6. சாவித்ரி
சாவித்ரி
P.85 The leaden grip of Matter it can break.
ஜடத்தின் உடும்புப் பிடியைத் தகர்க்கும் அடி.
காலனின் கோபக் கனலைக் கடுமையாக உதாசீனம் செய்தாள்.
க்ஷணத்தின் செயல் யுகத்தின் சிருஷ்டியாகும்.
எண்ணத்தின் எழுச்சி முடித்த முடிச்சு.
லேசான சொல் பாராமுகமாக எழுப்பிய பாரம்.
ஊமையாக உருண்டு திரண்ட சக்தி கட்டவிழ்ந்த நிலை.
புதிரான சமாதிக் குகையின் உட்புறம்.
உடன் உறக்கம் கைக்குத் தரும் வலிமை.
மூச்சு நின்றது. இதயத் துடிப்பும் நின்றது.
காணாததைக் கண்டு, நடக்காததை நடத்தியது.
பேசாத எண்ணம் பாதையின்றிப் போய்ச் சேர்ந்தது.
மௌன உறுதி நிகழ்ச்சிகளை மௌனமாக நடத்தியது.
கை, கால் அசையாமல் காத தூரத்தில் செயல்படும்.
மலை போன்ற அஞ்ஞானம், இக்குட்டையான வாழ்வு.
தீர்க்கதரிசனம் ஒளிப் பிழம்பாய் பிரகாசிக்கும்.
மதுவின் ஆட்டமும் ரௌத்தாக்கினியும்.
உடனுள் தேவதை எழுந்து உலுக்கினாள்.
சர்வ ஞானமும், சர்வ வல்லமையும் உள் நுழைந்தன.
மறைந்துள்ள மலைபோன்ற மகேசனின் சக்தி எழுந்தது.
ஒளிமயமான சக்ரவர்த்தியாய்த் தன்னுலகில் வீற்றிருந்தது.
இக்கடுமையான லோகத்திற்கும் மனம் அரசாள வரும்.
எண்ணமெனும் தெய்வீக தர்க்கம்.
மாறும் நேரத்தில் தாவும் அசைவு.
சிருஷ்டியின் ஆச்சரியம் வரவில்லை.
ஜடத்தின் கண்மூடிச் செயன் திறமை.
அனைத்தும் அதிசயம்; அதிசயத்தால் மாறும்.
இரகஸ்ய இயற்கையின் வமைமிக்க எல்லை.
ஜடமழிந்த பெருவெளியின் ஓரத்தில்,
கட்டுக்கடங்காத பெருமை நிறை சக்தியின் சாம்ராஜ்யம்.
அங்கு மனம் வாழ்வின் ரூபங்களை வரைகின்றது.
ஆத்மா தன் எண்ணங்களை அதன் சக்தியால் பூர்த்தி செய்கிறது.
மலை போன்ற சொற்கள் மகிமையான பார்வை தரும் நிஷ்டை.
பிரிந்த லோகங்களின் தெரியாத தொடர்பு,
அவள் சட்டத்தை ஏற்கும் கற்றுக்குட்டி.
புதிரான அவள் உலகின் பெரும் ஜோதியைக் கொணர்வாள்.
அவன் நிற்கும் இடம் இது. மாய்ந்த உலகில் அவனடிகள்.
***
ஸ்ரீ அரவிந்த சுடர்
கெட்டது என்பது நல்லதால் வெளிப்படுத்த முடியாத முழுமையின் மற்றொரு பகுதியை வெளிப்படுத்துவது என்ற யோகக் கருத்தை சமூகம் அறிந்ததால், இந்த நூற்றாண்டில் சமூக முன்னேற்றம் வளர்ந்தது.
கெட்டதை நல்லதாகக் கொண்டதால் உலகம் முன்னேறுகிறது.
|
- Login to post comments