Skip to Content

05. பகுதி - 5

தம்பி - அன்னையிடமிருந்து பிரார்த்தனை பலிக்கும்பொழுது ஏன் பலிக்கிறது, எப்படிப் பலிக்கிறது, இது எப்படி அன்னை சக்தியால் முடிகிறது என யோசனை செய்து புரிய வேண்டுமானால், அதற்கு The Life Divine படித்திருக்க வேண்டும்.

அண்ணன் - நாம் படிக்காவிட்டாலும் படித்தவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

தம்பி - பக்தியும், நம்பிக்கையுமிருந்தால் படிக்காமலேயே புரியுமா?

அண்ணன் - புரியாது. புரிந்தால் வரக்கூடிய பலன் வரும்.

தம்பி - இந்தக் குழந்தைக்கு என்ன செய்வது? இப்பொழுது தினமும் அன்னை புத்தகங்களையும், சாவித்ரியும் படிக்கிறது. அதிலிருந்து சற்று குணம் தெரிகிறது.

அண்ணன் - அதைத் தொடர்ந்து செய்யலாம். நீ சொல்கின்ற பெற்றோர், பிரச்சினைக்காக அன்னையிடம் வருபவர்கள். பக்திக்காக வருபவர்களா?

தம்பி - அவர்கள் அன்பர்கள். அவர்கட்குக் குழந்தை முக்கியம். அதைவிட அவர்கள் சேவை முக்கியம்.

அண்ணன் - பிரச்சினைக்காக வருபவர்கட்கு முறைகள் பிரச்சினையைத் தீர்க்கும். அது நாளடைவில் நல்லபடியாக, நிச்சயமாக நடக்கும்.

தம்பி - உடனே நடக்குமா?

அண்ணன் - அது அன்னைக்காக வாழ்பவர்கட்கு நடக்கும். அத்துடன் பிரச்சினை அவர்கட்கு வாய்ப்பாகவும் மாறும்.

தம்பி - இவர்கள் அப்படி மாற முடியாதா?

அண்ணன் - சேவை முதல் என்பது அன்னை முதல் என்று மாறினால், அது நடக்கும்.

தம்பி - அவர்களாக மாற்றிக்கொள்ளக் கூடாதா?

அண்ணன் - மாறக் கூடாது என்பதில்லை. அப்படியெல்லாம் மனம் மாறுவதில்லை.

தம்பி - சரி, அப்படி மாறினால் என்ன நடக்கும்?

அண்ணன் - பிரச்சினை இருக்காது, குழந்தை சந்தோஷமாகிவிடும்.

தம்பி - அதற்கென்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள்.

அண்ணன் - நான் சொன்னதுபோல் சமர்ப்பணம் செய்தால், குழந்தை பிரச்சினை தீரும்.

தம்பி - மேலும் செய்யக்கூடியதுண்டா?

அண்ணன் - உண்டு.

தம்பி - என்ன செய்யலாம்?

அண்ணன் - ஆர்வம் உள்ளவரை செய்யலாம். முழு ஆர்வம் அன்னை பேரிலிருப்பதற்கு அடையாளம், இடையாத நினைவு. மனம் அன்னையைத் தானே விரும்பி நினைத்து, நினைவில் திளைத்தால், பிரச்சினை இருந்த இடம் தெரியாது.

தம்பி - இடையறாத நினைவு கட்டுரையிலுள்ளதைப்போல் மாறிவிட்டால்,

அண்ணன் - அது யோக நிலை. அதுபோல் பெற்றோர் மாறினால் குழந்தை நாடெங்கும் பிரபலமாகும். இன்று எதை யாரும் குழந்தைக்குக் கற்பனை செய்ய முடியாதோ, அது நடக்கும். நடந்தபடியிருக்கும்.

தம்பி - குழந்தை இடையறாத நினைவைப் பெற்றால்,

அண்ணன் - குழந்தை வாழ்வை விட்டு யோகத்திற்குப் போகும். அக்குழந்தையுள்ள இடத்தில் மற்றவர்க்குப் பிரச்சினையிருக்காது.

தம்பி - குழந்தை உலகப் பிரசித்தி பெறுமா?

அண்ணன் - அன்னையை குழந்தையே நான் கூறுவதுபோல் அறிந்து, குழந்தைக்கு இடையறாத நினைவு வந்தால், இந்தக் குழந்தை உலகப் பிரசித்தி பெறும் என்பது உறுதி. அவ்வுறுதியை உறுதிப்படுத்த இரண்டு நிபந்தனைகளுண்டு.

  1. முழு உடல் நலம். Total perfect health, a body sound as a bell.
  2. தானே பொங்கிவரும் சந்தோஷம். Self-existent joy. 

தம்பி - இக்குழந்தைக்கு இதைச் செய்ய நான் துடிக்கிறேன். அதாவது,

  • அன்னையைப் பூரணமாக அறிந்து, ஏற்றுக் கொண்டு, நம்ப வேண்டும்.
  • இடையறாத நினைவு வேண்டும்.
  • உடல் வெண்கலம் போலிருக்க வேண்டும்.
  • மனம் பூரிப்பான நிலையிலிருக்க வேண்டும். 

அண்ணன் - இவையெல்லாம் முடியும், பகீரதப் பிரயத்தனம். இன்று அதுபோன்ற குழந்தை உலகில் இல்லை. இக்குழந்தை மாறினால் அது உலகத்திற்கு மகுடம். பெரிய காரியம். உன் அவசரம் உதவாது. நிதானம் வேண்டும்.

தம்பி - வார்த்தை பலிக்கிறது என்கிறார்களே, அது என்ன?

அண்ணன் - நடப்பதெல்லாம் நாராயணன் செயல் என அறிவோம். நாம் குறுக்கிட்டால் காரியம் கெட்டுப் போகிறது. குறுக்கிட நம்மில் எதுவுமில்லை எனில், உள்ளிருந்து எழும் வார்த்தை நாராயணன் வார்த்தையாகிறது. அதனால் பலிக்கிறது.

தம்பி - காரியம் கூடிவர நாம் குறுக்கிடாமலிருந்தால் போதுமா?

அண்ணன் - Mother is a subtle institution அன்னை ஒரு சூட்சும ஸ்தாபனம் என்றது நினைவிலிருக்கிறதா? அந்த ஸ்தாபனம், குறிப்பாக அன்பர்கள் வாழ்வில், இடையறாது செயல்படுகிறது. நாம் குறுக்கிடாவிட்டால் பலிக்கிறது. "நான்” வந்து குறுக்கிடாதவருடைய வார்த்தை பலிக்கிறது.

தம்பி - நாம் குறுக்கிடாமலிருப்பதற்கு அடையாளம் உண்டா?

அண்ணன் - நமக்கு விஷயமே தெரியாதபொழுது செயலோ, மனமோ குறுக்கிடுவதில்லையல்லவா? விஷயம் தெரிந்தபொழுது அதுபோல் மனமும் (mental impulse) குறுக்கிடாவிட்டால் அதுவே அடையாளம்.

தம்பி - குறுக்கிட்ட பின் வழியுண்டா?

அண்ணன் - Mental impulse மன எழுச்சி வந்து மனத்தைத் தொடுமுன் சமர்ப்பணம் செய்ய வேண்டும். அது சிரமம். ஆனால் முடியும். விஷயம் எழுமுன் குறுக்கிடுவதில்லை என முடிவு செய்து முடிவை சமர்ப்பணம் செய்தால், அது சமர்ப்பணமானால், குறுக்கீடு எழாது.

தம்பி - வார்த்தை பலிக்கிறது எனில் அவர் மனம் எப்பொழுதும் அதுபோன்ற அமைதியுடனிருக்கும் போலிருக்கிறது.

அண்ணன் - ஆம். நாம் முயன்று பெறும் அமைதியை அவர் இயல்பாகப் பெற்றுள்ளார். நல்லெண்ணம் உபரியாக இருந்தால், நடக்க வேண்டிய செயல் அவர் நல்லெண்ணத்தில் உற்பத்தியாகும் வார்த்தை மூலம் பலிக்கிறது.

தம்பி - நீங்கள் சொன்ன சக்தி, ஸ்தாபனம் இங்கு எப்படிச் செயல்படுகிறது?

அண்ணன் - தெருவில் கலாட்டாவானால், போலீஸ்காரனைக் கூப்பிடுகிறோம். அவனைக் கண்டவுடன் கலாட்டா மறைகிறது. போலீஸ் என ஒன்றிருக்கிறது. வேண்டியவர் கூப்பிடுகிறார்கள். IG ஆபீசில் போலீஸைக் கூப்பிட வேண்டிய அவசியமில்லை. கலாட்டா செய்பவர்கட்கு அது IG ஆபீஸ் எனத் தெரியும். கலாட்டா செய்யமாட்டார்கள். கலைக்டர் ஆபீசும் அப்படியே. எல்லாக் கவர்மெண்ட் ஆபீசுக்கும் அத்தகுதியுள்ளது என்பதால் கலாட்டா செய்பவர்கள் அங்கெல்லாம் வரமாட்டார்கள்.

தம்பி - நாம் கூப்பிடும்பொழுது மட்டும் அன்னை வருகிறார். அன்னையை மனதில் பிரதிஷ்டை செய்துவிட்டால், அன்னைச் சூழல் எப்பொழுதும் நம்மைச் சுற்றியிருக்கும். அன்னையை அழைக்க வேண்டிய அவசியமிருக்காது. வேலை சமர்ப்பணமாகும். அன்னை ஸ்தாபனங்களில் புறச் சூழலில் அன்னை நிறைந்திருப்பார். நெஞ்சில் பிரதிஷ்டை செய்தால் அகச் சூழலில் அன்னையிருப்பார். கூப்பிடும் அவசியமில்லை.

அண்ணன் - புறச் சூழலிலிருப்பது அன்னை எனும் ஸ்தாபனம். அகச் சூழலிலிருப்பது அன்னை எனும் ஸ்தாபனம் என்றாலும் அது ஆன்மாவுக்குரிய ஸ்தாபனம். இரண்டும் சேர்வது பெரியது.

தம்பி - அகந்தை என்னாவது?

அண்ணன் - அகந்தை கரைந்தால்தான் அகச் சூழல் நிறையும். அன்னையின் சூழல் உலகில் அன்னை அவதரிக்கும் முன்னேயுண்டு. அவர் அவதரித்த பிறகு அது அதிகமாயிற்று. அவர் வாழ்ந்த இடத்திலும், அவர் அன்பர்கள் உள்ள இடத்திலும் சூழல் ஸ்தாபனமாக வேலை செய்கிறது. போலீஸ் ஸ்டேஷன் உள்ள இடத்தில் போலீஸ் உள்ளது. இல்லாத ஊரில் மணியக்காரர் மூலம் போலீஸ் வேலை செய்யும். நேரடியான அதிகாரமிருக்காது. அதுபோல் அன்னை அன்பர்கள் அவர்களுடைய ஸ்தாபனமாகச் செயல்படுகிறார்கள். உலகம் உற்பத்தியானதிலிருந்து உலகெங்கும் இருப்பது அன்னைச் சூழல்தான் என்றாலும், அளவு மாறுகிறது.

தம்பி - அன்னை ஜீவியம் நம் குறைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் செயல்படுவதெப்படி என மேலும் விவரமாகச் சொல்லவும்.

அண்ணன் - கார் ரிப்பேர் ஷாப்புக்குப் போனால், நமக்கு எந்தவித ரிப்பேர் தேவையானாலும் செய்து தரும் வசதியை வைத்திருக்கிறார்கள். அது கார் ரிப்பேருக்காக என ஏற்பட்டது. ஓர் இன்ஜீனியரிங் ஒர்க்ஷாப்புக்குப் போனால், அவன் நம் காரில் உள்ள ரிப்பேரைச் சரி செய்ய வேண்டுமானால் அவனுக்கு முடியும். காரை ரிப்பேர் செய்ய ஏற்பட்ட இடமில்லை என்றாலும் இன்ஜீனியரிங் ஒர்க்ஷாப் என்பதால், கார் வேலையையும் அவர்களால் செய்ய முடியும். கார் வேலை இன்ஜீனியரிங்குக்கு உட்பட்டதுபோல், வாழ்வில் எப்பகுதியும் அன்னைக்குட்பட்டது. எந்தத் தேவை நமக்கெழுகிறதோ, அதற்கேற்ப அன்னைச் சூழல் மாறும் திறனுடையது.

தம்பி - ரெவின்யூ டிபார்ட்மெண்ட் போலவா?

அண்ணன் - எந்த டிபார்ட்மெண்ட்டும் தன் வேலையை மட்டும் செய்யும். ரெவின்யூ டிபார்ட்மெண்ட் மட்டும் எந்த நேரத்திலும் எந்த வேலையையும் செய்ய அழைப்பார்கள். அவர்களும் செய்வார்கள். எலெக்ஷன், வெள்ளம், கலவரம், பரீட்சை, ஸ்டிரைக் என எதுவும் அவசரத்திற்காக ரெவின்யூ டிபார்ட்மெண்டாரிடம் கொடுப்பார்கள்.

தம்பி - IAS ஆபீசர்போல எந்த டிபார்ட்மெண்ட்டுக்கும் அன்னைச் சூழல் போகும் போலிருக்கிறது.

அண்ணன் - ஒரு டிபார்ட்மெண்டில் பிரமோஷனில் வந்தவர்களைவிட IAS ஆபீசர்கள் பாரபட்சமின்றி, வேலையை சிறப்பாகச் செய்வதாகக் கூறுவதைக் கேட்டதுண்டா?

தம்பி - அதுபோல் அன்னைச் சூழல் ஏதாவது ஒரு செயலுக்காக தன்னை அதற்கேற்ப மாற்றிக்கொண்டு செயல்படும்பொழுது சாதாரணச் செயலைவிட அது சிறப்பாக இருக்குமா? உதாரணம் உண்டா?

அண்ணன் - அன்பர் ஒருவர் புதியதாக ஒரு துறையில் செயல்பட்டார். பாங்க் அத்துறையில் சம்பந்தப்படாதது. அன்னை செயல்பட்டார். அத்துறைக்குப் பாங்க் வந்தது. அற்புதமாகச் செயல்பட்டது. அதன் விசேஷங்கள் பல.

  1. அத்துறைக்கு வழக்கமான வட்டியைவிட வட்டி குறைவு எனச் சட்டம் வந்தது.
  2. சில அம்சங்கட்கு வட்டியுமில்லை என்றார்கள்.
  3. ஓரளவு மான்யம் உண்டு என்ற நிலையும் வந்தது.
  4. ஈடில்லாமல் கடன் பெறும் விஷயங்களும் எழுந்தன. 

தம்பி - ஆமாம், எனக்குத் தெரியும். இவையெல்லாம் அன்னையின் சிறப்பல்லவா?

