Skip to Content

03. எங்கள் குடும்பம் II

எங்கள் குடும்பம் II

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கணவர் - கொஞ்சமாகக் கொடுத்து அதிகமாகப் பெற நினைப்பதே பிரச்சினைக்கு ஆரம்பம்;

தாயார் - பிறரைச் சந்தோஷப்படுத்தி தாம் சந்தோஷப்படும் மனமில்லை.:

  • வலியும், சந்தோஷமும் எதிரொலி போன்றவை என்பதை நாமறியோம். "மரியாதை வேண்டுமானால், மரியாதை கொடுத்து, மரியாதை வாங்கு" என்பது நடப்பின் வழக்கு. மரியாதை இல்லாத ஊரில் இந்த சொற்கள் கேட்கும். பண்பான ஊரில் கேட்கமுடியாத சொற்கள் இவை.
    • கண்ணாடி, எதிரொலி போன்றவை வலியும், சந்தோஷமும் என்ற ஞானமில்லாததால் ஏற்படும் குறை இது. மேலும்,
      • வலியைப் பிறருக்கு அளித்தால், தமக்கு சந்தோஷம் வரும் என்பது உண்மையில்லை என்பதுடன், இது சட்டத்திற்கு எதிரானது எனத் தெரிவதில்லை.
      • இதிலும் ஒரு தத்துவம் உண்டு. நாம் வலி என நினைப்பது, அடிமனத்திற்குச் சந்தோஷம்.
      • நாம் பிறருக்கு வலிகொடுக்க நினைத்தால் அவர் மேல் மனம் வலிபடுகிறது. அவரது அடிமனம் சந்தோஷப் படுகிறது. அதற்கு நேரடியான பலன் நம் அடிமனம் பெறும் சந்தோஷம். அதாவது நம் மேல்மனத்திற்குரிய வலி.
      • வலி வலியைத் தரும் என்பதும்,
        வலி சந்தோஷம் என்பதும்,
        வலியைக் கொடுத்து சந்தோஷம் பெறலாம் என்பதும்,
        உண்மை என்று விளங்க மேல்மனம், அடிமனம் விளங்க வேண்டும்.
        • மனிதன் எதை நினைத்தாலும், எதைச் செய்தாலும், எதை நினைத்து எதைச் செய்தாலும், முடிவாக நடப்பது இறைவன் திருவுள்ளமே.
        • கோணல் வழி, சிக்கல் முடிச்சு, தாமதம் ஏற்படுவது அஞ்ஞானத்தால்.
        • அஞ்ஞானம் ஞானமானால் கோணல் நேராகும், சிக்கல் அவிழும், காரியம் க்ஷணத்தில் முடியும்.
      • உபநிஷதச் சட்டம் , all in each, each in all ஒருவர்அனைவரிலும், அனைவரும் ஒருவரிலும் உள்ளனர். ஆண்டவன் அனைவரிலும், அனைவரும் ஆண்டவனிலும் உள்ளனர் என்பது ஸ்ரீ அரவிந்தத்தின் அடிப்படை .
        • இது புரிந்தால் அஞ்ஞானத்திற்கு வழியில்லை .
        • மனிதன் இறைவன் திருவுள்ளத்தைத் தன் ஞானத்தின் மூலம் நிறைவேற்ற முயல்கிறான் .
        • மனிதன் இறைவன் திருவுள்ளத்தை அவனுடைய ஞானத்தின்மூலம் நிறைவேற்ற முயன்றால் ,
          • சிக்கல் அவிழ்ந்து ,
          • தாமதம் விலகி , க்ஷணத்தில் காரியம் முடியும் .

தாயார் - உலகத்து இரகஸ்யம் ஒன்று இங்குண்டு . சிறியது பெரியதை விரும்பி நாடும் . அவமானம் பொருட்டன்று . அவமானப்படுத்தினால் பெருமைப்படுவார்கள் :

  • உலகத்து இரகஸ்யம் பெரியது .அதைக் கதையில் கண்டோம் .
  • உலகம் என்பது ஜடஉலகம் .
  • சூட்சும உலகம் அடுத்தது .
  • அதற்குரிய இரகஸ்யம் வேறு .
  • காரணலோகம் ஒன்றுண்டு .
  • அதற்கும் இரகஸ்யம் உண்டு .
  • எட்டு நிலைகள் - ஜடம்முதல் சத்வரை - ஒவ்வொன்றிற்கும் சட்டம் உண்டு. ஒவ்வொரு சட்டத்திற்கும் இரகஸ்யமுண்டு .
  • சட்டம் தெரியாதவனுக்கு இரகஸ்யம் பயன்படாது .
  • எட்டு நிலைகள் , மூன்று லோகங்கள் , சிருஷ்டி , பரிணாமம் , இந்நிலைகள் மாறுமிடங்கள் , இவற்றிற்கு அதிகபட்சம் , குறைந்தபட்சம் என ஏராளமான சந்திப்புகள் உண்டு .
    • ஒவ்வொரு நிலைக்கும் , இடத்திற்கும் ஓர் இரகஸ்யம் உண்டு அந்த எல்லா இரகஸ்யங்கட்கும் பொதுவாக Master Secret பெரிய இரகஸ்யம் உண்டு .
    • பெரிய இரகஸ்யம் தெரிய எல்லா இரகஸ்யங்களும் தெரிய வேண்டும் .
    • இரகஸ்யம் தெரிய சட்டம் தெரிய வேண்டும் .
    • சட்டம் தெரிய விவரம் தெரியவேண்டும் .
    • விவரம் தெரிய அனுபவம் வேண்டும் .
    • அனுபவம் புறத்திற்குரியது .
    • அதற்கு நீண்டகாலம் தேவை .
    • அனுபவம் அகத்திற்கும் உரியது .
    • அக அனுபவத்திற்குக் காலம் குறைவு .
    • குறைவு எனில் ஒரு க்ஷணம் .
    • புறத்தின் யுகம் அகத்தில் க்ஷணம் .
    • புறம் அகமாக , மனம் உணர்வாக வேண்டும் .
      ஜடம் சூட்சுமமாகவேண்டும்.
      சூட்சுமம் காரணமானால் அகம் பூர்த்தியாகிறது .
    • அகம் பூர்த்தியானால் , அது புறத்தை உட்கொண்ட அகமாகும் .
    • அங்கு ஜடம் சச்சிதானந்தமாகும் .
      வாழ்வு சித்தாகும் .
      சைத்தியப்புருஷன் ஆனந்தமாகும் .
      மனம் சத்தியஜீவியமாகும் .

கணவர் - நீ சமர்ப்பணத்தைப்பற்றிப் பேசினால் எனக்குக் கொஞ்சம் புரிந்ததும் போய்விடும் :

  • ஆசைக்கே அருகதையில்லாத மனிதனுக்கு ஆசையே வாராது. உற்பத்தி செய்யமுடியாது . அவனுக்கு ஆசை வந்தால் அது வினோதமாக , விபரீதமாக இருக்கும் . முனிசிபல் எலக்ஷனில் ஓட்டுக் கேட்டால் SSLC படிக்கும் பையன் என்னை BA வரைக்கும் படிக்க வைக்கிறீர்களா எனக் கேட்பது போலிருக்கும் .
  • இலட்சியங்களைப் பலனுக்காக ஏற்றவர் இல்லாததைப் புரிந்து கொள்வார்கள்.
    • முதலாளி தொழிலாளர் குடும்பம் அதிக வருமானம் பெற அவர்கள் மனைவிகள் செய்யக்கூடிய தொழில்கட்கு பாங்க்மூலம் உதவி செய்தால் 120 ரூபாய் சம்பளம் பெறுபவர் உபரிவருமானம் 40 ரூபாய்முதல் 100 ரூபாய் வரைப் பெறலாம் என முயற்சி எடுத்த பொழுது தொழிலாளிகள் சம்பளத்தை ரூ.100 உயர்த்திக் கொடுக்கச் சொல்லி ஸ்டிரைக் செய்தனர் .
    • அதிக வேலை செய்யும் தொழிலாளிக்கு அதிகச் சம்பளம் கொடுத்தால் அதே சம்பளத்தை அனைவருக்கும் வேண்டும் எனக் கேட்டார்கள் .
    • மானேஜருக்கு இலாபத்தில் பங்கு தர நினைத்தால் , கம்பனியைக் கொடு எனக் கேட்டான்.
    • "கிட்ட வா என்றால், எட்டி மூஞ்சை நக்குவான்" என்பது ஆழ்ந்த உண்மை.
    • சமர்ப்பணம் என்பது நாம் நம்மை சர்வமும் அன்னைக்கு அர்ப்பணம் செய்வது . நாம் கேட்டவற்றையெல்லாம் அன்னை தரவேண்டும் என சமர்ப்பணத்தைப் புரிந்துகொண்டவர் கணவர். அதனால் விபரமாகச் சமர்ப்பணத்தைப் பற்றிச் சொன்னால் முதலில் புரிந்துகொண்டதும் போய்விடும்.
    • மனிதன் தான் செய்யவேண்டியதை மட்டும் செய்யக்கூடியவன் இல்லை. தன்னால் முடிந்தால், தவறாமல் எதையும் செய்வான்.
      • கலவர நேரத்தில் யார், யார் எதைச் செய்கிறார்கள் எனப் பார்த்தால் மனிதச் சுபாவம் தெரியும்.
      • 7, 8 அண்ணன், தம்பிகள் சொத்தை ஒருவர் நிர்வாகம் செய்தால் பாதிப்பேர் அத்தனையும் தம் சொத்து என நினைப்பர்; கால்வாசிப் பேர் மற்றவருக்கு உரிமையில்லை என்பர். பத்தில் ஒரு பங்கு பேரிடமிருந்து சொத்தை வாங்க முடியாது. தொட்டால் தொட்டனவெல்லாம் என்னுடையன என்பது மனிதன் பெற்ற சுபாவம். பார்த்தால் வேண்டும் என்பான். நினைத்துவிட்டால் நிரந்தரமாகக் கேட்பான்.
      • இவர்கட்கு இலட்சியமில்லை, இலட்சியமான சமர்ப்பணம் இல்லை.
      • அப்படிப்பட்டவர் அன்னையிடம் வந்து அனைத்தையும் பெற்று "நாங்கள் சொர்க்கத்திலிருக்கிறோம்" என்பர்.
      • அவர்கட்கு சமர்ப்பண விளக்கம் குழப்பம் தரும்.
      • "நானிப்படிப் புரிந்து கொள்ளவில்லையே" என்பர்.
      • அவர்கள் செயல், எண்ணம், அறிவு, அவர்கட்கு அன்னை செய்வதை நாம் கண்டால், அன்னை யார் எனப் புரியும்.

