Skip to Content

15.சூட்சும உலகம்

சூட்சும உலகம்

India - After Gandhi மகாத்மாவுக்குப் பின் இந்தியா என்ற புத்தகம் படித்தேன். அதில் தமிழ்நாட்டுப் பாடகியின் பெரிய போட்டோ போட்டிருந்தனர். புத்தகம் 800 பக்கம். எப்பொழுது எடுத்தாலும் இந்த போட்டோ உள்ள பக்கமே வரும். இப்பாடகியை காந்தி மண்டபத்தில் 50 ஆண்டுகட்கு முன் ஒரு முறை பார்த்திருக்கிறேன். ஏன் இப்படம் என் பார்வையில்  அதிகமாகப்படுகிறது என எனக்குத் தோன்றியது. இவர் அன்னையை தரிசித்தவர், அதனாலிருக்குமா? எனத் தெரியவில்லை. இவரை மணக்க இருந்தவரை நான் நெருக்கமாக அறிவேன், அது காரணமாகுமா? சுமார் 20நாட்களுக்குப்பின் இவருக்குச் சொந்தமான பத்திரிகை ஆசிரியரிடம் இருந்து கடிதம் வந்தது. அப்பத்திரிகை அன்னையைப் பற்றி எழுத ஆரம்பிக்க இருப்பதைக் கடிதம் தெரிவித்தது.

- உலகில் நடப்பவை முன்கூட்டி சூட்சும உலகில் பூர்த்தி ஆகும்.

- அவை சூட்சுமமாகத் தங்களை அறிவித்தபடியிருக்கும்.

எந்த சிறு காரியமும் பின்வருவதை முன்கூட்டி அறிவிக்கும். கவனமாகப் பார்த்தால் தெரியும். எதை, எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பது அனுபவத்தாலும், பயிற்சியாலும் தெரியும். 37வருஷத்திற்குமுன் வெங்கட்டா நகருக்கு நரிமேடு எனப் பெயர்.அப்பொழுது 2 அல்லது 3 வீடுகள் மட்டுமிருந்தன. ஒரு நாளிரவு 8மணிக்கு 27ஆம் நம்பர் வீட்டிலுள்ள ஒருவரைப் போய்ப் பார்த்தேன்.8 வருஷம் கழித்து நான் இங்கு குடிவரப்போவதை அச்செயல் சுட்டிக்காட்டியிருப்பது இன்று புரிகிறது.

- தாயறியாத சூலில்லை.

- முன்கூட்டி அறிவிக்கப்படாத முழுச் செயலில்லை.

 

****


 



book | by Dr. Radut