Skip to Content

பகுதி 4

மனம் வாழ்வாக மாற ஞானம் உறுதிமேல் செயல்படும், உறுதியைத் தாக்கும். உறுதிக்கு அறிவு தரும்.

உறுதி வலிமை வாய்ந்த இருள். ஞானம் ஒளி பொருந்தியது.

உறுதி ஞானத்தை ஏற்றால் உற்சாகமான சக்தி பிறக்கும்.

உலகத்தின் ஞானம், உலகத்தின் உறுதியை செயல்படுத்தினால் உலகம் சக்தி பெறும். அதை வாழ்வு Life என்கிறோம்.

நாம் இன்றறிந்த உலகமும், பிரபஞ்சமும் அழிந்தால் அவ்வாழ்வு இருக்கும் என பகவான் கூறுகிறார்.

இந்த வாழ்வின் பகுதிகள் மூன்று.

மனிதன் இடைப்பட்டவன்.

விலங்கும் தாவரமும் கீழ்ப்பட்டவை.

கந்தர்வர்கள், மோகினி, தெய்வம் மனிதனுக்கு மேற்பட்டவை.

மனிதனுக்கு நல்லது, கெட்டது உண்டு; பாவம், புண்ணியம் உண்டு; தர்மத்திற்கு அவன் கட்டுப்பட்டவன்.

விலங்குக்குப் பாவமில்லை, நல்லதில்லை, புண்ணியமில்லை.

தெய்வம், கந்தர்வர்கள் ஆகியோருக்கு பாவ, புண்ணியம், நல்லது, கெட்டது என்ற தர்மமில்லை.

மனிதன் மட்டுமே தர்மத்திற்குக் கட்டுப்பட்டவன்.

இந்த யோகம் மனிதனுக்குரியதல்ல, இறைவனுக்குரியது.

அதனால் மனிதனுக்கு மட்டுமே உரிய தர்மம் இந்த யோகத்தைக் கட்டுப்படுத்தாது.

- மனிதனுடைய பரிணாம வளர்ச்சியில் தர்மம் ஒரு கட்டம்.

- பாதாளமும், பரமாத்மாவும் தர்மத்திற்குக் கட்டுப்பட்டதில்லை என்பதால், இவை இரண்டுடன் மனிதனுக்கும் பொதுவானது எது எனக் காண்போம்.

- ஜீவனின் ஆனந்தம் பிரகிருதியின் ஆனந்தமாவதே மூன்றிற்கும் பொது.

- பிரபஞ்சத்தை ஜீவாத்மாவில் சச்சிதானந்தம் காண முயலும் பொழுது இதையே செய்கிறது.

- பொருள்களில், பொருள்களைக் கடந்த ஆனந்தத்தைக் காண சச்சிதானந்தம் முயல்கிறது.

- மனிதன் ஆனந்தத்தை மறந்து பொருளை நாடி வலியை அனுபவிக்கிறான்.

- சுதந்திரமான மனிதனின் ஆனந்தம் பொருள்களில் பிரதிபலிக்கிறது.

சிறைப்பட்ட மனிதன் ஆனந்தத்திற்காகப் பொருள்களை நாடி ஏமாறுகிறான்.

- சத்புருஷனுக்கு உலகம் மாயை. உலகம் தோற்றம்.

- மாயை, பிரகிருதி, லீலை. அவனே லீலை, அவனே ஆடுபவன், அவனே அரங்கம்.

- சிருஷ்டியின் இரகஸ்ய மூலம்:

சலனமற்ற ஆனந்தம் ஆனந்தச் சலனமாவது.

- நாம் முழு ஜீவியம், முழு ஆனந்தம், உலகம் நம்மைப் ஸ்பர்சிக்கும் பொழுது அதை வேதனையால் வரவேற்கும் நிர்ப்பந்தமில்லை.

- எல்லாப் பகுதிகளிலும் விடுதலை பெற்றபின் முழு விடுதலை கிடைக்கும்.

- ஜீவாத்மா பிரபஞ்ச ஆத்மாவாகும் பொழுது வலி ஆனந்தமாக நேரடியாக மாறும்.

தெய்வீக மாயை

- நாம் சத்தியத்தை அறிவோம். சத்தியம் எப்படி உலகமாகிறது என அறியோம்.

- அசைவற்ற சத்தியம் உலகத்தின் அசைவான சத்தியமாக மாயையால் மாறப் படுகிறது.

- லீலை நடக்க எல்லாம் ஒன்றிலும், ஒன்று எல்லாவற்றுள்ளும் இருக்கும்படி மாற வேண்டும். எல்லாம் எல்லாவற்றுள்ளுமிருப்பது லீலைக்குதவாது.

- மனம் சத்தியத்தைக் காண முடியாதபடி தடுக்கிறது.

- யதார்த்தம், இலட்சியம் இரண்டும் உலகம் அறிந்தது. பகவான் சொல்வது அவற்றைக் கடந்தது.

- மனம் பிரபஞ்சத்தை விளக்கிக் கூற முடியாது. அதைச் செய்ய அனந்த ஜீவியம் அனந்தமான மனமாக வேண்டும். அதுவே சத்தியஜீவியம்.

- அறிவைப் பயன்படுத்தாவிட்டால், ஞானம் கொலுவீற்றிருப்பதைக் காணலாம்.

சத்தியஜீவியம் - சிருஷ்டி கர்த்தா

- தெய்வம் பிறந்தது சத்தியஜீவிய லோகத்தில். இங்கு ஞானமும், உறுதியும் இணைந்து செயல்படுகின்றன. இதற்கு இருபகுதிகள் உண்டு. மரபில் அவற்றை ஹிரண்ய கர்ப்பம் எனவும் பிரக்ஞா எனவும் கூறுவர். பகவான் அவற்றை

1) God காலத்தைக் கடந்த சத்தியஜீவியம். 2) உலகம் காலத்தில் சத்தியஜீவியம் என்றழைக்கிறார்.

- சத்தியஜீவியம் பிரம்மத்தின் பரந்த வெளிப்பாடு.

ஐக்கியத்தினின்று எண்ணத்தால் (Real-Idea) சத்தியஜீவியம் உலகை சிருஷ்டிக்கிறது.

