Skip to Content

பகுதி 2

இரு சாதகர்களும் செய்து முடித்து, சத்தியத்தை அடைகின்றனர்.

நந்ஹ் க்ண்ஸ்ண்ய்ஞ் வானத்திருந்து குதிக்கும் விளயைட்டு ஒன்றுண்டு. விமானத்திருந்து பாராசூட் அணிந்து நூற்றுக்கணக்கானவர் குதித்து, தரையை அடைந்து மகிழ்வதைப் படங்களில் காணலாம். அவர்கள் எந்தத் தயக்கமுமில்லாமல் ஆர்வமாகக் குதிப்பதையும் காணலாம். நமக்குப் பார்ப்பதற்கே பயங்கரமானது, குதிப்பவர்களுக்கு எளிதாக இருக்கின்றது. இதற்குரிய பயிற்சி ஆரம்பிக்கும்பொழுது 35 அடி உயரத்திருந்து தல் குதிக்கச் சொல்வார்களாம். 35 அடி உயரத்தில் நின்று தரையைப் பார்த்தவுடன் உடல் நடுங்கும். பலர் திரும்பிப் போய் விடுவார்கள். பயிற்சியின் ஆரம்பத்தில் 35 அடி உயரத்திருந்து கீழே பார்த்தால் வயிற்றைக் கலக்கும். பயிற்சியின் முடிவில் 35,000 அடி உயரத்திருந்து விளையாட்டாகக் குதிக்கின்றனர். ஆரம்பம் கடினம், குதிப்பதானாலும், தெரிந்து கொள்வதானாலும், ஆரம்பம் கடினம்.

புதிய நிலையை அடைய இன்றைய நிலையை விட்டு மாற வேண்டும் என்பதே தெரிவதில்லை. ஏனெனில் இருக்கும் இன்றைய நிலை சௌகரியமாகவும், பாதுகாப்பாகவுமிருக்கின்றது. இருக்கும் நிரந்தரச் சௌகரியத்தை விட வேண்டும் என்று எவருக்கும் தோன்றுவதில்லை. இருக்கும் சௌகரியம் சிறியதானாலும், இருப்பது சௌகரியமாக இருக்கும்பொழுது அடுத்ததைப் பற்றி மனம் தெரிந்து கொள்ள விழையாது. இதுவே இயற்கை.

*******

  1. பிரகிருதி மனத்தாலும் உணர்வாலும் செயல்படுகிறது. அதுவே செயல்களை நிர்ணயிக்கின்றது. நல்ல நிகழ்ச்சியானாலும், மற்றவையானாலும், சொந்த வாழ்க்கைப் பிரச்சினை என்றாலும், உலகத்துப் பிரச்னை என்றாலும், அவை பிரகிருதியின் உள்ளக் கிளர்ச்சியின் பிடியில் உள்ளன.

உள்ளக் கிளர்ச்சியிலுள்ளது உலகத்துப் பிரச்சினைகள்.

மனத்தின் அலைச்சலுடைய அந்தரங்கம் அதுவே, அதைத் தாண்டிய பின்னரே மனிதனுக்குச் சுதந்திரம் கிடைக்கும்.

மனிதன் என்றால் அவனுக்கு முக்கியமானவை என்று சில உண்டு. ஒருவருக்குக் குடும்பம் முக்கியம். அடுத்தவருக்குச் சொத்து முக்கியம். பணம் பலருக்கு க்கியம். அந்தஸ்து, பணம், மரியாதை, பதவி, மானம், பாசம், பற்று ஆகியவை முக்கியமானவையாக இருப்பதுண்டு.

சொந்த விஷயமானாலும், பொது விஷயமானாலும் உயர்ந்த நல்ல காரியங்களிலும், ஆபத்து சேதம் விளைவித்தவையானாலும், இவை மனிதனைத் தொட்டு உலுக்குவதுண்டு. எந்த விஷயம் மனிதனைத் தொட்டாலும், அவனுக்கு முக்கியமான இடமே மனதில் தொடப்படுகிறது. அதற்கேற்பவே அவன் பாதிக்கப்படுகிறான். எந்த அளவு பாதிக்கப்படுகிறான் என்பதும், எந்த விஷயம் அவனுக்கு முக்கியமாக அமைந்துள்ளது, எந்த அளவுக்கு அந்த விஷயம் க்கியம் என்பதைப் பொருத்தேயிருக்கின்றது.

விஷயம் எதுவானாலும் தான் ஒருவர் பாதிக்கப் படுவது தம் மனத்தின் அமைப்பைப் பொருத்தே இருக்கின்றது. அம்மனத்தின் அமைப்பே அவருக்குரிய உண்மை. எந்த அளவுக்கு அவரை அது ஆட்டிப் படைத்தாலும், அம்மனமும், அதன் அமைப்பும், ள்ன்ழ்ச்ஹஸ்ரீங் மேலெழுந்தவாரியான மனத்தையே அவை சேர்ந்தவை. இதன் பிடியில் உள்ளவரை மனிதன் அடிமை.

இதன் பிடியைத் தாண்டினால், மனிதன் ஆழ்ந்த மனத்தையடைகிறான். அதை அடைந்த மனிதனுக்குச் சுதந்திரம் உண்டு. ஆன்மீகச் சுதந்திரம் பெற அது தற்படி.

********

  1. நம்மைப் பாதிக்காத விபத்துகள் நம் சூழ்நிலையில் ஏற்படுவதுண்டு. எதைக் காண உன் மனம் மறுக்கின்றதோ அதை வயுறுத்த இயற்கை நிகழ்த்துவன அவை. சொந்த வாழ்க்கையைப் பாதிக்கும் விபத்துகள், உன்னைப் பிடித்து நிறுத்தி, அடி கொண்டு கிளறி, அருளைப் பார்க்கும்படி வயுறுத்துபவையாகும்.

விபத்தாக வரும் அருள்.

அறிவுள்ளவனுக்கு ஆபத்து அருகில் வருவதில்லை. அவனைத் தேடி வாய்ப்பு வருகிறது. அறிவு என்று இங்கு நான் குறிப்பிடுவது படிப்பறிவில்லை. வாழ்க்கையை அறியும் திறனை அறிவு என்று குறிப்பிடுகிறேன். அறிவுள்ளவனை வாழ்க்கை தேடி நல்லதைச் செய்கிறது. அறிவில்லாதவனுக்கு அறிவுறுத்த அவனைப் பாதிக்காத வகையில் அவன் பார்வையில் படும்படிக் காரியங்களை வாழ்க்கை நிகழ்த்துகிறது. இது ஏன் என் கண்ணில் பட்டது என்று அவன் சிந்தித்தால், அதற்குரிய முறையில் மாறிக் கொண்டால், அது போன்ற நிகழ்ச்சிகள் விலகும். அதைக் காண மறுத்தால், பின்னர் அவனைப் பாதிக்கும் வகையில் அதே விபத்து நடக்கும். தல்லாத சிந்தனை இப்பொழுது ஏற்பட்டால் இத்துடன் அது விலகும்.

******

  1. அருள் தன்னைச் சூழ்ந்துள்ளதை உணர்பவனுக்கு ஆபத்து வருவதில்லை. அருள் மீது நம்பிக்கையுள்ளவர் தம்முடன் விபத்து நிகழ முடியாத சூழலைக் கொண்டு வருவார்.

விபத்தை விலக்கும் அருளின் சூழல்.

அருள் தானே செயல்படும் தன்மையுடையது. பொதுவாக மனிதன் காரியங்களைச் செய்யும் பொழுது வேலையில் கவனமாக இருப்பான். தன் திறமையில் நம்பிக்கை வைத்து வேலை செய்வான். எதுவும் முடியாத நிலையில்தான் தெய்வத்தை நினைப்பான். நாம் பஸ் ஏறி ஊருக்குப் போகும் பொழுது டிக்கட் வாங்குவது, ஓர் இடம் பார்த்து உட்கார்வதுதான் நம் கடமை. பஸ் பத்திரமாகச் செல்வதில் எத்தனை மற்ற அம்சங்களிருக்கின்றன? அவையெல்லாம் சரியாக இருந்தால்தான் நாம் பத்திரமாகப் போக முடியும். நாம் அவற்றைப் பற்றி

நினைப்பதில்லை. அவையெல்லாம் நம் கடமைகளில்லை என நினைக்கின்றோம். பஸ் பத்திரமாகப் போக வேண்டியவை நூறு அம்சங்கள். ரோட்டிலும், ரைவர் கையிலும், இன்ஜினிலும், ரோட்டில் நடக்கும் மற்றவர்களிடமுமாக ஏராளமான அம்சங்கள் கூடி வந்தால்தான் நாம் பத்திரமாக இருக்க முடியும். அவையெல்லாம் ஆண்டவன் கையிருக்கின்றன. அவற்றையெல்லாம் சரியாக நடத்திச் செல்வது அருள். அருளின் செயலை நாம் அதுபோல் உணர்ந்தால் சூழல் அருளிருப்பதை உணர்ந்தவராவோம்.

