Skip to Content

05.எங்கள் குடும்பம் II

எங்கள் குடும்பம் II

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கணவர் - இப்பொழுது சொல்லலாமா? எனக்கு மழை பெய்யும் பொழுது தோன்றவில்லையே:

. கணவர் மழை பெய்ததால் சந்தோஷப்பட்ட பொழுது மனைவி எச்சரித்தாள். சந்தோஷம் அகந்தையை வளர்க்கும். நன்றி கூறுவது முறை என்றாள். தமக்கு நன்றி நினைவு வரவில்லை என்று கூறுகிறார்.

. அன்று மறந்த நன்றியை இன்று கூற அது சற்று ஆழமாக இருக்க வேண்டும். மழை தேவை. தேவை நம்முள் உள்ள ஆழத்தைவிடச் சற்று ஆழமாக நன்றியெழ வேண்டும்.

. மறந்தது கடந்தகாலம். நன்றி கூற நினைப்பது நிகழ்காலம். அதைச் சரி செய்ய இடைவெளியை மீறவேண்டும். மீற நன்றி ஆழத்திலிருந்து எழ வேண்டும். நிகழ்காலத்துள் கடந்தகாலம் உண்டு. அங்கிருந்து நன்றி கூறினால் அது கடந்தகாலத்திலிருந்து கூறியதற்கு ஒப்பாகும்.

. பள்ளியைவிட்டு 10 ஆண்டுகள் கழித்து படிப்பைத் தொடர விரும்பினால் அதிக முயற்சி வேண்டும். அல்லது இப்பத்து ஆண்டுகளில் அறிவு வளர்ந்திருக்கும். அவ்வறிவைப் பயன்படுத்திப் படித்தால் சாதாரண முயற்சி போதும்.

. நன்றி என்பது உடல் இறைவனைக் காண்பது.

. மனம் சொல்லையறியும், உணர்வை அறியாது.

. உயிர் உணர்வை அறியும், செயலை அறியாது.

. உடல் செயலை அறியும், அது முழு அறிவு.

. செயலை அறியும் உடல், செயலின் முழுமையை அறியாது.

. செயலின் முழுமையை உடலின் சைத்தியப்புருஷன் அறியும்.

. உடலின் சைத்தியப்புருஷன் சத்தியஜீவன்.

. சத்தியஜீவன் இறைவனை அறிவது நன்றியறிதல்.

. நமக்கு சத்தியஜீவனில்லை.

. சைத்தியப்புருஷனுமில்லை.

. நடப்பதை ஆழ்ந்துணர்வது நன்றி.

. ஆழ்ந்துணர்ந்தால் சைத்தியப்புருஷன் வெளிவருவான்.

. செயலுக்கு முடிவுண்டு.

. அதுவே அதன் ஆழம்.

. செயலின் முடிவும், நன்றியறிதலும், உடலின் சைத்தியப்புருஷனும், சத்தியஜீவனும் ஒன்றே.

. அவை ஒன்றே என்ற ஞானம் நன்றியுணரும் ஞானம்.

. இடைவிடாத நன்றி இறைவனின் வாழ்வு.

மனைவி - தோன்றுவதுடன் உடல் புல்லரிக்க வேண்டும்:

. கண்ணை மூடிக் கொண்டிருந்தால் பார்க்க முடியாது.

. திறந்துகொண்டிருந்தாலும் மனத்தில் பட்டதே கண்ணில் படும்.

. எதிரேயிருப்பதும் சமயத்தில் நம்கண்ணில் படுவதில்லை.

. ஒரு வினாடி நம் பார்வையில் சில விஷயங்கள் பட்டாலும், அவை நம் பார்வைக்குத் தப்புவதில்லை.

. மனம் தேடும் விஷயம் தவறாது கண்ணில் படும்.

. பார்ப்பது மனம்; கண் வாயில்.

. பார்ப்பது மனமன்று, ஜீவன், சைத்தியப்புருஷன்.

. அவன் உறங்குவதால் மனம் பொருள்களைக் காண்கிறது.

. ஜீவனில் சைத்தியப்புருஷன் விழித்துக்கொண்டால் எதிரேயுள்ளவர் மனத்திலிருப்பதும், அவர்கள் பின்னால் மறைந்திருப்பதும் அவனுக்குத் தெரியும்.

. நடப்பவை அனைத்தும் நாராயணன் செயல்.

. அனைத்தும் நாராயணன்.

. செயலே நாராயணன்.

. நாம் நாராயணனைக் காண்பதில்லை, செயலைக் காண்கிறோம்.

. நாராயணன் நகர்ந்து செயல்படுவதை சைத்தியப்புருஷன் காண வேண்டுமானால், அது உடலின் சைத்தியப்புருஷனாக இருக்க வேண்டும்.

. காதுக்கு ஒலி, உடலுக்கு உணர்ச்சி, நாக்குக்கு ருசி, கண்ணுக்குப் பார்வைபோல், உடலின் சைத்தியப்புருஷனுக்குரிய உணர்வு நன்றியறிதல்.சைத்தியப்புருஷனின் உணர்ச்சி நன்றியறிதல்.

. சைத்தியப்புருஷனில்லாதவர்க்கு எப்படி நன்றியறிதல் எழும்?

. வேலை வாங்கிக் கொடுத்தவர்க்கு நன்றி சொல்லியவரில்லை.மேலும் அவரிடம் சலுகைபெறும் வாய்ப்பிருந்தால் "நன்றி" கூறுவார்கள்.அது நன்றியாகாது, எதிர்பார்ப்பாகும்.

. உயிர் இப்பொழுதே போகுமா, 24 மணி நேரத்தில் போகுமா என்றிருந்தவர்க்கு எந்த டாக்டருக்கும் தோன்றாத மருந்து தோன்றி எழுதிக் கொடுத்தார். உயிர் பிழைத்தது. டாக்டருக்குச் சொல்லவில்லை. 4 மாதங்கள் கழித்து மீண்டும் அதே நிலை வரும் பொழுது, அதே டாக்டரிடம் செல்கிறார். டாக்டர் மீண்டும் காப்பாற்றுகிறார்.X-ray எடுக்கச் சொல்லுகிறார். X-rayஎடுத்துக் கொண்ட பின் டாக்டர் வீட்டுக்குப் போய்விட்டார் எனத் தெரிகிறது. முதலில் நன்றி சொல்ல மறந்ததால், இம்முறை X-rayயைப் பார்க்க டாக்டரில்லை. அக்காரணம் தெரிவதுமில்லை.

. நன்றி உடலைப் புல்லரிக்கச் செய்யும்.

. நன்றியுள்ளவர் நானிலத்தில் நாராயணனுக்குரியவர்.

. நன்றி பூரணயோகக் கருவி.

மனைவி - பவர் பிராஜெக்ட்டுக்கும் மழைக்கும் சட்டம் ஒன்றுதான்:

. சட்டம் அனைவருக்கும் பொது, அனைத்திற்கும் பொது என்பது புரிந்தாலும், மனம் அக்கருத்தை முழுவதும் ஏற்பதில்லை.

. சர்க்காரில் லீவு (casual leave) 12 நாட்கள் என்றால், கடைநிலை

ஊழியருக்கும், இலாக்கா தலைவருக்கும் ஒன்றே என்பது நாமறிவது.

. உடல் டெம்பரேச்சர் 98.4º F என்றால் சிறு குழந்தைக்கும், வயதானவர்க்கும் அது பொது.

. இராமவதாரத்தில் இராமன் யானை என நினைத்து ஏவிய அம்பு,குருடர்கள் மகனைக் கொன்றது. அக்கர்மம் கிருஷ்ணாவதாரத்தில் வேடன் எய்த அம்பினால் கிருஷ்ணன் காலில் காயம்பட்டு இறந்தான்.கர்மம் கடவுள்களையும் கட்டுப்படுத்தும்.

. காணாமற்போன பேனாவைத் தேடும் பிரார்த்தனையும், பவர் பிராஜெக்ட்டுக்கு உள்ள பிரார்த்தனையும் ஒன்றேஎன்பது ஓரளவு புரிந்தாலும் மனம் ஏற்க மறுக்கிறது.

. கவர்னருக்கும், வெறும் மனிதனுக்கும் எலக்ஷனில் ஓட்டு ஒன்று.

. 60 வாட் பல்பில் ஓடும் மின்சாரமும், 60 H.Pமோட்டாரில் வரும் மின்சாரமும் ஒன்றே.

. இவற்றிற்கெல்லாம் அடிப்படையாக அமையும் சட்டம் சர்வம் பிரம்மம்.கல்லில் உள்ள பிரம்மமும், கடவுளில் உள்ள பிரம்மமும் ஒன்றே.

. ரிஷிக்கும், சாதாரண மனிதனுக்கும் கோபம் பொல்லாதது. பெற்றதை அழிக்கவல்லது.