- இயற்கை (பிரகிருதி) என்பது சத்புருஷன் செய்த முடிவின் பலன். ஆதியில் தன்னிடையேயுள்ள சத்தியத்தை சத்புருஷன் சக்தியாகவும், ரூபமாகவும் மாறுவது சிருஷ்டி.

- எண்ணம் என்பது ஜீவனுடைய (vibration) கதிரான எழுச்சி.

- சத்தியஜீவியம் ஐக்கியத்தில் ஆரம்பிக்கிறது, பிரிவினையில் இல்லை.

உயர்ந்த சத்தியஜீவியம்

- தெய்வீக ஜீவியத்தின் பொதுவான சத்தியம் மனம் எனும் லோகத்தில் வெளிப்படுவது சத்தியஜீவியம்.

(மனத்தில் ஆத்மா உண்டு. அது ஆன்மீகமாக வெளிப்படுவது மௌனம், சாந்தி, ஜோதியாகத் தெரிகிறது. ஆத்மா மனத்திலும் வெளிப்படும் (Psychological truth). பொய் சொல்ல மறுப்பது ஆன்மா மனத்தில் வெளிப்படுவதாகும். அதேபோல் தெய்வீக ஜீவியம் (Psychological truth) மனத்தில் வெளிப்படுகிறது. அது சத்தியஜீவியம்.)

- காலமும், இடமுமில்லாமல் உலகம் முன்னேற முடியாது. காலம் கற்பனையில் உருவாக்குவதை இடம் பொருளாக மாற்றுகிறது.

அகத்தின் வாய்ப்பைப் புறம் வெளிப்படுத்துவது அபிவிருத்தி, முன்னேற்றம்.

பிரபஞ்சம் சத்தியஜீவியத்தின் ஞானதிருஷ்டி.

ஞானி, ஞானம், ஞானத்தால் அறியப்படுவது என்ற பேதம் இங்கில்லை.

- பிரம்மம் அனைத்திலும் உண்டு. அனைத்தும் பிரம்மத்திலுண்டு. அனைத்தும் பிரம்மம் என்பது சத்தியஜீவியச் சூத்திரம்.

- ஞானி, ஞானம், ஞானம் அறியும் பொருள் என்ற பிரிவினை அடுத்த கட்டத்தில் உற்பத்தியாகிறது. அது தொடர்ந்தால் அஞ்ஞானமாகும்.

சிருஷ்டியில் அனைத்தும் முழுமையாக இருந்து பின் பிரிந்தது. கடவுள், இறைவன், ஜீவியம் எனப் பலவாறு நாம் கூறுவது ஒன்றே. ஒன்று ஒன்றாக இருந்தால் லீலையில்லை. இரண்டாகப் பிரிந்தால், பலவானால் ஒன்றுடன் மற்றது உறவாடும். அது லீலை. Consciousness ஜீவியம் என்பது ஆரம்பத்தில் ஒன்றே. சமுத்திரம் என்றனர் வேதரிஷிகள். ஒன்று பலவாகப் பிரிவது சிருஷ்டி. பலவாகப் பிரிவதின் பாங்கு பல. அவற்றுள் ஒன்று ஞானி, ஞானம், ஞானம் அறிவது. நான் உட்கார்ந்துள்ளேன். எதிரில் என் மகன் இருக்கிறான். நான் அவனை என் மகன் என அறிவேன். அறிபவன் ஞானி, அறிவு ஞானம், அறியப்படுவது எதிரில் உள்ள பொருள். இவை மூன்றாகத் தெரிவது நம் வாழ்வு. இவை மூன்றல்ல, ஒன்றே. அதையே ஆடுபவன், ஆட்டம், அரங்கம் என்கிறோம். இப்பிரிவால் சிருஷ்டி, லீலை ஏற்படுகிறது. லீலைக்காக ஒன்றானது பலவாகத் தோன்றுகிறது. பல எனப் பிரித்துவிட்டால் ஒன்று என்ற உண்மை போய்விடும். மகன் திருமணம் செய்து தனிக்குடும்பம் வைத்தாலும் அதுவும் என் குடும்பமே. வேறு குடும்பம் என நினைத்துவிட்டால் இல்லாத பிரிவினைக்கு உயிர் வரும். அப்படிப் பிரிப்பது அஞ்ஞானம். முதலாளி தான் வேறு, கம்பனி வேறு என நினைத்தால், அது எப்படியிருக்கும்?

- கடவுள், ஜீவாத்மா, அகந்தை என்ற மூன்று நிலைகளை சத்தியஜீவியம் ஏற்கிறது.

தெய்வீக ஆன்மா

- தெய்வீக வாழ்வு உண்டானால் தெய்வீக ஆன்மா இருக்க வேண்டும்.

- இது முழுமையுடையது என்பதால் கீழ் லோகத்தையோ, மேல் லோகத்தையோ விலக்க முடியாது. அதனால் அவ்விரு லோகங்களிலும் தெய்வீக ஆன்மா இருக்க முடியாது. சச்சிதானந்தம் மேல் லோகத்திற்குரியதானதால் அங்கும் இருக்க முடியாது. அக்ஷரப் பிரம்மம் உள்ள சச்சிதானந்தம் மேல் லோகத்திற்கு மட்டும் உரியது. பகவான் கண்டது முழுப் பிரம்மம். இது க்ஷர, அக்ஷரப் பிரம்மம் இரண்டையும் உட்கொண்டது. மேலும் ஓர் அம்சமுடையது. இது வளரும் ஆன்மா உறையும் சச்சிதானந்தம். இதனுள் மேல் லோகமும், கீழ் லோகமும் உண்டு.

தெய்வீக ஆன்மா சச்சிதானந்த லீலையுள் உள்ளது.

- தெய்வீக ஆன்மா பிரம்மத்தின் முன்னிலையை விட்டகல்வது இல்லை.

- பிரம்மத்தையும், பிரம்மம் ஜீவன்களில் உறைவதையும், ஜீவன்கள் பிரம்மத்திலிருப்பதையும், பிரம்மம் ஜீவனில் ஜீவனுக்குத் தனித்தன்மை தருவதையும் தெய்வீக ஆன்மா சிந்தனையாலும், உள்ளுணர்வாலும், உணர்வாலும் அறிகிறது.

தெய்வீக ஆன்மா மூன்று விஷயங்களை அறியும். அவை,

1) Self பிரம்மத்தால் அத்தனை ஜீவாத்மாக்களும் ஆனவை.