பஸ்ஸில் ஓர் இன்ஜீனியர் வந்து உட்கார்ந்தால், இது புது இன்ஜின் ஆயில் போட்ட முதல் நாள், அதனால் புறப்படும்பொழுது அதிர்ச்சியில்லாமல் நகர்கின்றது என்றறிவார். நமக்கு அது தெரியாது. பஸ் முதலாளி ஒருவர் இந்தப் பஸ்ஸில் ஏறினால், 60 சீட்டும் நிரம்பியிருக்கிறது, நல்ல இலாபம் கிடைக்கிறது, அதனால்தான் பஸ்ஸை நன்றாக வைத்திருக்கின்றார்கள் என்று நினைப்பார். நம் அறிவுக்குச் சில விஷயங்கள் தாம் புலப்படுகின்றன. மற்றவை தெரிவதில்லை. பஸ்ஸுடைய ஒவ்வோர் அம்சத்தையும் உணர்ந்தவர்க்கு அந்த அந்த அம்சத்தின் விபரம் தெரியும். அருள் அத்தனை அம்சத்தையும் நடத்திச் செல்கிறது. நமக்கு இன்ஜின், வருமானம் போன்ற விவரங்கள் தெரியாமருக்கலாம். ஆனால் நாம் போகும் பஸ்ஸில் நாம் பத்திரமாக இருக்கத் தேவையானவை ஆயிரம் விஷயங்கள். அத்தனையும் நம் கையில்லை என்பது தெரியும். அவை இறைவனின் அருளால் நடக்கின்றன என உணர முடியும். நாம் அதை உணர்ந்தவுடன் அருள் அதிகமாகச் செயல்பட ஆரம்பிக்கும். அதனால், பல நல்லவை நடக்கும். கெட்டவை நடக்க முடியாது. விபத்திற்கு வழியில்லை.

அவ்வருள் மீது முழு நம்பிக்கையுள்ளவர் சூழல் அருள் இடைறாது செயல்பட்டுக் கொண்டிருப்பதால், அங்கு விபத்து ஏற்படுவதில்லை.

*****

  1. மனிதனுக்கு விஸ்வாசமில்லை. நம்முள் உள்ள தெய்வ அம்சத்தாலேயே விஸ்வாசத்தை உணர முடியும்.

விஸ்வாசத்தை உணர முடியாத மனிதன். ஒரு தொட்டியில் நீரை நிரப்பினால் அதை எடுத்துக் கொள்ளலாம். ஊற்றிய நீரை எடுத்த பின் தொட்டி காயாகும். கிணற்றில் நீரை எடுத்தால் நாம் எடுத்த அளவு நீர் சுரந்து மீண்டும் கிணறு நிரம்பும். தொட்டியில் ஊற்றில்லை. மனிதன் தொட்டி போன்றவன். அவன் உடலைக் காப்பாற்றினால் உடலுக்கு விஸ்வாசமில்லை. நன்றி சொல்லத் தெரியாது. அவனுக்கு அறிவைப் புகட்டினால் மனத்திற்கு விஸ்வாசமில்லை. அவன் உடலும், உணர்வும், அறிவும் தொட்டி போன்றவை. அவனுடைய ஆன்மாவுக்கு விஸ்வாசமுண்டு. அதில் நன்றி சுரக்கும். உடலைக் காப்பாற்றினால் ஆன்மா நன்றி சொல்லும், உயிரைக் கொடுத்தால் ஆன்மா நன்றி சொல்லும், அறிவைக் கொடுத்தாலும் ஆன்மா நன்றி சொல்லும். ஆன்மாவுக்கு மட்டுமே விஸ்வாசம் உண்டு. அதில் மட்டுமே நன்றி சுரக்கும்.

*****

  1. செயல்கள் முழுமையானவை, நம் விருப்பங்களால் கட்டுப்படாதவை. அன்றாட வாழ்விலும் அவற்றைக் காணலாம். ஒரு பிள்ளையைப் புறக்கணித்து, மற்றொரு பிள்ளையைச் செல்லமாகக் கருதி அவனுக்கு மட்டும் கொடுக்க தகப்பனார் விரும்பியது, புறக்கணித்த பிள்ளை வாழ்வில் பூர்த்தியாவதைக் காணலாம். இது தலை கீழாகவும் நடக்கும். காங்கிரஸ் சுதந்திரம் பெற்றது. ஆயுள் முழுவதும் சுதந்திரத்தை எதிர்த்தவர்கள் நாட்டை ஆள்வதைக் காண்கிறோம். இந்த அம்சத்தைப் புரிந்து கொள்வது ஞானம்.

புறக்கணிக்கப்பட்டவர் பெறும் அதிர்ஷ்டம். ஓர் ஊரில் நல்லவர்கள் சிலரும், கெட்டவர்கள் சிலரும் இருந்தால் பெய்யும் மழையும், உதிக்கும் சூரியனும் கெட்டவர்களை ஒதுக்கிவிட்டு நல்லவர்களுக்காக

மட்டும் பலனளிக்க முயல்வதில்லை. ஓர் ஊருக்குப் புதிய பஸ் ரூட் திறந்து மக்களுக்கு வசதி செய்ய ன் வந்தால் திருடி விட்டு தப்பிப்பவனுக்கு அது உதவுகிறது.

இறைவனுக்குத் தேவர்கள் உகந்தவர்கள், அசுரர்கள் ஏற்புடையவர்களில்லை, எதிரிகள் என்று நாம் அறிவோம். ஆனால் அசுரர்களை மூத்த தெய்வங்கள் என்றும், சிருஷ்டியில் தேவர்களுக்கு முன்னால் பிறந்தவர்கள் என்றும் ஸ்ரீ அரவிந்தர் கூறுகிறார். பக்தியால் இறைவனை அடைவதைவிட, இறைவனை எதிர்த்தால் விரைவாக அவனை அடையலாம் என்று நாராயணன் துவார பாலகர்களுக்குச் சொல்கிறார்.

நம் கருத்துப்படி ஒரு பிள்ளை வேண்டியவன், அடுத்த பிள்ளை வேண்டாதவன் என்று நினைத்தால், நம் நினைவுக்கு அடுத்த கட்டத்தில் அது மாறாகவும் இருப்பதுண்டு. அதனால்தான் பாரபட்சமான பெற்றோர் எண்ணம், பிற்காலத்தில் எதிராகப் பூர்த்தியாகிறது. செயல்களின் முழுமையை நாம் அறிய ற்பட்டால், அக்கண்ணோட்டத்திருந்து பார்த்தால் தவறு வாராது. முதல் தலை கீழாகப் புரிந்தாலும், பின்னால் பலன் வரும்பொழுது தத்துவம் சரியாகத் தெரியும்.

******

  1. வாழ்க்கை மறுத்ததை அன்னை கொடுக்கின்றனர். கொடுக்கும்பொழுது அதன் தரத்தை உயர்த்திக் கொடுக்கின்றார். அன்பைப் பெறாதவர்க்குப் பக்தியை அளிக்கின்றார். முக்கியஸ்தர்களை வாழ்வு விலக்கினால், அன்னை அவர்களின் தலைவரை உன்னிடம் அனுப்புகிறார். சமாதிக்குப் போவதைத் தடுத்தால் அன்னையே உன்னை நாடி வருகிறார்.

உலகம் மறுப்பதை அன்னை தரும் விதம். வாழ்க்கை முழுமையானது. நம் கண்ணோட்டம் அரை குறையானது. அன்னையையும், வாழ்வையும் ஒப்பிட்டால் அன்னையின் முழுமை முன்பு, வாழ்வு அரைகுறையாகி விடும். தகப்பனார் மறுத்ததை வாழ்வு

தந்தால், வாழ்க்கை மறுத்ததை அன்னை அதிகமாகத் தருகிறார். ஏனெனில் அன்னையின் முழுமை வாழ்க்கையின் முழுமையைவிடப் பெரியது.