. தோற்றம் வேறு, உள்ளுறை விஷயம் வேறுஎன நம்மால் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

. வியாதி வந்தால் டாக்டரும், நோயாளியாகிறார். வியாதியைப் பொருத்தவரையில் டாக்டர், நோயாளி என்ற வித்தியாசமில்லை.

. துரும்பைக் கிள்ளிப்போட்டு மாப்பிள்ளை என்றால் துரும்பும் துள்ளும்.

. இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவார் என்பது சிறியவர், பெரியவர்,நல்லவர், கெட்டவர் ஆகிய அனைவருக்கும் ஒன்றே.

. அன்பு, வெறுப்பு, கோபம் என்பன மனிதனுக்குள்ளன. நாடு, படிப்பு,செல்வம் ஆகியவற்றால் அவை பாதிக்கப்படவில்லை.

. மார்க்கட் சரிகிறது, ஏறுகிறது என்றால் அவை எவர் கட்டுப்பாட்டிலும் இல்லை. ஷேர் கம்பனியுடையது என்றால் அதற்கும் சட்டம் அதுவே.அது சர்க்காருக்கும் கட்டுப்படாது. சட்டம் ஒன்றே.

. வெய்யிலின் கடுமை எல்லா மனிதரையும், எல்லாப் பொருள்களையும்,எல்லா விலங்குகளையும் சமமாகப் பாதிக்கும்.

. டாக்டருக்கு மருந்து கசக்காதா?

. முதன் மந்திரியானாலும், பிரதம மந்திரியானாலும் எலக்ஷனை எதிர்கொள்ள வேண்டும்.

. தாய், பிள்ளையானாலும் வாய், வயிறு வேறு.

. ஒருவர் வியாதிக்கு அடுத்தவர் மருந்து சாப்பிட முடியாது. தலைவருக்காகத் தொண்டர் மருந்து சாப்பிட முடியாது. சிஷ்யனுக்காக குரு மருந்து சாப்பிட இயலாது.

. மலை போன்ற ஸ்ரீ அரவிந்தர் சக்தியும் அன்னைக்கு 107º Fஜுரம் வந்த பொழுது வியாதி என்ன என்று தெரியாமல் செயல்பட முடியவில்லை.

அவரே (பிரெஞ்சுக்காரரே) தமக்கும் அன்னையைத் தெரியும் என்றார்.

"எங்களூர்க்காரராயிற்றே'' என்றார்:

. எந்தச் செயலிலும் பழைய தொடர்பு பெரும்பாலுமிருக்கும்.

. நாம் அவற்றைக் கவனிப்பதில்லை.

. கவனித்தால் புரிவதில்லை.

. புரிந்தால் ஆர்வமிருப்பதில்லை.

. புதிய தொடர்புகள் எழும்.

. எல்லா விஷயங்களும் எல்லா விஷயங்களுடன் தொடர்பு கொண்- டுள்ளன என்பது சட்டம்.

. Each is in all, all is in each ஒவ்வொன்றும் மற்றதிலும், மற்றவை நம்முள்ளும் உள்ளன என்பது உபநிஷதம்.

. நமது கடந்தகாலம் என்பது ஒன்று.

. நம் முன்னோர் கடந்தகாலம் என்பது அடுத்தது. பூர்வஜென்மத் தொடர்புண்டு.

. பெயர் தொடர்ந்து வரும்.

. இராசி தொடரும்.

. சுபாவம் தொடர்பைக் காட்டும். ஜாதி, ஊர், குடும்பம் தொடர்புகளைக் காட்டும்.

. வெளியூரில் வேலை செய்யப்போன இடம், எல்லாம் புதியது. அங்கு நம்மூர்க்காரரிருக்கிறார். அவர் முக்கியஸ்தர். அவருக்கு நம்மூரில் நம் குடும்பம் தெரியும் என்பது தொடர்பு.

. புதிய தொடர்பு, முற்றிலும் புதியது. நாளானபின் அவரது பால்ய நண்பன் நமக்கு ஏற்கனவே தெரிந்தவன். அவ்விருவரும் ஒரே குணமுள்ளவர்கள்.

. இன்று நமக்கு நெருக்கமானவர் இருவர் 50 ஆண்டுகட்கு முன் நாம் விரும்பியவர் பெயரைத் தாங்கியுள்ளவர். பெயரில் சிறு மாற்றமுண்டு என்பது தொடர்பைக் காட்டுகிறது.

. இன்று நான் அன்னையை உலகுக்கு அறிவிக்க முயல்கிறேன் எனில் 40 ஆண்டுகட்கு முன் என் வாழ்வில் நுழைந்தவர் இராமலிங்க சுவாமிகளின் புகழ் பரப்ப விரும்பியவர். அவர் எண்ணம் அன்று பூர்த்தியாகாதது இன்று என் மூலம் என் வாழ்வில் பூர்த்தியாகிறது.

. பிரெஞ்சுக்காரருக்கு அன்னையைத் தெரியும் எனில் இன்று நாம் அன்னை பக்தர் என்ற அளவில் தொடர்பு தெரிகிறது. என்ன தொடர்பு? ஏன் இத்தொடர்பு ஏற்பட்டது? என்பவை மேலும் ஆராய்ச்சிக்குரியவை.

.லியனார்டோவின் நோட்டில் எழுதிய அனைத்தும் ஸ்ரீ அரவிந்தர் பிறந்த பின் பூர்த்தியாயின.

. பிரெஞ்சுப் புரட்சிக்கும், இமயமலை தவசிக்கும் தொடர்புண்டு என நாம் கற்பனையும் செய்ய முடியாது. பகவான், "அப்படி எழுந்ததே சுதந்திரமான பிரெஞ்சுப் புரட்சி" என்கிறார். பிரான்சில் பிறந்த அன்னை பிரெஞ்சுப் பகுதியான பாண்டிச்சேரிக்கு வந்தது அதனாலா என்பது யோக ஆராய்ச்சிக்குரியது.

. உலகில் சக்தி செயல்படுகிறது. அது தன்னைப் பூர்த்தி செய்கிறது.அதற்கு நாம் கருவி என்ற கோணத்தில் புரியக் கூடியவை இவை.

. 1939இல் சர்ச்சிலுக்கு ஸ்ரீ அரவிந்தர் உலகப்போரை வெல்ல சக்தியை அனுப்பினார். சர்ச்சில் இந்தியச் சுதந்திரத்திற்கு எதிரி என்பதால் 1945இல் பகவான், சர்ச்சிலை பதவி நீக்கம் செய்தார்.1947இல் சர்ச்சில் இந்திய சுதந்திரத்தை ஆதரித்துப் பார்லிமெண்ட்டில் ஓட்டுப் போட்டார் என்பது அன்று இங்கிலாந்தில் அனைவருக்கும் ஆச்சரியம் தந்தது. திரைமறைவில் நடந்ததை நாம் அறிவதால் இந்தியச் சுதந்திரத்தில் இந்த ஓர் அம்சம் நமக்குப் புரிகிறது. இறக்கும்தருவாயில் பூர்வஜென்ம ஞானம், க்ஷணத்தில் ஏற்கனவே இருந்த தொடர்புகள், இனி ஏற்படப்போகும் தொடர்புகளை நமக்கு அறிவுறுத்துகிறது.

பார்ட்னருக்கு உள்ளே "ஜில்' என்றது:

. உள்ளே என்பது அடிமனம் (subliminal).

. "ஜில்" என்பது சைத்தியப்புருஷன் செயல்படுவது. அது காரியம் முடியும்,நல்ல காரியம் எனக் காட்டுகிறது.

. "சொரேர்"என்பது பிராணன், உயிர். ஆபத்து எழுவதைக் காட்டுவது.

. "பளிச்"என்பது அறிவுக்குப் புரிவது.

. "நன்றியறிதல்" புல்லரிக்கும். அது உடலில் சைத்தியப்புருஷன் வெளிப்பட்டு இறைவனை அறிவது.

. பயம் எச்சரிக்கை செய்வது.

. பிரியம் கவர்ச்சிக்குரியது.

. பசி, தாகம் உடல் உணர்வுகள்.

. விருப்பு வளர உதவும்.

. வெறுப்பு தற்காப்புக்குரியது.

. ஆசை செயலுக்கு உந்துவது.

. அன்பு ஆண்டவனிருப்பதைக் காட்டுவது.

. நிதானம் கூடிவருவதைக் குறிக்கும்.

. பொறுமை இறைவனின் இயல்பு.

. அவசரம் காரியம் கெடுப்பதைக் குறிக்கும்.

. எரிச்சல் இயலாமை.

. உஷார் தற்காப்புத் திறமை.

. குழப்பம் அறிவைக் கடந்த நிலையை அறிவிக்கும்.