அண்ணன் - அன்னைக்கேயுரிய சிறப்பு இத்துறையில் எழுந்தது. பொதுவாக பாங்க் ஒரு துறையில் செயல்பட்டால் அத்துறை பயன்பெறும். இத்துறை பாங்க்குக்குப் பயன்படும்படி ஏராளமான டெபாசிட்டைக் கொடுத்தது.

தம்பி - சத்தியஜீவியம் செயல்பட்டால் கருவியும் திருவுருமாறும் என்கிறார் அன்னை.

அண்ணன் - யார் பலனை மட்டும் பெறுவார்களோ, அவர்களால் பாங்குக்குப் பலன் பெருவாரியாக எழுந்தது.

தம்பி - அது என்ன சட்டம்?

அண்ணன் - அது திருவுருமாற்றத்தைக் கடந்த நிலை, அருளன்று, பேரருள். இதுபோன்ற அம்சம் அன்னையுள்ள எல்லா இடங்களிலும் காணலாம். அதைத் தத்துவரீதியாக நாம் அறிவது அன்னை ஞானம்.

தம்பி - யாராவது எடுத்து உதாரணத்தின் மூலமாகச் சொன்னால் புரியும். அதிகம் படித்த குழந்தை உலகப் பிரசித்தி பெறலாம் என்றீர்களே, அது எப்படி? Genius மேதையாகப் பிறந்திருக்க வேண்டாமா?

அண்ணன் - அமெரிக்காவில் வீடு பெருக்குபவளும் காரில் வருகிறாள். நமக்குக் கார் பணக்காரனுக்கு. நமக்கு அதிகபட்சம், அமெரிக்காவில் குறைந்தபட்சம். அன்னை வாழ்வு அன்னையின் கோட்பாடுகளை ஏற்ற வாழ்வு. Mother first, anything next அன்னையை முதன்மையாகக் கொண்ட வாழ்வில் மனித வாழ்வின் உச்சக்கட்டம், அங்கு குறைந்தபட்சம் என்பது சட்டம்.

தம்பி - என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நம்ப முடியவில்லை. ஏழ்மை நிறைந்த கிராமம் அன்னையை ஏற்றுக்கொண்டு செல்வம் நிறைந்த கிராமமாக மாறியதைப் பார்த்தேன். இருந்தாலும் மனம் சம்மதப்படமாட்டேன் என்கிறது.

அண்ணன் - அதைத்தான் நான் அன்னையைப் புரிந்துகொள்வது என்றேன்.

தம்பி - சரி, இந்தக் குழந்தை உலகப் பிரசித்தி பெறுமா?

அண்ணன் - எந்தக் குழந்தையும் 11 வயதில் நிரூபமா பெற்றதைப் பெற்றிருந்தால், அன்னையை ஏற்றால், உலகப் பிரசித்தி பெறும். நமக்குப் பணம், அந்தஸ்து, செல்வாக்கு, புகழ், பிரபலம் முக்கியம். அதனால் அது கோடியில் ஒருவருக்கு என நினைக்கிறோம்.

தம்பி - அதுபோல் புரியும்படி அன்னையைச் சொல்லுங்களேன்.

அண்ணன் - அன்னையை ஏற்றுக்கொண்டால், அன்னை நம்மை அன்னையாக்குகிறார்.

தம்பி - நம்ப முடியவில்லையே.

அண்ணன் - நம்புவது சிரமம். விஷயமே நம்பிக்கையில்தானிருக்கிறது. நாம் அன்னையை வணங்குகிறோம். அன்னை நம்மைத் தம்போலச் செய்கிறார்.

தம்பி - முடியுமா?

அண்ணன் - நமக்கு அது பிடிக்கவில்லை என்கிறார் அன்னை. சாவித்ரியில்,

"எந்த அற்புதத்தை மனம் விழைகிறதோ அதை மனிதன் மறுக்கிறான்”.

"தான் விரும்பும் கொடுமைக்குக் கடவுளை நிந்தனை செய்கிறான்” என இரு வரிகள் உள்ளன.

நம்ப முடியவில்லை என்கிறோம். உண்மையில் அன்னை வாழ்வின் உயர்வு நமக்குப் பிடிக்கவில்லை.

தம்பி - இந்தக் குழந்தை நிலை என்ன?

அண்ணன் - இது சாதாரணக் குழந்தை. அற்புதமான பயிற்சி. அபரிமிதமான வெற்றி. பெற்றோர் சேவை உணர்வு உள்ளவர்கள். சேவை பெரியது. ஆனால் சேவையால் நான் சொல்லும் பலன் வாராது. அன்னையைக் குழந்தை ஏற்க முடியும். அது நடந்தால் நான் சொல்வது நடக்கும். பெற்றோரும் ஏற்றால் பெரியது.

தம்பி - நான் அன்னையை ஏற்றுக்கொண்டுள்ளேனே?

அண்ணன் - முதலில் அன்னை என்றால் என்ன என்று அறிய வேண்டும். நான் சொன்ன சாவித்ரி வரிகள் பக்கம் 365இல் இருக்கிறது. நான் கூறவில்லை. பகவான் எழுதுகிறார். பகவான் நாமெல்லாம் உலகப் பிரசித்தி அடைய முடியும் என்று கூறவில்லை. மனிதன் சத்தியஜீவனாக முடியும் என்கிறார். அது சிவபெருமானைவிட உயர்ந்த நிலை. அது பூரணயோகம். நான் சொல்வது பூரணயோக சக்தியை வாழ்வில் சிறப்பாகப் பயன்படுத்துவது.

தம்பி - 11 வயதில் பெரிய படிப்பைக் குழந்தை பெற்றது. அது பெரிய சாதனை. This is an academic achievement. The same accomplishment in psychology is called for. இதே சாதனையை மனம் பக்குவம் பெறச் செய்தால் போதுமா? வேறு வகையாகச் சொல்ல முடியுமா?

அண்ணன் - முதற்காரியமாகக் குழந்தை சந்தோஷமாக, நிம்மதியாக இருக்க வேண்டும்.

தம்பி - அதற்கென்ன செய்வது?

அண்ணன் - குழந்தை சந்தோஷத்தை அழைக்க வேண்டும்.

தம்பி - அழைத்தால் வருமா?

அண்ணன் - வரும். சந்தோஷம் குறையும் நேரம் சந்தோஷத்தை அழைத்தால் அல்லது அன்னையை அழைத்தால் சந்தோஷம் வரும். ஏன் சந்தோஷம் குறைகிறது என ஆராய்ச்சி செய்து சந்தோஷத்திற்குண்டான அடிப்படையை ஏற்படுத்தினால் நிரந்தரமான சந்தோஷம் வரும்.

தம்பி - அவ்வளவு சுலபமா?

அண்ணன் - ஆமாம். சந்தோஷம் என்பது பல நிலைகளில் உள்ளது. நமக்கு அன்னைச் சந்தோஷம் வேண்டும். Pleasure, happiness இரண்டும் lower vitalக்குரியது. Joy higher vitalக்குரியது. Beauty மனத்திற்குரியது. Love ஆன்மாவுக்குரியது. சாப்பாடு தருவது pleasure, வெற்றி தருவது happiness, எதிரியைத் தோற்கடித்துப் பெறுவது சிறு வெற்றி, எதிரியால் புகழப்படுவது பெருவெற்றி. பிரியம் தருவது joy. இத்தனையும் Anandaவின் அம்சங்கள். ஒரு கருத்துப் புரிவது mental happiness. Silentஆகப் புரிவது higher mental happiness. Mother's joy என்பது நன்றியறிதல் ஏற்படும்பொழுது எழுவது. உலகம் இறைவனால் இயங்குகிறது என்றறிவது Gratitude நன்றியறிதல். அது அன்னைச் சந்தோஷத்தைத் தரும்.

தம்பி - குழந்தையின் வாழ்வில் அன்னைச் சந்தோஷத்தை விளக்குங்கள்.

அண்ணன் - உடல் வெண்கலம் போலாவது சுலபம். பெற்றோர் படித்தவர். குழந்தைக்கே உடலைப் பற்றிய அறிவு அதிகம். அதைச் செய்து முடிக்கலாம். அது physical joy உடலுக்குரிய சந்தோஷத்தைத் தரும். அதுவே அடிப்படை. அதைச் சாதிப்பது பெரியது. அதற்குரிய சந்தோஷம் நாம் இதுவரை அறியாதது. அடுத்தாற்போல் சிறிய விஷயங்களில் நாம் திருப்திப்படுகிறோம், சந்தோஷப்படுகிறோம். Lower vital pleasure & happiness. அதைவிட உயர்ந்ததைக் குழந்தை நாட வேண்டும்.

தம்பி - அப்படி என்றால்?

அண்ணன் - சாப்பாடு முக்கியம். அதிகமாகச் சாப்பிட்டு அனுபவிப்பதைவிட ருசியாகச் சாப்பிட வேண்டும். இந்தக் குழந்தைக்கு அந்தக் குறையில்லை. ருசிக்கு அடுத்தது ரஸா. அது யோகிக்குரியது. தான் பிறரை ஜெயிக்க வேண்டும் என்பதைவிட தன்னை முன்னைவிட உயர்த்த வேண்டும் என அன்னை சொல்கிறார்கள்.

தம்பி - இதிலெல்லாம் இந்தக் குழந்தை பெரும்பாலும் முடித்துவிட்டது.

அண்ணன் - 18 vols. பெரிதன்று. குழந்தையே படித்துவிடும். பெற்றோரும் படிக்கலாம். அல்லது joy, child, happiness என்பவை வரும் இடங்களை மட்டும் எடுத்துப் படிக்கலாம். மொத்தம் 200 அல்லது 300 பக்கங்களிருக்கும்.

தம்பி - அதுவும் குழந்தை பெரும்பகுதி பயின்றுள்ளது.

அண்ணன் - குறையானவற்றைக் கண்டு நிறைவு செய்தால் vital பூர்த்தியாகிறது. Mentalக்கு வரும்பொழுது குழந்தையின் பயிற்சியை ஆராய்ந்து, அன்னை mental happinessயைப் பற்றிக் கூறுவதைக் குழந்தை பயிலவேண்டும்.

தம்பி - அதற்கடுத்தாற்போல் 11 வயதுக் குழந்தைக்கு ஆன்மீகம் போதிக்க முடியுமா?

அண்ணன் - ஆன்மீகம் வேண்டாம். அன்னையைப் போதிக்கலாம். Mother First என குழந்தை எடுத்துக் கொண்டால், குழந்தைக்கு ஆன்மீக (psychic) தொடர்பு ஏற்படும். அதைத் தொடர்ந்தால் Mother's Joyஇல் முடியும்.

தம்பி - அதன் பிறகு இடையறாத நினைவு வேண்டுமா?

அண்ணன் - அது இல்லாமல் Mother's Joy வாராது. இதுவரை பெற்றோர் செய்துவிட்டால், குறையானவற்றை நாம் சொல்லலாம். சொல்வது எளிது, பயில்வது சிரமம்.

தம்பி - குழந்தையின் உடல் நலம் உயர்ந்து சிறு ஆசைகளை வென்று அழகையும் நன்றியறிதலையும் வெளிப்படுத்தி அன்னைச் சந்தோஷத்தைப் பெற வேண்டும். அண்ணன் - அதுவே சரி. நமக்குக் குழந்தை விஷயமாகச் சந்தேகம் வரும்பொழுது அன்னை எழுதியவற்றைப் பார்த்து தீர்த்துக் கொள்ள வேண்டும். Psychic Educationஇல் 10 சட்டங்கள் இவற்றையே வேறு வகையாகச் சொல்கின்றன. அவை பயன்படும்.

தம்பி - இதற்கு அப்பலன் வருமா? ஏன் இதுவரை யாருக்கும் வரவில்லை?

அண்ணன் - பலருக்குப் பல அளவுகளில் பலித்துள்ளன. ஆசிரமப் பள்ளியில் படித்த குழந்தைகள் எங்குப் போனாலும் முதலாக இருக்கிறார்கள். எந்த இடத்தில் நமக்குத் திருப்தி ஏற்படுகிறதோ அதுவே லிமிட்.

தம்பி - நாம் திருப்திப்பட்டால் முடிந்துவிடும்.

அண்ணன் - ஆம். தொடர்ந்து முன்னேற்றம் வேண்டும் எனப் பாடுபடவேண்டும். இந்தக் குழந்தைக்கு எல்லாம் சாதகமாக இருக்கிறது. படிப்பில் வெற்றி. பெற்றோர் சிறப்பானவர். ஒரு பள்ளியை ஆரம்பித்து எல்லாக் குழந்தைகளையும் உலகப் பிரசித்தி பெற வைக்கலாம். எல்லா ஆசிரியர்களும், எல்லாப் பெற்றோர்களும் இந்தப் பெற்றோர் போலிருந்தால் முடியும்.

தம்பி - மீண்டும் அடுத்தாற்போல் செய்ய வேண்டியதைச் சொல்லுங்கள்.

அண்ணன் -

  1. சிறப்பான உடல் நலம்.
  2. ருசியிலிருந்து ஆன்மீக ருசியை நாட வேண்டும்.
  3. அன்னைப் புத்தகங்களைப் பின்பற்ற வேண்டும்.
  4. Mother's Joy பெற வேண்டும். 

தம்பி - எந்தக் குழந்தையாலும் இது முடியுமா?

அண்ணன் - முடியும். டென்ஷன், complaint போன்ற வேண்டாத அம்சங்களிருக்கக் கூடாது. உலகப் பிரசித்தி பெற்ற இலக்கியங்களை இக்குழந்தை படிக்கிறது. அது பெரிய விஷயமல்லவா! உணர்வு பக்குவப்படும்.

நம்பிக்கை, பக்தி, முயற்சி ஆகியவை முழுமை பெற வேண்டும். Psychic educationஇல் உள்ள 10 சட்டங்களைப் பின்பற்ற வேண்டும்.

தம்பி - ஆன்மீகப் பக்குவம் வாராமல் எவரும் சாதிக்கலாம் என்பது நம்ப முடியவில்லை.

அண்ணன் - ஆன்மீகப் பக்குவம் என நாம் நினைப்பது மோட்சம் பெறத் தகுதி. அது ரிஷிகளுக்குத்தான் உண்டு. 1950க்கு முன் காரில் யார் போக முடியும்? அன்று யார் காரில் போக முடியாதோ அவர்கள் இன்று கார் வாங்கும் நிலையிலிருக்கிறார்கள். ஏனெனில் உலகம் மாறிவிட்டது. ஆனால் இன்றும் கார் வாங்க எல்லோராலும் முடியாது. காரில் போகாதவர் உண்டு.

தம்பி - சத்திய ஜீவிய சக்தி 1956இல் வந்துவிட்டதால் நிலைமை மாறிவிட்டதா?

அண்ணன் - இன்று வேண்டிய பக்குவமும், அன்று தேவைப்பட்ட பக்குவமும் வேறு.

தம்பி - அன்று வேண்டியது ஆன்மீகப் பக்குவம், ரிஷிகள் பெற்றது மோட்சத் தகுதி. இன்று என்ன பக்குவம் தேவை?

