Skip to Content

03.லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

Occult Science is the knowledge of the subliminal in us as well as the world.

நம்முள்ளும், உலகிலும் அடிமனத்தை அறிவது சூட்சுமச் சாஸ்த்திரம்.

. நமது புலன்களால் அறிவது ஜடலோகம், ஸ்தூல உலகம் எனப்படும்.

. கண்களால் காண்கிறோம்.

. காதால் கேட்கிறோம்.

. மூக்கால் முகர்கிறோம்.

. நாக்கால் ருசிக்கிறோம்.

. கையால் தொடுகிறோம். இவை புலன்களால் அறியப்படுபவை.

. புலன்கள் மேலெழுந்தவாரியானவை.

. நமக்குண்டானவை 5 புலன்கள்.

. மனிதன் 12 புலன்களைப் பெற்றிருந்தான். மனம் வளர ஆரம்பித்தபின் 7 புலன்கள் மறைந்து விட்டன என அன்னை கூறுகிறார்.

. ஆப்பிரிக்காவில் நீக்ரோக்கள் தரையில் காதை வைத்து தொலைவில் வரும் மனிதனை அறிவர்.

. ஒட்டகத்திற்கு 1 மைல் தூரத்திலுள்ள தண்ணீர் தெரியும்.

. யானைக்குத் தொலைவிலுள்ள பள்ளம் தெரியும்.

. நாய், பூனைக்கு எங்குப் போனாலும் வந்த வழி தெரியும்.

. இப்புலன்களை மனிதனும் ஒரு காலத்தில் பெற்றிருந்தான்.

. அடிமனம் நம்மில் உள்ளது; உலகிலும் உள்ளது.

. நாம் மறந்தவற்றை அடிமனம் நினைவு வைத்திருக்கும்.

. இராமன் இலங்கைக்குப் போன வழியும், கிருஷ்ணன் பிருந்தாவனத்தில் விளையாடியதையும் அடிமனம் அறியும். அது உலகின் அடிமனம்.

. நமது அடிமனம் பூர்வஜென்ம ஞானம் உடையது.

. விஷப்பூண்டைப் பார்த்தால் மாடு அதை விஷம் என அறியும்.

. ஆயுர்வேதம் என்பது ஆயுள்வேதமாகும். அதைக் கண்டுபிடித்தது அடிமனம்.

. கை எலும்பு முறிந்துவிட்டால் அடிமனம் அதைப் பார்வையால் கூட்டிவைக்கும்.

. உலகின் சரித்திரம் - நினைவு - சூட்சும உலகில் உள்ளது. அடிமனம் அங்குச் செல்லவல்லது. அதைக் கண்டு அறியவல்லது.

. இதுவரை சிருஷ்டியில் நடந்தவை, இனி நடக்கப்போவது ஆகியவற்றை அடிமனம் சூட்சுமப் புலனால் அறியவல்லது.

. அதற்கு நினைவு இல்லை. பார்வையுண்டு. திரிகாலத்தையும் பார்க்கும் திறனுள்ளது அடிமனம். அதையறியும் சாத்திரம் சூட்சும சாஸ்த்திரம்.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

பெரிய வாய்ப்புகள் வளர்ந்து அருளாக மாறும். மனிதனுடைய சிறுபிள்ளைத்தனமான கௌரவம் அதைத் தடுப்பதுண்டு (தினமும் பிரசாதம் கிடைப்பது அருள். அந்த வாய்ப்பையும் உதறுபவர் உண்டு).


 


 



book | by Dr. Radut