. சிக்கனம் பணத்தை நம்புவதைக் காட்டும்.

. பராமுகம் நாம் அவரைவிட உயர்ந்ததைக் காட்டும்.

. நினைவு அறிவு செயல்படுவது.

. மறதி இனி அவ்விஷயம் நமக்குத் தேவையில்லை என்பது.

. போட்டி வளர முயல்வது.

. பொறாமை பிறரை அழித்து நம் அந்தஸ்தை நிலை நிறுத்துவது.

. தீவிரம் வளர முயல்வது.

. மரியாதை அந்தஸ்து.

. சொத்து வாங்கப் பிரியப்படுவது அந்தஸ்திற்கு அஸ்திவாரம்.

. நட்பு உணர்வால் வளர்வது.

. படிப்பு அறிவால் வளர்வது.

. செயல், உடலுக்கு உரமளிப்பது.

. விஸ்வாசம் பண்பால் உயர்வது.

. குடும்பப்பாசம், சுயநலம் பரநலமானது.

. பிறர்க்குதவி செய்ய முயல்வது வளரும் திறமை எழுவது.

. பிறர்க்குதவி செய்ய மறுப்பது, தாம் வளர்ந்து வளர்ச்சியைப் பாதுகாப்பது.

. அரசியல் கவர்ச்சி, தலைமைக்குரிய தன்மை.

. பணம் சம்பாதிப்பது, power பவர் மூலம் வளர முயல்வது.

கணவருக்கு அப்படியில்லை. மனைவிக்கும் அப்படியில்லை

("ஜில்'லென):

. ஜில்லென இருப்பது இறையுணர்வு.

. இறையுணர்வு நமக்கிருப்பதால் அடுத்தவர் நமக்கு உதவ முயல்வது இயல்பு.

. நமக்கு இறையுணர்வு - "ஜில்"என்ற உணர்வு - இல்லாதபொழுது இறையுணர்வு உள்ளவர் நமக்கு உதவுவது, சேவை செய்வது அருள்.

. மனிதனுக்கு விலங்கும், தாவரமும் உணவாகின்றன.

. மனிதன் அவற்றை வளர்க்கிறான்.

. அவை மனிதன் வளர உதவுகின்றன. அவை அவனுக்கு அத்தியாவசியம்.

. தாவரமும், விலங்கும் மனிதனுக்குக் கீழ்ப்பட்டவை.

. கீழ்ப்பட்டவையும், மேற்பட்டவையும் ஒன்றுக்கொன்று உதவுவது உயர்வு, தாழ்வு என்பது சமூகவாழ்வைக் கடந்ததில்லை என அறிவிக்- கிறது.

. உயர்வு, முக்கியம், நல்லது, கெட்டது, நியாயம், தர்மம் என்பவை சமூகத்தைச் சேர்ந்தவை. சமூகத்தைக் கடந்த நிலையில் அவற்றிற்கு அர்த்தமில்லை.

. விளையாட்டுப் பொம்மை சிறுவயதிற்குரியது. வளர்ந்தபின் அர்த்தமற்றது.

. வேலை செய்து சம்பாதிப்பது சொத்தில்லாத நிலைக்குரியது. சொத்து வந்தபின் வேலை தேவையில்லை.

. சிந்தனை அறிவுக்குரியது. அறிவு வந்தபின் சிந்தனை தேவையில்லை.

. மோட்சம் பகுதியான ஆத்மாவுக்குரியது. ஆத்மா தன் முழுமையை அறிந்தால் மோட்சம் தேவையில்லை.

. அடிமை சுதந்திரத்தைத் தேடுகிறான். விடுதலை பெற்றபின் சுதந்திரம் பொருட்டன்று.

. ஏழைக்கு வசதி தேவை. பணக்காரன் வசதியை நாடுவதில்லை.

. தாழ்த்தப்பட்டவனுக்குப் பணம், பதவி, அந்தஸ்து தேவை. தாழ்வு போனபின் மனம் அவற்றை நாடாது.

. Human love பிரியம், நட்பு, காதல் ஆகியவை பகுதியான மனிதனுக்கு உரியவை. முழுமையை எய்தியவனுக்கு அவை இயல்பாக உண்டு என்பதால் அவன் அவற்றை நாடமாட்டான்.

. நோயாளிக்கு மருந்து, சிகிச்சை தேவை. உடல் நலமானால் மனம் அவற்றை நாடாது.

. திறமையற்றவனுக்குச் சாதனை. திறமையுள்ளவனுக்குச் சாதனை தேவையில்லை.

. மனிதனுக்கு மரணம் பயம் தரும். அமரத்துவம் அடைந்தவனுக்கு மரணம் வாழ்வில் ஒரு கட்டம்.

. புரியாதவன் பேசுவான். தமக்குப் புரிந்தபின் பேச்சு எழாது.

. ஆழத்தில் புரியாதவரை எழுதவேண்டிய அவசியம் உண்டு. அடிமனம் புரிந்து கொண்ட பின் எழுத வேகமிருக்காது.

. உலகுக்குணர்த்த எழும் வேகம் நமக்குப் புரியாதவரை இருக்கும்.நமக்குப் புரிந்துவிட்டால் உலகுக்குணர்த்தத் தோன்றாது.

. நாம் முழுமை பெறாதவரை பிறர்க்குதவத் தோன்றும். முழுமை உள்ளவனுக்கு அது இருக்காது.

. அந்தஸ்து தேவைப்படுபவனுக்கு ஆடம்பரம் வேண்டும்.

. உணர்ச்சி வறண்டுபோனால் நீர்ப்பஞ்சம் ஏற்படுகிறது. உணர்ச்சி நிறைவாக இருந்தால் நீர்வளமிருக்கும். நீர்வளமில்லாவிட்டாலும் உணர்ச்சி நிறைந்தவனுக்கு அது பாதிக்காது.

. கட்டுப்பாடில்லாதவன் கேட்பான்.

கணவர் அதிர்ந்துபோனார்;

மனைவிக்கு அன்னை நினைவு கண்களை நிரப்பியது:

. அதிர்ச்சி என்பது ஆபத்தால் ஏற்படுவதைப் போல் அதிர்ஷ்டத்தாலும் ஏற்படும்.

. அதிர்ஷ்டம் வரும்பொழுது, தரித்திரம் தான் இறப்பதைக் காண்பதால் அதிர்ச்சியடைகிறது.

. ஒரு நிலை மாறி அடுத்தநிலை எழும்பொழுது அதிர்ச்சியடைகிறது.

. அதிர்ச்சி, நிலைக்கு வந்த ஆபத்து.

. அதிர்ச்சி உணர்வின் புரட்சி.

. உடல் - ஜடம் - மாறாத, நிலையான வாழ்வை நாடுகிறது.

. வாழ்வு ஜடத்தை மாற்றியபடியிருக்கிறது. அது செய்வது புரட்சி.

. அறிவு புதிய எண்ணத்தை எழுப்பும். வாழ்வு அதை ஏற்றால் புரட்சி மலர்ச்சியாகும்.

. அறிவுக்கு அடிப்படை உடல் என்பதால், புதியஅறிவை உடல் எதிர்த்தால் புரட்சி ஏற்படும். உடல் ஏற்றால் தான் மாற முனையும். புரட்சி விலகி மலர்ச்சி ஏற்படும்.

. அடிமை நாடு சுதந்திரம் பெற ஆயுதம் தாங்கும்.

. உலக வரலாற்றில் ஆன்மா செயல்பட்டு அடிமை நீங்கிய முதல் நிகழ்ச்சி இந்தியச் சுதந்திரமாகும்.

. இந்தியச் சுதந்திரம் உலகில் ஆன்மீகம் பெற்ற சுதந்திரம்.

. இந்தியா ஆசிய நாடுகளின் தலைமைக்குரியது என்பதால் இந்தியச் சுதந்திரம் ஆசிய விடுதலையைப் பெற்றது.

. சுதந்திரம் ஆன்மீகத்தால் வந்தாலும், அரசியல் தலைமை ஆன்மீகத்தை - சத்தியத்தை - எதிர்த்ததால் நாடு பிளவுபட்டு, உயிர்ச்சேதம் எழுந்தது.

. பகவான் ஸ்ரீ அரவிந்தர் இரண்டாம் போரைத் தவிர்க்க முயன்றார். அது முடியாது எனக் கண்டு போரை வெல்ல முயன்றார்.

. போர் ஆரம்பிக்கும் முன் அவர் தொடை எலும்பு முறிந்தது.

. தொடை எலும்பு கூடிய பின் கால்தாங்கல் சற்றிருந்தது.

. சுதந்திரம் வந்தபின் நாடு பிளவுபடும் என்பதை அது காட்டுகிறது.

. உலகம் அருளை ஏற்கவில்லை.

