Skip to Content

பகுதி 1

  1. எதற்காக நாம் காத்திருக்கின்றோம் என்றறிவது தன்னை அறிவதாகும். உன்னைப் பொறுத்தவரை அதுவே சத்தியம், பிரம்மம்.

ஆழ்ந்த மனம் தன்னை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கும்பொழுது மேலெழுந்தவாரியான மனம் அர்த்தமற்ற காரியங்களில் ஈடுபடுகிறது.

அர்த்தமற்ற அந்தச் சலனங்களும் ஆழ்ந்த மனத்தைப் பூர்த்தி செய்யவே முனைகின்றன. மேல்நிலையில் ஆழ்ந்த மனம் பூர்த்தியானால் மனிதன் உயர்ந்தவனாகிறான்.

தன்னையறிவதே உன்னைப் பொருத்தவரை சத்தியம். மனம் இரு பிரிவுகளாகப் பிரிந்து செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம் சிருஷ்டிக்குண்டு. நம் வாழ்வு இரு பிரிவுகளாக உள்ளது. வீட்டில் உள்ளது ஒரு பகுதி. ஆபீஸிலும், வெளியிலும் உள்ளது அடுத்த பகுதி. இந்த இரு பிரிவுகளும் அவசியம். வீட்டிலிருப்பதைப் போல் வெளியில் இருக்க முடியாது. வெளியில் உள்ள வாழ்வில் ஓரளவு தோற்றம் கலந்திருக்கும். ஆனால் அந்த வாழ்வுதான் முக்கியம். அதற்காகத்தான் வீட்டில் நம்மைத் தயார் செய்து கொள்ளுகிறோம். நம் ஆழ்ந்த எண்ணங்களும், செயல்களும், உண்மையான உணர்ச்சிகளும், நம் அடிப்படைக் குறைகளும் வீட்டில்தான் வெளிப்படும். நம் வாழ்வின் பெரும்பகுதியும், முக்கியப் பகுதியும் வீட்டிலுள்ளது. வீட்டில் இவ்வளவு தயார் செய்வதும் வெளியில் சாதிப்பதற்காகத்தான். அதேபோல் மனம் இரு பகுதிகளாக அமைந்துள்ளது. வீட்டிலுள்ள உண்மை வெளியில் அர்த்தமற்ற பல விஷயங்களில் கலந்து கொள்வதால் வீடு பயன் அடையும் என்பதால் மனிதன் அப்படி நடக்கின்றான்.

மனிதன் மிகவும் சுறுசுறுப்பானவன். தனக்கு நல்லது என்று புரிந்து கொண்ட விஷயத்தைத் தீவிரமாகவும், முழுமையாகவும் நாடுபவன். ஒன்றை நாடாத மனிதனில்லை. இறைவனை நாடுபவர் சிலர். அந்தஸ்தை நாடுபவர் பலர். பணத்தை அனைவரும் நாடுகின்றார்கள். அன்பை ஆர்வமாக மற்றவற்றை விடத் தேடுபவருண்டு. சோம்பேறித்தனத்தையும் இலட்சியமாகக் கொண்டவருண்டு. எதையும் தீவிரமாக நாடாத மனிதர் என்று ஒருவரில்லை. அவருடைய தீவிரம் பிறருக்குத் தெரியாமலிருக்கலாம், அவருக்கே தெரியாமலிருக்கலாம். எல்லா மனிதர்களும் பிரம்மம். உள்ளுறை பிரம்மம், பரப்பிரம்மத்தை இடையறாது நாடுகிறது. இது சிருஷ்டியின் அடிப்படை. பிரம்மம், பிரம்மமாக வெளிப்படுவதில்லை. இன்று நம் வாழ்வில் உள்ள அம்சமாக வெளிப்படும்.

எதை மனிதன் அதி தீவிரமாக நாடுகின்றானோ அதுவே அவனுக்குப் பிரம்மம், அதுவே சத்தியம். அத்துடன், அதிதீவிரமாக நாடுவதை அவன் நிச்சயமாக அடைவான் என்பதும் சிருஷ்டியின் அமைப்பு.

*******

  1. எதை நாம் நாடுகின்றோம், எந்த நிலையில் நாடுகிறோம் என்றறிவது நம்மை நாம் உணர்வதாகும்.

நாம் எதை நாடுகிறோமோ அதுவே நாம். நல்லவர்களுண்டு. நல்லவராக இல்லாமல் தம்மை நல்லவர் என நினைப்பவருண்டு. கெட்டவராக இருந்து தம்மை நல்லவராகக் கருதுபவருண்டு, தாம் கெட்டவர் என்று தெரிந்தும் பிறர் தம்மை நல்லவன் என்று நினைக்க வேண்டும் என்று பிரியப்படுபவருண்டு. சிலருக்குத் தம் உயர்வு தெரியாது. மற்றவருக்குத் தம் தாழ்வு தெரியாது. தன் நிலையை உண்மையாக உணர்ந்த பின்னரே முன்னேற்றத்திற்கு வழியுண்டு. தம்மைத் தாம் அறிய வேண்டுமானால், நாம் எதை நாடுகிறோம், எந்த முறையில் நாடுகிறோம் என்பதைக் கவனித்தால் அது நம் நிலையை விளக்கும்.

அத்தியாவசியமான உதவி தேவைப்பட்ட நேரம், ஆசை பூர்த்தியாக நல்ல சந்தர்ப்பம் கிடைத்த சமயம், இதுவரை வாழ்வில் கிடைக்காத பொருள், பதவி, நட்பு கிடைக்கும் நிலை ஏற்பட்ட சமயம் நாம் எப்படி நடந்து கொண்டிருக்கிறோம், எப்படி நினைத்தோம் என்று ஆராய்ந்தால், மனம் எதை நாடுகிறது என்பது தெரியும், எந்த முறையில் நாடுகிறது என்பது தெரியும். அதுவே நம் மனநிலை.

*******

  1. மேலெழுந்த மனம் முதிர்ச்சியடைந்து ஆழ்ந்த நிலையை அடையும் வகை ஒருவருடைய சுபாவத்தை விளக்கும்.

சுபாவத்தால் மனத்தின் ஆழத்தை அடைகிறோம். சுபாவம் என்பதை நிதானம், அவசரம், பேராசை, ஆசைப்படாத மனநிலை, சிறிய புத்தி, பெருந்தன்மை, துரோகம், விஸ்வாசம், சலனம், நெறி போன்றவை குறிக்கும்.

மேலெழுந்த நிலையில் அவசரமுள்ளவர், அனுபவத்தால் பொறுமையானால், ஆழ்ந்த நிலையில் பொறுமை உற்பத்தியாகும். துரோகத்தால் ஆதாயம் தேடியவர் அனுபவத்தால் துரோகம் ஆதாயம் தாராது என்றறிந்து விஸ்வாசத்தை மேற்கொண்டால் சூழ்நிலையில் விஸ்வாசம் ஏற்படும். யாருக்கு என்ன பெரிய குணங்கள் உற்பத்தியாகின்றன என்பது அவரவர் சுபாவத்தை விளக்கும். இன்று விஸ்வாசத்தைப் பாராட்டுபவர் தாம் வாழ்வைத் துரோகத்தில் ஆரம்பித்து, அது பயன் தாராது என்றுணர்ந்து விஸ்வாசத்தை மேற்கொண்டுள்ளோம் என்பதை அறிவார். அதன் மூலம் தம் சுபாவத்தில் துரோகம் அன்றிருந்தது, இன்று விஸ்வாசம் பிறந்துள்ளது என்பதை அவர் அறிய முடியும்.

*******

  1. எதை நாம் நாடுகிறோம் என்பது நாம் யார் என்பதை நிர்ணயிக்கும்.

