06. சாவித்ரி
சாவித்ரி
P.64 In her fancies of the moment and its mood.
அவள் நினைவும் நேரத்தின் வேகமும்.
. இவ்எளிய உலகின் எழில் நடை.
. ஊடுருவும் பார்வைக்கு அவற்றின் ஆழமும் விநோதமும் தெரியும்.
. இயற்கையின் எளிய ரூபங்கள் உண்மையில் அற்புதத்தின் அலங்காரம்.
. சாட்சியின் பார்வை வலிமையின் அசைவைக் காணும்.
. அவள் பிரபஞ்ச நர்த்தனம் திரை மறைவிலிருந்து எழும்.
. எழுச்சி தரும் நிகழ்ச்சி, ஆன்மாவுக்குரிய தண்டனை.
. அவள் சக்தி நடத்துகிறது; ஆதரிக்கும் அவள் கரம் அழிக்கும்.
. மோனத்தில் அவள் சொல், நம் இதயக்கதவைத் தட்டும்.
. சிகரத்தைக் கடந்த சிறந்த மௌனம்.
. அவள் அடியும், நுனியும் ஆகர்ஷிக்கும் நம் ஆன்மா.
. வாழ்வெனும் நம் ஆடையை புனையும் அவள் செயல்.
. நம்மைக் கண்டும், இழந்தும் நிற்கும் அவள் முழுமையான புனிதம்.
. இனிமையும், கசப்பும்; பெருந்தன்மையும், கயமையும்.
. பயங்கர அழகின் பவித்திரம்.
. பிரபஞ்சத்தின் அவள் கட்டிய பிதிராஜ்ஜியம்.
. அவளுடைய சூட்சுமமான பெரிய சட்டங்கள் அவனை ஆட்கொள்ளும்.
. அவள் மடியில் தவழும் குழந்தை அவன் ஜீவியம்.
. அகன்ற அவள் வீச்சு அவன் கருத்து நடம் செய்யும் மைதானம்.
. அவள் அகன்ற சோதனைக்கு அவன் ஜீவன் ஆராய்ச்சிக்கூடம்.
. காலத்தின் ரூபங்களை ஞானத்துடன் கட்டிப் போடுபவள்.
. குறுகிய மனத்தின் பெருகி வரும் தவறு.
. விதியின் தோற்றமான விளையாட்டான சமயம்.
. மரணமெனும் ஆட்டம்; வேதனை எனும் இருள்.
. அழியாத ஜீவனின் மாறிய போராட்டம்.
. புவியெனும் முழுமையில் ஆத்மா எனும் சூட்சும அணு.
. அவள் கைவண்ணத்தின் வர்ணம் அவன் உடல்.
. மரணத்தின் அரங்கில் உயிரோடுள்ள ஆத்மா.
. ஜீவனின் சந்துபொந்துகள்மூலம் அவன் காலத்தைக் கடந்தான்.
. இருளிலிருந்து மரணமிலா ஜோதிக்கு அவளைக் கொண்டு சேர்த்தான்.
. இப்பெரும் சரணாகதி அவன் சுதந்திரத்தின் புனிதச் சிகரம்.
. பிரபஞ்சத்தைக் கடந்த அவனது சக்தி அவளைச் சரணடைகிறது.
. பிரபஞ்ச அஞ்ஞானமெனும் அவளுடைய புதிர்.
. அவளுடைய புரியாத புதிர்.
. அழியும் அவதியில் எழுந்த ஜீவன்.
. அவளிட்ட அச்சில் அவன் தன்னை வார்க்கிறான்.
****
ஸ்ரீ அரவிந்த சுடர் மனிதப் பூரணம் (perfection) என்பது குறையான நிலையில் பூரணமான வெளிப்பாடு. |
ஸ்ரீ அரவிந்த சுடர் வாழ்வின் அமைப்பு முறையைச் சொல்லி, சத்தியஜீவிய அமைப்புக்கு நம்மை பகவான் போகச் சொல்லும்பொழுது,இடையேயுள்ள அமைப்புகளை - உணர்வு, மனம் -புறக்கணிக்கிறார். ஏனெனில், உடலின் அமைப்பு, உண்மையில் மனத்தின் அமைப்பாகும். மனமே ஜடத்தை ஆள்வதால் அது உண்மையில் மனத்தின் அமைப்பாகும். முடிவான கட்டமே முதற் கட்டம். |
- Login to post comments