. அருளை ஏற்றிருந்தால் அருள் பேரருளாகியிருக்கும்.

. நாடு உலகப்போருக்கு முன் விடுதலையடைந்திருக்கும்.

. போர் தடுக்கப்பட்டிருக்கும்.

. வங்காளப்பஞ்சம், ஜாதிக்கலவரம் எழுந்திருக்காது.

. ஆனால் ஜப்பானிய ஏகாதிபத்தியம் எழுவது தடுக்கப்பட்டது.

. சோவியத் ஏகாதிபத்தியம் எழுவதும், மூன்றாம் போரும் பகவானால் தடுக்கப்பட்டன.

. மூன்றாம் போரைத் தடுக்க ஆரோவில் சின்னமாக அமைந்தது போல் இரண்டாம் போரைத் தடுக்க ஆசிரமம் சின்னமாக அமையவில்லை.ஹிட்லர் ஜெயிக்க சாதகர்கள் பிரார்த்தனை செய்தார்கள். இறைவன் வரும் தருணத்தை இவ்வுலகம் அறியவில்லை என்பது அதனால் நமக்கு அறிவிக்கப்பட்டது.

மறுப்பது சரியில்லை. ஏற்பதை நன்றியுடன் ஏற்கும் பக்குவமில்லை.

எண்ணம் ஓடுவதைத் தடை செய்ய முடியவில்லை:

. பிரெஞ்சுக்காரர் நம்பிக்கையாலும், நல்லெண்ணத்தாலும் கமிஷனில் ஒரு பகுதியை முன்கூட்டி கொடுக்க முன்வருகிறார். இது வாழ்க்கையில் கண்டறியாதது. இல்லையெனக் கூற முடியாது. அரிபொருளாகக் காணலாம். அன்பர்கள் வாழ்வில் இது சகஜம். ஏராளமாகக் காணலாம்.

. இதைப் பெற்றவர் "காணவில்லை"என்பதுதான் நாம் பெரும்பாலும் அறிந்தது.

. இந்தக் குடும்பத்தில் நடந்தவை எல்லா அன்பர்கட்கும் நடந்தவை.

. Verdict தீர்ப்பு என்ற கதையில் 3 கோடி நஷ்ட ஈடு கேட்டவருக்கு கோர்ட் மேலும் கொடுக்கப் பிரியப்பட்டது அதுபோன்ற நிகழ்ச்சி ஆகும்.

. "வேலை செய்துவிட்டு பணம் பெற்றுக் கொள்கிறேன்"என்று கூறுவது பெருந்தன்மை. ஆனால் மனித வாழ்விற்குரிய பெருந்தன்மை. வரும் கமிஷன் பணமானால் அப்படிக் கூறுவது உயர்ந்தது. வருவது அருள்,பணத்தின் ரூபமாக வருகிறது. அருளைப் பணமாகக் கருதுவது அருளை மறுப்பதாகும், குறைப்பதாகும். மறுப்பது சரியில்லை எனத் தெரிகிறது.

. ஏற்பதை நன்றியுடன் ஏற்கும் பக்குவமில்லை என்றால் என்ன செய்வது?வந்தது போய்விடுமே. நன்றியுடன் ஏற்க முடியவில்லை என்ற அறிவே ஆத்ம பலன் தரவல்லது. இந்த நிலைக்கு இதுவே போதும்.

. நன்றி அவசியம் என்பது அறிவு.

. இதுவரை அந்த அறிவு நமக்கு உதயமாகவில்லை.

. இப்பொழுது உதயமாகியிருப்பது அதிர்ஷ்டம்.

. நன்றி என்றால் என்ன என்று அன்னை எழுதியிருப்பதை அறிதல் நன்று.

. எல்லா விஷயங்களைப்போல நன்றிக்கு நான்கு நிலைகள் உள்ளன. மனம் அறியும் நன்றி, பிராணன் உணரும் நன்றி, உடல் புல்லரிக்கும் நன்றி.

- ஆத்மா இரண்டறக் கலந்து தன்னை மறப்பது ஆன்மீக நன்றி.

.பக்குவமில்லாத எண்ணம் ஓடும். அதைத் தடை செய்ய முடியாது.தடை செய்ய முடியாவிட்டாலும், ஓடும் எண்ணத்துடன் கலந்து கொள்ளாவிட்டால், எண்ணம் நம்மை பாதிக்காது.

. மௌனம் நல்லது. எண்ணம் மனத்திலிருப்பது நல்லதன்று.

. ஓடும் எண்ணம் நம்மை சிந்திக்க வைக்கும்.

. எண்ணம் ஓடும்பொழுது விலகி நின்று சிந்திக்காமலிருப்பது தவமுயற்சி.

. அது நாளடைவில் மௌனத்திற்கு வழி செய்யும்.

. முடியாதபொழுது முடியவில்லைஎனப் புரிவது அறிவு.

. முடியாதபொழுதும் எண்ணத்தோடு கலக்கக்கூடாதுஎன அறிவது நல்லது.

. முடியாத பொழுதும் முடியும் என்றதுபோல் பலன் பெறுவது முடியும்.

. செயல் முடியவில்லை என்றாலும் எண்ணம் தன்போக்கால் செயல் முடியும் என்ற நிலை போல் நடந்து கொள்ள முடியும்.

பேச்சு மாறியது. ஆனால் எல்லோர் எண்ணமும் நிறைந்தது.

"எலிசபெத் பெம்பர்லியைக் கண்டு பிரமித்ததுபோன்ற உணர்வு

எழுகிறது'எனத் தாயார் நினைத்ததைப் பார்ட்னர் கூறினார்:

. "இறைவன் வரும் தருணம் இது"என்ற கட்டுரையில் பகவான் மேல் லோக நிலையை எழுதியுள்ளார்.

. அரிபொருளாக எழும்தருணம் இதுஎன பகவான் கூறுகிறார்.

. அவர் பூவுலகைக் கூறவில்லை. மோட்ச லோகத்தைத் தன்னுள் கொண்ட மேலுலகைக் கூறுகிறார்.

. ஆயிரம்காலம் செய்தவேலை கூடிவரும் நேரம், "இறைவன் வரும் தருணம்".

. பல மாதங்கள் பயிரிட்டு மகசூல் வருகிறது. அது அறுவடைக் காலம்.

. ஒரு குடும்பம் 10, 20 ஆண்டுகளாக முயன்றது கூடிவரும் நேரம் திருமணம், மகன் வேலைக்குப் போவது.

. ஆயுள் முழுவதும் செய்த சேவையை நாடு ஏற்று ராஜாஜியை கவர்னர் ஜெனரலாக்கிய நேரம் அது போன்றது.

. 1910 வரை யோகம் செய்து சூட்சுமத்தில் பெற்ற சுதந்திரத்தைப் பெறும் நேரம் 1942இல் கிரிப்ஸ் மிஷனாக வந்தது. அது தவறு செய்யக் கூடிய நேரமில்லை.

. 30 ஆண்டு சர்வீஸ் முடிந்து ஓய்வு பெற்றபின் வைஸ்-சான்ஸலர் பதவி எல்லோருக்கும் தேடி வருவதில்லை. வந்தால் "நாளைக்கு வருகிறேன்"என்று கூறுவது தரித்திரம்.

. கமிஷனில் பகுதியை முன்கூட்டி அளிக்க முன்வரும் நேரம் தாயாருடைய தவம் 10, 12 ஆண்டுகளுக்குப்பின் பலித்த நேரம்.

எல்லோர் மனமும் நிறைந்தது.

. அன்னையை அறிந்தவுடன் இந்த நேரம் நம்மை நாடி வருவதைக் காணாதவரில்லை. கண்டவர் உணருவதில்லை. பலனை மட்டும் கண்டு பவித்திரமான சூழலைக் காணமறுப்பதே அனைவரும் செய்வது.

. எலிசபெத்திற்கு டார்சி வந்ததைவிடக் குறைவாக அன்பர்கள் பெற்றதில்லை. தன்னைத் திருமணம் செய்ய அவன் அவளைக் கேட்டதை அவள் மறுத்தபின் அவர்கள் வெவ்வேறு பாதையில் போயிருக்கலாம். அப்படிப் போயிருந்தால், எலிசபெத் தாம் பெற்றதை, பெற்று இழந்ததை, அறிந்திருக்கமாட்டாள். அன்பர் அன்னையிடம் அப்படியே பழகுகின்றனர். எலிசபெத் லேடி காதரின் வீட்டிற்குப் போயிருக்காவிட்டால், டார்சி தம்மீது விருப்பம் கொண்டதையே அறிந்திருக்கமாட்டாள். நம்மை, இந்த நேரம் அருள் அதிர்ஷ்டமாகச் சூழ்ந்திருப்பதை நெதர் பீல்ட் டான்ஸில் எலிசபெத் டார்சியின் விருப்பத்தை அறியாததுபோல் நாம் அறியவில்லை. நமக்குத் தெரியவில்லை என்றே நாம் அறியவில்லை. நமக்குத் தெரியவில்லை என்று தெரிவது கண் விழிப்பதாகும்.

