Skip to Content

07.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

இரண்டு வருடங்களுக்குமுன்பு ஸ்ரீ அன்னையைப்பற்றி அறிந்திருந்த சமயம். தைப்பொங்கலுக்குமுன்னர் இரண்டு பெண்களை உடன் வைத்து வீட்டைச் சுத்தம்செய்துகொண்டுஇருந்தேன். காலை பதினொரு மணி அளவில் என் பெண்குழந்தை, 4 வயதிருக்கும், பக்கத்தில் உள்ள குருக்கள் இல்லத்தில் விளையாடிக்கொண்டிருந்தவள், அழுதுகொண்டே வந்தாள், நாய் கடித்துவிட்டது என்று. பதறிப்போய் பார்த்தால் முகமெல்லாம் கீறல், வீங்கிப்போய்இருந்தது. நான் உடனே கைப்பையை எடுத்து T.V.S.50இல் மாட்டி, எனது குழந்தையையும் முன்னால் உட்கார வைத்து, டாக்டரிடம் அழைத்துச்சென்றேன். செல்லும் வழியில் பை விழுந்துவிட்டதை கவனிக்கவில்லை. டாக்டரிடம் போய் நின்றபோது பார்த்தால், கைப்பையைக் காணவில்லை. என் பெண்ணிடம் கேட்டவுடன்,அவள் நிதானமாக, "நீ தான் அன்னையிடம் கேட்டால் உடனே கிடைக்கும் என்று கூறுவாயே, ஏன் டென்சன் ஆகிறாய்?''என்று கூறினாள்.

டாக்டரைக் கூட சந்திக்காது, உடனே அன்னையின் திருவுருவப் படத்திற்குமுன் அமர்ந்து ரூ.100/- காணிக்கை வைத்துவிட்டு,பிரச்சினைகளைக் கூறி அழ ஆரம்பித்தேன். பிறகு, சிறிது மனம் சமாதானம் அடைந்து திரும்பி சென்ற வழியே மீண்டும் வந்தபோது,ஒரு வீட்டில் இருந்து என்னை அழைத்து, என்ன தேடுகிறீர்கள் என்று கேட்டு, பின்னர் எடுத்துவைத்திருந்த கைப்பையைக் கொடுத்தனர்.நிம்மதிப்பெருமூச்சுவிட்டேன். அதில் ரூ.1500/-உடன், railway pass, ID card, credit card, பீரோ சாவி போன்ற எல்லாப் பொருட்களும் இருந்தன.ஸ்ரீ அன்னைக்கு நன்றி தெரிவித்துவிட்டு டாக்டரிடம் சென்றால், அவர் rabis ஊசி போடவேண்டும் என்று கூறினார். வீட்டிற்கு அருகில் எப்போதும் வாங்கும் மெடிக்கல் ஷாப்பிற்கு வந்தேன். அங்குள்ள pharmicist,"அவசரப்படாதீர்கள். ஒரு சிறு குழந்தைக்கு இந்த ஊசிபோட்டு ரியாக்ஷன் ஆகி இரண்டு மாதங்களுக்கு முன் இறந்துபோய்விட்டது. அந்த நாய்க்கு rabis ஊசிபோட்டிருந்தால், குழந்தைக்குப் போடவேண்டாம். எந்த veterinary doctorரிடம் நாயைக் காண்பிக்கிறார்களோ, அவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு மேற்கொண்டு செய்யுங்கள்''என்றார். நானும் சரி என்று, மாலை 5.30 மணிவரை காத்திருந்துவிட்டு veterinary doctorரிடம் போய் நாய் பெயரைச் சொன்னவுடன் அவர், "குருக்கள் வீட்டு நாய்க்கு மூன்று மாதங்களுக்குமுன்னால்தான் rabis injection போட்டிருக்கிறேன்''என்று கூறிவிட்டு, என் குழந்தையின் முகத்தையும் நன்றாகப் பார்த்து,"இது நாய் கடித்ததால் ஏற்படவில்லை. நகக்கீறல்கள்தாம். இரண்டு நாட்களில் சரியாகிவிடும். வெறும் tetenus toxin injection போட்டால் போதும்''என்று கூறினார். ஸ்ரீ அன்னைக்கு நன்றி கூறிவிட்டு வீட்டிற்கு வந்தேன்.

காலையில் மலைபோல் தோன்றிய பிரச்சினைகள் மாலையில் பனிபோல் விலகியது. இது ஸ்ரீ அன்னையின் கருணையே.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனிதனுடைய வளர்ச்சி கண்ணுக்குத் தெரியும். பரிணாமம் கண்ணுக்குத் தெரியாது. ஆழ்ந்த மனதில் ஆன்மா பரிணாம வளர்ச்சியடைவதாகக் கூறுகிறார் பகவான். வாழ்க்கை தனக்கு வேண்டிய ஆன்மீக வளர்ச்சியைப் பெற முனைந்ததில் பெற்ற பலன், மனோமயப்புருஷன். ஆனால்,அது முடிவன்று. பகவான், தனி மனிதனிலுள்ள ஆன்மா வளரவேண்டும்என்கிறார். இதை எய்த ஆன்மாவே தன்னை உணரவேண்டும். தன் பரிணாமவளர்ச்சியை நாடவேண்டும்.அதன் பலனாக, சைத்தியப்புருஷன் வெளிப்படுவான்.ஈஸ்வரனும் அடுத்த கட்டத்தில் வெளிப்படுவான்.

வளர்ச்சி தெரியும். பரிணாமம் தெரியாது.


 



book | by Dr. Radut