அண்ணன் - இன்று ஆன்மீகப் பலன் உலகுக்கு வந்துவிட்டது. அன்பர் போய் அதைக் கொண்டு வரத் தேவையில்லை. அதை அனுபவிக்க ஒரு பக்குவம் வேண்டாமா? அதுதான் நமக்குத் தேவையானது. அன்று தேவைப்பட்டது மோட்சத் தகுதி. இன்று மோட்சத் தகுதியை அன்னை அன்பர்கட்கு அளிக்கிறார். பெற்று அனுபவிக்கும் தகுதி வேண்டும்.

தம்பி - கடையில் சாமான்கள் விற்கின்றன. அவற்றைப் பெற்றுப் பயன்படுத்த ஒரு தகுதி வேண்டும் அல்லவா? அதைப்போல் அன்னை தரும் அருளைப் பெறும் தகுதி வேண்டும் என்கிறீர்களா? அன்று ஓட்டுரிமை இல்லாதவர்க்கு இன்று MLA, மந்திரியாகும் வாய்ப்புண்டு. அதைப் பெறும் தகுதி வேண்டுமல்லவா?

அண்ணன் - அந்தத் தகுதி பெரும்பாலான இந்தியர்கட்குண்டு. அத்துடன் பொய், சூது, வாது, கலந்துள்ளது. பொய் சொல்லக் கூடாது எனில் அதில் தேறுவது குறைவு. அடக்கம் வேண்டும் எனில் கொஞ்சம் பேரே தேறுவார். இன்று தேவையான பக்குவம் எளிது. அன்று தேவையான பக்குவம் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தது போன்றது. இன்று அமெரிக்கா போக வர பணமிருந்தால் போகலாம். இரண்டும் மலையும் மடுவும் போன்றன.

தம்பி - எந்தக் குழந்தையும் உலகப் பிரசித்தி பெறலாம் எனில் பெற்றோர் அன்னை பக்தருக்குரிய இலட்சணத்துடனிருந்தால் போதுமா?

அண்ணன் - அன்பர்கட்குரிய தகுதிக்கு அவர்கள் பெறக் கூடியன ஏராளம். அது நம்ப முடிவதில்லை. குழந்தை விஷயம் அவற்றுள் ஒன்று. இவற்றையெல்லாம் சொன்னால், "யாராவது இதுவரை செய்திருக்கிறார்களா?” எனக் கேட்பார்கள்.

தம்பி - அது நியாயமான கேள்விதானே.

அண்ணன் - அப்படி ஒருவர் பெருஞ்செல்வம் சம்பாதித்தார். அதைப் பார்த்து யாராவது பின்பற்றுகிறார்களா? இல்லை.

தம்பி - ஒருவர் செய்தால் உடனே பலரும் செய்யமாட்டார்கள். பலரும் செய்தபின், இனிச் செய்யாமலிருந்தால் நாம் விடுபடுவோம் என்றால் செய்வார்கள்.

அண்ணன் - அவர்கள் followers பிறரைப் பின்பற்றுபவர்கள். நான் சொல்லும் முயற்சியை அவர்கள் ஏற்கமாட்டார்கள். Pioneers முன்னோடியானவரே ஏற்பர்.

தம்பி - தகுதி என்றால், 1) நல்லவராக 2) திறமைசாலியாக 3) நேர்மையானவராக 4) முன்னோடியாகவுமிருக்க வேண்டுமா?

அண்ணன் - அன்னை கொடுப்பது புதியது. ஆனால் முறை பழைய முறையாகும். நீ சொல்வதற்கும், நான் சொல்வதற்கும் உள்ள வித்தியாசம் ஒன்று. எப்படியாவது எல்லோரும் பெரும்பலன் பெற வேண்டுமென நீ நினைக்கிறாய். அது நடக்காது. நான் சொல்வது எட்டாத பலனை அன்னை எட்டும் அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். பெறும் தகுதியுள்ளவர் - உற்பத்தி செய்யும் தகுதியில்லை - முன்னோடியாகப் பெறலாம்.

தம்பி - இந்தக் குழந்தைக்குப் பலிக்குமா?

அண்ணன் - இதன் பெற்றோர் முன்னோடிகள். எல்லாத் தகுதிகளும் இவர்கட்கு இருக்கின்றன. அன்னையை இதற்குண்டான அளவில் ஏற்பது மட்டும் வேண்டும்.

தம்பி - அவர்களுக்குச் சொல்வதற்கு முன் நான் இதைச் செய்ய வேண்டும்.

அண்ணன் - அது சரி.

தம்பி - நாம் ஆன்ம விழிப்போடிருக்க வேண்டும் (conscious) என்று கூறுகிறீர்கள்.

அண்ணன் - இக்குழந்தையின் பெற்றோர் consciousஆக விழிப்போடிருக்கப் பிரியப்பட்டால் அவர்கள் செய்ய வேண்டியதை 10 சட்டம் - 7 எனச் சொல்லலாம் - Psychic Education சைத்தியப் புருஷனுக்குரிய கல்வியில் கூறுகிறார்கள்.

தம்பி - அது யாராலும் முடியாது.

அண்ணன் - இப்பெற்றோர் சிறப்பானவர்களானதால் அந்தப் 10 சட்டங்களின் கரு ஏற்கனவே இவர்கள் வாழ்விலிருக்கும். அதனுடன் அன்னையைச் சேர்த்துப் பூர்த்தி செய்தால் இவர்கட்குப் பலிக்கும்.

தம்பி - கணவன், மனைவி இருவரும் வாழ்க்கையைச் சேவைக்கு அர்ப்பணம் செய்துவிட்டார்கள். இது போன்றவரை உன் அனுபவத்தில் கேள்விப்பட்டிருக்கிறாயா?

அண்ணன் - மேலும் அன்னைக்குரிய அம்சமும் இவர்கள் சேவையில் உள்ளது. எவரும் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பது என்பது சாமானியமானதன்று. மேலும் அவர்கள் சேவைக்குரிய பணத்தை அவர்கள் திரட்ட முயல்வதில்லை. கணவன் ஆடிட்டர், கம்ப்யூட்டர் expert. தாம் சம்பாதித்துச் சேவையாகப் பள்ளியை நடத்துகின்றனர்.

தம்பி - இது அன்னைக்குரியதல்லவா? சேவை சரியாக இருந்தால், நம் பணம் முழுவதையும் சேவைக்குக் கொடுத்துவிட்டால், பணம் சேவையை நாடி வரும் என்பது அன்னைச் சட்டம். அதை இவர்கள் பல ஆண்டுகளாகச் செய்துவிட்டனர். பணமும் இவர்களை நாடி வருகிறது.

அண்ணன் - அன்னைச் சட்டங்கள் ஆயிரம். ஒன்றை perfectஆக, பூரணமாகக் கடைபிடித்துவிட்டால், அப்பூரணம் perfection நம்மைப் பிரம்மத்திற்கு (Absolute) அழைத்துச் செல்லும் என்பது உண்மை.

தம்பி - அப்படியானால் Psychic Education சைத்தியக் கல்வியின் 10 சட்டங்களை இவர்களால் பின்பற்ற முடியுமா?

அண்ணன் - அதன் சாரம் இவர்கள் வாழ்விலிருக்கிறது. அதை விளக்கமாகத் தெரிந்து, அன்னையை அச்சட்டங்கள் கூறுவதுபோல் ஏற்றுக்கொண்டால், குழந்தை உலகப் பிரசித்தி பெறாது, யோகியாகும்.

தம்பி - எனக்கு அந்தச் சட்டங்களெல்லாம் தெரியும். நினைக்கவே முடியாது. இவர்களிடம் சொல்லட்டுமா?

அண்ணன் - பெற்றோர் விவரம் தெரிந்தவர்கள். அதிகம் படித்தவர்கள். அன்பர்கள். ஏற்கனவே இப்பாதையில் செல்பவர்கள். அவர்களே இச்சட்டங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். சொல்லிப் பார்.

தம்பி - முதல் சட்டத்தில் தோல்வி. அறிவை நம்பாதே, ஆன்மாவை நம்பு. இரண்டாம் சட்டம் இவர்கள் பின்பற்றுவதாக இருக்கும். சௌகரியத்தைத் தேடாதே. இவர்கள் சௌகரியத்தைத் தேடுவதில்லை. என்றாலும் அன்னை கூறுவது உடலை விழிப்புறச் செய்வதற்கல்லவா? உடல் விழிப்புறும் அளவு சௌகரியத்தைத் தேடாமலிருக்க முடியுமா?

அண்ணன் - கடைசி 4 சட்டங்களை (உண்ணும் முன்னும், உறங்கும் முன்னும், பேசு முன்னும், செயல்படும் முன்னும் சமர்ப்பணம் செய்) இவர்கள் குழந்தை விஷயத்தில் பின்பற்றினால் இந்த முயற்சியை ஆரம்பிக்கலாம். அதற்கு நல்ல பலனிருக்கும். சௌகரியத்தைத் தேடாதே எனில் பொதுவாக அசௌகரியத்தைத் தேடு என நினைப்பார்கள். இங்கு விசேஷம் என்னவென்றால் உடலை அதன் பழக்கப்படி அனுமதிக்காதே. முக்கிய உதாரணத்தைச் சொல்கிறேன். தியானம் செய்ய பூஜை அறையில் தரையில் உட்கார்ந்தால் தியானம் வரும். 4 பேர் நாற்காலியில் உட்கார்ந்து தியானம் செய்ய வேண்டுமானால், "ஏன் பூஜை அறையில் தரையில் உட்காருவோமே" என்று நினைக்கிறோம்.

தம்பி - தரையில் உட்கார்ந்து தியானம் செய்வதுதான் தியானம்.

அண்ணன் - கவனிக்க வேண்டியது என்ன? இது ஒரு பழக்கம். நாம் பழக்கத்தைப் புனிதமாக்கிவிட்டோம். எனக்குப் பழக்கப்படிச் சௌகரியமாக இருக்கிறது என்று சொல்வதை நாம் தரையில் உட்கார்ந்தால் தியானம் வருகிறது என்கிறோம்.

தம்பி - சூட்சுமம்தான் முக்கியம். பழக்கத்தின் பேரால் நடக்காதே. வேலைக்குரியவற்றை ஏற்றுக்கொள் என்பதே கரு அல்லவா? இப்படிப் பார்த்தால் காபி சாப்பிடுவது பழக்கம், வேண்டியவரைப் பார்த்துச் சிரிப்பது பழக்கம், ஏன் தியானமே ஒரு பழக்கம் என்பதால்தான் அன்னைக்குத் தியானம் பிடிக்கவில்லை.

அண்ணன் - எந்தச் சட்டத்திலும் சட்டத்தைவிட அதனுள் கருவான நுணுக்கம், சூட்சுமத்தைத் தெரிந்து பின்பற்ற வேண்டும். பணம் வசூல் செய்யாமலிருப்பது அன்னை சட்டம். அதுவே நம் சுபாவத்திற்கு வசூல் பிடிக்கவில்லை என்றால், வசூல் செய்யாதது சுபாவத்தைப் பின்பற்றுவதாகும்.

தம்பி - அப்படிப்பட்டவர் வசூலுக்குப் போக வேண்டுமா?

அண்ணன் - அப்படியில்லை. நாம் எதைப் பின்பற்றுகிறோம்? சுபாவத்தைச் சௌகரியமாகப் பின்பற்றினால் அது தவறு.

தம்பி - அடுத்த சட்டம் அதைவிடக் கடினம். "பிடிக்கும் என்பதால் செய்வதைவிட, உனக்கு அமைந்த கடமைகளை விருப்பமாகச் செய்". இதைப் பின்பற்ற நாம் தலைகீழாக மாறவேண்டும்.

அண்ணன் - நமக்குப் பிடித்த வேலைகள் சமயத்தில் அன்னைச் சட்டமாக இருக்கும். நாம் நமக்குப் பிடித்தது என்பதால் செய்துவிட்டு "Mother’s Grace” அருள் என்போம்.

தம்பி - நாலு பேரோடு சுமுகமாகப் பழகுபவருக்கு ரிஸப்ஷன் வேலை கொடுத்தால் அருள் என்று சொல்கிறோம். அதையும், நமக்குப் பிடிக்கிறது என்று செய்வதைவிட இந்த வேலையில் அன்னையை வெளிப்படுத்த - சமர்ப்பணம் செய்ய - முயலவேண்டும். அடுத்த சட்டம் "பிறரைக் குறை கூறாதே". இப்பெற்றோர்கள் ஏற்கனவே இப்படித்தான் இருக்கிறார்கள். அடுத்தது "ஒவ்வொரு நிமிஷமும் முன்னேற முயல வேண்டும்". இதுவும் இவர்கள் பின்பற்றும் சட்டம்.

அண்ணன் - அது சரி. அதாவது இப்போதைக்குச் சரி. இந்தச் சட்டம் ஏன் ஏற்பட்டது? பழக்கம் ஏற்படக்கூடாது என்று இது கூறுகிறது. இவர்கள் பள்ளியில் உயர்ந்த முறையைப் பின்பற்றிப் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள். இது நாளாவட்டத்தில் பழக்கமாகும். அது கூடாது. பிறகு பார்க்கலாம். அடுத்த சட்டம் இவர்களுக்குத் தெரியாது. "புறநிகழ்ச்சிகள் அகவுணர்வைப் பிரதிபலிக்கும்".

தம்பி - அதை ஏற்றுக் கொண்டால், நமக்குப் பயித்தியம் பிடித்துவிடும். இவர்கள் பள்ளியிலிருந்து 7, 8 குழந்தைகளை எடுத்துக்கொண்டு போன பெற்றோர்கள், இவர்களைக் குறை கூறினர். நம் சட்டப்படி, "நம் மீது பிறர் குறை கூறினால், நமக்குப் பிறர் மீது குறையிருக்கிறது" எனப் பொருள் என எடுத்துக் கொள்ளவேண்டும். அதெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம். இது பெரிய சட்டம்.

அண்ணன் - மற்ற 4 சட்டங்களும் சமர்ப்பணம். அதை மேற்கொண்டால் அது யோகம். முதலில் குழந்தையைச் சமர்ப்பணம் செய்ய ஆரம்பித்தால் பெரும் பலன் தெரியும். பிறகு எல்லாவற்றையும் சரி செய்யலாம்.

தம்பி – T.V. வியாபாரி கடையை மூடவேண்டும் என்றாரே. அவர் பிழைத்துக் கொண்டார். அவர் இப்பொழுது அன்னையைக் கடைக்கு அனுப்புகிறார். வியாபாரம் 15% அதிகமாயிருக்கிறது என்றார்.

அண்ணன் - அவர் 15%க்குச் சந்தோஷப்படுகிறார். அதைக் காப்பாற்றுவது கடினம். அதைச் செய்துவிட்டு நம்மைக் கூப்பிட்டால் மீதி 85%ஐயும் அதிகப்படுத்திக் கொடுக்கலாம்.

