அஜெண்டா
Vol I-Page 89 The Strike is Grace
Why should Ashram receive special treatment from Mother?
ஸ்டிரைக் என்பது அருள் ஏன் ஆசிரமத்திற்குத் தனியான கவனிப்பு தேவை?
ஆசிரமத் தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்தபொழுது அன்னை தம் சக்தியைப் பயன்படுத்தி வேலை நிறுத்தத்தை முடிக்க வேண்டும் என்று கேட்டபொழுது இது அன்னை கூறிய பதில்.
அன்னை ஸ்தாபனங்களில் சுமுகம் முக்கியம். வளம் பெருகும் இடங்கள் அவை. வேலையைச் சமர்ப்பணம் செய்து, கவனமாகத் திறமையாக, பொருள்களையும், மனிதர்களையும் உயிருள்ள ஜீவன்களாகக் கருதி வேலை செய்தால், அங்கு
- சுமுகம் தவழும்.
- வளம் பெருகும், பலன் பல மடங்கு எழும்.
- கம்பனி குடும்பம் போலிருக்கும்.
- அங்கு வேலை செய்பவர்கட்கு வியாதி வருவது குறையும்.
- அவர்கள் குடும்பங்களில் சுபிட்சம் எழும், அதிர்ஷ்டத்தின் சுவடு தெரியும்.
- பாக்டரியில் பேரமைதியும், மௌனமும் தவழும்.
அதுபோன்ற இடத்தில் ஸ்டிரைக் வாராது. ஸ்டிரைக் வருகிறது என்றால் மேற்சொன்னவையிருக்கா. பிணக்கிருக்கும். கவனம் குறைந்திருக்கும். விரயம் மலிந்திருக்கும். கடுமையான சொல் எழும். அவற்றால் வேலை நிறுத்தம் வந்தால், அதை அன்னையிடம் கூறுவதற்குமுன் வேலை நிறுத்தத்திற்குரிய காரணங்களை விலக்க வேண்டும். அவற்றை விலக்கினால் வேலை தொடரும்.
குப்புற விழுவதும் அருள் என்ற அன்னை வேலை நிறுத்தமும் அருள் என்றார். வேலை நிறுத்தம் அன்னை ஸ்தாபனத்தில் வந்தால், அதற்குப் பொறுப்பானவர்கள் தங்கள் மனத்தைச் சோதனை செய்யும் வாய்ப்பு என்பதால், அது அருளாகும். அன்னை எங்கள் கட்சி என்பது அறியாமை, சிறுபிள்ளைத்தனம். "ஏன் நான் உங்களை ஆதரிக்க வேண்டும். எனக்குச் சாதகர்களும், தொழிலாளிகளும் சமமல்லவா?'' என்ற பொருள்படும்படி அன்னை கேள்வி எழுப்புகிறார்.
- அனைவருக்கும் அன்னை சமம், சமமான அன்பு செலுத்துபவர் என்பதை விளக்கும் நிகழ்ச்சியிது.
**********
ஸ்ரீ அரவிந்த சுடர்
முடிவெடுக்கும் திறன், முழு வாழ்வின் திறமையாகும்.
- Login to post comments
Comments
அஜெண்டா sub-heading tamil
அஜெண்டா
sub-heading tamil translation - from ஏன் ஆசிரமத்திற்குத் etc. second line
After the sub-heading tamil translation, extra space is there.