நதி சிறியதாக ஆரம்பித்து வரவரப் பெரியதாகும் தன்மையுடையது. அதேபோல் அன்னையை ஏற்றுக் கொண்ட பின் வாழ்வு வளர ஆரம்பிக்கும். நாளுக்கு நாள் அதன் ஆழமும், அகலமும் வளர்ந்து கொண்டே போகும். இதுவே அன்னையின் விதி. அன்னையை ஏற்றுக் கொண்ட எந்த விஷயமும் வளர ஆரம்பிக்கும். வளர்ச்சி அன்னையின் தன்மை.

அன்னையின் தன்மையை உணராமல் நமக்குரியதைக் குறுக்கிட்டுத் தடுக்கும் திறனுடையவர்கள் நடுவே வந்து தடுத்தால், அன்று அவர்கள் வெற்றி பெறுவார்கள். ஆனால் அவர்கள் மறுத்தது திரை மறைவில் வளர்ந்த படியிருக்கும். குறுக்கிட்டவர்களால் நெடுநாள் குறுக்கே நிற்க முடியாது. அவர்கள் விலகிய பின் வளர்ந்த நிலையில் நமக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்கும்.

மனிதன் அன்பை மற்றவர்க்கு மறுத்தால், அன்பின் சிகரமான பக்தியை அன்னை அவருக்கு வழங்கியுள்ளார். இன்றைய சூழ்நிலையில் க்கியஸ்தர்களைச் சந்திப்பதைத் தடுக்கமுடியும் என்று தடுத்தால், அன்னை அடுத்த கட்டத்தில் க்கியஸ்தர்களின் தலைவர் பக்தரை வந்து சந்திக்கச் செய்கிறார். சமாதிக்குப் போவதையும் சந்தர்ப்ப விசேஷத்தால் நிரந்தரமாகத் தடுப்பவருண்டு. அன்னை அதையும் அன்று அனுமதித்துவிட்டு எவரைச் சமாதியிருந்து பிரித்தாரோ, அவரிடம் அன்னை வயச் சென்று தரிசனம் தருகிறார்.

******

  1. உலகத்திற்கு சத்திய ஜீவியம் வர பொருள் அவசியம்.

சத்திய ஜீவியத்திற்கு அவசியமானது பொருள். சக்தியை வெளிப்படுத்துவது பொருள் என்பதால் சத்திய ஜீவியம் வர பணம் அவசியம் என்கிறார் பகவான். பக்தர்கள் வாழ்வில் பெரும் பணம் வரும் பொழுது இதுவரை நடைபெறாத பெரிய காரியங்கள்

தாமே நடப்பதைப் பார்க்கலாம். உலகத்தில் பொருள் அசுரன் கையில் உள்ளது. பக்தர்கள் சம்பாதிப்பதென்றால் அசுரனுடைய கையிருந்து பொருளை மீட்பது என்று பொருள். அப்பொருள் சத்திய ஜீவியம் வருவதற்கு உதவியான கருவியாக இருக்கும்.

சத்திய ஜீவியம் உலகை நாடி வர மூன்று நிபந்தனைகளை பகவான் கூறுகிறார். பொருள் அவற்றில் ஒன்று. அந்த மூன்றும் பின்வருமாறு:

  1. சர்க்கார் நம் கையில் இருக்க வேண்டும்,
  2. உடல் வெண்கலம்போல் தரமாக இருக்க வேண்டும்,
  3. பொருளுக்குரிய சக்தி இந்த இலட்சியத்திற்குச் சேவை செய்ய வேண்டும்.

******

  1. தியாகத்தில் சிறந்ததொன்றுண்டு. அது சர்வ ஆரம்பப் பரித்தியாகி ஆவது.

சர்வ ஆரம்பப் பரித்தியாகி.

தனக்குச் சொந்தமான பொருளைப் பிறருக்குக் கொடுப்பது தியாகம். பொருள் ஜடமானது. உடலைச் சார்ந்தது. அதனால் முதல் நிலையிலுள்ளது. அடுத்தது உணர்வு. அதை உயிர் என்றும் சொல்வதுண்டு. அதைச் சேர்ந்தது உரிமை. உடைமையைத் தியாகம் செய்பவனால் உரிமையைத் தியாகம் செய்ய முடியாது. சொத்துரிமை, முறைப்பெண், எனக்கு உரிமையாகச் சேர வேண்டிய பரிசு, பரீட்சையில் நான் பெற்ற தல் மார்க்கின் மீதுள்ள உரிமையைப் பிறருக்குத் தியாகம் செய்ய வேண்டும் என்று நினைப்பவரிலர். அது பெரிய தியாகம். அடுத்த உயர்ந்த நிலை மனம், அதற்குரியது அறிவு. அவற்றையெல்லாம் தியாகம் செய்யக்கூடிய வாழ்க்கைச் சூழ்நிலை மனிதனுக்கு ஏற்படுவதில்லை.

பேராசிரியர்கள், வல்லுநர்கள், நிபுணர்கள், மேதைகள், தத்துவஞானிகள், பரம்பரையாக வந்த

ஆசாரக் குடும்பத்தில் பெற்ற ஞானம் பெற்றிருப்பவர்களால் பரம்பரை பரம்பரையாகப் போற்றப்படும், பெருமையாகக் கருதப்படும். இதைத் தியாகம் செய்ய முன் வர முடியாது. உயிரையே கொடுத்தாலும் கொடுக்கலாம் பஞ்சாங்கம் கணித்தவர், ஜோஸ்யம் மூடநம்பிக்கை அதனால் அதை நான் விட்டு விடுகிறேன் என்று சொல்ல முன் வருவாரா? உலகத்தில் புதிய அறிவு ஏற்பட்டு பழைய அறிவைப் புறக்கணிக்கும்பொழுது, இவர்கள் படும்பாடு பெரியது. இவர்கள் இதை விட்டுவிட முன் வந்தாலும், இவர்கள் மனம் ஏற்றுக் கொள்ளாது. 70 ஆண்டுகளாகப் போற்றி வளர்த்த கம்யூனிசம் அர்த்தமற்றது என்று ரஷ்யர்கள் இன்று சொல்ல என்ன பாடுபடுகிறார்கள் என்பதைக் காண்கிறோம். ஆசாரமான பழக்கங்களுக்காக நாம் பரம்பரையாக உயர்வாகக் கருதப்பட்டோம். இன்று ஆசாரம் மூட நம்பிக்கை என்று மனம் ஏற்றுக் கொள்ளுமா? காலம் மாறிவிட்டது. அவையெல்லாம் உயர்ந்தவைதாம். இந்தக் காலத்திற்குப் பொருந்தாது என்று மனம் சொல்லுமே தவிர ஆசாரம் மூடநம்பிக்கை என ஏற்றுக் கொள்ளுமா? விஞ்ஞானத் தத்துவங்கள், சொல்லாராய்ச்சி, சரித்திர ஆராய்ச்சி, ஆகியவற்றில் அடிப்படைத் தத்துவங்கள் மாறுவதுண்டு. மாறிய நிலையில் பழைய தத்துவங்களை விட முடியா. அவர்களுள் ஏற்படும் மனப் போராட்டம் பெரியது.

உடைமை, உரிமை, அறிவால் பெற்ற பெருமையைத் தியாகம் செய்வது மிகக் கடினம். இவற்றை எல்லாம் செய்ய முன்வருபவர்கள் இலட்சியவாதிகள். இவர்களைக் காண்பது அரிது. ஆன்மீகத்தில் தான் என்பதை தியாகம் செய்து தான் உள்ள இடத்தில் இறைவனை அமர்த்த வேண்டும். தான் என்பதை நாம் அகந்தை எனப் புரிந்து கொள்கிறோம். இது சரி என்றாலும், இது முதல் நிலை.