நாடுவதே நாம். நாம் நல்லவரா, கெட்டவரா என்றறிய முயல்வதைவிட நாம் யார் என்று அறிய முயன்றால் நல்லது. பழக்கத்தால் நாம் யார், சுபாவத்தால் நாம் யார், பரம்பரையால் நாம் யார், ஆபத்தான நிலையில் நம்முள்ளிருந்து எது கிளம்புகிறது, யார் கண்ணிலும் படமாட்டோம் என்றவுடன் மனம் முதலில் எதை நாடுகிறது, நிச்சயமாகத் தண்டிக்க ஒருவருமில்லை என்ற பின் எந்தக் காரியத்தை செய்யத் தயங்க மாட்டோம், அவசரம் எப்பொழுது புறப்படுகிறது, அயல்நாட்டிலிருக்கும்பொழுது எவற்றையெல்லாம் மனம் நினைக்கின்றது, நிர்ப்பந்தமேயில்லை என்றால் எந்தக் கடமைகளைப் பூர்த்தி செய்வோம், எந்தக் கடமைகளைப் புறக்கணிப்போம் என்று தன்னையறிய முற்பட்டால் நாம் யார் என்பது நமக்கு விளங்கும். அதை நாம் நாடும் பொருள் விளக்கும். நம்மைப்பற்றி பிறர் சொல்வதைவிட, நம்மைப்பற்றி நாம் நினைத்துக் கொண்டிருப்பதைவிட, நாம் நாடும் விஷயங்கள் நம் உண்மையை நமக்கு அறிவுறுத்தும்.

**********

  1. அன்னையின் அணுக்களும் சத்தியத்திற்காகத் துடிக்கின்றன. நாம் எதற்காகத் துடிக்கின்றோம்? எந்த அளவில், எந்த நிலையில் அத்துடிப்புள்ளது?

சத்தியதாகமுள்ள அன்னை உடல். மனம் ஒரு விஷயத்தை ஆழ்ந்து நாடினாலும், அதையடைய தீவிர முயற்சி பலருக்கு இருக்கும்; சிலருக்கு இருக்காது. தாம் விரும்புவதையே தீவிர ஆர்வத்துடன் அடைய முயற்சியுள்ளவராக அனைவரும் இருக்கமாட்டார்கள். நாம் யார் என்று நாம் அறிந்துகொள்ளும்பொழுது நம் முயற்சியின் அளவு நமக்குத் தெரிந்துவிடும்.

எதற்காக உடன் அணுக்கள் துடிக்கின்றனவோ, அதை மனிதன் அடைந்தே தீருவான். ஒருவர் அதுபோன்ற துடிப்புள்ளவர் என்று தம்மை அறிந்தவரானால், அவர் எதற்காகத் தாம் துடிப்புள்ளவராக இருக்கின்றார் என அறியமாட்டார். நாள் தவறினாலும், சீட்டாட்டம் தவறுவதில்லை என்பவரிடம் ''குழந்தைக்கு உடம்பு சரியில்லை டாக்டரிடம் போகவேண்டும், பையனை காலேஜில் சேர்க்கவேண்டும், முக்கியமான கல்யாணத்திற்குப் போக வேண்டும்' என்றால், அவற்றை இரண்டாம் பட்சமாகக் கருதுவார். ஏற்றுக் கொண்டாலும், சீட்டாட்டம் தவறாதபடி இக்கடமைகளை ஏற்றுக் கொள்வார். தமக்குச் சீட்டாட்டம் முக்கியம்; மற்றவை க்கியமில்லை என்று தம்மை அறிந்தவராக அவரிருக்கலாம். ஒருமுறை குழந்தைக்கு ஜுரம் தினமும் வருவதை டாக்டரிடம் காண்பித்தபோது, டாக்டர் இன்னும் 3 நாட்களுக்குப் பின் சொல்கிறேன் என்ற நாளில் அவர் சீட்டாட்டத்திற்குப் போவதை தம்மையறியாமல் மறந்துவிட்டார் என்றால், இவருக்குச் சீட்டாட்டம் முக்கியம்தான் ஆனால், மற்றவர்கள் மற்ற கடமைகளை நிறைவேற்றும்வரை சீட்டாட்டம் க்கியம். குழந்தைக்கு ஏன் ஜுரம் நிற்கவில்லை என்று டாக்டர் சொல்லவில்லை என்றவுடன் இவர் மனதில் கவலை ஏற்பட்டது. ஏதோ ஆபத்தாக இருக்கும் போருக்கிறது என்று பட்டவுடன், சீட்டாட்டம் மறந்துவிடுகிறது என்றால், ஆழ்ந்த துடிப்பு தம் குழந்தை மேருக்கிறது, சீட்டாட்டத்தின் மீதில்லை என்பது இவருக்கு இப்பொழுதுதான் புரியும்.

வாழ்க்கை ஒரு எல்லைக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு சமயம் எல்லையைத் தாண்டி விடுகிறது. அப்பொழுது உத்தியோகத்திற்கு ஆபத்து, உயிருக்கு ஆபத்து, அந்தஸ்து ஆட்டம் கண்டுவிட்டது, மரியாதைக்கு ஆபத்து என்ற நிலை ஏற்படும். அந்த நேரம் நாம் இதுவரை கடைப்பிடித்த கொள்கைகள், பண்புகள் நாம் எதிராக செயல்படுவதைத் தடுக்கும். நம்மால் அந்தத் துரோகத்தைச் செய்ய முடியாது

என்று மனம் கூறும். புதிய ஆசைகள் திடீரென உற்பத்தியாகும். இதை எப்படி விட முடியும் என்று தோன்றும். அது போன்ற போராட்டம் மனதில் எழுந்த பின் ஆழ்ந்த துடிப்பு கொள்கைக்காக இருக்கிறதா, ஆதாயத்திற்காக இருக்கிறதா, ஆசைக்காக இருக்கிறதா என்று தெரியும். ஏற்கனவே நம் வாழ்வில் அது போன்ற நேரங்களை நினைவுபடுத்தினால், இன்றும் அத்துடிப்பு தெளிவாக நமக்கு அறிவுறுத்தும்.

எந்த விஷயத்திற்காக அத்துடிப்பு இருக்கிறதோ, அது நாம் யார், நம் நிலைமையென்ன என்று நமக்கு விளங்கும்.

*******

  1. வேதரிஷிகள் பிரம்மத்தைக் கண்டவர்கள். உடல் ஆன்மாவைப் பூரணமாக உணரும் சித்தி பெற்றவர்கள்.

உடல் பிரம்மத்தைக் கண்ட வேதரிஷிகள். சர்வம் பிரம்மம், நானே பிரம்மம் என்பதைக் கண்டவர்கள் சத்தியத்தைக் கண்டவர்கள். பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்று கண்டுபிடித்ததை விட, நியூடன் ஆகர்ஷ்ண சக்தியைக் கண்டுபிடித்ததை விட உலகுக்கு முக்கியமானது நம் முன்னோர் கண்ட சத்தியம் என்று கூறுகிறார் பகவான் ஸ்ரீ அரவிந்தர்.

மகத்தானதை அவர்கள் கண்டு கொண்டார்கள் என்றால் அதன் மகிமையைப் புரிந்து கொள்வது நல்லது.

இயற்கையோடு ஒன்றி அன்று மனிதன் வாழ்ந்ததை இன்று நாம் அனைவரும் போற்றுகிறோம். அதனால் மனிதன் நோய் நொடியின்றியும், சந்தோஷமாகவும் வாழ்ந்தான். இன்று இயற்கையினின்று மனிதன் விலகிவிடுவதால், புதிய நோய்கள் ஏற்படுகின்றன. மனம் வியாகூலமடைகிறது. அதனால் மனிதன் மீண்டும் இயற்கையோடு இணைந்து வாழ முன்வர வேண்டும் என்று நாம் கூறுகிறோம்.

சுதந்திரத்திற்கு முன் ஆங்கில நீதிபதிகளும், அதிகாரிகளுமிருந்தனர். அவர்களுக்கு நேர்மையிருந்தாலும், நியாயம் வழங்க நம் நாட்டுப் பழக்கங்கள் தெரியாது. நீதிபதிகள் நம்மவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கே நம் பழக்கங்கள் தெரியும் என்று அன்று நாம் பேசினோம். தஞ்சாவூர் ஜில்லாவிருந்து கோயம்புத்தூரில் சம்பந்தம் செய்தால் பழக்கங்கள் முரண்பாடாக இருக்கின்றன. ஊர் மாறினாலும், அந்தஸ்து மாறினாலும், ஜாதி மாறினாலும், படிப்பு மாறினாலும், நாகரிகம் மாறினாலும் ஒத்து வருவதில்லை. அப்படியிருக்க இயற்கையோடு மனிதன் ஒன்றி வாழுதல் என்றால் என்ன? மண்ணும், தாவரங்களும், நதி, மலைகளும், விலங்குகளும் சேர்ந்தது இயற்கை. எப்படி மனிதன் இவற்றுடன் ஒன்றி வாழ முடியும்? இங்கு ஒருவரோடொருவர் சண்டையிடும் இந்தியர், அமெரிக்காவில் பஞ்சாபி, மலையாளி, தமிழன், வங்காளி என்ற வித்தியாசம் இல்லாமல் ஒற்றுமையாக இருக்கிறார்கள். எல்லோரும் இந்தியர் என்றுணர்ந்தால் ஒற்றுமை ஏற்படுகிறது. காடும், மலையும், நதியும் பிரம்மம் என்றுணர்ந்தால் அவற்றோடு இணைந்து வாழமுடியும். அவற்றின் தெய்வீகத்தை ஆன்மாவில் உணர்ந்தால் ஆன்மா அளவில் ஒற்றுமை ஏற்படுகிறது. ஆன்மா உடலும், உணர்விலும், அறிவிலும் உறைகிறது. உடல் ஆன்மாவை உணர்ந்தவன், மற்றதன் உடல் ஆன்மாவை உணர முடியும். வேதரிஷிகள் தங்கள் உடலை ஆன்மாவாகக் கண்டு, இயற்கையிலும் அதையே கண்டு அவற்றுடன் ஒன்றி வாழ்ந்தார்கள். அதனால் மலையை வணங்கினார்கள். நதியை கங்காதேவி என்றார்கள்.