ஏதாவது ஓர் எண்ணத்தையாவது முறையாகப் பூரணமாகச் சமர்ப்பணம் செய்ய வேண்டும் என்று மனைவி நினைத்தார். அது முகத்தில் ஒரு பொறியாகப் பொன்னொளியாகத் தோன்றியது. எவரும் கவனிக்கவில்லை. அது பார்ட்னர் புருவத்தில் தெரிந்ததை மனைவி கவனித்தார். நெஞ்சு நிறைவதுபோல் சூழல் பெருநிறைவு பெற்றது:

. ஓர் எண்ணத்தைப் பூரணமாகச் சமர்ப்பணம் செய்வது 1 நிமிஷம் காற்றில் பறப்பது போலாகும். சமர்ப்பணம் நம் உலகைச் சார்ந்ததில்லை.ஒரு நிமிஷம் மோட்சத்திற்குப் போகவேண்டும் என்பது போன்றது.

. அது பெரிய முயற்சி. முடிவான முயற்சி.

. சமர்ப்பணம் முயற்சியைப் பூரணமாகக் கைவிடும் முயற்சி.

. அந்த எண்ணம் மனதில் தோன்றியவுடன் தாயார் முகத்தில் அது ஒளிப் பொறியாகத் தெரிந்தது. அது சத்தியஜீவியம் ஒரு க்ஷணம் உள்ளே நுழைந்தது போலாகும்.

. எவரும் அதைக் கவனிக்கவில்லை என்றால் அது எவர் கண்ணுக்கும் தெரியாது. ஒருவருடைய நல்ல குணமோ, படிப்போ முகத்தில் அனைவருக்கும் தெரியாது. நல்ல குணம், படிப்புள்ளவருக்கு அது தெரியும். எவரிடம் அவ்வொளி இருக்கிறதோ அவருக்குத் தெரியும்.கருவியில்லாதவர்க்குக் கண்ணிருக்காது.

. பார்ட்னர் தம்பண்பால் அவ்வொளியைப் பெற்றார். அறிவுக்குரிய இடம் புருவமையம். அங்கு அவ்வொளி எழுந்தது. அது தாயாருக்குத் தெரிந்தது.

. தாயாருக்கு ஒளியிருப்பதால் பார்ட்னர் ஒளி அவருக்குத் தெரிகிறது.

. பார்ட்னருக்கு ஒளியிருந்தாலும் தாயாருடைய ஒளி தெரியும் அளவுக்கில்லை.

. புருவமையம் அறிவுக்குரியது.

. முகம், மனம், உணர்வு இரண்டையும் சேர்த்தது.

. தாயார் முகத்தில் தெரிவது அவர் மனமும், உணர்வும் மலர்ந்ததைக் காட்டுகிறது.

. சூழல் கனத்தது, நிறைவு பெற்றது. அனைவரும் அதை உணருகின்றனர்.

. சூழல் பொது.

. ஒளி அறிவுக்கு மட்டும் வெளிப்படுவது.

. மௌனம் மனத்திற்கு மட்டும் உரியது - அறிவு மனத்தின் பகுதி.

. சந்தோஷம் உணர்வுக்குரியது.

. அமைதி ஜீவனுக்குரியது.

. நன்றி உடலுக்குரியது.

. காரியம் கூடிவருவது அனைத்தும் இணைந்த ஜீவனுக்குரியது.

சற்று நேரம் கழித்து சூழல் மாறி அனைவரும் பேச ஆரம்பித்தனர்:

. பரவசப்பட்டால் பேச முடியாது.

. பரவசம் என்றால் தன்நிலை இழந்து பிறருடன் இணைவது. இணைந்த பின் நம் எண்ணமும் அவர் எண்ணமும் கலந்து விடுவதால், பேச எதுவுமில்லை.

. இங்கு பரவசம் என்பது இறைவனுடன் - அன்னையுடன் - இரண்டறக் கலப்பது. இறைவனுள் அனைவரும் இருப்பதால் அனைவருடைய எண்ணத்துடன் நம் எண்ணம் கலந்துவிடுகிறது.

. இறைவன் என்பவன் inner Divine உள்ளுறை இறைவன்.

. பரமாத்மா என்பது வெளியேயுள்ளது. அது உள்ளேயும் உள்ளது.

. உள்ளே, வெளியே எனக் காண்பது மனம்.

. உள்ளும், புறமும் ஒன்றாகக் காண்பது சத்தியஜீவியம்.

. சூழல் மாறி அனைவரும் பேச ஆரம்பித்தனர். சூழல் உள்ளபொழுது சூழலின் மௌனம் நம்மை ஆட்கொள்ளும், பேச இயலாது.

. புதிய சூழல் சற்று நேரத்தில் மாறும்.

. சூழல் மாறாவிட்டால், தாயார் நிரந்தரமாகப் பேச்சை இழப்பார்.

. பேச ஆரம்பித்தால் சூழல் விலகும்.

. பேச நினைத்தால் சூழல் கலையும்.

. பரவசப்பட்டவருக்குச் சூழல் வந்ததும், பேச்சிழந்ததும், அமைதி கலைந்து பேச ஆரம்பித்ததும் அப்பொழுது தெரியாது.

. பிறகும் அந்நினைவுள்ளவரை தெரியாது.

. நினைவகன்றபின், நினைவின்நிழலும் அகன்றபின் நடந்தது நினைவுக்கு வரும்.

. நினைவு insincerity உண்மையன்று என்கிறார் அன்னை.

. நினைவு கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் இணைப்பது.

. கடந்தகாலம், நிகழ்காலத்தைப் பிரித்தது மனம்.

. பிரிந்தவற்றைச் சேர்ப்பது நினைவு.

. நினைவுள்ளவரை காலம் இரண்டாகப் பிரிந்துள்ளது.

. நினைவழிந்தால் நாம் காலத்தைக் கடந்தவராவோம்.

. அழிந்த நினைவு மீண்டும் வரும் பொழுது நினைவுக்கு சக்தி அதிகம்.

. அந்நினைவு, நினைத்தால் நடக்கும்.

. அந்த சக்தியைக் கோபம் பயன்படுத்தினால் சாபம் எழும்.

. இவற்றைக் காண ஆன்மீகத் தெளிவு தேவை.

. சத்தியஜீவியம், ஆன்மாவைக் கடந்தது.

. காலத்தைக் கடந்த ஆன்மா, காலத்துள் கொண்டு வருவது சத்திய ஜீவியம்.

"நாம் எண்ணத்தை விஷயத்திலிருந்து பிரித்துவிடுகிறோம்''. அதுவே

நாம் முதலில் செய்வது:

. கணவன் மனைவியை மனைவியாக மட்டும் காண்கிறான். "நானும் ஒரு மனுஷியில்லையா. எனக்குத் தேவைகள், உணர்ச்சிகள், உரிமைகள் என இருக்குமல்லவா"என மனைவி கேட்பது கணவன் மனத்தைத் தொடாது. மனுஷி என்ற முழுமையில் ஒரு பகுதியான மனைவியை மட்டும் கணவன் பார்ப்பதால் எழும் பிரச்சினைகள் ஏராளம்.

. Generation - gap தலைமுறை மாறுவதால் ஏற்படும் பிரச்சினை என்பதென்ன? தகப்பனார் அவர் கல்லூரி நாட்களில் கற்றவற்றை நல்லது என 50ஆம் வயதில் பின்பற்றுகிறார். மகன் தன் கல்லூரி நாட்களில் கற்றவற்றைப் பின்பற்றுவான் என அவர்கள் நினைக்க முடிவதில்லை. மகன் முழு மனிதன். அவன் கற்பவை, சொந்தமாகக் கற்பவை. அப்படியே தாமும் கற்றோம் என்று தகப்பனாருக்குத் தோன்றுவதில்லை. மகன் என்ற பகுதியை மட்டும் அவரால் காண முடிகிறது. மகனால் தகப்பனாரின் முழுமையைக் காணமுடிவதில்லை.

. இரு தலைமுறைகளும் சேர்ந்ததே முழுமை.

. ஒவ்வொருவரும் ஒரு பகுதியைப் பார்க்கின்றனர்.

. பகுதிகள் முரண்பாடாகின்றன.

. இதைப் பகுதி எனலாம், சுயநலம் எனலாம்.

. மனம் பகுக்க ஏற்பட்ட கருவி.

