08.அஜெண்டா
“Agenda”
Here I have everything except lions.
Lions too are there invisible.
Lions smile on Mother like children.
சிங்கம் தவிர மற்ற எல்லாம் இங்கிருக்கின்றன.
சிங்கங்களும் இங்கு கண்ணுக்குத் தெரியாமல் இருக்கின்றன.
குழந்தைகள்போல் சிங்கங்கள் அன்னையைப் பார்த்துச் சிரிக்கின்றன.
. அன்னை தம் அறையைப் பற்றி மேற்கண்டவாறு பேசுகிறார்.
. இறைவனின் கருணைக்கு, சிங்கத்தின் பலம் வந்தால் அது குழந்தை போலாகும்.
. அசுரச் சூறாவளியில் வீடுகள் 3, 4 நிமிஷத்தில் நொறுங்கிய பொழுது அன்னையின் சூழல் ஒரு வீட்டைக் காப்பாற்றியதை அறிந்த அன்பர்கள் இந்தச் சிங்கங்களின் பலத்தை அறிவார்கள்.
. அன்னையின் அருளுக்குச் சிங்கத்தின் பலம் உண்டு.
. அது பலத்தால் கனிந்து குழந்தையுள்ளம் பெறும்.
. எளிமையான அருளுக்கு வலிமை மிகுந்தால், அது சூட்சும லோகம் அடையும்.
. சூட்சும லோகம் அடைவதால் கண்ணுக்குத் தெரியாது.
. கண்ணுக்குத் தெரியாத பலம் கடவுளின் வலிமை.
. அன்னை அருளுக்குப் போர்முனையும் குடும்பச் சூழலும் ஒன்றே.
. அருளால் வாழ அன்பர் விரும்பினால்,
. அதிகாரம் செய்து அடக்க வேண்டியவரை,
. அன்பால் அரவணைக்க முடியும் என்றறிய,
. மனம் அதிகாரத்தையும், காரத்தையும் கைவிட்டு,
. அன்பையும், பிரியத்தையும், பொறுமை, நிதானத்துடன் நாடினால்,
. நாடியது நம்மைத் தேடிவந்து நெஞ்சை அடைந்தால்,
. சிங்கம் உள்ளே வரும், குழந்தைபோல் சிரிக்கும்.
. நமக்குச் சிங்கத்தின் பலமிருப்பதை நம் உலகம் அறிந்து ஏற்கும்.
. உலகில் அடாவடிக்காரன், போக்கிரி, நம்மைவிட்டு ஒதுங்கிப் போவான்.
. அவனை எதிர்கொள்ளும் நிலை வந்தால், அவனுக்குத் திராணி இருக்காது.
*******
ஸ்ரீ அரவிந்த சுடர் அகம் புறத்தை நிர்ணயிப்பதை ஆன்மா தன் பிரச்சினைகளை மறப்பதென்கிறோம். ஆன்மா பிரச்சினையால் பீடிக்கப்பட்டது, புறம் அகத்தை ஆளும் நிலையாகும். புறம் அகத்தை நிர்ணயித்தால் ஆன்மாவுக்குப் பிரச்சினையுண்டு. |
ஸ்ரீ அரவிந்த சுடர் ஆசையை அடக்குவது நடத்தை. ஆசையைப் புரிந்து அழிப்பது பண்பு. பீறிடும் சக்தியை மனதால் அடக்குவது நடத்தை.உணர்வின் பக்குவம் பண்பு. ஆசையின் ஆன்மாவை எழுப்பி திசையை மாற்றுவது திருவுருமாற்றம். நடத்தையும், பண்பும் திருவுருமாற்றத்தில் முடியும். |
- Login to post comments