இயற்கையைக் கல்லாகக் காணாமல், இமவான், கங்காதேவி என்று தெய்வமாகக் கண்டதால், காண டிந்ததால், வேதரிஷிகளுக்கு (ல்ட்ஹ்ள்ண்ஸ்ரீஹப்) உடல் அளவில் உலகத்தைப் பிரம்மமாகக் காண முடிந்தது. இது ஆன்மீகப் பூரணம். அதுவே அவர்கள் பெற்ற உயர்வு. இந்த உயர்வை உலகத்தின் மற்ற பகுதிகள் இன்றுவரை பெறவில்லை.

அன்றைய மனிதனுடைய உடலால் வாழ்ந்த வாழ்வு உணர்வும், அறிவும், ஆன்மீக உணர்வும் பிற்காலத்தில் உயர்ந்தன. உபநிஷத காலத்தில் அறிவும், கிருஷ்ணாவதாரத்தில் ஆன்மீக உணர்வும் தலையெடுத்தன. வேத காலத்திய வாழ்வு உடலால் வாழப்பட்டதென்றாலும் ஆன்மீகப் பூரணம் பெற்றது, அந்த அளவில் இயற்கையோடு ஒன்றியது.

உடலால் வாழ்ந்த மனிதன் உயர்ந்து எட்டினால் உடலால் பெற்ற பூரணத்தை, அறிவால் பெறுவது எளிதன்று. அறிவு உயர்ந்தது என்பதால், அதே பூரண நிலை அறிவில் ஏற்படுவது சிரமம். ஒரு குடும்பத்தில் சொத்து விஷயத்தில் ஒற்றுமை ஏற்படுவது கஷ்டம். உயர்ந்த குடும்பத்தில் அது இருக்கும். பணம், நகை, வீடு, நிலம் ஆகியவற்றில் சகோதரர்கள் மனம் ஒன்றி வேற்றுமையின்றி இருப்பார்கள். அதே வீட்டில் அடுத்த நிலையில் அதே ஒற்றுமையிருக்குமா என்றால், அது சிரமம். பொருள் விஷயத்தில் ஒற்றுமை ஏற்பட்ட பின்னரும், உணர்வு விஷயத்தில் ஒற்றுமை ஏற்படுவது கஷ்டம். 4 சகோதரர்களிருந்தால் ஒருவர் கரும்பு பயிரிடுவதை விரும்புவார். அடுத்தவர் நகரத்தில் குடி வைக்க வேண்டுமென்பார். மற்றொருவர் நெல் பயிரிட வேண்டுமென்பார். நாலாம் சகோதரர் படிப்பை முக்கியமாகக் கருதுவார். எப்படியோ விட்டுக்கொடுத்து தோற்றத்தில் ஒத்துப் போவார்கள். பொருளில் உள்ள ஒற்றுமை அடுத்த உயர்ந்த நிலையில் ஏற்படுவது சிரமம். 4 சகோதரர்களும் உணர்வாலும் ஒத்துப் போகிறார்கள் என்றால் அது உயர்ந்த குடும்பம். அனைவரும் பயிர் செய்யும் விஷயத்திலும், நகரத்திற்குக் குடி போவதிலும், படிப்பு விஷயத்திலும் அடுத்தவரைப் புரிந்து கொண்டு ஆதரவு அளிப்பது பெரிய விஷயம்.

அதற்கடுத்தது அறிவு நிலை. அங்கு ஒற்றுமை ஏற்படுவது அதைவிடச் சிரமம். அதனால் அது உயர்ந்தது. மனிதனுடைய நிலை உயர்ந்தால் அடுத்தவருடன் தான் உயர்ந்துள்ள நிலையில் ஒத்துப்போவது கடினம்.

வேதரிஷிகள் முதல் நிலையில் வாழ்ந்தவர்கள். உபநிஷத காலத்து ரிஷிகள் அறிவு நிலைக்கு உயர்ந்தவர்கள். அவர்களால் வேதரிஷிகள் கண்ட பூரணத்தைத் தங்கள் அறிவு நிலையில் காண டியவில்லை. தங்களுடைய ஆன்மீக அறிவு நிலையை ஞானமாக உயர்த்திக் கொண்டு சிறப்படைந்தார்கள். பூரணத்தைக் காண முடியவில்லை. பாரத காலத்தில் (ல்ள்ஹ்ஸ்ரீட்ண்ஸ்ரீ ங்ம்ர்ற்ண்ர்ய்) ஆன்மீக உணர்வான பக்தி ஏற்பட்டது. கிருஷ்ணபரமாத்மா பக்திக்குரிய தெய்வமானார். அது மேலும் உயர்ந்த நிலை. அதை எட்டியதே பெரியது. அந்நிலையில் உலகத்தோடு பூரணம் பெறுதல் என்பது இயலாத காரியம். அது டிய வேண்டுமானால் அதற்கு முந்திய அறிவு நிலையில் பூரணம் பெற்றிருக்க வேண்டும். அதுவே இன்றுவரை முடியவில்லை.

கிருஷ்ணபரமாத்மாவுக்கு அடுத்த நிலை ஆன்மீக நிலை (ள்ல்ண்ழ்ண்ற்ன்ஹப்), அதற்கடுத்தது (ள்ன்ல்ழ்ஹம்ங்ய்ற்ஹப்) சத்திய ஜீவநிலை. யோகம் வளர்ந்து அடுத்தடுத்த உயர்ந்த நிலைகளில் பூரணம் பெறவேண்டும். முடிவான நிலையில் பூரணத்தை எட்டுவதே பூரணயோக இலட்சியம்.

*******

  1. பகவான் ஸ்ரீ அரவிந்தர் தம் உடல் பிரம்மம் சித்திப்பதைக் கண்டார்.

பிரம்மம் பரிணாம முடிவில் பகவான் உடல் சித்தித்தது. தல் நிலை உடலாகவும், அடுத்தது உணர்வாகவும், மூன்றாம் நிலை அறிவாகவும், முடிவான நான்காம் நிலை ஆன்மாவாகவும் நமக்கு அமைகின்றன. தெய்வத்தை அறிய மனிதன் முயலும்பொழுது நேரே காண முடியவில்லை என்பதால் நிஷ்டையில் காண யல்கிறான். நிஷ்டையை மேற்கொண்டால் உணர்வு வாழ்வு மூலம் நிஷ்டைக்குக் குந்தகம் விளைவிப்பதால், வாழ்க்கையைப் புறக்கணித்து நிஷ்டையை நாடுகிறான். அதேபோல் உடலையும் புறக்கணித்து நிஷ்டையை

நெடுநாள் மேற்கொண்டு இறைவனை எட்டித் தொட்டு தவத்தில் தரிசனம் கண்டு கொள்கிறான். ஒரு முறை கண்ட அனுபவத்தை நினைத்தபொழுதெல்லாம் காண டியும் என்ற நிலைக்கு வந்தால் அனுபவம், சித்தியாகிறது. தெய்வ தரிசனம் நிஷ்டையில் சித்திக்க, வாழ்வையும், உடலையும் தபஸ்வி ஒதுக்கிவிட்டான்.