தாயார் - ...... ஒரு ஸ்தாபனத்தில் வேலைக்கு வந்தவர் சமர்ப்பணத்தால் அதன் உச்சிக்கு வருவதும் , சரணாகதியால் அந்த ஸ்தாபனத்தையே தனக்குரியதாக்கிக் கொள்வதும் சமர்ப்பணம் பிரம்மத்தையும், பிரம்ம ஜனனத்தையும் வெளிப்படுத்துவது ஆகும்:

  • ஸ்தாபனம் பெரியது, மனிதன் சிறியவன்.
  • மனிதன் தானே ஸ்தாபனத்தை உற்பத்தி செய்தவன் என உணர்ந்தால், மனிதன் ஸ்தாபனத்தின் அளவுக்கு வளர்வான். அது Self-awareness.
  • சமர்ப்பணம் என்றால் தனக்காகச் செய்யும் வேலையை ஸ்தாபனத்திற்காகச் செய்வது .
  • அது மனிதனுக்கு ஸ்தாபனத்தின் வலிமையைத் தரும்.
  • சரணாகதி மனிதனைப் பெரியவனாகவும், ஸ்தாபனத்தைச் சிறியதாகவும் செய்யும்.
  • பிரம்மம் என்பதை மனிதன் தன்னில் உணரலாம், ஸ்தாபனத்தில் உணரலாம்.
  • தன்னில் பிரம்மத்தை உணர்ந்தால் தன் வலிமை பெருகும்.
  • ஸ்தாபனத்தில் பிரம்மத்தை உணர்ந்தால் ஸ்தாபனம் பெருகும் .
  • பிரம்மஜனனம் என்பது ஸ்தாபனம் தன் செயலில் பிரம்மத்தை வெளிப்படுத்துவதாகும். அப்பொழுது செயல்கள் சிறப்புப் பெறும், ஒன்று பத்தாகப் பெருகும். பெருகி, உயர்ந்து, உயிர்பெற்று, ஜீவனடைந்து, ஒவ்வொரு செயலும் ஸ்தாபனத்திற்குச் சமமாவதும், மேலும் உயர்ந்து உலகுக்குச் சமமாவதும் பிரம்மஜனனமாகும்.
  • ஊழியர், ஸ்தாபனத்தலைவராவது finite, infinite ஆவது. இதன் process என்ன?
    • ஊழியன் தன்னைப் பிரம்மமாக அறியவேண்டும்.
    • ஸ்தாபனத்தைப் பிரம்மமாகக் காணவேண்டும்.
    • தான் ஸ்தாபனத்தை அணுகும்பொழுது பிரம்மம் பிரம்மத்தை அணுகுவது போல் நடக்கவேண்டும்.
    • இதில் குறைந்தபட்சம் a life of values பண்பான வாழ்வு.
      அதிகபட்சம் எந்த நிமிஷமும் ஒரு adventure ஆவது.
      Adventureஐ மேற்கொள்ள values தடை.
      Valuesக்கு அடிப்படை energy of Brahman.
      அது ஒளியின் வேகத்தைக்கடந்தது.
      நாம் நல்லது செய்யவேண்டும் என்ற நிலை மாறி, நாம் செய்வன எல்லாம் நல்லன என்ற நிலைக்கு வரவேண்டும்.
      அது நடக்க நமக்குள்ள spiritual determinants எல்லாம் - Truth, Goodness, Love etc., - Self-existent ஆக இருக்க வேண்டும்.
      சாதாரண மொழியில் சொன்னால் "அவர் கையால் தப்பு நடக்காது " என மற்றவர் கூறவேண்டும். "நாம் தப்பு என அவர் செய்த காரியத்தை அறிந்தால், அது நல்லதாக முடிவதைக் காணலாம்" என்பது பொது அபிப்பிராயமாக வேண்டும்.
      நம் நாட்டில் அதை - அதன் குறைந்தபட்சத்தை, அதன் வாழ்வின் வெளிப்பாட்டை - இராசி என்கிறோம்.
      நாம் இராசியை உற்பத்தி செய்யவேண்டும்.
    • நாம் செய்யும் எந்த வேலையும் அளவுகடந்து கூடிவரவேண்டும். எது செய்தாலும் கெட்டுப் போகக் கூடாது.
    • கெட்டஇராசியுள்ளவர்க்கு வழியில்லையா? உண்டு.
      • தன் இராசி கெட்டஇராசி என உணர்ந்து, அறிந்து, ஏற்று, திருவுருமாற முன்வந்து, சமர்ப்பணம் செய்து, அடக்கமாக நடந்து, அனைவரிடமும் நல்லபெயர் வாங்கவேண்டும்.
      • அடக்கமும், நல்லபெயரும் வந்தால், காரியம் கெட்டுப் போவது குறையும்.
      • அதன்பிறகு பிறருக்கு அவர்கள் செய்வது கூடிவரப் பிரார்த்திக்க வேண்டும்.
      • அனைவருக்கும் கூடிவந்தாலும், சொந்தமாக அவர்கட்குக் கூடிவாராது. அது வரும் வரைக் காத்திருக்கவேண்டும் .
      • அகந்தை தீமையானால் இராசி கெட்டதாகும்.
      • தீமை அழிந்தால் கெடுவது நிற்கும்.
      • அகந்தை அழிய நினைத்தால் கூடிவருவது ஆரம்பிக்கும்.
      • கூடிவர ஆரம்பித்தால் கூடிவருவதன் அளவு, தரம் உயரப் பாடுபட வேண்டும்.
        • ஒவ்வொரு கட்டம் தாண்டும்பொழுதும் இதே சிரமங்கள் எழும்.
        • சிரமங்களைக் கடப்பது சிரமம் என்பது ஏற்க முடியாதது.
        • சிரமங்களை வாய்ப்பாக ஏற்காமல் அவற்றைக்கடக்க முடியாது.
        • கடக்கமுடிந்தால், தொடர்ந்தும் கடக்கவேண்டும்.
        • இடையில் நிறுத்தினால் உள்ளதும் போகும்.
        • அது புரிந்தவுடன் "நாமிங்கு வந்திருக்கக்கூடாது" எனத் தோன்றும்.
        • அப்படித் தோன்றுவது இயல்பு. இயல்புக்கு இடமில்லை.
        • இது அன்னைக்கு மட்டும் உரிய சட்டமில்லை. எல்லா முன்னேற்றங்களுக்கும் உரிய சட்டமாகும்.
        • விமானம் ஆகாயத்தில் பாதியில் பறக்கவேண்டாம் என நினைப்பது ஆபத்து.
        • அன்னையை அறிந்தபின் திருமணம் செய்யப் பிரியப் படுவது தலைகீழான போக்கு.
        • நெடுநாள் நடனமாடியவர் நிறுத்தினால் உடல் பெருத்துப் போகும்.
          நடனம் நின்றவுடன் உடலுக்குப் போதிய பயிற்சியில்லை என்பதால் இயல்பாகப் பெருகும் சக்தியை தடித்து உடலாக ஏற்று மகிழும்.
        • அரசியல்வாதி, பிரபலமான நடிகன், பெருஞ்செல்வம் பெற்றவர், பெரிய அளவில் வளர்ந்த கம்பனி, உயர்ந்து வரும் குடும்பம், பண்பு பெருகும் வீடு, ஆகிய எதுவும் பாதியில் நிறுத்தமுடியாது.
        • நாம் அன்னையிடம் வந்ததே தவறு என நினைக்கும் அன்பர் குடும்பம் அவலமானது.
          • அவர்கள் பாதாளத்தில் வீழ்வதைத் தடுத்து நிறுத்துவதும் அருள்.
          • அன்னையைத் தீவிரமாக ஏற்றவர் ஆர்ப்பாட்டமாகக் கருமாதி செய்தால் உயிருக்கு ஆபத்து. அவர் தொடர்பு கொள்பவர் உயிருக்கு ஆபத்து. ஆபத்தைத் தடுத்து நிறுத்துபவரை அந்த ஆபத்து அழிக்கும்.
          • இவை அன்னைக்குமட்டும் உரிய சட்டங்களன்று. அனைத்துக்கும் உரிய சட்டம். வாழ்வுக்குரிய சட்டங்கள். வரலாறு படித்தால் இவை விளங்கும்.

