சக்தி. அன்னை சக்தி என்பதால் (not finite,but infinite) அது அளவுக்கு உட்பட்டிராது. அளவால் நிர்ணயிக்க முடியாதபடியிருக்கும். ஜீவன் அச்சக்தியால் நிரம்பி வழியும். துள்ளிக் குதிக்கத் தோன்றும். சக்தி தெளிவாக இருக்கும், சந்தோஷமாக வெளிப்படும். இது போன்ற நிலையை அன்பர்கள் தங்கள் வாழ்வில் கண்டு உள்ளார்கள். பிரச்சினை தீரும் நேரத்தை, அன்னை சக்தி வெளிப்படும் நேரமாக மாற்ற முடியும். நம் எல்லாச் செயல்களையும் இதுபோல் மாற்றினால், அன்னை சக்தி இடையறாது தோன்றி நான் சொல்லும் (shift) மாற்றத்தை ஏற்படுத்தி நிலைக்கச் செய்யும். இதைச் செய்ய நாம் தோல்வியை ஏற்கக்கூடாது. தோல்வியை வெற்றியாக மாற்ற முயல வேண்டும். சோர்வை அனுமதிக்கக் கூடாது. அதைத் தெம்பாக மாற்ற வேண்டும். கடந்தகாலக் குறைகளை மனம் ஏற்கக்கூடாது. அவற்றை இன்று வெளிக் கொணர்ந்து, நிறைவாக மாற்ற வேண்டும். தொடர்ந்தும் இதைச் செய்தால், எல்லா நேரமும் இதைப் பின் பற்றினால், பலன் வந்த பின், பலன் வந்த பாணியைப் பயின்றால், மாற்றம் ஏற்படும்.

அன்னையை நாம் தெய்வமாக வழிபடலாம்; அது பிரார்த்தனை பலிக்க உதவும். அன்னையின் யோகத்தை மேற்கொள்பவர்களுக்கு இந்தச் சக்தி இன்றியமையாதது. அன்னையைச் சக்தியாக அறிந்து அச்சக்தியை நம்முள் பெறாமல் யோகத்தை ஆரம்பிக்க முடியாது. சக்தியைப் பெறுவதால் மட்டும் யோகத்தை மேற்கொள்ள முடியாது.

இடைவிடாது இச்சக்தி நம்முள்ளிருந்து எழுந்தபடி இருந்தால்தான் யோகம் பலிக்கும். அன்னையிடமிருந்து இச்சக்தி வந்து யோக அனுபவங்களைக் கொடுக்கும். அனுபவம் ஒருமுறை ஏற்படுவது. நிரந்தரமான அனுபவம் பெற அது சித்தியாக வேண்டும். அருளால் அன்னையிடமிருந்து தொடர்ந்து சக்தி வந்து சித்தி பெறுவதுண்டு. ஆனால் சித்திக்கு உரிய சக்தி நம்முள்ளிருந்து நம் விருப்பப்படி எழ வேண்டும். அதுவே யோகத்திற்குரிய சக்தி.

ஒரு முறையாவது இந்தச் சக்தி மேலிருந்து நம்முள் பாய்வதைப் பார்க்காமல் இந்த மாற்றம் முடியாது. ஒரு முறையாவது இச்சக்தி நம்முள்ளிருந்து எழுவதைக் காணாமல் நான் சொல்லும் மாற்றம் எழாது. இந்தச் சக்தியே மாற்றத்திற்கு அடிப்படை. பார்லிமெண்ட் எலக்ஷனில் (dummy candidate ) மாற்றுவேட்பாளராகப் போட்டவர் ஊரில் எவருக்கும் பேர் தெரியாதவர். காங்கிரஸை எதிர்த்து ஜாதியின் பேரில் நின்ற வேட்பாளருக்கு மாற்று இவர். காங்கிரஸ் வேட்பாளர் உள்ளூர் பிரமுகர். ஏற்கனவே M.L.A. அவருக்கு அமோக ஏற்பாடுகள். டம்மி வேட்பாளர் எலக்ஷனை மேற்கொள்ளவில்லை. என்ன நடந்தது என்றும் விவரமாகத் தெரியாது. எலக்ஷன் முடிந்தது. ஓட்டு எண்ணினார்கள். ஜாதியின் பேரில் ஓட்டு விழுந்துள்ளது. ஏதோ காரணத்தால் வேட்பாளரை அங்கீகாரம் செய்யவில்லை என்பதால் டம்மிக்கு உயிர் வந்தது. மாலை 4 மணிக்கு டம்மி வேட்பாளர் அதிக ஓட்டுப் பெறுவதைக் கண்டனர். காங்கிரஸ் பெட்டிகள் காலி. டம்மி ஓட்டு எண்ணும் இடத்தில் இல்லை. அவரைத் தேடிப் போனார்கள். கேழ்வரகுக் கொல்லையில் அறுவடையை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். M.P.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நேரம் அரசியல் ஜாதிக்கு உண்டான மகத்துவம் அவருக்குப் புரிந்தது. அன்னை சக்தியை, நாம் செயல்படும்பொழுது பார்த்தால் யானை பலம் வரும். அதன் சாராம்சத்தை அறிந்தால், பத்து யானை பலம்



book | by Dr. Radut