09. தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
தமிழ்நாட்டுப் பழமொழிகளும் ஸ்ரீ அரவிந்தமும்
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
- அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கிலே அமிர்தமா?
அடி நாக்கு நஞ்சும் நுனி நாக்கின் அமிர்தமாகும்.
- கண்டால் காமாச்சி நாயகர், காணாவிட்டால் காமாட்டி நாயகர்.
காமாட்டி நாயகரும் கருத்தின் ஆழத்தில் காமாச்சி நாயகர்.
- ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.
ஏறினாலும் எருதுக்குச் சந்தோஷம், இறங்கினாலும் நொண்டிக்குச் சமம்.
- எருமை வாங்குமுன் நெய் விலை கூறுகிறதா?
அன்பன் எருமை வாங்குமுன் நெய் விலையைப் பெறுவார்.
- உடல் ஒருவனுக்குப் பிறந்தது, நாக்கு பலருக்குப் பிறந்தது.
நாக்கு உடல் போல உயர்ந்து செயல்படும்.
- தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும்.
அருள் நஷ்டமானாலும் அதிர்ஷ்டமாகும்.
- உலகத்துக்கு ஞானம் பேய், ஞானத்திற்கு உலகம் பேய்.
பேயைக் கண்டு கொள்ள முயன்றால் அது உலகமும் ஞானமும் ஆகும்.
- வண்ணானுக்கும், நிர்வாணிக்கும் உறவென்ன?
நிர்வாணியான வண்ணான்.
தொடரும்....
*******
- Login to post comments