கணவர் - தலை சுற்றுகிறது:

  • தாயார் பேசுவதைக் கேட்டவர் சமர்ப்பணம் தமக்கில்லை என்கிறார். வேண்டுமா, வேண்டாமா என்ற தொனியில் தாயார் பேசுவது கணவருக்குத் தலை சுற்றுகிறது.
    • கணவர் விஷயமே தெரியாதவர் , அன்னையை அறிய ஆவல் இல்லாதவர். பலன் தெரிகிறது, பலனுக்குப் பின்னால் உள்ள பொறுப்பைக் கேள்விப்பட்டால் தலை சுற்றுகிறது.
    • தலை சுற்றுகிறது என்றால் என்ன?
      தலை தாங்கமுடியாத பாரம் வந்தால் சுற்றும்.
      கணவருக்கு எந்த பாரமும் வரவில்லை.
      கம்பனி, பவர் பிராஜக்ட், அந்தஸ்து வந்துவிட்டது. அது சந்தோஷம்.
      அவர் செய்த எந்தக் காரியத்தாலும் அவை வரவில்லை .
      வந்ததை ஏற்கவேண்டிய பொறுப்பு பிடிக்கவில்லை.
      திறமையில்லாமல் வந்ததால், பொறுப்பில்லாமல் ஏற்க நினைக்கிறார்.
      பொறுப்பில்லாமல் ஏற்கமுடியாது, ஏற்றால் நிலைக்காது என்ற செய்தி தலையைச் சுற்றுகிறது.
      பெரும்பலன் வந்தபிறகும் அதற்குரிய பொறுப்பை மனிதன் ஏற்க மறுப்பான்.
      அதுவே அவர் நிலை.
      அதற்கு ஒரு வழியுண்டா?
      எதற்கும் வழியுண்டு.
      விருப்பமில்லாதவனுக்கு விருது தரும் வழியில்லை.
      பொறுப்பை ஏற்கமுடியாதவனுக்கு, பொறுப்பை ஏற்கும் வழியுண்டு.
      பொறுப்பைத் தட்டிக்கழித்துப் பலன்பெறும் வழியைத் தேட வேண்டாம்.
    • அன்னை தரிசனம், தியானம் , நல்ல நடைமுறை, நல்லெண்ணம், ஆகியவை நாமறிந்த வாழ்வைவிட உயர்ந்தவாழ்வு தரும். அது நம் நிலைக்குட்பட்ட உயர்வு. நம் நிலைக்குயர்ந்த அடுத்த நிலைக்கு இவை நம்மை அழைத்துச் செல்லும் என்பது கனவு, கற்பனை.
      கணவர், பிள்ளைகள் நிலை இதுவே. தாயாருக்குத் தெளிவிருந்தாலும், அம்சமிருந்தாலும், மனநிலை அதுவே.
      ஜின்னா மனம் மாறுவார் என மகாத்மா எதிர்பார்த்தார்.
      கல்கத்தா ரௌடிகள் மனம் மாறலாம்.
      நவகாளி முஸ்லீம் மனம் மாறலாம்.
      அது மனிதனால் முடியாது, மகாத்மாவால் முடியும்.
      இந்தியாவில் எல்லா முஸ்லீம்களும் மனம் மாறுவர் என்பதோ, ஜின்னா மனம் மாறுவார் என்பதோ காந்திஜியாலோ, சத்தியாகிரஹத்தாலோ முடியாது.
      அது பாதாளம். பரமாத்மாவுக்கு அசையும். மகாத்மாவுக்கு அசையாது.
      முறை பல இடங்களிலும் பகுதியாகப் பலிக்கும். முழுமையிடம் முறை பலிக்காது.
      கணவர் சில்லரையாக இல்லாமல் பொறுப்பேற்றால் தலை சுற்றாது.

தாயார் - மேலிருந்தால் இரண்டும் (indulgence, enjoyment) ஆனந்தம் . கீழிருந்தால் இரண்டும் அழிவு. நடுவிலிருந்தால் choice. Discipline கட்டுப்பாடுவேண்டும் :

  • கோடு முக்கியம். கோட்டிற்கு மேலிருந்தால் கொள்ளை இன்பம் . கோட்டிற்குக் கீழேயிருந்தால் துன்பம்.
  • நாமுள்ள இடம் ஆனந்தமா, அழிவா என நிர்ணயிக்கும்.
  • இதன் தத்துவம் மேலே ஞானமானது , கீழே அஞ்ஞானமாகிறது. Self-absorption தன்னைத் தன்னுள்ளே கிரகித்துக் கொள்ளும்தன்மை.
  • இத்தத்துவத்தின் power சக்தி, உண்மை தெரியவேண்டுமானால்,
    • இத்தத்துவத்தை நிதானமாக , மனம் விளக்கமாக, குறிப்பாக முழுவதும் மனத்துள் வாங்கிக்கொள்ளவேண்டும்.
    • மனபாரம் அகன்று இலேசானால் , மனம் ஏற்றது எனப் பொருள்.
    • மனம் லேசானபின், இந்த சக்தியைக் காண ஆவல் எழும்வரை பொறுத்திருக்க வேண்டும் .
    • ஆவல் பூர்த்தியாகி ஆர்வமாகும் .
    • ஆர்வமானபின் மனம் செயலுக்குத் தயாராகிறது .
    • நம்மிடம் உள்ள அழிவுக்குரிய பழக்கம் ஒன்றைக் - காப்பி சாப்பிடுவது , அரட்டை அடிப்பது , சோம்பேறியாக உட்கார்ந்து இருப்பது , கேலி செய்து பிறரை அழவைப்பது - குறிப்பிட்டு சோதனைக்கு எடுத்துக்கொள்ளவேண்டும் .
    • இவற்றைச் செய்ய விரும்பும் நினைவும் அழிவுக்குரிய நினைவேயாகும் .
    • நம் செயல் ( அல்லது நினைவு ) நமக்கு ஆசையாக இருக்கிறதா, அழிவை நம்மால் தவிர்க்க முடியாமல் செய்கின்றோமா எனப் பார்த்து ஆசையிருந்தால் சோதனையை ஆரம்பிக்கக்கூடாது . ஆசை போய் "இது அழிவு" என்ற அறிவோ , தெளிவோ , உணர்வோ ஏற்படும் வரை நாம் காத்திருக்கவேண்டும்.
    • மனம் அவ்வெண்ணத்தில் concentrate செய்தால் - அந்நினைவுடன் தியானத்திலிருந்தால் - அதைப் பலநாட்கள் மீண்டும் மீண்டும் செய்தால் , அழிவில் பெறும் ஆனந்தம் , ஆக்கல் எழும் ஆனந்தமாவதைக் காணலாம்.(உ.ம்.) சிக்கனமாகப் பெட்டியில் காசை எடுத்து வைப்பதிலிருந்த ஆசை தாராளமாகச் செலவு செய்வதில் எழுவதைக் காணலாம்.
    • பிறரைக் கேலி செய்து பெற்ற ஆனந்தம், அவரைப் பாராட்டுவதில் வருவதைக் காணலாம் .
      • கேலி செய்தது மட்டமான மகிழ்ச்சி .
      • பாராட்டுவது உயர்ந்தசந்தோஷம் எனவும் தெரியவரும் .
      • நாமே முயன்று பெறும் திருவுருமாற்றம் இந்தச் சோதனை .

தாயார் -

அனுபவிப்பதே வாழ்க்கை;
அனுபவிக்காமல் வாழ முடியாது;
பரம்பரையாக அனுபவிப்பது தவறு என்பது கருத்து.
கருத்து எதுவானாலும் நடப்பது அனுபவிப்பதே;
மீசை நரைத்தாலும், ஆசை நரைக்காது என்பது பழமொழி;
The heart never grows old; it grows richer and sweeter.
ஸ்ரீ அரவிந்தம் அனுபவிப்பதை ஆமோதிக்கிறது;
அனுபவிப்பது நல்லதாக, உயர்ந்ததாக இருக்கவேண்டும்;
அதிகாரம் செய்வதற்கு அலாதிப் பிரியமுண்டு;
கொடுமைசெய்ய விரும்புகிறவர் ஏராளம்;
கேலிசெய்வதில் எவரும் விலக்கில்லை;
அன்பாகப் பழகினால் அதிகாரத்தை விடப் பிரியம் எழும்;
கனிவு இதயத்தைக் கொடுமையை விட நிரப்பும்;
பாராட்டுவது கேலியைவிட ஆனந்தம் தரும்.
கெட்டதை விட்டு நல்லதற்கு மாறமுடியுமா என்பதே கேள்வி;
அனுபவித்தபடியிருக்கவேண்டும் என்பது ஸ்ரீ அரவிந்தம்:

  • இறைவன் அனுபவிப்பதற்காக உலகை சிருஷ்டித்தான் ; அவன் நாடியது ஆனந்தம்.
    நாம் நாடவேண்டியது அதே ஆனந்தம் - பிரம்மஜனனத்தின் பிரம்மானந்தம்.
    இறைவன் ஆனந்தம் முழுமையானது. எப்படிப் பார்த்தாலும் அது ஆனந்தம்.
    நமக்கு எதுவும் இரட்டையாகத் தெரியும். ஆனந்தம் வலியாகத் தெரியும்.
    அழிவும், ஆனந்தமும் நன்றாகத் தெரியும்.
    அழிப்பதில் ஆனந்தம், ஆக்கலில் ஆனந்தம் தெரியும்.
    கோட்டிற்கு மேலே வந்துவிட்டால் அழிவு போய் ஆக்கல் நிற்கும்.
  • அனுபவிக்க ஏற்பட்டது சிருஷ்டி.
    நல்லதை மட்டும் அனுபவிக்க வேண்டும்.
    ஆண்டவன் அனுபவிப்பதுபோல் அனுபவிக்கவேண்டும்.
    அப்படி அனுபவித்தால் ஜடம் ஆனந்தமாகும்.
  • நமக்கு நம் உடல் ஜடம்.
    உடல் வலிக்குப் பிரதானம்.
    உடலே ஆனந்தமானால் வலிக்கு இடமில்லை.
    மனம் உயர்ந்து சத்தியஜீவியமாக , மனத்தின் நோக்கம் மாறவேண்டும்.
    மனிதன் இறைவனாக, வலிஆனந்தமாகவேண்டும் .
    • அழிவு, ஆக்கலாகவேண்டும்.
    • நோக்கம் உயர்ந்ததாகவேண்டும் .
    • இறைவன் வேண்டும் என நினைக்கவேண்டும் .
    • சமர்ப்பணம் பூர்த்தியாகி சரணாகதியாக வேண்டும் .
    • அர்த்தமற்ற பூஜ்யங்கள் , அனந்தனின் குழந்தையாக வேண்டும்.
    • பூவுலகம் சொர்க்கமாகவேண்டும் .
    • பூமியின் யோகம் உள்ளத்தில் பூர்த்தியாக வேண்டும் .
    • பூமியின் பூரணம் பூரணயோக சித்தி .

தாயார் - ...... நமக்கு அன்னை பார்ட்னராக வந்திருக்கிறார் .....

