10.Spiritual Opulence
Spiritual Opulence
இத்தலைப்பில் சொஸைட்டி ஓர் ஆங்கில நூல் வெளியிட்டுள்ளது.1956-இல் சத்தியஜீவிய சக்தி வந்தது, அது உலகில் இன்றுவரை செயல்படுவது, மனித வாழ்வில் அது ஏற்படுத்திய மாற்றங்கள், கல்வி, விஞ்ஞானம் என்ற அத்தியாயங்களைக் கொண்டது இந்நூல்.
ஒன்று இச்சக்தியால் நூறாகப் பெருகுவதை தம் வாழ்வில் ஒருவர் காண விரும்பினால் அவர் செய்யக்கூடிய சோதனை கடைசி அத்தியாயம். அதைப் படித்துச் சோதனை செய்யலாம். சோதனையைச் சிறப்பாகச் செய்ய விரும்புவோர் அதன் முன் அத்தியாயமான "யோகம்'' என்பதைப் படிக்க வேண்டும். அவ்வத்தியாயங்களின் சுருக்கம்:
- சத்தியஜீவிய சக்தி புவியில் உள்ளது என நம்புபவர்க்குரியது இச்சோதனை.
- சோதனைக்காக மனத்தைத் தயார் செய்ய வேண்டும்.
- தயார் எனில் சோதனையில் மனத்தூய்மை முழுமையாக இருக்க வேண்டும்.
- சோதனை நம்பிக்கையால் நடப்பதால், கேள்வி எழுப்பக்கூடாது; எதிர்பார்க்கக்கூடாது.
ரூபாய் 2,300/-இல் சென்னைக் கம்பெனியில் வேலை செய்தவர் ரூ.5000/- சம்பளத்தில் வேலை தேடிக்கொண்டிருந்தபொழுது இச்சக்தி அவர் வாழ்வில் செயல்பட்டு அமெரிக்காவில் மாதம் 1½ லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை பெற்றுக்கொடுத்தது.
-ஒன்று 100ஆக, 1000மாகப் பெருகுவது இதன் அம்சம். 4, 5 மடங்கு பெருக்கம் அன்பர் திறமையால் ஏற்படுவது, சக்தி செயல்படவில்லைஎனப் பொருள்.
-கொடுமைக்குட்படுத்தப்பட்டவர் இதனால் கொடுமையிலிருந்து உடன் விடுதலை பெற்றார்.
*******
- Login to post comments