பூரண யோகம் உடலைப் போற்றுகிறது. வாழ்வை ஏற்றுக்கொள்கிறது. ஒரு கிராமத்திலுள்ள புத்திசாப் பையனுக்கு வசதியிருந்தால் அவன் வெளியூர் சென்று பட்டம் பெற முடியும். தபஸ்வி நிஷ்டையில் தெய்வ தரிசனத்தைச் (பிரம்மத்தை) சித்திப்பதற்கு ஒத்தது இது. என் குடும்பத்தில் அனைவரும் பட்டம் பெற்றால்தான் நான் பட்டம் பெறுவேன் என்பது இயலாத காரியம். என் வயது ஒத்தவர் (சகோதரர், சகோதரிகள்) அனைவரும் பட்டம் பெற்றால்தான் நானும் பெறுவேன் என்பது தபஸ்வி வாழ்வை ஏற்றுக்கொள்வதற்குச் சமம். இதைச் சாதிக்க தான் மட்டும் உயர்ந்தால் போதாது, குடும்பத்திற்கே படிப்பின் உயர்வு தெரியும் அளவு உயர்ந்திருக்க வேண்டும்.

இதுவரை யோகிகளும், முனிவர்களும் உடலை ஒதுக்கினர். உடலைப் போற்றுவது பூரணயோகம். என் ஊரில் உள்ளவர் அனைவரும் பட்டம் பெற்றால் தான் நான் பட்டம் பெறுவேன் என்பதை ஒத்தது யோகத்தில் உடலைப் போற்றுவது. நிஷ்டையில் சித்தித்த பிரம்மம் கண் விழித்தால் மறைந்து விடும். பேசினால் விலகிவிடும். காரியங்களைச் செய்ய ஆரம்பித்தால் காத தூரம் செல்லும். பூரண யோகத்தில் சித்தி என்பது வாழ்வில் பெற வேண்டியது. தபஸ்வி நிஷ்டையில் பெற்றதை எல்லாக் காரியங்களையும் செய்யும்பொழுது பெறுவதே பூரணயோகம். அதில் மூன்று நிலைகளுண்டு. முதல் நிலையில் அறிவால் சித்தி பெறுகிறான். அடுத்தது உணர்வு, முடிவான மூன்றாம் நிலை உடலால் அறிவது. சங்கராச்சாரியார் முன் சண்டாளனாக வந்த சிவபெருமானைச் சண்டாளனாகக் கண்டது ஊனக் கண். பிரம்மமாகக் காண்பது ஞானக்கண்.

தான் ஏற்றுக் கொண்ட வாழ்வில் காண்பவற்றை பிரம்மமாகக் காண்பது ஞானசித்தி. இது முதல் நிலை. இனிமையாகப் பேசுபவரையும், எரிச்சல் மூட்டுபவரையும் பிரம்மமாக அறிவு தெரிந்து கொண்டாலும், உள்ளிருந்து எரிச்சல் வரும், உள்ளிருந்து எரிச்சல் வருவதற்குப் பதிலாக பிரம்மம் இனிமையாகவும், எரிச்சலாகவும் ஸ்பர்சிப்பதை உணர்வது அடுத்த உணர்வு நிலையில் பிரம்மம் சித்திப்பதாகும்.

கையால் மாம்பழத்தை எடுத்தால் பிரியமாக இருக்கிறது. மண்ணை எடுத்தால் பிரியமாக இல்லை. சகதியைத் தொட்டால் வெறுப்பாக இருக்கிறது. கை, தான் தொடும் மாம்பழத்தையும், மண்ணையும், சகதியையும் பிரம்மமாக உணர்ந்தால் பிரம்மம் உடல் சித்தித்ததாக அர்த்தம்.

நிஷ்டையில் பிரம்மம் சித்திப்பது ஆன்மீகச் சித்தி. அது முதிர்ந்து அறிவிலும், உணர்விலும், முடிவாக உடலும் சித்திப்பது உயர்ந்த அடுத்த நிலைகள். கீழிருந்து மேலே போகும்பொழுது உடல் முதல் நிலையிலும், ஆன்மா முடிவிலும் இருப்பதைப்போல், மேருந்து கீழே வரும்பொழுது ஆன்மா முதல் நிலையிலும் உடல்முடிவானநிலையிலும்அமைந்துள்ளன.

*******

  1. சூட்சும உடல் என்பது (ற்ழ்ன்ங் ல்ட்ஹ்ள்ண்ஸ்ரீஹப்) உண்மையான உடருந்து சற்று மாறுபட்டது.

சூட்சும உடல். பகவான் ஸ்ரீ அரவிந்தர் புதிய பதப்பிரயோகம் செய்து தம் யோகத்தை விளக்கியுள்ளார். அதில் ற்ழ்ன்ங் ல்ட்ஹ்ள்ண்ஸ்ரீஹப் என்பதும் ஒன்று. உண்மையான உடல் என்பதைச் சூட்சும உடல் என்றும் தவறாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்புண்டு.

ஸ்தூல உடல், சூட்சும உடல் என உடலை இரண்டாகக் குறிப்பிடுவார்கள். மாடு தன் முதுகின் மீது உட்கார வரும் வண்டை உட்காருவதற்கு முன் வாலால் தட்டும்.

உடல் உட்காருவதற்கு முன், கண்ணால் பார்க்காமல் வண்டு வருவது மாட்டின் சூட்சும உடலுக்குத் தெரிகிறது. சர்க்கரையைக் கொண்டு வந்தவுடன் எங்கிருந்தோ எறும்பு அதைத் தெரிந்து வருகிறது. விலங்கினங்களுக்குச் சூட்சும உடல், சூட்சும உணர்வுண்டு. மனிதனுக்கு அறிவு வளர்ந்து விட்டதால், சூட்சுமக் குணங்கள் மறைந்து விடுகின்றன. ஓரளவு இருப்பதுண்டு.

குழந்தை பிறந்தவுடன் தெய்வாம்சத்துடனிருக்கிறது. சிறு வயதில் பொய், சூது தெரிவதில்லை. வளர வளர எல்லா வக்ரங்களையும் கற்றுக் கொள்கிறது. வக்ரங்களைக் கற்றுக் கொள்வதற்கு முன் குழந்தை மனம் ற்ழ்ன்ங் ம்ண்ய்க் உண்மையாக இருப்பதால் அதை உண்மையான மனம் என்று ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடுகிறார். மனத்திற்கும், உடலுக்கிருப்பதைப் போல் சூட்சுமம் உண்டு. மனம் உண்மையாக இருப்பதாலும் சூட்சுமம் ஏற்படும். இது உயர்ந்த சூட்சுமம். எல்லாக் கரணங்களுக்கும் சூட்சுமம் உண்டு. எல்லாக் கரணங்களும் உண்மையாக இருப்பதால் உயர்ந்த நிலையில் சூட்சுமம் பெறுகின்றன, திருடன் திருடுவதற்குக் கூர்மையான புத்தியுடையவனாக இருக்கின்றான். போலீஸ்காரன் திருடனைக் கண்டுபிடிக்க கூர்மையான புத்தியைப் பெறுகிறான். இது உயர்ந்தது.

மனம் வக்ரங்களை இழந்து ற்ழ்ன்ங்ம்ண்ய்க் உண்மையாகிறது. உடல் சுயமாகச் செயல்படுவதில்லை, அறிவால் உடல் ஆளப்படுகிறது. அதனால் தன் உண்மையை இழக்கின்றது. அறிவு உடலுக்கு விடுதலையளித்தால் உடல் உண்மை உடலாகி விடும். எப்படி மனம் வக்ரங்களை இழந்து உண்மையாகிறதோ அப்படி உடல் மனத்தின் ஆக்கிரமிப்பை இழந்து உண்மையாகிறது. விபத்தில் உடல் தன்னை அதிசயமாகக் காப்பாற்றுவதைப் பார்க்கின்றோம். மனத்தின் ஆணையை மட்டும் செய்து வந்தவுடல், ஆபத்தில் தன்னை மனம் காப்பாற்ற முடியவில்லை என்று தெரிந்தவுடன், மனத்தை மீறி தன் உண்மையான சக்தியை வெளிப்படுத்தி தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறது. இந்தச் சக்தி பெரியது.

அதுவே உண்மை மனத்தின் (ற்ழ்ன்ங் ம்ண்ய்க்) சக்தி, அதற்குரிய சூட்சுமம் உயர்ந்த சூட்சுமம்.