தாயார் - எங்கு அன்னை நேரடியாக வரமுடியவில்லையோ , அங்கு அடுத்தவர் மூலம் வருகிறார் . தரித்திரம் அப்படி வருபவரைக் கொடுமைப்படுத்தும், தூற்றும், சந்தோஷப்படும் , துரோகம் செய்யும்:

  • அன்னை எங்குமிருக்கிறார். எல்லோரிடமும் நேரடியாக வருவார். நாம் காதால்மட்டும் கேட்கமுடியும். கண்ணால்மட்டும் பார்க்கமுடியும் என்பதால் காட்சி பார்வையாக வருகிறது . மனம் நேரடியாகப் பார்க்க முடியும் என்றாலும், அத்திறனை இழந்து, கண்ணால் மட்டும் பார்க்கிறது என்பதுபோல் நாம் அன்னையை நேரடியாகப் பெறமுடியும் என்றாலும், நமக்குப் பெற்றோர், ஊரார், உறவினர், நம்பிக்கைகள் இருப்பதால், அன்னை அவற்றின் மூலமே வருகிறார் .
  • இக்குடும்பத்திற்கு அன்னை வர முடிவு செய்தபின், அதற்குப் பார்ட்னரே கருவி என முடிவு செய்து அவர் மூலம் வந்திருக்கிறார்.
  • அன்னை அன்பர்களிடம் அப்படியே வருகிறார்.
  • இதன் தத்துவம் உண்டா ?
    • ஞானம் அஞ்ஞானமானபின் அஞ்ஞானத்திலிருந்து ஞானத்தை மீட்க ஞானம் முன்வருகிறது.
    • மறைந்து, மறந்த பிரம்மத்தை, மறைந்ததை நினைவுபடுத்த பிரம்மம் செயல்படுவது அருள்.
    • மறந்த பிரம்மம் தானே தன்னை நினைவு படுத்திக்கொள்ள முடியாது.
    • அதனால் அருள்மூலம் பிரம்மம் நினைவுபடுத்துகிறது .
    • மனிதன் அருளைக் கொடுமைப்படுத்துகிறான், தூற்றுகிறான், சந்தேகப்படுகிறான், துரோகம் செய்கிறான்.
    • அவதாரப் புருஷர்களிலிருந்து, இன்ஷூரன்ஸ் ஏஜண்ட்வரை மனிதன் விரட்டியடிக்கிறான்.
    • Mother Teresa சேவை செய்ய வந்தால் கல்கத்தா நகரவாசிகள் அவரை ஊரைவிட்டு வெளியேற்ற முனைகின்றனர் .
    • சேவையாக எந்த வேலை செய்தாலும் சந்தேகம் எழுகிறது .
    • உலகப்போரைத் தடுக்க உலக இலட்சியவாதிகள் ஆரோவில்லில் குடியேறினால் " இந்த வெள்ளைக்காரர்கள் இங்கு எதற்காக வருகிறார்கள் ?" என்று நம் மக்கள் சந்தேகப்படுகிறார்கள்.
    • ஏசுவுக்கு அவர் சிஷ்யரே துரோகம் செய்தார் .
    • புறத்தில் காண்பதை நாம் அகத்தில் கண்டால் ,
      • தூற்றுபவனும் , கொடுமைப்படுத்துபவனும் , சந்தேகப்படுபவனும் , துரோகம் செய்பவனும் உள்ளேயிருந்து குரல் கொடுப்பதைக் காணலாம்.
      • அவன் குரல் நிதர்சனம்.
      • அதைக் கேட்டு , அதனினின்றும் விலகி , அது மாற , அன்னையைச் சரணடைவது நம் திருவுருமாற்றத்திற்கு வழி செய்யும்.

The Life Divine ஐ எப்படிப் படிக்கவேண்டுமோ , அப்படி வாழ்வையறிய வேண்டும் என்று கொண்டு , இக்கதையை , அதன் நிகழ்ச்சிகளை ஆராய்வது முழுப்பலன் தரும் :

  • நூலில் ஒரு பாராவைப் படித்தால் புரிகிறது . உதாரணமாக Matter ஜடம் என்ற அத்தியாயத்தில் முதல் பாராவைக் காண்போம் . அதில் 7 வாக்கியங்களுள்ளன . அவை ,
    • வாழ்வு பேயில்லை , ஒரு சக்தியென்று முன் 4 அத்தியாயங்களில் கண்டோம்.
    • இந்த வாழ்வு தெய்வீகமயமாகும் வாய்ப்புடையது .
    • ஜீவியம் மனத்துள் நுழைந்து , விரிந்து , உயர்ந்து , வாழ்வாயிற்று .
    • இதுவரை முன் 4 அத்தியாயங்களில் படித்த இவ்வாழ்வு பூரணம் பெறவேண்டுமானால் , இதன் அஸ்திவாரமான ஜடம் புரிய வேண்டும்.
    • மூளையைப் பெற்ற மனிதன் அதன் அறிவால் விலங்கை விட்டகன்று உயர்ந்தான்.
    • விலங்கைக் கடக்க மூளை தேவைப்பட்டது . இனி மனிதன் தன்னையே கடந்து சத்தியஜீவனாக உடல் முழுவதும் , ஒவ்வொரு செல்லிலும் உள்ள மனம் செயல்படவேண்டும். செல்லைக்கடந்து (Physical material substance) உடலின் மனமே செயல்பட்டால் தான் சத்தியஜீவன் பிறப்பான்.
    • வாழ்வு உடலில் பூர்த்தியாவதை நாம் தேடாவிட்டால் , சர்வமும் சச்சிதானந்தம் என்ற தத்துவம் மாறி மனிதன் சச்சிதானந்தத்தை நேரடியாகத் தேடிப்போய் மோட்சம் பெறுவான். அது திருவுள்ளம் இல்லை.
    • மேற்சொன்ன கருத்துகள் புரியும். அது முதல் நிலை . படித்ததை மனமும், அறிவும் புரிந்து கொள்வது . நூலில் விசேஷம், சிறப்பு, சூட்சுமம், இரகஸ்யம் இங்கில்லை . இதன்பின் அடுக்கடுக்காக 4 நிலைகள் உள்ளன.
  • இதன்பின்னுள்ள முதல்நிலை சூட்சுமத்தை insight மூலம் அறியலாம். அது தர்க்கத்திற்கு நியாயம்.
    •  "காயமே இது பொய்யடா, சேலை கட்டிய மாதரை நம்பாதே" என்ற பரம்பரைக்கு நேர் எதிராக" வாழ்வு பேயில்லை, காயம் பொய்யில்லை" என பகவான் கூறுகிறார்.
    • எந்த வாழ்வைவிட்டு நாம் விலகி சன்யாசம் பெறவேண்டும் என்றனரோ, அந்த வாழ்வுக்கு தெய்வீக வாய்ப்புண்டு என்று கூறும் பொழுது மரபு தவறு என்பதுடன், மரபு சிறுபிள்ளைத்தனம் எனவும் ஆகிறது.
    • பேயெனக் கூறப்பட்ட வாழ்வு சித்தின் ( ஜீவியத்தின் ) வளர்ந்த ரூபம் என்கிறார்.
    • உதறித்தள்ளப்படவேண்டிய வாழ்வை உத்தமம் என விளக்குகிறார்.
    • பொய்யானது எனப்பட்ட உடல் சத்தியஜீவனாகும் எனக் கூறி, மரபையும் , "மூளையே முடிவு" என்ற விஞ்ஞானியையும் மறுத்து "ஜடம் சச்சிதானந்தம்" என்று பகவான் கூறுவதை அறிய சூட்சுமம் தேவை. அதன் தர்க்கம் மரபுடன் தம்மை ஒப்பிடுகிறது . விஞ்ஞானி கூறுவதைக் கருதுகிறது. This is a logical justification seen by the subtle intelligence. சூட்சுமஅறிவு தர்க்கத்தின் சிறப்பை அறியும்.
  • காயம் பொய் என்பது பொய் . காயம் வாழ்வின் அடிப்படை . "வாழ்வு ஜீவியம் மனத்தால் மலர்ந்த பூரணம்"  என்ற ஆன்மீக உண்மையை அடுத்த கட்டத்தில் அறிவது ஆன்மீக நிறைவு தரும் . It gives a spiritually full richness.
  • நான்காம் நிலையில் பகவான் அறிவாலோ , சூட்சுமத்தாலோ , ஆன்மீக நிறைவாலோ இப்பாராவை எழுதவில்லை . It is a fact of His Supramental existence as an experience தாம் சத்தியஜீவியத்தை அடைந்து , ஜடத்தை அங்கிருந்து கண்ட உண்மையை எழுதியுள்ளார் என நாம் அறியும்பொழுது பகவான் பொன்மயமாக நமக்குக் காட்சி அளிக்கிறார்.
  • The Life Divine 4 நிலைகளிலிருப்பதைப்போல் வாழ்வும் , இக்கதையும் 4 நிலைகளில் உள்ளன :
  1. கதையைக் கதையாகப் படிப்பது முதல்நிலை.
  2. இரண்டாம் பாகம் விமர்சனத்தை அறிவது கதையின் சூட்சும ஞானம்.
  3. கதையை நம் வாழ்வுடன்பொருத்திப் பெறுவது ஆன்மீகநிறைவு.
  4. நாம் மனித வாழ்விலுள்ளோம் . இக்கதை நம்மை அதன்மூலம் சத்தியஜீவியத்திற்கு அழைத்துப்போவதை அறிந்து தியானத்தில் இலயித்தால் பகவான் தங்கமயமாகக் காட்சியளிப்பார்.
  • பொதுவாகக் கதையை அப்படி உணர்வதைப்போல் கதையில் உள்ள 100 நிகழ்ச்சிகளைத் தனித்தனியே விமர்சிப்பதை அறிந்து நம் வாழ்வின் நிகழ்ச்சிகளையும் , மனநிலைகளையும் ஆராய்ந்தால் சூட்சும ஞானம் , ஆன்மீகநிறைவு, பொன்னொளி ஆகியவை விவரமாக எழும்.
  • அது அகந்தை கரைய உதவும் .
  • பழைய தவறுகள் மனக்கண்முன் வந்து கரையும் .
  • நமது தாழ்ந்த ஜீவியம் குறிப்பிட்ட விஷயத்தில் உயர்ந்த ஜீவியம் ஆவதைக் காணலாம்.
  • கதை நமக்குக் கட்டுரையாகி தத்துவம் பயிற்றுவிக்கும்.
  • இதிகாசமாகி இகத்தைப் பரமாக்கும்.
  • மனிதவாழ்வைத் தெய்வீகவாழ்வாக்கும் .
  • அது நீண்ட, நெடிய பாதை.
  • ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இருபிரிவுகளைக் காணலாம்.
  • அங்கு நம் choice இஷ்டம் செயல்படும்.
  • தொடர்ந்து நம் choice இஷ்டம் அன்னை பக்கமிருப்பது அவசியம்.
  • அது எந்த நேரமும் நம் பக்கம் திரும்பும்.
  • திரும்பினால் அதுவே முடிவு.
  • முன்னேற மறுத்தால் உள்ளதும் போகும்.
  • முன்வைத்த காலை உலகில் எவரும் பின் வைக்கமுடியாது .
  • செயல்கள் அவற்றின் சிறப்பை உணர்த்துவதை சூட்சுமமாக அறிந்து, நிறைவாகப் பெற்று, பொன்னாகப் பூர்த்திசெய்வது நல்லது.
    • 1970 வாக்கில் புதுவை அரசு , ஆசிரமப்பள்ளியிலிருந்து பிள்ளைகளை சுதந்திரதின விழாவுக்கு அழைத்தனர் . பள்ளி நிர்வாகம் மறுத்தது.
    • இந்நிகழ்ச்சியை அன்பர் ஒருவரிடம் சாதகர் கூறியபொழுது அன்பர், " மறுக்க உரிமையில்லை, மறுத்தால் கைது செய்வார்கள்" என்றார். பிள்ளைகளை அனுப்பிவிட்டனர் .
    • மறுநாள் சர்க்கார் பள்ளிக்கு உத்தரவிட்டது. உத்தரவை மீறினால் கைது செய்வோம் என்றது.
    • சாதகர் அன்பரிடம் , "நீங்கள் சொல்லியது உண்மையாகிவிட்டது . எப்படிக் கூறினீர்கள்" என வியந்தார் . அன்பர் சட்டம் புரிந்தவர்.
    • சட்டம் புரியலாம்; சூட்சுமம் புரியவில்லை. அடுத்த சில ஆண்டுகளில் அன்பரின் நண்பர் மீது வாரண்ட் வந்தது. கைது செய்யவில்லை.
    • பள்ளி நிர்வாகம் செய்வது சட்டப்படி சரியா என்பதை விட, சூட்சுமம் என்ன சொல்கிறது, அதன்பின் ஆன்மீக நிறைவு உண்டா, அகந்தை நிறைவு பெறுகிறதா, பகவான் பொன்மயமாக அதன்பின் கொலுவிருக்கிறாரா எனக் காண்பது வாழ்வில் அறிவும், சூட்சுமமும், ஆன்மீகநிறைவும், பொன்மயமான பொலிவும் பெற உதவும்.

