சாவித்திரி
P.17. Or hew the ways of Immortality
அமரத்துவமான சுவர்க்கத்திற்குப் பாதை அமைப்போம்
காய கல்பம், சாகா வரம், மரணமிலாப் பெருவாழ்வு, அமரவாழ்வு என்பவற்றை மனிதன் சாகாமல் என்றும் உடலில் உயிரோடிருப்பான் எனக்கொண்டு இந்தியத் தவசிகளும், ரிஷிகளும் காயகல்பம் தேடினர்.
வேதம் அமரத்துவம் என்பதைத் தெளிவாகக் கூறுகிறது.
- அமரத்துவம் ஆத்மாவுக்கு, உடலுக்கோ, உயிருக்கோ (ஆவி) இல்லை.
- அமரத்துவத்தின் இரு அம்சங்கள் Infinity அனந்தம், Universality பிரபஞ்ச முழுவதும் பரவுதல்.
- அனந்தம் எல்லா நிலைகட்கும் உண்டு. ஜடம், வாழ்வு முதல் சத்வரை அனந்தம் உண்டு. ஆனால் அமரத்துவம் Supreme infinity க்கே உரியது. Supreme என்பதைப் ‘பர' என்று குறிப்பதுண்டு.
- Universality பிரபஞ்சம் முழுவதும் பரவுதலும் எல்லா நிலைகட்கும் உண்டு. அமரத்துவம் Divine Universality க்கேயுண்டு.
- ஆன்மா இவையிரண்டையும் - (Supreme infinity, divine universality) உச்சகட்ட அனந்தமும், இறைவனுக்குரிய பிரபஞ்ச ரூபமும் - பெற்றால் அமரத்துவம் பெறுகிறது என்பது வேதம்.
சாவித்திரி கூறும் அமரத்துவம் உடலில் வாழும் மனிதனுக்குரியது. உலகுக்குப் புதிய கருத்து. சாவித்திரி எமனை வென்று, அழித்து, மரணத்தை அழித்து உலகுக்கு அமரத்துவம் வழங்க வந்தவள். அதைச் சாதித்தாள்.
இப்பக்கத்திலுள்ள மற்ற கருத்துக்கள்:
- எமனெனும் கருமேகத்துடன் போரிட வந்தவள் சாவித்திரி.
- மரணம், வீழ்ச்சி, சோகம் ஆன்மாவை நோக்கி உந்தும்.
- ஆயுதம் தாங்கிய அமரத்துவம் காலத்தின் கிடுக்கிப் பிடியைச் சமாளித்தது.
- ஜடத்தின் இருளில் வாழ்வின் சிறு போராட்டம்.
- தம் வலுவே எதிர்ப்புக்கு அளவுகோல்.
- தெய்வீக அம்சங்களை தாக்கினான்.
- ஆர்வம் நிறைந்த மனித இதயத்திற்கு அவனிதயம் துணை நின்றது.
- விதியின் திரையில் விளையாடும் உருவம்.
- தெய்வீக விளையாட்டின் வெற்றியும், தோல்வியும்.
ஸ்ரீ அரவிந்த சுடர்
ஒரு விஷயம் புரிய நாம் சிந்திக்கின்றோம். புரியாவிட்டால் ஆழ்ந்து சிந்திக்கிறோம். மனிதனுக்குப் புரியாத பிரச்சினைகளுண்டு. தீர்வு கிடைப்பதில்லை என்பதுடன் சிந்தனைக்கு அவை எட்டுவதில்லை. அதைத் தீர்க்க நாம் சிந்திப்பதை நிறுத்தி மௌனத்தைக் கடைப்பிடிக்கிறோம். மௌனம் விடை காண்கிறது.
தன் ஆழ்ந்த பிரச்சினைகளைத் தீர்க்க மனித குலம்சிந்தனையைக் கைவிடுகிறது.
சிந்தனை விலகியபின் பிரச்சினை தீரும்.
- Login to post comments