அன்னை தியான மையம் - சென்னை மாம்பலம்
சென்னையில் அன்னையை அன்றாடம் தரிசிக்க ஏற்பட்ட இடம். 4 ஆண்டுகளாக நடைபெறுகிறது. பக்தர்கள் பக்தியாலும், பவித்திரத்தாலும் அன்னை சூழல் நிரம்பப் பெற்ற இடம். இங்கு வருபவர்கள் கூறுபவை :
- அன்னையின் இனிமையும், அமைதியும் உடலைத் தொடுவதை உணருகிறோம்.
- மனம் நிம்மதியால் நிரம்புகிறது.
- செய்யும் பிரார்த்தனைகள் 7, 8 நாட்களில் பலிக்கின்றன.
- நாள் கடந்த பிறகு பிரார்த்தனைகள் 2, 3 நாட்களிலும் பலிக்கின்றன.
- ஒரு சிலர் "மையம் வந்து வீடு திரும்பினால் பிரார்த்தனைப் பூர்த்தியானதைக் காண்கிறோம்'' எனவும் கூறியுள்ளனர்.
- தொடர்ந்து மையம் வர ஆரம்பித்த பின் வாழ்க்கையில் பிரச்சினையே இல்லை எனத் தோன்றுகிறது. .
சிறந்த தியானம்
தானே நம்மைத் தேடிவரும் தியானம், தியானங்களில் சிறந்தது. அது தினமும் குறிப்பிட்ட நேரத்திலும் வந்தால், அன்னை நம்மை முடிவாக ஏற்றுக் கொண்டார் எனப் பொருள்.
- Login to post comments