Skip to Content

04. யோக வாழ்க்கை விளக்கம்

யோக வாழ்க்கை விளக்கம்

22/29. அழிக்கும் நிலையாமை அழியாத நிலைமையை          உருவாக்கவல்லது.
நிலையான நிலையாமை.

(March 2016 இதழில் வெளிவந்த

யோக வாழ்க்கை விளக்கத்தின் தொடர்ச்சி)

  • நிலையாமையை நாம் அழிவு எனக் கொள்கிறோம். மரணம் வாழ்வை அழிக்கிறது.
  • ஓர் ஆபீசர் டிரான்ஸ்பரானால், அவ்வூரில் அவருக்கு வேலை போய்விட்டது எனக் கருதுகிறார்கள்.
  • ஓரளவு அவரும் அதையே நம்புகிறார்.
  • விளைநிலத்தைப் பயிரிட மறுத்தால் குடும்பம் அழியும்.
  • விளைநிலத்தைப் பயிரிடாவிட்டால், அது மனையாகும், பணம் விளையும்.
  • அரசியல் பதவி MLA, MP, மந்திரி போனால் அத்துடன் அரசியலில் மரணமடைவதாகும்.
  • காந்திஜி, சர்ச்சில், காமராஜருக்கு அப்படியாகவில்லை.
  • அரசியல் பதவி போய் அமர பதவி வந்தது.
  • நிலை என்ற எல்லைக்குள் இருப்பவனுக்கு தலைப்பு பொருந்தும்.
  • 1980-இல் மாதம் 5000 சம்பாதித்தவர் தொழிலையும் செõத்தையுமிழந்தார்.
  • 1990-இல் அவரும், அவர் குடும்பமும் மனவளம் பெற்று, பொருள் வளம் பெருகி வாழ்வு அமரவாழ்வு, அன்னை வாழ்வென, மனித மனம் பெறாத உயர்வு பெற்றார்.
  • 1947-இல் ஒரு கோடி மக்கள் இடம் பெயர்ந்து பாதி பேர் உயிரிழந்தனர். இதைப் பேரிழப்பு என்று எப்படிச் செõல்லாமலிருக்க முடியும். மீதி பாதி பேர் அவர்கள் நிலையாகத் தங்கிய இடங்களில் உயர்ந்தவராகவும், வளம் பொருந்தியவர்களாகவும், மக்கள் தலைவர்களாகவும் மிளிர்கின்றனர். அடுத்தடுத்த தலைமுறை கற்பனைக்கெட்டாத உயரம் போயிற்று.
  • இவை பொருளளவில் காணும் மாற்றங்கள்.
  • மனம் பொருளைக் கடந்தது.
  • ஆத்மா மனத்தைக் கடந்தது. அதன் வாழ்வு அகவாழ்வாகும்.
  • அகவாழ்வான ஆத்ம வாழ்வின் உயர்வை அனைவரும் காண முடியாது.
  • அதை எவரும் காணாமலிருக்க முடியாது.
  • ஒரு அம்சம் தவற முடியாதது. 10 ஆண்டுகளுக்குப்பின் 10 மாதம் முன்வந்து நம் வாழ்வைச் சீரழியச் செய்த பிரச்சனைகள் நம்மை நாடி வருவதில்லை என்பதை எவரும் காணாமலிருக்க முடியாது.
  • உலகளவில் 1945-க்கும் 2015-க்கும் அந்த வேறுபாடுள்ளதை புள்ளி விவரம் கூறுகிறது.
  • எளிய வேலையில் வளர்ந்த இரு பெண்கட்குத் திருமணம் செய்ய முடியாது எனக்கைவிட்டவருக்கு இலட்ச ரூபாய் (30 ஆண்டிற்குமுன்) வந்தது. பெண்கள் திருமணம் சிறப்பாக நடந்தது. ஓய்வு பெற்றார். 750/- பென்ஷன். பெண்கள் பெற்ற சொத்தும் வருமானமும் தகப்பனார் அனுபவிக்க முடியாதபடி வந்து 750 ரூபாயில் அவருக்குச் சிரமப்பட்டு ஒரு குடும்பம் நடத்தும் நிலை வந்தது. அவர் வாழ்வு வந்ததையும் அனுபவிக்க விடவில்லை. பெண்கள் பிரியப்பட்டு, அதாவது மருமகன்கள் தயவில் வாழ்வு அமைந்தது. அவர் மனநிலையைக் குறிக்கிறது.
  • அன்னை பொக்கிஷம்
  • அருள் தெய்வலோக பொக்கிஷம்
  • கண்ணை மூடி கட்டித்தங்கத்தைத் தாண்டுபவரும் உண்டு, அவரும் அருளினின்று முழுவதும் தப்புவதில்லை.

********



book | by Dr. Radut