01. சாவித்ரி
சாவித்ரி
P.130 Life heard the call and left her native light
குரலைக் கேட்ட வாழ்வு உரிமையின் உறவை விட்டகன்றது
- அற்புதலோகத்தினின்று அபரிமிதம் வழிந்தோடியது
- பரந்த அழியுமிடத்தில் இறுகிய நூல் முடிச்சு,
- உயரே பறக்கும் உன்னத தேவதை இங்கும் தன்னைப் பொழிந்தது
- அவளற்புதம், ஆனந்தம், இனிமை ஊற்றெடுத்தது,
- அழகிய புதுலோகத்தை ஆனந்த மகிழ்வால் நிரப்ப முயன்றது.
- மனித வாழ்வை தெய்வக் கருணை அணைத்து நிரப்பும்
- அழியும் ரூபத்துள் அழியா தன்னிறைவை நிரப்பும் அவள் மனநிலை,
- ஜடத்தின் கர்ப்பத்துள் அழிவற்ற அவள் கனல் நுழைந்தது;
- சொரணையற்ற பரப்பில் எண்ணம் எழுந்து நம்பிக்கையாயிற்று,
- நாடி நரம்பும் நமது தசையும் அழகின் கவர்ச்சிக்குட்பட்டன,
- உணர்ச்சியற்ற உலகின் உடலில் திணிக்கப்பட்ட ஆனந்தம்
- ஜீவனுள்ள உலகம் மரத்திலும், மலரிலும், மூலிகையிலும் பெற்றது ஜீவனுள்ளது.
- அகன்ற பூமாதேவியின் மார்பகம் வானத்தை நோக்கி புன்னகையால் மலர்ந்து
- நீலவானம் நீலக்கடலில் நித்திய மகிழ்வில் கரைந்தது,
- அழகின் மார்பில் தவழும் பெருமையின் வேகம்;
- எட்டாத ஆழத்தின் உயிருள்ள ஜீவனின் உணர்ச்சி,
- துணிந்த மனிதன் உலகின் ஆத்மாவை எண்ணத்தால் சந்தித்தான்.
- விலங்கின் அழகில் விரைவாக விளங்கும் வாழ்வின் பெருமை,
- மாயமூச்சு மந்திரமாய் சூழ்ந்து வலம் வந்தது,
- சிறைப்பட்ட இதயம் பெறும் பெறற்கரிய பரிசுகள்.
- இருண்ட இனம் புரியாத தெய்வம் எழுப்பிய கேள்விகள்
- இருளை ஆடையாகப் போர்த்தும் இரகஸ்ய உறுதி,
- உடல் பெற்ற அவதியை ஆத்மாவுக்குப் பரிசாக அளிக்கிறது.
- மரண வேதனையை புதிரான முகமூடியாகத் தருகிறது
- மெதுவாக நகரும் வேதனையான வருஷம் உவந்து பெற்ற உணர்வு
- ஆச்சரியமான வழிப்போக்கன் விரைவிலும் ஏற்கும் ஓய்வு,
- நினைவுபடுத்த முடியாத இனிமையான இன்ப நிலை,
- ஜடமான இருண்ட சட்டம் பணிவுக்குரியது
- அதுவே உணர்வற்ற அஸ்திவாரம் உலகம் பெற்றது
- அழகு ஏற்கும் குருட்டு எல்லைகள்
- வருத்தமும் சந்தோஷமும் பகிர்ந்து வாழும் நட்பு.
- பயங்கர மௌனம் பணியாகக் கவர்ந்தது:
- சூட்சும வலிமை அடியோடு அழிந்தது
- குழந்தை தேவதையின் குதூகலம் கொல்லப்பட்டது,
- பெருமையெல்லாம் சிறுமையாயின
********
- Login to post comments