கணவர் - அன்னையை அறிவது அதிர்ஷ்டம், ஏற்பது அருள், போற்றுவது பேரருள் எனக் கூறலாம் போலிருக்கிறதே :

  • நான் இதை அடிக்கடி எழுதுகிறேன் .
    இது புதியதில்லை என நினைக்கத் தோன்றும்.
    நமது அனுபவத்தில் பார்க்கும்பொழுது இன்று புதியதாக அறிவதுபோல் தோன்றும்.
    அறிவால் தெரிந்ததை அனுபவத்தால் அறிவது அதிர்ஷ்டம்.
  • அறிவது ஆயிரம், ஏற்பது எதுவுமில்லை என்பது நமது போக்கு. அறிந்த ஒன்றை செயலில் ஏற்க முனைந்தால் அதிர்ஷ்டம், அருளாவது அனுபவமாக எழும்.
  • நமக்கு - அன்பர்கட்கு - எது நடந்தாலும் தொடர்ந்து நடக்கும் என்ற பேரருள் உண்டு என்பதை நாம் பெற்றதைப் போற்றும் பொழுது தெரியும்.
  • இன்ஷூரன்ஸ் உண்டு என்பதே தெரியாதவர், தெரிந்துகொள்வது அதிர்ஷ்டம்.
  • இன்ஷூரன்ஸை அறிவது வேறு, ஏற்பது வேறு. ஏற்றால் ஆபத்து வரும் நேரம் விலகும், அது அருள்.
  • ஒன்றுபட்டால் வாழலாம்என நாம் அறிவோம். இந்து, முஸ்லீம் பிரச்சினை வந்தபொழுது அதை ஏற்றிருந்தால் நாடு பிளவுபட்டு இருக்காது. ஏற்கவில்லை, அதனால் அதிர்ஷ்டம் தவறிவிட்டது.
  • இன்று பிளவுபட்ட நாட்டுமக்கள், அல்லது தலைவர்கள் " ஒற்றுமை உயர்வு" என்பதை மனதால் ஏற்றால் பிரிந்த நாடு சேரும்.
  • அப்படிச் சேர்வது அருள்.
  • அது இந்தியாவை ஜகத்குருவாக்கும் என பகவான் கூறியுள்ளார்.
  • உலகம் இந்தியாவைக் குருவாகப் பெறுவது பேரருள்.
  • அதிர்ஷ்டம், அருள், பேரருள், ஆகியவற்றை நம் அன்றாடச் செயல்களில் காண முயல்வது வாழ்வை , யோக வாழ்வாக மாற்றுவதாகும் .
  • திறமையிருந்து பலிப்பது அதிர்ஷ்டம் .
  • பலித்தது தொடர்வது அருள் .
  • தொடர்ந்தது, தொடர்ந்து உயர்ந்து, விரிந்து, நின்று நிலைப்பது பேரருள்.
  • நமக்கு நடந்த நல்லவை எத்தனை?
  • நடந்தது தொடர்ந்ததா?
  • தொடர்ந்தது உயர்ந்து விரிந்ததா என அறிய முயல்வது ஆத்ம விசாரம்.
  • ஆத்மவிசாரம் , அதுவே விசாரம்.
  • கணவர் ஏதும் அறியாதவர்.
  • அவருக்கு இது மட்டுமன்று , எதுவும் தெரியாது . எதை அவர் அறிந்தாலும் நல்லதே.

தாயார் - நாம் செய்வது நமக்கே திரும்பிவருவது நாம் அறிவது இல்லை :