2) அத்தனை ஜீவாத்மாக்களும் self பிரம்மம், இறைவனில் உள்ளன.

3) பிரம்மம் அத்தனை ஜீவாத்மாக்களுள்ளும் உள்ளது.

அறிவு என்பதற்கு 3 நிலைகள் உண்டு. அவை, (1) சிந்தனை, (2) உள்ளுணர்வு, (3) உடல் உணர்வு. சிந்தனை மனத்திற்கும், உள்ளுணர்வு emotions உணர்வுக்கும், உடல் உணர்வு உடலுக்கும் உரியது. இம்மூன்றாம் நிலையை எட்டினால் அறிவு பூரணம் பெறுகிறது. மனிதன் இவற்றை மனிதனாக அறியலாம், தெய்வமாக அறியலாம். தெய்வீக ஆன்மா இம்மூன்று நிலைகளையும் தெய்வீகமாக அறிகிறது

- வேதம் இம் மூன்று நிலைகளையும் கடவுள்களுக்குக் கொடுக்கிறது.

அக்னி அனைத்துக் கடவுள்கட்கும் தலைவன்.

எல்லாக் கடவுள்களும் அக்னியில் சேர்கின்றனர்.

அக்னி மற்ற கடவுள்கட்குச் சேவகன்.

மனமும் சத்தியஜீவியமும்

- உலகத்தை சிருஷ்டித்த செயலை இறைவனுக்குப் புறம்பானது என நாம் கருதுகிறோம்.

- சத்தியஜீவியம் இரண்டாகப் பிரியும் பொழுது மனம் உற்பத்தி ஆயிற்று.

- மனம் பிரிவினையாலுண்டானது. இது பிரிக்கும் கருவி. மனம் பிரிப்பது முடிவற்றது. அணுவாகும்வரை பிரிக்கிறது. இனி பிரிக்க முடியாத நிலையில் சேர்க்கிறது.

பிரிவினையும் சேர்ப்பதும் ஒன்றே.

- அடிமனம் மேல்மனத்தை ஆள்வதை அறிவது முதல் சித்தி. இது பிராணமயப் புருஷன்.

- மனத்திற்குரியது மனோமயப் புருஷன். மனோமயப் புருஷனுக்கும் மனத்தின் அறியாமையுண்டு.

வாழ்வு

- உறுதி சக்தியில் மறைந்தால் ஜடம் உற்பத்தியாகிறது.

- வாழ்வு உடல் உணர்வை மனத்திற்குக் கொண்டு போய் எண்ணமாக மாற்றி, அந்த எண்ணத்திற்கு உடலை கட்டுப்படுத்துகிறது.

- ஆழ்மனம் என்பது சக்தி மறைவதால் ஏற்படுவது.

மரணம், ஆசை, இயலாமை

- மரணம் வாழ்வுக்கு அமரத்வம் தருகிறது.

- பசி அன்பாக மாறும் இடையில் ஏற்படுவது ஆசை.

- இயலாமை பிணக்கால் இருபுறத்தையும் உயர்த்தி அன்பை உற்பத்தி செய்கிறது.

- பிரபஞ்சத்தில் வாழ்வு தன்னை வலியுறுத்த மரணம், ஆசை, பிணக்கைப் பயன்படுத்துகிறது.

  • 1) மரணம் - வாழ்வு:

மரணத்தால் உடல் அழிகிறது. ஆன்மா அடுத்த உடலில் ஜனிக்கிறது. அழிவது ஒரு உடல். ஆனால் உலகில் உடல்' அழிவதில்லை. ஒரு ரூபத்தில் அழிந்தவுடல், அடுத்த ரூபத்தில் எழுகிறது. அவ்வகையில் உடலு'க்கு நித்தியத்துவம், அமரத்துவம் தருகிறது. ஒரு ஆபீசர் மாற்றப்படுகிறார். அடுத்தவர் வருகிறார். ஆபீசர்கள் மாறுகிறார்கள். ஆபீஸ் நிலையாக இருக்கிறது. அவருக்கு வேறு போஸ்டிங் வந்தது; வேலை போகவில்லை. வேலைக்கு நிரந்தரம் தருவது மாற்றல். உடலுக்கு அமரத்துவம் தருவது மரணம். ஒரே ஆபீசர் ஒரே ஊரிலிருந்தால் இலஞ்சம் ஏற்பட வழியாகும். ஒரே உடல் அமரத்துவமடைந்தால் வளரும் ஆன்மாவுக்குரியத் தகுதியை அதனால் தரமுடியாது. ஒரு பிறவியில்

ஆன்மா பெற்ற அனுபவத்தை அப்பிறவியில் உடல் ஆதரித்தது. ஆன்மா வளர்ந்தபின் அவ்வுடல் தொடர்ந்து சேவை செய்ய முடியாது. பள்ளி முடித்த பையன் கல்லூரி போக வேண்டும். படிப்பை பள்ளியிலேயே தொடர முடியாது.

2) பசி - அன்பு:

வாழ்வுக்கு மனத்தைப்போல், உடலைப்போல் வேகம் உண்டு. உடலின் வேகம் செயலுக்குரியது. மனத்தின் வேகம் அறிவை நாடும். வாழ்வின் வேகம் பசியில் ஆரம்பித்து அன்பில் முடியும். வாழ்வின் வேகத்தை ஆசை எனலாம். வாழ்வு சிறியது முதல் பெரியதுவரை நீடிக்கும். சிறியதற்கு வேகம் எழுந்தால் எடுத்துக் கொள்ளப் பிரியப்படும், முயலும். பெரியதற்கு வேகம் வந்தால் கொடுக்கப் பிரியப்படும். எடுத்துக்கொள்வது பசி. கொடுப்பது அன்பு. பசியும், அன்பும் வாழ்வின் சிறிய முனையிலும், பெரிய முனையிலும் உள்ள ஆசை.

3) இயலாமை - பிணக்கு:

முடிந்தவன் செய்வான். முடியாதவன் சண்டையிடுவான். பிணக்கில் இரு புறம் உண்டு. பிணக்கால் இரு புறமும் ஓரளவு அனுபவம் பெறும். அதனால் உயரும். உயர்வதால் ஏற்படுவது அன்பு.