உடல் மனத்தின் ஆக்கிரமிப்பை விட்டு விடுதலை பெற்று பெருந்திறன் பெறும்பொழுது உண்மை உடலாகிறது. விலங்கினங்களுக்குள்ள சூட்சும உடலுடன் இந்த உண்மை உடன் திறத்தை நாம் சேர்த்துப் பார்த்து குழப்பம் விளைவிக்கக் கூடாது. சூட்சுமம் தாழ்ந்த நிலையிலுள்ள விலங்கினத்திற்கு உண்டு. உயர்ந்த தெய்வ நிலையிலுள்ள உண்மை உடலுக்குண்டு. இது உச்சக்கட்ட சக்தி.

விலங்கு பெற்றுள்ளது சூட்சும உடல், இது மனம் வளர்வதற்கு முன் உள்ள திறன், மனம் வளர்ந்த பொழுது இந்த சூட்சுமம் மாறுகிறது. மனிதன் அதனால் இதை இழந்துவிட்டான். ஆனால் மனத்தின் பிடியை மீறி உடல் மீண்டும் பெறும் சூட்சுமம் விலங்கின் சூட்சுமத்தை விட உயர்ந்தது. அதை பகவான் ற்ழ்ன்ங் ல்ட்ஹ்ள்ண்ஸ்ரீஹப் உண்மை உடல் என்கிறார்.

********

  1. கண்ணை மூடிக்கொண்டு அன்னை பொருள்களைக் காண்பதுண்டு.

மூடிய கண்ணின் சூட்சுமப் பார்வை. புலன்கள் நுகர்ந்தாலும், அவை கருவிகளே, நுகர்வது மனம். மூளையில் பார்வைக்குரிய நரம்பும், கேட்பதற்குரிய இடமும் உண்டு. அவை பழுதானால் கண், காது, சரியாக இருந்தாலும் கண் பார்க்காது. காது கேட்காது. உண்மையில் மனமே ஐம்புலன்களின் வேலையைச் செய்கிறது. முனிவர் கண்ணை மூடிக் கொண்டு நிஷ்டையிருக்கும்பொழுது எதிரில் நடப்பதை அவர் பார்க்க முடியும்; கண் மறைவாக உள்ளதையும் பார்க்க முடியும். மனத்தின் புலன்கள் செயல்பட்டு கண்ணின் உதவியின்றி காட்சிகளைக் காண முடியும்.

மனத்திற்கு ஐம்புலன்களின் திறன் உண்டு. ஆதியில் 12 புலன்களிருந்ததாகவும் நாகரிகம் வளர்ந்த பின்

7 புலன்கள் மறைந்ததாகவும் பகவான் சொல்லுகிறார். இந்த 12 புலன்களும் மனத்திற்குண்டு. அதேபோல் உடலுக்கும் 12 புலன்களின் திறனுண்டு. எப்படிக் கண் மூடியிருக்கும்பொழுது மனம் பொருள்களைப் பார்க்க முடிகிறதோ, அப்படி உடலாலும் பார்க்க டியும். உடன் புலனுணர்வு விழித்தெழுவதே உச்ச கட்ட யோக சித்தி. அன்னை அதுபோல் பொருள்களைக் காண்பதுண்டு.

கண்ணைத் திறந்து கொண்டு எழுதும்போது எழுத்து நேராக இருப்பதில்லை, மூடிக் கொண்டு எழுதினால் நேராக இருக்கிறது என்று அன்னை கூறுகிறார்.

*******

  1. சக்தியும், ஜீவியமும் பிரிந்துள்ளன. அவை யோகத்தால் தாமே சேர வேண்டும். ஜீவியத்தை, சக்தி வந்து செயல்படச் செய்தால், சத்தியம் பொய்யாகும்.

தானே சேர்வது மெய். வய சேர்ப்பது பொய். சச்சிதானந்தம் என்பது சத்து, சித்து, ஆனந்தம் ஆகும். சித்து என்பதே ஜீவியம், ஜீவியம் செயல்பட வேண்டுமானால் அது சக்தியாக வேண்டும்.

எனவே சக்தி ஜீவியத்திருந்து பிரிந்து வெளிவருகிறது. அதுவே சிருஷ்டிக்கு அடிப்படை. அதிருந்து ஏற்படுவனவே சத்திய ஜீவியம், தெய்வலோகம், மனம், வாழ்வு, ஜடம், இருள் ஆகியவை. ஜீவியத்திருந்து பிரிந்த சக்தி சிருஷ்டியாகச் சஞ்சாரம் செய்து முழு இருளாக மாறி மீண்டும் இருளிருந்து ஒளியாக வந்து கீழிருந்து யாத்திரையைத் தொடங்கி மீண்டும் படிப்படியாக உயர்ந்து, சித்தை அடைகிறது. இதன் மூலம் சிருஷ்டி பூர்த்தியடைகிறது. இதற்கு 30,000 ஆண்டுகளாகலாம். யோகத்தால் இதை 3000மாகவும் குறைக்கலாம், 30தாகவும் குறைக்கலாம் என்கிறார் பகவான்.

யோகத்தால் சிருஷ்டியைத் துரிதப்படுத்துவது சைக்கிளில் போவதை மாற்றி, பஸ்ஸில் போவதைப் போன்றது. அதிக வேகமுள்ள கருவியை நாடுவதால்

விரைவாகச் செல்ல முடியும். வந்து செயல்படுவது என்பது சைக்கிளில் மோட்டாரை இணைத்து 50 மைல் வேகத்தில் போக முயல்வது போருக்கும். இதனால் சைக்கிள் உடைந்துவிடும். உயிருக்கு ஆபத்து.

வேகமாகப் போக வேண்டும் என்றால் கருவியை நாட வேண்டும். பழைய கருவியும், புதிய வேகமும் சேர்ந்தால் காரியம் கெட்டுப் போகும். சத்தியத்தை அடைய முயலும் யோகம், பொய்யை அடைய நேரிடும்.

வந்து செயல்பட விழைவது அகந்தை. அது பொய்யானது, பொய்யின் கருவியுமாகும். பொய்யின் கருவி மெய்யைத் தேடி வந்தால், அது மெய்யைக் கண்டுபிடிக்காது, பொய்யைக் கண்டு கொள்ளும். யோக சக்தி ஒளியாலானது. ஒளி சத்தியத்தைச் சேர்ந்தது. யோகத்தால் செயல்படும்பொழுது ஒளி வெளிப்படும். அது மெய்யைக் கண்டு கொள்ளும். சத்தியம் ஜெயிக்கும். இறைவனின் இலட்சியம் பூர்த்தியாகும்.

******

  1. உடல்படும் துன்பம் உண்மையானதன்று.

ஒரு குடும்பத்தில் உடல் தகப்பனாரைப் போன்றது. மனம், உணர்வு பிள்ளைகளைப் போன்றன, குடும்பச் சொத்து எந்தப் பிள்ளையிடமிருந்தாலும் தகப்பனாருக்குக் கவலையில்லை. அது குடும்பத்தில் இருக்கும்வரை சரி. பிள்ளைகளுக்குள் போட்டி வரும். மனமும், உணர்வும் போட்டியிடும் தன்மையுடையவை. சில சமயங்களில் தகப்பனாரும் ஒரு பிள்ளையுடன் சேர்ந்து அடுத்த பிள்ளைக்குப் போட்டியாக நிற்பதுண்டு. அப்பொழுது போட்டியுணர்வு தகப்பனாருக்கும் வரும். அது உண்மையில் தகப்பனாருக்குப் போட்டி கிடையாது. போட்டியை ஏற்றுக் கொள்வதில் உண்மையில்லை.

மனம்தான் வயை உற்பத்தி செய்யும் கருவி. மனத்தை ஏற்றுக் கொண்டு உணர்வும் சில சமயங்களில் வயை உற்பத்தி செய்யும். உடலுக்கு இயல்பாக வ என்பது

கிடையாது. மனத்திற்கு அடிமைப்பட்டு உடலும் வயை உணர்கிறது. முழுமையுள்ள இடத்தில் வயிருப்பதில்லை. உடலுக்கு முழுமை இயல்பாக உண்டு. அதனால் உடலுக்கு எப்பொழுதும் வயில்லை. மனத்திற்கு முழுமையில்லை. அதனால் அதற்கு எப்பொழுதும் வயுண்டு. மனத்தோடு சேர்ந்தாலன்றி உடலுக்குத் துன்பமில்லை. எனவே உடல்படும் துன்பம் உண்மையானதன்று.