  • வேண்டுமென்றே பிறருக்குச் செய்யும் தீங்கு தவறாமல் நமக்கு வரும் என்கிறார் அன்னை. தெரியாமல் செய்தாலும் வேலை , செயலுக்குரிய சட்டப்படி நமக்கு அது வரும். நாம் அதைக் கர்மம் என்போம்.
  • "பிறர் என்பது நாமே" என்பது உபநிஷதம் , சத்தியஜீவியம். அதனால் நாம் பிறருக்குச் செய்வது என்பது நமக்கு நாமே செய்து கொள்வது ஆகும்.
  • 1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ம் தேதி எந்தக் காரணமும் இன்றி "Direct Action Day" ஜின்னா நேரடியான போராட்டம் நடத்த முஸ்லீம்களை அழைத்தார். இந்து - முஸ்லீம் கலவரம் அதனால் ஆரம்பித்தது . '46 '47 '48 இல் சுமார் 2 இலட்சம் பேர்கள் உயிர் இழந்தனர் . ஒரு கோடி மக்கள் தங்கள் இருப்பிடத்தைவிட்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் வந்தனர் . உலக சரித்திரம் காணாத கொடுமை இது. இது நம் தலைவிதி. சுதந்திரத்திற்கான பலி என்று கூறுகிறோம். 1939 இல் ஹிட்லர் உலகை ஆள போர் தொடுத்தான். ஐரோப்பிய நாடுகளை விழுங்கினான். காங்கிரஸும், காந்திஜியும், நேருவும் நேசநாடுகளுக்கு முழுஅனுதாபம் தெரிவித்தனர் . ஹிட்லரைக் கண்டித்தனர். 1942 இல் "வெள்ளையனே வெளியேறு" என்ற போராட்டத்தை மகாத்மா ஆரம்பித்தபொழுது காங்கிரஸ் அவரை ஆதரித்தது. இராஜாஜிமட்டும் எதிர்த்தார் . பிரிட்டன் நமக்கு எதிரியானாலும் உலகைக் காக்க உயிருக்குப் போராடுகிறது. இந்த நேரம் முதுகில் குத்துவது துரோகம் (moral violence). இது அஹிம்சை இல்லை. தார்மீக ஹிம்சை எனக் கூறி காங்கிரஸைவிட்டு வெளியேறினார் .
    • 1942 இல் காங்கிரஸ் பிரிட்டிஷாருக்குச் செய்ததின் நேரடி விளைவு 1946 இல் ஜின்னா இந்துக்களுக்குச் செய்தது என நாம் அறியவேண்டும்.
    • வரலாறு காணாதவாறு அன்னியன் "நான் ஜூன் 1948 இல் போகிறேன்" என்று கூறியபின், அது அருளின் செயல் என நாட்டுத் தலைமை அறியவில்லை.
    • பகவான் ஸ்ரீ அரவிந்தர் சூட்சும உலகில் செயல்பட்டு இரண்டாம் போரை வென்றார்.
    • அரசியல் அவருக்கு உயிர்மூச்சு என்றாலும், தாம் அரசியல் செயல்பட விரும்பினால் சூட்சுமமாகவே செயல்படுவார். 1917 இல் தமக்கு இரஷ்யப்புரட்சியில் பங்குண்டு என்கிறார். முதல் உலகப் போரில் துருக்கியில் தாம் செய்ய விரும்பியதைத் தெளிவாகச் செய்ததாகக் கூறுகிறார் . அயர்லாந்திலும் அப்படியே செயல்பட்டார். 1942 இல் கிரிப்ஸ் தூது வந்தபொழுது "நாட்டை பிரிப்பதைத் தவிர்க்க இது நல்ல சந்தர்ப்பம்" என காங்கிரஸ் தலைமைக்குக் கடிதம் எழுதிச் சொன்னார் . காங்கிரஸ் அவர் பேச்சைக் கேட்கும் நிலையில்லை. நாடு பிரிந்தது.
    • பரிணாமம் என்பது ஜடத்துள் மறைந்துள்ளது வெளிப்படுவது . இல்லாதது வாராது . நாம் செய்யாதது நமக்கு வாராது. நாம் செய்தது வரத் தவறாது.
    • இந்தக் குடும்பம் பெறும் பேறு - கம்பனி, பவர் பிராஜெக்ட் - எல்லாம் தாயார் மனதால் செலுத்தும் பக்தி, நம்பிக்கைக்கு உரியது என்ற தெளிவு குடும்பத்தில் போதுமானதாக இல்லை . குடும்பம் தாயாருக்கு எதிராகச் செயல்படுகிறது. தாயார் சாதிப்பதைக் குடும்பம் தம் செயலால் அழிக்கிறது . ஒவ்வொரு முறையும் தாயார் தம் சமர்ப்பண முயற்சியால் அதைச் சரி செய்ய வேண்டியிருக்கிறது.
  • "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்ற பழமொழி வாழ்வின் சுபாவத்தைக் கூறுகிறது . அன்பர்கள் ஏன் வாழ்வு அப்படிச் செயல்படுகிறது என அறிய முற்பட்டால் ஆன்மீக விவேகம் பெறுவர்.
  • "முற்பகல் செய்யின் , பிற்பகல் விளையும் " - ஏன் ? எப்படி ? ஒரு செயலில் பல பகுதிகள் உள . ஒரு பகுதியைச் செய்தால் , அடுத்த பகுதி காத்திருக்கும் . சிருஷ்டியின் இரு பகுதிகள் ஜீவன் , சக்தி. (அதை ஜீவியம் , சக்தி எனவும் கூறலாம் ). ஜீவன் - ஜீவியம் - சக்தி என்பது தத்துவம் . பிரம்மம் ஜீவனாகிறது . ஜீவியம் அதனின்று எழுகிறது . சக்தி ஜீவியத்தின் பகுதி . உலகம் சக்தியாலானது . சக்தி காலம் , இடத்தால் கட்டுண்டது . ஜீவனும் , ஜீவியமும் காலத்தைக் கடந்தவை.
    1. ஜீவனையோ , ஜீவியத்தையோ மனத்தால் பிரிக்கமுடியாது.
    2. மனம் சக்தியைத் துண்டு செய்யும்.
      மனமும், சக்தியும் காலத்திற்குட்பட்டவை.
      காலத்துள் காரியத்தைப் பகுதியாகவே செய்யமுடியும்.
      முழுமையாகச் செய்யமுடியாது.
      காலையில் எழுந்து ஆபீஸ்போக குளிக்கவேண்டும் , சாப்பிட வேண்டும் , டிரஸ் செய்யவேண்டும். ஒவ்வொன்றாகவே - பகுதியாக - செய்யமுடியும் . க்ஷணத்தில் குளித்து , சாப்பிட்டு , டிரஸ் செய்து போவதில்லை .
      பகுதிக்குப் பின் பகுதியுண்டு.
      காலத்தைக் கடந்த இடத்தில் காரியம் முழுமையாக நடக்கும்.
      குசேலருக்குச் செல்வம் க்ஷணத்தில் வந்தது.
      அது காலத்துள் நடக்காது.
      பகுதியைப் பகுதி தொடர்வது செயலின்தன்மை, காலத்தின் குணம்.
      தமிழ்நாட்டில் பிறந்த குழந்தை தமிழ் பேசும், இந்தி பேசாது.
      தமிழ்நாட்டு மொழி தமிழ்.
      அங்கு பிறந்த குழந்தைக்கு அந்நாட்டு மொழி பேசுவது இயல்பு.
      பிறந்தது முற்பகல் செய்வது. பிற்பகல் விளைவது பேசுவது .
    3. ஜீவியத்தில் நடப்பவை காலத்தைக் கடந்தவை.
      அவை முழுமையானவை.
      அங்குத் தொடரும் காலம் இல்லை.
      தொடரப் பகுதியில்லை.
      முற்பகல், பிற்பகல் காலத்திற்குரியன. அவை அங்கில்லை.
      பகலும், இரவும் அற்ற லோகம் ஜீவியம்.
      கிருஷ்ணன் அவல் சாப்பிட்டவுடன், குசேலருக்கு மாளிகை வருகிறது.
      அது உடனே நடக்கிறது.
      அது முழுமையான காரியம்.
      முடிந்த காரியம் என்பதால் தொடர எதுவுமில்லை.
      தொடரும் காரியம் எதைத் தொடர்கிறதோ அதற்கு குணம் உண்டு.
      அதைக் கர்மம் என்கிறோம்.
      காலம், கர்மம், இரண்டும் ஒரு நிலைக்குரியவை.
      காலத்தைக் கடந்தால் கர்மமில்லை.
  • சாதனைக்குத் தேவையானது வலிமை. வலிமை கடுமையானது. நேர்மையான சாதனைக்கு வலிமை எப்படிப் பயன்படும்?
    • நேரு இலட்சியவாதி, ஏழை பங்காளன் , மக்கள் மனத்தில் மகுடமாக வீற்றிருப்பவர்.
    • பட்டேல் கடுமையானவர், பணக்காரருடனிருப்பவர், ராஜாக்களை ஆதரிப்பவர்.
    • நேருவுக்கு வலிமை போதாது. பட்டேல் இலட்சியம் பணத்தின் இலட்சியம்.
    • " இன்று இந்தியா என ஒன்றிருக்கிறது எனில் அது பட்டேலால் தான்" எனப் பிரசாத் கூறினார்.
    • பட்டேலிடம் விட்டிருந்தால் காஷ்மீர் பிரச்சினை இருக்காது. பாகிஸ்தான் பிரிந்திருக்காது .
    • "அவர்களில் பட்டேல் ஒருவருக்குத்தான் வலிமையிருக்கிறது" என பகவான் கூறினார்.
    • நாடு விடுதலை பெற்றது, பாகிஸ்தான் பிரிந்தது, சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைந்தன. காஷ்மீர் ஐ. நா. விலிருக்கிறது 50 வருஷங்களாக. இவை நடந்தவை. நாம் இந்த நிகழ்ச்சிகளிலிருந்து புரிந்துகொள்வது என்ன? நம் வாழ்வை அதன் மூலம் எப்படிச் செப்பனிடுவது? இக்கதையில் அக்கடுமையான முரண்பாடுகளை முன்னிருத்தவில்லை என்றாலும் , அவை பின்னணியில் உள்ளதை எப்படி அறிவது?
  • இந்திய சுதந்திரம் மூலம் நாம் அறிபவை :
    • தர்மம் என்பது யுகதர்மம். அது வலிமையின் செயல். வலிமை சாதிக்கும்பொழுது அதர்மமாகத் தெரிவதை தர்மமாகப் போற்றி ஏற்பது ஸ்ரீ அரவிந்தம்.
    • சுதந்திரம் போரால், போரின் வெற்றியால் வரவில்லை. சட்டப் பூர்வமாகச் சுதந்திரம் வந்தது. எனவே சட்டத்தை முழுவதும் பின்பற்ற வேண்டும்என நேரு, மவுண்ட்பேட்டன் செய்தவை இன்று வரை தீராத பிரச்சினையாக இருக்கின்றன. சட்டத்தைப் பெரும்பாலும் பின்பற்றலாம், முழுவதும் பின்பற்ற முடியாது, கூடாதுஎன பட்டேல் செய்தவை உடனே பிரச்சினையைத் தீர்த்தன. இன்றுவரை அவை பிரச்சினையாகவில்லை .
    • வலிமைக்குரிய தர்மம் சாதிப்பது.
      அதை அதர்மமாகச் செய்யாமல் வலிமையின் தர்மத்திற்கேற்றவாறு செய்வது சரி. வலிமை குறைவாக உள்ள இடத்தில் முழுவதும் தர்மமாக நடக்க முயன்றால் காரியம் அரைகுறையாகும்.
      55 கோடி பாகிஸ்தானுக்குத் தரவேண்டும் என்று காந்திஜி கூறியதை நேரு, பட்டேல் ஏற்றுக் கொடுத்ததால் காஷ்மீர் குறை.
      காஷ்மீரைத் தீர்த்தால் 55 கோடி தருவேன் எனப் பட்டேல் கூறியது பிரச்சினையைத் தீர்த்திருக்கும்.
      பிரிவினையை, காந்தியை எதிர்த்து ஏற்ற நேருவும், பட்டேலும், 55 கோடி கொடு என்றதை ஏற்றனர்.
      • முடியும் என்ற பொழுது ஏற்பது பிரச்சினையை உண்டு பண்ணும்.
      • முடியாத பொழுது மறுப்பதுபோல் முடியும் என்றபொழுது மறுப்பது சமர்ப்பணத்திற்கீடான செயல்.
      • நம் வாழ்வில் எதை மறுக்கிறோம், எதை ஏற்கிறோம், இரண்டையும் ஒரே சட்டப்படிச் செய்கிறோமா , இல்லையேல் செய்ய ஏற்கிறோமா என்பதே நாம் இந்தியச் சுதந்திரத்திலிருந்து கற்றுக் கொள்ளவேண்டியது.
    • வேண்டியவர்களிடம் அவர்கள் குறைகளை ஏற்கிறோம். அதேகுறைகளை வேண்டாதவரிடம் ஏற்பதில்லை. பிரச்சினை வேண்டாதவர் என்பதால் வருகிறது. இருவருக்கும் ஒரே சட்டம், நமக்குரிய தர்மம்.
      • நம் தர்மம் சரியானால் செய்யும் காரியம் கூடிவரும் .
      • கிருஷ்ணபரமாத்மா தர்மத்தை அதர்மத்தால் நிலை நிறுத்தினார் .
      • அதர்மத்தை தர்மமாக (பாஸிட்டிவாக) உணர்வது அன்னை தர்மம் .
        • பிள்ளை போதைமருந்து சாப்பிட ஹாஸ்டல் பணத்தைப் பயன்படுத்தினால், ஹாஸ்டலுக்கு நேராகப் பணம் கட்டலாம். அவனிடம் பணம் தாராமலிருக்கலாம். மறுக்க ஆசை எழுந்தால் அது தவறு .
        • சண்டி செய்யும் குழந்தையை அடிக்கும் பொழுது அடிக்கப் பிரியப்படுவது நெகட்டிவ் மனப்பான்மை .
        • போதை மருந்து சாப்பிடுகிறான் எனத் தெரிந்தும் மகனுக்குப் பணம் கொடுக்க ஆசைப்படுவது நெகட்டிவ் .
        • விளையாட ஆசைப்படுபவனைக் கட்டாயப்படுத்திப் படிக்கவைப்பது பாஸிட்டிவ்.
        • கொடுமை செய்யும் நாத்தனார் கொடுமையை ஏற்பது அன்னை சட்டம் என அறிந்து ஏற்பது பாஸிட்டிவ்.
          வீராப்பாகப் பட்டினி கிடப்பது நெகட்டிவ்.
          எதிர்க்க தைரியமில்லாமல் பயந்து அடங்குவது நெகட்டிவ் .
        • பாஸிட்டிவ் , நெகட்டிவ் தெரியாத நேரமேயில்லை.
          தெரிந்து பின்பற்றாத நேரமுண்டு.
        • திருமணமானவுடன் மனைவியுடன் போய், பெற்றோரை மறப்பது தவறு எனத் தெரியாதவரில்லை.
        • பெற்றோர் மனப்பான்மை சரியில்லை , அவர்கட்கு சுயநலமான அதிகாரம் முக்கியமே தவிர பாசமில்லை என்பதால் அவர்களைவிட்டுப் போவதும் ( பாஸிட்டிவ் , நெகட்டிவ் ) இரு காரணங்களாலும் இருக்கும் .
          • செயலன்று, நினைப்பு முக்கியம்.
        • நமது வாழ்வில் பாஸிட்டிவ் , நெகட்டிவ் இரண்டும் இருக்கும்.
        • கதையில் தாயார் பையன் புதுடிரஸ் வாங்க ஆசைப்படுகிறார். வேண்டாம் எனக் கூறுகிறார். மனம் நெகட்டிவாகவும், சொல் பாஸிட்டிவாகமிருக்கிறது.
        • ஒரு நாளில் 10 காரியங்கள் செய்தால் , அவற்றை இப்படிப் பரிசோதனை செய்தால் , மனம் எந்த அளவில் தகராறு செய்கிறதோ நமக்கு அங்கு வேலையிருக்கிறது . கதையில் தாயாருக்கு ஏராளமாகப் பலித்தாலும் மனம் குடும்பத்திலும் , சொல் அன்னையிடமும் உள்ள இடங்களில் பெரியவனுக்குச் சண்டை , சிறியவனுக்குக் கேலிஎனப் பிரச்சினைகள் வருகின்றன . இவற்றை நெருக்க நாமே எதிரி . இவற்றிற்கிடையே உள்ள இடைவெளியை விலக்குவது sincerity யோகம்.