4) வாழ்வு வலியுறுத்துவது (self-affirmation):

வாழ்வுக்கு மேல் மனமும், கீழே உடலும் உள்ளன. வாழ்வு உயிருடனிருப்பது வாழ்வுக்கு அவசியம். மரணம் வாழ்வுக்கு அமரத்துவம் தருகிறது என்றோம். ஆசையும், பிணக்கும் அன்பை உற்பத்தி செய்ய இருக்கின்றன.

  • வாழ்வு உயிருடனிருக்க மரணம் அவசியம்.
  • வாழ்வு தன் பரிணாமக் கடமையைச் செய்ய ஆசையும், பிணக்கும் அவசியம்.

  • வாழ்வின் கடமை உடல் உணர்வை மனத்திற்குக் கொண்டு போய் எண்ணமாக மாற்றி,அவ்வெண்ணத்தின் ஆட்சிக்குள் உடலைக்

கொண்டு வருவது. உடலுக்குரியது செயல், உணர்வுக்குரியது உறவு, மனத்திற்குரியது அறிவு. செயல் அறிவால் உறவை உயர்த்துவது பசியும், ஆசையும், பிணக்கும் அன்பாவது. அன்பு சைத்தியப்புருஷனுக்குரியது. பரிணாமம் சைத்தியப் புருஷனை உருவாக்க வாழ்வு ஓர் அரங்கமாக இருக்கிறது.

வாழ்வின் எழுச்சி

- அணு மனிதனை இரு கூறுகளாகப் பிரிக்கிறது.

- சைத்தியப்புருஷன் என்ற மையம் அன்பால் பிணக்கைச் சுமுகமாக்கக் கொடுத்து வளர்வது என்ற கொள்கையை ஏற்கிறது.

வாழ்வின் பிரச்சினை

- வாழ்வு என்பது சச்சிதானந்தத்தின் விழிப்பான சக்தி. அதன் மையம் துண்டு செய்யும் மனம். மனம் எதிரான இரட்டைகளை மோதவிடுகிறது. இதற்குத் தீர்வு வாழ்வில் மனம் தேடவேண்டும்.

- ஜீவியத்தின் நான்கு முனைகள் சத்தியஜீவியம், மனம், வாழ்வு, உடல்.

- மூன்று தடைகள்:

1) மனிதன் மேல் மனத்தில் வாழ்கிறான். 2) மனத்தால் மனிதன் பிரிக்கப்பட்டுவிட்டான். 3) சக்தியும் ஜீவியமும் பிரிந்துள்ளன.

- சக்தியும், ஜீவியமும் சுமுகமாக இணைய மனித ஜீவியம் பிரபஞ்சம் முழுவதும் பரவ வேண்டும். அது சத்தியஜீவியத்திற்கு உரியது. அதுவே நான்காம் நிலை.

இரட்டையான ஆத்மா

- மனம், உடல், உயிர், ஆன்மா ஆகியவை இரண்டிரண்டாகப் பிரிந்துள்ளன.

1) மனம் - அடிமனம் மேல்மனம்

2) வாழ்வு - வாழ்வு சூட்சும வாழ்வு

3) உடல் - ஜடமான உடல் சூட்சும உடல்

4) ஆத்மா - வளராத ஜீவாத்மா வளரும் சைத்தியப்புருஷன்.

- சைத்தியப்புருஷன் ஆசையை வென்று, ஆத்மாவை விடுதலை செய்து, சத்தியஜீவியத்தை அடைந்து, மூன்று திருவுருமாற்றங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

ஜடம்

- ஜடம் என்பது சச்சிதானந்தம்.

  • மனம் புலன்வழி ஆத்மாவை ஜடமாகக் காண்கிறது.
  • சத் பிரபஞ்சத்தில் ஆன்மீகப் பொருளாகி, மனத்தால் பிரிக்கப்பட்டும் சேர்க்கப்பட்டும் ஜடமாகிறது.

  • மனம், வாழ்வுபோல் ஜடமும் பிரம்மமே.
  • ஜடம் என்பது சக்தி பெற ரூபம் சக்தியைக் கொடுத்தது வாழ்வு.

ரூபத்தைக் கொடுத்தது மனம்.

  • சத் தன்னைத் தன்னுள்ளே கிரகித்து சிக்கலாகி, மறந்த நிலை ஜடம் எனப்படும்.
  • ஜடத்துள் ஜீவியம் ஒளிந்துள்ளது.
  • ஜீவியத்துள் ஜீவன் ஒளிந்துள்ளது.
  • ஜடம் ஜீவியத்தை ஜீவனைக் கண்டுபிடிக்கத் தூண்டுகிறது.
  • சச்சிதானந்தம் தன்னை மனத்தின் புலன்வழிக் காணும் பொழுது தானே அதற்கு ஜடமாகத் தெரிகிறது.

ஜடத்தின் முடிச்சு

- ஜடம் பரிணாமத்தால் சத்புருஷனாக உள்ள தடைகள் மூன்று.

1) அறியாமை 2) தமஸ் 3) பகுதியாகப் பிரிந்த நிலை.

- பிணக்கின்பின் சுமுகம் உண்டு. அற்புதமான ஐக்கியத்தை நோக்கி உலகம் செல்கிறது.

- வாழ்வு பிரிவினையை அனுமதிக்கிறது. தன்னுள் பொருள்களை கிரகித்து விழுங்குவது வாழ்வின் வழி.

- மனமும், சத்தியஜீவியமும் வாழ்விலிருந்தும், ஜடத்திலிருந்தும் பரிணாமத்தால் எழுகின்றன. பிரிவினை ஒழிய முடியும்.

- நம் மனத்தின் கண்ணோட்டம் தடை. பொருள் பல நிலைகளிலிருப்பதால் நம் மனம் மாறினால் பொருள் திருவுருமாறிச் சத்தாகும்.

பொருளின் பல கட்டங்கள்

- பொருள் ஏழு கட்டங்களிலிருந்தாலும் எல்லாம் ஒரே வகையின. அதனால் பரிணாமத்தால் ஜடம் உயர்ந்து சத்தாகும். நாம் காய்கறிகளைச் சாப்பிடுகிறோம். அவை ஜீரணமாகி உடலுடன் கலக்கின்றன. நம் உடலும், காய்கறியும் வேறு வேறு வகையான தானாலும் இரண்டும் ஒரே பொருளால் செய்யப்பட்டதால் அவற்றால் உடலுடன் கலக்க முடிகிறது.