தினமும் காரியங்களைச் செய்ய நாம் எண்ணத்தாலும், உணர்வாலும் முன் வருகிறோம். அதாவது நம் காரியங்களை எண்ணம் ஆரம்பிக்கின்றது. மற்ற காரியங்களை உணர்வு ஆரம்பிக்கின்றது. உணர்வோ, எண்ணமோ ஆரம்பிக்காமல் காரியங்கள்

நிகழ்வதில்லை. எண்ணம் ஆரம்பித்தாலும், உணர்வு ஆரம்பித்தாலும், தான் என்பதே அவ்வுருவில் இவற்றை ஆரம்பிக்கின்றன. இவையெல்லாம் நான், தான், அகந்தை என்பதின் வெளிப்பாடுகள். இந்த ஆரம்பத்தைத் தியாகம் செய்தால் அகந்தை வெளிப்படாது. மணி 7, பேப்பர் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது, படிக்கின்றோம். எண்ணம் ஆரம்பித்த செயல் அது. மகன், எதிர்வீட்டுப் பையன் சைக்கிளை விடுகிறான். அவனைக் கூப்பிட்டு இனி அப்படிச் செய்யாதே என்கிறோம். அவர்கள் வீட்டுச் சைக்கிளை நீ விட்டால் நமக்கு மரியாதை குறைவு என்பது மரியாதை உணர்வால் ஆரம்பிக்கப்பட்ட காரியம். ஒரு நாளில் பல நூறு காரியங்களை எண்ணத்தாலும், உணர்வாலும், பழக்கத்தாலும், ஆரம்பிக்கின்றோம்.

இந்த ஆரம்பிக்கும் உரிமையைத் தியாகம் செய்ய வேண்டியது யோகப் பயிற்சி. ஆரம்பிக்காமல் என்ன செய்வது என்று கேட்கலாம். ஆரம்பிக்கும் எண்ணத்தைச் சமர்ப்பணம் செய்து சும்மா இருந்தால் அன்னை உன்னுள் காரியங்களை ஆரம்பிப்பார். அப்பொழுது நீ அன்னையின் கருவியாவாய். ஆரம்பத்தைத் தியாகம் செய்ய வேண்டும். சர்வ காரியங்களையும் ஆரம்பிப்பதைத் தியாகம் செய்பவன் சர்வ ஆரம்பப்பரித்தியாகிறான்.

******

  1. நமக்கு உரிமையில்லாததை நாம் விரும்புகின்றோம். மற்றவர்க்கு உரிமையில்லாததை நாமே முனைந்தளித்தால் அச்செயல் (ப்ர்ஸ்ங்) அன்பாக மாறுகிறது.

அருளாக வருவது, அன்பாக வெளிப்படுகிறது.

ஆசையால் உரிமையில்லாததை விரும்புகிறோம். அன்பால் பிறர்க்கு உரிமையில்லாததைச் செய்கிறோம். அருள் தானே செயல்படுவது. நமக்குத் தெரியாமலேயே செயல்படும். நமக்கு உரிமையில்லாததைக் கொடுக்கும். இதைத்தான் தானே நடந்தது, ஆண்டவன் செயல், அருள், அதிர்ஷ்டம் என்று கருதுகிறோம். அருளைப் ஞானம் பெற்ற ஜோஸ்யர்கள், மதாசார்யர்கள்,

பெறும் மனிதன் அதை வெளிப்படுத்தினால் அன்பாக வெளிப்படுகிறது என்கிறார் அன்னை. அருளும், அன்பும் ஒன்றே. நம்முள் வருவதற்கு முன் அருளாக இருக்கிறது. நம்மிடமிருந்து வெளிப்படும்பொழுது அன்பாகக் காணப்படுகிறது.

எனவே அருளை நம்முள் செயல்பட அழைக்கும் வழி, அன்பை வெளிப்படுத்துவது. அதாவது பிறர்க்கு உரிமையில்லாததை நாமே முனைந்து அவர்களுக்குக் கொடுப்பதாகும். எப்படி அருள் தானே நமக்குக் கொடுக்கின்றதோ, அப்படி நாம் பிறருக்கு அன்பால் கொடுக்க வேண்டும்.

அன்பை வெளிப்படுத்த நாமே முனைந்து செயல்பட வேண்டும். அன்பு வெளிப்பட்டால், அருள் உள்ளே வரும்.

*******

  1. இன்று உன் மனநிலையுள்ள இடத்தில் ஆரம்பிக்கா விட்டால், ஆரம்பிக்க முடியாது.

ஆரம்பத்திற்குரிய ஒரே இடம்.

இரண்டடி உயரத்தில் விட்டுவிட்ட சுவரைப் பூர்த்தி செய்ய, அதே இடத்தில் ஆரம்பிக்க வேண்டும். இ.ஆ. தல் வருஷத்தில் படிப்பை விட்டுவிட்டவன் 4 வருஷம் கழித்து படிப்பைத் தொடர்ந்தால் முதல் வருஷத்திருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். இரண்டாம் வருஷத்திருந்து தொடர முடியாது. 4 வருஷமாகிவிட்டதால் ங.ஆ. முதல் வருஷத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைப்பது சகஜம். அதற்கு வாழ்க்கை இடம் கொடுக்காது. படிப்பு, பயிர், தொழில், குடும்ப விவகாரம், வியாபாரம், அரசியல் எதுவானாலும், இடைவெளி ஏற்பட்டுவிட்டால், மீண்டும் அங்கிருந்து ஆரம்பித்தால்தான் காரியம் பூர்த்தியாகும்.

யோகத்தை ஆரம்பிக்க விரும்புபவர் தம் வயதிற்கேற்ற அளவிலோ, படிப்புக்கு ஏற்ற முறையிலோ,

அந்தஸ்திற்குத் தகுந்தாற் போன்ற முறையை அனுஷ்டிக்க முடியாது. தம் மனநிலை இன்றுள்ள இடம் எது என்று கண்டு அந்த இடத்தில் ஆரம்பிக்க வேண்டும்.

குடும்பத்தின் மீது பற்றுள்ளவர், முதற்படியாக அப்பற்றைக் களைய வேண்டும். ஆத்திரக்காரருக்கு ஆரம்பம் ஆத்திரத்தை அழிப்பது. ஆசையால் நிரம்பியவர் ஆசையை அழிக்க முன் வரவேண்டும்.

இன்று நம் மனநிலை எது என்று அறிய வேண்டும். அங்குக் கட்டுப்பாட்டை க்ண்ள்ஸ்ரீண்ல்ப்ண்ய்ங் ஆரம்பிக்க வேண்டும். அதன்றி, எனக்கு ஸ்ரீ அரவிந்தர் நூல்கள் மனப்பாடம். எனவே நான் யோகத்தை ஆரம்பிக்க தற்படியாகத் தியானத்தை மேற்கொள்கிறேன் என்றால் அவருக்குத் தியானம் அமையாது. தியானத்தில் ஆசை பூதவுருவுடன் கிளம்பும்.

*****

  1. எதை நம்மால் விடமுடியவில்லையோ, அது நாமுள்ள நிலையைச் சுட்டிக் காட்டும். (உ.ம்) பாசம், சுபாவம் தனக்குள்ள முக்கியத்துவம் போன்றவை.

விடமுடியாத நம் நிலை.

*******

  1. அன்னை தண்டிப்பதேயில்லை. இருப்பினும் பக்தர்களுக்குச் சிரமம் வருகிறது. அவற்றிற்கான காரணங்கள் பின்வருவன :
அறிவில்லாத செயலை அடமாகச் செய்வது. தெரிந்தும் அன்னையின் பாதுகாப்பை விட்டு விலகுதல். அன்னைக்குப் பிடிக்காது என்று தெரிந்தும், அதைச் செய்வது.

*******

  1. இம்மாதிரி நிலைகளிலும் அன்னையின் பாதுகாப்புப் பேரளவில் தொடரும். அதையும் மீறி வற்புறுத்தலுடன் அடம் செய்தால் கஷ்டம் வருகிறது.

தொடரும் பாதுகாப்பை விலக்கும் சுபாவம்.

கடன் வாங்கி அதைத் திருப்பித் தராமருக்கும் உபாயங்களையும், சாகஸங்களையும் கற்றுணர்ந்து அதனால் வரும் மரியாதைக்குறைவைப் பொருட்படுத்தாத அளவுக்கு வெட்கத்தை விட்டுக் கொடுத்தவர், அன்னை பக்தரானவுடன் எல்லாப் பக்கங்களிருந்தும் நல்லது நடக்கும்பொழுது கடன் வாங்குவதற்கு வெட்கப்பட்டு அதை விட வேண்டும். பழைய கடன்களைத் திருப்பிக் கொடுக்க முன்வர வேண்டும்.