சுதந்திரம் வந்து 50 ஆண்டுகளாக உள்ள பிரச்சினைகள் இதுபோன்ற இடைவெளியால் ஏற்பட்டவை. 

கணவர் - தெரியாதது பாதி , தெரிந்தாலும் பொருட்படுத்தாதது பாதி ;

தாயார் - துரோகம் , அலட்சியம் , சூன்யம் போன்றவற்றைக் கருதாமல் பணவரவைக் கருதுவோம் :

  • இது இறைவன் வரும் தருணம்.
  • மனிதன் நேரம் வந்துவிட்டதை அறியவில்லை . ஆயிரமாண்டுகளில் நடக்கக்கூடியதை அரை நிமிஷத்தில் நடத்தும் நேரம் வந்துவிட்டதை மனிதன் அறியவில்லை.
  • ஆனந்தத்தைத் தேடி மறைந்த பிரம்மம் தன்னை மறந்ததை நினைவுபடுத்தும் நேரம் வந்துவிட்டது .
  • ஞானம் அஞ்ஞானத்தினின்று வெளிவரும் நேரம் வந்துவிட்டது .
  • பிரம்மம் தேடியது கிடைக்கும் நேரம் வந்துவிட்டது . அதை பிரம்மம் அறியவில்லை .
    • பிரம்மம் பிரம்மத்தை நினைவுபடுத்துவது அருள் .
    • அருள் தன்னை நாடும்பொழுது , இருள் அதை மறுப்பது மருள் .
    • மறுப்பது power திறன் .
    • மறுப்பதானாலும் , ஏற்பதானாலும் power திறமை கவர்ச்சியானது .
    • மறுக்கும் சந்தர்ப்பத்தை மனிதன் மறுக்கமாட்டான் .
    • மறுப்பை மறுப்பவரில்லை .
    • மருளின் மறுப்பைமீறி மறந்ததை - தான் மறைந்ததை - நினைவுபடுத்துவது பரிணாமம் .
    • பரிணாமம் தருவது பரமன் தேடும் ஆனந்தம் .
    • பரமன் தேடும் ஆனந்தத்தை பக்தனில், பக்தனுடைய செயல், அவனது அலட்சியத்தில், துரோகத்தில், அவன் அவதாரத்திற்கு வைக்கும் சூன்யத்தில் காண்பது விழிப்பு, உண்மை, ஏற்கும் திறன்.
    • செயல் ஜீவன் பெறும் நேரம் அது.
    • செயல் ஜீவன் பெறும் நேரம் இறைவன் செயலில் வெளிப்படும் நேரம்.
    • செயல் பகுதி , ஜீவன் முழுமை.
    • விழிப்பு , உண்மை , இறைவன், ஜீவனில் வெளிப்படும் நேரம்.
    • இறைவன் வரும் நேரம் பிரம்மம் ஆனந்தம் பெறும் தருணம்.
    • இறைவனை இறைவனில் காண்பது மனிதன் பெறும் அருள் .
    • இறைவனை ஸ்ரீ அரவிந்தரில் காண்பது மனிதன் சாதகனாவது.
    • இறைவனை அன்னையில் காண்பது அன்பராவதாகும்.
    • இறைவனை வாழ்வின் சாதனையில் நாடுவது வாழ்வை இறை மயமாக்குவதாகும்.
    • இறைவனை வாழ்வின் திறனான பணத்தில் காண்பது வாழ்வில் சாதிப்பதாகும்.
    • இறைவனைச் சேவையில் காண்பது மனிதன் தன் திறமையை உணர்வதாகும்.
    • திறமையில் இறைவனைக் காண்பது தன்னை, தன் அகந்தையை, இறைவனாகக் கருதுதல்.
    • அகந்தை அரங்கத்திற்கு வந்தால் அனந்தனுக்கோ, ஆண்டவனுக்கோ அங்கு வேலையில்லை.
    • மனிதன் தன் அகந்தையைத் தான் என அறிகிறான்.
    • தான் அறிவதை வலியுறுத்துகிறான்.
    • கதையில் கணவர் காணாதவற்றை எல்லாம் கண்டபின், கணவர் என்ற உரிமையை விட்டுக் கொடுக்கவேண்டும் எனவும் அவருக்குத் தோன்றவில்லை.
    • தம் மனைவி மனைவியாக இருக்கவேண்டும் என்பதில் கணவர் மனத்தில் மாற்றமில்லை.
    • தாயார், தாம் மனைவியாக நல்ல பெயரெடுக்க வேண்டும் என்பதை இலட்சியமாகக்கொண்டவர்.
    • அன்னை, மனைவியாக அவதரிக்க வேண்டுமானால் அன்னை மனைவியாவார், மனைவி அன்னையாகமாட்டார் .
  • பெரிய சேவையைச் சாதனையாகச் செய்தவர் பணவரவை அன்னை மூலம் நாடினால் அபரிமிதமாக வரும் என்பதை காதால் கேட்டும் , எழுத்தில் படித்தும் ஏற்கமுடியவில்லை. ஏற்காதவர் செயல்படப் போவதில்லை . தெரியாதது, அலட்சியம், சூன்யம் விஷயமில்லை. பகவான் கூறுவதில் விஷயமிருக்கிறது .
    அவர் கூறுவது " அஞ்ஞானம் ருசிக்கிறது".
    அன்னைக்கு அருகிலிருப்பது அருள்.
    அருளை அதிகமாகப் பெறுபவர் அஞ்ஞானத்தை அதிகமாக இரசிக்க அருளைப் பயன்படுத்துகிறார்.
    விஷயம் விஷயத்திலிருக்கிறது.
    விஷயம் நம் இஷ்டத்திலிருக்கிறது (choice).
    Choice இல்லாத நேரமில்லை.
    எதை நாம் இஷ்டப்படுகிறோம் என்பது விஷயம்.
    சிருஷ்டி அமைதியாக அனாதிகாலத்திற்குத் தன்னை அனுபவிக்கிறது.
    பரிணாமம் எந்த நேரமும் பரமனைக் காட்டக் காத்திருக்கிறது.
    மனிதன் எதை இஷ்டப்பட்டாலும் அது பூர்த்தியாகும்.
    • இஷ்டத்தில் இருப்பவன் இறைவன்.
    • இஷ்டம் கிராக்கியிலிருக்கிறது.
    • மறுப்பது மலைபோன்ற ஆனந்தம்.
    • மகத்துவமே மறுப்பதுதானே.
    • மறுப்பதையும் கடந்தது மறந்தது.
    • மறந்ததன் ஆதி மறைந்தது.
    • மறைந்தது ஆனந்தத்திற்காக.
    • ஆனந்தம் தேடுபவன் அனந்தன்.
    • தேடுவது ஆனந்தம்.
    • தேடும் முயற்சியே ஆனந்தம்.
    • தேடுவது சலனம்.
    • சலனமற்றது பிரம்மம்.
    • சலனமற்ற பிரம்மம் சலனத்தை நாடுவது ஆனந்தம்.
    • சலனம் ஆனந்தமானால், சலனமற்றது பெரிய ஆனந்தம்.
    • ஆனந்தமும், பெரிய ஆனந்தமும் சந்திப்பது சிருஷ்டி.
    • சிருஷ்டியும் பரிணாமமும் சந்திப்பது ஜடம்.
    • ஜடம் சச்சிதானந்தம்.
    • ஜடத்தை சச்சிதானந்தமாக அறிவது ஸ்ரீ அரவிந்தம்.
    • ஜடம் உணரும் ஆனந்தம் (delight) சச்சிதானந்தம் (bliss) உணருவதை விடப் பெரியது.
    • ஸ்ரீ அரவிந்தம் மூன்றாம் நிலைக் காலத்தில் சத்தை ஜடமாக bliss யை delight ஆகக் காணும் பரிணாமத்தை நமக்களிக்கிறது.
    • மனிதன் இஷ்டப்பட்டால் தெய்வமாகலாம்.

