16.புது உலகம்
புது உலகம்
தன் குறை தெரிந்தால் முன்னுக்கு வரலாம் என்பது வழக்கு. தன் நிறைவு தெரிந்தால் முன்னுக்கு வரலாம்என நான் நீண்ட நாளாகக் கூறுகிறேன். பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒருவர் மருவை எடுக்கும் மருந்து கண்டுபிடித்தார். அதை ஒரு கம்பனி 2000 கோடி ரூபாய்க்குக் கேட்டது. அவர் மறுத்துவிட்டார். அதைவிட அதிகமாகச் சம்பாதித்துவிட்டார். அதன் விலை 7000 ரூபாய், 5 மருக்களை எடுக்க உதவும். அதை ஒருவர் வாங்கினார். முழுப்பலன் கிடைத்தது. அடுத்தவரிடம் கூறினார். அவர் ரூ.30/- ஒரு பாட்டில் மருந்து வாங்கி வந்தார். அது 10 மருவுக்குப் போதும். அதற்கும் முழுப்பலன் இருக்கிறது. மார்க்கட்டில் ஒரே வேலையை 7000 ரூபாயிலும், 30 ரூபாயிலும் செய்து முடிக்கலாம்.
பரம்பரையாக இது மார்க்கட்டின் இரகஸ்யம்.
. ரூ.3000/-க்கு விற்கும் மரத்தை ஒரு சிற்றூரில் ரூ.2,200/-க்கு ஒருவர் வாங்கினார்.
. பெரும்பாடுபட்டு ரூ.96,000/-க்கு பேரம் பேசி முடித்த வேலையை, அவர் பார்ட்னர் ரூ.36,000/-க்கு முடித்தார்.
. ஊரில் நிலம் 15 இலட்சம் ரூபாய் ஓர் ஏக்கர் என விற்பது தெரியாமல் ஒரு விவசாயி ஓர் ஏக்கர் நிலத்தை ரூ.25,000/-க்கு விலை பேசி முடித்தார்.
ஒரு கம்பனி பொருள்கள் வாங்குவதில் ஆராய முயன்றால், இது போன்ற விஷயம் வெளிவரும்.
. இது மார்க்கட் திறமைக்குத் தரும் வாய்ப்பு.
. வாழ்வைக் கூர்ந்து ஆராய்பவருக்கு இதுபோன்ற பெரிய வாய்ப்புகளுண்டு.
. யோகசக்தி வாழ்வில் வேலை செய்தால், நம் வேலைகள் அனைத்தும் வாய்ப்பாகும்.
****
- Login to post comments