04. யோக வாழ்க்கை விளக்கம் VI
யோக வாழ்க்கை விளக்கம் VI
(சென்ற இதழின் தொடர்ச்சி....)
கர்மயோகி
II/84) சிருஷ்டி வந்த பின்னரே சத்தியம் தன்னையறியும்.
பரம்பொருள் தன்னையறிய வேண்டியதில்லை.
- எந்த அவசியமுமற்ற பரம்பொருள்.
- கடவுளை எல்லாம் அறிந்தவன், எல்லாம் வல்லவன், எங்கும் நிறைந்தவனென்கிறோம்.
- மனிதன் தேவைகளாலானவன்.
- தேவை ஆசையை எழுப்புகிறது.
- சக்தி ஆசையாக மாறி திறமை உற்பத்தியாகிறது.
- திறமைசாலியைப் போற்றுகின்றனர். அது பிரபலம்.
- சிறியவனின் பெரும் திறமை பெரியவனுக்குப் பலஹீனம்.
- தேவை புறம், ஆசை அகம்.
- திறமையின் அடிப்படைகள் அகத்திலும், புறத்திலும் மனிதனைக் கட்டுப்படுத்துகின்றன.
- வாழ்வில் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வது திறமை, வல்லமை.
- பிறர் நம் தேவைகளைப் பூர்த்தி செய்ய முன்வருவது வாழ்வின் சிகரம், பதவி, அந்தஸ்து.
- அதிகாரம் அதை நிர்பந்தமாகச் செய்கிறது.
- அன்பு அதைப் பிரியமாகச் செய்கிறது.
- தலைவன் தேவையைப் பூர்த்தி செய்யும் வாய்ப்பு தொண்டனுக்கு பாக்கியம்.
- தேவையைக் கடந்தவன், மனித நிலையைக் கடந்தவன்.
- மனிதன் தெய்வங்களைப் பாடிப் புகழ்ந்து துதிக்கிறான்.
- பொருள் தேவையற்ற தெய்வத்திற்குப் புகழ் தேவைப்படுகிறது.
- எதுவும் தேவைப்படாதது பரம்பொருள்.
- எதுவும் தேவைப்படாத பரம்பொருள் ஏற்படுத்திக் கொள்ளும் தேவை சிருஷ்டி.
- "தன்னையறிந்தின்பமுற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவ"என்றார் சுவாமி.
- அதுவே மனித முயற்சியின் புனித உருவச் சிகரம்.
- அதுவும் தேவையற்றது பரம்பொருள்.
- வாழ்வு முன்னேறும் பொழுது மனிதன் நாடித் துடிப்பது, அவனைத் துடித்துத் தேடி வரும்.
- டார்சி அவளுக்காக உயிரை விட்டான்.
- அவள் துச்சமாக அச்சமின்றி வாய்க்கு வந்தபடி திட்டினாள்.
- உலகில் எதுவும் அனந்தம், திட்டுவதும் அனந்தம்.
- எதைப் பெறுகிறோமோ அதனால் அது பெருகுவது அனந்தத்தின் குணம்.
- அதனால் "செலவு செய்தால் வருமானம் வரும்'' என்று அன்னை கூறுகிறார்.
- இதன் தத்துவம்:
செய்யும் செலவு, செலவு செய்வதை அதிகரிக்கும்.
செலவு அதிகமானால் வரவு அதிகமாகும்.
வரவு அதிகமாகாமல் செலவு செய்ய முடியாது.
செலவு அதிகரித்தால் வரவு வளரும் என்பது அனந்தத்தின் அடிப்படை. - டார்சியைத் திட்டும்பொழுது எலிசபெத் தன்னுள் திட்டு வளர்வதைக் கண்டாள்.
- அது மேதா விலாசம் genius. அதை அவள் விரும்பி அனுபவித்தாள்.
(p.199 of the book Pride and Prejudice) - அவ்வளவு திட்டும் அவனைப் புறத்திலிருந்து அகத்திற்குக் கொண்டு போயிற்று.
- சமூக சட்டப்படி அவள் அவனுக்குத் தேவையில்லை, துச்சம்.
- அவன் நிலை சமூகத்தைக் கடந்த உள்ளம் உணரும் மனநிலை.
- தேவையற்ற நிலையில் தேவையை எழுப்புவது பரம்பொருளின் சிருஷ்டி.
- பரம்பொருள் பக்தனை அப்படியே விழைகிறது.
- பக்தனைப் பரம்பொருள் தன்னில் உயர்ந்ததாகக் கருதுகிறது.
- தன்னையிழந்த பரம்பொருள் தன்னை உணர்வது பக்தன் நிலை.
- அந்நிலைக்கு உதவுவது பரம்பொருளின் பெரும் கடமை - அருள்.
- டார்சி அந்நிலையில் அவளை நாடினான்.