தம்பி - இப்பெற்றோர் அன்னையை அனுப்புவதை ஏற்றுக் கொண்டால், என்ன செய்ய வேண்டும்?

அண்ணன் - அது உயர்ந்த முறை. 15% இல்லை, 15 மடங்கு பலன் தரும் முறை. இப்பெற்றோர் மிகவும் உயர்ந்த பழக்கங்களுடையவர்கள். Typical Indians. நம் நாட்டுக் கலாச்சாரம் அறிந்தவர்கள். இவர்களுக்கு அன்னையை அனுப்பும் முறை ஏராளமாகப் பயன்படும். ஆனால் இவர்களுக்கு அன்னை என்றால் என்ன? She is a consciousness அன்னை என்பது ஜீவியம் என்று புரிந்தால், அதை மனதால் ஏற்றுக்கொண்டால், இவர்கட்கு முறையே தேவையில்லை.

தம்பி - குழந்தை பிரபலம் அடைவது அப்புறமிருக்கட்டும். அற்புதமாகக் குழந்தை மாறிவிடும். அமைதியும், ஆனந்தமும் ஊற்றெழும் குழந்தையாகிவிடும். அன்னையை அதுபோல் ஏற்பார்களா? குழந்தை அன்னையை ஏற்குமா என்பதே முக்கியம். குழந்தைக்காக எதுவும் செய்யக்கூடிய பெற்றோர் என்பதால், அவர்கள் ஏற்கலாம்.

அண்ணன் - மனிதத் தன்மை அரிது. மனிதத் தன்மையைத் தெய்வத் தன்மையாக ஏற்கும் யோகம் இது. குழந்தை மேலுள்ள பாசம், அன்பாக மாறினால், அதனுள் எல்லாம் அடக்கம்.

தம்பி - அது ஏற்பட நம்முள் அன்பு (divine love) உற்பத்தியாக வேண்டுமே. அன்பு என்றால் நம் குழந்தைக்கு மட்டுமல்லவே, அனைவருக்குமாயிற்றே. அது ஏசு, புத்தர் நிலையாயிற்றே.

அண்ணன் - அன்னை நம்மையெல்லாம் கடவுளாகச் சொல்கிறார். அதனால் அதை நம்மிடம் எதிர்பார்க்கிறார். அன்பர்கள் குறைந்தபட்சம் அன்பு செலுத்த வேண்டும்.

தம்பி - கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. பின்பற்ற வழியுண்டா?

அண்ணன் - அன்னையை consciousness ஜீவியம் என அறிந்து ஏற்றுக்கொண்டால், நெஞ்சில் உள்ள பாசம் அன்பாக மாறும்.

தம்பி - ஓஹோ! அதனால்தான் ஸ்ரீ அரவிந்தர் எந்த முறையும் இந்த யோகத்திற்குத் தேவையில்லை என்றாரோ? ஆசனமும், பிராணயாமமும் அன்பை உற்பத்தி செய்யா.

அண்ணன் - இந்த யோகத்திற்கு பகவான் கூறும் முறை ஒன்றே, Opening. "சத்தியத்தை நான் மேலேயிருந்து கீழே கொண்டு வந்துள்ளேன். Opening விழிப்பாக அதை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்கிறார். அந்த விழிப்பு அன்பு சுரக்கும் இதயம்.

தம்பி - அன்பு பிறந்தது என்பதற்கு என்ன அடையாளம்?

அண்ணன் - எப்பொழுதும் எந்தக் காரணமுமில்லாமல் சந்தோஷம் அபரிமிதமாக நிதானமாகப் பொங்கி ஊற்றெழுந்தால் அன்பு உள்ளே உற்பத்தியாயிற்று எனக் காட்டும்.

தம்பி - சும்மாயிருந்தால், ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதே அது தோன்றக் கூடாதா?

அண்ணன் - அதுவே சரியான விளக்கம். நாம் பேச்சுத்துணை தேடுகிறோம். எதையாவது செய்தால் தேவலைபோல இருக்கிறது. துணை தேடினால் vital உணர்வுக்கு நிதானமில்லை என்று பொருள். எதையாவது செய்தால் தேவலை என்றால் physical urge உடலில் அரிப்பு இருக்கிறது என்றாகும். எதையாவது யோசனை செய்தபடியிருந்தால், புரிய வேண்டியது பாக்கியிருக்கிறது என்று பொருள். உடல், உணர்வு, மனத்தின் குறைகளைக் காட்டும் அடையாளங்கள் இவை.

தம்பி - குறைகள் போய் நிறைவு வந்தபிறகு தானே அன்பு சுரக்கும்.

அண்ணன் - அது தவசிக்குரியது. யோக நிலை. நாம் அதை இலட்சியமாகக் கொண்டு குழந்தையிடம் தாயன்பு செலுத்துவதற்குப் பதிலாக உயர்ந்த அன்பு செலுத்த முயல்வது நாம் எடுத்துக் கொண்டதற்கு உதவும்.

தம்பி - அதைச் செய்தால், அன்னையை ஜீவியமாக அறிவது அன்பு சுரக்க வழி செய்யும்.

அண்ணன் - அது சரி, அது நம் போன்றவர்க்கு அதிகபட்ச யோக முயற்சி. மனதில் அன்பு (divine love) இருப்பது மிக உயர்வு. அப்படிப்பட்டவர்க்கு எவருக்கும் கட்டுப்படாத மனிதர்கள், பிரச்சினைகள் கட்டுப்படும். 15, 20 வருஷமாக ரேசுக்குப் போகிறவர், சீட்டாடுபவர், பெருமுயற்சி செய்து குடியைவிட முடியாதவர், போன்றவர் அன்பு உள்ளவரைச் சந்தித்தால், அவர் பார்வை அவர்களை மாற்றும். கருமி அவரிடம் தாராளமாக நடப்பான்.

தம்பி - அது அன்னைக்குரிய நிலையன்றோ?

அண்ணன் - அன்னையை ஏற்பது எனில், அன்னை ஏதாவது ஓர் அம்சத்தில் நம்மை அவர்கள் நிலைக்கு உயர்த்தி விடுகிறார்கள்.

தம்பி - அப்படியானால், நமக்கெல்லாம் அன்னை என்றால் என்ன என்று தெரியாது என்று கூற வேண்டும்.

அண்ணன் - படிப்பு என்ற தலைப்பில் அன்னை 5 வகைகளான கல்வியை விவரிக்கின்றார். Mental education, Vital education, Physical education, Spiritual education, Psychic education. மனம், உணர்வு, உடல், ஆன்மா, சைத்தியப் புருஷனுக்குரிய கல்வி என்று கூறுகிறார்கள். இதைப் பின்பற்றினால் போதும்.

தம்பி - அன்னையை ஏற்க மனம் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். அன்னையை ஜீவியம் என்று அறிவதை மேலும் விளக்க வேண்டுகிறேன்.

அண்ணன் - நாம் நம் சூழ்நிலை முழுவதையும் அறிவதில்லை. உதாரணமாக கோவாப்பரேட்டிவ் சொஸைட்டி உள்ள ஊரில் அதன் பிரசிடெண்ட் பாங்க்கிற்குப் போய் எங்கள் ஊருக்கு லோன் தர வேண்டும் எனக் கேட்கிறார். சொஸைட்டிக்கே எல்லா அதிகாரங்களும் உண்டு என இவருக்குத் தெரிவதில்லை. பல்கலைக் கழகத்தில் சேர்ந்தால் நாம் பட்டம் பெறுகிறோம். நம் நாட்டில் Ph.D. இன்று பரவலாகத் தெரிகிறது. ஒரு பல்கலைக்கழகத்தில் அதன் 40 ஆண்டு வாழ்வில் ஆங்கிலத்தில் ஒருவரே Ph.D. எடுத்தார். நியூடன், ஐன்ஸ்டீன், மில்டன் ஆகியவர்களை உருவாக்கியது பல்கலைக்கழகங்கள். நம் நாட்டில் 225 பல்கலைக்கழகங்கள் அதுபோல் செயல்பட முடியும் என நாம் நினைப்பதில்லை.

தம்பி - ஆமாம். அன்னையிடம் வரும் பிரார்த்தனைகளில் முக்கியமானவை திருமணம், வேலை, கடன் ஆகியவை.

அண்ணன் - பிரம்மம் என்பது அனந்தம் (infinity) என்ற தத்துவத்தை நாம் அறிவோம். ஆனால் வாழ்வில் அனந்தத்தை நாம் நினைப்பதில்லை. நமக்குத் தேவையானவை - காற்று, நீர், உணவு, உடை, பணம் - அளவு கடந்திருக்கின்றன. வாழ்வால் அளவில்லாமல் நமக்கு இவற்றைத் தரமுடியும் எனவும் நினைவு வருவதில்லை. இதையே practical concept of infinity நடைமுறையில் அபரிமிதம் என்று கூறுகிறோம்.

தம்பி - புரிகிறது. இதன் உற்பத்தி ஸ்தாபனம் அன்னை என நாம் அறிய வேண்டுமா?

அண்ணன் - ஆம். டெலிபோன் உள்ளூரில்தான் பேச உபயோகப்படும் என்று ஒருவர் நினைத்தால், அவர் வெளியூரில் உள்ளவர்களைக் கூப்பிடவும் நினைக்கமாட்டார். டெலிபோன் வெளிநாட்டிலுள்ளவரிடமும் பேசும். அன்னை என்பது ஜீவியம் என்று அறிந்தால் அதற்குத் தத்துவரீதியாக என்ன அர்த்தம்? நடைமுறையில் எப்படி அதைப் புரிந்து கொள்வது? தத்துவரீதியாக உலகத்தைச் சிருஷ்டித்தவர் அன்னை எனவும், நடைமுறையில் நம் வாழ்வில் எதையும் சிருஷ்டிக்க வல்லவர் எனவும் புரிய வேண்டும்.

தம்பி - உதாரணமாக கடற்கரையில் நிலம் உள்ளவர் போர் போட்டால் தண்ணீர் உப்பாக இருக்கும் என்று அறிவார். நல்ல தண்ணீர் கிடைக்க வேண்டும் என நினைக்க முடியாது. அன்னை கடலருகிலும் அன்பருக்கு நல்ல தண்ணீர் கொடுப்பார் என நம்மால் நம்ப முடிவதில்லை.

அண்ணன் - நடுக்கடலிலும் அன்னை நல்ல தண்ணீர் கொடுப்பார் என்பது உண்மை. நாம் பேராசையால் கேட்டால் பலிக்காது. அன்னைக்கு இந்த சக்தியுண்டு. அதை நாம் நம்பிக்கையால் பெற வேண்டும் எனில் பலிக்கும்.

தம்பி - அது பெரிய நம்பிக்கை.

அண்ணன் - அந்த நம்பிக்கை எப்படி வருகிறது? அன்னை யார் எனத் தெரிந்தால் அவர்களால் இதை எப்படிச் செய்ய முடியும் எனத் தெரிந்தால், அந்த ஞானம் சக்தியுள்ளது. Knowledge is Power.

தம்பி - அதுபோல் அன்னையை அறிய வேண்டுமானால், அன்னையால் எதுவும் முடியும்.

அண்ணன் - பொதுவாகப் பேசுவதைவிட, குறிப்பாகப் பேசினால் விளங்கும். ஹைகோர்ட்டில் கேஸ் தோற்றபின் நம்பிக்கை வாராது. அப்பொழுது வரும் நம்பிக்கைதான் நம்பிக்கை. எதற்கும் அன்னையிடம் வழியுண்டு. வழியில்லை என்றால் அன்னை வழி ஏற்படுத்திக் கொள்வார் என்பதை அறிதல் அவசியம்.

தம்பி - அன்னையை infinity அனந்தமாக அறிய வேண்டுமா?

அண்ணன் - தத்துவம் அது பற்றிக் கூறுவதைப் படிக்க வேண்டும். நடைமுறையில் அதைப் பார்க்க வேண்டும். பார்த்ததைப் புரிந்து ஏற்று நம்ப வேண்டும்.

தம்பி - ஒரு தொழிலதிபருக்கு சர்க்கார் 18 கோடி நஷ்டம் வைத்தது. சர்க்காரே மாறியது. இனி எப்படிக் கேட்பது? யாரைக் கேட்பது? கேட்க முடியும், சர்க்காரைக் கேட்க சட்டமில்லை என்றால், அன்னையைக் கேட்க நியாயம் உண்டு என அவர் நம்பியபின் அப்பணம் வந்தது உனக்குத் தெரியாதா? நடைமுறையில் எதுவும் அன்னையால் முடியும் என்ற நம்பிக்கை அறிவின் அடிப்படையில் ஏற்படுவது, அன்னையை அனந்தமாக அறிவது என்று கூறுகிறீர்களா?

அண்ணன் - நமக்கு நடப்பவற்றை இக்கண்ணோட்டத்தில் ஆராய்ந்தால் இது அன்றாட நிகழ்ச்சி என விளங்கும். விளங்குவது ஞானம். பலன் பெறுவது சித்தி. முடியாது, நடக்காது என்பது அன்னையிடம் இல்லை என மூட நம்பிக்கையில்லாமல் அறிவது அன்னைக்குரிய நம்பிக்கை. நம்பினால் நடக்கும், நடந்தவற்றை ஆராய்ந்தால் புரியும்.

தம்பி - இதைப் பெறும் மனப்பான்மை எது?

அண்ணன் - நம்மால் முடிந்த அனைத்தையும் ஆர்வமாக, சிறப்பாக நடத்தி முடிக்கும் மனப்பான்மை.

தம்பி - இந்தக் குழந்தை படபடப்பாக இருக்கிறது. நாமெப்படிப் புரிந்து கொள்கிறோம்? சிறு வயது, படிப்பு அதிகம். படபடப்பு வருவது நியாயம். நியாயம் என நம்பினால் அது போதாது. நியாயம் சரி. அது அனைவருக்கும் சரி. நமக்குச் சரியில்லை.

இந்தப் படபடப்பு பேரமைதியாகும் என்று புரிய வேண்டும். அதை நம்ப வேண்டுமா?

அண்ணன் - நம்ப வேண்டும். நம்மால் அதை அகற்ற, முடிந்ததைச் செய்ய வேண்டும். முடியுமானால், படபடப்பை அமைதியாகத் திருவுருமாற்ற முனைய வேண்டும்.

தம்பி - எப்படித் திருவுருமாற்றுவது?

அண்ணன் - முதற்காரியமாக அது திருவுருமாறும் என்று நம்புவது, பிறகு அதற்காகப் பிரார்த்திப்பது. முடிவாக எதைச் செய்தால் குழந்தை அமைதியுறும் எனச் சிந்தித்துத் தெரிந்தவற்றை எல்லாம் செய்து முடிப்பது.