அதற்கு மாறாகப் புது நிலைமையில் கடன் கிடைக்கிறது, ஏற்கனவே ரூ. 200, ரூ. 300 தான் கடன் வாங்க முடியும் இப்பொழுது ரூ. 5000 கூட வாங்க முடிகிறது. ஏன் ரூ. 25,000 கேட்டேன் ஒருவன் கொடுத்து விட்டான் என்று தொடர்ந்து கடன் வாங்குபவர்க்குப் பழைய வருமானத்தைப்போல் இருமடங்கு, மும்மடங்கை அன்னை கொடுத்தபொழுது தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

அதற்குப் பதிலாக இது என் புதுச் சந்தர்ப்பம். அதிக வருமானம் அன்னை கொடுத்தது. பெரிய கடன்கள் அருள் கொடுத்தது என்று இரண்டையும் பெற்று ஆடம்பர வாழ்வை அதிகபட்ச நிலையில் நடத்த ஆரம்பித்தால் 1 மாதம் நீடிக்காது. வேறு அம்சங்களால் 1 வருஷம் நீடிக்கிறது. மனிதன் தன் பாணியை அதிகமாக்கிக் கொள்கிறான். 2ஆம் வருஷம் நீடித்தால் மேலும் அதிகம் தவறு செய்கிறான். மூன்றாம் வருஷத்தில் எதுவும் பக்கவில்லை என்றால் தன் தவறு மன்னிக்க முடியாதது என்று தெரியவில்லை. அன்னையை எல்லாம் நம்ப டியாது, எவ்வளவோ பக்தியுடனிருந்தேன், அன்னை கைவிட்டு விட்டார்கள், இந்தத் தண்டனையைக் கொடுத்தார்கள் என்றே அவனுக்கு நினைக்கத் தோன்றுகிறது.

அதிகப்பிரசங்கமான ஒரு சொல் சொன்னால் உத்தி யோகம் போய்விடும். அந்தச் சொல்லை அன்னையின் அருளால் பெரிய அந்தஸ்து பெற்றவர், அந்தஸ்தைக் கொடுத்தவரிடமே சொல்வதைக் கேட்டு அனைவரும் திகைத்தனர். இனி ஒரு க்ஷணம் கூட இது நீடிக்காது என்று அனைவரும் உணரும்பொழுது, அவர் சொல்லைப் புறக்கணித்து, அவருக்குப் புத்திமதி கூறி அனுப்பினால் நான்கு நாள் கழித்து வந்து அதே சொல்லைச் சொல்கிறார். கேட்டவர் அனைவரும் திகைத்ததுடன் சத்துப் போகிறார்கள். எத்தனை தரம் மன்னித்தாலும், புத்திமதி சொன்னாலும், எவருமே மன்னிக்க முடியாததை எத்தனை தரம் மன்னித்தாலும், மீண்டும் அதே சொல், அதே செய்கை ன் வருகிறது.

இனி அவர் சொல்லால் திருந்தமாட்டார், அருளால் திருந்தமாட்டார் என்ற நிலையில் அருள் செயல் படுவதை நிறுத்தும். கடன் அதிகமாக வாங்கியவருக்குக் கடனுக்குள்ள மரியாதை வரும். அதிகப் பிரசங்கத்தனத்திற்கு அதற்குள்ள பதில் வரும். அன்னை தண்டித்து விட்டார் என்று அலறுவது இவர்கள் வழக்கம்.

******

  1. கண்ணுக்கு முன்னாருப்பதைக் காண மறுப்பவன் மனிதன். 100 முறை சொல்யதைப் புதியதுபோல் மீண்டும் கேட்பான். அன்னை இதைக் ன்ய்ஸ்ரீர்ய்ள்ஸ்ரீண்ர்ன்ள்ய்ங்ள்ள் கண் மூடித்தனம் என்கிறார்.
  • கண்ணுக்கு முன்னாருப்பதைக் காண மறுப்பவன் மனிதன்.
  • பார்வையற்ற திறந்த கண்கள்.
  • - பிறருக்கு நாம் தவறாமல் சொல்லும் புத்திமதியை நாம் கடைப்பிடிப்பதில்லை.
  • - இருபது முறை நஷ்டம் ஏற்பட்ட முறையை இருபத்தி ஓராவது முறையும் கடைப்பிடிக்கின்றோம்.
  • - திருமணமாகி 8 வருஷமாகக் கணவன் செய்ய மறுத்ததை இன்று நடக்கும் என்று கேட்கும் மனைவி உண்டு.

  • - ஓர் ஊருக்குப் போகும்பொழுது போக டிக்கெட்டு வாங்கிக் கொண்டு எப்படியாவது திரும்பலாம் என்ற நம்பிக்கையுடன் புறப்படுதல் ஒரு சிலர் பழக்கம்.
  • - தனக்குச் சூன்யம் வைத்த பார்ட்னரால் இந்த நேரம் நல்லது நடக்கும் என்று எதிர்ப்பார்ப்பதும் உண்டு.
  • - ரூ. 200 விலை சொல்லும் பொருளைப் பேரம் பேச வேண்டும் என்று ரூ. 20க்கு கேட்டுப் பேரத்தை ஆரம்பிக்கும் நபர் ஒருவர்.
  • - 63 வருஷமாக ஆயிரம் விஷயத்தை எதிர்ப்பார்த்தேன். இதுவரை ஒன்றுகூட நடந்ததில்லை. என்றாலும் என் மனம் இன்னும் ஏதாவது பெரியது நடக்கும் என்று எதிர்ப்பார்க்கின்றது.
  • - கடந்த இருபது வருஷமாக என் கண் எதிரே சுமார் நூறு சிக்கலான விஷயங்களில் நூற்றுக்கு நூறு நாணயமாக நடந்தவரை இன்று என் விஷயத்தில் மனம் நம்ப மறுக்கிறது. என் விஷயத்தில் எத்தனையோ முறை நாணயமாக நடந்திருப்பதையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.
  • - அகராதி என்று சிறு வயது முதல் 30 வருஷமாகப் பெயர் வாங்கியவருக்கு இன்றும் ஏன் தன்னை இப்படி நினைக்கின்றார்கள் எனப் புரிவதில்லை.

மய்ஸ்ரீர்ய்ள்ஸ்ரீண்ர்ன்ள்ய்ங்ள்ள் கண்மூடித்தனம் மனிதனுடைய மனநிலை. நான் கண்மூடித்தனமாக இல்லை என கண்மூடித்தனமாகப் பேசுவது வழக்கம். நாம் கண்மூடித்தனமாக இருக்கின்றோம் என்று அறிவது தல் நிலை. எந்த விஷயத்தில் அப்படியிருக்கின்றோம் என்றறிவது அடுத்த நிலை. மாறுவது கடைசி நிலை.

*******

  1. உடல் உணர்வில்லாதவருண்டு. மேளச் சத்தம் கேட்டவுடன் எழுந்து ஓடுபவருண்டு. அது போன்றி மனத்தால் உணர்வைக் கட்டுப்படுத்துபவருண்டு. உணர்ச்சியை மனம் கட்டுப்படுத்துவதுபோல் ஜீவியம் மனத்தைத் தாண்டியிருக்கிறது. அன்னை அது போன்றே செயல்படுகிறார். சிந்தனை நின்ற பின் ஒரு பெரிய எண்ணம் உதயமாகிறது. எண்ணத்தை நிறுத்தி ஜீவியத்தால் மட்டுமே செயல்படமுடியும். அதைச் சாதிக்க சிந்தனையைத் தியாகம் செய்ய வேண்டும்.

மௌனத்தில் பெரிய எண்ணம் உதயமாகும். ஆசைக்குக் கடிவாளம் போடாவிட்டால், வாழ்க்கையே இல்லை. அவரவர்கள் தத்தமக்குப் பிரியப்பட்டதைக் கட்டுப்பாடின்றிச் செய்தால், நம் வாழ்க்கை காட்டு வாழ்வு போருக்கும். எந்த அளவுக்கு ஆசை கட்டுப்படுகிறதோ அந்த அளவுக்கு நாம் நாகரீகம் உடையவர்களாகிறோம். வாழ்க்கையில் நம்மோடு ஒத்தவர்களைப் பார்த்தால் தம் உணர்ச்சியைக் கட்டுப்படுத்துபவர்கள் முன்னேறுவதையும், உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள் ன்னேற முடிவதில்லை என்பதையும் காண்கிறோம். அறிவு, உணர்ச்சியைவிட உயர்ந்தது. உணர்ச்சி தானே கட்டுப்படாது. அறிவால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த டியும். ஒரு நிலையில் உள்ள வேகம், அடுத்த நிலையிலுள்ளதற்குக் கட்டுப்படும். அதற்குக் கட்டுப்பாடு என்று நாம் பெயரிடுகிறோம்.