பிரித்துப் பாகங்களாக்கும் பொம்மையுண்டு. பாகங்களைச் சேர்த்து முழுப் பொம்மையாக்குகிறோம். குழந்தை விளையாட வரும்பொழுது பொம்மையை ழுதாகக் கொடுக்கிறோம். விளையாடாதபொழுது பிரித்து வைக்கின்றோம். இதனால் குழந்தைக்கு எந்தச் சிரமமும் இல்லை. பொம்மையைப் பற்றி எதுவும் தெரியாத மற்றொருவர் பொம்மையைப் பிரித்தவுடன் பயந்து போய் உடைந்து விட்டதாக நினைத்து வருத்தப்பட்டால், அதனால் குழந்தைக்கோ, விளையாட்டுக்கோ நஷ்டமில்லை. அவர் போய், குழந்தையிடம் உன் பொம்மை உடைந்து விட்டது என்று சொல் நம்ப வைத்துவிட்டால் குழந்தை அழுகிறது. அந்த அழுகை தேவையில்லை. ஏனெனில் அது விளையாட வரும்பொழுது மீண்டும் பொம்மை ழுதாக இருக்கும்.

உடலுக்கில்லாத துன்பத்தை மனம் உற்பத்தி செய்து உடலையும் துன்பப்படுத்துவது மனித வாழ்வு. அதில் உண்மையில்லை.

*******

  1. உடைந்த பொம்மைக்காக அழும் குழந்தையின் வருத்தம் வளர்ந்தவருக்கு வாராது. அதுபோல் நாம் உடலால் படும் துன்பம் யோக முதிர்ச்சியுள்ளவர்க்கில்லை.

யோகிக்குத் துன்பமில்லை.

*******

  1. மனித சுபாவம் நாய்வால் போன்றது. அதை நிமிர்த்த டியாது என்று கூறுவர். இர்க்ஹ் ஸ்ரீர்ய்ள்ஸ்ரீண்ர்ன்ள்ய்ங்ள்ள் உடன் ஜீவியத்தை மாற்ற முயன்றால் மனித சுபாவமே எளிது என்று தோன்றும்.

நாய் வாலை விடக் கடினமான மனித சுபாவம்.

சுபாவம் என்பது உடன் பிறந்தது. பிறப்பில் ஏற்பட்டது என்று நாம் அறிவோம். தலைவிதியைப் போல் சுபாவத்தையும் மாற்ற முடியாது என்று முயன்றவர்கள் கண்டு கொண்டனர். யோக சக்தியால் சுபாவத்தையும் பல வருஷங்களில் மாற்ற முடியும் என்பதைப் பழைய யோகங்கள் சிலவற்றில் சொல்வதாக அன்னை சொல்கிறார். சுபாவத்தை மாற்ற முடியும், மாற்ற வேண்டும் என்பது அன்னையின் கொள்கை.

100 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ அரவிந்தர் இலண்டனில் பயின்றார். இன்று அந்தப் பள்ளிக்கூடத்திலும், கல்லூரியிலும் அவர் பெற்ற மார்க்குகளைக் குறித்த ரிஜிஸ்டர் இருக்கிறது. ஆராய்ச்சிக்காகப் போனவர்கள் படித்தார்கள். அது போன்ற ரிஜிஸ்டர்கள் ஐரோப்பாவில் 400 வருஷம், 500 வருஷத்தியவையும் இருக்கின்றன. ரிஜிஸ்டர் ஏற்பட்டு விட்டால் அவை நிலையாக இருக்கும். நூற்றுக்கணக்கான வருஷங்களாகவுமிருக்கும். அதில் மாற்றமில்லை என்பது சரித்திரம். 100க்கு 90 பங்கு அவை அழிவதில்லை. 90 பங்கு ரிஜிஸ்டர் அழிவதில்லை என்றால் கல்வெட்டுகள் 1 பங்கும் அழியாது. நூற்றுக் கணக்கான வருஷங்கள் மட்டுமல்ல, ஆயிரக் கணக்கான வருஷங்கள் இருக்கக் கூடியவை அவை.

மனித சுபாவம் ரிஜிஸ்டரைப் போன்றது. உடன் சுபாவம் கல்வெட்டைப் போன்றது. மனமும், உணர்வும் சூட்சுமமானவை. சூட்சுமமான கரணங்களை மாற்றுவது நாய் வால்போல் என்றால் ஸ்தூலமான கரணமான உடலை எப்படித் தொட முடியும்? அன்னை அதையும் தொட்டார். அதுவும் மாறிற்று.

அதுவே அன்னை ஸ்ரீ அரவிந்தரைத் தாண்டிப் பெற்ற சித்தி. முழுவதும் முடியவில்லை என்பதே அன்னையின் குறை.

*******

  1. உயர்ந்த கருத்து அறிவை விசாலப்படுத்தும். ஆழ்ந்த உணர்வு ஜீவியத்தை மாற்றும். நிதானமான உணர்வு உடலையும் மாற்றும். தான் மாற விரும்பும் மனிதனால் பிறரை மாற்ற முடியும்.

மனிதன் தன்னை மட்டுமே மாற்ற வேண்டும். ஏகாதிபத்தியம் என்பதை விட்டு ஜனநாயகம் என்ற கருத்தை பிரிட்டன் ஏற்றுக் கொண்டதால் அது இந்தியாவுக்குச் சுதந்தரம் வழங்கியது இது பிரிட்டிஷ் சரித்திரத்தில் ஏற்பட்ட புரட்சி, கருத்தால் ஏற்பட்ட பெரிய மாறுதல்.

போர்க்களத்தில் ஏற்பட்ட ஆழ்ந்த உணர்வு அசோகச் சக்கரவர்த்தியை அடியோடு மாற்றி அஹிம்சாவாதி ஆக்கியது. அறிவாலும், உணர்வாலும் உடலை மாற்ற டியாது. நிதானம் ஏற்பட்டால் உடலும் மாறும். எந்தச் செயலாலும் எரிச்சல் ஏற்படாமருப்பது நிதானமாகும். அதனால் மட்டுமே உடல் மாறக் கூடியது.

தாம் மாற எவரும் விரும்புவதில்லை. பிறரை மாற்ற அனைவரும் முயல்வார்கள். பிறரை மாற்ற முடியாது, தான் மாறுவது என்பதே பெரிய கஷ்டம். விசால புத்தியாலும், ஆழ்ந்த உணர்வாலும் மாற்றிக் கொண்டால், அவரால் அடுத்தவரை மாற்ற முடியும். தான் மாறாமல் பிறரை மாற்ற முயல்வது கடையில் பணம் கொடுக்காமல் பொருள் வாங்க முயல்வதை ஒக்கும்.

********

  1. சத்தியம் பொய்யாக மாறும் பாதையைக் கண்டு கொண்டால், பொய்யை மெய்யாக மாற்ற இயலும்.

பொய் மெய்யாவதும் மெய் பொய்யாவதும் முறை ஒன்றே.

ஒரு பொய் சொல்ல முடிவு செய்தபொழுது மனம் எப்படி மெய்யைப் பொய்யாக மாற்றுகிறது, எப்படி நம் இலட்சியத்தை விட்டுக் கொடுக்கிறது, எப்படிப் போராடும் மனச்சாட்சிக்குச் சமாதானம் சொல்கிறது, எப்படி அதற்குரிய கதையை உடனே தயார் செய்ய நம் திறமையை உபயோகப்படுத்துகிறது, எங்ஙனம் நம் பழைய நல்ல நோக்கத்தைப் புதிய பொய்க்குத் தகுந்தவாறு க்ஷணத்தில் மாற்றிக் கொள்கிறது, அதைக் கேட்பவர் நம்புவதற்குத் தகுந்தாற்போல் எந்த விதத்தில் கத் தோற்றத்தையும், குரலையும், பாவனையையும், பாவத்தையும் மாற்றிக் கொண்டது என்பதை மனிதன் அறிவான் ( ர்ல்ண்ய்ண்ர்ய்'ள், ண்க்ங்ஹப்ள், ஹற்ற்ண்ற்ன்க்ங்ள், ச்ஹஸ்ரீற்ள், ல்ழ்ங்ச்ங்ழ்ங்ய்ஸ்ரீங்ள், ஸ்ரீர்ய்ள்ஸ்ரீண்ங்ய்ஸ்ரீங், ல்ழ்ங்ற்ங்ய்ஸ்ரீங், ல்ழ்ர்ச்ங்ள்ள்ண்ர்ய், ஸ்ரீட்ஹழ்ம், ஸ்ர்ண்ஸ்ரீங், ஸ்ரீர்ய்ஸ்ண்ஸ்ரீற்ண்ர்ய்ள் ஹப்ப் ள்ன்க்க்ங்ய்ப்ஹ் ப்ங்ய்க் ற்ட்ங்ம்ள்ங்ப்ஸ்ங்ள் ற்ர் ற்ட்ங் ய்ங்ங்க்ங்க் ஸ்ரீட்ஹய்ஞ்ங்) இவையெல்லாம் முயன்று செய்ய வேண்டியவை. மெய் சொல்ல எந்த முயற்சியும் தேவையில்லை. நெடு நாளாகப் பொய் சொல்லும் பழக்கம் இருப்பதால், இன்று முயன்று இந்தப் பொய்யான பழக்கத்தை விட்டு மெய் சொல்ல வேண்டுமானால் தான் என்ன செய்ய வேண்டும் என மனிதன் அறிவான். அதாவது பொய் சொல்ல எடுத்த முயற்சியை எடுக்கக் கூடாது. முயற்சி எடுத்து ஒவ்வொரு கட்டத்திலும் மேற்கண்டவற்றை நேராக மாற்றிக் கொள்ள வேண்டும்.