சப்த லோகம்

- வேதம் உலகை 7 அல்லது 8 ஆகப் பிரிக்கிறது. 10 அல்லது 12 ஆகவும் பிரிக்கலாம். பகவான் மரபின் 7 பிரிவை 8 பிரிவாக்குகிறார். அப்படி அவர் புதியதாகச் சேர்த்தது சைத்தியப்புருஷன்.

- சத், சித், ஆனந்தம், சத்தியஜீவியம் மேலேயுள்ளவை. அவை தலைகீழே மாறி ஜடம், வாழ்வு, சைத்தியப்புருஷன், மனமாகின்றன.

தெய்வீக மனத்தின் மாயை

- அறியாமை என்பது முழுமையிலிருந்து பிரிந்து ஒரே விஷயத்தில் நிலைப்பது.

- மேல்மனத்திலிருந்து உள்மனம் சென்று அங்கிருந்து உயர்ந்து ஆன்மீக மனத்தை (முனி, ரிஷி, யோகி, தெய்வம்) அடைந்தால் சத்தியஜீவியத்தையடையலாம். இது சூட்சுமத் தொடர்பு. விவேகானந்தர் பகவானுக்கு சத்திய ஜீவியத்தைக் காட்டினார். எப்படி அதை அடைவதுஎனக் கூறவில்லை.

அதைக் கண்டுபிடிக்க பகவானுக்கு 10 வருஷமாயிற்று. மேலே போக உள்ளே போக வேண்டும் என்பது இரகஸ்யம்.

- மேல்மனத்திலிருந்து உள்மனம் சென்றடைந்தால்

1) மனோமயப் புருஷன் தெரியும். 2) நிர்வாணக் கதவு திறக்கும். 3) சைத்தியப்புருஷனை அடிமனத்தில் நாடும் வழி பிறக்கும்.

சைத்தியப்புருஷனை நாடினால் அங்கிருந்து உயர்ந்து ஆன்மீக மனம் வழி சத்தியஜீவியமடையலாம்.

- தெய்வீக மனம் One ஏகனுக்கு அனந்தமான வாய்ப்புகளை அளிக்கிறது.

பிரம்ம சிருஷ்டி பிரபஞ்ச சிருஷ்டி

- உலகை சிருஷ்டித்த சித்-சக்தி தன்னை நமக்கு வெளிப்படுத்துவதில்லை.

- விஞ்ஞானி ஜட உலகில் இரகஸ்யத்தைத் தேடுகிறான்.

- ஜீவியம் ஜட இருளினின்று பரிணாமத்தால் வெளி வருகிறது என்ற கொள்கை சரிஎன நிரூபிக்கப்பட்டது.

- ஏன் விதையிலிருந்து மரம் வருகிறது, ஆக்ஸிஜன், ஹைடிரஜனிலிருந்து ஏன் நீர் உற்பத்தியாகிறது என்று இக் கொள்கை விளக்குகிறது.

- ஜீன், குரோமசோம் என்ற ஜடப்பொருள் எப்படி மனித சுபாவத்தைத் நிரூபிக்கின்றன. தாங்கி வருகின்றனஎன அவை

- அகம் புறத்தை நிர்ணயிப்பதுபோல் மனம் ஜடத்தை ஆள்கிறது.

பகவான் சிருஷ்டியைப் பற்றிக் கூறுவது:

இறைவன் அனந்தமான ஜீவியஜோதி.

இறைவன் தானே உலகமாக முடிவு செய்து அணுவான ஜடமான இருளானான்.

இறைவன் உலகமானது சிருஷ்டி.

உலகம் மீண்டும் இறைவனையடைவது பரிணாமம்.

ஜடம் வாழ்வாகி மனமெனும் மனிதனாகியது பரிணாம வளர்ச்சி.

உலகில் ஆயிரம் பொருள்கள் உள்ளன.

மரம், செடி, மனிதன், கல், நீர், நெருப்பு போன்றவை அவை.

விஞ்ஞானிகளும், ரிஷிகளும் இவை எப்படி உற்பத்தி ஆயின எனக் கேட்கிறார்கள். (who determined them to be what they are?)

ஜடம் மரமாக வேண்டும் என முடிவு செய்தது யார்?

ஜடம் முதலில் மரம் அடுத்தது.

முதலிலுள்ள ஜடம் அடுத்து வரும் மரத்தை நிர்ணயிக்கிறது.

முதலிலுள்ளது அகம், அடுத்து வருவது புறம்.

எனவே அகம் புறத்தை நிர்ணயிக்கிறது.

இந்த ஜடம் அதன் முன் மனத்திலிருந்து எழுந்தது.

எனவே மனம் ஜடத்தை ஆள்கிறது.

- அம்மனம் மனித மனமில்லை, தெய்வீக மனம்.

- சத்தியஜீவியம் சிருஷ்டிக்கிறது. அதன் வழியை மனத்தால் அறிய முடிவதில்லை.

- தெய்வீக மனத்தில் ஐக்கியமில்லை. சத்தியஜீவியத்தில் ஐக்கியமுண்டு. அதனால் அது சிருஷ்டிக்கிறது.

- சத்தியஜீவியம் என்பது சச்சிதானந்தம், முடிவாக அது பிரம்மம்.

- அஞானத்தின் முக்கியத்துவத்தை அறிவது அவசியம்.

- பிரம்மத்திலில்லாதது உலகில் சிருஷ்டியாக வர முடியாது.

பிரம்மம், புருஷா, ஈஸ்வரா

- மனம் சத்தியத்தை அறிய முடியாது. அறிவுக்குத் திறனில்லை. ஞானத்திற்கும் ஊடுருவும் பார்வைக்கும் அத்திறனுண்டு.

- மனம் பிரம்மத்தையறியப் பாடுபடுகிறது. பிரம்மம், புருஷா, ஈஸ்வரா ஆகிய மூன்றையும் இணைத்து ஏகனையும், அநேகனையும் ஒரே சமயத்தில் காணும்படி முயன்றால் மௌனமும் சலனமும் ஒன்றாகும். ரூபமும் அரூபமும் ஒன்றாகும், கண்டமும், அகண்டமும் ஒன்றாகும். மனத்தின் தடையைக் கடக்கலாம்.

