03. சாவித்ரி
சாவித்ரி
P.139 Arriving with heavy eyes that hardly see
பார்க்க முடியாத நேத்திரங்களை எடுத்து வந்து
- ஆசையும் உணர்ச்சியும் மாறுவேடத்தில் வருகின்றன
- ஓடும் நதியில் மிதக்கும் களையென
- எழுவதும் மறைவதும் ஏவலுக்குக் கட்டுண்ட வாழ்வு போல்
- அவை அசுத்தமானவை, அவளசைவுகள் மட்டமானவை
- இறைவனின் சத்தியம் இகவாழ்வின் ஆழத்தில் புதையாத நேரமில்லை.
- கடைசி கட்டத்தினரிடத்திலும் ஆர்வம் காணாததில்லை
- எங்கெல்லாம் சிருஷ்டியுண்டோ அங்கெல்லாம் இறைவனின் ஸ்பர்சம் உண்டு
- இழந்த ஆனந்த மகிமையின் இன்ப நினைவு இல்லாமலில்லை
- பிறப்பிலும் இறப்பிலும் பிசிறென ஒட்டிக் கொண்டிருக்கிறது
- உலகின் உணரமுடியாத அழகு பிரதிபலிக்கும் இறைவனின் ஆனந்தம்
- அப்பூரிப்பின் புன்னகை எங்கும் தவழும் இரகஸ்யம்
- காற்றுடன் கலந்து வரும், மரத்தின் சத்தாக மணக்கும்
- இலையிலும் மலரிலும் எழிலாக மணக்கும் மகிமை
- வாழ்வின் மயக்கம் மரத்திலுதித்தது போல்
- உணர்வு தரும் வேதனை குரலாக எழவில்லை
- விலங்கிலும் பறக்கும் பறவையிலும் சிந்திக்கும் மனிதனிலும்
- இதயத் துடிப்பை இசையின் தாளமாக மாற்றி
- உயிரற்ற சதையை உணர்வு பெற எழுப்பி
- மகிழ்ச்சியை நாடி மனவேதனை பெற்று
- சொற்ப சந்தோஷம் புளகாங்கிதமாகப் புல்லரித்து
- வலியால் துடித்து, பூரிப்புக்கு ஏங்கி
- குரலையிழந்த, தவறாகப் புரியும், தடையற்ற சட்டம்
- ஜோதியிலிருந்து விலகி, மூலத்துடன் நெருங்கி
- உணர்வோடு கலந்து, உரிய மகிழ்வை இழந்து
- ஆத்மாவின் ஆசை அழிபவற்றை ஆர்வமாக நாடும்
- எவரும் தடுக்க முடியாத இயற்கையின் வேகம்
- கொதித்தெழும் இரத்தம், சூடுபெற்ற உணர்வு
- சொந்த வேலையில் பிரம்மம் கண்ட பூரிப்பு
- உலகின் உண்மையை காமமாகவும் காதலாகவும் காண வைக்கிறது
- வென்று, பெற்று, ஆண்டு அனுபவிக்கும் உறுதி
- வாழ்வை அனுபவிக்கும் அரங்க வளமாக்கி
*******
- Login to post comments