Skip to Content

06.ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

                                                 (சென்ற இதழின் தொடர்ச்சி....) N.அசோகன்

201. பரிணாம வளர்ச்சிக்குப்பின் ஏதேனும் ஒரு நோக்கம் இருக்கிறதா என்று விஞ்ஞானிகள் கூற மறுக்கிறார்கள். ஆனால் பரிணாம வளர்ச்சியின் போக்கை கவனித்தால் அதில் ஒரு முன்னேற்றம் தெரிகிறது. பரிணாம வளர்ச்சிக்குப் பின்னால் ஒரு நோக்கம் இருந்தால்தான் இந்த முன்னேற்றம் என்பது சாத்தியமாகும்.

202. நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும் பரிணாம வளர்ச்சியின் கடைசி கட்டம் மனிதன் இல்லை. மனிதனைத் தாண்டி பரிணாம வளர்ச்சி சத்திய ஜீவிய மனிதனை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது.

203. இயற்கை அதற்குத் தெரிந்த இயற்கை தேர்வு என்ற முறையில் உயிரினங்களுக்கு உதவக்கூடிய உடலளவிலான நல்ல மாற்றங்களைக் கொண்டுவர பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறது. ஆனால் மனிதனோ தன்னுடைய அறிவு பலத்தைக் கொண்டு உயிரினங்களிடையே நல்ல உடல் மாற்றங்களை இருபது,முப்பது வருடங்களிலேயே கொண்டு வந்து விடுகிறான்.

204. மரபியல் என்ஜீனியரிங் என்பது நன்மை பயக்குமா அல்லது தீமை விளைவிக்குமா என்பது நம்முடைய அணுகுமுறையில் தான் இருக்கிறது.எந்த ஒரு விஞ்ஞான முறையும் நடுநிலையானது. நாம் அதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்துதான் விளைவுகள் வருகின்றன.

205. சுற்றுப்புறச் சூழல் கெடுகிறதுஎன்பது மனிதனால் உண்டாகின்ற கழிவுகளை இயற்கை ஏற்றுக்கொள்கின்ற அளவையும் தாண்டி, மனிதன் இயற்கை வளங்களை உபயோகப்படுத்துவதால் வருகின்றது.

206. மற்ற உயிரினங்களும், தாவர இனங்களும் நம்முடைய உபயோகத்திற்கு இருப்பதாக நாம் நினைக்கிறோம். இது மனிதனுடைய குறுகிய கண்ணோட்டத்தைக் காட்டுகிறது.

207. இயற்கையை அதிகாரம் செய்வதற்குப் பதிலாக இயற்கையோடு ஒன்றிணைந்து செயல்பட மனிதன் முன்வந்தான் என்றால், சுற்றுப்புறச் சூழல் கெடுவது, ஜனத்தொகைப் பெருக்கம் போன்ற விளைவுகள் இருக்காது.

208. மரபியலின் இரகசியங்களை Vatsen மற்றும் Crick என்ற இரு விஞ்ஞானிகளும் கண்டறிந்தார்கள். ஐன்ஸ்டைன் அவர்கள் energyக்கும், matterக்கும் இடையே உள்ள தொடர்பைக் கண்டறிந்தார். ஆனால் படைப்பின் பின்னிருக்கும் இரகசியங்களை ஸ்ரீ அரவிந்தர் மற்றும் அன்னை போன்ற பெரிய மகான்களால் தாம் கண்டறிய முடிந்தது.

209. அணுக்களை இணைப்பதன் மூலம் ஏராளமான எனர்ஜியை உற்பத்தி செய்ய முடியும்என்று அணுசக்தி விஞ்ஞானிகளுக்குத் தெரிந்தாலும்,Nuclearஐக் கட்டுப்படுத்த வழிதெரியாமல் இருக்கிறார்கள். அதனால் வருங்காலத்தில் சத்தியஜீவியப் பிறவிகள் சூட்சும உலகுகளிலிருந்து அளவு கடந்த எனர்ஜியை எடுத்துக்கொள்வார்கள் என்று தெரிகிறது.

210. கருக்கலைப்பு, கருணைக்கொலை போன்றவை சம்பந்தமான கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வருவது சாத்தியமில்லை. நல்லது,கெட்டது என்ற நிலையைத் தாண்டி சத்தியஜீவியக் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால்தான் இவைகளைப் பற்றிய உண்மை என்னவென்று விளங்கும்.

211. போர் என்பது நாகரீகத்திற்கு ஊறு விளைவிக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் தேவையில்லாத பழக்கவழக்கங்கள் மற்றும் ஸ்தாபனங்களை, போர் உடைத்தெறிகிறது.மற்றும் அவ்வகையில் பரிணாம வளர்ச்சியை விரைவுப்படுத்துகிறது என்பது எல்லோருக்கும் தெரியாத விஷயம்.

212. மனிதனுக்குச் சண்டையிடும் குணமும், நிலத்தை ஆக்கிரமிக்கும் குணமும் இருப்பதால்தான் போர்களே நிகழ்கின்றன. மனிதனுக்கு ஒரு பக்குவம் வந்து, இத்தகைய உந்துதல்களை விடுகின்றபட்சத்தில் தான் போர்கள் நடப்பதே நிற்கும்.