. கணிதம் படிக்கும் மாணவன் வரலாறு படிப்பதில்லை. கணிதத்தை ஞானத்தின் பகுதியாகப் படிப்பதில்லை. கணிதமே முடிவு, முழுமை எனப் படிக்கிறான். வரலாறு படிப்பவன் வரலாற்றை ஞானத்தின் பகுதியாகக் கருதவில்லை. வரலாறே படிப்பு, முழுமை என நினைப்பதால் படிப்பு முழுமை பெறுவதில்லை. உலகில் முழுமையான ஞானம் என இது வரை ஏற்படவில்லை. அவரவர் தத்தம் பகுதியை முழுமையாக உணர்வது, மனம் ஞானத்தைப் பகுதிகளாகப் பிரிப்பதால்.

. குடும்பத்திலும் முழுமையை அறிய எவரும் முயல்வதில்லை.தகப்பனுக்கு சம்பாத்தியம், தாயாருக்கு வீட்டு நிர்வாகம், பிள்ளைக்கு அவரவர் வாழ்வு எனப் பிரிந்து போகிறது. எல்லாம் சேர்ந்த முழுமையே குடும்பம் என்றத் தெளிவில்லை. அத் தெளிவைப் பெற நாம் முனைவதில்லை. இன்று அப்படியொரு குடும்பம் உற்பத்தியாகவில்லை.

அப்படி உற்பத்தி செய்தால் அதற்கு யார் மையம்?

. அக்குடும்பத்தில் அனைவரும் மையம் என்றால் புரியாது. அனைவரும் மையமான குடும்பத்தை உற்பத்தி செய்வது சத்திய ஜீவியத்தை வாழ்வில் கொண்டு வருவதாகும்.

. அனைவரும் மையமான ஸ்தாபனம் எப்படியிருக்கும் என மனத்தால் கற்பனை செய்ய முடியாது. அதன் அம்சங்கள் இன்று ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

. மனத்தின் முதற் கடமை ஸ்தாபனத்திலிருந்து மனிதர்களைப் பிரிப்பது, மனிதர்களிடமிருந்து வேலைகளைப் - கடமை - பிரிப்பது என பிரிவினை மனத்தின் கடமை என்ற கருத்தை The Life Divineஇல் மேற்சொன்ன கருத்துமூலம் பகவான் எழுதியுள்ளார்.

"அவனே ஆட்டம், அவனே ஆட்டக்காரன், அவனே அரங்கம்' என்று ஓர் இடத்தில் வருகிறது:

. Himself the play, He is the player, He is the playground என்பது ஸ்ரீ அரவிந்தம். இதுவரை மனம் - ரிஷிகள் மனம் - இவற்றைத் தனி த்தனியாகப் பிரித்துப் பார்த்தது. இனி இவற்றை ஒன்றாகப் பார்க்க வேண்டும். அது சத்தியஜீவியம்.

. Overmind தெய்வீக லோகம் பிரிக்கிறது. பிரிவினை - துச்சேன - infinitesimal அணுவரை போகும். பிரிவினை முடிந்த பின் பரிணாமத்தால் அவை சேர்கின்றன. பரிணாமமில்லாமல் அவை சேரும் பொழுது aggregrated atoms that become the molecule அணு உற்பத்தியாகிறது. அணுக்கள் சேர்ந்தவை அகந்தையாகின்றன. அணுவைப் பிரித்தால் அணுவற்ற ஜீவியமாகி சத்தியஜீவிய நிலையை அடைகின்றன unatomic extension of substance that is Supermind.

. வீடு, நிர்வாகம், சமையல், குழந்தை வளர்ப்பு, பொறுப்பு, சம்பாத்தியம்,கடை சாமான் வாங்குவது, பாதுகாப்பு protection, security, defence, offence ஆணுக்கும் பெண்ணுக்கும் பிரிந்து, பெண் மென்மையாகவும், ஆண் கம்பீரமான வலிமையுடனும் வாழ்கிறான். சிருஷ்டிக்கு அங்கு மாறுபாடில்லை.

. எனக்குக் கணக்கு வழக்கு வாராது. அது எனக்கு வேண்டாம்.

. சமையலுக்கும் எனக்கும் ஒத்து வாராது. நான் சமைப்பதை நானே சாப்பிட முடியாது.

. குழந்தையை என்னிடம் விடு. நான் அழாமல் பார்த்துக் கொள்கிறேன்.

. உன்னால் பணத்தைப் பாதுகாக்க முடியாது.

. ஆண்பிள்ளையல்லவா?

. அப்பா சொல்லிக்கொடுத்தால்தானே பாடம் வரும்.

. இந்த இரசீதுகளெல்லாம் முக்கியம். நானே வைத்துக்கொள்கிறேன்.

. இரசீதை file செய்து வைக்கலாம். இருப்பது 20 பேப்பர்தானே.

அப்படியே இருந்தால் போதும். தொலைக்காமல் வைத்துக் கொள்வது அவசியம்.

. எங்கிருந்தாலும் பார்வை குழந்தைமேல் இருக்கவேண்டும்.

. அடுத்த வீட்டில் fanஐ நிறுத்தமாட்டார்கள்.

. வயது என ஒன்றுண்டல்லவா?

. அனுபவம் வேண்டாமா?

. பரம்பரையிருக்கிறதல்லவா!

. ஜாதி புத்தி எங்கே போயிற்று?

. தண்ணீர் சாப்பிடாவிட்டால் வயிறு கல்லாக இருக்கும்.

. Emotional people are constipated. உணர்ச்சிமயமானவர்க்கு மலச்சிக்கலுண்டு.

. கட்டை விரல் வளையும்.

. தகப்பனார் farm writer ஆனால் மகன் executive engineerஆக ரிடையராவான்; CE ஆகமாட்டான்.

. தகப்பனார் ரோடு மேஸ்திரியானால் மகன் வைஸ்-சான்ஸ்லராக மாட்டான். பேராசிரியராகவே ஓய்வு பெறுவான்.

. VRS வேண்டாம் என்றாலும், குறுகிய மனம் அதிலிருந்து தப்ப முடியாது.

. இன்று சாராயம் பலன்தருகிறது எனில் அன்று பலன் தந்தது பிறரை

ருசிப்படுத்தியது.

. ஒரு தலைமுறையில் லஞ்சம் வாங்கினால், அடுத்த முறையில் அது நாட்டுத் தலைவனாக வரத் தடையாகும்.

. மணியக்காரர் மகன் ஜனாதிபதியாக வர அறிவு தடை.

. ஸ்ரீ அரவிந்தர் சக்தி உலகப்போரை வென்றாலும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் தன் பெருமையை இழப்பதைத் தடுக்க முடியாது.

. க்ஷத்திரியனே அரசன் என்றாலும் சேர, சோழ, பாண்டியர் வெள்ளாழர்கள்.

. 800 ஆண்டுகட்குமுன் ஹரிஜனங்கள் முஸ்லீமானார்கள். விரும்பித் தழுவினார்கள். இன்று நாடு பிரிய அவர்கள் காரணமானார்கள்.

. கர்ம காண்டம், ஞான காண்டம் சாஸ்திரி, ரிஷியாகப் பிரித்தது இன்று வரை நீடிக்கிறது.

எண்ணமே செயல், செயலே ஆனந்தம், ஆனந்தமே எண்ணம்:

. ஒளியும் வெப்பமும் பிரிக்க முடியாதவை. எட்ட இருந்தால் ஒளி தெரிகிறது. வெப்பத்தை உணர்வதில்லை.

. விளையாடுபவனுக்கு விளையாட்டு, ஸ்கோர், பிரபலம் அனைத்தும் ஒன்றே. பிரித்துப் பார்க்கலாம். இணைத்தும் பார்க்கலாம்.

. கொடுப்பதும், பெறுவதும் ஒன்றே. கொடுக்காமல் பெற முடியாது. நாம் கொடுக்காமல் பெறும்வழியை நாடுகிறோம்.

. ஆசிரியர் கொடுத்துப் பெறுவது அவசியம்.

. வியாபாரி பெறுவதற்காகக் கொடுக்கிறான்.

. நண்பர்கள் கொடுப்பதற்காகக் கொடுக்கிறார்கள். அதனால் பெறுகி- றார்கள்.

. கொடுக்காமல் பெறவிரும்பும் நட்பு, இளமை மாறியபின், சந்தர்ப்பம் மாறிய பின் மாறிவிடும்.

. பயிருக்கு உரம் கொடுத்தால் மகசூல் அதிகமாகும்.

. பெறுவது குறைவானால் மரம் காய்ச்சல் உரமாக வளரும்.

. கொடுப்பது பெறுவதைப் பொருத்தது. பலாப்பழம் 40" மழையில் சுவையுடையதாக இருக்கும். 100" மழையில் சக்கைப் பழமாகும்.

. சமையல் திறமை, கடமை, இனிமை, பிரியம், பொறுப்பு கலந்துள்ளது. சேர்த்துப் பார்க்கலாம். பிரித்தும் பார்க்கலாம்.