தம்பி - நம் கடமை முடியுமிடத்தில் அன்னை ஆரம்பிப்பார் என நம்புவது!

அண்ணன் - நாம் முடித்த பின், அன்னையின் செயலை ஆராய்ச்சிக் கண்ணுடன் புரிந்துகொள்வது பயன் தரும். அதை இரு வகைகளாக அன்னை செய்கிறார். 1) நமக்குத் தெரியாமல் உள்ள potentials வசதிகளை முன்னுக்குக் கொண்டு வருகிறார். 2) எந்த வசதியுமில்லாத இடத்துப் புதிய வசதியை உற்பத்தி செய்கிறார்.

தம்பி - பாலைவனத்தில் நீரூற்று வந்தது. விவசாயத்திற்கு புதிய சட்டம் போட்டுக் கடன் கொடுத்தார்கள். தெரியுமே!

அண்ணன் - பாலைவனத்தில் உள்ள நீரை நாம் அறியவில்லை. அன்னை நமக்கு அதை அறிவித்தார். விவசாயிக்கு உதவச் சட்டமில்லை. சட்டத்தை அன்னை ஏற்படுத்தினார் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

தம்பி - நம் தேவையைப் பூர்த்தி செய்வதே அன்னைக்குக் கடமையா?

அண்ணன் - அது சரி. அதைவிட அன்னை சக்திக்குத் தேவையைப் பூர்த்தி செய்யும் திறனுண்டு எனப் புரிவது நல்லது.

தம்பி - நமக்குத் தேவையிருந்தால், எதுவானாலும், பூர்த்தி செய்யும் திறனுண்டு என்பது உண்மையா? அப்படியானால் நாம் தேவையை உற்பத்தி செய்தால் அன்னை உடனே பூர்த்தி செய்வாரா?

அண்ணன் - இதுவே கருவான இடம், நாம் புதிய தேவைகளை நாடினால் அது பூர்த்தியாகும். மனிதனுடைய கடமை புதிய தேவைகளை ஏற்படுத்திக் கொள்வது.

தம்பி - இப்படிச் சொன்னால் எளிமையை நாடுபவர்கள் ஏற்கமாட்டார்கள்.

அண்ணன் - முதலிலேயே சொல்லிவிட்டேன். மனப்பான்மை முக்கியம். புதிய தேவையை நாடும் மனம் அதை நம் முன்னேற்றத்திற்காக நாடினால் அது இலட்சியம்.

தம்பி - நீங்கள் சொல்பவற்றையெல்லாம் கேட்டால் விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன, நாம் அறியவில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது.

அண்ணன் - பெரும்பாலோர் அன்னையை ஏற்றதன் சிறப்பை அறிவதில்லை.

தம்பி - ஓர் உதாரணம் சொல்லுங்களேன்.

அண்ணன் - வாழ்வு என்று நாமறிவதில் புதியது, புதிர், பெரியது, வாய்ப்பு, ஆச்சரியமில்லை.

தம்பி - சரி.

அண்ணன் - அன்னை வாழ்வில் புதியன உண்டு. பல விஷயங்கள் புதிராகும், பெரியது என்பது கலந்து வரும். எல்லாமே வாய்ப்புதான், இடறி விழுந்தால் ஆச்சரியம்.

தம்பி - நீங்கள் சொல்லும்பொழுது புரிகிறது. நாம் இதை இப்படி எடுத்துக் கொள்வதில்லை.

அண்ணன் - உதாரணம் எனத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. கவனித்தால் எல்லா விஷயங்களும் அப்படித்தான். வாழ்வில் டைப் அடிக்கப் போனால் டைப் கற்றுக் கொள்ளலாம். அன்னை வாழ்வில் டைப் அடிக்கப் போன இடத்தில் முதல் மந்திரி ஆபீசுக்கு வேலை கிடைக்கிறது. பணம் வசூல் செய்தால் அதிகம் கிடைக்கிறது. கடன் கேட்கப் போனால் இனாம் கிடைக்கிறது. அதுவரை தெரிகிறது. ஏன் அப்படி இருக்கிறது? அதன் மூலம் நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவதில்லை. அன்னையிடம் எந்தச் செயல் பின்னால் அன்னை, அனந்தம், பெருக்கம், அதிர்ஷ்டம் இருக்கிறது என்று அறிவதில்லை. அறிந்து, அதன் பயன் பெற முன்வர வேண்டும்.

தம்பி - அப்படி எதைப் புரிந்து கொள்ள வேண்டும்?

அண்ணன் - காரியம், செயல் (ACT) என்பதற்கு நூறு அம்சமுண்டு. அந்த அம்சங்கள் புரிந்தால் காரியம் புரியும். காரியம் புரிந்தால், ஊர் கட்டுப்படும். ஊர் கட்டுப்பட்டால், உலகை ஆளலாம். எல்லா அன்பர்கட்கும் அன்னை அளிப்பது அதுவே.

தம்பி - எந்தச் சிறு காரியம் ஆரம்பித்தாலும், அது சீக்கிரம் உலகின் உச்சிக்குப் போகிறது எனப் பார்த்திருக்கிறேன்.

அண்ணன் - சாயம் வாங்கப் போனார் முதலியார். கிடங்குக்காரர் "நான் புதியதாய் ஆரம்பிக்கப் போகும் கம்பனியில் டைரக்டர். 6 பேரைக் கம்பனி பிரான்சுக்கு அனுப்பப் போகிறது. எனக்கு ஒருவர் உண்டு. நம்ம ஜாதிப் பையன் B.E. I class மெக்கானிக்கல் யாராவது இருந்தால் சொல்லுங்கள்” என்றார். வாங்கப் போனவர் மாமா பையன் அப்படிப்பட்டவன். பையன் பிரான்சுக்குப் போனான். இன்ஜினியரானான். இப்பொழுது சொந்தமாகத் தொழில் நடத்துகிறான். பையன் அன்பன்.

தம்பி - இவருக்குக் கோடிஸ்வரர்கள் இருவர் பார்ட்னராக வந்ததை விட்டுவிட்டார் என எனக்குத் தெரியும்.

அண்ணன் - சாதாரணமாக இது நடப்பதில்லை. அன்பருக்கு நடக்காமலிருப்பதில்லை. இதே போல் மற்றோர் அன்பருக்கு வாய்ப்பு வந்து அவர் கோடிஸ்வரராகிவிட்டார்.

தம்பி - நமக்குத் தடையற்ற முன்னேற்றம் உண்டு. நாமே தடையாகிறோம் என்று புரிந்து கொள்ள வேண்டுமா?

அண்ணன் - அது எல்லாத் துறைகளிலும், எல்லா அன்பருக்கும், எப்பொழுதும் உண்டு என்பதை அன்பர்கள் அறிவதில்லை. 1 to infinity என்பதே அருள். ஒரு சமயம் வரும் வாய்ப்பை முழுவதும் பயன்படுத்திவிட்டால், வாய்ப்பு வளர்ந்தபடியிருக்கும். உச்சிக்குப் போகும்வரை நிற்காது. தடையேயில்லை. நாமேதான் தடை. நீ சொல்லும் குழந்தைக்கு எதிர்காலம் அப்படிப்பட்டது.

தம்பி - இரகஸ்யம் ACT செயல் என்பதைப் புரிந்து கொள்வதிலிருக்கிறது என்கிறீர்களா?

அண்ணன் - செயலுக்கு ராசியுண்டு, குணம் உண்டு, structure அமைப்புண்டு. ஒரு செயலைப் பூரணமாகப் புரிந்து கொண்டால் உலகமே அதனுள் அடக்கம். அதன் மூலம் உலகை ஆளும் திறன் எழும் என்பது ஆன்மீக அடிப்படை. அணுவினுள் பெருஞ்சக்தி மறைந்து இருப்பதைப்போல, இரகஸ்யம் எளியது, பெரியது.

  • கடவுள்கள் மனிதனோடு தொடர்புள்ளவரில்லை.
  • அன்னை கடவுள்களுடைய தாயார்.
  • பிரம்மத்துடன் நேரடியாக, நிரந்தரமான தொடர்புடையவர்.
  • பிரம்மம் அனந்தம்.
  • நம்மை அன்னை தேடி வருகிறார்.
  • நேரடியாக அன்னையை ஏற்பது, சரணாகதி. அது பூரணயோகம்.
  • நாம் எதன் மூலமாக - வளம், படிப்பு, தொழில், செயல் (act) - அன்னையை ஏற்கிறோமோ அதற்கு அனந்தமுண்டு. (செயல் அனந்தமானது).
  • நாம் செய்வதன் infinityயை அறிந்தால், அன்னை அதன் மூலம் நமக்கு INFINITY, பிரம்மத்தைக் காட்டுகிறார்.
  • குழந்தை நிரூபமா பெற்றோர்களுக்கு அன்னையை உணர்த்தும் கருவி.
  • பெற்றோர் அன்னையை ஏற்றால், நிரூபமா genius மேதையாகும்.
  • நிரூபமாவின் மேதாவிலாசத்தைக் கண்டால், பெற்றோர் அன்னையை அறியலாம். 

தம்பி - அன்னை அனந்தம், infinity, பிரம்மம். நம்மைத் தேடி வருகிறார். அவரை யோகமாக ஏற்க சரணாகதியை மேற்கொள்ள வேண்டும். வாழ்வில் ஏற்க நாம் செய்வது infiniteஆகப் பலிக்கவேண்டும் என்று கூறுகிறீர்களா?

அண்ணன் -

  • உலகில் வறுமை, துன்பம், நோய், மரணமுண்டு.
  • அன்னை வளமை, இன்பம், ஆரோக்கியம், நித்தியம்.
  • ஒருவர் அன்னையை சரணடைந்தால் உலகில் இவை அழியும்.
  • ஒருவர் செயலில் அன்னையை ஏற்றால், வாழ்வில் உலகப் பிரசித்தி பெறுவார்.
  • மனிதனைப் பிரம்மமாக்கும் சக்தி அன்னை.
  • மனிதனைத் தெய்வமாக்குவது அன்னை.
  • அது முடியாதவர், வாழ்வில் பேரதிர்ஷ்டத்தைப் பெறலாம் என்பதே அன்னை நமக்குச் சொல்லும் ஆன்மீகச் செய்தி. ஏற்க வாரீர் என அன்னை அழைக்கிறார். 

தம்பி - இப்படிச் சொல்லலாமா? படிப்பில் முக்கியம் குழந்தையின் மனம். நாம் சொல்லிக் கொடுக்கும்வரை படிப்புக்கு ஜீவனிருக்காது. குழந்தையே ஆர்வத்துடன் படித்தால் படிப்புக்கு ஜீவன் வரும், படிப்பு அனந்தமாகும். அதை இந்தப் பெற்றோர் செய்துவிட்டனர். படிப்பு என்பது மனம். மனம் ஜீவனின் பகுதி.

படிப்பில் ஜீவனைக் கண்டதுபோல், குழந்தையில் ஜீவனைக் காண்பது அடுத்தது.

அண்ணன் - சரியான விளக்கம். படிப்பு மனத்துடையது, முதற்படி. குழந்தை ஜீவனுக்குரியது, அடுத்த கட்டம். படிப்பைப் போற்றியதுபோல் இப்பெற்றோர் குழந்தையின் ஜீவனைப் போற்றினால், குழந்தை உலகப் பிரசித்தி பெறுவாள். அதுவே சிறிய பலன். அதேபோல் உலகிலுள்ள குழந்தைகள் அனைவரும் பிரசித்தி பெறுவது அடுத்த பெரிய பலன்.

தம்பி - இத்தனை வருடம் கழித்து அன்னையை இப்பொழுதுதான் புரிவது போலிருக்கின்றது.

அண்ணன் - இந்தச் செய்தியை நான் அடுத்த கட்டம், இரண்டாம் கட்டம், அன்னையை அதிகமாக ஏற்பது, அதிர்ஷ்டம் பெறுவது, 10 மடங்கு வருமானம் பெருகுவது எனப் பல ரூபங்களில் சொல்ல முயல்கிறேன்.

தம்பி - சொன்னால் எடுபடாது, செய்தால் நடைபெறும்.

அண்ணன் - செய்வதைப் பூரணமாகச் செய்தால் பலரும் பின்பற்றுவர். அப்படியில்லாவிட்டால் சூட்சுமமாக உலகில் பரவும்.

தம்பி - முதலில் ஆங்கிலத்திலும், விவசாயத்திலும், கிராமப் புணருத்தாரணத்திலும், நாடு வளம் பெறுவதிலும், வேலையில்லாத் திண்டாட்டத்தை அழிப்பதிலும், வன்முறையை நிறுத்துவதிலும் கண்டோம். இனி குழந்தைகள் படிப்பு, பெருவாரியான பணவரவு, நிரந்தரமான அதிர்ஷ்டம் ஆகியவற்றில் காணவேண்டும். ஒருவருடைய சிறப்பு உலகைக் காப்பாற்றும் என்பதை நாம் ஏற்று, அச்சிறப்பைப் பெற முயலவேண்டும்.

அண்ணன் - இவற்றிற்கெல்லாம் கரு, அன்னை யார், எப்படி நம் வாழ்வில் செயல்படுகிறார்கள் என அறிவது.

தம்பி - நம் நிலையிலிருந்து அன்னை நிலைவரை சொல்லிப் பார்த்தால் விளங்குமா? 

அண்ணன்
 
நாம்
அன்னை
 
சுயநலம்
பரநலம்
சுருக்கம்
பெருக்கம்
 
மனம்
சத்திய ஜீவியம்
வலி
ஆனந்தம்
வறுமை
வளம்
சிறியது
பெரியது
உலகம்
பிரபஞ்சம்
கவலை
சந்தோஷம்
தோல்வி
நிரந்தரமான வெற்றி
கெட்ட எண்ணம்
நல்லெண்ணம்
 
 
 
 
—>நம் குணங்களிலிருந்து அன்னை குணங்களுக்குப் போனால் வாழ்வில் அதிர்ஷ்டம் வரும்.
 
குணங்களையே கடந்து வந்தால் யோகம் பலிக்கும்.

 

                                                                                                                                                                   தம்பி - செயலுக்கு ராசி, குணம், அம்சம் உண்டு என்றால் என்ன?

அண்ணன் - நாம் சகுனம், பல்லி சொல்லுக்குப் பலன், விழுவதற்குப் பலன், சாஸ்திரம் என பலவற்றைச் சொல்கிறோம். படித்துவிட்டால், இவையெல்லாம் மூடநம்பிக்கைகள் என்கிறோம். நான் ஏற்கனவே சொன்ன கதையில் லிடியா,

ராணுவ ஆபீசர் முகாமுக்குப் போகிறாள். வண்டியில் ஏறும்பொழுது கால் இடறுகிறது. இது மேல்நாட்டுச் சினிமா. அவர்கட்குச் சாஸ்திரம் தெரியாது. திரும்பி வருகிறாள். ஓடிப் போகிறாள். ஓடிப்போவதை கால் இடறுவது காட்டுகிறது. நடந்த விஷயங்களை நினைத்துப் பார். நல்லதாக முடிந்தவை, கெட்டதாக முடிந்தவை ஆரம்பத்திலிருந்தே காட்டும். முக்கியமாக முதல் முறை ஆசிரமம் வந்ததை நினைத்துப் பார். இன்று உன் நிலைமையை அது விளக்கும்.

