Skip to Content

06. சாவித்ரி

P91.91 An anthem pealed to the triune ecstasies

முழுமையான முக்குரல் கீதமாக ஒலித்தது

  • அமரத்துவத்தின் ஆனந்தக் குரலெழுப்பும் நேரம்,
  • பிரபஞ்ச இசையின் பல்லவியின் ஸ்வரம்.
  • வளரும் சுமுகத்தின் கட்டமைப்பு,
  • ரூபமும், குரலும் நிறைந்தெழுந்த நிகழ்ச்சி.
  • கடவுளின் உச்சஸ்தாயியை ஆர்வமாக நாடி,
  • ஜடத்தின் ஆழத்தினின்று ஆத்மாவின் சிகரத்திற்கு,
  • மாறாத அழியாத ஆசனங்கள் மேலுலகக் காட்சி,
  • சொர்க்கலோக ஜோதியின் அரசவைக் காட்சி.
  • ஏகன் வாயில் எழுந்து நிற்கும் எழிலுருவம்,
  • பிரம்மம் கடலென விரியும் கற்பனைக் கருவூலம்.
  • பரமார்த்த சொர்க்கம் பவித்திரமான தோற்றம்,
  • அற்புத அதிசய ஜீவியம் விரிந்து மலர்ந்தது.
  • கட்டவிழ்ந்த சட்டத்தின் கரை காணாத இலட்சியம்,
  • பெருமைநிறை இயற்கை பேருதவி செய்யும் பாதை,
  • பூவுலக நேர்த்தியைப் போற்றும் பெருவழி,
  • வலிமையின் அமைதி வற்புறுத்தும் அரங்கம்,
  • அறிவுக்கண் காணாத அழகு நிறை அகம்,
  • விலகும் மூடியின் அரைகுறை அற்புதக் காட்சி,
  • பேரானந்தப் பெருவெளியின் காட்சி திடீரென எழுந்தது.
  • ஞானத்தின் சூரியஒளி சந்திரமண்டல ஆனந்த வாரி,
  • பரந்து விரியும் பூரிப்பு, கை நீட்டி அழைக்கும்.
  • அழியும் உட லின் வறுமையைக் கடந்து,
  • வாயிலைக் கடந்து, வந்த இடத்தில் உறைந்து,
  • கண்காணாத கடன் கரைகாணாத பிரயாணம்.
  • அறிவுக்கெட்டாத அனந்தம் தரும் ஆபத்தின் கவர்ச்சி,
  • பெருவெளியின் பேரானந்த வேகம்,
  • காலம், இடத்தைக் கடந்த அற்புதம்.

*****

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
ஒரு செயல், அது உள்ள நிலையில் (in its own plane)
சந்தோஷத்தை உற்பத்தி செய்யுமானால் அந்நிலைக்கு அது சரியான செயலாகும்.
 
சந்தோஷப்பட்டால் சரி.

 
ஸ்ரீ அரவிந்த சுடர்
 
நம்முடைய அழகைப் போற்றினால், அறிவை மெச்சினால், செல்வத்தைப் பாராட்டினால் நமக்கு ஏற்படும் சந்தோஷம் பெருமைஎன்ற உருவில் வருகிறது.
நம் நல்ல குணத்தை மற்றவர் பாராட்டும் பொழுது நம்முள் எழும் சந்தோஷம் அடக்கவுணர்வை அளிக்கிறது.
 
நல்ல குணம் அடக்கம் தரும்.

 



book | by Dr. Radut