- மாயையால் எதையும் செய்ய முடியும். தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். தன்னுள் தன்னைக் கிரகித்துக் கொள்ள முடியும்.

- இதனால் பாதாளமும், பரமாத்மாவும் ஏற்படுகின்றன.

- நாம் சத்திலிருந்தால் அனைத்தையும் செய்வது மாயை என அறிகிறோம். அங்கிருந்து சாட்சிப் புருஷனையடையாமல் ஆன்மாவின் தீவிரச் செயலின் அனுபவத்தையடைந்தால், மாயை ஜீவனின் சக்தியாகக் காணப்படும்.

மாயை, பிரகிருதி, சக்தி என்பவை பிரம்மம், புருஷா, ஈஸ்வரனுடைய சக்திகளாகும்.

மாயை - சிந்தனையால் சிருஷ்டி செய்வது.

பிரகிருதி- தீவிரமாகச் செயல்படுவது.

ஈஸ்வரன் - இவையிரண்டையும் சேர்த்து செய்ய வல்லது.

சிந்தனையால் சிருஷ்டித்து, தீவிரமாகச் செயல்படுவது.

ஈஸ்வரன், பிரம்மம், புருஷனைத் தன்னுட்கொண்டது.

சக்தி, மாயை, பிரகிருதியைத் தன்னுட்கொண்டது.

பிரம்மம், புருஷா, ஈஸ்வரா, மாயை, பிரகிருதி, சக்தி இவற்றிடையே எந்த முரண்பாடும் இல்லை.

- ஆன்மீகம் யதார்த்தம், தெளிவானது. தத்துவ ஆராய்ச்சி ஏட்டுச் சுரைக்காய். யோகம் செய்தால் தெளிவு ஏற்படும்.

- ஏகன் என்பது அடிப்படை. அகந்தை இதை மறைக்கிறது. ஆத்மா பிரம்மத்திற்குரியது.

- சமர்ப்பணத்தாலும், சரணாகதியாலும் நாம் சத்தியத்தை அடையலாம். ஆத்மாவையும், சுபாவத்தையும் இறைவனுக்கு அர்ப்பணம் செய்வோம்.

- சத் புருஷனில் சிருஷ்டிக்கும், அதற்கு முன் நிலைக்கும் வித்தியாசமில்லை.

- காலம், காலத்தைக் கடந்தது என்பவை ஒன்றே. நித்தியத்தின் இரு நிலைகள் அவை.

- காலத்துள், காலத்தைக் கடந்தது வந்து உடனுறைந்தால் மூன்றாம் நிலைக் காலம் - அற்புதம், அதிசயம், ஆச்சரியம் - ஏற்படுகிறது.

பரமாத்மாவும், ஜீவாத்மாவும்

- அஞ்ஞானம் என்பது என்னஎன்று தெரிவது முக்கியம்.

- ஜீவன், நமது ஜீவனுடைய ஆத்மா என்பது பிரபச ஆத்மாவில் உள்ளது. அது பிரம்மத்தில் உறைகிறது. அமர வாழ்வு அவனுக்கே

- மூன்று தவறுகள்:

1) சிருஷ்டிக்கும் பிரம்மத்திகும் இடையே வெளி உள்ளதாக நினைக்கிறோம்.

2) முரண்பாடு முடிவானதாகக் கருதுகிறோம்.

3) சிருஷ்டி காலத்தால் ஏபட்டது எனக் கருதுகிறோம்.

- பிரம்மம் சொல்லைக் கடந்தது.

- வேண்டியது உயிர்வாழ வேண்டாதது வேண்டும். வேண்டாதது வாழ வேண்டியது வேண்டும். அவற்றிடையே முரண்பாடில்லை.

- தனித்தன்மை, பொதுத்தன்மை, சாரம்.

- முத்துவும், வைரமும் வேறு என்பது முதல் நிலை சத்தியம். இவையிரண்டும் பொது என்பது விஞ்ஞானம் கூறுவது. தனித்தன்மை தெரிந்தால் பயன்படுத்தலாம். பொதுத்தன்மை தெரிந்தால் அவற்றைச் செய்யலாம். சாரம் (பிரம்மம்) தெரிந்தால் ஒன்றை மற்றதாக மாற்றலாம். அது ரஸவாதம் எனப்படும்.

- பிரம்மத்திற்கும் சிருஷ்டிக்கும் வேறுபாடுண்டுஎனக் கருதுவது விஞ்ஞானத்தின் குறை. வேறுபாடில்லை.

இறைவனும், அசுரனும்

- நாம் அறியாமையால் வாழ்கிறோம். அறிவால் வாழலாம். அறிவால் வாழ்வது இறைவன். அறியாமையில் வாழ்வது அசுரன்.

- குறை பிரிவினையிலிருந்து எழுகிறது. அது லிமிட்டாகவும், குதர்க்கமாகவும் தெரிகிறது.

- உலகை இறைவனின் அற்புதமாக அறியும்வரை எந்த விளக்கமும் பயன்தாராது, நம்மை இறைவனாக நாம் அறிய வேண்டும். - லிமிட் என்பது நமக்கு, ஜீவனுக்கில்லை.

- இறைவனது சிருஷ்டியில் அஞ்ஞானமே பெரிய சக்தி.

- வலி ஆனந்தத்தை முழுமையாக அனுபவிக்க உதவும்.

- முழுமையை மனம் அனுபவிப்பதைத் தடை செய்கிறது. அதனால் எதிரானதையும் அனுபவிக்க முடியும்.

- தீமையை விலக்கினால் நன்மையையும் விலக்க வேண்டி வரும். (நாட்டில் லஞ்சத்தை முழுமையாக விலக்க முடியுமென்றால் எல்லா development activitiesஉம் உடனே நின்றுவிடும்.)

- லீலைக்கு ஜீவாத்மாவின் அனுமதியும், பரமாத்மாவின் அனுமதியும் தேவை. (எந்தக் காரியத்திற்கும், சிறியது பெரியதானாலும், இந்த இரண்டு அனுமதியில்லாமல் நடக்காது.)

- பிரம்மத்திற்கு எதையும் சுயமாக வெளிப்படுத்தும் உரிமையுண்டு. சிரமம் அதிகமானால், ஆனந்த அனுபவமும் அதிகமாகும்.