சத்தியம் பொய்யாக மாறும் பாதையும், பொய் மெய்யாக மாறும் பாதையும் ஒன்றே. செல்லும் திசை எதிரானது.

********

  1. உலகப் போரைத் தடுக்கும் சூட்சுமச் சாதனமாக அன்னை ஆரோவில் நகரத்தை நிர்மாணித்தார். நம் வாழ்வின் துர் அதிர்ஷ்டங்களைத் தடுக்க நாமும் அதே போல் ஒரு சாதனத்தைத் தேடலாம். புதிய வாய்ப்பை ஏற்படுத்தும் சாதனங்களையும் தேடலாம்.

போரைத் தடுக்கும் சமாதான நகர். மனிதனுடைய வேகம், பொறாமை, எதிர்ப்புணர்ச்சி, அகந்தைகளால் போர் மூளுகிறது என்பதால் ஓர் இடத்தில் மனிதன் சேர்ந்து அந்த உணர்ச்சிகளைத் தன் அன்றாட வாழ்வில் வெல்ல முயன்றால், அதுவும் அன்னையின் சூழல் அதைச் செய்தால் அவ்வுணர்வுகள் கரைந்து விடும். அதனால் உலகத்தில் போர் மூளாது என்பது தத்துவம்.

ஒரு நகரத்தில் இலட்சிய மனிதர் ஒன்று கூடி தங்கள் தாழ்ந்த குணங்களை வெல்லும் வகையில் வாழ்க்கையை நடத்தினால் உலகில் மனிதனுடைய தாழ்ந்த குணங்கள் அழியும்.

ஆசிரமத்தில் நடக்கும் எந்த நல்ல காரியமும் உலகம் ழுவதும் பரவும் என்பது அன்னையின் நம்பிக்கை. அதன் அடிப்படையில் ஏதாவது ஒரு புதிய விஷயத்தைப் பற்றி அன்னையிடம் சொன்னால் ஆசிரம வாழ்வுக்கு அது தேவையில்லாவிட்டாலும், உலக நன்மையைக் கருதி அன்னை அக்காரியங்களை மேற்கொண்டதுண்டு. கராத்தே பயிற்சிக்கூடம், ள்ஸ்ரீட்ர்ர்ப் ச்ர்ழ் ல்ங்ழ்ச்ங்ஸ்ரீற் ங்ஹ்ங்ள்ண்ஞ்ட்ற், கண் பயிற்சி நிலையம், ஆயூர்வேத மருத்துவம் ஆகியவை அப்படி ஆரம்பிக்கப்பட்டனவே.

கங்கா, யமுனா, காவேரி, சரஸ்வதி என்று ஒரு ஸ்லோகத்தைச் சிறு குழந்தைகளுக்குச் சொல் கொடுத்தார்கள். குழந்தைகள் தினமும் குளிக்கும் பொழுது இந்த ஸ்லோகத்தை ஆரவாரமாக அதிகமாகச் சொல்ல ஆரம்பித்தார்கள். பீகார், ஒரிசா போன்ற மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிற்று. குழந்தைகளுடைய ஆசிரியர்கள் வெள்ளத்திற்கும் ஸ்லோகத்திற்கும் சம்பந்தமுண்டா என்று யோசனை செய்யும்பொழுது, ஸ்லோகத்தை எதற்கும்

நிறுத்துவோம் என்று கருதி நிறுத்திவிட்டார்கள். வெள்ளம் நின்றுவிட்டது.

அன்னையின் சூழல் நடப்பது அனைத்திற்கும் அர்த்தம் உண்டு. நம் ஆபீஸ் வாழ்வில் சண்டையும் சச்சரவுமாக இருப்பதாக வைத்துக் கொண்டால், வீட்டில் சுமுகத்தை அதிகப்படுத்த முனையலாம். அதற்குரிய பலன் ஆபீஸிருக்கும். வளர்ந்த பையன் நேரத்திற்கு வீட்டிற்கு வருவதில்லை என்றால், அவன் சம்பந்தப்பட்ட எல்லாக் காரியங்களையும் தாயார் நேரத்தில் தவறாமல் செய்தால், பையன் நேரத்திற்கு வர ஆரம்பிப்பான்.

வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் ஏற்பட வேண்டுமானால், வீட்டில் உபயோகப்படக்கூடிய பொருள்களுக்குத் தகுந்த உபயோகம் ஏற்படுத்துவது நல்லது. யாரும் கவனிக்காத பொருள்கள், அலட்சியப்படுத்தப்பட்ட மனிதர்கள், சந்தர்ப்பங்கள், கருத்துகளை இப்பொழுது பொருட்படுத்தி அவை பயன்படும் ஒரு வாய்ப்பை முயன்று உற்பத்தி செய்தால், புதிய வாய்ப்புகள் நம்மை நோக்கி வரும்.

*******

  1. ஆன்மா அசையும்பொழுது முகத்தில் அற்புதமான களை ஏற்படுகிறது.

கக்களையாக மாறும் ஆன்மாவின் அசைவு. அசைவு பக்தியாலும் ஏற்படலாம், கோபத்தாலும் ஏற்படலாம். ஆன்மா முகத்தில் தெரியும்பொழுது எதனால் அசைவு ஏற்பட்டது என்ற பிரச்சினையில்லை.

பக்தி உயர்ந்தது, கோபம் தாழ்ந்தது என்பது மனிதனுடைய சட்டம். ஆன்மா அந்தச் சட்டத்திற்குப் புறம்பானது. களை என்ற சொல்லை ஆங்கிலத்தில் ஞ்ழ்ஹஸ்ரீங் என்று சொல்வது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது?

******

  1. பெரும் முகமாறுதல்கள் க்ஷணத்தில் ஏற்படுகின்றன.

பெரிய மாறுதல்கள் ஏற்பட அதிக நேரம் தேவை என்ற கருத்து ஆன்மாவைப் பொருத்தவரை சரியில்லை. ஆன்மாவின் அசைவால் ஏற்படும் முக மாறுதல் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் மாற்றம் க்ஷணத்தில் ஏற்படும்.

*******

  1. Dec. 5 முதல் Dec 9 தேதிவரை ஸ்ரீ அரவிந்தரால் டியவில்லை. நீ என்ன செய்வாய் என்று தீய சக்திகள் வருஷம் தவறாமல் அன்னையைக் கேட்பதுண்டு. சந்தேகத்தை ஏற்படுத்துவதே தீய சக்திகளின் கடைசி ஆயுதம். அதையும் தாண்டிய நிலையில் அவை நம் தன்னம்பிக்கையை அழிக்க முயலும்.

தீய சக்திகள் நம்பிக்கையை அழிக்கும். நமக்கு அன்னை விஷயத்தில் முக்கியமானவற்றைப் பற்றி உள்ளிருந்து தவறான கேள்வி எழுந்தால், அது தீய சக்திகளின் செயல் என அறிய வேண்டும். சந்தேகம் வந்தால் அதையே உணர வேண்டும். தன்னம்பிக்கைக் குறையும்பொழுது இது தீய சக்திகளின் வேலை என்று அறிந்தால் அவை பறந்துவிடும்.