. கர்ம காண்டமும், ஞான காண்டமும் பிரியாது. பிரித்தால், கூடாது.ஜீவனற்றுப் போகும்.

ஜீவனற்ற வேத பாராயணமும் போகும் உயிரைத் தடுக்கும்.

. எண்ணம் செயலாகும்பொழுது திறமை உயர்ந்து வேலையில் சிறப்பு எழுகிறது.

. செயலே ஆனந்தமாகும் பொழுது தன்னை மறந்த சிருஷ்டி வருகிறது.

. ஆனந்தமே எண்ணமாகும்பொழுது மேதைமை பிறக்கிறது. புது சாஸ்திரம் பிறக்கிறது.

. எண்ணமும், செயலும், ஆனந்தமும் இணையும் பொழுது பிறப்பது சத்தியஜீவியம்.

. Let Thy will be done, not my will என்பதைச் சொல்லும் நிலைகள் பல.

. அடுத்த நிலையில் not my willதேவைப்படாது. Thy will மட்டும் நிற்கும்.

. மூன்றாம் நிலையில் Will இருக்காது. Existence மட்டும் இருக்கும். I am eternally yours என்ற நிலை ஏற்படும்.

. முதல் நிலை நிலைக்கும்பொழுது, எண்ணம் கட்டுப்படுவது தெரியும்.

பிறகு நம் உலகம் கட்டுப்படும்.

முடிவாக உலகம் கட்டுப்படும்.

அந்த நிலையில் மந்தாரமலை நகரும்.

அந்த முடிவு அடுத்த நிலைக்கு ஆரம்பம்.

Substance, consciousness என்ற நிலைகள் மனம், உணர்வு,

உடல் வழியாக வளர்ந்து மாறுவது தெரியும்.

1 முதல் 9 நிலைகளை அதனுள் காணலாம். 9 நிலை 18ஆக (substance, consciousness) பிரிந்து, மாறும்.

நிலை மாறினால் பலம் வளரும்.

வளரும் பலம் பலனானால் திறன் உயரும்.

முடிவான நிலையில் (1039 page ) ஜடம் நகரும்; ஆன்மா ஜடத்தை நகர்த்தும்.

தியோன் மனைவியின் காலில் செருப்புவந்து தானே மாட்டிக் கொள்ளும். அதுவும் vital powerஆக இருக்கலாம்; spiritual powerஆக இருக்கலாம்.

சொந்தமாக discrimination இல்லாமல் புரிவது இயலாது.

சேர்வது முழுமை. பிரிவது மனத்தின் ஆட்சி.

பார்ட்னர் - மூன்றும் ஒன்றாக இருப்பது சைத்தியப்புருஷன், ஸ்ரீ அரவிந்தம்;

மனைவி - அது முழுமை. ஒரு தரமாவது அனுபவிக்க வேண்டும்:

. "நான் அறியாமற் கேட்டதை விட அன்னை அதிகமாகக் கொடுத்தார்" என்பது "ஒளிப்பிழம்பான அன்னைக்குக் கீதாஞ்சலி" என்ற கட்டுரையில் வரும் சொல்.

. முதல் முறை பட்டிக்காட்டை விட்டு நகரத்திற்குப் போனவன் நகரத்தின் ஆச்சரியமான சிறப்புகளில் ஏதாவது ஒன்றை அனுபவிக்காமல் இருக்க மாட்டான். அத்தனையும் அனுபவிப்பவரும் உண்டு.

. அதன்பின் நகரத்திற்கே வந்துதங்க அவனுக்கு அனுமதியுண்டு, அழைப்புண்டு.

. பட்டிக்காட்டுக்குத் திரும்பும் பழக்கம் பெரியது.

. அன்னையை அறிந்த முதலில் - புதிதில் - அன்னையின் ஸ்பர்சம் படாதவரில்லை.

. அதை அனுபவித்தபின், அவனே தம்மிடம் விரும்பி வரும் வரை அன்னை காத்திருக்கிறார்.

. முதற் ஸ்பர்சம் முழுமையை உணர்த்தும்.

. அது முழுமையின் முழுமையல்ல; முதல் அனுபவம்.

. சைத்தியப்புருஷனிருப்பது அடிமனம்.

. அடி மனம் சேர உள்மனத்தைக் கடக்க வேண்டும்.

. உள்மனம் போக காலத்தைக் கடக்க வேண்டும்.

. அகந்தையை அழிக்காமல் உள் மனம் போகலாம்.

. அகந்தை அழியாமல் அடிமனம் போக முடியாது.

. மேல்மனப்பிடிப்பு அதிகம். பூரணமானது.

. மீன் தண்ணீரை விட்டுத் தானே வருமா?

மீன் தண்ணீரிலிருப்பதைப் போல் நாம் மேல் மனத்தில் இருக்கிறோம்.

. நினைவு அழிவது உள்மனத்தில்.

. அழிந்த நினைவு மீண்டும் அடிமனத்தில் எழும்.

. அது மேதைக்குரிய மனம்.

. உள்மனம் மனத்தின் காலத்தைக் கடந்த நிலையைத் தொட்டு நிற்பது.

. உள்மனத்தில் சிறியது பெரியதாகலாம். ஆகவேண்டிய அவசியம் இல்லை. நாம் பிரியப்படும் பொழுது பெரியதாகும்.

. சிறியது பெரியதாகாமல் அடிமனத்துள் நுழைய முடியாது.

. காலத்தைக் கடந்த நிலையில் அடிமனம் எட்டாது.

. காலத்துள் காலத்தைக் கடந்த நிலைக்குரிய மனம் அடிமனம்.

. அங்கு சிறியது பிரபஞ்சத்தின் அளவுக்குப் பெரியதாகும்.

. இத்தனையும் மனிதனுடைய இஷ்டத்திற்குட்பட்டது.

. மனிதன் விரும்புவது மனிதன் பெறுவது.

. விரும்புவது நம் நிலை. பெறுவது அருள்.

. சைத்தியப்புருஷன் அடிமனத்திற்குரியது. அடிமனத்திற்கு மட்டும்

உரியது. மேல்மனத்தில் அது இல்லை. உள்மனத்திலும் அது இல்லை.

மனைவி - சமர்ப்பணம் முழுமையாகும் பொழுதுள்ள உணர்வு அது:

. நினைவிழந்து, நிலையிழந்து, உள்ளம் பூரித்து, உடல் கரைந்து,உள்ளிருந்து எழும் ஆத்மா, வெளியிலுள்ள ஆத்மாவுடன் நம்மை அறியாமல் கலக்கும் நிலை சமர்ப்பணம் முழுமையாகும் நேரம். அந்த நேரம் உணர்வுக்குரிய மனம் உள்ளதை அறிந்த நேரம்; உணர்வை இழந்த நேரம். சமர்ப்பணம் முழுமையாகும் நிலைக்கு உணர்வில்லை.நம்பழக்கப்படி உணர்வுஎன்கிறோம். அது சச்சிதானந்தம் பெறும் உணர்வு - ஆனந்தமெனப்படும்.

. பெரியது தன்னைச் சிறியதாக உணர்வது சரணாகதி.

. சிறியது பெரியதாகும் பாதை சரணாகதி.

. சரணாகதி மனிதனை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும்.

. மனம் வளர்ந்த நிலையில் சரணாகதி சத்தியஜீவியத்திற்குக் கொண்டு போகும்.

. உடல் நிலையிலுள்ளவன் சரணாகதியால் உணர்வு நிலையை அடைவான். அவனது சரணாகதி பூரணமானால் சத்திய ஜீவியத்தை அடைவான்.

. முயற்சி முடிந்த நிலை சரணாகதி.

. முயற்சி பலனற்றது என்ற ஞானம் சரணாகதி.

. முயற்சி நம்முடையதன்று, இறைவனுடையது என்ற உணர்வு சரணாகதி.

. நம்மை மீறி இறைவன் நம்முள் செயல்படுவது நம் சரணாகதி.

. எந்த ஞானம், காரியம், ஆனந்தம் முழுமை பெறும் பொழுதும் சரணாகதியின் அம்சம் அங்கிருக்கும். அது அந்த அந்த மனிதனுடைய சுபாவத்தையும், சூழ்நிலையையும் பொருத்தது.

. இந்தியச் சுதந்திரத் தினத்தன்று காந்திஜி டெல்லியில்லை, பீகாரில் இருந்தார்.

. உலகப்போரை வென்ற சர்ச்சில் போர் முடியும் பொழுது பதவியை இழந்தார்.

. சத்தியஜீவிய சக்தி உலகுக்கு வந்தபொழுது பகவான் ஸ்ரீ அரவிந்தர் உயிருடனில்லை.

