11. சீனுவாச இராமானுஜம்
சீனுவாச இராமானுஜம்
மேதை (genius) இராமானுஜம் கேம்பிரிட்ஜில் ஆராய்ச்சிசெய்து, உடல்நலம் குன்றி, இந்தியா வந்து, சிறுவயதில் காலமானார். இவர் தாயார், இவரது ஜாதகத்தை ஜோஸ்யரிடம் காண்பித்த பொழுது அவர், "ஜாதகன் உலகப்பிரசித்திப் பெற்று, அகால மரணமடைவார். அல்லது வெறும் மனிதனாக நெடுநாளிருப்பார்'' என்றார். இவர் எழுதிய theorems தேற்றங்கள் 4 நோட்டுகளில் உள்ளன. அவருக்குப் பின் கேம்பிரிட்ஜ் அவற்றை வெளியிட்டது. 750 பிரதிகள் அச்சிட்டனர். 250 விற்றன. மீதி இதுவரை விற்கவில்லை. இன்று Amazon கம்பனி மூலம் ஆர்டர்செய்தால், 1 நோட்டு $80க்குக் (ரூ.3500/-) கிடைக்கும். அவர் எழுதியவற்றுள் பெரும்பாலும் பயன்பட்டன. கம்ப்யூட்டர் வந்தபின் சில புதிய சாப்ட்வேருக்கு இதுவரைப் பயன்படாத அவரது theorems பயன்பட்டன. இனியும் பயன்படுத்தப் படாதவை ஏராளமாக உண்டு.
- கணிதத்துறையில் படிப்போ, பட்டமோ, தீட்சண்யமோ உள்ளவர் அன்னை பக்தரானால், அவரது தியானத்தில் இதுவரை பயன்படாத theorems பயன்படும் வழி தெரியும்.
- இது மேதாவிலாசத்தின் அன்னை அம்சம்.
- அன்னை அருளுள் அனைத்தும் அடக்கமானாலும், அத்துறையில் உள்ளவர் பக்திக்கு இராமானுஜத்தின் இரகஸ்யங்கள் புலப்படும்.
****
- Login to post comments
Comments
11. சீனுவாச இராமானுஜம் Para