Skip to Content

11.ஜீவியாஞ்சலி

 

ஜீவியாஞ்சலி

அன்னையே!

எண்ணியவை எண்ணியபடியே

முடிந்திடவேண்டும்.

எண்ணுகின்றவையெல்லாமே நல்லவையாகவே

அமைந்திடவேண்டும்.

உன்னின் திருவடிகளை என்முன்னே என்றும்

நிறுத்திடவேண்டும்.

உன்னருள் செய்யும் காரியங்களில் எல்லாம்

ஒளி வீசவேண்டும்.

அம்மா உன் கருணை இவ்வருடத்தில் பொங்கி

நிறைய வேண்டும்.

அம்மையே அப்பனே உங்கள் சத்தியஜீவிய ஒளி

இன்றிலிருந்து

என்றென்றும் எல்லோருடைய ஆன்மாவில் தங்கி

என்றும் வழிகாட்டிட உன்னன்பு துணை

செய்யவேண்டும்.

தாயே உன் காலடிகளில் சரணடைகின்றேன் - என்

தாயே நீ என்னுள் நின்று நிலவவேண்டும்.

-



book | by Dr. Radut