ஹிருதய சமுத்திரம்
- அகந்தையற்ற பார்வைக்கு உலகம் சமுத்திரமான சக்தியாகக் காட்சியளிக்கும்.
- நமக்கு சமுத்திரம் பொருட்டல்ல. சமுத்திரத்திற்கு நாம் முக்கியம்.
- நாம் நம் வாழ்வை சமுத்திரத்தின் கையில் ஒப்படைத்தால் நம் வாழ்வுக்கு சமுத்திரத்தின் முழுத் திறன் வரும்.
- நெடுநாள் கழித்துப் பிறந்த குழந்தைக்குக் குடும்பத்தில் அனைவரும் முழு ஆதரவு தருவதுபோல், நம் வாழ்வு இறைவனால் நடத்தப்படும்..
- ஓரளவுக்கு நாம் நம் வாழ்வை குடும்பத்திடம் ஒப்படைக்கிறோம்.
- ஒரு குழந்தை குடும்பமில்லாமல் வளராது, உயிரோடிருக்காது.
- குடும்பத்தில் எவரும் கவனிக்காமல் ஒரு குழந்தை வளர்ந்தால் அது எப்படியிருக்கும்?
- நாம் சமூகத்தைப் பல விஷயங்களிலும் நம்பியிருக்கிறோம்.
- நாம் பயன்படுத்தும் எல்லாப் பொருள்களும் சமூகம் நமக்காக உற்பத்தி செய்வதாகும்.
- சமூகத்தில் மேல் மட்டத்திலுள்ளவர் செல்வாக்கு நமக்குத் தெரிகிறது.
- சமூகத்தின் உச்சியிலுள்ள அனைவரும் நம்மை முன்னுக்குக் கொண்டு வரப் பாடுபட்டால் நாம் எவ்வளவு உயர முடியுமோ, அந்த அளவுக்கு சமூகத்தை நாம் மனதால் ஏற்றுக் கொண்டால் முன்னேறலாம் என நமக்குத் தெரியாது.
- நாம் மூச்சு விடும் காற்று பூமாதேவியின் ஆடை.
- நாம் பூமாதேவியின் மீது நடந்து செல்வதை அவள் நம் அரவணைப்பாக ஏற்கிறாள்.
- நாம் அதுபோல் பூமாதேவியையோ, சமூகத்தையோ மனதால் அறிவதில்லை.
- எந்த அளவுக்கு நாம் பூமியின் பகுதி, எந்த அளவு சமூகத்தின் பகுதியென மனதால் அறிந்து, உணர்ந்து, ஏற்றுக்கொண்டால், மனிதனுக்கு அளவுகடந்த முன்னேற்றம் உண்டு.
- இன்று உலகிலுள்ள அவ்வளவு கல்வியும் நமக்குப் பாடமாக, செய்தியாகக் கிடைக்கிறது.
- உலகம் நம்மை ஏற்ற அளவுக்கு நாம் உலகை ஏற்றால் நாம் பெறும் முன்னேற்றம் அளவு கடந்தது. உலகின் உச்சியிலிருப்போம்.
- அரசியல் நமக்கு அளித்துள்ள உரிமை, வியாபாரம் நமக்கு வழங்கும் பொருள்கள், சமூகம் கொடுக்கும் வசதிகள் என்ன என்று அறிந்து அதே அளவுக்கு நாம் மலர்ந்து, மனம் உவந்து சமூகத்தை மனதால் ஏற்றால், நாம் இன்றுள்ள நிலையில் இருக்கமாட்டோம்.
******
- Login to post comments