தம்பி - இதுதான் தெரியுமே. ஆயிரம் உதாரணம் உண்டு. திருமணமான அன்று வாழ்வு சுடுகாடாகிவிட்டது என 15, 20 வருஷமாகப் பதறியவர், சற்று நிதானித்து முதல் முறை அவர் பெண் வீட்டாரோடு சம்பந்தம் பெற்ற நாளை நினைவு கூறினார். அவர்கள் வீட்டில் காலையில் அவர் சாப்பிட்ட காபியும், 24 மணி நேரத்திற்குள் அவர் தலைமீது பேரிடி விழுந்ததும் நினைவு வந்தது.

அண்ணன் - கார், துரோகம், வாழாவெட்டி, சிறப்பான ஊழியரை வேண்டாம் என்றது, எஸ்டேட் வாங்கிய நிகழ்ச்சிகள் இதை நிரூபிக்கின்றன.

தம்பி - NGO கார் வாங்கினார். நமக்கும் காருக்கும் என்ன சம்பந்தம் என நினைத்துப் பார்த்தார். முதல் முறை அவர் தரிசனத்திற்கு வரும்பொழுது திருவிழா நாள் என்பதால் பஸ் கூட்டமாகி இடமில்லாமல், உடனிருப்பவர் கார் ஏற்பாடு செய்தது நினைவு வந்தது. 12 வருஷங்கள் கழித்து வரப்போகும் கார் முதல் நாளே அறிவித்துவிட்டது. நாம் கூறும் உதாரணத்தைவிட அன்பர்கள் முதல் முறை ஆசிரமம் வந்தபொழுது நடந்ததும், பிறகு இன்றுவரை அவர்கள் வாழ்வும் மிகத் தெளிவாகத் தொடர்பைக் காட்டும்.

அண்ணன் - செயலை அலசி, ஆராய்ந்து பார்த்தால், அதுவும் கடந்து போனதை ஆராய்ந்தால் தொடர்பு, விவரம் புரியும்.

தம்பி - சம்பளமும், இலாபத்தில் 5% பங்கும் எனக் கம்பனியில் மானேஜரானவர், இன்று தன் பெருஞ்சொத்து எப்படி வந்தது எனச் சிந்தித்தார். முதற் கம்பனியில் அவர் முதல் வருஷத்தில் மிகுந்த இலாபம் எடுத்துக் கொடுத்தபொழுது முதலாளி 5%க்குப் பதில் 10% கொடுத்தார். மானேஜர் 5% போதும் என்று 10%ஐ மறுத்துவிட்டார். முதல் வருஷம் 5 மாறி 10 ஆனது வளர்ச்சியைக் காட்டுகிறது. Short term கைக்கு மெய்யான ஆதாயத்தைக் கருதாது நீண்ட நாள் சேவையை மானேஜர் பாராட்டியதால் பெருஞ்சொத்து வந்தது.

அண்ணன் - நாம் முறையோடு செய்யும் காரியங்கள் முதலிலேயே அபரிமிதமாகப் பலனைக் காண்பிப்பது அளவு கடந்த வளர்ச்சிக்கு அறிகுறி.

தம்பி - தோட்டம் வாங்கியவர் முதல் அறுவடையைத் திருடன் கொண்டுபோனான் என்றார். 10 ஆண்டுகளில் தோட்டம் அவர் கையை விட்டுப் போயிற்று.

ஒரு ஸ்தாபனத்தில் ஒரு முக்கிய ஊழியர் துரோகம் செய்தபொழுது ஸ்தாபகர் அவருடைய முதல் கடிதத்தில் தன்னை "வைரம்” என விவரித்ததைக் கூறினார். தன்னையே ஒருவர் "வைரம்” என்றால் அது உண்மையிலேயே "கரி” என்று பொருள். பின்னால் வரும் துரோகத்தை "வைரம்” சுட்டிக்காட்டுகிறது.

அண்ணன் - நாம் சகுனம் எனப் பல குறிப்பிட்ட நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகிறோம். நிறைகுடம், சுமங்கலி நல்ல சகுனம் என்கிறோம். இப்புதிய கண்ணோட்டத்தில் எல்லாச் செயல்களும், அசைவுகளும் சகுனங்களாகும். நாம் அனுபவத்தால் அதை அறியவேண்டும்.

தம்பி - மார்வாரியிடம் நிலம் வாங்கப் பணம் கேட்கலாம் என்று ஓர் அன்பர் போனபொழுது, வழக்கத்திற்கு மாறாக அன்பரின் முதலாளியை மார்வாரி "நானே வந்து அவரைப் பார்க்கிறேன்” என்றார். முதலாளி பணம் வேண்டும் என்றார். அதேயிடத்தில் மார்வாரி சம்மதம் தெரிவித்தார். பிறகு நிலம் எளிமையாக ரிஜிஸ்டர் ஆயிற்று. அதே மார்வாரி நிலத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பும்பொழுது ரோடு ஓரம் உட்கார்ந்திருந்த குழந்தை ஓடிவந்து காரில் விழுந்தது. டிரைவர் மீது தவறில்லை. குழந்தையின் தவற்றுக்கு மார்வாரியிடம் பணம் கேட்டு வாங்கினர். மார்வாரிக்கு I.G. தெரியும் என்பதால் உடனே போலீஸ் வந்து காப்பாற்றியது. நிலத்தில் மார்வாரி செய்த தவற்றால் திட்டம் தோற்றபின், தான் செய்த தவற்றுக்கு மார்வாரி அன்பரை ஈடு கேட்டார். இதைக் கார் விபத்து முன்கூட்டியே அறிவித்தது.

அண்ணன் - ஒரு கண்ணாடிக்கு முன்னால் 15 பொருள்களிருந்தால் கண்ணாடி 15 பொருள்களையும் பிரதிபலிப்பதுபோல் செயல் சூழ்நிலையைப் பூரணமாகப் பிரதிபலிக்கும். நமக்குச் சில விஷயங்கள் மட்டும் தெரிகின்றன. வைத்தியர் நாடி பார்க்க கையைப் பிடிக்கிறார். அதனால் நாடி மணிக்கட்டில் மட்டும் இருக்கிறது எனப் பொருளில்லை. உடலெங்கும் நாடித் துடிப்புண்டு, இல்லாத இடமில்லை. மணிகட்டில் நாடி தெளிவாகத் தெரியும்.

தம்பி - பெற்றோர் குழந்தையைப் பூரணமாகக் கவனித்து ஒரு monograph ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதினால் நமக்கு அதிகம் புரியுமா?

அண்ணன் - மிகவும் உதவும். பொதுவாகக் குழந்தையைக் கவனிக்க - இந்தக் கண்ணோட்டத்தில் - பெற்றோர் பயிலவில்லை. ஆனால் அது மிகவுதவியாக இருக்கும். குழந்தையைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். எதையும் மறைக்கக் கூடாது. சொல்லக் கூச்சப்படக் கூடாது. சிறு வயதிலிருந்து குழந்தையைத் தாய் அறிவார். அதுபோல் நினைவு கூர்ந்து எழுதுவது மிகவுதவும். இது போன்ற ரிப்போர்ட் ஆங்கிலத்தில் எழுதினால் நல்லது. நம் நாட்டு வழக்கங்களைத் தமிழில் எழுதுவது பயன்படும்.

தம்பி - கருவான விஷயம் சமர்ப்பணம், அன்னையை அறிதல்.

அண்ணன் - எந்த விஷயமும் பெரியது (infinite). நாம் செயல்படும் பொழுது அதன் பெரிய அம்சத்துடன் தொடர்பு கொள்வதில் இரகஸ்யமிருக்கிறது. அன்னை எழுதியவற்றை அடிக்கடிப் பார்க்க வேண்டும். குழந்தை சண்டி செய்தால் அன்னை சண்டித்தனத்தைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று எல்லா 18 வால்யூம்களிலும் பார்க்க வேண்டும். அதற்கெதிரான சொல் நிதானத்தையும் பார்க்க வேண்டும். தொடர்புள்ள சொற்கள் எரிச்சல், கவலை போன்ற எல்லாச் சொற்களையும் பார்க்க வேண்டும்.

பெரிய சாதனைகளானாலும், பெரிய வாய்ப்புகளானாலும், எதிர்காலத்தை முழுவதும் மாற்றியமைத்த திருப்பங்களானாலும், அன்பர்கட்கு அது நடப்பது, முடிவு எடுப்பது - உருவாவது - என்பது 1 மணி அல்லது 2 மணி நேரத்தில் என்பதைக் கவனிப்பதில்லை.

தம்பி - செயலை (act) ராசி, அம்சம், குணம் என விவரமாக அறிந்தால் மேற்சொன்னதை அறிய உதவுமா?

அண்ணன் - அது சரி. நான் சொல்வது வேறு. அன்னை கொடுப்பன பெரியவை. அவற்றை வெகு குறுகிய காலத்தில் தருகிறார். பெரியதைக் கொடுக்க முடியாது. கொடுத்தால் நாளாகும். அன்னைக்குரிய விசேஷம் பெரியதைக் குறுகிய காலத்தில் - க்ஷணத்தில் எனவும் கூறலாம் - தருகிறார்.

தம்பி - இந்தக் குழந்தைக்கு அப்படிப் பெரிய எதிர்காலத்தை க்ஷணத்தில் தருவார் என்கிறீர்களா?

அண்ணன் - அன்னை அனைவருக்கும் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார், அதை நாம் தெரிந்து பலன் பெறத் தெளிவு வேண்டும் என்கிறேன்.

தம்பி - இங்கு வேண்டிய தெளிவு 3. தானே அன்னையை Consciousness-Force ஜீவிய சக்தி என அறிதல், செயலின் சூட்சுமம், பெரிய அம்சத்துடன் (infinity) தொடர்பு கொள்ளும் திறன்.

அண்ணன் - ஆம்.

தம்பி - குழந்தையின் பெற்றோர்கள் பெரிய நேரம் வருவதை கவனமாகப் பார்க்க வேண்டும் அன்றோ?

அண்ணன் - விஷயம், இரகஸ்யம், கரு, முக்கியம் எல்லாம் உள்ள இடம் அதுதான்.

தம்பி - புதிய தொழில், product பொருள், முறை organisation எனப் புதியதாக வருவதை ஏற்பவர் அடுத்த தலைமுறையில் முதன்மையாக இருக்கிறார்கள்.

அண்ணன் - 1900இல் பாங்க் நமக்குப் புதியது. 1900இல் நெசவாலை புதியது. பாங்க் ஆரம்பித்த செட்டியார்கள், பஞ்சாலை ஆரம்பித்த நாயுடுமார்கள் இன்று தமிழ்நாட்டிலுள்ள பெரும் பணக்காரர்கள்.

தம்பி - சிறு அளவில் பார்த்தாலும் 1950இல் பஸ் ரூட், தியேட்டர், ஹோட்டல் பிரபலமாயின. இன்று எந்த ஊருக்குப் போனாலும் பெரும் பணக்காரர்கள் இந்தத் தொழிலைச் சார்ந்தவர்களே.

அண்ணன் - இப்புதிய தொழில்கள் கூலிக்காரனை முதலாளியாக்கியது அதிகம்.

தம்பி - ஆம், அது என்ன விஷயம்?

அண்ணன் - புதியது வந்தால் பணக்காரர்கள் அதை நாடுகிறார்கள். அவர்கள் தொழிலைப் பாராட்டுவதைவிட தாங்கள் ஜபர்தஸ்தைப் பாராட்டுவார்கள். கூலிக்காரன் அடியிலிருந்து வருவதால் தொழிலின் நுணுக்கத்தை அறிவான். பஸ் டிரைவர், கிளீனர், கண்டக்டர்கள் பஸ் முதலாளியானது அதிகம்.

தம்பி - உலகப் பெரு முதலாளி Ford போர்ட், இன்று உலகிலேயே பெரிய பணக்காரர் Bill Gates பில் கேட்ஸ், இவர்கள், அவர்கள் காலத்து product பொருளை ஒட்டி உயர்ந்தவர்கள். Rockeffeller ராக்பெல்லரும் அப்படித்தான்.

அண்ணன் - புதியதை ஏற்றுப் பாராட்டுபவர் உலகில் முதன்மையாக வரும் வாய்ப்பு அதிகம்.

தம்பி - இன்று அப்படி முதன்மையானது எது?

அண்ணன் - ஆயிரம் விஷயங்களைச் சொல்லலாம். Product பொருள் எனில் கம்ப்யூட்டரையும், Internet இன்டர்நெட்டையும் கூறலாம். விஷயம் எனில் கல்வியைக் கூறலாம். அரசியல் எனில் ஜனநாயகத்தைக் கூறலாம். எல்லாவற்றையும் தன்னுட்கொண்டது அன்னை ஜீவியம்.

தம்பி - இக்குழந்தை விஷயத்தில் நீங்கள் சொல்வதுபோல் முன்னோடியான விஷயமான படிப்பும், அன்னையும் சேர்ந்து வருவதால் நிச்சயம் இது உலகப் பிரசித்தி பெறும்.

அண்ணன் - குழந்தை Internetஇல் படிப்பைத் தொடர்ந்தால் நல்லது.

தம்பி - அன்னையல்லவா முக்கியம்.

அண்ணன் - அன்னையில்லை எனில் ஒன்றும் இல்லை.

தம்பி - எனக்கு இக்குழந்தை உலகப் பிரசித்தி பெற வேண்டும் என்று அவா.

அண்ணன் - அவா இருந்தால் பலிக்காது.

தம்பி - பின்னே, என்ன இருக்க வேண்டும்?

அண்ணன் - ஆர்வமிருக்க வேண்டும்.

தம்பி - சரி, இக்குழந்தை விஷயத்தைப் பூர்த்தி செய்ய நான் என்ன செய்யலாம்?

அண்ணன் - நீ எதுவும் செய்யக்கூடாது. உனக்குரியது silent will மட்டும்தான். செய்ய வேண்டியது எல்லாம் பெற்றோர்தாம்.

தம்பி - பெற்றோர் இதைப் பூர்த்தி செய்ய நான் என்ன செய்ய முடியும்?

அண்ணன் – Silent gratitude மௌனமாக நன்றியைச் செலுத்தினால் போதுமா?

தம்பி - செயலில் என்ன செய்யலாம்?

அண்ணன் - உன்னுடைய காரியத்தில் அன்னையைக் கண்டால் நல்லது.

தம்பி - என் கம்பனியைப் பெரியதாக்க வேண்டுமா?

