02. திருமணத்தின் சரியான பக்கமும், தவறான பக்கமும்
திருமணத்தின் சரியான பக்கமும், தவறான பக்கமும்
ஆங்கில மூலம் திரு. என். அசோகன் அவர்கள்
தமிழாக்கம் திருமதி. விசாலாக்ஷி ராமநாதன் அவர்கள்
சரியான பக்கம் | தவறான பக்கம் | ||
1. | தம்பதியரிடம் இருக்கும் அன்பும், அரவணைப்பும் அவர்களுடைய பிஸிக்கல் வாழ்க்கையையும், உணர்வு மயமான வாழ்க்கையையும் மேலும் மேம்படுத்தும். | 1. | அன்பு இல்லாமலும், ஒருவரை ஒருவர் அதிகாரம் செய்யும் முயற்சியிலேயே இருந்தால் அவர்களது வாழ்க்கை இழுபறி போராட்டமாக இருக்கும். |
2. | பரஸ்பர நல்லெண்ணமும், உதவும் மனப்பான்மையும் இருந்தால் அவர்களது வாழ்நாளும் நீடிக்கும். | 2. | பரஸ்பர நல்லெண்ணம் அழிந்து கெட்ட எண்ணமாக மாறினால், அது அவர்களது ஆயுளை குறுக்கவும் செய்யலாம். |
3. | திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கை தன்னை மற்றவருக்கு வழங்குவதற்கும், எல்லோருடன் ஒத்துழைத்து, சுமுகமாக இருப்பதற்கும் ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமையும். | 3. | போட்டி மனப்பான்மையாக உறவு மாறினால் அங்கு பரஸ்பரம் பாராட்டுவதற்கு பதிலாக அதிகாரம் செய்யும் மனப்பான்மை மேலோங்கி சுமுகக் குறைவு ஏற்பட்டுவிடும். |
4. | திருமண உறவில் அடுத்தவர் கண்ணோட்டத்தைப் பாராட்டுவது நம் மனதை விசாலமடையச் செய்யும். | 4. | நம்முடைய கண்ணோட்டத்தையே வலியுறுத்தினால், நம் மனம் மேலும் மேலும் குறுகிவிடும். |
5. | ஒரு மனைவி தன்னுடைய கணவனுக்கு தானே முன்வந்து பணிந்து அவருடைய சொற்படி நடந்தால் அந்த உறவு இனிமையாகவும், சந்தோஷமாகவும் மாறிவிடும். | 5. | கணவன் தனக்குப் பணிய வலியுறுத்தி, அதை ஏற்காமல் மனைவி தன் போக்கிலேயே சுதந்திரமாகச் செயல்பட விரும்பினால் இனிமையான இல்லறம் மறைந்து கசப்பு தலைதூக்கும். |
6. | தம்பதிகளிடம் இருக்கும் பரஸ்பர அன்பு அவர்களுக்கு முக்கியமானதாக இருந்தால் அவர்களது திருமணம் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும். | 6. | கணவனுடைய வருமானத்தையோ அல்லது சொத்தையோ கணவனை விட முக்கியமானதாக ஒரு மனைவி கருதினாலும், மனைவியுடைய அன்பைவிட அவளுடைய அழகையோ, அவள் தரும் சுகத்தையோ ஒரு கணவன் முக்கியமாகக் கருதினாலும் அவர்களுடைய இல்வாழ்க்கை துன்பமயமாகிவிடும். |
7. | இருவருக்கும் விட்டுக் கொடுக்கும் தன்மை இருப்பின், வீட்டையும், அலுவலகத்தையும் சமநிலையுடன் சமாளிப்பதும், குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் சிறந்த கற்றுக் கொள்ளும் அனுபவமாக இருக்கும். | 7. | இருவருக்கும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாமல் இருந்து வேலைக்கும் செல்பவராக இருப்பின் வீட்டையும், அலுவலகத்தையும் சமாளித்து, குழந்தைகளையும் கவனிப்பது என்பது ஒரு வேதனைக்குரிய அனுபவமாக மாறிவிடும். |
8. | மனைவி ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தின் மருமகளாக இருந்தால், அவள் நல்ல பண்புள்ளவளாகவும், அனுசரித்து போகின்றவளாகவும் இருந்தால் அக்கூட்டுக் குடும்ப வாழ்க்கை எல்லோருக்கும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். | 8. | அவள் ஒத்துப்போகும் தன்மை அற்றவளாக இருந்து, மாமியாரும் அதிகாரம் செய்பவராகவும் சண்டை போடுபவராகவும் இருந்தால் அக்கூட்டுக் குடும்பத்தில் திருமண வாழ்க்கை எல்லோருக்கும் துன்பமயமாகிவிடும். |
9. | இருவருடைய சாதனைகளையும் கண்டு இருவரும் சந்தோஷமடைந்தால், அவர்கள் இருவரும் வேலைக்குச் செல்பவராக இருந்தால், அவர்கள் பணியில் அவர்களுக்கு மேன்மேலும் முன்னேற்றம் கிடைக்கும். | 9. | கணவன் அலுவலக பணியிலேயே ஆழ்ந்துவிட்டார் என மனைவி நினைத்தாலோ, மனைவி அதிகம் சம்பாதித்தால் தனக்கு அடங்க மாட்டாள் என்று கணவன் கருதினாலோ அவர்களது அலுவலக பணியின் முன்னேற்றத்தில் தடை ஏற்பட்டுவிடும். |
10. | சிறப்பான பெற்றோராக இருந்தால், குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றமும், சாதனைகளும் தடங்கலின்றி ஏற்படும். குழந்தைகள் பெற்றோரைவிட அதிகமாக சாதிப்பார்கள். | 10. | பெற்றோர் இருவரும் சரியில்லை என்றால், தங்களைவிட பிள்ளைகளின் சாதனை தாழ்ந்துப் போகக் கூடாது என்பதிலும், அவர்களுடைய குறைந்தபட்ச முன்னேற்றத்திற்கே தங்களுடைய அதிகமான நேரத்தையும், சக்தியையும் செலவழிக்க வேண்டி வரும். |
*******
- Login to post comments