- அதன் விளைவாக அவனிடம் மன்னிப்புக் கேட்கும் நிலை அவளுக்கு ஏற்பட்டது.
- விழுநர் வீழப்படுவார் நிலை - குறள் - அது தான் விரும்புபவர் தன்னை விரும்பும் நிலை செருக்கு தருவது என்கிறார் வள்ளுவர். அதுவே டார்சி நிலை.
*******
II/85) தன்னையறியாமல் தானாக இருக்க அது பிரம்மமாக இருக்க வேண்டும்.
- எந்த நிலையும் சொந்த நிலையானது பிரம்மம்.
- ஆதி, மூலம், சிருஷ்டிக்கப்படாதது, பிறப்பு இறப்பறியாதது பிரம்மம் எனப்படும்.
- மேல் நாட்டார் அதை Absolute என்பர்.
- ஆதியில்லாதது அனாதி.
- ரூபமற்றது அரூபி.
- அந்தமற்றது அனந்தம்.
- எதற்கும் பிறப்புண்டு, பிறந்தறியாதது பிரம்மம்.
- பிறந்தது இறப்பது சட்டம், பிரம்மம் பிறக்கவில்லை என்பதால், அதற்கு இறப்பில்லை.
- எவரும் பிரம்மத்தை சிருஷ்டிக்கவில்லை, அதனால் அது சுயமானது.
- அது எங்கும் நிறை பரம்பொருள்.
- அது எல்லாம் வல்லது.
- அது எதையும் அறிய வல்லது.
- பிரம்மம் ஜீவன், பிரம்மம் ஜீவியம், பிரம்மம் ஆனந்தம்.
- எதற்கும் அமைப்புண்டு, பிரம்மத்திற்கு அமைப்பில்லை.
அமைப்பற்றது சாந்தி. - சப்தமற்றது நிசப்தம், எண்ணமற்றது மௌனம்.
- எண்ணமற்றதும் மௌனம், அசைவற்றதும் மௌனம்.
- அசைவற்ற மௌனம், எண்ணமற்ற மௌனத்தைக் கடந்தது.
- எண்ணமும், அசைவுமற்ற மௌனம் பிரம்மத்திற்குரிய மௌனம்.
- பிரம்மம், சச்சிதானந்தப் பிரம்மத்தைக் கடந்தது.
- பிரம்மம் சிருஷ்டித்த பொழுது, முதலில் எழுந்தது சச்சிதானந்தம்.
- சிருஷ்டி என்பது பிரம்மம் அகம், புறமாகப் பிரிவது.
- மாயை சிருஷ்டியின் கருவி.
- அநித்தியமானவையின் அஸ்திவாரமான நித்தியம் பிரம்மம்.
- ஜீவியமுடையவற்றின் அடிப்படை ஜீவியம் பிரம்மம்.
- மனிதனின் மகத்துவம் பிரம்மம்.
- சகல ஜீவராசிகளின் மகிமை பிரம்மம்.
- பிரம்மம் ஒரு ஜீவன்.
- பிரம்மம் ஜீவியமான ஜீவன்.
- ஜீவன் சிவன், ஜீவியம் காளி.
- ஜீவனின் ஜீவியமான சக்தி ஹிருதய சமுத்திரம்.
- ஆதியும் அந்தமுமற்ற பிரம்மம் அனாதி, அனந்தம்.
- பிரம்மம் காலத்தையும், இடத்தையும் கடந்தது.
- ஜீவன் ஜீவியமாக உள்ள நிலை ஆனந்தம்.
- அனைத்தும் ஆனந்தத்தில் உற்பத்தியாகி, ஆனந்தத்தால் ஆதரிக்கப்பட்டு, ஆனந்தத்தில் முடிகிறது.
- சிருஷ்டியில் ஜடம் ஆனந்தமயமான ஜீவன்.
- பிரம்மம் பிரபஞ்சத்தில் ஆன்மீக சக்தியாகிறது.
- ஆன்மீக சக்தியை மனம் தன் புலனால் அறியும் பொழுது, அது ஜட சக்தியாகும்.
- இந்த சிருஷ்டியை பிரம்மம் அஞ்ஞானத்தாலானதாகச் செய்தது.
- சிருஷ்டிக்கு அஞ்ஞானம் தேவையில்லை.
- இந்த சிருஷ்டிக்கு அஞ்ஞானம் இன்றியமையாதது.
- பிரம்மம் பொருளாகும்.
- பிரம்மம் சக்தியாகும்.
- பிரம்மம் ஆனந்தமாகும்.
- அகமான பிரம்மம், புறமான சிருஷ்டியாவது அது தன்னை மனத்தின் பிரதிபலிப்பாகக் காண்பது.
- ஆனந்தமயமான பேரானந்தத்தை நாடி சிருஷ்டித்தது.
தொடரும்....
******
- Login to post comments