அன்னைக்கு முக்கியமான விஷயங்களில் சரியான அபிப்பிராயங்களை ஏற்படுத்தி அவற்றை வலுப்படுத்துதல் நல்லது. மேலும் மேலும் தினமும் வலுப்படுத்துதல் முறை.

சந்தேகத்தை அழிக்கும் எண்ணங்களைத் தொடர்ந்து ஏற்படுத்திக் கொள்ளுதல் தீய சக்திகளை அண்டவிடாமல் செய்வதாகும்.

தன்னம்பிக்கையைத் தொடர்ந்து அதிகப்படுத்தும் காரியங்களில் இடைவிடாது ஈடுபடவேண்டும்.

*******

  1. பரிசு என்பது பொருள். உணர்வு பரிசைப் புனிதப்படுத்துகிறது.

புனிதமான உன்னத ஆன்மாவின் பரிசு வரம். உயர்ந்த எண்ணத்தால் அவ்வுணர்வு உன்னதமாகிறது. அடுத்த நிலையிலுள்ள ஆன்மா அப்பரிசை வழங்கும் திறனை அளித்து அதை வரமாக மாற்றுகிறது.

ஐன்ம்ஹய் ழ்ங்ப்ஹற்ண்ர்ய்ள் நாம் பழகும் இடங்களில் பரிசு கொடுக்கிறோம். அது நெருங்கிய இடங்களில் நல்லுணர்வால் பரிசு புனிதப்படுவதுடன் உறவையும் புனிதப்படுத்துகிறது. உணர்வின் பின்னணியிலுள்ள எண்ணம் உயர்ந்தால், பரிசும், உறவும், அதற்குக் கருவியான உணர்வும், புனிதமும், உன்னதமும் பெருகுகின்றன.

அறிவுக்கும், உணர்வுக்கும், பொருளுக்கும் சிகரமான நிலையில் ஆன்மா உள்ளது. ஆன்மா செயல்பட ஆரம்பித்தால் பரிசு வழங்கும் திறனை உற்பத்தி செய்யும். திறனை உயர்த்தி வரமாக மாற்றும். மனித உறவில் ஆன்மா செயல்பட்டால் வரமளிக்கும் திறனை உற்பத்தி செய்யும். தன்னையே பரிசாக உயர்ந்த எண்ணத்தோடும் நல்லுணர்வோடும் அளிக்க முன் வருபவருக்கு அவர் உறவையே வரமாக மாற்றும் அவருடைய ஆன்மா.

******

  1. சத்திய ஜீவனுடைய ஒளி மனதையும் உணர்வையும் தாண்டிய கடைசிக் கட்டத்தில் உடலைத் தொடும் பொழுது பொன்னொளியாகிறது.

உடலைத் தொடும் பொன்னொளி.

******

  1. அன்னையை அழைத்தால் தீய சக்திகள் விலகும். அதற்கும் அசையாதவை உண்டு. பகவானை அழைத்தால் அவையும் விலகும்.

தீய சக்திகளை அன்னை விரட்டுகிறார்.

*******

  1. ஆழ்ந்த சொந்த உணர்ச்சிகளைக் கிளறினால் நாட்டின் நிலைமையை மாற்றும் சக்திகளும் வெளிப்படும்.

ஆழ்ந்த உணர்ச்சிகள் நாட்டை மாற்றும் திறனுடையவை. நாம் மேலெழுந்தவாரியாகச் செயல்படுகிறோம். ஆழ்ந்த சொந்த உணர்ச்சிகள் உள்ள இடத்தில் மனிதன் உலகத்தோடு இணைந்த நிலையிருப்பதால், அவற்றைக் கிளறினால் பெரிய சக்திகள் வெளிப்படுகின்றன.

ஓர் ஆபீஸில் ஏற்படும் சிறு தகராறுகளைச் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளலாம். அல்லது ஆபீஸருக்கும் ஊழியருக்கும் வந்த தகராற்றை நடைமுறைச் சட்டப்படித் தீர்க்கலாம். இதுவரை நடைமுறையில் இல்லாத ஒரு விஷயத்தில் ஆபீஸருக்கும் ஊழியருக்கும் தகராறு ஏற்பட்டால் அதைத் தீர்க்க முனையும்போது, எல்லா ஊழியருக்கும் உள்ள உரிமைகளைத் தொடும் நிலை ஏற்படும்.

*******

  1. அருள் அதிகரிக்கும்பொழுது அறியாமையும் அதிகரிக்கின்றது. ஏதோ ஒரு நிலையில் அருளும், அறியாமையும் ஒன்றன்றோ?

அருளும், அறியாமையும் ஒன்றன்றோ? உடன் ஒரு பகுதி வளர்ந்தால், அடுத்த பகுதியும் வளர்கிறது. ஏனெனில் ஒரு பகுதியின் வளர்ச்சிக்கு மொத்த உடன் வளர்ச்சி தேவை. எனவே முழு உடல் வளரும்பொழுது, அதனுள் உள்ள எல்லாப் பகுதிகளும் வளர்கின்றன. அருள் தெய்வத்தின் செயலானாலும் பிரம்மத்தின் ஒரு பகுதியாகும். ஒரு பகுதி வளர, முழுமையின் வளர்ச்சி தேவை, எனவே அடுத்த பகுதிகளும் வளர்கின்றன. அறியாமை ஒரு பகுதி என்பதால் அதுவும் வளர்கிறது.

அறியாமை, அறிவைவிட அதிக சக்தி வாய்ந்தது என்கிறார் பகவான், அறிவு என்பதே முதல் ஏற்பட்டது. அறிவு, சிருஷ்டியின் தேவைக்காக, தன்னை அறியாமையாக முயன்று மாற்றிக்கொண்டது. அந்த வகையில் அறியாமை அறிவைத் தாண்டிய

நிலையிலுள்ளது. அடிப்படையில் அறியாமை என்பது அறிவிருந்து உற்பத்தியானது. ஆகையால் அறியாமை தன் வளர்ச்சி மூலம் தன் எல்லையை எட்டியபொழுது அறிவாக மாறிவிடும். அருள் செயல்படுவதால் அறியாமை அறிவாக மாறுவது இயற்கையன்றோ? இந்த இரு காரணங்களாலும் அருள் அதிகரிக்கும் பொழுது, அறியாமையும் அதிகரிக்கின்றது.

அதையும் தாண்டிய நிலையில் அருள் எதிருந்து புறப்பட்டதோ அதிருந்துதான் அறியாமையும் புறப்பட்டது என்பதால், அந்த ஒற்றுமையும் உண்டு.

******

  1. மாறுவது அவ்வளவு கடினமன்று. எங்கு மாற வேண்டும், மாற வேண்டியது எது என்று தெரியவே நாளாகிறது.

மாறுவதை விட, மாறும் நிலை சிரமம்.

நாம் உள்ள நிலையிருந்து அடுத்த (யோக) நிலைக்கு மாற வேண்டும் என மனிதனால் நினைக்க டியவில்லை. ஆள்ஸ்ரீங்ய்ற் ற்ர் ற்ழ்ன்ற்ட் சத்தியச் சிகரத்தைத் தொடுவது என்ற நாடகத்தை அன்னை எழுதினார். சத்தியம் மலை உச்சியிருக்கின்றது. அதை நோக்கிச் செல்லும் பாதை செங்குத்தானது. பல இலட்சியவாதிகள் சேர்ந்து சத்தியச் சிகரத்தை அடைய யன்றனர். அவர்களுள் பரோபகாரி, காதலர்கள், நியாயவாதிகள், சாதகர்கள், தத்துவ ஞானிகள் எனப் பலர் இருந்தனர். யாத்திரை கடுமையானது. அதில் பல நிலைகள் உள்ளன. ஒவ்வொரு நிலையை எட்டியவுடன் ஒருவர் அதுவே போதும் என்று அங்கேயே தங்கி விடுகிறார். கடைசியாகச் சிகரத்தை எட்டியவர் இருவர். அவர்கள் இருவரும் சாதகர்கள். அவர்கள் கடந்து வந்த பாதை நினைக்கவும் பயங்கரமானது. அவர்களுக்குக் கிடைத்த வெற்றி பெரியது என்று நாம் நினைக்கும்போது, அதற்கடுத்த கட்டம் ஒன்றிருப்பதாகத் தெரிகிறது. சிகரத்திந்து பாதாளத்தை நோக்கி இறைவன் ஏந்திக் கொள்வார் என்ற நம்பிக்கையுடன் குதிக்க வேண்டும். அதையும்



book | by Dr. Radut