01. சாவித்ரி
சாவித்ரி
P.133 Else could he roam on a free sunlit soil
சூரிய ஒளி சுடர்விடும் மண்ணில் அவன் பவனி வந்தான்
- வலியறியாத சிறு குழந்தையின் விலங்கு மனம்
- மரமும், மலரும் போல் அசையாமல், ஆனந்தம் பெறுபவர்.
- அனுக்கிரஹம் செய்ய வந்த அளவிலா வலிமை,
- இருந்து உழன்று ஏங்கித் தவிக்கலாயிற்று.
- காலத்தினூடே கணீரென ஒலித்த சிரிப்பு அடங்கி ஒடுங்கியது:
- இயல்பான மனித சந்தோஷம் லேசாக இருண்டது
- அவன் பெற்ற வருத்தம் அவன் தலைவிதியை வளர்த்தது.
- விலங்கின் அறிவில்லாத ஆனந்தம் அவனை விட்டு விலகியது,
- கவலையும், சிந்தனையும் அவன் அன்றாட வாழ்வில் கனத்தது;
- பெரியதையும் கண்டான், அதிருப்தியும் கொண்டான்,
- புலனறியாதது புலப்படும் விழிப்பு எழுந்தது.
- திகட்டாத சிந்தனை தித்திக்கும் மனம்; அறிவதற்கு அளவு கடந்த வாய்ப்புளது
- மேல் மன வாழ்வின் மேன்மைகளை முழுவதும் அறிந்தான்,
- ஜீவனின் அந்தரங்க ஆழம் அவன் ஆராய்ச்சிக்குக் காத்திருக்கிறது.
- மனமாகி, ஆத்மாவாகி, அவன் பிரம்மமாகிறான்.
- வலுவற்ற கூரையின் கீழ் இயற்கையை ஏற்று ஆள்கிறான்
- நீண்ட இருண்ட சமாதி போன்ற உறக்கத்தினின்று அவனுள் ஜடம் விழிக்கிறது
- இறைவன் வருகையை அவனுள் பூமாதேவி காண்கிறாள்
- கபோதியான சக்தி இலட்சியத்தைக் காண இயலவில்லை
- துடிக்கும் சக்தியின் உறுதி பசி வேகத்தில் வருகிறது
- ஓய்ந்து ஒடுங்கிய உடலுருவத்துள் வாழ்வு தன் வித்தை ஊன்றியது
- இனிய உறக்கத்தினின்று குருட்டு சக்தியாய் அது எழுந்தது
- புலன்களை உணரக் கட்டுப்படுத்தும் ஒழுங்கு
- சூன்யத்தின் வேலை சுகதுக்கங்களைக் கடந்தது
- அகன்ற ஆற்றொழுக்கான வாழ்வை கலக்கும் கனவுலக அனுபவம்
- உறக்கத்தில் உழலும் பிரபஞ்ச ஜீவனற்ற பரப்பு
- வலிமையான கைதி விடுதலைக்காகத் திணறுகிறான்
- ஆர்வம் உயிர்ப்பித்த ஜீவனற்ற அழைப்பு
- இதயத்தில் அவளெழுப்பிய தேவையின் வேகம்
- உயிரற்ற பொருள்களின் ஆழ்ந்த அமைதியினூடே
- உழைப்பும், பிரார்த்தனையும், போராட்டமும் எழுந்து குரலெழுப்பின
- வழியறியாத வழிகாட்டி வழிகாட்ட முன் சென்றான்
- எண்ணம் தன்னையிழந்தது, எதுவும் தெரியும் பாங்கில்லை
- அறியாத உலகின் அளவிறந்த வீச்சு அவன் அரவணைப்புக்குக் காத்திருக்கிறது
*******
- Login to post comments