Skip to Content

14.வரி வடிவம்

வரி வடிவம்

The Secret இரகஸ்யம் என்றொரு புத்தகம் வெளிவந்து 60 இலட்சம் பிரதிகள் விற்றுள்ளது. பரம்பரையாக தெய்வ நம்பிக்கையுள்ளவர்கள் செய்யும் பிரார்த்தனை முறைகளைப் பின்பற்றிப் பலன் பெறும் வழியிது. இன்று பிரபலமாக உலகம் ஏற்கிறது. அவற்றுள் ஒன்று வரி வடிவம். நினைவைச் சொல்லாக மாற்றி, எழுதினால் எழுத்துக்கு சக்தி வரும் என்பது முறை. The Secret சொல்லும் பல முறைகளில் இதுவும் ஒன்று. கம்பனி அக்கௌண்டண்டாக வேலை செய்பவர் வீடு வாங்க முயன்றார். அது 15 இலட்சம். பெற்றோருக்கும் வாங்குவது முதற்கடமை. அதனால் 30 இலட்சம் தொகை தேவை. அதற்குரிய வழி தெரியவில்லையென மனைவியிடம் கூறினார். மனைவி தாம் சமீபத்தில் கேட்டறிந்த முறையைக் கூறினார். கணவர், 'எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்லை' என்றார். மனைவி ஒரு செக்கில் அத்தொகையை எழுதி அன்னை முன் வைக்க நினைத்தார். ஏனோ செக்கை எதுவும் எழுதாமல் அன்னை முன் வைத்தார். மனம் அன்னையை உருவமாக செக்கில் கண்டது. பணம் தானே புறப்பட்டு வந்துவிட்டது. கணவரை கம்பனியில் ஒரு extra work அதிகப்படியான வேலையைச் செய்யக் கேட்டனர். செய்தால் அதற்குரிய பணம் தருவதாகக் கூறினர். 3ஏக்கர் நிலம் வாங்கி, ரெஸ்டாரண்ட் கட்ட பிளானும், நிலமும் பெறுவது கணவர் கடமை. 3 மாதத்தில் அது நிறைவேறியது. 'கம்பனி கமிஷனாக 37 இலட்ச ரூபாய் கொடுத்தது' என கணவன், மனைவிக்குப் பணம் வந்த வழியை விளக்கினார்.

- பிரார்த்தனை பலிக்கும்.

- வரி வடிவம் சிறப்பாகப் பலிக்கும்.

****


 


 


 



book | by Dr. Radut