213. மருத்துவச் சிகிச்சையால் நோய் குணமாகிறதாஎன்பது சிகிச்சை முறைகளை மட்டும் பொருத்ததில்லை. நோயாளியினுடைய தன்னம்பிக்கையையும் பொருத்தது.

214. உண்மையான மாத்திரைகளைப்போல போமாத்திரைகளும் நோய்களைக் குணப்படுத்துகின்றனஎன்பதை வைத்துப் பார்க்கும்பொழுது நோயைக் குணப்படுத்துவதில் நோயாளியின் மனநிலை எவ்வளவு முக்கியம்என்பது தெரிகிறது. போமாத்திரைகளை நோயாளி உண்மை மாத்திரைஎன்று நம்பும்போது அவனுடைய உடல் அந்த நோயை எதிர்க்கக்கூடிய பலத்தைப் பெற்றுவிடுகிறது.

215. மனிதன் காட்டுவாசியாக அலைந்துதிரிந்த ஆதிநாட்களில் அவனுடைய உடல்நலம் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் நாகரீக வாழ்க்கையின் வசதிகள் அவனுடைய அலைச்சலைக் குறைத்துவிட்டன. இதன் விளைவாக அவனுடைய உடற்பயிற்சி குறைந்துவிட்டது. இதன் காரணமாக அவனுடைய உடல்நலம் குறைந்து, சர்க்கரைவியாதி,இருதயநோய் மற்றும் சிசேரியன் டெலிவரி ஆகியவை அதிகரித்துவிட்டன.

216. மனஅழுத்தம் மற்றும் மனவேதனை போன்றவை கண்ணுக்குத் தெரியாத சூட்சும அம்சங்கள். இருந்தாலும் கெட்டுப்போன உணவு, அழுக்கான தண்ணீர், மாசுப்பட்ட காற்று போன்றவை எப்படி நம் உடல்நலத்தை பாதிக்கின்றனவோ அம்மாதிரியே மனஅழுத்தமும், மனவேதனையும்கூட நம் உடல்நலத்தை பாதிக்கும்.

217. நம் மனநிலை மகிழ்ச்சிகரமாக இருக்கும்பொழுது அது நம் உடம்பை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைத்துக்கொள்ள உதவுகின்றது.மகிழ்ச்சி நம் உடம்பிற்கு ஒரு புது தெம்பைக் கொடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.

218. உடல்நலத்திற்கும், சுத்தத்திற்கும் தொடர்பு உண்டு. நாகரீக வாழ்க்கையில் வீடுகளிலும், பொது இடங்களிலும் சுத்தம் அதிகரித்து இருப்பதால், முன்பு அடிக்கடி பெருமளவில் வந்துகொண்டிருந்த தொற்றுவியாதிகள் இப்போது வருவதில்லை.

219. ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்களும் தம்முடைய உடல்களை நல்ல conditionஇல் வைத்திருப்பது அவசியம். அப்படி இல்லையென்றால், இறங்குகின்ற ஆன்மீக சக்தியை சாதனையாளரின் உடம்பு தாங்க முடியாமல் பாதிப்பிற்குள்ளாகும்.

220. முகம் பிரகாசமாகவும், மேனி பளபளப்பாகவும் இருப்பது நல்ல உடல் நலத்திற்கு அறிகுறிகள். ஆகவே, இவையிரண்டும் இருக்கும்பொழுது உடம்பு சரியில்லைஎன்று சொல்வதில் அநேகமாக உண்மை இருக்காது.

221. ஒருவரின் கெட்ட எண்ணம் அடுத்தவரின் உடல்நலத்தை பாதிக்கலாம். அம்மாதிரியே ஒருவரின் நல்லெண்ணமும் அடுத்தவரின் உடல்நலத்தைத் தேற்றவும் உதவலாம்.

தொடரும்....
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

நாம் யாருக்குப் பணிகின்றோமோ அவரே நம்மை அதிகாரம் செய்ய முடியும். சூட்சும உலகில் உன் எதிரியிடம் தொடர்புகொண்டாலும், அவனால் உன்னை அதிகாரம் செய்ய முடியும்; அழிக்க முடியும். எந்த அளவில் தொடர்பு ஏற்பட்டாலும், எதிரிக்குச் சாதகமாக முடியும். சில சமயங்களில் நினைத்தாலும் அத்தொடர்பு ஏற்படும்.

நினைவாலும் விலக்க வேண்டிய தொடர்பு.

ஸ்ரீ அரவிந்த சுடர்

சமூகம் கடந்ததை மறந்து, நடப்பதைக் கருதும். மனம் கடந்ததை மனதில்கொண்டு இன்று கசங்கும். ஆன்மீக வாழ்வு கடந்ததையும், எதிர்காலத்தையும் சேர்த்து இன்றைய வாழ்வைச் சிறப்பிக்கின்றது. அது முதிர்ந்து திரிகால திருஷ்டியாகிறது.

திரிகால திருஷ்டியின் முழுமையான நிகழ்காலம்.


 


 


 


 



book | by Dr. Radut