07.சாவித்ரி
"சாவித்ரி"
P.90 An Answer brought to the torn earth's hungry need.
பூமாதேவியின் புத்ரசோகப் பசிக்குரிய பதில்
. இரவு தெரியாததை மறைத்துள்ளது அதைக் கிழித்தெறிந்து,
. மறந்த ஆத்மாவை இழந்தவர்க்கு அதை மீண்டும் தருவது,
. மனித முயற்சியின் புனித முழுமை அங்கு முடிகிறது.
. முரண்பாடான வாழ்வை சுமுகமாக்கும் தெய்வீக விவேகம்.
. முணுமுணுக்கும் மனத்தின் சலசலப்பைக் கையில் ஏந்தி,
. மனித வாழ்வின் குழப்பமான நம்பிக்கையை எடுத்து,
. அவற்றை இனிய மகிழ்வின் எழுச்சியான அழைப்பாக்கி,
. மறைந்து வலிக்கும் மந்திரத்தை விலக்கி,
. வாயில்லாத வலியின் பேச்சற்ற முனகல்,
. இத்தனையும் அனந்தனின் அத்தனையாகும்படி
. யானையான வலிமையின் ஒருமையெனும் இலட்சியம்,
. ஆத்மாவின் அந்தரங்க அபயக்குரலைச் சேர்த்து,
. ஜடமான எண்ணத்தை மாற்றாமல் படித்து,
. ஜடமார்பின் ஸ்மரணையற்ற மயக்கம்,
. தூக்க மயக்கத்தில் உளறும் சொல்லென,
. இழந்த பொன்னிழைகளைச் சேர்த்து அணைத்து,
. இறைவனில் ஐக்கிய இதமான இகவாழ்வெனக் காட்டும்.
. பிரிந்த பிரம்மநிலை தவிர்க்க முடியாத தவறு தவழும் நிலை.
. சிருஷ்டியின் பரிணாமக் குரல் "ஓம்" என ஒலிப்பதைக் கேட்டு,
. ஓம் எனப் பரிணாமம் ஓலமிடுவதை ஒருமையுடன் ஒன்றுவதாகக் கண்டு,
. சொல் ஜோதியின் பிரம்மமாக உயர்ந்து,
. ஜடத்தின் அக்னியை ஜகத்குருவின் அழைப்பென அறிந்து,
. எழாத சொல்லின் எழுச்சியை அழியாத ஆத்மாவின் அழகெனக் கண்டு,
. சத்தியம் சுமுகமாக சத்தியத்தை அணைத்து,
. மாறுபாடாக விரியும் மாநிலத்தின் பரப்பு.
. ஞான ஊற்றின் ஒளிமயமாக ஒபரப்பு.
. பிரிந்து விரியும் பிரியா ஐக்கியம்.
. உலகம் வலம் வந்த மனம் இழந்த ஐயம்.
. சொல்லின் திருஷ்டி சுவையென எழுந்த மூலம்.
. மூலம் தந்த முதலெழுச்சியின் ஆடையெனும் அணிகலன்.
. முடிவான புதிரின் முதற்காண்டமென உருவாகி,
. காலனின் சிருஷ்டி குணமென முக்காலமாகி,
. ஐக்கிய அழகை அலங்காரமாக எழுப்பி,
. கருத்தின் கரு கருகரு என எழும்.
****
-
ஸ்ரீ அரவிந்த சுடர்
கண்டத்தை முடிவானதாகவும், மாற்றமில்லாததாகவும் கருதலாம். அல்லது அகண்டத்தின் ஒரு வெளிப்பாடாகக் கருதலாம். அகண்டத்தைக் கண்டத்தின் சட்டப்படி புரிவது ஒன்று. அடுத்தது இறைவனை எங்கும் காண்பது.
கண்டத்தை முடிவானதாகவும் மாற்றமில்லாததாகவும் கருதலாம்.
- Login to post comments