அதேபோல் அறிவைவிட, ஜீவியம் உயர்ந்தது. உணர்வைக் கட்டுப்படுத்த முடியாதவன் சாதாரண மனிதன். சாதாரண மனிதனுக்கு அறிவைக் கட்டுப் படுத்தவேண்டும், கட்டுப்படுத்த முடியும் என்றே தோன்றாது. அறிவு கட்டுப்படாது. அறிவு கட்டுப்பட்ட நிலைக்கு மௌனம் என்று பெயர். அது தவ நிலை. அறிவு கட்டுப்பட்டால் அதற்கடுத்த ஜீவியத்திற்குத்தான் ஸ்ரீர்ய்ள்ஸ்ரீண்ர்ன்ள்ய்ங்ள்ள் கட்டுப்படும். சிந்தனையைத் தியாகம் செய்ய முன் வந்தால் அறிவு ஜீவியத்திற்குக் கட்டுப்படும். அது மோன நிலை, தபஸ்வியின் நிலை, அது சித்தித்தால் மௌனம் சித்திக்கும்.

********

  1. எண்ணத்தைச் சமர்ப்பித்தால் எண்ணத்தின் பின்னாலுள்ள ஜீவியம் செயல்பட ஆரம்பிக்கும்.

ஜீவியம் செயல்படும் சமர்ப்பணம். உணர்ச்சியேயில்லாமல், உடலால் செயல்படும் மனிதனை நாம் பார்க்கிறோம். அவன் வேலை செய்வான். பாசம், பற்று இருக்கா. சாப்பாடு இருந்தால் போதும். தூங்கி விடுவான். குழந்தை இறந்தாலும் அவனைப் பாதிக்காது. திட்டினாலும் கோபம் வாராது. சாப்பாடுதான் முக்கியம். இவனைச் சாப்பாட்டு ராமன் என்பார்கள். இவன் எந்தக் குடும்பத்தில் பிறந்தாலும் அங்கே கடைசி நிலையிருப்பான். பொதுவாகக் கூ வேலை செய்பவர் நிலை இது.

அறிவேயில்லாமல், உணர்ச்சி வசப்பட்டவரைப் பார்க்கின்றோம். அடிக்கடி ரோஷம் வரும். கோபம் வரும். படபடப்பாக இருப்பார்கள், நிதானமிருக்காது. ஆசையின் பிடியிருப்பார்கள். அவர்கள் பொதுவாக வாழ்க்கையை எந்த நிலையில் ஆரம்பித்தார்களோ, அங்கேயே இருப்பார்கள். மேலே போவது கடினம். போனாலும் மீண்டும் கீழே வரும் வாய்ப்பும் அதிகம். இருக்குமிடத்திருந்தும் மேலும் கீழே போக வாய்ப்புண்டு. பெரிய முன்னேற்றம் இவனுக்குக் கிடையாது. மற்றவர்கள் அவனைப்பற்றிப் பேசும்பொழுது, சுத்தமா அறிவேயில்லை அவனுக்கு என்பார்கள்.

எண்ணம் அறிவைப் பிரதிபக்கும். அறிவுள்ளவன் உயர்ந்தவன். இராமசாமி முதயார், இலட்சுமணசாமி தயார், சர்.எஸ். இராதாகிருஷ்ணன் போன்றவர்களைப் பற்றி நினைத்தால் அறிவாளிகள் என்ற நினைவு வருகிறது. இவர்கள் பெற்ற ன்னேற்றம் அறிவால் மட்டும் ஏற்பட்டதன்று. இவர்களுக்கிணையாகச் சொல்லப்போனால் அதிகமாக அறிவுடையவர் அநேகர் இவர்களுடனிருந்தனர். அவர்கள் அறிவு சிறந்தது. அறிவுக்குரிய பலனை அவர்கள் பெற்றார்கள். டழ்ர்ச்.ஹிரியண்ணா, நீலகண்ட சாஸ்திரி, போன்றவர் பலருண்டு. அவர்களுடைய அறிவு

 

உயர்ந்தது. அவர்கள் பெரிய பதவியில் இருந்தார்கள். ஆனால் இராதாகிருஷ்ணனும், முதயார் சகோதர்களும் நாட்டில் உச்சகட்டப் புகழை எட்டியதற்குக் காரணம் அவர்கள் அறிவு, அதை விடப் பெரிய ஜீவியத்திற்குக் கட்டுப்பட்டிருந்தது. அதற்குரிய நிதானம் மேலோங்கியிருந்தது.

எண்ணம் சமர்ப்பணமாகி ஜீவியம் செயல்பட்டால், எண்ணத்தால் பெறும் பலனைவிட பல மடங்கு உயர்ந்த பலன் பெறுவார்கள்.

*******

  1. உணர்ச்சியைச் சமர்ப்பணம் செய்தால் அதன் பின்னணியில் உள்ள ஜீவியம் தானே செயல்படும். செயலைச் சமர்ப்பணம் செய்தால் உடன் ஜீவியம் செயல்படும்.

உடன் ஜீவியம் செயல்படும்விதம்.

எண்ணத்தின் பின்னாலுள்ளது ( ம்ங்ய்ற்ஹப் ஸ்ரீர்ய்ள்ஸ்ரீண்ர்ன்ள்ய்ங்ள்ள்) எண்ணத்தை உற்பத்தி செய்த ஜீவியம். உணர்ச்சியின் பின்னாலுள்ளது அதை உற்பத்தி செய்த ஜீவியம். இது முந்தையதை விட சக்தி வாய்ந்தது. இதைவிட அதிக சக்தி வாய்ந்தது உடன் ஜீவியம்.

நாம் எழுதக் கற்றுக் கொள்ளும்பொழுது நன்றாக எழுத, கொஞ்ச நாளாகிறது. அதைக் கற்றுக் கொள்வது எண்ணத்தின் பின்னாலுள்ள ஜீவியம். பல வருஷங்களான பின் உணர்ச்சியின் பின்னாலுள்ள ஜீவியம் கற்றுக் கொள்கிறது. அப்பொழுது நம் கையெழுத்திற்குத் (ள்ண்ஞ்ய்ஹற்ன்ழ்ங்) தனி த்திரை ஏற்படுகிறது. அடுத்த தலைமுறையில் உடன் ஜீவியம் இரத்த சம்பந்தமாகக் குழந்தைகளுக்குச் செல்கிறது. குழந்தை எழுத ஆரம்பிக்கும்பொழுது தகப்பனார் அறிவு அவனிடம் வெளிப்படுத்துவது உடன் ஜீவியம்.

*******

  1. எண்ணம், உணர்வு, செயல் மூன்றையும் சமர்ப்பணம் செய்தால் ஜீவனுடைய ஜீவியம் (ற்ட்ங் ஸ்ரீர்ய்ள்ஸ்ரீண்ர்ன்ள்ய்ங்ள்ள் ர்ச் ற்ட்ங் க்ஷங்ண்ய்ஞ்) செயல்படும்.

ஜீவனுக்கும் ஜீவியம் உண்டு.

நம் திறமைக்கு முதல் நிலை எண்ணம். கற்றுக் கொண்டு செய்வதைக் குறிக்கும் இது. அடுத்த நிலை உணர்வு, ஆர்வமாகச் செய்வதைக் குறிக்கும். மூன்றாம் நிலைத் திறமை அனுபவத்தால் வருவது. உடல் பல வருஷம் அனுபவப்பட்டதால் ஏற்படும் திறமை இது. இவற்றிற்கு முழுமை கொடுப்பது ஜீவன். இது நீண்ட அனுபவத்தாலோ அல்லது அடுத்த தலைமுறையிலோ வரும்.

எந்த நிலையிலும் சமர்ப்பணம் அந்த நிலையிலுள்ள திறமையை அதிகப்படுத்தும். அடுத்த நிலைக்குரிய திறமையை வெளிப்படுத்தும். தையல் மிஷினில் தைக்க தல் நாள் ஒருவர் சொல்க் கொடுப்பதை அறியாமல் தெரிந்து கொள்வதற்குப் பதிலாக அவர் சொல்லும் ஒவ்வொன்றையும் அன்னைக்குச் சமர்ப்பணம் செய்து மௌனமாகக் காத்திருந்தால், அறிவு விலகி அதன் பின்னுள்ள ஜீவியம் கற்றுக் கொள்ளும். அன்றே அவரை மிஷினில் உட்கார்ந்து தைக்கச் சொன்னால், பல மாதம் பயின்றவர்போல் நாம் தைப்பதைக் காணலாம். இது சமர்ப்பணத்தால் ஏற்படுவது.