. இந்திய விவசாயியின் வாழ்வுக்கு ஜீவனூட்டிய இயக்கத்தை ஆரம்பித்து, வெற்றிகரமான சின்னத்தைச் செய்தவர், விழாக் கொண்டாடும் பொழுதில்லை.

. பசுமைப் புரட்சியின் வெற்றியின்பொழுது C. சுப்ரமணியம் உணவு இலாக்காவை விட்டுப் போய்விட்டார்.

. அன்னை நமக்கு எக்காரியத்தை முடித்துக் கொடுக்கும் பொழுதும் நாம் அவரை மறந்துவிடுகிறோம்.

. சமர்ப்பணம் என்பது எண்ணம், உணர்ச்சி, செயலைக் கடந்த நிலை.

. சொல்லுக்கு அப்பாற்பட்ட நிலை.

. Surrender is the POISE of the evolving soul in Man.

வளரும் ஆன்மாவின் பிரம்ம வண்ணம் சரணாகதி.

. உள்ளே சென்று மனத்தின் உயர்ந்த நிலைகளைக் (Spiritual Mind levels) காணலாம். சத்தியஜீவியத்தைக் காணலாம். பிரம்மத்தைக் காணலாம். பிரம்ம ஜனனத்தைக் காணும் நிலை சரணாகதி.

கணவர் - அப்படியென்றால் சமர்ப்பணத்திற்கும் எனக்கும் காத தூரம்:

. கணவர் உள்ள நிலையில் சமர்ப்பணம் காததூரம் என்பது உண்மை.காததூரத்தில் உள்ளது கைக்கெட்டும் நிலைக்கு வரும் என்பதும் உண்மை.

. 150 கோடி ரூபாய் கமிஷனுக்கும் கணவருக்கும் காததூரம் என்றால் அது உண்மை. அது கதவருகே வந்து விட்டது என்பதும் உண்மை.

. கமிஷன் கணவருக்குவர பார்ட்னரும், தாயாரும் பங்கேற்றனர்.அவர்கள் இவருக்குச் செய்ததை கணவரே தமக்குச் செய்து கொண்டால் சமர்ப்பணம் பலிக்கும்.

. அல்பம், சொல்பம் என்பது மனிதச் சுபாவம். பெருந்தன்மையும், பரந்த மனப்பான்மையும் மனிதனுக்குண்டு.

. எதை மனிதன் தேர்ந்தெடுக்கிறான் என்பது எதை அவன் அடைகிறான் என்பதை நிர்ணயிக்கும்.

. பெரியதைத் தேர்ந்தெடுத்தபின் சிறியது நிச்சயமாக அதனுள் தலை காட்டும்.

. பரந்த மனப்பான்மையால் செய்யும் காரியங்களில் அல்பத்தனம்

சிறிது வெளிப்பட்டாலும், பலன் அல்பத்திற்கே வரும். பரந்த மனப்பான்மைக்கு வாராது.

. கணவர் அந்த நிலையில்லை.

. தாம் முழுவதும் அல்பமாக இருக்கும்பொழுது மனைவியின் பரந்த மனப்பான்மை தமக்குப் பலன்தர வேண்டும் என்பது கணவர் மனநிலை.

. கணவருக்கு உயர்ந்ததை ஏற்க மனமேயில்லை என்பது மட்டுமன்று,

. மனைவி தமக்கு அடங்கியிருப்பதால் அவளைக் கட்டாயப்படுத்தி தாம் பலன் பெற வேண்டும் என்பது அவர் போக்கு.

அதுவே மனிதனுடைய போக்கு.

மனைவிக்கு அதிகாரமில்லை.

அதனால் அவளைக் கட்டாயப்படுத்தலாம்.

மனைவியால் மற்றவர்களை அசைக்க முடியாது.

கணவர் அன்பராக இருந்து மனைவி நம்பிக்கையற்றவரானால்

கணவன் மனைவியிடம் பலன் தருமாறு கட்டாயப்படுத்த முடியுமா?

இப்பலன் கட்டாயத்தால் வருவதன்று.

. காததூரம் என்றசொல் "நான் என் போக்கை மாற்றிக்கொள்ள மாட்டேன்"என்று ஒலிக்கிறது.

. யோகத்திலோ, தத்துவத்திலோ, நடைமுறையிலோ "காததூரம்" இல்லை.

. "காததூரம்" மனத்தில் உள்ளது.

. மனமே மனிதமையம்.

. மனம் விரும்பினால் எதுவும் நடக்கும்.

மனைவி - பக்தி, நம்பிக்கையிருந்தால் ஒரு செயலில் காணலாம்.

அதைக் காணும் நேரம் நமக்கு இறைவன் வரும் தருணம். அது இறைவன் வரும் தருணமில்லை. நம் வாழ்வின் எல்லைக்குட்பட்ட தருணமிது:

. பச்சைக்கண்ணாடி போட்டுக்கொண்டு உலகைக் கண்டால் உலகம் பச்சையாக இருக்கிறது என்பது எளிய உதாரணம். தமிழ்நாட்டுப் பழமொழி மஞ்சள்காமாலை கண்ணுக்கு உலகம் மஞ்சள் என்பது பழைய சொல். அது பிரம்மத்திற்கு முழுவதும் பொருந்தும்.

. உலகம் பிரம்மம், நாமும் பிரம்மம், சர்வம் பிரம்மம்.

. காட்டிலிருப்பவனுக்கு நெஞ்சுக்குள் உள்ள பிரம்மம் தெரியவில்லை.உடல் தெரிகிறது. உடல் ஜடம். உயிர் பெற்ற ஜடம். அவன் பிரம்மத்தை மோகினியாகக் காண்கிறான்.

எந்தக் கருவி மூலம் காண்கிறோமோ அதற்குரிய காட்சி தெரிகிறது.

. கிராமத்திலுள்ளவன் உயிரில் வாழ்பவன். அவனுக்கு பிரம்மம் உண்டு. அவன் தன்னுள் உள்ள பிரம்மத்தை உயிர், பிராணன் என நினைக்கிறான். அவனுக்கு நெருப்பு மிதிக்கும் திரௌபதி அம்மனாக பிரம்மம் தெரிகிறது.

. ரிஷி மனத்தால் பிரம்மத்தைக் கண்டார். ரிஷிக்கு பிரம்மம் சச்சிதானந்தமாகக் காட்சியளிக்கிறது.

. ஸ்ரீ அரவிந்தர் பிரம்மத்தை சத்தியஜீவியத்தால் கண்டதால் அவருக்குப் பிரம்மம் முழுமையாக சச்சிதானந்தத்தைக் கடந்து தெரிகிறது.

சிருஷ்டி ஸ்ரீ அரவிந்தருக்கு பிரம்ம ஜனனமாகத் தெரிகிறது.

. இறைவன் வரும் தருணமானாலும், நாம் இறைவனை எந்த ரூபத்தில் காண்கிறோமோ அந்த அளவில் அவன் தெரிவான்.

நமக்கு உலகம் என்பது நாமறிந்த அளவுள்ள உலகம்.

நமக்கு இறைவன் வரும் தருணம் என்பது நம் வாழ்வின் எல்லைக்கு உட்பட்ட உலகத்திற்குரிய தருணம்.

. அருள் என்பது வாழ்விலுள்ளவனுக்கு அதிர்ஷ்டமாகும்.

கர்மத்தை நம்பாதவனுக்கு அருளுண்டு.

அருளை நம்பியவனுக்கு கர்மமில்லை.

கர்மம் என்பது நம்முடன் வாழ்பவர் நம்புவது - சமூகம் நம்புவது.

சமூகத்தை நம்பாதவனுக்கு கர்மம் அருளாகிறது.

தம் திறமைகளை நம்பாதவனுக்கு அருள் பேரருளாகிறது.

மனிதன் சமூகத்தின் கண்ணோடு பார்த்தால் கர்மம் வலுவாகத் தெரிகிறது.

சமூகத்தை விலக்கிப் பார்ப்பவனுக்குக் கர்மம் அருளாகத் தெரிகிறது; செயல்படுகிறது.

தம்மை - தம் திறமையை - விலக்கிப் பார்த்தால் அதே கர்மம் பேரருளாகத் தெரிகிறது.

பார்வை மாறினால் பலன் மாறும்.

பார்வையை நிர்ணயிப்பது பர்சனாலிட்டி.

பர்சனாலிட்டி மலர்ந்தால் பரமாத்மாவாகும்.

தொடரும்....

****

 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

காலத்தால் சமூகம் சாதிப்பதை, யோகம் ஆன்ம விழிப்பின் தன்னறிவால் சாதிக்கும். ஒரு சிறு அளவில் நாம் இதன்மூலம் காலத்தைக் கடக்கிறோம்.

யோகம் காலத்தைக் கடக்கும்.


 



book | by Dr. Radut