பிரபஞ்ச மாயை

- ஜடமனம் எதையும் நம்ப மறுக்கும்.

உயிரின் மனம் மாயையை நம்பும்.

சிந்தனைக்குரிய மனம் பிரம்மத்தை நாடும்.

  • ஜடம் என்பது உடல்; தொட்டால் அறியும்; தொடாவிட்டால் அறியாது. கண்ணை மூடிக்கொண்டால் எதிரிலுள்ள ஸ்டூல் தெரியாது. தெரியாது என்பதால் இல்லை என்கிறோம். கையால் தொட்டுப் பார்த்தால்

ஸ்டூல் இருக்கிறது என்கிறோம். ஜடமான உடலுக்கு தான் தொட்டுப் பார்க்க முடியாத எதுவும் இல்லை என நம்பும். எதையும் நம்பமுடியாத தத்துவம் agnosticism எனப் பெயர்.

  • உயிர் உற்சாகமுள்ளது. எதையும் கற்பனை செய்யும் திறனுள்ளது. கற்பனையில் தெரிந்தால் அதற்கு உயிர் வரும்; அதை நம்பும். அது உண்டா, இல்லையா என்பது கேள்வியில்லை. கற்பனை மகிழ்ந்தால் கருத்து ஏற்கும். உள்ளதையே இம்மனம் கற்பனையால் மட்டும் ஏற்கவல்லது. அதனால் இதற்கு மாயை இதமாக ஏற்புடையது.
  • சிந்தனையின் இலட்சியம் இருப்பதன் அடிப்படையைக் காண்பது. ஆராய்ச்சியை நடுவில் நிறுத்தாவிட்டால் சிந்தனை பிரம்மத்தில் முடியும்.

- பகவான் மாயை என்ற தத்துவத்தை மறுத்து அனைத்தும் சத்தியம் என்ற கொள்கையை நமக்களிக்கிறார்.

- கனவு பொய்யன்று, ஆவி ரூபங்களும் பொய்யல்ல. கனவு அடிமனத்திற்கு உண்மை. ஆவிரூபங்கள் உள்ளதின் பிரதிநிதிகள்.

- ஆதியான ஜீவியம் மாயையை உற்பத்தி செய்யும். அஞ்ஞானத்தின் கருவியாக மனத்தை உற்பத்தி செய்யும். மனம் மாயையைக் கைவிட்டு பிரம்மத்துடன் இணைய வல்லது. இக்கொள்கையை பகவான் ஏற்கிறார்.

சத்தியமும், பிரபஞ்ச மாயையும்

- மனிதன் மறுக்கலாம். பார்ப்பதை மறுக்கலாம். பார்வையை மறுக்கலாம். பார்ப்பவனையும் மறுக்கலாம்.

- உலகில் தூய்மையான அக்ஷரமான சத்தியம் உண்டு. மாயையான உலகமும் உண்டு.

- பிரம்மத்தின் நிலைகள்:

1) ஜீவன் (self) என்பது பிரம்மம். 2) உலகிலுள்ள அனைத்தும் பிரம்மம். 3) உலகில் உள்ள அனைத்தும் ஜீவன், ஜீவனால் பார்க்கப்படும் ஜீவன் - அதை 4 நிலைகளில் காண்கிறது.

- உபநிஷதம் கூறும் மூன்று நிலைகள்

1) அகம், புறமற்ற பரமாத்மா. 2) ஒளிமயமான சமாதியில் பரமாத்மா திரளான ஜீவியமாகிறது. 3) அகமும் புறமுமான ஜீவன்.

- புத்தர் போட்ட முட்டுக்கட்டையை உடைக்க சங்கரர் வாதம் பயன்பட்டது. ஆனால் அதனால் முடிவான தீர்வைத் தர இயலாது.

- அறிவு கட்டிய அத்தனைக் கோபுரங்களும் தீர்க்கமான ஆன்மீக அனுபவத்தால் மாயமாய் மறையும்.

- தெய்வீக மனத்திற்கும் சத்தியஜீவியத்திற்குமிடையே ஒரு சுமுகம் உண்டு.

ஞானமும், அஞ்ஞானமும்

- அறியாமையற்ற பிரபஞ்சத்தை நம்மால் கருத முடியும். வேதம் அப்படி நினைத்தது.

- அனந்தமான ஆத்மாவின் இலட்சிய லோகமும், சிறப்பான ஒருமையும் சேர்ந்திருப்பது நடக்க முடியாதது.

- ஆழ்வார்கள் கற்பனை செய்த பூலோகச் சுவர்க்கம் இதினின்று எழுந்தது.

- சிருஷ்டியின் இரகஸ்யம் பிடிபடாதது எனநினைத்து புத்தர் அதை விலக்கினார்.

- நாமே அஞ்ஞானமாக இருப்பதால், அதன் ஆரம்பத்தை நாம் கண்டுபிடிக்க முடியாது.

- ஜீவனை ஜீவியம் மூலம்தான் காண முடியும்.

- ஜீவியத்தை ஊடுருவினால் ஜீவனும், ஜீவியமும் பிரம்மத்தில் இணைகின்றது. இதை பகவான் Supreme discovery உச்சகட்ட சித்தி என்கிறார்.

- அஞ்ஞானம் ஞானத்துடன் மூவகைத் தொடர்புள்ளது.

1) முழுவதும் தழுவுவது 2) எதிர்ப்பு 3) இடைப்பட்ட நிலை.

ஒரு முனை ஞானம், அடுத்த முனை அஞ்ஞானம் என்ற தொடர் சங்கிலி சிருஷ்டி. ஆரம்பத்தில் முழு அஞ்ஞானமிருந்தது. அது முழுஞானத்தை முழுவதும் ஆட்கொண்டது. அஞ்ஞானம் குறைந்து ஞானம் வளரும் பொழுது ஞானத்திற்கு வலு ஏற்பட்டதால் ஞானம் அஞ்ஞானத்தை எதிர்க்கிறது. இரண்டுக்கும் சமமான நிலை (compromise) இடைப்பட்ட நிலை.

- அஞ்ஞானமும், ஞானமும் பிரம்மத்தையடையும் இரு பாதைகளில்லை. அஞ்ஞானம், ஞானத்தின் பகுதி.