தாயார் - 20 ஆண்டு சேவை , புதுப்பாடமுறையைச் சாதித்தது , பலனைக் கண்டுபிடித்தவர் தங்களுக்குப் பணம் ஏராளமாகக் காத்திருக்கிறது என்று அறியவில்லை :

  • உலகில் வேலை செய்யாதவர் பெரும்பாலோர் , பிறருழைப்பால் உயிர் வாழ்வதுண்டு, பிறருழைக்க உதவியாயிருப்பதுண்டு . சொந்தமாக உழைத்துச் சாதிப்பவர் உயர்ந்தவர் . அதைச் சேவையாகச் செய்பவர் உன்னதமானவர். நாம் சொல்பவர்கள் செய்த சாதனை அரிபொருள். பணம் சாதித்தவரை நாடி விரைந்தோடி வரக் காத்திருக்கிறது .
    • உண்மையான சாதனை உலகில் அரிபொருளானாலும், நாட்டில் பல ஆயிரம் பேருண்டு .
    • அவர்கட்குப் பொதுவாகப் பணத்தட்டுப்பாடிருக்காது .
    • அவர்கள் அறியாத ஆன்மீக உண்மை " பணம் அவர்களை நாடி வந்து சேவைக்கு அபரிமிதமாகப் பயன்படத் துடித்துக்கொண்டு இருக்கிறது ".
    • அப்படி வாராததற்கு ஏராளமான காரணங்கள் உண்டு :
      • நாம் பணத்தை நாடக்கூடாது என்ற நினைவு .
      • பணம் உயர்ந்தது , நமக்குக் கிடைக்காது என்ற அவநம்பிக்கை
      • பணத்தைச் சம்பாதிக்காமல் பெறுவது தவறு என்ற நம்பிக்கை.
      • தங்கள் சேவைக்கும் , பணத்திற்கும் உள்ள தொடர்பை அறியாதது .
      • பணம் வரத் தடையான பழக்கங்கள் - விரயம் , சிக்கனம் , அலட்சியம் , தகுதியற்றவர்க்குச் செய்யும் உதவி போன்றவை .
    • அப்படிப்பட்டவர்கள் தங்களிடமுள்ள தடைகளை விலக்கினால் பணம் பிரவாகமாக வரும். அது நெகட்டிவாக ஒத்துழைப்பது .
    • பாஸிட்டிவாக ஒத்துழைக்க பணத்தின் தன்மையையும் , தங்களுக்குள்ள உரிமையையும் அறிந்து போற்றுவது . அது பிரவாகத்தைப் பெருவெள்ளமாக்கும்.
    • இதுவரை செய்வது கடினம் . ஆனால் செய்யலாம் . அப்படிப் பெருவாரியாக வந்தது சரியான முறையில் பயன்படுத்த (organise) தொடர்ந்து சேவை அடுத்த அடுத்த கட்டங்கட்கு வளரவேண்டும் .

தொடர்ந்த வளர்ச்சி நிரந்தர மலர்ச்சியை நிலையாக்கும் . வளர்ச்சி நின்றால் தளர்ச்சி. அது வரக்கூடாது.

  • சமூகம் தனிமனிதனுக்குத் தேவையான ஆயிரம் விஷயங்களை அபரிமிதமாகச் சேமித்துவைத்திருப்பதை மனிதன் அறியவில்லை. உதாரணமாகப் பட்டம் எடுக்கவில்லைஎனப் பதைப்பவருண்டு . இதற்கிருந்த தடைகள் எல்லாம் உதவியாக மாறிவிட்டது . ஆர்வமுள்ள எவரும் இன்று படித்துப் பட்டம்பெற விரும்பினால் கடைசி பட்டம் (Ph.D.) எடுக்கும்வரை சமூகம் ஏராளமான உதவியைப் பெற்றுள்ளது . அதேபோல் ரூ .10,000 மொத்தமாகக் கடன்பெற முடியாதவர்க்கு இன்று இலட்சம் , கோடி கிடைக்கும் ஏற்பாடுகள் உலகில் பலித்து நம் நாட்டிற்கும் வந்து விட்டன எனப் பெரும்பாலோர் அறியவில்லை . எந்தப் பயன்தரும் வேலைக்கும் பணம் தடையின்றிக் கிடைக்கும் என்பதை எதற்கும் உபயோகம் இல்லாதவர் , திறமையற்றவர் , சோம்பேறிகள் , வேலை செய்யப் பிரியப்படாதவர் " எங்கே " எனக் கேட்பார்கள் . பணம் அவர்களுக்கு இல்லை . படிப்பு , பணம் , பதவி , சாதனை , வீடு , கார் , வேலை , சௌகரியம் ஆகியவை உரியவர்க்கு உபரியாக உண்டு . இவை ஒவ்வொன்றையும் பற்றித் தனித்தனியாகக் கட்டுரை எழுதலாம். அன்பர் சிறிதளவு பெற ஆரம்பித்துவிட்டால் , ஏராளமாக எழுதி அவர்கள் முயற்சியை முழுமைப்படுத்தலாம் .

தொடரும் .....

 

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

அன்னையை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளம் , மனிதன் தன் புனித எண்ணங்களையும் , தான் போற்றும் பண்புகளையும் , அர்த்தமற்றவை எனவும் , தடை எனவும் உணருதலாகும் . பிரியம் , விஸ்வாசம் , நேர்மை ஆகியவை சிறிய மனித எல்லைக்குள் இருக்கும் குணங்கள் என அறிவது அன்னையை நாம் நெருங்குவதாகும் . மிகவுயர்ந்த பண்புகளும் மனிதன் அன்னையை முழுவதும் அடைவதைத் தடுக்கும் என்பதே உண்மை என்றாலும் , இன்றுள்ள மனிதன் தன் சிறு ஆசைகள் முழுவதையும் திருப்தி செய்வதிலேயே முனைந்து உள்ளான் .

உயர்ந்த பண்பும் உதவாது . சிறு ஆசைகட்கு இடமில்லை .

*****
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஆன்மாக்களுக்குள்ள தொடர்பு அன்பில்லாத தொடர்பாக இருக்க முடியாது .

அன்பில்லாத தொடர்பு ஆன்மாவுக்கு இல்லை .

******* 

Comments

1/1/11 For points under

1/1/11

 For points under conversation  

தாயார் - மேலிருந்தால் இரண்டும் (indulgence, enjoyment) ஆனந்தம் .

Point 4

  Please indent all the points under sub point 10 , by few spaces.

For points under conversation  

 தாயார் - எங்கு அன்னை நேரடியாக வரமுடியவில்லையோ , அங்கு அடுத்தவர் மூலம் வருகிறார் .

 Point 4 - Sub point 7  - Mother Tersa     -  Mother Teresa 

 Point 4 - Sub point 9  - ஆரோவில்ல்  -  ஆரோவில்லில்

 
 8/1/11
For points under
  The Life Divine ஐ எப்படிப் படிக்கவேண்டுமோ ...
  Point   5   -  Please indent all the sub points under this point, by few spaces
  Point 16   -  choice இ ஷ்டம்  -  choice இஷ்டம்    
 
For points under
  தாயார் - நாம் செய்வது நமக்கே திரும்பிவருவது நாம் அறிவது இல்லை
  Point  3  -  46 "47 "48 இல் -   '46 '47 '48 இல்
  Point  3  -  Para 2  -  வெளி - யேறினார்   -    வெளியேறினார்
  Point  3  -  Please remove extra blank line that is at the end of the second para of this point
 
01/15/11
For points under conversation
  தாயார் - நாம் செய்வது நமக்கே திரும்பிவருவது நாம் அறிவது இல்லை
  Point 3
      Please indent the paragraph starting with following lines by few spaces so that they are aligned previous sub points
      "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்ற பழமொழி வாழ்வின் சுபாவத்தைக்
   Point 6 starting with இந்திய சுதந்திரம் மூலம் நாம் அறிபவை
      Sub point 4 starting with வேண்டியவர்களிடம் அவர்கள் குறைகளை ஏற்கிறோம்
          For the point starting with பிள்ளை போதைமருந்து
                Line 3  -  தாராமருக்கலாம்   -    தாராமலிருக்கலாம்
          For the point starting with கதையில் தாயார் பையன்
                Line 1  -   ஆசைப் - படுகிறார்     -    ஆசைபபடுகிறார்
 
For points under conversation
  தாயார் - 20 ஆண்டு சேவை , புதுப்பாடமுறையைச் சாதித்தது , பலனைக் கண்டுபிடித்தவர் தங்களுக்குப் பணம் ஏராளமாகக் காத்திருக்கிறது என்று அறியவில்லை
 
   Please indent the point starting with following lines as it is sub point no. 8
       சமூகம் தனிமனிதனுக்குத் தேவையான ஆயிரம் விஷயங்களை அபரிமிதமாகச் சேமித்துவைத்திருப்பதை மனிதன் அறியவில்லை
            :
            :  
       அன்பர் சிறிதளவு பெற ஆரம்பித்துவிட்டால் , ஏராளமாக எழுதி அவர்கள் முயற்சியை முழுமைப்படுத்தலாம்
 

For points under

For points under conversation  

 கணவர் - தலை சுற்றுகிறது:

 Point 1 -  கணவருக் குத்   -     கணவருக்குத்

 Point 1 -  Sub Point  3  -  சத்தியா - கிரஹத்தாலோ -   சத்தியாகிரஹத்தாலோ

For points under

For points under conversation  

தாயார் - பிறரைச் சந்தோஷப்படுத்தி தாம் சந்தோஷப்படும் மனமில்லை

 For Point 1 starting with வலியும், சந்தோஷமும் எதிரொலி ...

  Please remove extra blank line after Line 1

  Please indent four sub points under this point , by few spaces

  Please indent all the points(starting with diamonds) under the fourth sub-point by few spaces

For Point 2 starting with உபநிஷதச் சட்டம் , all in each, each in allஒருவர்அனைவரிலும்  

  Please change  all in each, each in allஒருவர்அனைவரிலும்     -   all in each, each in all, ஒருவர்அனைவரிலும் 

  Please indent three sub points under this point , by few spaces

  For the third sub point, please indent the points under it by few spaces



book | by Dr. Radut