Skip to Content

08.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் மதர் ஸ்ரீ அன்னை!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய!

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்தியமயி பரமே!

     நான் அன்னையின் அருளால் B.Pharmacy கோயம்புத்தூரில் படித்தேன்என் விருப்பத்திற்கு இணங்க மதர் என்னை M.B.A சேர்த்தார்கள்அன்னையிடம் தினமும் நான் நன்கு படித்து கோல்டு மெடல் வாங்க வேண்டும், placementஇல் வேலை கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன்மதர் அதேபோல் எனக்கு கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்டாகி 25,000 ரூபாய் சம்பளமும் கொடுத்திருக்கிறார்எல்லாம் அன்னையின் அருள்நான் முன்பெல்லாம் எனக்கு luck இல்லை என்று கருதினேன்ஆனால் இப்பொழுது அன்னையிடம் வந்தபிறகு என்னை எல்லோரும் lucky girl என்று கூறுகிறார்கள்அன்னையின் அருள்தான், இதுவரை கேம்பஸ் இன்டர்வியூ வாராத பெரிய சாப்ட்வேர் கம்பெனியை வரவழைத்து எனக்கு வேலையும் பெற்றுத் தந்திருக்கிறார்கள்இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னஎன்றால் அந்தக் கம்பெனியில் எங்கள் காலேஜில் இருந்து நான் ஒருத்தி மட்டும்தான் செலக்ட் ஆனேன்.  நான் அன்னையிடம் வேண்டியவாறு அன்னை வேலை பெற்றுத் தந்தார்அந்தக் கம்பெனியை மதர் எனக்காகவே வரவழைத்தது போன்று நான் உணர்ந்தேன்எல்லாம் அன்னையின் அருள்நான் ஜூன் மாதம் வேலையில் சேரவேண்டும் என்று அப்பாயின்மெண்ட் ஆர்டரும் கொடுத்துவிட்டார்கள்என் உயிர் உள்ளவரை நான் அன்னைக்கே சமர்ப்பணம்நான் அன்னையின் செல்லப் பிள்ளையாக இருந்து மேலும், மேலும் அன்னையின் அருளை அனுபவித்து சந்தோஷமடைய வேண்டும்நான் அன்னையிடம் இனி எதையும் குறிப்பிட்டுக் கேட்க விரும்பவில்லைஏனென்றால் அன்னைக்கு தன் பிள்ளையின் தேவைகள் தெரியும்அதன்மூலம் அன்னை என்னை என்றும் நிறைவாக வைத்திருப்பார்என்ற நம்பிக்கைஇதனை முழுவதுமாக நான் உணர்ந்துள்ளேன். அன்னைக்கு மிக்க நன்றி.

****


 



book | by Dr. Radut