அண்ணன் - உன் கம்பனியை முதன்மையாகச் செய்தால் உன் நல்லெண்ணம் குழந்தையை முதன்மையாக்கும்.

தம்பி - பெற்றோரிடம் நான் எதுவுமே சொல்லக் கூடாதா?

அண்ணன் - பெற்றோரிடம் விஷயத்தைச் சொல்லலாம். ஒரு முறைக்கு மேல் வலியுறுத்திச் சொல்லக் கூடாது.

தம்பி - நல்லெண்ணத்திற்கு அந்த சக்தியுண்டா?

அண்ணன் - நல்லெண்ணம் உயிரைக் காப்பாற்றும். கெட்ட எண்ணம் உயிரை எடுக்கும்.

தம்பி - ஓர் அன்பருக்கு 1 வருஷமாக உடல் நலம் குன்றியது. பிறகு உடல் நலம் தேறியது. அவருடைய ஆதரவில் வாழ்பவர் ஒருவருக்குக் கெட்ட எண்ணம் ஏற்பட்டது. அன்பர் சூழலில் ஆபத்துத் தோன்றியது. சுமார் 3, 4 மாதம் சூழல் கறுத்திருந்தது. நிலைமை மோசமானபின் வழக்கமாக அவர் சோதனை செய்யும் முறைகளைக் கையாண்டார். இரண்டு அறிகுறிகள் சூழல் உணர்த்துவதை வலியுறுத்தி ஆமோதித்தன. அப்படியானால் அதிக நாள் தாங்காது என அன்பருக்குப்பட்டது. ஒரே நாளன்று கெட்ட எண்ணம் உள்ளவரை விலக்கி நல்லெண்ணம் உள்ளவரின் ஆதரவை நாடினார். சூழல் மறுநாள் காலையில் பளிச்சென்று மாறியது. ஆபத்து விலகியது.

அண்ணன் - நம்முடைய குடும்பங்களில் உள்ள பெரிய பிரச்சினையில் உறவுக்காகக் கெட்ட எண்ணத்தை ஏற்கிறோம். அப்பிரச்சினை தீராது. பையனுக்குப் பெரிய உத்தியோகம் வந்தால் தகப்பனாருக்குப் பொறாமை. பெண்ணுக்கு நல்ல வரன் அமைந்தால் அக்காளுக்குப் பொறாமை, அம்மாவுக்கும் பிடிப்பதில்லை.

தம்பி - நல்லெண்ணம் உள்ளவர் கண்ணில் படுவதில்லை. அதனால் அப்பிரச்சினை எழாது!

அண்ணன் - நல்லெண்ணம் உள்ள அன்பர் என நாம் அறிய வேண்டுமானால், அவர் அன்னையிடம் வந்தபின் வானுயர வளர்ந்திருப்பார்.

தம்பி - கெட்ட எண்ணக்காரரும் அப்படி வளர்ந்துள்ளாரே? நல்ல எண்ணம் இல்லாதவரும் அளவுகடந்து வளர்ந்திருப்பதைக் காண்கிறோமே?

அண்ணன் - அவர்கள் வாழ்வில் நல்லெண்ணக்காரர் ஒருவரில்லாமல் பெரு வளர்ச்சியிருக்காது. அது நிச்சயம்.

தம்பி - மனிதனைப் புரிந்து கொள்வது கடினம். இந்தப் பெற்றோர் சேவை உணர்வுள்ளவரானதால் அப்பிரச்சினை இங்கு எழாது.

அண்ணன் - அன்பரொருவர் சில ஆண்டுகளில் நல்லெண்ணத்தின் அன்புப் பரிசாகக் கொஞ்சம் கொஞ்சமாக 29 லட்சம் இனாம் பெற்றார். அன்னையைப் பற்றிப் பேசும்பொழுது இதைப் பெற்ற அன்பர் "என் வாழ்வில் எதுவுமே நடக்கவில்லையே" என்றார். கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு விஷயம் தெரியாது. கொடுத்தவரும் கேட்டுக் கொண்டிருந்தார்! அதுதான் "நல்லெண்ணம்!"

தம்பி - ஓர் அன்பருடைய நல்லெண்ணம், மற்றொருவருக்கு உலகில் பிரபலம் கொடுத்ததையும் நாம் அறிவோம்.

அண்ணன் - பெற்றுக் கொண்டவருக்கு அன்பருடைய அக்கறையைப் பற்றித் தெரியாது.

தம்பி - நல்லெண்ணத்திற்கு சக்தியுண்டு என்பது புதியது. நாம் இன்று நம் காரியங்களை வெற்றிகரமாக முடிக்க எப்படி நடக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று இக்குழந்தை மூலம் சொல்ல முடியுமா?

அண்ணன் - சொல்லலாம். சற்று நுணுக்கமாகக் கேட்டுக் கொள்ள வேண்டும். செயல்படும்பொழுது மயிரிழை தவறாமல் நடக்க வேண்டும். நான் தத்துவத்தில் ஆரம்பித்து, நடைமுறைவரை சொல்கிறேன்.

தம்பி - தமிழ்நாட்டுப் பிரபலஸ்தர் மகன் வறுமைக்குள்ளானார். அன்னையைத் தேடி வந்தார். அவர் வறுமை 7ஆம் நாள் மாறியது. புதிய சேவையைக் கொடுத்தார்கள். 2, 3 மடங்கு வருமானம் வந்தது. இந்தச் சேவை அன்னைச் சேவை என்றாலும் சேவைக்கும் அன்னைக்கும் நடுவில் அன்னையை துரோகம் செய்தவர்களிருக்கிறார்கள். அவர்களால் பேராபத்து வருகிறது. எனவே சேவையைக் கைவிட வேண்டும் என்றபோது, கைவிட்டார். சில மாதங்களில் சேவை வருமானத்தைப்போல் 2 மடங்கு வருமானம் வருகிறது. இது எனக்குத் தெரியும். சேவை என்றாலும், துரோகிக்குப் பலன் போவது தவறு என்ற கருத்தைத் தயங்காமல் ஏற்றுக்கொண்டார். அதைச் சொல்கிறீர்களா?

அண்ணன் - இது முக்கிய இடம். இந்த அன்பர் மனநிலை எதையும் சாதிக்கும். சேவையே ஆபத்து என்பதை எவரும் ஏற்கமாட்டார்கள். இவர் ஏற்றது பெரியது. மேலும் சாதாரண விஷயங்களிலும் இப்பாகுபாடு எழும். அச்சமயங்களில் சரியான முடிவெடுப்பது சிரமம்.

தம்பி - அன்னையோடு இருந்தவர், சாதகர், முக்கியஸ்தர், உறவினர், முடிவாக நாம் என்பதுவரை விலக்க வேண்டியது, சேர்க்க வேண்டியது என இரு பகுதிகள் உண்டு. அன்னையுடன் இருந்தவர்கள் அனைவரையும் சேர்க்கிறோம். எதிரிகள் அனைவரையும் விலக்குகிறோம். சரியாகப் பிரிக்கத் தெரியவில்லை.

அண்ணன் - உலகம் ஜடம். ஜடமான உலகத்தைச் சிருஷ்டித்தது மனம். இன்று மனம் ஜடத்தால் ஆளப்படுகிறது. மனம் ஜடத்தை ஆள ஆரம்பித்தால் பிரச்சினையிருக்காது.

தம்பி - அது தெரியும். நாம் மனிதனைவிடப் பணத்தை முக்கியமாக்குகிறோம். உணர்வைவிட உறவை முக்கியமாகக் கருதுகிறோம்.

அண்ணன் - இப்படிச் சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள். நடைமுறை வேறு. முதலாளி அன்பர். ஊழியர்கள் பக்தர்கள். பக்தர்கள் சங்கத்திற்கு முதலாளி இடம் தருகிறார். செலவுக்குத் தருகிறார். ஏற்பதா வேண்டாமா?

தம்பி - நமக்கே உதாரணம் இருக்கிறதே. இந்த இடத்தில் முதலாளியை விலக்க தொழிலாளி சம்மதப்படமாட்டான். சேவைக்கு இடம், பணம், காணிக்கையாக மட்டும் வரவேண்டும். உண்டியலில் உள்ளதே (பேர் தெரியாமல் வந்த காணிக்கை) மூலதனம் என்றால் எவரும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.

அண்ணன் - முதலாளி இடம் கொடுத்தால் பக்தி வளராது. முதலாளியின் பெருமை வளரும். பெண் அழகைக் கண்டு பொறாமைப்படும் தாயார், பெண்ணுக்குப் பெரிய வரன் வந்தால், தாயாரை விலக்கி முடிவெடுக்கச் சம்மதப்படுமா? சாத்தியமா? தாயாரைக் கலந்தால் பெண்ணுக்கு இந்த வரன் அமையுமா? இக்குழந்தை விஷயத்தில் பெற்றோருக்கு இப்பாகுபாடிருந்தால், எல்லாம் நடக்கும்.

தம்பி - குழந்தைக்கு இட்லி கொடுப்பதா, தோசை கொடுப்பதா என்பதுவரை நம்மைக் கேட்டு நடக்க வேண்டும் என்று முடியும். இது நடக்காது.

அண்ணன் - முதலில் பாகுபாடு discrimination & discretion ஏற்படும்வரை கேட்டுத்தான் நடக்க வேண்டும். சட்டம் புரிந்தால், சட்டத்தைப் பின்பற்றலாம்.

தம்பி - எனக்குச் சட்டம் புரியும். குழந்தை சந்தோஷமானால் சரி, சிணுங்கினால் தப்பு. ஆரம்பத்தில் இந்தச் சட்டம் போதும்.

அண்ணன் - நான் மனமே ஜடத்தை ஆள்கிறது என்றேன். வாழ்வை ஆள்வதும் அன்றிலிருந்து இன்றுவரை மனமே. எல்லா முக்கியமான நிகழ்ச்சிகளுக்கும் அடிப்படை ஒரு செய்தி, ஓர் அபிப்பிராயம். செய்தி எனில் மனம். அச்செய்தி இன்று வதந்தியாகப் பரவுகிறது. இந்த வதந்தி உண்மையை எடுத்துப் போனால் உலகத்தை உடனே மாற்றலாம்.

தம்பி - இது புதியதாக இருக்கிறதே. நாம் உடலால் வாழ்ந்தாலும், உணர்வால் செயல்பட்டாலும், அதன் அடிப்படையில் ஒரு understanding கருத்துள்ளது. அக்கருத்து இன்று வதந்தி மூலம் வருகிறது என்கிறீர்களா!

அண்ணன் - இது பெரிய தத்துவம். இதைப் புரிந்து கொண்டவர் வாழ்வில் ஞானி; இந்தச் சரியான "வதந்தி"யை எழுப்பக் கூடியவர் உலகை ஆளக்கூடியவர், மாற்றக் கூடியவர். நாம் குழந்தை விஷயத்தை மட்டும் காண்போம்.

தம்பி - புரிகிறது. பெற்றோர் குழந்தைகளின் செயல்களை, உணர்ச்சிகளை, உத்வேகங்களைக் கண்டு, அவற்றினடியில் உள்ள கருத்து opinion எது எனக் கண்டு, அவற்றை அன்னை கருத்தாக மாற்ற வேண்டும். சரியா?

அண்ணன் - இதற்கு ஒரு சாரார் விலக்கு, ஏற்கனவே  100 ஆண்டுகட்கு முன்  அவர்கள் ஜனத்தொகையில் 100% விலக்கானவர். சரியானவர் இல்லை. குறைவு. இப்பொழுது விலக்கானவர், தவறானவர் உலகில் 50%க்கும் குறைவு. அவர்களிடம் இது பலிக்காது. அதைச் சேராதவரிடம் பலிக்கும். இக்குழந்தைக்குப் பலிக்கும்.

தம்பி - எனக்கு இவர்களைத் தெரியும். விற்காத சரக்கை அடமாக வாங்குபவர்கள், எதிரியை நம்புபவர்கள். இன்று கம்பனி பெறும் 10 லட்ச வருமானம் புதிய சரக்கை ஏற்றால் 25 லட்சம் வரும் என்றாலும், மாறாதவர்கள் இவர்கள். தவறு என்று தெரிந்து அதை நாடுபவர்கள். மகள் வாழ்வு, மருமகள் சந்தோஷத்தைப் பற்றி இக்கருத்தைத் தெரிவிக்கும் பழமொழியேயிருக்கிறதே.

அண்ணன் - சில குடும்பங்களில் அனைவரும் அப்படிப்பட்டவர்களே. சில ஊர்களில் பெரும்பாலோர் அப்படிப்பட்டவர்கள். அவர்கள் பற்றி விளக்க ஒரு புத்தகமே எழுதலாம்.

தம்பி - குழந்தைக்குப் பலிக்குமா?

அண்ணன் - பெற்றோர் அன்னையை ஏற்றால் பலிக்கும். நாம் சொல்லும் எந்தக் குறையுமில்லாதவர் பெற்றோர். ஆனால் குறையற்றவர்கள் சுலபமாக அன்னையை ஏற்கமாட்டார்கள்.

தம்பி - முடியாது என்கிறீர்களா?

அண்ணன் - முடிந்தால் பலிக்கும் என்கிறேன்.

தம்பி - நீங்கள் சொல்வனவெல்லாம் முடியாது என்றே படுகிறதே.

அண்ணன் - இதுவரை அன்னையை அதுபோல ஏற்ற பக்தரைப் பார்த்திருக்கிறாயா? அதனால் சிரமம் என்கிறேன்.

தம்பி - எது சிரமம்?

அண்ணன் - அன்னையால் மனிதனுக்கு என்ன செய்ய முடியும் எனப் புரிந்து கொள்வது சிரமம். உதாரணமாக இவர்கள் சேவையில் நல்ல, பெரிய அம்சங்களுண்டு. பணம் திரட்டுவதிலும் உண்டு. ஆனால் இதே முறையை பணம் திரட்ட பயன்படுத்தினால் ஓராண்டில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவும் அளவுக்குப் பணம் வரும். செய்வார்களா?

தம்பி - இம்முறையால் சேவைக்குக் கோடிக்கணக்காகப் பணம் வர ஆரம்பித்தால், குழந்தை பிரசித்தி பெறுமா?

அண்ணன் - இம்முறை 24 மணி நேரத்தில் 1 கோடியைச் சேவைக்குத் தரும். அது நடந்தால், குழந்தை விஷயம் தானே பலிக்கும்.

தம்பி - நான் என்ன செய்ய?

அண்ணன் - இம்முறையை அவர்கட்கு நீ சொன்ன பிறகு, அவர்களே initiative முன்கை எடுத்து அதைப் பின்பற்ற உன்னை நாடினால், அது முதற் சகுனம், நல்ல சகுனம்.

தம்பி - அது சரியான சோதனை.

அண்ணன் - விஷயத்தைத் தெரிந்து கொண்டபின் அவர்களே விருப்பப்படுவது முடிவில் காரியம் பலிக்கும் என்பதற்கு அறிகுறி.