*******

  1. மனிதன் சர்வஆரம்பப்பரித்தியாகியானால் ஜீவியம் தானே செயல்படும்.

தானே ஜீவியம் செயல்படும் சர்வஆரம்பப்பரித்தியாகம்.

சர்வ ஆரம்பத்தையும் பரித்தியாகம் செய்தபொழுது மேற்சொன்ன மூன்று சமர்ப்பணத்திற்கும் சேர்ந்த பலன் ஏற்படும்.

******

  1. உயர்ந்த செயலையும் தாழ்ந்த மன நிலையுடன் மனிதன் பார்ப்பதால் அவை சிறியனவாகத் தோன்றும். தாழ்ந்த செயலையும் உயர்ந்த மன நிலையுடன் இறைவன் காண்பதால் அவை உயர்ந்து தோன்றும். உயர்ந்த நிலையிருந்து உலகத்தின் செயல்களைக் காண முயலும் மனிதன் தெய்வத்தை நோக்கிச் செல்கிறான்.

தெய்வத்தை நோக்கிச் செல்லும் மனநிலை.

நம் வீட்டிலுள்ள பொருளை இன்னொருவர் நாம் அறியாமல் எடுத்துப் போனால் அதைத் திருடு என்கிறோம். திருடியவன் கிடைத்தால் அவனைத் தண்டிக்கின்றோம். ஒரு பிஷப் வீட்டில் வெள்ளி வத்தி ஸ்டாண்டைத் திருடியவனை போலீஸ் பிடித்து வந்து அவரிடம் நிறுத்திய பொழுது, 'நான் உனக்கு இரண்டு ஸ்டாண்ட் கொடுத்தேன், ஏன் ஒன்றை இங்கு வைத்துப் போய்விட்டாய்? அதையும் எடுத்துக் கொள், என்று கொடுத்தார். நம் பொருள் திருடு போயிற்று என நாம் நினைக்கிறோம். அவன் பசியால் வாடுவதை அவர் நினைக்கின்றார்.

நமக்கு எரிச்சல் மூட்டும் செயல்களையும், அருவெறுப்புத் தரும் செயல்களையும், தவறாகத் தெரிவனவற்றையும் மனநிலையை உயர்த்திக் கொண்டு பார்த்தால் அச்செயல்களில் தெய்வம் வெளிப்படுவது தெரியும்.

நம்மை ஏமாற்றுபவனை எப்படி இதுபோல் உயர்ந்ததாகக் கருத முடியும்? என்றால், அன்னை அதற்குக் கூறும் பதில் வேறு. அவனுடைய மன நிலையுடன் நாம் ஒன்றிப் போய் அவனுடைய கண்ணோட்டத்தில் பார்த்தால், பிறரை ஏமாற்ற வேண்டும் என்ற அவசியம் அவனுக்கு அமைந்துள்ளது தெரியும். அதற்காக நாம் அவனைக் கண்டு பரிதாபப்பட வேண்டும். ரூ. 1500 சம்பளம் பெறுபவன் தனக்கு ரூ. 2000 சம்பளம் என்று சொன்னால், தன் சம்பளத்தைச் சொல்ல அவன் கூச்சப்படுகிறான் என்று பொருள். உண்மையை அறிந்து அவனைக் கே செய்வது தாழ்ந்த மனநிலை. அதைத் தெரிந்து அவனுக்காகப் பரிதாபப்படுவது உயர்ந்த மனநிலை.

*******

  1. மறுப்பு ஆர்வமானால் திருவுருமாற்றம் ஏற்படும்.

தனக்குப் பழக்கமானவை தவிர மற்றவற்றை மனிதன் எதிர்க்கின்றான், வெறுக்கிறான், மறுப்பு தெரிவிக்கின்றான். இதுவே அவன் வழக்கம், எந்த மாறுதல் வந்தாலும் முதல் மறுப்பது மனித சுபாவம். அன்று குடுமியை மாற்றிக் கிராப் வெட்டிக் கொண்ட பொழுதும், இன்று கிராப்பை மாற்றி நீண்ட முடியை வளர்த்தபொழுதும் புறப்பட்ட எதிர்ப்பு பெரியது. உடை, உணவு, ஸ்டைல், கருத்து, பழக்கம், வழக்கம் மாறியவண்ணமிருக்கின்றன. முதல் மறுப்பு வருகிறது. பிறகு அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஏற்றுக் கொண்ட பின் முன்னேற்றம் ஏற்படுகிறது. ஆங்கிலப் படிப்பு வந்த காலத்தில் அது நீசபாஷை, படிப்பது அனாசாரம் என்றார்கள். ஆக்ஸ்போர்ட் போய் படித்தவர்களை ஜாதிப்பிரஷ்டம் செய்தார்கள். சுதந்திரத்திற்காகப் போராடியவர்களை ஊர் விலக்கியது. புதிய ஸ்ரீர்ன்ழ்ள்ங் பாடம் படித்தவர்க்கு வேலை கிடைக்கவில்லை. புதிய பயிரிட்டவர்களைக் கே செய்தார்கள். இவர்கள் எல்லாம் முன்னோடிகள். இவர்களை எதிர்ப்பதற்குப் பதிலாக வரவேற்பு தெரிவித்தால் உலகம் எளிதில் முன்னேறும்.

இறைவன் நம் மீது அருளைப் பொழிகிறான். அவன் செயல் நாமறிந்த முறையில் வந்தால் வரவேற்கிறோம். வேறு உருவத்தில் வந்தால் மறுப்புத் தெரிவிக்கின்றோம். ரூ. 4000 சம்பாதித்தவருக்கு ரூ. 6000 சம்பளம் வந்தவுடன் அன்னைக்கு நன்றி தெரிவித்து அடுத்த நாள் அந்த வேலையில் சேர்ந்தார். ஒரு மாதம் கழித்து அவருக்கு இந்தோனேஷியாவில் ரூ. 40,000 சம்பளத்தில் வேலை வந்தது. அவர் வீட்டார் அதை ஏற்கக் கூடாது என்றனர். அருள் புதிய பாதையை அதற்கேற்ப ஏற்படுத்தும். நமக்கே உரிய வழியில் மட்டும் செயல்படாது. மறுப்பு தெரிவிப்பதற்குப் பதிலாக நம்மை நாடி வருவது அருள் என உணர்ந்து ஆர்வம் தெரிவித்து ஏற்றுக்கொண்டால் திருவுருமாற்றம் ஏற்படும்.

********

  1. பகவான் நான் என்ற சொல்லைப் பயன்படுத்துவது அரிது.

பகவான் குறிப்பிட்ட ஸ்ரீ அரவிந்தர்.

அகந்தை அழிந்த பின் நான் என்ற சொல்லுக்கு வேலை குறைவு. தன்னைக் குறிப்பிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் நான் என்பதை பிரயோகிக்க வேண்டும். வங்காளிகளுக்கு 'வி' உச்சரிக்க வராது. அதனால் வி வரும் இடங்களில் 'பி ' என்று சொல்வார்கள். வங்காளச் சாதகர்களுக்கு ஸ்ரீ அரவிந்தர் என்று உச்சரிக்க முடியவில்லை என்பதால் ஆதிநாளில் தம் பெயரை அரபிந்தோ என மாற்றிக் கொண்டார். ஜோதி ஏற்பட்டு உள்ளொளி பெருகி வெள்ளொளி பொன்னொளியான பின் நான் அழிந்துவிட்டது. அங்கு ஜோதி நிலைத்தது. அதுவும் பொன்னொளியான பின் அதை நான் என்று குறிப்பிடக் கூடாது. அரபிந்தோ என்றும் குறிப்பிடக் கூடாது. அதை நழ்ண் ஆன்ழ்ர்க்ஷண்ய்க்ர் ஸ்ரீ அரவிந்தர் என்றே குறிப்பிட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. சீனிவாசன் என்ற பெயர் வாசன் என்பதற்கு முன் ஸ்ரீ சேர்ந்தது. அதனால் சீனிவாசனை வாசன் என்று இன்று நாம் சொல்ல முடியாது. ஸ்ரீ பிரகாசா கவர்னராக இருந்த பொழுது அவர் பெயரில் ஸ்ரீ கலந்திருப்பதால் அதை நழ்ண் நழ்ண்ல்ழ்ஹந்ஹள்ஹ ஸ்ரீ ஸ்ரீ பிரகாசா என்றெழுதுவார்கள். அதுபோல் ஆன்மீகச் சட்டப்படித் தம் பெயர் நழ்ண் ஆன்ழ்ர்க்ஷண்ய்க்ர் ஸ்ரீ அரவிந்தர் என்பதை அவர் கண்டு அடுத்தவரைக் குறிப்பிடுவது போல் தம்மைக் குறிப்பிட்டார்.