நினைவு, சுய-ஜீவியம், அஞ்ஞானம்

- நினைவு என்பது செயல்படும் முறை. சத்தியம் அதைக் கடந்து ஜீவியத்திலும், ஜீவனிலும் உள்ளது. கம்பனியில் கணக்கு என்பது நடைமுறை வரவு, செலவைப் புள்ளி விவரமாகக் குறிப்பது. கணக்கு முதலில்லை,கம்பனியில்லை. முதலும், இலாபமும் கணக்கைக் கடந்து உற்பத்தியிலும், விற்பனையிலும் உள்ளன.

- வேதம் இரு ஜீவியங்கள் உள்ளன எனக் கூறவில்லை. ஜீவியம் ஒன்றே அதன் அம்சங்கள் இரண்டு என்கிறது.

- தெய்வீக ஜீவியம் இருளிலோ, ஒளியிலோ மறைந்தில்லை. சலனமற்ற ஏகனையும், சலனத்தால் ஏற்பட்ட அநேகனையும் அனைத்தையும் தழுவும் சுய-ஞானத்துள் வைத்துள்ளது.

- நிகழ்காலம், கடந்த காலம் என்பவை மனம் விளையாடும் யுக்திகள்.

- பின்னணியிலுள்ள நிலையான ஜீவியம் காலத்தையும், காலத்தைக் கடந்ததையும் அறியும்.

- மேல் மனம், அதன் ஜீவன் என்பது ஆழ்ந்த பிரம்மம் காலம் என்ற அரங்கில் உயிரைத் திரணமாக மதித்து விளையாடும் ஆபத்தான விளையாட்டு.

The surface being is the adventure of Spirit in Time என்பது பகவான் வாக்கு.

Surface being என்பது மேல் மனத்தின் ஜீவன்.

இது காலம், மனம், அகந்தை, சிறியது என்பவையாலான அரங்கம்.

காலம் என்பது ஆன்மாவின் அகம், ஆன்மா தன் செயலைத் தானே பார்ப்பது காலம் என பகவான் விளக்கம் தருகிறார்.

ஆன்மா தான் ஏற்படுத்திய காலத்தின் ஆட்சிக்குள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வது ஒரு adventure ஆபத்தான விளையாட்டு.

தகப்பனார் தன் மகன் கையில் தான் ஈட்டிய பெரும் பொருளைக் கொடுத்து அவன் செய்யும் வியாபாரத்தைக் கண்டுகளிப்பது ஆபத்தான விளையாட்டு அல்லவா? அதேபோல் ஆத்மா மேல்மனத்தில் விளையாடுகிறது.

நினைவு, அகந்தை, சுய-அனுபவம்

- புலனுக்கும் அறிவுக்கும் இடையேயுள்ள கருவி ஞாபகம்.

- (புறம், செயல், விலகுதல், அகந்தை. கோபம் வந்த பின் கோபமாக மாறாமல், நினைத்துப் பார்ப்பது செயல், கோபம் புறம். நினைவால் விலகினால் நிதானம் வரும். போதுமான அளவு விலகினால் அகந்தை தெரியும். அகந்தை மனோமயப் புருஷன்.)

1) கோபம், பசி, ஆசை போன்றவை மனத்தில் எழும்.

2) எழுந்தபின் மனம் அதனினின்று விலகி நிற்க முடியும்.

3) விலகுதல் அதிகமானால், அகந்தையென அறியலாம்.

4) Concentration ஆல் அகந்தை விலகியவன் மனோமயப் புருஷனாகத் தெரியும். சமர்ப்பணத்தால் அதுவே சைத்தியப் புருஷனாகத் தெரியும்.

- மனம் செயலையறிய காலத்தால் ஜீவியம் பிரிக்கப்பட வேண்டும்.

- செயலோ, ஜீவியமோ முழுமையுடையவை, பகுதியானவை அல்ல.

நம் பார்வை - மனத்தின் பார்வை - முழுச் செயலைப் பகுதியாக்குகிறது.

- ஞானத்தின் உண்மையான அடிப்படையைக் காண நாம் நம் சுபாவத்தையும், ஆத்மாவையும் முழுமையாகக் காண வேண்டும். மேலே அல்லது உள்ளே காண்பது பகுதி. இரு இடங்களிலும் ஒரே சமயத்தில் காண்பது முழுமை.

இரண்டறக் கலந்த ஞானம், பிரிந்து நிற்கும் ஞானம் - நால்வகை

1) இரண்டறக் கலந்த ஞானம் - காலத்தைக் கடந்த பிரம்மம் நம்முள் தெரிவது.

2) நெருங்கிய நேரடியான தொடர்பின் ஞானம் - உள்மனம் (intution - நேரடி ஞானம்)

3) பிரிந்து நிற்கும் நேரடித் தொடர்பான ஞானம் - அடிமனம்.

4) பிரிந்து நிற்கும் மறைமுகத் தொடர்பின் ஞானம் - மேல்மனம்.

  • 1) ஞானம் என்பது இறைவனை மனம் அறிவது. மனம் உயர்ந்து பரமாத்மாவையடைந்தால் அது இரண்டறக் கலந்துவிடும் - இது இரண்டறக் கலந்த ஞானம் எனப்படும். இது காலத்தைக் கடந்த பிரம்மம். இதை நாம் நம்முள் காண்கிறோம்.
  • 2) பரமாத்மாவை விட்டகன்று நகர்ந்து செல்லும் பொழுது நேரடியான தொடர்பு விட்டுப் போகாத நிலை யோகியின் மனம் (intution). இதையறிவது உள்மனம். இதை நேரடி ஞானம் என்கிறோம். இதுவும் காலத்தைக் கடந்தது.
  • 3) அஞ்ஞானம் மேலிட்டால் பரமாத்மாவினின்று பிரிந்துவிடுகிறோம். அந்நிலையில் நம் முழுமனம் பிரபஞ்சம் முழுவதும் பரவி நிற்கும். இதுவும், பிரிந்தாலும் தொடர்பு நேரடியானது. அடிமனம் எனப்படும் - இது காலமும் கடந்ததும் சந்திக்குமிடம்.
  • 4) முடிவான நிலை அஞ்ஞானம் அகந்தையும் நுழைந்து பரமாத்மாவினின்று பிரிந்த நிலையில் தொடர்பு மறைமுகமானது. இது மேல்மனம்.

 



book | by Dr. Radut