தம்பி - இது எப்படி எனப் பார்க்க வேண்டும்? நாம்தான் அவர்கள் பின்னாடிப் போவது வழக்கம்.

அண்ணன் - முதற்கட்டத்திற்கு அனைவரும் வருவார்கள். அடுத்த கட்டத்திற்கு இதுவரை எவரும் வந்ததில்லை. மாதம் 1 லட்சம் சம்பாதிக்கலாம் என எவ்வளவு நாளாக மையத்தில் பேசுகிறோம்? யாராவது அது எப்படி எனக் கேட்டார்களா?

தம்பி - நம்பிக்கையில்லை.

அண்ணன் - சம்பாதித்தவர்களைப் பார்த்தார்கள் இல்லையா?

தம்பி - அதுவும் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

அண்ணன் - விவரத்தைக் கேட்டு அறிந்த பின் அல்லது படித்து தெரிந்த பின் பின்பற்ற முன்வருவது அல்லது மேலும் அறிய முன்வருவது என்பது முதல் நல்ல சகுனம்.

தம்பி - நாட்டில் எல்லாக் குழந்தைகளும் இக்குழந்தைபோல் படிக்க என்ன தேவை?

அண்ணன் - பொதுவாக என்ன நினைப்போம்? இது போன்ற பள்ளிகள் பரவவேண்டும், சர்க்கார் இம்முறையைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறுவோம். அதெல்லாம் உண்மை. அதனால் இப்படிப்பு நாடெங்கும் பரவாது.

தம்பி - எப்படி இப்படிப்பு நாடெங்கும் பரவும்?

அண்ணன் - நாடெங்கும் சமீபத்தில் பரவுவது என்ன என்று ஒரு உதாரணம் சொல்.

தம்பி - சமீபத்தில் T.V. பரவுகிறது. போன் அது போலிருக்கிறது. Mopedஉம் அப்படியே.

அண்ணன் – T.V.யை எப்படி அனைவரும் ஏற்றுக் கொண்டனர்?

தம்பி - வீட்டிலேயே சினிமா பார்க்கலாம் இப்போ அதுதான் பேஷன்.

அண்ணன் - வீட்டிலேயே சினிமா பார்க்கலாம் என்பது மட்டும் காரணமில்லை. அதுவும் ஒரு காரணம். 50 வருஷத்திற்கு முன் எந்த ஊரில் (சென்னை தவிர) வசதியுள்ளவர் வீட்டிலெல்லாம் போன் வந்தது?

தம்பி - நமக்கு எதற்குப் போன் என்பார்கள்.

அண்ணன் - இப்பொழுது, வசதியில்லாதவர் வீடுகளிலெல்லாம் போனிருக்கிறது.

தம்பி - அது பேஷனாகவும் ஆகிவிட்டது.

அண்ணன் - போன் பேஷனானதுதான் உண்மை. இப்படிப்புப் பேஷனாகிவிட்டால் பரவிவிடும்.

தம்பி - அது உயர்ந்த படிப்பு என்பதால் பரவாதா?

அண்ணன் - பசுமைப் புரட்சியின் பெருமை, பலன் பற்றி உனக்குத் தெரியும். அதுவே அஸ்ஸாம், பீகார், U.P., ராஜஸ்தான் போன்ற இடங்களுக்குப் பரவவில்லையே.

தம்பி - உரம், நவீன விவசாயம் பேஷனாகவில்லை. அதனால் பரவவில்லை என்கிறீர்களா?

அண்ணன் - இதுவரை உலகில் பரவினவெல்லாம் பேஷன் மூலமே பரவியுள்ளன.

தம்பி - ஏன் அப்படி?

அண்ணன் - மனிதனுக்குச் சௌகரியத்தைவிட மரியாதை முக்கியம்.

தம்பி - பணத்தைவிட மரியாதை முக்கியம் என்றும் சொல்லலாம். பேஷனை ஏற்றுக்கொண்டால் மரியாதை வரும். அதனால் மனிதன் அதை நாடுகிறானா?

அண்ணன் - மனிதன் மரியாதைக்காகவே உயிர் வாழ்கிறான் என்றே சொல்லலாம்.

தம்பி - இந்தப் படிப்பைப் பேஷனாக்க முடியுமா?

அண்ணன் - அப்படியானால் நிச்சயமாகப் பரவும்.

தம்பி - பேஷன் என்றால் என்ன? அதற்கு சக்தி எப்படி வருகிறது?

அண்ணன் - மனிதன் தானே சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அதைப் பேஷன் பூர்த்தி செய்கிறது.

தம்பி - அவன் தேடும் மரியாதை ஒரு product பொருளாக T.V. போல வந்தால், அதை வாங்கினால் அவன் தனக்கு மரியாதை வரும். அது தானே பெறும் மரியாதை என நினைக்கிறான்.

அண்ணன் - உலகத்திற்குத் தேவையானதை ஒரு product பொருளாக T.V. கார், கம்ப்யூட்டர்போல மாற்றிக் கொடுத்தால், அது விரைவில் பரவும். மனிதன் ஜடமாக physical உணர்வாக vitalஆக இருப்பதால் பொருள்கள் மூலமே இலட்சியம் இன்று பரவ முடியும்.

தம்பி - இதற்கடுத்த நிலையுண்டா?

அண்ணன் - ஒரு நல்ல idea கருத்தாக இலட்சியம் வந்தால் இன்று மனிதன் ஏற்கும் நிலையில் இல்லை. அப்படி வர மனிதன் mentalஆக (அறிவின் மூலம்) செயல்பட வேண்டும். அவன் T.V. வாங்கும்பொழுது, அவன் மனதில் "T.V. வாங்கி வைத்தால் மரியாதை வரும்” என்ற எண்ணமிருக்கிறது.

தம்பி -அது அறிவு mental இல்லையா?

அண்ணன் - ஒரு வகையில் மனிதன் செய்யும் எல்லாக் காரியங்களும் இதுபோன்ற ஒரு கருத்தின் அடிப்படையில்தான் அமைகிறது. ஆனால் இன்று அந்தக் கருத்தை அவன் அறிவுள்ளவர் மூலமாகவோ, புத்தகம் மூலமாகவோ அறிவதில்லை. வதந்தி மூலமாக அறிகிறான்.

தம்பி - வதந்தியை word of mouth என்கிறோம். இப்படிப்பின் பெருமை வதந்தியானால் அது பரவும்.

அண்ணன் - இன்று எது வதந்தியாக உலவுகிறது? மனிதனுக்குத் தேவையானது வதந்தியாவதில்லை. பெரிய இடம்  பணக்காரன், நடிகை, தலைவர்  மனிதன் மனதில் இருக்கிறது. அந்தச் செய்தி வதந்தியாகப் பரவுகிறது. மனிதன் vital உணர்வால் வாழ்கிறான். அறிவால் இன்னும் வாழ முயலவில்லை. மனிதன் இன்று ஏற்கும் வதந்திக்கேற்ப இப்படிப்பின் சிறப்பை உயர்த்தவோ, மாற்றவோ முயன்று பலித்தால் அது நடக்கும்.

தம்பி - மனிதன் நிலைக்கு நாம் போகலாமா? அவனை நம் நிலைக்கு உயர்த்த வேண்டாமா?

அண்ணன் - முடியும், சிரமம். அன்னை தரும் அதிர்ஷ்டம் அதுபோல் பரவலாம். ஆனால் இன்று மனிதன் அதிர்ஷ்டத்தை முயன்று பெறுவதைவிட, இருக்கும் மனநிலையைத் தீவிரமாக அனுபவிப்பதிலேயே நாட்டத்தைச் செலுத்துகிறான்.

தம்பி - சாதாரண மனிதன் இருக்கும் நிலை மிகவும் தாழ்ந்ததாயிற்றே.

அண்ணன் - அது உயர்ந்தால்தான் மனிதன் உயருவான். இதுபோன்ற படிப்பை ஏற்பான். மனிதன் இன்றுள்ள நிலையில் ஒரு 100 பேர் முயன்று சத்திய ஜீவியத்தையே தர முடியும் என்றார் பகவான்.

தம்பி - சத்திய ஜீவன் பிறந்தால் எல்லா மனிதர்களும் சத்திய ஜீவனாவார்களா?

அண்ணன் - எல்லாரும் ஆக முடியாது. தகுதியுள்ளவர்கள் பலன் பெறலாம். இந்தப் படிப்பு, செல்வம், வளம், அதிர்ஷ்டம் development முன்னேற்றம் ஆகியவை சத்திய ஜீவனோடு ஒப்பிட்டால் மிகச் சிறியன. அதனால் இதைப் பரப்ப முடியும்.

தம்பி - சத்திய ஜீவனாக மனிதன் தயாரான பின்னால்தான் இவையெல்லாம் வரும் என்று சொல்வார்களா?

அண்ணன் - மற்ற நாடுகளில் ஏற்கனவே இவை வந்துவிட்டதால் அந்த நிபந்தனை தேவை எனத் தெரியவில்லை.

தம்பி - ஏராளமான வசதி வரும் என்றால் அனைவரும் பிரியப்படுவார்கள். ஆனால் முதல் நிபந்தனை பூரண நல்லெண்ணம் வேண்டும் என்றால் அதிகம் பேர் தேறமாட்டார்கள்.

அண்ணன் - அல்லது நேர்மையும், திறமையும் மட்டுமாவது வேண்டும்.

தம்பி - தன்னை மனிதன் அப்படித்தான் நினைப்பான்.

அண்ணன் - நினைப்பதற்குப் பலன் வாராது. உள்ளதற்குத்தான் பலன் வரும். மூன்றாம் நிபந்தனையாகவும் ஒன்றைக் கூறலாம். அடக்கம் அளவுகடந்து இருந்தாலும் பலிக்கும்.

தம்பி - பயந்துதான் மனிதன் அடங்குவானே தவிர, தானே அடங்கமாட்டான்.

அண்ணன் - கர்வமானவன், கௌரவத்தை நாடுபவன், பெருமை, வீண் பெருமையை நாடுபவர்கள் அறிவால் அடக்கத்தின் பெருமையை உணர்ந்தால் பலன் வரும். மேடைக்கு வந்தால் அடக்கமாகப் பேச வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இப்பொழுது ஏற்பட்டுவிட்டது. ஒரு காலத்தில் மேடையிலிருந்து சவால் விட்டார்கள்.

தம்பி - மேடையில் வந்த நாகரீகம், மனதில் வந்தால் நல்லது. அல்லது பெரிய ஆத்மா ஒன்று உலகத்தின் சார்பாக அடக்கத்தை மேற்கொண்டால் போதுமா?

அண்ணன் - அது போதுமா என்று சொல்ல முடியவில்லை. அதற்கு நல்ல பலனிருக்கும். அதுவரை சொல்லலாம். மேடையில் உள்ள அடக்கமே உண்மையான அடக்கமானால் அதற்குப் பலனிருக்கும்.

தம்பி - அடக்கம் மட்டுமிருந்தால் அதிர்ஷ்டம் வருமா?

அண்ணன் - நிச்சயம் வரும். அது மட்டுமே போதும் என்றும் சொல்லலாம். இன்டர்நெட் வந்திருக்கிறது. அது idea கருத்துக்குப் பேஷன் பெற்றுள்ள சக்தியைக் கொடுக்கலாம். பார்க்க வேண்டும். மனிதனுக்கு character திறமையுள்ள நல்ல சுபாவம் வேண்டும்.

முன்னுக்கு வந்த நாடுகளில் தனிமனிதன் அது போன்ற சுபாவத்தை உற்பத்தி செய்து அதன் மூலம் சமூகம் அதைப் பெற்றது. நம் நாட்டில் தலைகீழாக வருகிறது. உலகம் அந்தச் சுபாவத்தைப் போற்றுவதால் மனிதன் பேஷனாக அதை ஏற்று முன்னேற வேண்டும்.

தம்பி - மற்ற நாடுகளில் இந்த முன்னேற்றம் வந்துவிட்டதால், இனி பரவ வேண்டியதுதானே.

அண்ணன் - அதைச் சமூகம் ஏற்க ஒரு தனிமனிதன் முன்னோடியாக வரவேண்டும். அதாவது ஒரு சிலர் செய்து - அதிர்ஷ்டம், இந்தப் படிப்பு - அதைச் சமூகம் பார்த்து ஏற்று, பிறகு அனைவருக்கும் வர வேண்டும்.

தம்பி - அதற்கு ஏதாவது சுருக்கு வழியிருக்கிறதா?

அண்ணன் - அந்த முன்னோடி அன்னை அன்பரானால், உலகம் அவரை ஏற்கும். படிப்பு, அதிர்ஷ்டம் தானே பரவும்*.(* Man must do it impersonally or should represent a universal vibration, not as a personal achievement out of his own efficiency.) நாம் யாருக்கும் சொல்லக் கூடாது. செய்வதானால் நாமே செய்து, நாமே முன்னோடியாக வேண்டும்.

தம்பி - அன்பராக இருந்தால் படிப்பும், அதிர்ஷ்டமும் தானே பரவும் என்பதை நான் அறிவேன். மேலும் விளக்கம் (its rationale) கொடுக்க வேண்டும். எங்களூர் செட்டித் தெருவில் ஒரு விசேஷம். கோமுட்டிச் செட்டியார் எங்களூரில் அதிகம். வசதியானவர்கள். ஒரு கல்யாணத்தில் ஓர் அம்மாள் புது டிசைன் புடவை உடுத்தினால், அவ்வூரில் அடுத்த கல்யாணத்திற்கு வரும் செட்டியார் பெண்கள் எல்லாம் அந்த டிசைன் புடவை உடுத்தியிருப்பார்கள். இது நடக்கிறது என்று அறிவோம். எப்படி எனப் புரிகிறது. ஜாதி ஒன்றே. பண வசதியுண்டு. போட்டி அதிகம். புடவை வாங்கிய இடம் தெரிவது சுலபம். அதனால் இது நடக்கிறது. அதுபோல் அன்னை சக்தியை விளக்க முடியுமா?

அண்ணன் - குருஷேத்திரம் போன சேலம் பெண் தன் டூரிஸ்ட் குரூப்பை விட்டுப் போய் வழி தெரியாமல் தவித்து, அன்னையை அழைத்து திரும்பி வந்தது தெரியுமல்லவா? வழி தெரியவில்லை. பாஷை தெரியவில்லை. படிக்காத பெண். வயதானவர். போலீஸில் போய் கேட்கும் அளவு விவரம் தெரியாதவர். முருகனையும், விநாயகரையும், அம்மனையும் கூப்பிட்டார். எதுவும் நடக்கவில்லை. எப்பொழுதோ கேள்விப்பட்ட அன்னை நினைவு வந்து அவர்களாவது காப்பாற்றக் கூடாதா என்று நினைத்தார். தமிழ்க் குரல் கேட்டது. தப்பித்துக் கொண்டார்.



book | by Dr. Radut