******

  1. சூட்சுமப் பார்வையில் பொன்னொளியைக் கண்டால் அது சத்திய ஜீவ ஒளி உடல் வெளிப்படுவதாகும்.

பொன்னொளியின் சூட்சுமம். நம் கரணங்களுக்குப் பொதுவான ஒளி

உடல் சிவப்பு உணர்வு கருநீலம் மனம் மஞ்சள் சைத்தியப் புருஷன் (pink) இளம் சிவப்பு தவசிக்குரிய உயர் மனம் நீலம் தெய்வலோக ஒளி வெண்மைகலந்த நீலம் சத்தியஜீவியம் பொன்னொளி

*******

49 & 56. ஜடம் தெய்வ நிலைக்குப்போக துன்பத்தைக் கருவியாக நாடுகிறது. ஜடம் தெய்வத்தை நாடும்பொழுது துன்பம் என்ற பாதை வழியே செல்கிறது. ஜடம் தெய்வத்தை ஏற்றுக் கொண்டு சத்தியஜீவியத்தை நாடினால் துன்பத்தின் வழியே செல்லத் தேவையில்லை. அதன் பாதை ஆனந்தமாகும். அதுவே அன்னையின் அவதார நோக்கம்.

துன்பத்தின் பரிணாம நிலை. துன்பம் இன்பமாகும் அன்னை முறை. அன்னையை ஏற்றுக் கொண்டால் துன்பத்தை ஆனந்தமாக மாற்றலாம்.

செல்வத்தைச் சேகரிக்க ஒருவர் உழைக்க வேண்டும். நிலையில்லாத சந்தர்ப்பங்களை எதிர் கொண்டு சமாளிக்க வேண்டும். இடையறாது மனம் நிலையிழந்திருக்க வேண்டும். செல்வத்தின் நிலை உயர்ந்தால், வசதி செல்வாக்கு உயர்வதுபோல், எதிரிகளும் எதிர்ப்பும் அதிகமாகும். நாட்டில் எந்த நிலை மாறினாலும் நாமும் பாதிக்கப்படலாம். சில மாறுதல்கள் நம்மை அழிக்கக்கூடும். இம்மாதிரி நிலைகளில் பல ஆண்டுகள் உழைத்து வெற்றி பெற்றால் பெருஞ்செல்வம் சேரும்.

ஒருவருக்கு இனிமையான பழக்கம், நாணயம், அடக்கம், பிறர் பொருளை மனம் நாடாத பக்குவம், உயர்ந்த தன்னலமற்ற பண்பு போன்றவை நிறைந்திருந்தால் அவரைப் பெருஞ்செல்வர்

பழக்கத்தால் அறிந்திருந்தால் தம் செல்வத்திற்கு அதிபதியாக வேண்டும் என்று அவரை அழைப்பதுண்டு. ஏதோ ஒருவருக்கு இதுபோன்ற நிலை அமையும்.

ஜடம் தெய்வத்தை நாடினால் துன்பத்தைக் கருவியாக்குகிறது என்பது மனிதன் தன் உழைப்பால் பெருஞ்செல்வம் தேடுவதுபோல், பெருஞ்செல்வர் ஒருவருடைய பண்பால் கவரப்பட்டு அவருக்குத் தம் செல்வத்தை அளிக்க முன் வருதல் ஜடம் தெய்வத்தை ஏற்றுக் கொண்டு சத்திய ஜீவியத்தை நாடுதல்போல் ஆகும்.

துன்பத்தால் மட்டுமே அடையக் கூடிய இலட்சியத்தை ஆனந்தத்தால் நமக்குப் பெற்றுத் தருவது அன்னையின் அவதார நோக்கம்.

ஞானம், கல்வி, பதவி, தகுதி, உயர்வு, புகழ் போன்றவற்றை உழைப்பாலும், நெற்றி வேர்வையைச் சிந்துவதாலுமே அடைய முடியும். உயர்ந்த பண்புடையவர் அன்னையை ஏற்றுக் கொண்டால் அவற்றை அன்னை அவர்க்கு ஆனந்தம் மூலம் பெற்றுத் தருகிறார். இதுவே அன்னையின் அவதார நோக்கம்.

******

  1. தொடர்ந்து தரிசனம் கிடைத்தால் அழைப்பையும் மனம் மறந்து விடும்.

அழைப்பை மறக்கும் இடையறாத தரிசனம்.

அன்னை தூரத்தில் இருக்கும்பொழுது அழைப்பு மூலம் நம்முள்ளே அவரைக் கொண்டு வர முயல்கிறோம். அதனால் மனத்தில் அன்னை தரிசனம் கிடைக்கின்றது. மேலெழுந்த மனம், உள் மனம், ஆழ்ந்த மனம், உணர்ச்சிக்குரிய மனம், உடலுக்குரிய மனம், என மனங்கள் பல ஆழத்தில் அமைந்துள்ளன. அதேபோல் உணர்ச்சிக்கும் 5 நிலைகள் உண்டு. உடலுக்குரிய 5 நிலைகளும் உள்ளன. ஜீவனுக்குரிய அதே நிலைகள் உண்டு. இது போக சூட்சும மனம், உண்மை மனம் என்ற நிலைகளும் உள்ளன. தரிசனம் பொதுவாக

தல் நிலையில் கிடைக்கும். சில சமயங்களில் ஆழ்ந்த நிலையிலும் கிடைப்பதுண்டு. எல்லா நிலைகளிலும், எல்லா நேரங்களிலும், எல்லா விதமான ஒளிகளிலும் அன்னை தரிசனம் தருவதே முடிவான நிலை. அதனால் அழைப்பை நிறுத்த முடியாது.

தொடர்ந்து தரிசனம் எந்த நிலையில் கிடைத்தாலும் அழைப்பை நிறுத்த மனம் விழையும். தொடர்ந்த தரிசனம் ஆனந்தத்தைத் தருவதால், அழைப்பும் மறந்து விடுவதுண்டு.

*******

  1. கருணையும் இனிமையும் தெய்வத்தின் சுபாவம். ஒருவரிடமாவது மனிதன் கருணையுடனும், இனிமையுடனும் இருக்கலாம். அவற்றை ஏற்றுக் கொள்ளும் மனிதன் தெய்வ நிலைக்கு உயர்வான்.

கருணையை ஏற்றுக் கடவுளாகும் மனிதன்.

இனிமையாகப் பேசுதல் குறைவு. மனதில் இனிமை ஏற்பட்டு அதைப் பேச்சால் வெளிப்படுத்துதல் உயர்வு. எல்லாச் சமயங்களிலும் இனிமை மனதில் உற்பத்தியாவதில்லை. முறையாகப் பேசலாம், றையாக நடக்கலாம். இனிமையாகப் பேசவும், நடக்கவும், அதை மனதில் உணரவும் முயல்வது அரிது. அதை எல்லா நேரங்களிலும், எல்லோரிடமும் உணர டிவது மிகப் பெரிய காரியம். இனிமையாக இருக்க நாமே முயலலாம். கருணை இருந்தால் வெளிப்படும். இல்லாத கருணையை உற்பத்தி செய்ய முடியாது. கருணையை உற்பத்தி செய்ய முடிந்தால் அது தெய்வத்தை நோக்கிச் செல்வதாகும். அன்னைக்குப் பிரார்த்தனை செய்து கருணையை உற்பத்தி செய்தால், அதுவும் உற்பத்தியாகும். இருக்கும் கருணையை எல்லோரிடமும் வெளிப்படுத்த முயன்றாலும் நல்லது. அதுவும் மேலும் கருணையை உற்பத்தி செய்ய உதவும்.

நமக்கில்லாத தெய்வ சுபாவங்களையும் அன்னை மீது நம்பிக்கை வைத்து உற்பத்தி செய்யலாம்.



book | by Dr. Radut